புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Manimegala | ||||
Balaurushya | ||||
Dr.S.Soundarapandian | ||||
Karthikakulanthaivel | ||||
Saravananj |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
sugumaran | ||||
Ammu Swarnalatha | ||||
ayyamperumal |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈழப்போரில் இராணுவம் பயன்படுத்திய இரசாயன ஆயுதங்களும் குண்டுகளும் [என் கடைசி பதிவு]
Page 1 of 1 •
- GuestGuest
மெதுவாகச் சிங்கள இராணுவம் பயன்படுத்திய விஷவாயுக்கள் குண்டுகள் நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் இரசாயனங்கள் பற்றிய தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன.
இராணுவம் பரவலாகப் பயன்படுத்திய இந்த வகையான ஆயுதங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிய சிங்கள ஊடகவியலாளர் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளார்.
பிரகீத் என்ற அரசியல் பத்தி எழுத்தாளரும் அரசியல் கேலிச் சித்திரம் வரையும் கலைஞருமான இந்தச் சிங்கள இனத்தவர் சனவரி 24, 2010ம் நாள் தொடக்கம் காணாமற் போயுள்ளதாக அவர் மனைவி சத்தியா பீபீசி சிங்கள சேவை ஒலிபரப்பிற்கு முறைப்பாடு செய்துள்ளார். இதன் மூலம் அவர் பெரும் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே பிரகீத் 2009ல் வெள்ளை வாகனத்தில் வந்த புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டு சிறிது காலத்தின் பின் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை அவருடைய ஆட்கடத்தல் தனக்குப் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருவதாக மனைவி முறைப்பாடு செய்திருக்கிறார்.
அமெரிக்காவும் முன்னாள் சோவியத் ஒன்றியமும் இரசாயன ஆயுதத் தயாரிப்பை முற்றாக நிறுத்தாவிட்டாலும் மட்டுப்படுத்தியுள்ளன. ‘பயோலொஜீக்கல் வெப்பன்ஸ் (BIOLOGICAL WEAPONS) எனப்படும் உயிரியியல் ஆயுதங்கள் பற்றிய ஆராச்சிகள் நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக நடக்கின்றன இரு நிமிடங்களில் கொல்லும் ஐதரசன் சயனைற் (HYDRORGEN CYANIDE) பற்றிய ஆய்வுகளும் தொடர்கின்றன.
ஐநாவின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தடைத் தீர்மானங்களும் ஜெனீவா கொன்வென்ஷன் பரந்துரைகளும் இவ்வகை ஆயுதத் தயாரிப்பு மற்றும் சேமிப்பு உட்பட விற்பனை விநியோகம் என்பனவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றன.
இருப்பினும் விஷவாயுக்களும் இரசாயன ஆயுதங்களும் போர் வீரர்களுக்கு எதிராகவும் பொது மக்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் காலத்திற்குக் காலம் வெளிப்படுகின்றன. தடை உத்தரவுகள் பயனற்றவை என்பதை இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் 1988ல் குர்திஷ மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை ஏவியதன் பயனாய் 4000 வரையிலான குர்திஷ பொது மக்கள் கொல்லப்பட்டனர் ஈரானுக்கு எதிரான போரில் சதாம் உசேன் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய போது அதற்கு மேற்கு நாடுகள் அனுமதி அளித்தன.
ஈரான் – ஈராக் போர் எட்டு வருடம் (1980 – 1988) நடை பெற்றது இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு சதாம் உசேனைக் கருவியாகப் பயன்படுத்த மேற்கு நாடுகள் தீர்மானித்தன. ஈரானின் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு அழிவைத் தரக் கூடியது ஈராக் பயன்படுத்தும் இரசாயன ஆயுதங்களே என்று மேற்கு நாடுகள் கணக்குப் போட்டன
சதாம் உசேன் தயாரித்த இரசாயன ஆயுதங்களுக்கான தொழில் நுட்பத்தை மேற்கு நாட்டுத் தொழிற்சாலைகள் தங்கள் அரசுகளின் அனுமதியோடு வழங்கின. இதைவிட அமெரிக்கா, பிரித்தானியா, யேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூலப் பொருள்களையும் செய்முறைத் தொழில் நுட்பத்தையும் ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்தன.
இந்த இலாபகரமான ஏற்றுமதிக்கு இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவுதல் என்று காரணம் கூறினர் சிறிலங்கா அரசின் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போருக்கு உதவிய நாடுகளும் இப்படியான வசதியான காரணங்களையும் விளக்கங்களையும் கைவசம் வைத்திருந்தன.
குர்திஷ் மக்களை வகை தொகையாகக் கொல்வதற்கு சதாம் உசேன் பயனபடுத்திய இரசாயனங்கள் இரு வகைப் படுகின்றன அவை சயனைற் மற்றும் கடுகு என்ற சமையற் கூட விதையில் இருந்து தயாரிக்கும் மஸ்ராட் வாயுக்களாகும் (CYANIDE AND MUSTARD). குர்திஷ் மக்கள் ஈரான் ஈராக் போரில் ஈரானுக்குச் சார்பாக நின்றவர்கள்.
அதற்காகத் தான் அவர்களுக்கு இந்தத் தண்டனை மிகக் கூடுதலாக மஸ்ராட் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்ட போர் 1914 – 1918ல் நடந்த முதலாம் உலகப் போராகும் இதில் நேச நாடுளும் எதிரி நாடுகளும் வேறுபாடின்றி விஷவாயுப் போரில் ஈடுபட்டன இந்த வகைப் போரின் கெடுதலை உணர்ந்த மேற்கு இராணுவங்கள் விஷவாயுப் பயன்பாட்டை நிறுத்த தீர்மானித்தன.
ஆனால் விற்பனையை முடக்க விரும்பாமல் சதாம் உசேன் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்மதி செய்வதற்கு அவை தயக்கம் காட்டவில்லை. இன்று வரை இதே நடைமுறை பின்பற்றப் படுகிறது. உலகின் 100 வகையான நாடுகள் கொத்து குண்டுத் தாயாரிப்பு, களஞ்சியப் படுத்தல், விற்பனை விநியோகம் என்பனவற்றை நிறுத்த ஒத்துக் கொண்டுள்ளன.
கொத்துக் குண்டுகளை தயாரிக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்பன கொத்துக் குண்டுத் தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்த மறுத்துள்ளன. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ருஷ்யத் தயாரிப்பு கொத்துக் குண்டுகள் பயன்படத்தப்பட்டன.
கொத்துக் குண்டுகள் நிரப்பட்ட குழாயின் வெளிப்புறத்தில் ருஷ்ய மொழி சிறிலிக் எழுத்தில் தயாரித்த நாடு திகதி குண்டுகளின் தாக்குதல் வலுபற்றிய தகவல் மிகவும் துல்லியமாகப் பொறிக்கப் பட்டிருந்தன.
விஷவாயுக் குண்டுகளும் அப்படித்தான் ஒரு பக்கத்தில் ஐநாவும் ஜெனிவாவும் தடை உத்தரவுகளை போட்டபடி இருக்கையில் மறுபக்கத்தில் தயாரிப்பும் விற்பனையும் அமோகமாக நடந்தபடி இருக்கும்.
மற்றவர்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதில் சிறிலங்கா ஆளுங் கட்சியினரும், இராணுவத்தினரும் வல்லவர்கள். சதாம் உசேன் தாக்குதல் நடர்த்திய ஹலாப்ஜா (HALABJA) பிராந்தியத்தில் கொல்லப்பட்டவர்களை அப்புறப்படுத்தாமல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஐநா அதிகாரிகளை உள்வர அனுமதித்து சதாம் உசேன் விட்ட மிகப் பெரிய தவறு.
இதை சிறிலங்கா கவனத்தில் எடுத்துள்ளது. போர் சூடுபிடிக்கத் தொடங்கு முன்பே ஐநா அதிகாரிகள், எம்.எஸ்.எப் மருத்துவக் குழுக்கள், தொண்டு அமைப்புக்கள் போன்றவற்றை அரசு மிரட்டிப் பணிய வைத்து வெளியேற்றி விட்டது. பத்திரிகையாளர்களுக்கு போர் நடக்கும் இடங்களுக்குச் செல்ல ஒரு போதும் அனுமதி வழங்கப்படவில்லை. ஈழத்தில் நடந்தது சாட்சிகள் இல்லாத போர்.
ஆயிரக்கணக்கான உடல்கள் வெளிப்புறக் காயங்கள் ஒன்றும் இல்லாமல் ஹலாப்ஜாவில் கிடப்பதை அங்கு சென்றோர் கண்னுற்றனர் ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்த ஆதாரம் கிடைத்தன. தாயின் முலையில் பால் பருகிய படி இறந்த தாய் மற்றும் பிள்ளையின் ஒளிப்படத்தை பத்திரிகையாளர்கள் பிரசுரித்தனர்.
விளக்கம் கேட்ட போது சதாம் உசேனின் அதிகாரிகள் அவர்கள் இரு பகுதியினரின் துவக்குச் சூட்டு பரிமாற்றத்திற்கு இடையில் அகப்பட்டு கொல்லப்பட்டனர் (KILLED IN CROSSFIRE) என்று பதில் அளித்தனர் நிலத்தடி அறைகளில் பதுங்கி இருந்தவர்களும் கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை ஐநா அதிகாரிகள் திரட்டினர்
வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை என்பனவும் கால் நடைகளான ஆடு, மாடு, செம்மறிகளும் கொல்லப்பட்டுக் கிடந்தன. வன்னியில் ஏராளம் நாய்களும் ஆடு, மாடுகளும் ஆங்காங்கே இறந்து கிடந்தன முப்பது குர்திஷ் மக்கள் சாகும் தறுவாயில் மீட்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கு நாட்டு மருத்துவ மனைகளுக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர் தம்மீது சயனைற், மஸ்ராட் மற்றும் நரம்புத் தளர்ச்சிக் குண்டுகள் சம காலத்தில் ஏவப்பட்டதாக அவர்கள் உயிர் தப்பிய பின் கூறினார்கள் பிரித்தானியாவின் திறந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்ரிவன் றோஸ் (STEVEN ROSE) சதாம் உசேன் புரிந்த இன அழிப்பை அம்பலப் படுத்தினார்.
நரம்பியல் நிபுணரான ஸ்ரிவன் றோஸ் கூறியது சதாம் உசேனை ஆதரித்த மேற்கு நாடுகளுக்குப் பிடிக்கவில்லை சதாமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் மறுத்து விட்டனர் அதற்கான காலம் 2006ம் ஆண்டில் வந்தது 1982ல் 148 ஷியா முஸ்லிம்களைக் கொன்ற குற்றத்திற்காகத் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
சதாம் உசேனின் மைத்துனரும் இராசயன ஆயுதங்களுக்கு பொறுப்பானவருமான அலி ஹசான் அல்-மஜீத் மறு பெயர் கெமிக்கல் அலி (CHEMICAL ALI) சனவரி 25, 2010ல் 4000 குர்திஷ் மக்களைக் கொன்ற குற்றத்திற்காக தூக்கில் தொங்கினார். விசாரணைக்கும் தண்டனைக்கும் காலமும் உலக அரசியலும் மாற வேண்டி இருக்கிறது.
இன்று ராஐபக்ச சகோதரர்களையும் முதன்மைத் தளபதிகளையும் இன அழிப்பு குற்றத்திற்காக விசாரணையும் தண்டணையும் இல்லாமல் காப்பாற்றுவதற்கு இந்தியா, சீனா, ரூசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. சதாம் உசேனும் அவனுடைய கட்டளையை நிறைவேற்றிய கெமிக்கல் அலியும் தூக்கில் தொங்க இருபத்திரண்டு வருடம் பிடித்தது.
சதாம் உசேன் வெளியாரை ஹலாப்ஜாவுக்கு வர விட்டது முதலாவது பெரிய தவறு என்றால் இரண்டாவது மிகப்பெரிய தவறு தடயங்களை அழிக்காமல் விட்டது தான். சிங்களத் தலைமையும் இராணுவமும் இந்தத் தவறை விடவில்லை. தடய அழிப்பில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்
1996ல் சந்திரிக்கா அரசு செம்மணி மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட 600 தமிழ் பொது மக்கள் உடலை ஊரடங்குச் சட்டம் போட்டுச் சாம்பராக்கி கடல் நீரில் கரைத்தது. நினைவில் இருக்கலாம்.
மகிந்த ராஐபக்சவின் படைகள் பொது மக்களை சுட்டும் கொன்றும் விரட்டிச் சென்று செட்டிகுளம் முட்கம்பி முகாமுக்குள் அடைத்தனர். அதன் பின் தடைய அழிப்பு பணிகளும் பொதுமக்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் உட்படப் பெறுமதியான பொருட்களை சூறையாடும் பணிகளும் பல மாதங்களாக நடந்தன.
மன்னார், கிளிநொச்சி, அக்கராயன், தர்மபுரம், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் ஆகியவற்றில் இராணுவத்தினர் வான், தரை, கடல் மார்க்கமாக இரசாயன ஆயுதங்களையும் வேறு பல தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பொதுமக்கள் மீது ஏவி இன அழிப்பை செய்தனர். நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் நியூறோ பரா லிற்றிக் (NEUROPARALYTIC) வாயுக்கள் ஏவப்பட்டதுக்கான சான்றாதாரங்கள் வன்னியில் பல பாகங்களில் கிடைக்கின்றன.
வன்னி பெருநிலப்பரப்பை மக்கள் சஞ்சாரம் மற்ற சூனியப் பிரதேசமாக்கிய இராணுவம் இறந்தோர், இறந்து கொண்டு இருந்தோரின் சடலங்களை செம்மணியில் செய்தது போல் இல்லாதொழித்து விட்டது.
சடலங்களை மறைக்கலாம் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான தடயங்களை அழிக்க முடியா தென்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள். துரித கதியில் அர்த்தமுள்ள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசுகள் முன் வரவேண்டும்.
பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் குவென் றொபேட்ஸ் (GWYNNE ROBERTS) கெமிக்கல் அலி இரசாயன வாயுக்களை குர்திஷ் மக்கள் மீது ஏவிய புட்டியா, ஹலாப்ஜா ஆகிய இடங்களில் மண் மாதிரிகளைத் (EARTH SAMPLES) திரட்டினார். அவர் செய்த ஆய்வில் படுகொலைகளுக்கான மேலதிக தகவல்கள் கிடைத்தன.
போரியல் விஞ்ஞானிகள் இரசாயன ஆயுதப் பாவனை மூலம் பெற்ற வெற்றியின் பெறுமதியை குறைத்து மதிப்பிடுகின்றனர். கொல் அல்லது கொல்லப்படு என்ற அடிப்படையில் போர் புரியும் ஒருவன் எதிரி மீது விஷமருந்து தெளிப்பவனாக மாறும் போது அவனை எப்படி அழைப்பது என்று அவர்கள் வினவுகின்றனர்.
-- வன்னி ஆன்லைன்
தொடர்ந்து இந்தியா இறயாண்மை கு எதிராகவும், பிரினிவினை வாதமாகவும் பதிவு இடுகிறேன் எண்ட குற்றம் சட்ட பட்டு உள்ள நான் இந்த பதிவோடு ஈகரை யில் இருந்து விலகுகிறேன்..... தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியதால் இந்த குற்றம் என் மேல் சாட பட்டதா ? எப்டி இருப்பினும் ... அனைத்து உறவுகளுக்கு நன்றி...
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்....
அதிகம் பேச கூடாது ... செயலில் இறங்கிய பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும் என்ற அண்ணையின் வார்தையய் மேற்கோள் காட்டி ... விலகுகிறேன்.... நன்றி
இராணுவம் பரவலாகப் பயன்படுத்திய இந்த வகையான ஆயுதங்கள் பற்றிய தகவல்களைத் திரட்டிய சிங்கள ஊடகவியலாளர் காணாமற் போகச் செய்யப்பட்டுள்ளார்.
பிரகீத் என்ற அரசியல் பத்தி எழுத்தாளரும் அரசியல் கேலிச் சித்திரம் வரையும் கலைஞருமான இந்தச் சிங்கள இனத்தவர் சனவரி 24, 2010ம் நாள் தொடக்கம் காணாமற் போயுள்ளதாக அவர் மனைவி சத்தியா பீபீசி சிங்கள சேவை ஒலிபரப்பிற்கு முறைப்பாடு செய்துள்ளார். இதன் மூலம் அவர் பெரும் பரபரப்பை எற்படுத்தியிருக்கிறார்.
ஏற்கனவே பிரகீத் 2009ல் வெள்ளை வாகனத்தில் வந்த புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டு சிறிது காலத்தின் பின் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் இந்த முறை அவருடைய ஆட்கடத்தல் தனக்குப் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தருவதாக மனைவி முறைப்பாடு செய்திருக்கிறார்.
அமெரிக்காவும் முன்னாள் சோவியத் ஒன்றியமும் இரசாயன ஆயுதத் தயாரிப்பை முற்றாக நிறுத்தாவிட்டாலும் மட்டுப்படுத்தியுள்ளன. ‘பயோலொஜீக்கல் வெப்பன்ஸ் (BIOLOGICAL WEAPONS) எனப்படும் உயிரியியல் ஆயுதங்கள் பற்றிய ஆராச்சிகள் நிறுத்தப்படாமல் தொடர்ச்சியாக நடக்கின்றன இரு நிமிடங்களில் கொல்லும் ஐதரசன் சயனைற் (HYDRORGEN CYANIDE) பற்றிய ஆய்வுகளும் தொடர்கின்றன.
ஐநாவின் இரசாயன ஆயுதங்கள் தொடர்பான தடைத் தீர்மானங்களும் ஜெனீவா கொன்வென்ஷன் பரந்துரைகளும் இவ்வகை ஆயுதத் தயாரிப்பு மற்றும் சேமிப்பு உட்பட விற்பனை விநியோகம் என்பனவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைக்கின்றன.
இருப்பினும் விஷவாயுக்களும் இரசாயன ஆயுதங்களும் போர் வீரர்களுக்கு எதிராகவும் பொது மக்களுக்கு எதிராகவும் பயன் படுத்தப்படுவதற்கான ஆதாரங்கள் காலத்திற்குக் காலம் வெளிப்படுகின்றன. தடை உத்தரவுகள் பயனற்றவை என்பதை இந்த ஆதாரங்கள் நிரூபிக்கின்றன.
ஈராக்கின் முன்னாள் சர்வாதிகாரி சதாம் உசேன் 1988ல் குர்திஷ மக்களுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களை ஏவியதன் பயனாய் 4000 வரையிலான குர்திஷ பொது மக்கள் கொல்லப்பட்டனர் ஈரானுக்கு எதிரான போரில் சதாம் உசேன் இந்த ஆயுதங்களைப் பயன்படுத்திய போது அதற்கு மேற்கு நாடுகள் அனுமதி அளித்தன.
ஈரான் – ஈராக் போர் எட்டு வருடம் (1980 – 1988) நடை பெற்றது இஸ்லாமிய தீவிரவாதத்தை அடக்குவதற்கு சதாம் உசேனைக் கருவியாகப் பயன்படுத்த மேற்கு நாடுகள் தீர்மானித்தன. ஈரானின் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு அழிவைத் தரக் கூடியது ஈராக் பயன்படுத்தும் இரசாயன ஆயுதங்களே என்று மேற்கு நாடுகள் கணக்குப் போட்டன
சதாம் உசேன் தயாரித்த இரசாயன ஆயுதங்களுக்கான தொழில் நுட்பத்தை மேற்கு நாட்டுத் தொழிற்சாலைகள் தங்கள் அரசுகளின் அனுமதியோடு வழங்கின. இதைவிட அமெரிக்கா, பிரித்தானியா, யேர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் மூலப் பொருள்களையும் செய்முறைத் தொழில் நுட்பத்தையும் ஈராக்கிற்கு ஏற்றுமதி செய்தன.
இந்த இலாபகரமான ஏற்றுமதிக்கு இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கு எதிரான போருக்கு உதவுதல் என்று காரணம் கூறினர் சிறிலங்கா அரசின் ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போருக்கு உதவிய நாடுகளும் இப்படியான வசதியான காரணங்களையும் விளக்கங்களையும் கைவசம் வைத்திருந்தன.
குர்திஷ் மக்களை வகை தொகையாகக் கொல்வதற்கு சதாம் உசேன் பயனபடுத்திய இரசாயனங்கள் இரு வகைப் படுகின்றன அவை சயனைற் மற்றும் கடுகு என்ற சமையற் கூட விதையில் இருந்து தயாரிக்கும் மஸ்ராட் வாயுக்களாகும் (CYANIDE AND MUSTARD). குர்திஷ் மக்கள் ஈரான் ஈராக் போரில் ஈரானுக்குச் சார்பாக நின்றவர்கள்.
அதற்காகத் தான் அவர்களுக்கு இந்தத் தண்டனை மிகக் கூடுதலாக மஸ்ராட் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்ட போர் 1914 – 1918ல் நடந்த முதலாம் உலகப் போராகும் இதில் நேச நாடுளும் எதிரி நாடுகளும் வேறுபாடின்றி விஷவாயுப் போரில் ஈடுபட்டன இந்த வகைப் போரின் கெடுதலை உணர்ந்த மேற்கு இராணுவங்கள் விஷவாயுப் பயன்பாட்டை நிறுத்த தீர்மானித்தன.
ஆனால் விற்பனையை முடக்க விரும்பாமல் சதாம் உசேன் போன்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு ஏற்மதி செய்வதற்கு அவை தயக்கம் காட்டவில்லை. இன்று வரை இதே நடைமுறை பின்பற்றப் படுகிறது. உலகின் 100 வகையான நாடுகள் கொத்து குண்டுத் தாயாரிப்பு, களஞ்சியப் படுத்தல், விற்பனை விநியோகம் என்பனவற்றை நிறுத்த ஒத்துக் கொண்டுள்ளன.
கொத்துக் குண்டுகளை தயாரிக்கும் நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா என்பன கொத்துக் குண்டுத் தயாரிப்பையும் விற்பனையையும் நிறுத்த மறுத்துள்ளன. ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் ருஷ்யத் தயாரிப்பு கொத்துக் குண்டுகள் பயன்படத்தப்பட்டன.
கொத்துக் குண்டுகள் நிரப்பட்ட குழாயின் வெளிப்புறத்தில் ருஷ்ய மொழி சிறிலிக் எழுத்தில் தயாரித்த நாடு திகதி குண்டுகளின் தாக்குதல் வலுபற்றிய தகவல் மிகவும் துல்லியமாகப் பொறிக்கப் பட்டிருந்தன.
விஷவாயுக் குண்டுகளும் அப்படித்தான் ஒரு பக்கத்தில் ஐநாவும் ஜெனிவாவும் தடை உத்தரவுகளை போட்டபடி இருக்கையில் மறுபக்கத்தில் தயாரிப்பும் விற்பனையும் அமோகமாக நடந்தபடி இருக்கும்.
மற்றவர்கள் விட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதில் சிறிலங்கா ஆளுங் கட்சியினரும், இராணுவத்தினரும் வல்லவர்கள். சதாம் உசேன் தாக்குதல் நடர்த்திய ஹலாப்ஜா (HALABJA) பிராந்தியத்தில் கொல்லப்பட்டவர்களை அப்புறப்படுத்தாமல் வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் ஐநா அதிகாரிகளை உள்வர அனுமதித்து சதாம் உசேன் விட்ட மிகப் பெரிய தவறு.
இதை சிறிலங்கா கவனத்தில் எடுத்துள்ளது. போர் சூடுபிடிக்கத் தொடங்கு முன்பே ஐநா அதிகாரிகள், எம்.எஸ்.எப் மருத்துவக் குழுக்கள், தொண்டு அமைப்புக்கள் போன்றவற்றை அரசு மிரட்டிப் பணிய வைத்து வெளியேற்றி விட்டது. பத்திரிகையாளர்களுக்கு போர் நடக்கும் இடங்களுக்குச் செல்ல ஒரு போதும் அனுமதி வழங்கப்படவில்லை. ஈழத்தில் நடந்தது சாட்சிகள் இல்லாத போர்.
ஆயிரக்கணக்கான உடல்கள் வெளிப்புறக் காயங்கள் ஒன்றும் இல்லாமல் ஹலாப்ஜாவில் கிடப்பதை அங்கு சென்றோர் கண்னுற்றனர் ஒரு சில நிமிடங்களில் உயிர் பிரிந்த ஆதாரம் கிடைத்தன. தாயின் முலையில் பால் பருகிய படி இறந்த தாய் மற்றும் பிள்ளையின் ஒளிப்படத்தை பத்திரிகையாளர்கள் பிரசுரித்தனர்.
விளக்கம் கேட்ட போது சதாம் உசேனின் அதிகாரிகள் அவர்கள் இரு பகுதியினரின் துவக்குச் சூட்டு பரிமாற்றத்திற்கு இடையில் அகப்பட்டு கொல்லப்பட்டனர் (KILLED IN CROSSFIRE) என்று பதில் அளித்தனர் நிலத்தடி அறைகளில் பதுங்கி இருந்தவர்களும் கொல்லப்பட்டதற்கான ஆதாரத்தை ஐநா அதிகாரிகள் திரட்டினர்
வளர்ப்புப் பிராணிகளான நாய், பூனை என்பனவும் கால் நடைகளான ஆடு, மாடு, செம்மறிகளும் கொல்லப்பட்டுக் கிடந்தன. வன்னியில் ஏராளம் நாய்களும் ஆடு, மாடுகளும் ஆங்காங்கே இறந்து கிடந்தன முப்பது குர்திஷ் மக்கள் சாகும் தறுவாயில் மீட்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கு நாட்டு மருத்துவ மனைகளுக்கு விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டனர் தம்மீது சயனைற், மஸ்ராட் மற்றும் நரம்புத் தளர்ச்சிக் குண்டுகள் சம காலத்தில் ஏவப்பட்டதாக அவர்கள் உயிர் தப்பிய பின் கூறினார்கள் பிரித்தானியாவின் திறந்த பல்கலைக் கழகப் பேராசிரியர் ஸ்ரிவன் றோஸ் (STEVEN ROSE) சதாம் உசேன் புரிந்த இன அழிப்பை அம்பலப் படுத்தினார்.
நரம்பியல் நிபுணரான ஸ்ரிவன் றோஸ் கூறியது சதாம் உசேனை ஆதரித்த மேற்கு நாடுகளுக்குப் பிடிக்கவில்லை சதாமுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அவர்கள் மறுத்து விட்டனர் அதற்கான காலம் 2006ம் ஆண்டில் வந்தது 1982ல் 148 ஷியா முஸ்லிம்களைக் கொன்ற குற்றத்திற்காகத் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டார்.
சதாம் உசேனின் மைத்துனரும் இராசயன ஆயுதங்களுக்கு பொறுப்பானவருமான அலி ஹசான் அல்-மஜீத் மறு பெயர் கெமிக்கல் அலி (CHEMICAL ALI) சனவரி 25, 2010ல் 4000 குர்திஷ் மக்களைக் கொன்ற குற்றத்திற்காக தூக்கில் தொங்கினார். விசாரணைக்கும் தண்டனைக்கும் காலமும் உலக அரசியலும் மாற வேண்டி இருக்கிறது.
இன்று ராஐபக்ச சகோதரர்களையும் முதன்மைத் தளபதிகளையும் இன அழிப்பு குற்றத்திற்காக விசாரணையும் தண்டணையும் இல்லாமல் காப்பாற்றுவதற்கு இந்தியா, சீனா, ரூசியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் கங்கணம் கட்டி நிற்கின்றன. சதாம் உசேனும் அவனுடைய கட்டளையை நிறைவேற்றிய கெமிக்கல் அலியும் தூக்கில் தொங்க இருபத்திரண்டு வருடம் பிடித்தது.
சதாம் உசேன் வெளியாரை ஹலாப்ஜாவுக்கு வர விட்டது முதலாவது பெரிய தவறு என்றால் இரண்டாவது மிகப்பெரிய தவறு தடயங்களை அழிக்காமல் விட்டது தான். சிங்களத் தலைமையும் இராணுவமும் இந்தத் தவறை விடவில்லை. தடய அழிப்பில் அவர்கள் கைதேர்ந்தவர்கள்
1996ல் சந்திரிக்கா அரசு செம்மணி மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்ட 600 தமிழ் பொது மக்கள் உடலை ஊரடங்குச் சட்டம் போட்டுச் சாம்பராக்கி கடல் நீரில் கரைத்தது. நினைவில் இருக்கலாம்.
மகிந்த ராஐபக்சவின் படைகள் பொது மக்களை சுட்டும் கொன்றும் விரட்டிச் சென்று செட்டிகுளம் முட்கம்பி முகாமுக்குள் அடைத்தனர். அதன் பின் தடைய அழிப்பு பணிகளும் பொதுமக்கள் விட்டுச் சென்ற வாகனங்கள் உட்படப் பெறுமதியான பொருட்களை சூறையாடும் பணிகளும் பல மாதங்களாக நடந்தன.
மன்னார், கிளிநொச்சி, அக்கராயன், தர்மபுரம், ஆனந்தபுரம், இரட்டைவாய்க்கால், முள்ளிவாய்க்கால் ஆகியவற்றில் இராணுவத்தினர் வான், தரை, கடல் மார்க்கமாக இரசாயன ஆயுதங்களையும் வேறு பல தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பொதுமக்கள் மீது ஏவி இன அழிப்பை செய்தனர். நரம்புகளைச் செயலிழக்கச் செய்யும் நியூறோ பரா லிற்றிக் (NEUROPARALYTIC) வாயுக்கள் ஏவப்பட்டதுக்கான சான்றாதாரங்கள் வன்னியில் பல பாகங்களில் கிடைக்கின்றன.
வன்னி பெருநிலப்பரப்பை மக்கள் சஞ்சாரம் மற்ற சூனியப் பிரதேசமாக்கிய இராணுவம் இறந்தோர், இறந்து கொண்டு இருந்தோரின் சடலங்களை செம்மணியில் செய்தது போல் இல்லாதொழித்து விட்டது.
சடலங்களை மறைக்கலாம் இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான தடயங்களை அழிக்க முடியா தென்று தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றார்கள். துரித கதியில் அர்த்தமுள்ள ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அரசுகள் முன் வரவேண்டும்.
பிரிட்டிஷ் தொலைக்காட்சி ஊடகவியலாளர் குவென் றொபேட்ஸ் (GWYNNE ROBERTS) கெமிக்கல் அலி இரசாயன வாயுக்களை குர்திஷ் மக்கள் மீது ஏவிய புட்டியா, ஹலாப்ஜா ஆகிய இடங்களில் மண் மாதிரிகளைத் (EARTH SAMPLES) திரட்டினார். அவர் செய்த ஆய்வில் படுகொலைகளுக்கான மேலதிக தகவல்கள் கிடைத்தன.
போரியல் விஞ்ஞானிகள் இரசாயன ஆயுதப் பாவனை மூலம் பெற்ற வெற்றியின் பெறுமதியை குறைத்து மதிப்பிடுகின்றனர். கொல் அல்லது கொல்லப்படு என்ற அடிப்படையில் போர் புரியும் ஒருவன் எதிரி மீது விஷமருந்து தெளிப்பவனாக மாறும் போது அவனை எப்படி அழைப்பது என்று அவர்கள் வினவுகின்றனர்.
-- வன்னி ஆன்லைன்
தொடர்ந்து இந்தியா இறயாண்மை கு எதிராகவும், பிரினிவினை வாதமாகவும் பதிவு இடுகிறேன் எண்ட குற்றம் சட்ட பட்டு உள்ள நான் இந்த பதிவோடு ஈகரை யில் இருந்து விலகுகிறேன்..... தமிழர்களுக்கு ஆதரவாக எழுதியதால் இந்த குற்றம் என் மேல் சாட பட்டதா ? எப்டி இருப்பினும் ... அனைத்து உறவுகளுக்கு நன்றி...
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்....
அதிகம் பேச கூடாது ... செயலில் இறங்கிய பின்தான் பேச ஆரம்பிக்க வேண்டும் என்ற அண்ணையின் வார்தையய் மேற்கோள் காட்டி ... விலகுகிறேன்.... நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|