புதிய பதிவுகள்
» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 12:17

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 12:14

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 12:09

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 12:08

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 12:04

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 0:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:13

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:40

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 21:21

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 21:13

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 20:38

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:34

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:18

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 20:07

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 19:37

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 18:19

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 18:00

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 15:03

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 15:00

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 14:58

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 14:54

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 14:52

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 14:50

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 0:23

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 23:27

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 4 Oct 2024 - 17:52

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:46

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:45

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:44

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:42

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:41

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri 4 Oct 2024 - 8:39

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 21:47

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed 2 Oct 2024 - 19:18

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed 2 Oct 2024 - 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed 2 Oct 2024 - 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed 2 Oct 2024 - 3:12

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
73 Posts - 60%
heezulia
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
32 Posts - 26%
mohamed nizamudeen
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
Guna.D
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
67 Posts - 60%
heezulia
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
29 Posts - 26%
mohamed nizamudeen
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_m10கண்களைத் திறந்து காதலிக்கவும் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்களைத் திறந்து காதலிக்கவும்


   
   
enganeshan
enganeshan
பண்பாளர்

பதிவுகள் : 123
இணைந்தது : 05/08/2010
http://enganeshan.blogspot.in/

Postenganeshan Mon 14 Feb 2011 - 16:34

காதல் இளமையில் அரும்பும் இனிய உணர்வு மட்டுமல்ல; அது உண்மையாக உள்ள போது முதுமையின் முடிவு வரை தங்கக்கூடிய ஒரு அழகான நிரந்தர பந்தம். கைகளைக் கோர்த்து நடப்பது காதல் அல்ல. மனங்க¨ளைக் கோர்த்து இணைவது காதல். ஆசைப்பார்வைகள் காதல் அல்ல. மோகம் வடிந்தும் பின்னிப்பிணைவது காதல்.

ஆனால் இந்த வரையறைக்கேற்ற காதலை இன்று அதிகம் காண முடிவதில்லை. இனிய உணர்வாக ஆரம்பிக்கும் காதல் விரைவிலேயே கசப்பான அனுபவமாகி விடுகிறது. காரணம் திரைப்படங்கள், காதல் கதைகள் எல்லாம் திருமணமே காதலின் வெற்றி என்ற ·பார்முலாவை இளைஞர் மனதில் பதித்து விட்டது தான் என்றும் சொல்லலாம்.

பார்த்துக் காதல், பார்க்காமல் காதல், மோதல் காதல், மோகக்காதல்,
இரக்கக்காதல் என்று ஏகப்பட்ட காதல்கள் வெள்ளித்திரையில் காட்டப்பட்டாலும்
திருமணத்தோடு அங்கு காட்சி முடிந்து விடுகிறது. அதன் பிறகு எல்லையில்லாத
ஒரு இன்பப் பயணம் தான் என்ற கற்பனை காண்பவர் மனதில் விரிகிறது. ஆனால்
உண்மையில் திருமணம் காதலின் வெற்றியல்ல. அது காதலின் வெறும் நுழைவுத்
தேர்வே. உண்மையான வெற்றி அந்த ஆரம்ப இனிமையைக் கடைசி வரையில் தக்க
வைத்துக் கொள்வது தான்.

திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும் விடுகிறது. இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால் 'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில்
இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான
அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக்
கொண்டு காதலியுங்கள்.

முதலில் ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். நிறைய கேளுங்கள்.
நிறைய கவனியுங்கள். அவசர முடிவுகளைக் கண்டிப்பாக எடுக்காதீர்கள்.
காதலிக்கும் நேரத்தில் காதலிப்பவரிடம் ஒரு குறையும் தெரியா விட்டால் நாம்
கண்களை மூடிக் கொண்டு காதலிக்கிறோம் என்று அர்த்தம். காதலிப்பது
மனிதப்பிறவியை என்றால் குறைகள் கண்டிப்பாக இருக்க வேண்டுமல்லவா? அந்தக்
குறைகளில் முக்கியமான சிலவற்றையாவது அறிந்திருங்கள். அவர்களுடைய முக்கிய பலவீனங்களைப் புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களால் சகித்துக் கொள்ள
முடிந்தவையா, பொறுத்துக் கொள்ள முடிந்தவையா என்று யோசித்துக்
கொள்ளுங்கள். ஏனென்றால் தேனிலவு முடிந்த பின்னர் நீங்கள் தினமும்
சந்திக்கக்கூடியவை அவை.

உண்மையான காதல் இருக்கும் போது மாறுவதும் சுலபம், மாற்றுவதும் சுலபம்.
ஆனால் காதலின் பலத்தை விடக் குறைகளின் தாக்கம் பெரிதாக இருக்கையில்
மாறுதல் சுலபமல்ல. பெரிய பாதிப்பில்லாத குறைகளையும் பலவீனங்களையும்
பொறுத்துக் கொள்ளலாம். அலட்சியப்படுத்தலாம். ஆனால் அவை சகித்துக் கொள்ள
முடியாதவையாக இருக்கும் போது, அதை உணர்த்தி மற்றவரை மாற்றவும் முடியாத போது காதல் முன்பு கொடுத்த மகிழ்ச்சிக்கு மும்மடங்கு துக்கத்தைத் தருவதாக அமைந்து விடும் என்பதற்கு எத்தனையோ பேர் வாழ்க்கையே சாட்சி.
வாழ்க்கை மூன்று மணி நேர சினிமா அல்ல. வாழ்க்கையின் எல்லை வரை நீளும்
உண்மைக் காதலை சினிமா மூலமோ, கற்பனை மூலமோ தெரிந்து கொள்ள முடியாது.

சர்க்கரையைப் படத்தில் பார்த்தோ, எழுதியதைப் படித்தோ அதை சுவையை உணர
முடியாது. சாப்பிட்டால் மட்டுமே அதன் இனிப்பை உணர முடியும். காதலும்
அப்படித்தான். பார்த்த சினிமாவை வைத்தோ, படித்த கதையை வைத்தோ
கண்மூடித்தனமாய் ஏற்படும் கவர்ச்சியைக் காதல் என்று எண்ணி ஏமாந்து
விடாதீர்கள். அந்த உண்மைக் காதலின் உன்னதத்தை உணர வேண்டுமென்றால்
கண்களைத் திறந்து வைத்துக் காதலியுங்கள். அது முடிந்தால் உண்மையான காதல்
உங்களுக்குக் கைகூடக்கூடும். அதன் மூலம் கிடைக்கும் பேரானந்தத்தை கடைசி
மூச்சு வரை நீங்கள் அனுபவிக்கக்கூடும்.

-என்.கணேசன்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon 14 Feb 2011 - 16:45

காதலர்தினத்தில் அருமையான காதலர்களுக்கு பயனுள்ள பகிர்வுகண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Mon 14 Feb 2011 - 17:51

அண்ணா இது மிகவும் பயனுள்ள பதிவு.................... உண்மையாக காதலிக்க விரும்புபவர்களுக்கு ...................... மகிழ்ச்சி மகிழ்ச்சி



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

பிரகாசம்
பிரகாசம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 945
இணைந்தது : 08/07/2009

Postபிரகாசம் Mon 14 Feb 2011 - 18:07

திருமணத்தில் முடியாத காதல் சோகமானாலும் அது பல இனிய நினைவுகளை சாசுவதமாக
மனதில் தக்க வைத்துக் கொள்கிறது. ஆனால் திருமணத்தில் முடிந்த காதல் பல
சமயங்களில் கலைந்த கற்பனைக் கனவுகளாகவும், கானலைத் தேடி ஓடிய ஓட்டமாகியும்
விடுகிறது. இதெல்லாம் எதனால்? எங்கே தவறு நிகழ்கிறது என்று சிந்தித்தால்
'புரிந்து கொள்ளுதல்' என்கிற அம்சம் இது போன்ற காதலில்
இல்லாமல் போகிறதால் தான். கண்மூடித்தனமான காதல் என்றும் கசப்பான
அனுபவமாகவே முடியும். எனவே காதலிப்பவர்களே கண்களைத் திறந்து வைத்துக்
கொண்டு காதலியுங்கள்.

கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196 கண்களைத் திறந்து காதலிக்கவும் 677196



பிரகாஷ் முத்துகருப்பன் மதுரக்காரன்
கண்களைத் திறந்து காதலிக்கவும் 812496
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக