புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
13 Posts - 25%
Baarushree
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
prajai
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
2 Posts - 4%
Rutu
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
சிவா
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
1 Post - 2%
viyasan
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
10 Posts - 83%
Rutu
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10கடவுளும் நானும் ! - Page 3 Poll_m10கடவுளும் நானும் ! - Page 3 Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளும் நானும் !


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sat Feb 12, 2011 2:00 pm

First topic message reminder :

கடவுளும் நானும்

ஒருநாள் இரவில் நான் கடவுளைச் சந்தித்தேன்... நீண்ட நேரம் நாங்கள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்தோம்.
பல சந்தேகங்களைக் கேட்டேன். அனைத்திற்கும் அவர் பொறுமையுடன் பதிலளித்தார். அதை இங்கே பதிகின்றேன்...

நான்: கும்பிடுகிறேன் கடவுளே...

கடவுள்: நீ இப்போது என்ன செய்தாய் தம்பீ!?

நான்: உங்களை வணங்கினேன் கடவுளே...

கடவுள்: ஓ! எதற்காக என்னை வணங்கினாய்?

நான்: என்னை இந்த பூமியில் படைத்ததற்காக, நன்றி சொல்லும் விதமாக அவ்வாறு வணங்கினேன்.

கடவுள்: உன்னை ஏன் படைத்தேன் என்று உனக்குத் தெரியுமா?

நான்: நான் சந்தோஷமாக வாழ்வதற்காகத்தானே...?

கடவுள்: ஆம், அதற்காகத்தான்.... ஆனால் நீ படைக்கப்பட்டதன் நோக்கம் அது மட்டுமல்ல.
எனது தேவைக்காகவே உன்னைப் படைத்திருக்கின்றேன். எனவே, நீ எனக்கு நன்றியும் சொல்ல வேண்டாம், என்னை வணங்கவும் வேண்டாம்.

நான்: என்ன சொல்கிறீர்கள்,!?... எனக்குப் புரியவில்லை...

கடவுள்: அதாவது.... (கடவுள் சற்று யோசித்தார்..) ஆம், உனக்குப் புரியும்படி சொல்கிறேன் கேள்...
நீங்கள் இப்போது செல்போன் பயன் படுத்துகிறீர்கள் அல்லவா? அந்த செல்போனை உருவாக்கியது யார்?

நான்: என்னை போன்ற ஒரு மனிதன் தான் உருவாக்கினான்.

கடவுள்: அதைப் பயன் படுத்துவது யார்?

நான்: அதுவும் மனிதன் தான்.

கடவுள்: ஆம், நன்றாகப் புரிந்து கொண்டாய். உங்களின் தேவைக்காக செல்போனை உருவாக்கினீர்கள் அதை நீங்களே
பயன் படுத்துகிறீர்கள். எந்த ஒரு செல்போனும் தானாக இன்னொரு செல்போனுடன் தொடர்பு கொண்டு பேசிக்கொள்வதில்லை.
இதற்காக செல்போன் உங்களுக்கு நன்றி சொல்கிறதா? அப்படியே சொன்னாலும் அது உங்களுக்கு புரிந்து விடப்போகிறதா?
அதோபோலவே, நான் உங்களைப் படைத்தது எனது தேவைக்காகத்தான். அதனால் நீங்கள் எனக்கு நன்றி சொன்னால் எனக்குப்
புரியப்போவதும் இல்லை, நீங்கள் என்னை கும்பிடுவது எனக்குத்தெரியப் போவதும் இல்லை.

நான்: அப்படியானால் இந்தப்பூமியில் பல கோவில்கள் கட்டி, வழிபாடுகள் எல்லாம் நடக்கிறதே...

கடவுள்: என்னது... கோவிலா? வழிபாடா?... அப்படியென்றால்?....


தொடரும்...

"அந்தப்பார்வை"





[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Fri May 20, 2011 1:04 pm

vvijayarani wrote:எனது கருத்துக்களை விட, நண்பர்களே எனக்கு முக்கியம்!!
சூப்பர் பா! [You must be registered and logged in to see this image.]

நன்றி தோழி! :வணக்கம்:



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri May 20, 2011 2:01 pm

சொல்லிய கருத்தை விட, கருத்தை சொல்விய விதம் நல்லா இருக்கு.

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Nov 27, 2011 8:08 pm

நான்: "என்ன கடவுளே... எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?"

கடவுள்: (கடவுள் சிரிக்கின்றார்)

நான்: "என்ன கடவுளே சிரிக்கிறீங்க...?"

கடவுள்: "பின்னே சிரிக்காம என்ன பண்ண சொல்லுறே... எல்லாரும் என்கிட்ட வந்து, 'அவன் நல்லா இருக்கணும்.., அவன் குடும்பத்தை நல்லா வச்சிக்கணும்னு' தான் கேட்டிருக்கிறார்கள். ஆனா நீ, என்னை நல்லா இருக்குறீங்களா ன்னு கேக்குறியே...? அதான் சிரிச்சேன்."

நான்: "என்ன சொல்லுறீங்க கடவுளே...? மக்கள் எல்லாம் உங்க கிட்ட வந்து அப்படி கேட்டாங்களா..? புரியலையே!..."

கடவுள்: "என்ன புரியலை உனக்கு? நீ கோவிலுக்கு போவதில்லையா... அங்க வந்து பாரு அப்பதான் உனக்குப் புரியும்!"

நான்: "கோவில்-ல போயி கேப்பாங்க-னு எனக்கு தெரியும் கடவுளே. ஆனா, உங்க கிட்ட கேட்டாங்க'ன்னு சொன்னீங்களே அது எப்படி?"

கடவுள்: "லூசாப்பா நீ?! கோவில்-ல வந்து கேட்டா அது என்கிட்ட கேட்ட மாதரி தானே."

நான்: "இல்லை கடவுளே, நீங்க தான் கோவில்-ல இருக்குறது நான் இல்லைன்னு சொன்னீங்களே.... அப்பறம் எப்படி..."

கடவுள்: (கடவுள் சற்று யோசித்தார். பின்பு சுதாரித்து... ) "நான் கோவில்-ல இல்ல தான்... ஆனா இருக்கேன்!"

நான்: "என்ன கடவுளே வடிவேலு மாதரி பேசுறீங்க?"

கடவுள்: "ஏய் லூசு...! கடவுள் எங்கும் நிறைந்தவர்-னு உனக்கு தெரியாதா? கொஞ்சம் இடம் கொடுத்தா போதுமே... உங்க கிட்ட எல்லாம், 'நான் கடவுள்' அப்படிங்கர திமிரோட நடந்திருக்கணும். சரி... போனாப் போகுது-னு இயல்பா பழகலாம் னு வந்தா என்னையே கலாய்க்கிரியா? நான் செல்கிறேன் போ!" (கோபத்தோடு கிளம்புகிறார்...)

நான்: (போனாப் போங்க, இங்க யாரும் உங்களை வெத்தலை பாக்கு வச்சி கூப்பிடலை" அப்படின்னு சொல்லலாம்-னு நினைத்தேன். ஆனால், அது அநாகரீகம் என்பதால் சொல்லவில்லை )
"என்ன கடவுளே.., ஆ ஊ னா கோவிச்சிக்கறீங்க. சந்தேகத்தைத் தானே உங்க கிட்ட கேட்டேன்?"

கடவுள்: "நல்லா சந்தேகம் கேட்டே போ! வேற நல்ல சந்தேகமே உனக்கு வராதா?"

நான்: "இருக்கு கடவுளே! ஒரு பெரிய சந்தேகம் இருக்கு! அதாவது... நீங்க ஒருத்தர் தான். ஆனா இங்கே கடவுள்-னு சொல்லி, டிசைன் டிசைனா நிறையா கடவுளுங்களை காட்டுராங்களே... இது எப்படி வந்தது? ஏன் அப்படி சொல்லுறங்க?"

கடவுள்: "நல்ல கேள்வி தம்பி! நான் ஒருத்தன் தான் ! ஆனா நிறையா உருவங்களை நீ பார்த்ததாக சொல்லுகிறாயே அதுவும் நான் தான்!"

நான்: "ம்கும்... இதுக்கு எங்க மனுசங்களே தேவலாம் போலருக்கே. அவங்களாவது கொஞ்சம் புரியிர மாதரி, நம்புற மாதரி சொன்னாங்க."

கடவுள்: "உங்க மனுசங்க என்ன சொன்னாங்க தம்பி"

நான்: "அதாவது... இப்ப நான் இருக்கேன் இல்லையா, என் மகன் வந்து என்னை 'அப்பா' அப்படின்னு கூப்பிடுவான்... என் மனைவி என்னை 'கணவன்' என்று கூப்பிடுவாள்.., மற்ற உறவுக்காரர்கள் வேறு வேறு மாதரி கூப்பிடுவார்கள்... ஆனால் நான் ஒருத்தன் தான் இல்லையா? அதே மாதரி தான் நீங்களும்!' அப்படின்னு சொல்லிக் குடுத்தாங்க கடவுளே!"

கடவுள்: " அப்படினா, உன்னோட கள்ளப் பொண்டாட்டி, உன்னை 'கள்ளப் புருசனே' அப்படின்னு கூப்பிடுவாளா...?"

நான்: "என்ன கடவுளே...? இப்படி அபத்தமா பேசுறீங்க?"

கடவுள்: "பின்னே... நீ அபத்தமான காரணம் சொன்னா, நான் மட்டும் என்ன சும்மா இருப்பேனா? விட்டா மாமன் மச்சான்-னு சொல்லி என்கிட்ட பொண்ணு கேப்பீங்க போலருக்கே! இப்போ... என்னை எப்படி கூப்புடுராங்கங்கறது உனக்குப் பிரச்சினையா? இல்லை, நான் எப்படி வெவ்வேறு உருவத்துல இருக்கேன்-கறது உனக்குப் பிரச்சினையா?"

நான்: "யோசிக்க வேண்டியா விஷயம் தான் கடவுளே...!"

கடவுள்: "நல்லா யோசி!"

நான்: "................................."

கடவுள்: "ரொம்ப யோசிக்கிரியே, "தொடரும்...." அப்படின்னு போட்டுடவா குயிலன்?"

நான்: "ப்ச்!.. இருங்க கடவுளே... யோசிக்கிறேன்-ல... (யோசித்து விட்டு...) "ஆமா கடவுளே... எல்லாருமே உங்களை கடவுள்-னு தான் சொல்லுறாங்க. ஆனா, வேற வேற உருவத்தை மட்டும் வச்சிருக்குறாங்க.... ஆங்... உங்களை எப்படி வேற வேற உருவாத்துல வச்சிருக்குறாங்க? அது ஏன்-னு தான் தெரியணும் கடவுளே..."

கடவுள்: "ஆம்!... அப்படி கேளு சொல்லுறேன். அதாவது..."

நான்: கொஞ்சம் இருங்க கடவுளே!"

கடவுள்: "ஏம்பா என்னாச்சி?"

நான்: "இப்ப தான் 'தொடரும்' போடணும்!"

கடவுள்: "நீ அடங்க மாட்டேடா!"
தொடரும்!...




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 27, 2011 11:25 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடவுள் கிட்டயே இப்படி லொள்ளுவா தாங்கலடா சாமி சிரி சிரி சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





[You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Sun Nov 27, 2011 11:38 pm

இளமாறன் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

கடவுள் கிட்டயே இப்படி லொள்ளுவா தாங்கலடா சாமி சிரி சிரி சிரி சிரி

சிரி சிரி



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 5:06 pm

தொடர்ச்சி...

நான்: "ஆம், இப்ப சொல்லுங்க கடவுளே.."

கடவுள்: "என்ன சொல்லணும்?"

நான்: "அதான்... நீங்க எப்படி பல உருவத்துல சுத்தி கிட்டு இருக்கீங்க-னு கேட்டேன்-ல?"

கடவுள்: "என்னது... பல உருவத்துல நான் சுத்திக்கிட்டு இருக்கேனா?.. விட்டா என்னை நீ தீவிரவாதி லிஸ்ட்டு-ல சேர்த்துடுவே போலருக்கே...?"

நான்: "சரி, சரி சொல்லுங்க... நீங்களும் தீவிர வாதி மாதரி தானே..."

கடவுள்: "அடப்பாவி! யாண்டா அப்படி சொல்லுறே...?"

நான்: "பின்னே, நீங்க தான் நேரடியா வராம, யாராவது மனித ரூபத்துல வந்து தான் உதவி செய்வீங்கலாமே... அப்ப நீங்க தீவிரவாதி மாதரி தானே...?"

கடவுள்: "உனக்கு ரொம்ப திமிரு தாண்டா."

நான்: "சரி நீங்க பேச்சை மாத்தாதீங்க... இதைப் பத்தி நான் உங்ககிட்ட அப்பரமா பேசுறேன். முதல்ல அந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க."

கடவுள்: "சரி சொல்லுறேன் கேள்!"

நான்: "கொஞ்சம் இருங்க கடவுளே..."

கடவுள்: "என்பா, இப்ப தானே ஆரம்பிச்சோம், அதுக்குள்ள தொடரும் போடப் போறியா?"

நான்: "கிண்டல் பண்ணாதீங்க கடவுளே... நான் எப்பவும் உங்களோட பேசினா, அதை எழுதிக்கறது வழக்கம். அதான்... கொஞ்சம் இருங்க நோட்டை எடுத்துக்கறேன்."

கடவுள்: "எழுதுறதுக்குப் பதிலா, ஒரு டேப் வச்சி ரெக்கார்டு பண்ணிகலாமே.. இன்னும் வசதியா இருக்கும் தானே."

நான்: (Mind Voice ) "ஆமா, எழுதுறதே காலையில முழிச்சி பார்த்தா இருக்க மாட்டேங்குது... இந்த லட்சணத்துல ரெக்கார்டு வேற பண்ணனுமாம்..."

கடவுள்:(Mind Voice) "ம்‌ம்‌ம்.... மைண்ட் வாய்ஸு... பேசு! பேசு! நீ இப்படியே பேசிக் கிட்டு இரு... உன்னோட கற்பனையை எல்லாம்... யாரையாவது காப்பியடிக்க வச்சிடுறேன்!"

நான்: "எனக்கும் உங்க மைண்ட் வாய்ஸு கேக்குது கடவுளே..."

கடவுள்: "நீ தானடா பேசுறே, அப்பறம் உனக்கு கேக்காதா?"

நான்: "என்னது நானே பேசிக்கறேனா...?!"

கடவுள்: "சரி சரி.. வீணா பேசாதே விஷயத்துக்கு வருவோம்."

நான்: "சரி, சொல்லுங்க கடவுளே."

கடவுள்: "அதாவது, நான் எப்படி பல உருவத்துல இருக்கேன்னா... ம்‌ம்... உனக்கு எப்படி புரிய வைக்கிறது... ஆம்! நீ சங்ககாலப் புலவர்களைப் பற்றி அறிந்திருக்கிறாயா?"

நான்: "என்னது, சங்க காலமா?... எனக்கு "டைரக்டர் சங்கர்" காலம் தான் தெரியும்...."

கடவுள்: "தேவாரம்? திருவாசகம்? இதாவது தெரியுமா?"

நான்: " ஹலோ, நாங்கல்லாம் செவ்வாய் கிரகத்துல போயி பிளாட் வாங்கிப் போட்டுகிட்டு இருக்கோம். இப்பப் போயி தேவாரம், திருவாசகம்-ன்னு.... என்ன கடவுளே இதெல்லாம்...?"

கடவுள்: "ஆமாண்டா..., இதையெல்லாம் படிக்காதீங்க. இண்டெர்நெட்-ல உக்காந்து பிரண்டு புடிச்சிக்கிட்டு இருங்க. உலகத்தைப் பத்தி தெரிஞ்சிக்கணும்-னா முதல்ல சங்க கால இலக்கியத்தை படிங்கடா.... உன் கிட்ட நான் பேச வந்ததே தப்புடா! நான் போறேன்!!.."

நான்: "ஐயோ, கடவுளே! எனக்கு தேவாரம், திருவாசகம், அப்பர் , சுந்தரர், சம்மந்தர்... எல்லாம் தெரியும் கடவுளே. நீங்க சொல்லுங்க..."

கடவுள்: "அப்பறம் ஏன் முதல்ல தெரியாதுன்னு சொன்னே...?"

நான்: "நான் சும்மா தமாசு பண்னினேன் கடவுளே.... என் கடவுள் கிட்ட நான் விளையாடாம வேற யாரு விளையாடுறது... இதுக்கெல்லாமா கோச்சிக்கறது?

கடவுள்: "ம்‌ம்... கொஞ்சம் அடக்கி வாசிடா...! என்னோட கோவம் உனக்கு தெரியும்-ல...?"

நான்: "ஓ! நல்லா தெரியுமே... பூமியையே ரெண்டா பிளந்துடுவேன்-னு சொல்லிருக்கீங்களே..."

கடவுள்: "ம்‌ம்! அது! எங்க விட்டேன்...?"

நான்: "சங்கர்" காலத்துல விட்டீங்க...! தே.. சீ.. SORRY! சங்க காலம் கடவுளே, சங்க காலம்! சங்க காலம்..."

கடவுள்: (Mind Voice) "இவன் நம்மளைக் கலாய்க்கிறானா....? இல்ல வெறும் காமெடிப் பீசா... ஒண்ணுமே புரியலையே... இருடா மவனே உன்னை வச்சிக்கறேன்..!!"

நான்: "கடவுளே...!"

கடவுள்: "என்ன, என்னோட மைண்ட் வாய்ஸ் உனக்கு கேட்டுடுச்சா?"

நான்: "அது இல்ல கடவுளே... ரூட்டு மாறிப் போயிக்கிட்டு இருக்கு... நீங்க விளக்கத்தை சொல்லுங்க !"

கடவுள்: " அப்படி வா வழிக்கு,! அதாவது... சங்க காலப் புலவர்கள் எல்லாருக்கும் என் மேல ரொம்ப ஆர்வம். என்னைப் பார்க்கணும் பேசணும்னு ரொம்ப தவிச்சாங்க. அதனால அவங்க எல்லாருக்கும் நான் கனவுல காட்சிக் கொடுத்தேன். அவங்க எல்லாரும் என்னை கனவுல கண்டாங்க, உன்னை மாதரி!. நீ இப்ப எழுதுறது மாதரியே அவங்களும் தங்களோட கவிதையில என்னைப் பார்த்ததை பத்தி எழுதி வச்சாங்க... கனவுங்கறது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு மாதரி தானே வரும்? அதனால அவங்கவங்க பார்த்ததை அப்படி அப்படியே எழுதி வச்சாங்க. அதுக்குப் பின்னாடி வந்த தலைமுறையினர், கால மாறுபாட்டின் விளைவாக எனக்கு உருவம் குடுக்க நினைச்சாங்க. அப்பதான், இந்தப் புலவர்கள் எழுதி வச்ச கவிதைகளை முன் மாதரியா வச்சிக்கிட்டு ஓவியம் வரைய தொடங்குனாங்க. அந்தக் கவிதைப் பாடல்களில் இருந்த கற்பனை உருவத்தை தான் இப்ப நீ பல கோணத்துல பார்க்துக்கிட்டு இருக்கே! ஒவ்வொரு புலவர்களும் வெவ்வேறு மாதரி கனவு கண்டிருப்பாங்க இல்லையா? அதனால தான் நானும் உனக்கு வெவ்வேறு மாதரி தெரியிறேன். ஆனா, எனக்கு ஒரு உருவம் தான். என்ன விளக்கம் போதுமா குயிலன்!?.."

நான்: பேச வார்த்தைகள் இன்றி மௌனமானேன்.!

கடவுள்: "தூங்கிட்டான் போலாருக்கு..... நல்ல விஷயம் சொன்னா தூங்கிருங்கடா...!!"


தொடரும்...




[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 14, 2011 5:18 pm

நண்பா, அருமை இந்த பதிவு.......

கலாய்ப்புகளுடன் கூடிய கருத்தும் நன்று........... சூப்பருங்க மகிழ்ச்சி



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Wed Dec 14, 2011 5:22 pm

வித்தியாசமா யோசிச்சி இருக்கீங்க சூப்பருங்க



[You must be registered and logged in to see this link.]
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 6:26 pm

பிஜிராமன் wrote:நண்பா, அருமை இந்த பதிவு.......

கலாய்ப்புகளுடன் கூடிய கருத்தும் நன்று........... சூப்பருங்க மகிழ்ச்சி

நன்றி நண்பா.



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Wed Dec 14, 2011 6:27 pm

ரேவதி wrote:வித்தியாசமா யோசிச்சி இருக்கீங்க சூப்பருங்க

நன்றி ரேவதி.



[You must be registered and logged in to see this image.]



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக