புதிய பதிவுகள்
» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Sep 07, 2024 1:17 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
9 Posts - 90%
mruthun
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 10%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
75 Posts - 49%
ayyasamy ram
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
4 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
2 Posts - 1%
mruthun
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
2 Posts - 1%
T.N.Balasubramanian
வடிகால் - முகில் தினகரன் Poll_c10வடிகால் - முகில் தினகரன் Poll_m10வடிகால் - முகில் தினகரன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிகால் - முகில் தினகரன்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 09, 2011 9:33 am

தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக் கொண்டிருந்த பிரம்மநாயகத்தை அந்தக் கூச்சல் இடைïறு செய்ய, தன் கவனத்தை மாற்றி அதைக் கூர்ந்து கேட்கலானார்.

'அய்யோ... வேண்டாங்க... அடிக்காதீங்க... வலிக்குதுங்க!'' பக்கத்து வீட்டுப் பெண்மணியின் குரல்.

'வசுமதி...வசுமதி'' மனைவியை அழைத்தார் பிரம்ம நாயகம்.

கைகளைத் துடைத்தபடியே அடுக்களையிலிருந்து வந்தவள், 'என்னங்க?.. என்ன வேணும் உங்களுக்கு?''

'அதென்ன சத்தம்?... வழக்கம் போல பக்கத்து வீட்டுல ஆரம்பமாயிடுச்சா?''

'ஆமாங்க... அதேதான்!.. பாவம் அந்தப் பெண்... எப்படித்தான் புருஷன்கிட்ட தெனமும் அடி வாங்கிட்டு... அத்தனையையும் பொறுத்துக்கிட்டிருக்காளோ?''

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அதிகபட்ச ஓசையுடன் ஒரு `படார்'. தொடர்ந்து அப்பெண்மணியின் உச்சஸ்தாய அழுகுரல்.

'அந்த ஆளுக்கு கிட்டத்தட்ட அம்பது... அம்பத்திரெண்டிருக்கும்... அந்தப் பெண்ணுக்கும் ஒரு நாப்பத்தியேழு... நாப்பத்தியெட்டிருக்கும்... இத்தனை வயசுக்கப்புறம் இதுகளுக்குள்ளாற இப்படியெல்லாம் சண்டை அவசியமா?'' வசுமதி அங்கலாய்த்தாள்.

'கொழந்த குட்டின்னு ஏதாச்சும் இருந்திருந்தா... இதுக அடங்கியிருக்கும்... அதுவுமில்லியா... அதான் இதுக ஆடிக்கிட்டிருக்குதுக!''

'அந்தப் பெண்மணியக் குத்தம் சொல்ல முடியாதுங்க... நானும் அப்பப்ப வெளிய.. தெருவுல போகும் போது.. வரும் போது பார்த்திருக்கேன்... ரொம்ப அமைதியான... சாந்தமான முகம்... யாருகிட்டேயும் இரைஞ்சு கூடப் பேசாத குணம்!... எனக்கென்னவோ அந்தாளுதான் ரொம்ப முசுடா இருப்பான் போலத் தெரியுது!''

மறுநாள் காலை.

வாக்கிங் போய் விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தார் பிரம்ம நாயகம். கையில் டிபன் கேரியருடன் வேக வேகமாகத் தன்னைக் கடந்து போன அந்தப் பக்கத்து வீட்டு மனிதரைக் கண்டதும், அவரை அழைத்துப் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் என்னவென்று தோன்றியது அவருக்கு.

'சார்... சார்!''

அவர் நின்று திரும்பிப் பார்க்க,

'சார்... நான் பிரம்ம நாயகம்... உங்க பக்கத்துல வீட்டுலதான் குடியிருக்கேன்... வந்து நாலு மாசமாச்சு... உங்க கூடப் பேசவோ... அறிமுகப் படுத்திக்கவோ முடியலை...! சார்... எங்க வேலை பார்க்கறீங்க?'' வெகு சிநேகிதமாய்க் கேட்டார்.

முகத்தில் ஒருவித வெறுப்போடு அவரை கர்ண கடூரமாகப் பார்த்த அந்த மனிதர், 'அய்யா பக்கத்து வீட்டுக்காரரே.. நான் ஏழரை மணிக்குள்ளாற பாக்டரில இருக்கணும்... அறிமுகம் பண்ணிக்கிட்டு அரட்டை அடிக்கவெல்லாம் எனக்கு நேரமில்லை...!'' என்று அவசரமாய்ச் சொன்னவர், நடையைத் துரிதப்படுத்திக் கொண்டார்.

'வசுமதி சொன்னது சரிதான்... ஒண்ணாம் நெம்பர் முசுடுதான் இந்தாளு!''

அடுத்த வாரத்தில் ஒரு நாள்,

எலக்ட்ரிக் பில் கட்டுவதற்காக ஈ.பி.அலுவலகம் சென்றிருந்த வசுமதி, அங்கு காத்திருந்த வேளையில் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்மணி வர, சன்னமாய்ப் புன்னகைத்தாள்.

பதிலுக்கு அப்பெண்மணியும் புன்னகைக்க, தைரியமாய்ப் பேச ஆரம்பித்தாள். 'உங்களுக்கு ஈ.பி.பில் எவ்வளவு வருது?''

அப்பெண்மணி தன் கார்டைப் பார்த்து விட்டு, 'நூத்திப் பத்து'' என்றாள்.

'அட... பரவாயில்லையே... எங்களுக்கு நானூறுக்கும் மேலல்லவா வருது!''

'எங்க வீட்டுல மின்சார உபயோகம் ரொம்பக் கம்மி... அதுவுமில்லாம நூறுக்கும் மேல போனா போச்சு... அவ்வளவுதான்... எங்க வீட்டுக்காரர் என்னைக் கொன்னே போட்டுடுவார்!''

அவள் வாயிலிருந்தே அவள் வீட்டுக்காரரைப் பற்றிப் பேச்சு வந்து விட, இன்னும் கொஞ்சம் தைரியமான வசுமதி, நீண்ட நாட்களாகத் தன் மனதில் அடக்கி வைத்திருந்த அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டாள்.

'ஒரு நாளல்ல.. ரெண்டு நாளல்ல.... தினப்படியும் நாங்க எங்க வீட்டுல இருந்து கவனிச்சிட்டுத்தான் இருக்கோம்... எதுக்கு உங்க வீட்டுக்காரர் தினமும் உங்களை அந்த மாதிரி அடிக்கிறார்... என்ன காரணம்?''

மெலிதாய் முறுவலித்த அப்பெண்மணி, 'காரணத்துக்கா பஞ்சம்?... ஏதாவதொரு காரணம் அவருக்குன்னு கெடைச்சிடுது... அடிக்கறார்!'' சொல்லிவிட்டு அமைதியாய் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள, வசுமதியும் அமைதியானாள்.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின், வசுமதியே தொடர்ந்தாள், 'உங்களால எப்படி இந்த அளவுக்குப் பொறுத்துக் கொள்ள முடியுது? எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாம... வரம் வாங்கிட்டு வந்த மாதிரி அவர் குடுக்கற அடிகளை வாங்கிக்கறீங்களே... ஏன் இப்படி?.. சொல்லிப் புரியவைக்கக் கூடாதா?''

பதிலேதும் பேசாது மெல்லப் புன்னகைத்தாள் அந்தப் பெண்மணி.

'என்னடா இவ..நம்ம குடும்ப விஷயங்கள்ல தலையிடறான்னு நெனைக்காதீங்க... திரும்பி ஒரு வார்த்தை கூடவா எதிர்த்துப் பேச முடியாது உங்களால?... எனக்கென்னமோ நீங்க எதிர்த்து பேச மாட்டீங்க அப்படிங்கற தைரியத்துலதான் அவர் தொடர்ந்து அடிச்சுட்டே இருக்கார்ன்னு தோணுது!''

அவள் 'குறு..குறு'' வென்று வசுமதியின் கண்களையே பார்க்க,

'அய்யய்யோ... புருஷன் பொண்டாட்டிக்குள்ளாற பகையை மூட்டி விடணும்கறதுக்காக நான் இதைச் சொல்லலே... ஒரு பொம்பளை அனுபவிக்கற சித்ரவதையை இன்னொரு பொம்பளையால தாங்க முடியாததால் சொல்றேன்!''

அவள் இப்போதும் வசுமதியின் முகத்தையே ஊடுருவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

பொறுமையிழந்த வசுமதி மறுபடியும் எதையோ சொல்ல வாயெடுக்க, அவளைக் கையமர்த்திய அப்பெண்மணி, 'அம்மாடி... முன்ன பின்ன தெரியாத எம்மேல நீ இத்தனை அக்கறை காட்டுறதுக்கு ரொம்ப நன்றியம்மா.. நான் எம்புருஷனோட அடிகளையும்... அதோட வலிகளையும் பொறுமையாகத் தாங்கிக்கிட்டு ஒரு சகிப்புத்தன்மையோட இருக்கிறதுக்கு ஒரு மாபெரும் காரணம் இருக்கும்மா!... அது உன்னைய மாதிரி வெளிய இருந்து பார்க்கிறவங்களுக்குப் புரியாதும்மா!''

'காரணமா?'' வசுமதி ஆர்வமாகக் கேட்டாள்.

'ஆமாம்மா... ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் என் கணவர் ஒரு கம்பெனிக்கு முதலாளியா... கிட்டத்தட்ட நூறு... நூத்தம்பது பேருக்கு வேலை குடுக்கறவரா... பண பலத்தோட... அதிகார பலத்தோட... செல்வாக்கோட இருந்தவரும்மா... கூட இருந்த பார்ட்னரும்... ஆடிட்டரும் சேர்ந்து பண்ணின தில்லுமுல்லுத்தனத்தால கம்பெனி 'சட...சட''ன்னு சரிஞ்சு விழுந்திட்டுது... அவங்கெல்லாம் முன்கூட்டியே புத்திசாலித்தனமா தங்களோட சொத்துபத்துக்களை பாதுகாப்புப் பண்ணி வெச்சுக்கிட்டுத் தப்பிச்சிட்டாங்க.. இவருதான் பாவம் எல்லாரையும் நம்பி... ஏமாந்து... திவாலாகி... வீடு வாசலை இழந்து... அடுத்த வேளைச் சோத்துக்குக் கூட வழியில்லாதவராகி நடு ரோட்டுக்கு வந்திட்டாரு!''

'அடப்பாவமே!''

'கடைசில... இப்ப ஏதோ ஒரு குறைஞ்ச சம்பளத்துக்கு... ஒரு சின்ன கம்பெனில வேலைக்குச் சேர்ந்திட்டாரு... அதன்மூலமா இப்போதைக்கு ஏதோ அரை வயிறு... கால் வயிறு நிறையுது... நல்ல வேளையா ஆண்டவன் எங்களுக்குன்னு குழந்தை குட்டி எதையும் குடுக்கல... இல்லேன்னா பாவம்... அதுகளும் எங்க கூட சேர்ந்து கஷ்டப்பட்டிருக்கும்!''

சில வினாடிகள் அமைதியாய்க் கழிய, 'சரிம்மா... இதுக்கும் அவரு தெனமும் உங்களை அடிக்கறதுக்கும்... அதுக்கு நீங்க பொறுமை காக்கறதுக்கும் என்ன சம்பந்தம்?'' வசுமதி விடாமல் கேட்டாள்.

'அம்மா... அவருக்கு வயசு ஐம்பத்தியொண்ணு... இப்ப அவரு வேலைக்குப் போற எடத்துல... அவரோட மேலதிகாரியா இருக்கிற எல்லாருமே... அவரை விட வயசுல குறைஞ்சவங்க... அவங்க ஏவுற வேலையைச் செய்யற ஆள் இவரு... அது அவரை மனசளவுல ரொம்பவே பாதிச்சிருக்கு... ஆனாலும் வயித்துப் பாட்டுக்காக அதை மறைச்சுக்கிட்டு வேலை செஞ்சுக்கிட்டிருக்காரு... சமயத்துல வயசுல குறைஞ்ச அவங்க இவரை அதிகாரத்தொனில விரட்டும் போது... திருப்பிப் பேச... எதிர்த்துக் கேட்க.. நாக்கும் மனசும் துடிச்சாலும் பேச முடியாத சூழ்நிலை... ஆரம்பத்திலிருந்தே ஒரு முதலாளியா வாழ்ந்திட்டு... நூத்துக்கணக்கான பேர்களை அதிகாரம் பண்ணிட்டிருந்தவரோட மனசு அது போன்ற சூழ்நிலைகள்ல எவ்வளவு வலிக்கும்னு எனக்குத்தான் தெரியும்! அதனால...!

'அதனால.....?''

'பாவம்!... மேலதிகாரிங்க மேலே காட்ட முடியாத கோபத்தை அவரு எங்க போயி... யாருகிட்டக் காட்டுவார்?... அவர் என் மேல் காட்டுற கோபமெல்லாம்... எனக்குக் குடுக்கற அடியெல்லாம் அந்த ஆவேசத்தின் வெளிப்பாடுதான்னு எனக்கு நல்லாத் தெரியும்... அதனால்தான் அவரோட அந்த உணர்ச்சிகளுக்கு வடிகாலா என்னை நான் ஆக்கிட்டு பொறுமையா இருக்கேன். புருஷனோட சுகங்களுக்கும்... சந்தோஷங்களுக்கும் மட்டுமில்லே, சோகங்களுக்கும்... ஏன்.. கோபங்களுக்கும் கூட பொண்டாட்டி தான் வடிகால்!''

சொல்லிவிட்டு நிதானமாய் நடந்த அந்தப் பெண்மணியை ஆற்றவொண்ணா ஆதங்கத்துடன் பார்த்தாள் வசுமதி.



வடிகால் - முகில் தினகரன் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக