புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
by heezulia Yesterday at 11:57 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெகிழ வைத்த நிஜங்கள்
Page 21 of 32 •
Page 21 of 32 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 32
First topic message reminder :
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி
வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'
நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.
சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.
சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.
`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.
``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.
``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.
சுமதி பாபு, கோவூர்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
வலுப்படும் தாத்தா - பேரன் பாசம்
சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச்சென்றிருந்த போது தோழியின் மாமனார் ரேஷன் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் தன் 5 வயது மகனையும் அனுப்பி வைத்தாள் தோழி.
`ரேஷன் கடைக்குத்தான் உன் மாமனார் போகிறாரே, பிறகு எதற்கு உன் சிறுபையனையும் ரேஷன் கடைக்கு அனுப்புகிறாய்?' என்று தோழியிடம் கேட்டேன். அதற்கு தோழி என்னிடம், `கடந்தமுறை என் மாமா ரேஷனில் பொருட்கள் வாங்கி வந்தபோது மறதியாக ரேஷன்கார்டை விட்டு விட்டு வந்து விட்டார். நல்லவேளையாக தெரிந்தவர்கள் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தார்கள். இப்போது என் பையனையும் கூட அனுப்புவதன் நோக்கம். மாமா எதையாவது மறந்து போனாலும் இவன் ஞாபகப்படுத்துவான். அதோடு போகும்போதும் வரும்போதும் தன் தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு நடப்பதால் இயல்பாகவே தாத்தா மீது அவனுக்குள் அன்பு தழைத்து விடும். அதோடு அவன் தாத்தாவுக்கும் நாம் தனிமைப்படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம் வராது' என்றாள்.
பெரியவர்களை இன்றைய இளைய தலைமுறை மதிக்கவேண்டும் என்ற என் தோழியின் எண்ணமே உயர்வானது. அதற்காக அவளை மனதார பாராட்டி விட்டு வந்தேன்.
எஸ்.நித்யா, கரையான்சாவடி
சமீபத்தில் என் தோழியின் வீட்டுக்குச்சென்றிருந்த போது தோழியின் மாமனார் ரேஷன் கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். அவருடன் தன் 5 வயது மகனையும் அனுப்பி வைத்தாள் தோழி.
`ரேஷன் கடைக்குத்தான் உன் மாமனார் போகிறாரே, பிறகு எதற்கு உன் சிறுபையனையும் ரேஷன் கடைக்கு அனுப்புகிறாய்?' என்று தோழியிடம் கேட்டேன். அதற்கு தோழி என்னிடம், `கடந்தமுறை என் மாமா ரேஷனில் பொருட்கள் வாங்கி வந்தபோது மறதியாக ரேஷன்கார்டை விட்டு விட்டு வந்து விட்டார். நல்லவேளையாக தெரிந்தவர்கள் கொண்டு வந்து வீட்டில் கொடுத்தார்கள். இப்போது என் பையனையும் கூட அனுப்புவதன் நோக்கம். மாமா எதையாவது மறந்து போனாலும் இவன் ஞாபகப்படுத்துவான். அதோடு போகும்போதும் வரும்போதும் தன் தாத்தாவின் கையை பிடித்துக் கொண்டு நடப்பதால் இயல்பாகவே தாத்தா மீது அவனுக்குள் அன்பு தழைத்து விடும். அதோடு அவன் தாத்தாவுக்கும் நாம் தனிமைப்படுத்தப் படுகிறோம் என்ற எண்ணம் வராது' என்றாள்.
பெரியவர்களை இன்றைய இளைய தலைமுறை மதிக்கவேண்டும் என்ற என் தோழியின் எண்ணமே உயர்வானது. அதற்காக அவளை மனதார பாராட்டி விட்டு வந்தேன்.
எஸ்.நித்யா, கரையான்சாவடி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உடம்பை வளர்க்கும் ஹார்மோன் கோழிகள்
நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்கு போயிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். 9 வயது என்றார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். `இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒருமுறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கிறார்கள். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு ஒருவிதத்தில் ஆபத்து' என்றார்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் இன்ஜக்ஷன் போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்து சாப்பிடும் நமக்கும் ஹார்மோன் வேலை செய்கிறது. குறிப்பாய் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு முன்னரே பருவம் எய்தும் வேலையை செய்கிறது. இது பிஞ்சு பழுக்கும் அபாயம் ஆகும்.
கோழிகளுக்கு போடப்பட்ட ஊசி நமக்கு எப்படி வேலை செய்கிறது என்கிறீர்களா? அந்த ஹார்மோன் உற்பத்தி செய்யும் வைரஸ்களை அழிக்கக்கூடிய அளவுக்கு நம் சமையல் கொதிநிலை போதாது. உலோகங்களை உருக்கத் தேவையான அளவு வெப்பமே அந்த ஹார்மோன்களை அழிக்கவல்லது என்றார்.
தோழியிடம் விசாரித்தபோது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவுப்பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதல் இடம் என்றாள். சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கூட கேட்பாளாம்.
பெண்களை பெற்றவர்களே, இம்மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்குஎந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டர்களிடம் கேட்டு பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பி.ஜெயலட்சுமி, திருப்பூர்
நெருங்கிய தோழியின் மகள் பூப்பெய்திய விழாவுக்கு போயிருந்தேன். தோழியின் தூரத்து உறவினர் பெண்ணான ஆசிரியையும் வந்திருந்தார். சடங்கு, சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்ததும் அந்த ஆசிரியை பூப்பெய்திய பெண்ணின் வயதைக் கேட்டார். 9 வயது என்றார்கள்.
இதைத் தொடர்ந்து அந்த ஆசிரியை ஒரு அதிர்ச்சி தகவலை சொன்னார். `இன்றைய பல குடும்பங்களில் வாரம் ஒருமுறை தவறாமல் பிராய்லர் சிக்கன் கோழிகளை வாங்கி சமைக்கிறார்கள். ஆண்களுக்கு இது எப்படியோ, ஆனால் பெண்களுக்கு ஒருவிதத்தில் ஆபத்து' என்றார்.
பண்ணைகளில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகள் நாற்பதே நாளில் பருத்து வளர ஹார்மோன் இன்ஜக்ஷன் போடுவது உண்டாம். இந்தக் கோழிகளை சமைத்து சாப்பிடும் நமக்கும் ஹார்மோன் வேலை செய்கிறது. குறிப்பாய் பெண் குழந்தைகளுக்கு வயதுக்கு முன்னரே பருவம் எய்தும் வேலையை செய்கிறது. இது பிஞ்சு பழுக்கும் அபாயம் ஆகும்.
கோழிகளுக்கு போடப்பட்ட ஊசி நமக்கு எப்படி வேலை செய்கிறது என்கிறீர்களா? அந்த ஹார்மோன் உற்பத்தி செய்யும் வைரஸ்களை அழிக்கக்கூடிய அளவுக்கு நம் சமையல் கொதிநிலை போதாது. உலோகங்களை உருக்கத் தேவையான அளவு வெப்பமே அந்த ஹார்மோன்களை அழிக்கவல்லது என்றார்.
தோழியிடம் விசாரித்தபோது பூப்பெய்திய அவள் மகள் விரும்பி சாப்பிடும் உணவுப்பட்டியலில் பிராய்லர் சிக்கனுக்குத்தான் முதல் இடம் என்றாள். சமயத்தில் வாரத்தில் மூன்று நாட்கள் கூட கேட்பாளாம்.
பெண்களை பெற்றவர்களே, இம்மாதிரி வயதில் உங்கள் பெண் குழந்தைகளுக்குஎந்தெந்த உணவு கொடுத்தால் சரியாக இருக்கும் என்பதை டாக்டர்களிடம் கேட்டு பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.
பி.ஜெயலட்சுமி, திருப்பூர்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஆங்கிலப் படிப்பா, ஆளை விடு..!
என்னுடைய உறவினர் ஒருவர் முன்னாள் எம்.எல்.ஏ. படிப்பு வாசனை இல்லாதவர். பணமும் பதவியும் இருந்ததால் படிப்பு இல்லாதது ஒரு குறையாகத் தெரியவில்லை.
ஆனால் அவருக்கோ படித்தவர்களைக் கண்டாலே ஆகாது. அதுவும் அவர் எதிரில் தெரியாமல் யாராவது ஆங்கிலத்தில் பேசி விட்டால் அவ்வளவு தான். மட்டம் தட்டி அனுப்பி விடுவார்.
என் மூத்தமகன் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவன். உறவினருக்கு இருந்த செல்வாக்கு என் மகனுக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தி வைத்திருந்தது. அந்த மரியாதையின் நிமித்தமாய் ஒருநாள் அவரை வீட்டில் சென்று சந்தித்தவன், தனக்கு ஏதாவது வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டிருக்கிறான்.அவரோ `என்ன படித்திருக்கிறாய்?' என்று கேட்க, இவனும் பெருமையாய் எம்.ஏ.ஆங்கில இலக்கியம் என்று சொல்லியிருக்கிறான். ஆங்கிலம் என்ற வார்த்தையைக் கேட்டதும் டென்ஷனானவர், `ஏண்டா இதெல்லாம் ஒரு படிப்பா? தமிழ்ல வேற ஏதாவது நல்ல படிப்பா படிச்சிட்டு வந்து கேளு. நீ எதிர்பார்த்ததை விட பெரிய வேலையா வாங்கித் தரேன்' என்றிருக்கிறார். அன்று முதல் அவரை எதிரில் பார்த்தாலே போதும், ஓட்டம் பிடித்து விடுகிறான் என் மகன்.
ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு மரியாதை இருக்கும். இதை படிப்பறிவு இல்லாத உறவினர் போன்றவர்கள் உதாசீனம் செய்யாதிருந்தாலே போதும்.
கே.பி.தேவிபெருமாள், மவுலிவாக்கம்
என்னுடைய உறவினர் ஒருவர் முன்னாள் எம்.எல்.ஏ. படிப்பு வாசனை இல்லாதவர். பணமும் பதவியும் இருந்ததால் படிப்பு இல்லாதது ஒரு குறையாகத் தெரியவில்லை.
ஆனால் அவருக்கோ படித்தவர்களைக் கண்டாலே ஆகாது. அதுவும் அவர் எதிரில் தெரியாமல் யாராவது ஆங்கிலத்தில் பேசி விட்டால் அவ்வளவு தான். மட்டம் தட்டி அனுப்பி விடுவார்.
என் மூத்தமகன் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவன். உறவினருக்கு இருந்த செல்வாக்கு என் மகனுக்கு அவர் மீது பெரிய மரியாதையை ஏற்படுத்தி வைத்திருந்தது. அந்த மரியாதையின் நிமித்தமாய் ஒருநாள் அவரை வீட்டில் சென்று சந்தித்தவன், தனக்கு ஏதாவது வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டிருக்கிறான்.அவரோ `என்ன படித்திருக்கிறாய்?' என்று கேட்க, இவனும் பெருமையாய் எம்.ஏ.ஆங்கில இலக்கியம் என்று சொல்லியிருக்கிறான். ஆங்கிலம் என்ற வார்த்தையைக் கேட்டதும் டென்ஷனானவர், `ஏண்டா இதெல்லாம் ஒரு படிப்பா? தமிழ்ல வேற ஏதாவது நல்ல படிப்பா படிச்சிட்டு வந்து கேளு. நீ எதிர்பார்த்ததை விட பெரிய வேலையா வாங்கித் தரேன்' என்றிருக்கிறார். அன்று முதல் அவரை எதிரில் பார்த்தாலே போதும், ஓட்டம் பிடித்து விடுகிறான் என் மகன்.
ஒவ்வொரு படிப்புக்கும் ஒரு மரியாதை இருக்கும். இதை படிப்பறிவு இல்லாத உறவினர் போன்றவர்கள் உதாசீனம் செய்யாதிருந்தாலே போதும்.
கே.பி.தேவிபெருமாள், மவுலிவாக்கம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- sinthiyarasuஇளையநிலா
- பதிவுகள் : 546
இணைந்தது : 27/02/2012
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
பழகிய வாகனம், பதறிய நெஞ்சம்!
நான் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறேன். அங்கு பணியில் இருந்த சீனியர் ஆசிரியர் ஒருவர் எப்போதும் ஒரு பழைய டூவிலரில் தான் பள்ளிக்கு வருவார். தெரிந்தவர்கள் முகத்துக்கு எதிரில் `ஓட்டவண்டி' என்று கிண்டல் செய்தாலும் சிரித்துக் கொள்வாரே தவிர கோபப்பட மாட்டார். அப்புறம்தான் அது அவர் அப்பா வாங்கிக் கொடுத்த வண்டி என்பதை தெரிந்து கொண்டேன்.
தன் அப்பாவின் `ரிடையர்மென்ட்' பணத்தில் தனக்கு அப்பா அன்புடன் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனம் 10 வருடங்களில் பழுதாகி விட்டதாகவும், அதை விற்க மனமில்லாமல் தன் நண்பன் ஒருவனின் `மெக்கானிக் ஷாப்பில்' 4,000 ரூபாய்க்கு விற்று விட்டதாகவும். அதன்பின் அந்த வண்டியின் நினைவில் மனம் வருந்தியதாகவும் கூறினார். ஒரு நாள் வேறு ஒரு நண்பனை பார்க்க சென்றபோது அந்த வழியில் இருந்த ஒரு காவல் நிலையத்தின் ஓரத்தில் தன் வண்டி கண்ணில் படவே, சற்றே பதற்றத்துடன் நின்று பார்த்திருக்கிறார். அது தன் நண்பனிடம் விற்ற வண்டி தான். மிகவும் மோசமான நிலையில் துருப்பிடித்து காணப்பட்டதை பார்த்து அதிர்ந்து போனவர், உடனே ஒரு பெரிய மனிதரின் உதவியுடன் அந்த வண்டியை மீட்டு, பழுது பார்த்து, புதிய வண்டிபோல மெருகேற்றி வைத்திருக்கிறார். வீட்டில் புதுவண்டி இருந்தாலும் தன் அப்பா வாங்கி கொடுத்த அந்த வண்டியை இன்றும் பயன்படுத்தி வருவதாக கூறினார். ``ஓட்ட வண்டி'' என கிண்டல் செய்தவர்களின் நடுவில் அவரின் ``அன்பு உள்ளம்'' இமயமாக தெரிந்தது எனக்கு.
-ஜாஸ்மின், சென்னை-49.
நான் ஒரு பெரிய கல்வி நிறுவனத்தில் தமிழாசிரியையாக பணியாற்றி வருகிறேன். அங்கு பணியில் இருந்த சீனியர் ஆசிரியர் ஒருவர் எப்போதும் ஒரு பழைய டூவிலரில் தான் பள்ளிக்கு வருவார். தெரிந்தவர்கள் முகத்துக்கு எதிரில் `ஓட்டவண்டி' என்று கிண்டல் செய்தாலும் சிரித்துக் கொள்வாரே தவிர கோபப்பட மாட்டார். அப்புறம்தான் அது அவர் அப்பா வாங்கிக் கொடுத்த வண்டி என்பதை தெரிந்து கொண்டேன்.
தன் அப்பாவின் `ரிடையர்மென்ட்' பணத்தில் தனக்கு அப்பா அன்புடன் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனம் 10 வருடங்களில் பழுதாகி விட்டதாகவும், அதை விற்க மனமில்லாமல் தன் நண்பன் ஒருவனின் `மெக்கானிக் ஷாப்பில்' 4,000 ரூபாய்க்கு விற்று விட்டதாகவும். அதன்பின் அந்த வண்டியின் நினைவில் மனம் வருந்தியதாகவும் கூறினார். ஒரு நாள் வேறு ஒரு நண்பனை பார்க்க சென்றபோது அந்த வழியில் இருந்த ஒரு காவல் நிலையத்தின் ஓரத்தில் தன் வண்டி கண்ணில் படவே, சற்றே பதற்றத்துடன் நின்று பார்த்திருக்கிறார். அது தன் நண்பனிடம் விற்ற வண்டி தான். மிகவும் மோசமான நிலையில் துருப்பிடித்து காணப்பட்டதை பார்த்து அதிர்ந்து போனவர், உடனே ஒரு பெரிய மனிதரின் உதவியுடன் அந்த வண்டியை மீட்டு, பழுது பார்த்து, புதிய வண்டிபோல மெருகேற்றி வைத்திருக்கிறார். வீட்டில் புதுவண்டி இருந்தாலும் தன் அப்பா வாங்கி கொடுத்த அந்த வண்டியை இன்றும் பயன்படுத்தி வருவதாக கூறினார். ``ஓட்ட வண்டி'' என கிண்டல் செய்தவர்களின் நடுவில் அவரின் ``அன்பு உள்ளம்'' இமயமாக தெரிந்தது எனக்கு.
-ஜாஸ்மின், சென்னை-49.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பெற்றோரின் ஆடம்பரத்தில் தொலைந்த பிள்ளைகள் கல்வி
எனக்கு தெரிந்த பெண் ஒருத்திக்கு 3 மகள்கள், ஒரு மகன். கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்ததால் இஷ்டத்திற்கு செலவழித்தாள். குழந்தைகளுக்கு ஆடம்பர ஆடைகளை அணிவிப்பது மட்டுமின்றி தானும் ஆடம்பரமாகவே இருந்தாள். கணவனுக்கு வெளிநாட்டில் நண்பர்கள் அதிகம்.
அவர்களில் சிலருக்கு தன் சக்தியை மீறி கடன்வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் யாரும் பணத்தை திருப்பித் தரவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் தந்த நெருக்கடி காரணமாக ஆசையாக கட்டிய பெரிய வீட்டை விற்று கடனை அடைத்தார்.
அதற்குப்பிறகு நண்பர்களிடம் ஏமாந்த அதிர்ச்சியால் அங்கே வேலை பார்க்கப் பிடிக்காமல் ஊருக்கே வந்து விட்டார். இப்போது ஊரில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தாயோ தனது 3 மகள்களுடன் வேலைக்கு போய் குடும்ப செலவை சமாளிக்கிறாள். மனைவியின் ஆடம்பரமும் கணவரின் வெகுளித்தனமும் சேர்ந்து அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதித்து விட்டது.
-செ.மணிமொழி, உள்ளூர்வட்டம்.
எனக்கு தெரிந்த பெண் ஒருத்திக்கு 3 மகள்கள், ஒரு மகன். கணவன் வெளிநாட்டில் வேலை பார்த்து கொண்டிருந்ததால் இஷ்டத்திற்கு செலவழித்தாள். குழந்தைகளுக்கு ஆடம்பர ஆடைகளை அணிவிப்பது மட்டுமின்றி தானும் ஆடம்பரமாகவே இருந்தாள். கணவனுக்கு வெளிநாட்டில் நண்பர்கள் அதிகம்.
அவர்களில் சிலருக்கு தன் சக்தியை மீறி கடன்வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால் யாரும் பணத்தை திருப்பித் தரவில்லை. அதனால் கடன் கொடுத்தவர்கள் தந்த நெருக்கடி காரணமாக ஆசையாக கட்டிய பெரிய வீட்டை விற்று கடனை அடைத்தார்.
அதற்குப்பிறகு நண்பர்களிடம் ஏமாந்த அதிர்ச்சியால் அங்கே வேலை பார்க்கப் பிடிக்காமல் ஊருக்கே வந்து விட்டார். இப்போது ஊரில் சின்னதாய் ஒரு பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். தாயோ தனது 3 மகள்களுடன் வேலைக்கு போய் குடும்ப செலவை சமாளிக்கிறாள். மனைவியின் ஆடம்பரமும் கணவரின் வெகுளித்தனமும் சேர்ந்து அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதித்து விட்டது.
-செ.மணிமொழி, உள்ளூர்வட்டம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நல்ல மனம் வாழ்க
நான் கடையுடன் கூடிய வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து ஒட்டல் நடத்தி வந்தேன். மாதம் பிறந்ததும் வீட்டு உரிமையாளரிடம் கரெக்டாக வாடகை கொடுத்து விடுவேன். சில மாதங்களுக்கு முன் திடீரென்று எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினேன். இதனால் நான் தொழிலில் ஈடுபட முடியாமல் 3 மாத காலம் வருமானத்தை இழந்தேன்.
இருதய ஆபரேஷனுக்கான அதிக பட்ச செலவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு நிலை குலைந்திருந்தேன். திடீரென்று ஒருநாள் வீட்டு உரிமையாளர் என்னை பார்க்க வந்திருந்தார். என் உடல் நலத்தை விசாரித்தவர், `வீட்டுக்கும், கடைக்கும் வாடகை கொடுக்கணுமே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் மீண்டும் கடை திறந்து நல்ல நிலைக்கு வரும்போது கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்தால் போதும்' என்று கூறி என்மன நெருக்கடியை குறைத்தார். அவரது பெருந்தன்மையில் என் தன்மானத்தையும் நிலைநிறுத்தினார். தற்போது மீண்டும் கடை நடத்தி, நிலுவையில் இருக்கும் வாடகை பாக்கியையும் அடைத்து வருகிறேன்.
இரா.மணிவண்ணன், கோவை.
நான் கடையுடன் கூடிய வீடு ஒன்றை வாடகைக்குப் பிடித்து ஒட்டல் நடத்தி வந்தேன். மாதம் பிறந்ததும் வீட்டு உரிமையாளரிடம் கரெக்டாக வாடகை கொடுத்து விடுவேன். சில மாதங்களுக்கு முன் திடீரென்று எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருதய அறுவை சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பினேன். இதனால் நான் தொழிலில் ஈடுபட முடியாமல் 3 மாத காலம் வருமானத்தை இழந்தேன்.
இருதய ஆபரேஷனுக்கான அதிக பட்ச செலவில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு நிலை குலைந்திருந்தேன். திடீரென்று ஒருநாள் வீட்டு உரிமையாளர் என்னை பார்க்க வந்திருந்தார். என் உடல் நலத்தை விசாரித்தவர், `வீட்டுக்கும், கடைக்கும் வாடகை கொடுக்கணுமே என்ற கவலை உங்களுக்கு வேண்டாம். நீங்கள் மீண்டும் கடை திறந்து நல்ல நிலைக்கு வரும்போது கொஞ்சம், கொஞ்சமாக கொடுத்தால் போதும்' என்று கூறி என்மன நெருக்கடியை குறைத்தார். அவரது பெருந்தன்மையில் என் தன்மானத்தையும் நிலைநிறுத்தினார். தற்போது மீண்டும் கடை நடத்தி, நிலுவையில் இருக்கும் வாடகை பாக்கியையும் அடைத்து வருகிறேன்.
இரா.மணிவண்ணன், கோவை.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
திரும்பி வந்த சந்தோஷம்
வெளிïரில் இருக்கும் தங்கையை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றேன். நான் போய் இறங்கிய நேரத்தில் தங்கை வீட்டில் இல்லை. வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு எங்கே போயிருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள பக்கத்து வீட்டில் போய்க்கேட்டேன். தங்கை மார்க்கெட் போயிருப்பதாகவும் இப்போது வரும் நேரம் தான் என்றும் அவர்கள் சொல்ல, உடனே ஆட்டோ டிரைவருக்கு வாடகை கட்டணம் கொடுத்து அவரை அனுப்பி விட்டேன். கொஞ்ச நேரத்தில் தங்கையும் வந்து விட, அவளை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாய் பேசியபடி வீட்டுக்குள் போனேன்.
அரை மணி நேரம்கூட ஆகியிருக்காது. என்னை தங்கை வீட்டில் இறக்கி விட்டுப் போன ஆட்டோ டிரைவர் மறுபடியும் ஆட்டோவை கொண்டு வந்து தங்கை வீட்டு வாசலில் நிறுத்தினார்.
ஆட்டோ கட்டணம் தான் கொடுத்து அனுப்பி விட்டோமே, மறுபடி இவர் எதற்காக வந்தார் என்ற யோசனையில் அவரை பார்த்தேன். அவர் என்னிடம், "அம்மா! ஆட்டோவில் இருந்து இறங்கும்போது எதையாவது எடுக்க மறந்தீர்களா?'' என்று கேட்டார். அப்போது பார்த்து சட்டென்று நான் எடுக்க மறந்துபோன பேக் நினைவுக்கு வர, `அய்யோ என் பேக்கை எடுக்க மறந்து விட்டேனே' என்று பதட்டமாய் கூறினேன். `இதுதானா பாருங்கள்' என்று பேக்கை காண்பித்தார். நானும் இதுதான் என்று கூறி பேக்கை பெற்றுக் கொண்டேன்.
என் பேக்கில் கொஞ்சம் நகைகளுடன் பணமும் வைத்திருந்தேன். அது அப்படியே இருந்தது. நான் அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படியானால்பேக்கை கொடுக்க வந்ததற்கான ஆட்டோ கட்டணத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். அதற்கும் மறுத்து விட்டார். அந்த நல்ல மனிதருக்கு மனதார நன்றி செலுத்தினேன்.
-கே.சந்திரவதனா, கிழக்கு கந்தசாமிபுரம்.
வெளிïரில் இருக்கும் தங்கையை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றேன். நான் போய் இறங்கிய நேரத்தில் தங்கை வீட்டில் இல்லை. வீடு பூட்டிக்கிடந்தது. வீட்டைப் பூட்டிவிட்டு எங்கே போயிருக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ள பக்கத்து வீட்டில் போய்க்கேட்டேன். தங்கை மார்க்கெட் போயிருப்பதாகவும் இப்போது வரும் நேரம் தான் என்றும் அவர்கள் சொல்ல, உடனே ஆட்டோ டிரைவருக்கு வாடகை கட்டணம் கொடுத்து அவரை அனுப்பி விட்டேன். கொஞ்ச நேரத்தில் தங்கையும் வந்து விட, அவளை பார்த்த மகிழ்ச்சியில் உற்சாகமாய் பேசியபடி வீட்டுக்குள் போனேன்.
அரை மணி நேரம்கூட ஆகியிருக்காது. என்னை தங்கை வீட்டில் இறக்கி விட்டுப் போன ஆட்டோ டிரைவர் மறுபடியும் ஆட்டோவை கொண்டு வந்து தங்கை வீட்டு வாசலில் நிறுத்தினார்.
ஆட்டோ கட்டணம் தான் கொடுத்து அனுப்பி விட்டோமே, மறுபடி இவர் எதற்காக வந்தார் என்ற யோசனையில் அவரை பார்த்தேன். அவர் என்னிடம், "அம்மா! ஆட்டோவில் இருந்து இறங்கும்போது எதையாவது எடுக்க மறந்தீர்களா?'' என்று கேட்டார். அப்போது பார்த்து சட்டென்று நான் எடுக்க மறந்துபோன பேக் நினைவுக்கு வர, `அய்யோ என் பேக்கை எடுக்க மறந்து விட்டேனே' என்று பதட்டமாய் கூறினேன். `இதுதானா பாருங்கள்' என்று பேக்கை காண்பித்தார். நானும் இதுதான் என்று கூறி பேக்கை பெற்றுக் கொண்டேன்.
என் பேக்கில் கொஞ்சம் நகைகளுடன் பணமும் வைத்திருந்தேன். அது அப்படியே இருந்தது. நான் அவருக்கு அன்பளிப்பாக பணம் கொடுத்தேன். அவர் வாங்க மறுத்து விட்டார். அப்படியானால்பேக்கை கொடுக்க வந்ததற்கான ஆட்டோ கட்டணத்தையாவது பெற்றுக் கொள்ளுங்கள் என்றேன். அதற்கும் மறுத்து விட்டார். அந்த நல்ல மனிதருக்கு மனதார நன்றி செலுத்தினேன்.
-கே.சந்திரவதனா, கிழக்கு கந்தசாமிபுரம்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாய்மையின் சிறப்பு
நான் ஈரோடு செல்வதற்காக சேலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தேன்.அப்போது இளைஞர் ஒருவர் தன் குழந்தையுடன் பஸ் ஏற வந்திருந்தார். அந்தக் குழந்தை தன் அப்பாவிடம், பால் வாங்கித் தருமாறு கேட்டது. உடனே அந்த இளைஞரும் பக்கத்தில் இருந்த டீக்கடையில் பால் வாங்கப் போனார். டீக்கடையிலோ அதிக கூட்டம். அதனால் பால் கேட்டவரிடம் ஆற்றாமல் அப்படியே கொடுத்து விட்டார், கடைக்காரர். அதை இவரும் கவனிக்காமல், சூடாக பாலை ஊட்ட, குழந்தை சூடு தாங்காமல் கதறி விட்டது.
இதைக் கண்டதும் தன் குழந்தைக்கு பால் வாங்கி ஆற்றிக் கொண்டிருந்த ஒரு பெண், அப்படியே இந்தக் குழந்தைக்கும் ஆற்றிய பாலைக் கொடுத்து பசியமர்த்தினார். இதைக்கண்டபோது தாய்மையின்சிறப்பே இது தான் என்று எண்ணி மகிழத் தோன்றியது.
-ஆர்.எழில்மாறன், நரிப்பள்ளி
நான் ஈரோடு செல்வதற்காக சேலம் பஸ் நிலையத்தில் நின்றிருந்தேன்.அப்போது இளைஞர் ஒருவர் தன் குழந்தையுடன் பஸ் ஏற வந்திருந்தார். அந்தக் குழந்தை தன் அப்பாவிடம், பால் வாங்கித் தருமாறு கேட்டது. உடனே அந்த இளைஞரும் பக்கத்தில் இருந்த டீக்கடையில் பால் வாங்கப் போனார். டீக்கடையிலோ அதிக கூட்டம். அதனால் பால் கேட்டவரிடம் ஆற்றாமல் அப்படியே கொடுத்து விட்டார், கடைக்காரர். அதை இவரும் கவனிக்காமல், சூடாக பாலை ஊட்ட, குழந்தை சூடு தாங்காமல் கதறி விட்டது.
இதைக் கண்டதும் தன் குழந்தைக்கு பால் வாங்கி ஆற்றிக் கொண்டிருந்த ஒரு பெண், அப்படியே இந்தக் குழந்தைக்கும் ஆற்றிய பாலைக் கொடுத்து பசியமர்த்தினார். இதைக்கண்டபோது தாய்மையின்சிறப்பே இது தான் என்று எண்ணி மகிழத் தோன்றியது.
-ஆர்.எழில்மாறன், நரிப்பள்ளி
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![நெகிழ வைத்த நிஜங்கள் - Page 21 Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 21 of 32 • 1 ... 12 ... 20, 21, 22 ... 26 ... 32
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 21 of 32
|
|