புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_m10நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெகிழ வைத்த நிஜங்கள்


   
   

Page 16 of 32 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 32  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 10:02 am

First topic message reminder :

நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 4:36 pm

அல்லல் பட வைத்த அவசர பயணம்!

தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எங்களை ஏற்றிச் செல்ல வழக்கமாக கம்பெனி பஸ் வரும். அன்று அந்த நிறுத்தத்தில் யாரும் இல்லாததால் பஸ் கிளம்பியது.

அப்போதுதான் என்னுடன் பணிபுரியும் ராஜேஷ் பஸ்சுக்குப் பின்னால் ஓடி வந்தார். இதைப் பார்த்ததும் நான் டிரைவரிடம் பஸ்ஸை நிறுத்தச் சொன்னேன். டிரைவரோ `சார், ஏற்கனவே நான் அடிக்கடி லேட்டா வரேன்னு நோட்டீஸ் கொடுத்திருக்காங்க. நீங்க வேறு இன்னும் லேட் பண்ண வைக்கிறீங்க` என்று அலுப்புடன் நிறுத்தினார்.

பஸ்சில் ஏறிய ராஜேஷ், அதே வேகத்தில் கையில் வைத்திருந்த இரண்டு கறுப்பு பிளாஸ்டிக் பைகளில் ஒன்றை அங்கிருந்த குப்பை மேட்டில் அவசர அவசரமாக வீசினார். பஸ் கொஞ்சதூரம் சென்றிருக்கும். திடீரென ராஜேஷ் "அய்யய்யோ'' என்று அலறினார், என்னவென்று பார்த்தபோது "தவறுதலா பையை மாற்றி குப்பை மேட்டில் வீசி விட்டேன். அதில் வீட்டுச்சாவி, பணம், கிரெடிட் கார்டு, ஏ.டி.எம். கார்டு, இன்னும் சில முக்கிய பொருட்கள் உள்ளன. வண்டியை நிறுத்துங்கள்'' என்று அழாத குறையாக கெஞ்சினார்.

ஆனால் டிரைவர் கண்டு கொள்ளவே இல்லை. நிலைமையை புரிந்து கொண்ட மற்றவர்கள் அனைவரும் பஸ்ஸை நிறுத்தும்படி கேட்டுக்கொண்டதால் பஸ்ஸை திரும்பவும் ராஜேஷ் ஏறிய இடத்திற்கே கொண்டு வந்தார்.

எங்கள் பஸ் வருவதற்கும் குப்பைலாரி வருவதற்கும் சரியாக இருந்தது. கொஞ்சம் தாமதமாகி இருந்தாலும் எல்லாம் அம்போ தான், நல்ல வேளையாக பிளாஸ்டிக் பொருட்களை பொறுக்குபவரும் அந்த நேரத்தில் வரவில்லை. ராஜேஷ் பை கிடைத்துவிட்டது. லேட்டாக ஆபீஸ் போனாலும் நிம்மதியாக போய்ச் சேர்ந்தோம்.

வாழ்க்கையே அவசர கதியாகி விட்டது. அதனால் நாம் என்ன செய்கிறோம் என்று அறியாமலே பல தவறுகள் நேர்ந்து அல்லல்படுகிறோம். கொஞ்ச நேரம் முன்னதாக கிளம்பினால் இத்தகைய அல்லல்களை தவிர்க்கலாமே!

என்.வி.சுப்பிரமணியன், ஜாகீர் அம்மா பாளையம்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 04, 2012 4:36 pm

ஆலோசனை கூறி அழ வைக்காதீர்கள்!

என் சகோதரிக்கு திருமணமாகி நான்கு வருடங்கள் ஆகிறது. கடந்த ஒரு வருடமாக அவள் வீட்டைவிட்டு வெளியே வருவதேயில்லை.

உறவினர்கள் வீட்டில் நடைபெறும் எந்த விசேஷ நிகழ்ச்சிகளுக்கும் வரமாட்டாள். அதனால் என் சகோதரியை நான் கோபமாக திட்டி விட்டேன். `நாம நாலு பேரோட விசேஷத்துக்கு போனாதானே, நம்ம விசேஷத்துக்கு நாலு சொந்தக்காரங்க வருவாங்க' என்று காரணம் சொன்னேன்.

நான் திட்டியதும் அழுதுவிட்ட என் சகோதரி, தான் மற்றவர் வீட்டு விசேஷங்களுக்கு வராததற்கு காரணம் சொன்னபோது எனக்கே கஷ்டமாகி விட்டது.

`எந்த விசேஷத்திற்கு போனாலும் குழந்தை இல்லையா, குழந்தை இல்லையா? என்று கேட்டு மனதை நோகடிக்கிறார்களாம். அதோடு நிறுத்தாமல் ஏகப்பட்ட வைத்தியங்கள் வேறு சொல்கிறார்களாம். சில வைத்திய முறைகள் படுமோசமானதாக உள்ளதாம். அவள் தாம்பத்ய வாழ்க்கை பற்றியும் துருவித் துருவி பதில் சொல்ல முடியாத கேள்விகளை கேட்கிறார்களாம். அதனால்தான் எங்கும் வருவதில்லை'' என்றாள்.

அவள் சொல்வதும் சரிதானே, நம் ஜனங்களுக்கு எதை கேட்க வேண்டும், எதை கேட்கக்கூடாது என்பது தெரிவதில்லை. அதோடு நிற்காமல் ஆலோசனை என்ற பெயரில் ஆள்ஆளுக்கு டாக்டர் ஆகி விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்கள் எப்போதுதான் மாறுவார்களோ?

நா.கோகிலன், ஜோலார்பேட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தம்பி வெங்கி
தம்பி வெங்கி
பண்பாளர்

பதிவுகள் : 114
இணைந்தது : 02/01/2012

Postதம்பி வெங்கி Mon Feb 06, 2012 7:00 am

அருமையான நிகழ்வு .
தங்கள் பகிர்வுக்கு நன்றி



சிவா wrote:
நெகிழ வைத்த நிஜங்கள் - தினதந்தி

வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட 'வலி'

நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறேன். வருடா வருடம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புது வருட தேதி காலண்டரும், மாதாந்திர காலண்டரும் வழங்குவதுண்டு.

சமீபத்தில் எங்கள் கடைக்கு வந்த பெரியவர் ஒருவர் கேஷ் கவுண்டரில் இருந்தவரிடம் கஸ்டமர் என்ற உரிமையில் காலண்டர் கேட்டார். இதை கவனித்துக் கொண்டிருந்த எங்கள் கடை முதலாளி, வந்தவர் தங்கள் கடையின் ரெகுலர் கஸ்டமர் என்று தெரியாமல், `உங்களை இதற்கு முன்பு இங்கு பார்த்ததே கிடையாதே. வாடிக்கை யாளர்களுக்கு மட்டும்தான் கொடுப்போம்..' என முகத்தில் அடிக்காத குறையாக கூறி அனுப்பி விட்டார்.

சற்றுதூரத்தில் விற்பனை பிரிவில் மும்முரமாக இருந்த நான் அதை கவனித்தேன். முதலாளி அருகே சென்று, `இப்ப வந்துட்டுப் போனவர் என்ன கேட்டார்?' என கேட்டேன்.

`ஏன் அவர் நமது வாடிக்கையாளரா?' என்று என்னிடம் திருப்பிக்கேட்டார் முதலாளி.

``நம்ம கடைக்கு அடிக்கடி வந்து தாலி உருப்படியெல்லாம் வாங்கி செல்வாங்களே.. வசந்தா அக்கா, அவங்க புருஷன்தான் இவரு. இரண்டு மாசத்துக்கு முந்தி அந்தக்கா மாரடைப்பில் இறந்துட்டாங்க. எங்க தெருவுலதான் அவங்க வீடு..'' என்றேன்.

``அடடா! அவரது மனைவி பெயரும், நம்ம கடையின் பெயரும் ஒன்றாக இருப்பதால் மனைவியின் நினைவாக காலண்டர் கேட்டு வந்திருக்கிறார். இது எனக்கு விளங்காமப் போச்சே..!' என தன்னையே நொந்து கொண்ட முதலாளி, கடைப்பையனை அனுப்பி அவரை வரவழைத்தார். தேனீர் தந்து உபசரித்து, ஆறுதல்கூறி காலண்டரும் தந்து திருப்தியாக அனுப்பி வைத்தார்.

சுமதி பாபு, கோவூர்.





தம்பி வெங்கி[flash(150,200)][/flash][wow][/wow][b]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:49 am

புனித யாத்திரையை இப்படியும் புனிதப்படுத்தலாம்!

என் உறவினர் ஒருவர் திருக்கயிலாய யாத்திரை செல்ல இருந்தார். நான் அவரை வழியனுப்ப சென்றிருந்தேன்.

அவர் தனது பயணத்திற்கு வேண்டிய துணிகள், கம்பளி ஆடைகள், மருந்துகளை எடுத்து வைத்ததோடு சில பெட்டிகளில் பென் சில்கள், ரப்பர், ஷார்ப்பனர்கள் மற்றும் பலப்பம் ஆகியவற்றையும் எடுத்து வைத்தார்.

அவரிடம் இதுபற்றி கேட்டேன். "மலைப் பகுதி களில் வாழும் ஏழைக் குழந்தைகளுக்கு இவற் றைக் கொடுத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவார் கள் என்று எனக்கு முன் யாத்திரை சென்றவர் கள் கூறியிருக்கிறார்கள். அது எனக்கும் நல்ல தென்றுபட்டது. இவை எனக்கு அதிக பாரமும் இல்லை, குழந்தைகளும் சந்தோஷப் படுவார்கள். அதனால் கொண்டு போகிறேன்'' என்று அவர் சொன்னார்.

இறைவனைத் தரிசிக்க செல்லும் புனித பயணத்தில் ஏழைகளுக்கு உதவும் உள்ளத்துடன் சென்ற அவரது நல்லெண்ணத்தை எண்ணி வியந்து போனேன்.

-இரா.கணேசன், பட்டைக்கோவில்.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:50 am

சின்னப்பெண்... பெரிய மனசு..!

நான் என் தோழியுடன் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். கூட்ட நெரிசல் மற்ற நாட்களை விட அன்று அதிகமாக இருந்தது. கால் வைப்பதற்கு கூட இடமில்லாத அளவுக்கு கூட்டம்.

அந்த சமயத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண், நாங்கள் வந்த பேருந்தில் ஏறினார். அந்தக் கூட்டத்தில் யாரும் சீட் கொடுத்து உதவ முன் வரவில்லை. நாங்களும் நின்று கொண்டு பயணம் செய்ததால் உதவ முடியவில்லை.

அப்போது, அருகில் ஒரு சீட்டில் அமர்ந்து பயணம் செய்து கொண்டிருந்த 10 வயது சிறுமி அந்த கர்ப்பிணிப் பெண்ணை பார்த்ததும் எழுந்து, தனது இருக்கையில் கர்ப்பிணிப் பெண்ணை அமரச் சொன்னாள்.

மேலும் அந்தப் பெண்ணிடம், "உங்களுக்கு என்ன குழந்தை பிறக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?'' என்று குழந்தை மனதுடன் கேட்டாள். "இதுவரை எந்தக்குழந்தை பிறந்தாலும் சரிஎன்று எண்ணியிருந்தோம். ஆனால் இப்போதோ தேடிவந்து உதவும் குணம் கொண்ட உன்மாதிரி ஒரு பெண் குழந்தையே வேண்டும் என்று நினைக்கிறோம்'' என்றாள், கர்ப்பிணிப் பெண். உதவும் குணத்துக்கு கிடைத்த மரியாதை எங்களை ஒருகணம் நெகிழ வைத்து விட்டது.

-மு.ரேணுகா, புதுப்பீர்கடவு.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:51 am

புத்தகப் பையில் பாம்பு... பதறிய பள்ளிக்கூடம்!

எனது பேரன் படிக்கும் பள்ளிக்கு சொந்தமான ஹாஸ்டல் (மாணவர் விடுதி) ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் உள்ளது. விடுதியைச் சுற்றி வயல் வரப்புகள் உண்டு. ஒருநாள் விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவன் ஒருவன் வகுப்பாசிரியையிடம், `எனது பேக்கில் என்னமோ நெளிவது மாதிரி இருக்குது டீச்சர்' என்று கூறி இருக்கிறான்.

அவனது பையை வாங்கி ஜிப்பை லேசாக திறந்து பார்த்த ஆசிரியை, புத்தகப்பையில் பாம்பு கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து விட்டார். உடனே உஷாரான அவர், பையின் ஜிப்பை மூடிவிட்டு, தலைமை ஆசிரியருக்கு தகவல் கொடுத்தார்.

பிறகு அந்த ஆசிரியையும் மற்றும் சிலரும் மைதானம் வந்து மெதுவாக ஜிப்பை திறந்து, பாம்பை பையில் இருந்து வெளியே வரச் செய்தனர். தயாராக இருந்த மற்றவர்கள் தடி யால் பாம்பை அடித்துக் கொன்றனர்.

பள்ளிவிடுதி வயல் ஓரமாக இருப்பதால் எப்ப டியோ பாம்பு புத்தகப் பையில் நுழைந்துள்ளது. மாணவனும் விடுதியில் இருந்து பள்ளி வரை, பாம்புடன் பேக்கை சுமந்து வந்துள்ளான். நல்ல வேளையாக பாம்பு மாணவனை தீண்டவில்லை.

குறைந்த வயதுள்ள மாணவர்கள் தங்கும் விடுதியில் காப்பாளர் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். பள்ளி நிர்வாகமும் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியது அவசியம்.

-ம.சாந்தாமணி, அம்மாப்பேட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 15, 2012 8:53 am

பிள்ளையை ஏலம் விட்டு... பின்னாலே அவதிப்பட்டு...!

எங்கள் ஊர் கோவிலுக்கு சமீபத்தில் ஒரு தம்பதியினர் குழந்தையுடன் வந்தனர். மெலிந்த தன் குழந்தையின் நலனுக்காக ஜோதிடர் கூறியபடி `குழந்தையை விற்று வாங்கும்' நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக வந்துள்ளனர்.

இந்த நேர்த்திக் கடனின்போது முதலில் வேண்டிக் கொண்டவர், தன் குழந்தையை கோவி லில் வைத்து ஏலமிடுவார். கோவிலுக்கு வரும் பக்தர்களும், இதுபோல் நேர்த்திக்கடன் செய்ய வந்தவர்களும் அந்தக் குழந்தையை ஏலத்தில் கேட்பார்கள். அதிக தொகைக்கு எடுப்பவர் அந்தக் குழந்தையை வாங்கிக் கொள்வார். அதன் பிறகு சம்பிரதாயப்படி அந்த குழந்தையை ஏலம் வாங்கியவர்கள் திரும்பவும் ஏலம் விடுவார்கள். அப்போது முதலில் ஏலம் விட்ட குழந்தையின் பெற்றோரே தங்கள் குழந் தையையே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். ஏலத்தை மற்றவர்கள் ஏற்றிக்கேட்டாலும் அது பெரிய தொகை என்றாலும் பெற்றவர்களே ஏலத்தில் எடுத்தாக வேண்டும். இது மரபு.

இதில்தான் பிரச்சினை. அன்று கோவிலுக்கு வந்த அந்த ஏழைத்தம்பதிகள் தங்கள் குழந்தையை முதலில் ஏலம் விட்டனர். ஏலம் நூறு ரூபாயில் ஆரம்பித்து ஒரு தொகையில் முடிந்தது. பிறகு குழந்தையை திரும்ப ஏலம் எடுக்கும்போது இவர்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல் மற்றவர்கள் ஏலத்தை ஏற்றிக்கேட்டதால், அவர்களின் கையில் இருந்த மொத்த தொகைக்கும் ஏலம் எடுக்கும் சூழல் உருவானது. கடைசியில் கையில் இருந்த தொகையைக் கொடுத்து குழந்தையை திரும்ப பெற்று விட்டனர். ஆனால் ஊருக்குத் திரும்பிச் செல்ல பஸ்சுக்கு காசில்லை.

`இனி ஊருக்கு நடந்துதான் போக வேண்டும்' என்று பேசிக் கொண்டனர். ஆனால் குழந்தையும் இருப்பதால் நீண்ட தூரம் நடந்துபோக முடியாது என்பதும் அவர்களுக்கு விளங்கியது. சிறிது நேரம் யோசனையில் மூழ்கிய அவர்கள் பிறகு உறவினர் ஒருவரை பணத்துடன் வரவழைத்து ஊர் போய்ச் சேர்ந்தனர்.

அவர்களின் நிலைமை என்னை நெகிழ வைத்து விட்டது. கோவிலில் இம்மாதிரி ஏல முறையில் விற்று வாங்க, பெற்றவர்களின் பட்ஜெட் இடிக்காத ஒரு குறைந்த தொகையை நிர்ணயிக்கலாமே.

-எஸ்.ஆறுமுகம், கழுகுமலை.






நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:02 am

பிள்ளையை ஏலம் விட்டுவிட்டுப் பின்னர் இவர்கள் தாளம் போடுவது எதற்கு?...
என்ன ஜோசியமோ?...இப்படியெல்லாமா கொடுமை நடக்கும்?...போங்கப்பா நீங்களும் உங்க ஜோதிடமும்...



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 224747944

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Wed Feb 15, 2012 10:05 am

பையனின் புத்தகப் பைக்குள் பாம்பா?...யம்மோவ்...



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 224747944

நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Aநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Emptyநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Rநெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 21, 2012 12:58 pm

உட்கார இடமில்லை... ஆனால் படுத்துக் கொண்டு பயணம்!

நான் தனியார் அலுவலகம் ஒன்றில் பணிபுரிகிறேன். மாலையில் பணி முடிந்ததும் வழக்கமாக மின்சார ரெயிலில் வீடு திரும்புவேன்.

ஒருநாள் ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தேன். பலரும் பணி முடிந்து திரும்பும் நேரம் என்பதால் நிறைய பேர் ரெயிலுக்காக காத்திருந்தனர். அதேபோல ரெயிலிலும் நெருக்கியடிக்கும் அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்தது.

ஆனால் ஒரே ஒரு பெட்டியில் மட்டும் அரை பெட்டி அளவுக்கு காலியாக இருந்தது. நிலையத்தில் நிறுத்துவதற்காக ரெயில் மெதுவாக வந்து கொண்டிருந்தபோதே இந்த காலியிடத்தை காத்திருப்பவர்கள் கவனித்து விட்டனர். உடனே அந்த இடத்தைப் பிடித்துவிடும் நோக்கில் பக்கத்து பெட்டிக்காக காத்துக் கொண்டிருந்தவர்களும் அந்தப் பெட்டியை நோக்கி ஓடி வந்தனர்.

ஒட்டுமொத்தமாக அந்தப் பெட்டியில் முண்டியடித்து ஏறினார்கள். உள்ளே சென்று பார்த்தால் அங்கே ஒரு இளைஞர் குடிபோதையில் படுத்துக் கிடந்தார். அவரது முகத்திலும், பக்கத்து சீட்டிலும் அவர் வாந்தியெடுத்த அடையாளங்கள் இருந்தது. யாரும் அமர முடியாத அளவுக்கு வாந்தி சிதறிக் கிடந்தது. குடலைப்பிடுங்கும் அளவுக்கு துர்நாற்றமும் அடித்தது. அதனால்தான் அந்தப் பெட்டி காலியாக இருந்திருக்கிறது.

ரெயில் கிளம்பிய இடத்தில் இருந்து கடைசி நிறுத்தமான தாம்பரம் வரை அந்த இளைஞன் எழுந்திருக்கவில்லை. ஆனால் ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் அந்த காலி இருக்கைகளுக் காக பயணிகள் முண்டியடித்து ஏறுவதும், பிறகு மூக்கைப் பொத்திக் கொண்டு இறங்கி பக்கத்துப் பெட்டிக்கு ஓடுவதுமாக இருந்தனர்.

நிதானமாக இருந்தவர்கள்தான் புலம்பிக் கொண்டிருந்தனர், ஆனால் குடிகார இளைஞனோ நிம்மதியாக உறங்கிக் கொண்டு பயணித்தான்.

எம்.ராமர், குரோம்பேட்டை.



நெகிழ வைத்த நிஜங்கள் - Page 16 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 16 of 32 Previous  1 ... 9 ... 15, 16, 17 ... 24 ... 32  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக