புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Today at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Today at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
68 Posts - 41%
heezulia
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
3 Posts - 2%
ayyamperumal
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
3 Posts - 2%
Guna.D
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
2 Posts - 1%
manikavi
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
1 Post - 1%
prajai
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
319 Posts - 50%
heezulia
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
21 Posts - 3%
prajai
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
3 Posts - 0%
Barushree
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
2 Posts - 0%
Guna.D
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_m10இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 08, 2011 8:25 am

இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம், ரூ.2 லட்சம் கோடி இழப்பு பற்றி விசாரணை நடத்த முடிவு காங்கிரஸ் அறிவிப்பு


இஸ்ரோ நிறுவனம் அலைவரிசை ஒதுக்கீடு வழங்கியதில் ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்து உள்ளது. இதுபற்றி விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

புதுடெல்லி, பிப்.8- `2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், இப்போது புதிய ஊழல் விவகாரம் ஒன்று வெளியாகி இருக்கிறது.

ரூ.2 லட்சம் கோடி இழப்பு

தகவல் தொடர்புக்காக விண்வெளியில் `இஸ்ரோ' (இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம்) அனுப்பும் செயற்கை கோள்கள் மூலமாக பெறப்படும் `எஸ் பாண்டு ஸ்பெக்ட்ரம்' அலைவரிசை ஏல முறையில் அல்லாமல், தேவாஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அரசுக்கு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கை துறை தெரிவித்துள்ளது.

பிரதமரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும் விண்வெளி கமிஷனின் கட்டுப்பாட்டில் உள்ள `இஸ்ரோ'விடம் இருந்து, இந்த ஒதுக்கீடு குறித்து பிரதமர் அலுவலகத்துக்கோ, விண்வெளி கமிஷனுக்கோ, மத்திய மந்திரி சபைக்கோ தகவல் அனுப்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டது.

மத்திய அரசுக்கு புதிய தலைவலி

ஏற்கனவே ஸ்பெக்டரம் விவகாரத்தில் சிக்கி தவிக்கும் மத்திய அரசுக்கு இந்த பிரச்சினை புதிய தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகள் ரூ.2 லட்சம் கோடி இழப்பு பிரச்சினையை கையில் எடுத்து அரசுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி இருக்கின்றன.

இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு செய்ததில் மோசடி நடந்து இருப்பதால் இது தொடர்பாக தனியார் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், மேலும் இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் நேற்று டெல்லியில் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் விண்வெளி துறை பிரதமரின் நேரடி மேற்பார்வையில் வருவதால், இதுகுறித்து அவர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

இடதுசாரிகள் கோரிக்கை

இந்த புதிய முறைகேடு குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு இடதுசாரி கட்சிகளும் வலியுறுத்தி உள்ளன.

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, "தனியார் நிறுவனம் பலனடைவதற்காக ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை `இஸ்ரோ' ஒதுக்கி இருப்பது மிகவும் புதிய விவகாரமாக உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங்கின் நேரடி மேற்பார்வையில் உள்ள விண்வெளி துறையின் கீழ் `இஸ்ரோ' செயல்படுகிறது. எனவே, அவர் விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றார்.

இந்திய கம்ïனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், "புதிதாக கிளம்பியுள்ள இந்த முறைகேடு மிகவும் தீவிரமானது. ஏனெனில், விண்வெளி மற்றும் நாட்டின் பாதுகாப்பு விஷயங்களை `இஸ்ரோ' கையாளுகிறது. இந்த விவகாரம் குறித்து 4 இடதுசாரி கட்சிகளுடனும் ஆலோசித்து முடிவு செய்யப்படும்'' என்றார்.

விசாரணை நடத்த முடிவு

இதைத்தொடர்ந்து, இஸ்ரோ அலைவரிசை ஒதுக்கீடு விவகாரம் குறித்து விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக ஆளும் காங்கிரஸ் கட்சி அறிவித்து உள்ளது.

இந்த ஊழல் புகார் பற்றி கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஷகில் அகமது; "அரசு கஜானாவுக்கு இழப்பை ஏற்படுத்தும் இதுபோன்ற விவகாரங்கள் குறித்து பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்துவது வழக்கம்'' என்றார்.

"ஏதாவது விவகாரத்தில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதுபற்றி பொதுக்கணக்கு குழு விசாரணை நடத்தும் நடைமுறை உள்ளது. எனவே இந்த பிரச்சினையும் தானாகவே பொதுக்கணக்கு குழுவின் விசாரணைக்கு செல்லும்'' என்று அவர் தெரிவித்தார்.

தினதந்தி



இஸ்ரோ அலைவரிசை: விசாரணை நடத்த முடிவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue Feb 08, 2011 9:21 am

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு
விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், அதையும் தூக்கிச்சாப்பிட்டுவிடக்கூடிய மற்றொரு
அலைக்கற்றை முறைகேட்டை துருவி ஆராயத் தொடங்கிவிட்டது தலைமை கணக்குத் தணிக்கைத் துறை.

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தனது வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்
லிமிடெட், தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ம் ஆண்டு
செய்துகொண்டுள்ள அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தம்தான் இப்போது புதிதாக
ஆராயப்படும் முறைகேடு. இதன் மூலம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு 2ஜி அலைக்கற்றை
ஒதுக்கீட்டைவிட அதிகம். அதாவது, ரூ. 2 லட்சம் கோடி (ரூ.2,00,000,00,00,000).
இந்த ஒப்பந்தத்தின்படி, இஸ்ரோ தனது தொழில் பங்குதாரர் நிறுவனமாகிய தேவாஸ்
மல்டிமீடியா பயன்பெறுவதற்கென்றே இரண்டு செயற்கைக்கோள்களை - ஜிசாட் 6, ஜிசாட் 6ஏ -
விண்ணில் ஏவும். இதற்காக இஸ்ரோ ரூ.2,000 கோடி செலவிடும். இந்தக் கோள்களில் தேவாஸ்
தனக்காக 70 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீட்டை எடுத்துக் கொள்ளும். 20
ஆண்டுகளுக்கு எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் பயன்படுத்தும்.
இந்த ஒப்பந்தத்தால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக
ரூ.174 கோடி தொகையை தேவாஸ் மல்டிமீடியா இஸ்ரோவுக்கு வழங்கும். செயற்கைக்கோள்
விண்ணில் ஏவப்பட்டு செயல்பாட்டுக்கு வந்த பின்னர் அலைக்கற்றை வாடகையாக ரூ.1,150
கோடியை இந்நிறுவனம் இஸ்ரோவுக்கு வழங்கும்.
2,500 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றைத் திறன்கொண்ட இந்த செயற்கைக்கோள்களில் 70
மெகாஹெர்ட்ஸ் அளவுக்குப் பயன்படுத்தும். (ஒரு வினாடிக்கு ஒரு தகவல் அல்லது டேட்டா
அனுப்புவதை ஒரு ஹெர்ட்ஸ் என்று சொன்னால், ஒரு மெகாஹெர்ட்ஸ் மூலம் ஒரு வினாடிக்கு 70
லட்சம் டேட்டாக்கள் அனுப்பும் திறன் ஆகும்). செயற்கைக்கோள் செயல்படத் தொடங்கியவுடன்
தனது தொழிலை தேவாஸ் மல்டிமீடியா தொடங்கிவிடும். இதற்காக அந்நிறுவனம் ரூ.2,300 கோடி
முதலீடு செய்யத் தயாராக உள்ளது. சரி, இதனால் இஸ்ரோவுக்கு என்ன லாபம்? லாபத்தில்
எத்தனை விழுக்காடு இஸ்ரோவுக்கு கிடைக்கும்? இது இந்த ஒப்பந்தத்தில் தெளிவாக இல்லை.
முன்னாள் அறிவியல் செயலரின் நிறுவனம்: 2004-ல் பெங்களூரில் தொடங்கப்பட்ட தேவாஸ்
மல்டிமீடியா நிறுவனத்தின் தலைவராக இருக்கும் எம்.ஜி. சந்திரசேகர், இஸ்ரோவின்
முன்னாள் அறிவியல் செயலர். இந்த நிறுவனத்தின் 17 விழுக்காடு பங்கினை, டாயிஷ்
டெலிகாம் என்ற அயல்நாட்டு நிறுவனம் 75 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கியுள்ளது.
கொலம்பியா கேபிடல், டெலிகாம் வென்சர்ஸ் ஆகிய நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. இதில்
இந்திய ஜாம்பவான்கள் யார் இருக்கிறார்கள் என்பது மேலும் துருவி விசாரிக்கும்போது
தெரியவரலாம்.
தேவாஸ் மல்டிமீடியாவுக்கு இப்போது இணையதள சேவை அளிப்பு உரிமம் மட்டுமே இருக்கிறது.
அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியுடன் 74 விழுக்காடு அன்னிய நேரடி
முதலீடு கொண்டுள்ள இந்நிறுவனம், செயற்கைக்கோள் மூலமாக புவிமிசை தனிநபர் கைப்பேசி
தகவல் தொடர்புக்கு இனிமேல்தான் உரிமம் பெறவுள்ளது. இந்த அலைக்கற்றை ஒதுக்கீட்டை வேறு
எந்த செயல்பாட்டுக்கெல்லாம் தேவாஸ் மல்டிமீடியா பயன்படுத்தும் என்பது குறித்து
ஒப்பந்தம் தெளிவாக இல்லை.
இதே அளவு ஒதுக்கீட்டில் முன்னர் தூர்தர்ஷன் தனது ஒளிபரப்பை இந்தியா முழுவதும்
சென்றடைய பயன்படுத்தியது. இந்த அலைக்கற்றையில் மொபைல் போன் மற்றும் இன்டர்நெட்
இணைப்புக்கான பிராட்பேண்டு சேவை அளிக்க முடியும். இதனால் எஸ்-பாண்ட் அலைக்கற்றை,
4ஜி (நான்காம் தலைமுறைக்கான தொழில்நுட்பம்) எனச் சொல்லப்படுகிறது.
அண்மையில், பாரத் சஞ்சார் நிகாம் லிட், மகாநகர் டெலிபோன் லிட் நிறுவனத்துக்கு 20
மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது அந்த அரசு நிறுவனங்கள்
தலா ரூ.12,847 கோடி பணம் செலுத்தின. ஆனால் தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டி மீடியா
வெறும் ரூ.1000 கோடியில் இந்த உரிமத்தைப் பெறுகிறது என்பது அதிர்ச்சித் தகவலாகும்.
இந்த 4ஜி தொழில்நுட்பத்துக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டைப் பெற உலக அளவில் பல
நிறுவனங்கள் போட்டி போடுகின்றன.
""இதெல்லாம் தொழில்போட்டியால் எங்களுக்கு எதிராகக் கிளப்பப்படும் விவகாரம்.
திட்டமிட்டபடி செயல்படுவோம்'' என்று சொல்கிறார் தேவாஸ் மல்டிமீடியா தலைவர்
சந்திரசேகர்.
நடுவண் அரசின் விண்வெளி பிரிவின் கட்டுப்பாட்டில் இஸ்ரோ உள்ளது. விண்வெளி பிரிவு
பிரதமர் மன்மோகன் சிங்கின் நேரடிப் பொறுப்பில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் எழுப்பியுள்ள கேள்விகள்

ஏலம் நடத்தாமலேயே எஸ்-பாண்டு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளது ஏன்?
நிறுவனத்துக்குரிய (இஸ்ரோ) பாதுகாப்பு கட்டுப்பாடு முறைகள் கடைப்பிடிக்கப்படவில்லையே
ஏன்?
பிரதமர் அலுவலகம், அமைச்சரவை, விண்வெளி குழுமம் ஆகிய யாருக்குமே இந்த ஒப்பந்தம்
பற்றிய விரிவான விவரங்கள் முறைப்படி தெரிவிக்கப்படவில்லை. குறைத்து மதிப்பீடு
செய்வதால் இஸ்ரோவுக்கு ஏற்படும் செலவுகள் உள்பட எதையும் தெரிவிக்கவில்லையே ஏன்?
ஒப்பந்தம் செய்துகொண்டவர் நலனுக்காக இரண்டு செயற்கைக்கோள்களை ஏவுவதற்கு மக்கள் பணம்
செலவிடப்படுகிறதே ஏன்?
தேவாஸ் மல்டிமீடியாவின் நிபந்தனைகள், இதற்கு முன்னர் இஸ்ரோ செய்துகொண்ட வர்த்தக
ஒப்பந்தங்களிலிருந்து விலகிச் சென்றுள்ளனவே, ஏன்?


விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை


இஸ்ரோ வழியாக நடந்திருப்பதாகக் கூறப்படும் புதிய ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு
மோசடி தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என பாஜக உள்ளிட்ட
எதிர்க்கட்சிகள் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்தன.


விண்வெளித் துறை பதில் அளிக்கும் - இஸ்ரோ

பெங்களூர்: அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தம் மூலம் ரூ.2 லட்சம் கோடி இழப்பீடு
ஏற்பட்டுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விண்வெளித் துறை உரிய பதிலை
அளிக்கும் என்று இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் வணிகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்,
தனியார் நிறுவனமான தேவாஸ் மல்டிமீடியா என்ற நிறுவனத்துடன் 2005-ல் செய்து கொண்ட
அலைக்கற்றை தொடர்பான ஒப்பந்தம் மூலம் நாட்டுக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பீடு
ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,
இதுகுறித்து இஸ்ரோ விளக்கம் அளித்துள்ளது.
அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஒப்பந்தம் தொடர்பாக தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி
எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விண்வெளித் துறை பதில் அளிக்கும் என்று கூறியுள்ளது.
ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், தேவாஸ் மல்டிமீடியாவுடன் செய்து கொண்ட
ஒப்பந்தத்தை விண்வெளித் துறை ஏற்கெனவே மறு ஆய்வு செய்து வருகிறது. இந்த விவகாரத்தில்
மக்களின் நலனைக் காக்கத் தேவைப்படும் நடவடிக்கையை மத்திய அரசு எடுக்கும் என்றும்
இஸ்ரோ தெரிவித்துள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக