புதிய பதிவுகள்
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
96 Posts - 49%
heezulia
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
7 Posts - 4%
prajai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
Barushree
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
cordiac
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
223 Posts - 52%
heezulia
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
16 Posts - 4%
prajai
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Barushree
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_m10நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 2:12 am

First topic message reminder :

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் - Page 3 Netaji10

பிறப்பு:  ஜனவரி 23, 1897

மறைவு: ஆகஸ்ட் 18 1945


#நேதாஜி #சுபாஸ் #சந்திரபோஸ் #சுதந்திரம் #இந்திய_சுதந்திர_போராட்டம் #நேதாஜி_சுபாஸ்_சந்திரபோஸ் #சுபாஷ்_சந்திர_போஸ் #Subhash_Chandra_bose #Netaji

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:22 am

இதைத் தவிர, காந்தி சில அடிப்படை விழுமியங்களைக் கொண்டிருந்தார். ஒரு கோரிக்கையின் வெற்றி, அதன் அடிப்படை நியாயத்தைப் பொறுத்து அமைய வேண்டுமே தவிர, எதிராளியின் சங்கடத்தைப் பயன்படுத்திக் கொண்டு அமையக்கூடாது. இதுவே சத்தியாகிரகத்தின் அடிப்படைத் தத்துவம். தென் ஆப்பிரிக்காவில் முன்னர் ஒரு முறை இது போலவே செயல்பட்டிருக்கிறார் காந்தி. இந்தியர்களுக்கு எதிரான அநீதியான சட்டங்களை எதிர்த்து சத்தியாகிரகப் போர் உச்ச கட்டத்தில் இருந்த தருணம். அந்த சமயத்தில் ரயில்வேயின் ஆங்கிலேய ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடங்கினார்கள். இதுவே நல்ல தருணம், போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று நண்பர்கள் சொன்னதை ஏற்காமல் போராட்டத்தை விலக்கிக் கொண்டார் காந்தி.

இதை இங்கு சொல்ல வந்த காரணம் என்னவென்றால், நேதாஜியும் காந்தியும் செயல்முறைகள் பற்றிய அடிப்படையான சில சிந்தனைகளில் வேறுபட்டு நின்றார்கள். எனினும், தேச பக்தியில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்களல்லர். இந்த வேறுபாடுகள் காரணமாக ஒருவருக்கொருவர் அன்பிலும் மரியாதையிலும் எள்ளளவும் குறையவில்லை. இதைப் புரிந்துகொண்டால் தான், பாரபட்சமற்ற நோக்குடன் வரலாற்றுக் கண்ணோட்டத்தில் சுபாஷின் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடியும்.

இது ஒரு புறம் இருக்க, அந்தக் காலகட்ட அரசியல் நிகழ்ச்சிகளைப் பற்றி சுபாஷ் என்ன நினைத்தார்? இது பற்றி அவர் வார்த்தைகளிலேயே கேட்போம்:

“புரட்சிக்காரர்களுடன் நான் பழகியிருக்கிறேன். ஆனால் அவர்களுடன் ஒன்றியதில்லை. புரட்சியின் பிடியிலும் நான் அப்போது சிக்கவில்லை. ஆனால் மகாத்மா காந்தி மாதிரி அஹிம்சையில் நம்பிக்கை வைத்து புரட்சியில் ஈடுபட விரும்பாதவனல்ல நான். அன்றைய நிலையில் தனி ஒரு உலகில் வாழ்ந்து கொண்டிருந்தேன். தேசிய மறு சீரமைப்பின் மூலம்தான் இந்திய மக்களுக்கு சாசுவதமான சாதகங்கள் புரிய முடியும் என்ற நம்பிக்கையில் அதற்குத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததால் தீவிரவாதப் புரட்சி இயக்கம் என்னை இழுக்க முடியவில்லை. முதலில் அரசியலை நன்கு தெரிந்துகொண்டு பிறகு சுதந்திரமாக ஒரு வழியை வகுத்துக் கொள்வது என்று நான் தனிப்பட முடிவுகட்டிக் கொண்டேன்."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:24 am

சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்து துஞ்சிடோம்!

நச்சுக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சுபாஷ் மீண்டெழுந்து படிப்பைத் தொடர சில மாதங்கள் பிடித்தன. இரண்டு வருஷங்களாகவே குரு வேட்டையிலும், சமூக சேவையிலும், நோயிலும் இழுபட்டதால் அவரது படிப்பு வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இடைக்காலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தும் இறுதித் தேர்வில் பட்டியலில் பின்தங்கி விட்டார்.

தத்துவப் படிப்பில் தேற வேண்டும் என்ற நெடுங்கால ஆசை காரணமாகப் பட்டப் படிப்பில் தத்துவத்தை சிறப்புப் பாடமாக எடுத்துக்கொண்டார். ஆனால் அவருக்கு போதிக்கப்பட்டது மேலை நாட்டுத் தத்துவம். அது அவருக்கு ஏமாற்றமே தந்தது. மேற்கத்திய தத்துவம் சந்தேகத்திலேயே ஆரம்பிக்கிறது. திட்டவட்டமான முடிவை ஏற்படுத்திக் கொடுக்கும் சக்தி அதற்கு இல்லை. தவறு ஏற்படாமல் இருக்க அது வழி செய்யவில்லை. உண்மைக்கு அதில் முக்கியத்துவம் இல்லை. உண்மையை உயிராகக் கொண்ட வேதாந்த வழியில் பயிற்சி பெற்றவராகையால் சுபாஷ¤க்கு மேற்கத்திய தத்துவம் அவ்வளவு ஆர்வத்தைத் தரவில்லை.

இந்த நாட்களில் சுபாஷ¤க்கு பிரிட்டிஷார் நடந்துகொள்ளும் முறையப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது. கல்லூரிக்குப் போகும் போதும் வரும் போதும் பிரிட்டிஷார் வசிக்கும் பாதை வழியாகத்தான் போய்வர வேண்டும். அவர்களின் ஆணவப் போக்கு அவருக்கு ‘நெஞ்சில் தைத்த முள்’ளாக இருந்தது. டிராம் வண்டியில் பயணம் செய்கையில் அவர்கள் முன் வரிசையில் இந்தியர்கள் யாராவது உட்கார்ந்திருந்தால் அவர்கள் மேல் உதைத்துக் கொண்டுதான் உட்காருவார்கள். அவர்களை இந்தியர்கள் யாராவது பார்த்தால் எழுந்து நின்று மரியாதை செய்ய வேண்டும். இல்லையென்றால் அடித்து உதைத்து அவமானப் படுத்துவார்கள். உயர் வகுப்பு டிக்கெட் வாங்கியிருந்தாலும், பிரிட்டிஷார் அந்தப் பெட்டியில் ஏறினால், அதில் இந்தியர்கள் பயணம் செய்யக்கூடாது. உதைத்து வெளியே தள்ளி விடுவார்கள். (இத்தகைய ஒரு நிகழ்ச்சி தென் ஆப்பிரிக்காவில் நடந்ததுதானே மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் மனத்தில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்தி அவரை மகாத்மா ஆக்கியது!)

“சொந்த நாட்டில் பிறர்க்கடிமை செய்தே
துஞ்சிடோம் இனி அஞ்சிடோம்!
எந்த நாட்டிலும் இந்த அநீதிகள்
ஏற்குமோ? தெய்வம் பார்க்குமோ?

நாங்கள் முப்பது கோடி ஜனங்களும்
நாய்களோ? பன்றிச் சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்களோ? இது
நீதமோ? பிடி வாதமோ?'


என்று பாரதி பாடியது போன்ற கருத்துகள் இளம் சுபாஷின் மனத்தில் அலைமோதியிருக்க வேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:24 am

சுபாஷின் வாழ்க்கையில் பெரும் பாதிப்பை எற்படுத்திய நிகழ்ச்சி அப்போதுதான் நடந்தது. 1916 ஜனவரி. ஒரு நாள் காலை. ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் சில மாணவர்களை அடித்து விட்டார். அது குறித்து விசாரணை நடந்தது. விசாரணைக்குப் போகும் வழியில் அந்தப் பேராசிரியரின் அறை இருந்தது. மாணவர்கள் சத்தம் போட்டுக்கொண்டு சென்றது அவருக்கு ஆத்திரமூட்டவே, அவர் வெளியே வந்து சில மாணவர்களை வலுக்கட்டயமாகப் பிடித்து வெளியே தள்ளி விட்டார். வகுப்பு பிரதிநிதி என்ற முறையில் சுபாஷ் முதல்வரிடம் சென்று அந்தப் பேராசிரியர் மாணவர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். முதல்வர் கோரிக்கையை ஏற்காததுடன், அந்த ஆங்கிலப் பேராசிரியருக்கு சாதகமாகவும் பேசினார். ஆத்திரம் கொண்ட மாணவர்கள் மறு நாள் வேலை நிறுத்தத்தில் இறங்கி விட்டார்கள். மாணவர்கள் மீது பல நடவடிக்கைகள் எடுக்கப் பட்டன. அபராதமும் விதிக்கப் பட்டது.

ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே ஆங்கிலப் பேராசிரியர் மீண்டும் ஒரு மாணவனை அடித்து விட்டார். முறையீடு, வேலை நிறுத்தம் போன்ற சட்டபூர்வமான வழிகள் பலன் அளிக்கவில்லை என்று உணர்ந்திருந்த மாணவர்கள் அந்தப் பேராசிரியரை அவமானப்படுத்தி விட்டார்கள். விஷயத்தை மிகைப்படுத்தி அந்தப் பேராசிரியர் மாணவர்கள் தன்னை மாடியிலிருந்து உருட்டி விட்டதாகப் புகார் செய்து விட்டார்.
விஷயம் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தி ஆயிற்று. நகரெங்கும் ஒரே பரபரப்பு. இது பற்றியே பேச்சு. அரசாங்கம் கல்லூரியை மூடும்படி உத்தரவிட்டது. சுபாஷ¤ம் மற்றும் சில மாணவர்களும் கல்லூரியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார்கள். பின் சுபாஷ் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு விட்டார். உண்மை என்னவென்றால், இந்த சம்பவத்தில் சுபாஷ் சிறிதும் சம்பந்தப்பட்டிருக்கவே இல்லை. பிரதிநிதி என்ற முறையில் மாணவர் தரப்பு வாதங்களை எடுத்து வைத்ததே அவர் செய்தது. இந்த அளவு தலையீடு கூட வேண்டாம் என்று அவர்பால் அன்பு செலுத்தியவர்கள் சொல்லியும் அவர் கேட்க மறுத்து விட்டார்.

அரசு கமிட்டி கல்லூரி முதல்வரின் உத்தரவை உறுதி செய்தது. இந்தக் கமிட்டி முன் மாணவர்கள் மிது அடுக்கடுக்காக ஏவி விடப்பட்டிருந்த அடக்குமுறைகளைப் பற்றி எல்லாம் சுபாஷ் எடுத்துரைத்தது செவிடன் காதில் ஊதிய சங்காயிற்று. மதிப்புக்குரியவர் என்று கருதப்பட்ட இந்தியர் ஆசுடோஷ் முகர்ஜி தலைவராக இருந்தும், சுபாஷ¤க்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை. வேறு எந்தக் கல்லூரியிலாவது சேர்ந்து படிக்க அனுமதி கோரி வேண்டியதும் சுபாஷ¤க்கு நிராகரிக்கப்பட்டது. மற்ற எல்லா மாணவர்களுக்கும்

மன்னிப்பளிக்கப்பட்டிருந்தும், சுபாஷின் படிப்புக்கு மூடி போட்டு முத்திரை இட்டது இந்த சம்பவம். சுபாஷ் தமக்குத் தாமே ஒரு படிப்பினையை சொல்லிக் கொண்டார். பொது நலன் சம்பந்தமாகத் தமக்குத் தோன்றுவதை உடனே செயலாற்ற வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டார். தலைவனாகவும் தொண்டனாகவும் இயங்கும் அளவுக்குத் தம்மைத் தாமே பக்குவப்படுத்திக் கொண்டார். எத்தகைய எதிர் காலத்தையும் சிரமமின்றி சமாளிக்கலாம் என்ற துணிச்சல் அவருக்கு ஏற்பட்டது. “இதெல்லம் கல்லூரி முதல்வர் எனக்குச் செய்த பேருதவிதான்” என்று சொல்லிக்கொள்கிறார் அவர்.

இந்த அவரது தியாகம் மாணவர்களிடையே அவரது மதிப்பை உயர்த்தியது. இதில் அதிசயமான ஒரு விஷயம் என்றால் அவரது பெற்றோர்கள் அவரிடம் இதற்காகக் கோபப்படவில்லை. முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் உள்ளதை உள்ள படியே சொன்னதற்காக சுபாஷை மதித்தார்கள். இந்த சம்பவத்தின் மூலம் பெற்றோருக்கும் அவருக்குமிருந்த உறவு நிலை முன்னை விடப் பன்மடங்கு பெருகவே செய்தது.

அவரது சகோதரர்களும் செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டிய காரியத்தை செய்ததாகவே கருதி, அவரது நிலை குறித்து அனுதாபம் காட்டினார்களே தவிர அவமானப் படுத்தவில்லை. மாணவர்களில் சிலர் என்னவோ, அதிகார சக்தியிடம் சுபாஷ் நேரடியாக மோதியிருக்கக் கூடாது என்று அபிப்பிராயப் பட்டார்கள். அவர் மீது உள்ள அன்பு காரணமாகவே அவர்கள் அவ்வாறு கருதினார்கள். சுபாஷ் மட்டும் தான் செய்தது பற்றி சிறிதளவும் வருத்தப்படவே இல்லை. இதுதான் நியாயம் என்பது நிச்சயமாகத் தெரியும்போது, விளைவைப் பற்றிக் கவலைப் படாமல், போராட வேண்டியதுதான் கடமை என்பதில் அவர் உறுதியாகவே இருந்தார். இந்த உறுதியான செயல்பாட்டைத்தான் அவர் வாழ்க்கை முழுவதும் பார்க்கப் போகிறோம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:25 am

ஐ.சி.எஸ். படிக்கிறாயா?

கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டு கட்டாக் வந்த சுபாஷை வெறுமை சூழ்ந்திருக்க வேண்டும். கல்லூரி விலக்கத்துக்குக் கால வரம்பு உண்டா? அதிகாரிகள் மனம் மாறி மீண்டும் படிப்பைத் தொடங்க அனுமதிப்பார்களா? எதுவும் நிச்சயமாகத் தெரியவில்லை. மேல் நாடு சென்று படிக்கப் பெற்றோரிடம் அனுமதி கேட்ட போது, கல்கத்தா படிப்பை முடித்தால்தான் மேல்நாடு செல்ல அனுமதிக்க முடியும் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்கள்.

இந்தக் காலகட்டத்தில் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டார் சுபாஷ். கட்டாக்கில் அந்த சமயம் காலரா நோய் பரவியிருந்தது. சுபாஷ¤ம் அவரது நண்பர்களும், நோயளிகளுக்குத் தீவிரமாகப் பணிவிடை செய்தார்கள். இதில் இன்னொரு அம்சமும் இருந்தது. காலராவால் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்ய யாரும் முன்வரவில்லை. தகனம் செய்ய சம்பந்தப்பட்ட தொழிலாளிகளும் மறுத்து விட்டார்கள். இந்த நிலையில் சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் அத்தனை காரியங்களையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்தார்கள்.

இத்தகைய சேவையின் தொடர்ச்சியாக அவர்கள் ஒரு இளைஞர் சமூக சேவை இயக்கத்தைத் தொடங்கினார்கள். இதில் ஓர் அனுபவம்...

இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்பு கொண்ட ஒரு மாணவர் விடுதி. இதில் மாணவர்களைச் சேர்த்துக்கொள்ள ஜாதி மதம் எதுவும் கேட்பதில்லை. இந்த விடுதியில் சேர்ந்த ஒரு மாணவன் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன் என்று தெரிய வந்தது. விடுதியில் வேலை பார்த்த பணியாளர்கள், அந்த மாணவரை விடுதியில் இருந்து நீக்காவிட்டால் தாங்கள் பணியில் இருந்து விலகிவிடப் போவதாக அச்சுறுத்தினார்கள். என்ன செய்வது? சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் திட்டவட்டமான ஒரு முடிவு எடுத்தார்கள். மனிதர்களுக்குள் ஜாதியினால் வேறுபாடு பார்ப்பவர்கள் இங்கு வேலை பார்க்கத் தேவையில்லை என்று. அச்சுறுத்தியவர்கள் அடி பணிந்தார்கள். யாரும் விலகவில்லை. தடையின்றி அந்த மாணவர் விடுதியில் தொடர்ந்தார்.

இதற்குப் பிறகு இந்தத் தாழ்த்தப்பட்ட நண்பருக்கு நச்சுக் காய்ச்சல் வந்து விட்டது. சுபாஷ¤ம் அவரது நண்பர்களும் அவருக்கு மிகுந்த கவனத்துடன் பணிவிடை செய்தார்கள். இதில் ஆச்சரியப்படத் தக்க விஷயம் என்னவென்றால், இந்த மாணவருக்குப் பணிவிடைகள் செய்ய சுபாஷின் தாயாரே ஆர்வத்துடன் முன்வந்தார். சொந்த மகனைப் பார்த்துக் கொள்வது போல் அவனைப் பார்த்துக் கொண்டார். தமது தாயாரின் ஆர்வத்தாலும், தீண்டாமை ஒழிப்பில் தம் முதல் முயற்சி வெற்றி பெற்றதாலும் சுபாஷ¤க்கு ஒரே பூரிப்பு.

காந்தியின் வாழ்க்கையிலும் தீண்டாமைக்கு எதிரான இதே போல ஒரு நிகழ்ச்சி நடந்தது ஒப்பிட்டுப் பார்க்கத் தக்கது. அகமதாபாதில் அவரது சத்தியாக்ரக ஆசிரமத்தில், தாதாபாய், தானிபென் என்ற தம்பதிகளையும் அவர்களது லட்சுமி என்ற குழந்தையையும் காந்தி சேர்த்துக் கொண்டார். இவர்கள் அரிசன வகுப்பைச் சேர்ந்தவர்கள். இதற்கு எதிராக சில ஆசிரமவாசிகள், மற்றும் அக்கம்பக்கத்திலுள்ளோரிடம் இருந்து எதிர்ப்புக் கிளம்பியது. அக்கம்பக்கத்தில் உள்ளோர் தொல்லை தந்தார்கள். ஆதரவாளர்கள் பண உதவியை நிறுத்தி விட்டார்கள். சமூகப் புறக்கணிப்பு செய்யப் போவதாகவும் செய்திகள் வந்தன. இந்த நிலையில் ஆசிரமத்தைத் தொடர்ந்து நடத்துவதேகூட சிரமமாகி விட்டது. காந்தி அடி பணிவதில்லை என்று தீர்மானித்தார். தேவைப்பட்டால், அரிசனக் குடியிருப்புக்கே ஆசிரமத்தை மாற்றிக் கொண்டு, உடல் உழைப்பின் மூலம் பொருள் தேடிக்கொள்வது என்று முடிவு செய்தார். இந்த சமயத்தில், இறையருள் முன் நிற்க, முன்பின் தெரியாத ஒருவர் ஆசிரமத்துக்கே வந்து 13000 ரூபாய் கொடுத்து விட்டுப் போனார். பணப் பிரச்சினை தீர்ந்தது. மற்ற பிரச்சினைகளும் தாமாக விலகி விட்டன. (பணம் கொடுத்த மனிதர் தொழிலதிபர் அம்பாலால் சாராபாய் என்று பிற்பாடு தெரிய வந்தது. பின் ஒரு சமயத்தில், பிரச்சினை அடிப்படையில் இந்த சாராபாய்க்கு எதிராகவே காந்தி மில் தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னி‎ன்று நடத்தினார் என்பது துணைத் தகவல்.)

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:25 am

இந்த விஷயங்களால் எல்லாம் நாம் அனைவரும் கற்றுக் கொள்ளக் கூடிய பாடம் ஒன்று இருக்கிறது. நாம் ஒரு கொள்கையில் உறுதியாக இருந்தால் அதற்காகக் கூரை மேல் ஏறிக்கொண்டு கூச்சல் போட வேண்டும் என்பது இல்லை. மற்றவர்களிடம் நமது கொள்கையை நிலை நாட்ட ஆக்ரோஷமாகச் சண்டை போட வேண்டும் என்பது இல்லை. உறுதியாக நம் நிலையில் நின்று செய்ய வேண்டிய காரியத்தைச் செய்து கொண்டிருந்தாலே போதும். எதிர்த்தவர்களும் தடுத்தவர்களும், விலகிப் போவது மட்டுமல்ல, கூடவே இணைந்து பணி செய்வதற்கான வாய்ப்பும் உண்டு. அது மட்டுமின்றி, நல்ல காரியத்துக்காக முனைந்து செயல் படும்போது, தெய்வம் நமக்கு முன்னால் போய் நின்று நமது காரிய சித்திக்கு உதவும். வள்ளுவரின் வார்த்தையில், 'தெய்வம் மடி செற்றுத் தான் முந்துறும்.'

இந்த சந்தர்ப்பத்தில் பல்கலைக்கழகத்தினர் மறுப்பு சொல்லாதிருந்தால் வேறு கல்லூரியில் சேர்ந்து படிக்க வாய்ப்பு இருக்கும் என்று சுபாஷ¤க்குத் தெரிய வந்தது. சுபாஷ் நேராகக் கல்கத்தா சென்று ஸ்காட்டிஷ் கல்லூரி முதல்வரான வெள்ளையரைச் சந்தித்துத் தம்மைப் பற்றிய அத்தனை விவரங்களையும் ஒளிவு மறைவில்லாமல் சொன்னார். முதல்வர் நல்ல மனிதர். பழைய கல்லூரி முதலில் தடையின்மை சான்றிதழ் அளித்தால் தாம் தமது கல்லூரியில் சேர்த்துக் கொள்வதாக வாக்களித்தார். சுபாஷின் அண்ணன் சரத் சந்திர போஸ் பழய கல்லூரி முதல்வரிடம் சென்று பேசி அவ்வாறே சான்றிதழ் வாங்கித் தந்ததில் சுபாஷ் பி.ஏ. வகுப்பில் சேர்ந்தார். முழு அக்கரையுடன் படித்து முதல் மாணவராகத் தேறினார். அதே நேரத்தில் பிரதேச ராணுவத்திலும் சேர்ந்து தேர்ச்சி பெற்று நல்ல மதிப்பெண்களும் சா'ன்றும் பெற்றார். தொடர்ந்து படிக்க எம்.ஏ. வகுப்பில் சேர்ந்தார்.

அப்போது அவசர அவசரமாகத் தந்தையார் கூப்பிடுவதாக சுபாஷ¤க்கு ஓர் அழைப்பு வந்தது. என்னவேன்று புரியாமல் அவர் வீட்டுக்குச் சென்றபோது, தந்தையாரும், அண்ணன் சரத் சந்திர போசும் அருகருகே உட்கார்ந்திருந்திந்தார்கள். 'ஐ.சி.எஸ். படிக்க வேண்டும். உடனடியாக இங்கிலாந்து செல்ல வேண்டும். சரி தானே' என்று கேட்டார் தந்தையார். ஒன்றும் புரியாமல் நின்றர் சுபாஷ்.' இருபத்து நா‎ன்கு மணி நேரம் அவகாசம். யோசித்துப் பதில் சொல்' என்றார் தந்தையார்.

ஏன் இந்த அவசர அழைப்பு? காரணமிருக்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:31 am

நாட்டில் கொந்தளிப்பு - நாயகனின் மனத் தவிப்பு

அவசரம் அவசரமாக சுபாஷின் தந்தை அவரை அழைத்து ஐ.சி.எஸ். படிப்புக்காக லண்டன் அனுப்பத் துடித்ததற்கு ஒரு காரணம் இருக்கத்தான் செய்தது.

அன்றைய அரசியல் சூழலைப் பற்றிக் கொஞ்சம் பார்க்க வேண்டும். பிரிட்டிஷ் அரசு ரவுலட் சட்டம் என்று சொல்லப்பட்ட ஓர் அடக்கு முறைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. இன்றைக்கு நாம் கண்ட தடா, பொடா சட்டங்களுக்கெல்லாம் முன்னோடி அந்தச் சட்டம். அதன்படி, யாரையும் விசாரணையின்றிக் கைது செய்து உள்ளே தள்ளலாம். அப்பீல் கிப்பீல் ஒன்றும் கிடையாது. இதை எதிர்த்து நாடே கொந்தளித்துக் கொண்டிருந்தது. மகாத்மா காந்தி இந்த சட்டத்தை எதிர்த்துத்தான் ஹர்த்தால் என்ற அமைதிப் போராட்ட முறையை உருவாக்கினார். நாடு முழுவதும் ஒரு நாள் இந்த சட்டத்தை எதிர்த்து உண்ணா விரதம் இருக்க வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். மக்கள் நலன் சம்பந்தப்பட்ட அத்தியாவசிய வேலைகள் தவிர மற்ற எல்லாப் பணிகளும் நிறுத்தப்பட வேண்டும், தடை செய்யப்பட்ட புத்தகங்களை அச்சிட்டு வினியோகிக்க வேண்டும். முதலில் இதற்கான தேதி 1919 மார்ச் 30 என்று நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், நாட்டின் பல பகுதிகளுக்கும் செய்தி தெரிந்து தயார் செய்து கொள்ள அவகாசம் வேண்டும் என்பதற்காக ஏப்ரல் 6ஆம் தேதிக்கு இது ஒத்தி வைக்கப்பட்டது. (இப்போது போல அப்போதெல்லாம் என்ன இண்டர்நெட்டா இருந்தது, உடனுக்குடனே தொடர்பு கொள்ள?) பல இடங்களில் ஹர்த்தால், தேதி மாற்றியது தெரியாமல், மார்ச் 30ஆம் தேதியே இது அனுஷ்டிக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் ஹர்த்தால் அமைதியாகவும், வெற்றிகரமாகவும் ஏப்ரல் 6ஆம் தேதி அனுஷ்டிக்கப்பட்டது. அமிர்தசரஸில் மார்ச் 30ஆம் தேதியும் ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். ஏப்ரல் 9ஆம் தேதி இந்துக்களும் முஸ்லிம்களும், ஒர்றுமையுடன் கூடி ராமநவமி ஊர்வலத்தை பிரம்மாண்டமாக நடத்தினார்கள். மக்கள் எழுச்சியைக் கண்டு மிரண்ட மைக்கேல் ஓ ட்வையர் என்ற லெ·ப்டினண்ட் கவர்னர், சத்யபால், கிச்லூ என்ற இரண்டு தலைவர்களைக் கைது செய்து நாடு கடத்தினார். இது பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இரு தரப்பிலும் வன்முறைகள் இருந்தன. ஏப்ரல் 12ஆம் தெதி ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் ஒரு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஜெனரல் டயர் என்ற அதிகாரி பொறுப்பேற்றுக்கொண்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டைத் தன் வசம் வைத்துக் கொண்டிருந்தான். கூட்டம் நடந்த இடத்துக்கு துருப்புகளுடன் அவன் விரைந்தான். அந்த மைதானத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும். உள்ளே வரவும், வெளியே போகவும் ஒரே குறுகிய வழிதான். 10000 பேர் அந்த மைதானத்தில் இருக்கிறார்கள். குருவிகளை சுட்டுத் தள்ளுவது போல் சடசடவென்று1650 ரவுண்டுகள் சுட்டான். ரவைகள் தீர்ந்தவுடன்தான் நிறுத்தினான். ஓடவோ, ரவைகளிலிருந்து தப்பிக்கவோ முடியாமல் மக்கள், மிதி பட்டு, அடி பட்டு, குண்டடி பட்டு செத்த காட்சி, மனித குல வரலாற்றிலேயே மறக்க முடியாத ஈனமான செயல். இறப்பு எண்ணீகை 379, காயம் பட்டவர்கள் 200 என்று அரசாங்கமே கூறியது. அவ்வளவுதானா இருக்கும்? நாமே முடிவு கட்டிக் கொள்ளலாம். "துப்பாக்கி ரவைகள் தீர்ந்து விட்டன. இல்லாவிட்டால் ,மேலும் சுட்டுக்கொண்டே இருந்திருப்பேன்." என்று கொக்கரித்தான் டயர். இவனுக்கு, பிரிட்டிஷ் பாராளுமன்றம் பாராட்டு தெரிவித்தது. அந்த நாட்டில் பண முடிப்பு ஒன்றும் அளிக்கப்பட்டது.

அதை விடக் கொடுமை என்னவென்றால், இதன் பின், ராணுவச்சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டது. குழந்தைகள், பல மைல் தூரம், நடக்க வைத்து, பிரிட்டிஷ் கொடிக்கு வணக்கம் தெரிவிக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் பட்டார்கள். மக்கள் கூண்டுகளில் அடைக்கப்பட்டுக் காட்சிப் பொருள் ஆக்கப்பட்டார்கள். சரமாரியாக சவுக்கடி தண்டனை கொடுக்கப் பட்டது. இன்னும் கேளுங்கள், ஒரு ஆங்கிலேய மாதை இந்தியர்கள் அவமதித்து விட்டார்கள் என்பதற்காக, அந்த வீதியில் செல்லும் இந்தியர்கள் அத்தனை பேரும், வயிற்றைத் தேய்த்து ஊர்ந்து செல்ல வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப் பட்டது.

இந்த அரசோடு எந்த விதத்திலும் ஒத்துழைக்கவே முடியாது என்று காந்தி திடமாகத் தெரிந்து கொண்டது இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகுதான். அந்த வகையில் 1919ஆம் ஆண்டு இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு watershed எனலாம்.

இவை பற்றியெல்லாம் தெரிந்து கொண்டு மனம் கொந்தளித்துப் போயிருந்தார் சுபாஷ். தமது சகோதரர்களுடன் தீவிரமாகப் பேசியிருக்கிறார். இதைத் தெரிந்து கொண்ட அவர் தந்தையார், சுபாஷ் இந்தியாவில் இருந்தால் அவரது உணர்ச்சி வேகத்தைக் கட்டுப் படுத்த முடியாது, அவரது எதிர்காலமே பாழாகி விடும் என்பதற்காகவே, அவரை அவசரம் அவசரமாக லண்டனுக்கு அனுப்பிவிடத் தீர்மானித்தார்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:32 am

ஐ.சி.எஸ். மாணவர் சுபாஷ்

என்ன முடிவு செய்வது?

குழப்பமாகத்தான் இருந்தது சுபாஷ¤க்கு. ஐ.சி.எஸ். படித்து அன்னியர் ஆட்சியில் வேலை பார்க்க வேண்டுமா என்று தயக்கம். சிறந்த நிர்வாகத் திறமை பெற்று, தாய்நாட்டுக்குப் பணி புரிய முடியுமோ என்ற ஓர் ஆசை. தேர்வில் பிரிட்டிஷாருடன் போட்டி போட்டு வென்றால் இந்தியர்களின் திறமையை எடுத்துக்காட்ட முடியுமே என்றும் ஒரு எண்ணம். இவற்றுக்கிடையே ஊசலாடிய சுபாஷ், 24 மாதங்கள் படிக்க வேண்டிய ஐ.சி.எஸ். படிப்புக்கு நமக்குக் கிடைத்திருப்பதோ எட்டே மாதங்கள். கேம்பிரிட்ஜில் சேர்ந்து படித்து, பரீட்சை தேறிய பிறகு முடிவெடுத்துக் கொள்ளலாம், இப்போதைக்கு அப்பா சொல்வதைக் கேட்டு லண்டன் போகலாம் என்று முடிவு எடுத்தார். இந்த முடிவை சில மணி நேரங்களிலேயே எடுத்து, தந்தையிடம் சொல்லிவிட்டார்.

1915 செப்டம்பர் 15ஆம் தேதி கப்பலில் லண்டனுக்குப் பயணமானார் சுபாஷ். அவர் லண்டன் சென்றடைந்தது அக்டோபர் 25ம் தேதி வாக்கில். ("நான் பிரயாணம் செய்த கப்பலை விட மெதுவாகச் செல்லும் கப்பல் வேறு இருக்க முடியாது என்றே நினைக்கிறேன்."). படிப்புக்காக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவருக்கு அங்கு மாணவர்களுக்கு இருந்த சுதந்திரம் வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. நேரத்தை வீணடிக்காமல், கவனத்தைச் சிதற விடாமல், முழு முனைப்புடன் படிப்பில் ஈடுபட்டார் அவர். அவரது ஐ.சி.எஸ். நாட்களில் நடந்த சில முக்கிய விஷயங்களை மட்டும் மேலோட்டமாகப் பார்க்கலாம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை, பிரிட்டனில் வகுப்புக் கலவரம் என்பது போலத் திரித்துக் கூறப் பட்டிருந்தது. பிரிட்டிஷ் பொது மக்களிடையேயும், மாணவர்களிடையேயும் இந்த பஞ்சாப் படு கொலையைச் செய்த டயரிடம் பெரு மதிப்பு இருந்தது சுபாஷ¤க்கு சினத்தையும் வருத்தத்தையும் அளித்தது. இந்த சந்தர்ப்பத்தில், இந்தியர்கள் பால் பரிவு கொண்ட பிரிட்டிஷ் தொழிற்கட்சியைச் சேர்ந்த தலைவர் சர் ஆஸ்வால்டு மோஸ்லே இந்தப் படு கொலையைக் கண்டித்துப் பேசியது, அந்த நாட்டில் பரபரப்பையும், சுபாஷ¤க்கு மகிழ்ச்சியையும் அளித்தது.

லோகமான்ய பால கங்கதர திலகர் இந்தக் கால கட்டத்தில் கேம்பிரிட்ஜுக்கு விஜயம் செய்தார். இதைத் தடுக்க பிரிட்டிஷ் இந்திய மந்திரி அலுவலகமும், வெளிநாட்டுத் துறையும் எடுத்த முயற்சிகள் எவையும் பலிக்கவில்லை. சிறப்பான ஆங்கிலத்தில் இந்திய தேசிய உணர்வுகள் பற்றியும், பிறப்புரிமையான சுதந்திரம் அடைந்தே ஆக வேண்டிய அவசியம் பற்றியும் அவர் பேசிய உரை, மாணவர்க¨ளை மட்டுமல்லாது கல்லூரி நிர்வாகிகளையும் கவர்ந்தது.

லண்டனுக்கு சரோஜினி தேவி வருகை தந்து, இந்திய சமூகத்தினரின் வரவேற்பைப் பெற்றதும் இந்தத் தருணத்தில்தான். அவர் ஆற்றிய வீர உரை, சுபாஷை ஊக்குவித்ததில் வியப்பில்லை. இத்தகைய அறிவும் ஆற்றலும் பெற்ற இந்தியப் பெண்மணி ஒருவர் இருப்பது அவருக்குப் பெரிதும் பெருமை தந்தது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:32 am

கருத்தூன்றிப் படித்த சுபாஷ் எட்டு மாதப் படிப்பிலேயே, ஈராண்டுகள் தொடர்ந்து படித்தவர்கள் போட்டியிட்ட தேர்வில் வென்று விட்டார். அதுவும் எப்படி? அந்த ஆண்டுத் தேர்விலேயே 4-வது மாணவராக!

ஐ.சி.எஸ். பரீட்சை தேறிய மாணவர்களுக்கு இந்தியாவில் நடைமுறைப் பயிற்சி உண்டு. அதற்காக விவரங்கள் அடங்கிய தாள் ஒன்று அவர்களுக்குக் கொடுக்கப்படும். அத்தகைய தாள் ஒன்று சுபாஷ¤க்கும் கொடுக்கப்பட்டது. அதனைப் படித்த அவர் கொதித்தெழுந்தார். அப்படி என்ன இருந்தது அந்தத் தாளில்?

'இந்தியாவில் குதிரைகளைப் பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியக் குதிரைக்காரர்கள் குதிரைக்குப் போடும் உணவையே தின்று விடுவார்கள். இந்திய வர்த்தகர்கள் மோசமானவர்கள். நாணயம் அற்றவர்கள். சொன்னதை நிறைவேற்ற மாட்டார்கள்".

சினம் கொண்ட சுபாஷ் மற்ற இந்திய ஐ.சி.எஸ். வெற்றியாளர்களை சேர்த்துக் கொண்டு ஒரு மறுப்புக் கடிதம் தயார் செய்தார். இந்தக் கருத்தைக் கண்டித்தும், ஆட்சேபகரமான பகுதியை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார். ஆனால், மற்ற மாணவர்கள் ஒவ்வொருவராக சாக்கு போக்கு சொல்லி, கையெழுத்து போடாமல் நழுவி விட்டார்கள். ஐ.சி.எஸ். கனி கைக்கெட்டிய தருணத்தில் நழுவிப் போய்விட்டால் என்ன செய்வது என்ற சாதாரணர்களுக்கே உரிய பயம். நம் நாயகர் அசாதாரணமனவர். துணிந்து கையெழுத்திட்டு அனுப்பி வைத்தார். பலன்? அந்த அறிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டது.

மிகக் கடினமான தேர்வில் குறுகிய காலத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, ரேங்க்கில் தேறிய சுபாஷை வாழ்த்தி நண்பர்களிடமிருந்தும் உறவினர்களிடமிருந்தும் வாழ்த்துகள் வந்து குவிந்தன

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:33 am

பதவி வேண்டாம்-உதறித் தள்ளினார்!

லண்டனில் உள்ள இந்திய மந்திரி மாண்டேகுவின் அறை.
தள்ளுகதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார் நம் நாயகன். ஏற்கெனவே அப்பாயிண்ட்மெண்ட் இருந்தது.
பார்த்துக் கொண்டிருந்த கோப்புகளிலிருந்து தலையை நிமிர்த்தி “யெஸ், கம் இன்" என்றார் மாண்டேகு. அமரச்சொன்னார். சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை இந்தியாவில் தாங்கி நிற்கப்போகும் ஒரு தூண் - ஐ.சி.எஸ். அதிகாரி ஆயிற்றே? மரியாதை உண்டுதான்.

மவுனமாகத் தன் கையில் கொண்டு வந்திருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சுபாஷ்.

அதில் கண்டது:

“முப்பது கோடி இந்தியர்கள் அடிமைத்தளையில் உழலும்போது நான் பிரிட்டிஷ் அரசுக்கு சேவகம் செய்ய விரும்பவில்லை. ஆகவே என் ஐ.சி.எஸ் பதவியிலிருந்து விலகுகிறேன்."

கண்ணாடியைக் கழற்றித் துடைத்துக் கொண்டு சுபாஷை வியப்பு விரியப் பார்த்தார் மந்திரி. இந்திர போகப் பதவி ஆயிற்றே? அதை விடுவார்களா, நம்ப முடியவில்லை அவருக்கு. நமது நாயகரோ இந்திய விடுதலையைத் தவிர எச்சுவை பெறினும் வேண்டாதவர் என்பது அவருக்குத் தெரியாது.

“அவசரப் படாதே. டயம் தருகிறேன். யோசித்து முடிவு எடு." என்றார் பிரபு.

நிதானமாகப் பதில் சொன்னார் சுபாஷ். “நன்றாக யோசித்துத்தான் முடிவு எடுத்திருக்கிறேன். எங்கள் நாட்டில் காந்திஜியின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் நடந்து கொண்டிருக்கிறது. பதவிகளையும் விருதுகளையும் இந்தியர்கள் துச்சமெனத் தூக்கியெறிந்து கொண்டிருக்கிறார்கள். மாணவர்கள் எதிர்காலத்தைத் தியாகம் செய்து பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் வெளியேறுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நான் அதிகர பீ¢டத்தில் அடிவருடியாக அமர்ந்திருப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் முடிவு எடுத்தது எடுத்ததுதான்" என்று சொல்லி விட்டு விருட்டென்று வெளியேறினார் சுபாஷ்.

நம்பமுடியாமல் அவர் சென்ற திசையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் மாண்டேகு.

தமது முடிவு குறித்து அன்பு மனம் கொண்ட சகோதரர் சரத் சந்திர போசுக்கு சுபாஷ் எழுதிய கடிதங்களிலிருந்து சில வரிகளை இங்கே தருவது அவரது எண்ணப் போக்கை நாம் புரிந்து கொள்ள உதவும். (சக்தி மோகன் தமிழாக்க நூலிலிருந்து.)

“ஐ.சி.எஸ்.பட்டம் என்னை ஒரு கமிஷனராக்கும். ஒரு தலைமைச் செயலராக்கும். மேலும் பல உயர் பதவிகளில் என்னைத் தூக்கி வைக்கும். வாழ்நாள் முழுக்க அதிகார பாக்கியங்களோடு களிக்கலாம். இதில் ஐயமே இல்லை. இப்பதவி என் புற வாழ்வை மேம்பட வைக்கும். அக வாழ்வை மேம்பட வைக்குமா? ஒருபோதும் கிடையாது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 31, 2008 3:33 am

உள்ளுணர்ச்சிக்கு ஒவ்வாத, தேச உணர்ச்சியைக் கொழுந்து விட்டு எரியச்செய்யாத ஒரு பதவியை அன்னிய ஆட்சியில் வகிப்பது என்பதை விட மனத் துரோகம் என்பது வேறு இருக்க முடியாது.

நான் தேசியத் தொண்டனாக இருப்பதற்குப் பெற்ற தகுதியை, ஐ.சி.எஸ். பதவியை வகிக்கப் பெறவில்லை..

அரசாங்கப் பதவியில் இருந்து கொண்டே “முடிந்ததைச்" செய்யலாம்தான். அந்த “முடிந்தது" என்பதற்கு நிலைத்தன்மை எதுவும் கிடையாது.

பிறந்த நாட்டின் எதிர்காலத்தை விடுதலையில் நிலைநாட்டிக் குதூகலிக்க வைக்க நான் செய்ய விரும்பும் காணிக்கையாக ஐ.சி.எஸ். பட்டத்தையும் அது அளிக்கும் பெரும் பதவியையும் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.

குறிப்பாக சி.ஆர்.தாசைப் பாருங்கள். அவர் படிப்பென்ன, வருமானம் என்ன, புகழ் என்ன, குடும்பப் பொறுப்புகள் எவ்வளவு, கொஞ்சமா? அவரே எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு தாய்நாட்டுக்கான பணியை மேற்கொண்டு விட்டபோது எந்தவித சொந்தப் பொறுப்பும் இல்லாத என் போன்ற இளைஞர்கள் தியாகம் செய்வது பெரிதோ பெருமையானதோ அல்ல..

தேசியக் கல்லூரியும் புதிதாகத் தோன்றியுள்ள ஸ்வராஜ் தினசரிப் பத்திரிகையும் எனது சேவையை ஏற்கக் காத்திருப்பதாகவே நம்புகிறேன்..

வறுமையும் தேச சேவையும் குரூரமானவை என்று எல்லாருமே ஒதுங்கியிருந்தால் ஒரு பரமஹம்சரையோ, விவேகானந்தரையோ, திலகரையோ, அரவிந்தரையோ பெற்றிருக்க முடியுமா?

இப்படி ஒரு முக்கிய காலக் கட்டத்தில் பிரிட்டிஷ் அரசில் கவர்னர் பதவி வகிப்பவனும் சரி, பியூன் வேலை பார்ப்பவனும் சரி, இருவருமே இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி பலப்பட உதவி செய்கிறவர்களே..."

தந்தைக்கு இதில் விருப்பமில்லை என்று தெரியும். இருந்தும் நாட்டின் சுதந்திரத்தைப் பொறுத்த இந்த விஷயத்தில் தந்தை சொல்லை மீறுவதுதான் சரி என்று திடமான முடிவு எடுத்தார் சுபாஷ்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக