புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
prajai |
| |||
ஜாஹீதாபானு |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்..
Page 1 of 1 •
![மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P42](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/06/images/p42.jpg)
காலை வருகையைத் தள்ளி வைத்து, மதியம் 1 மணிக்கு வருவதாய்ச்
சொன்னார் கழுகார். அடுத்து வருகையை மாலை 6 மணிக்குத் தள்ளி வைத்தார். அப்போதும் வராமல், இரவு 8 மணிக்கு ஒரு வழியாய் வந்து சேர்ந்தார்!
கழுகார் 'பங்சுவாலிட்டு பரமசிவம்’ என்பது நாம் அறிந்ததுதான். அவர் அரைமணி நேரம் லேட் ஆனாலே ஆயிரம் காரணம் இருக்கும்... அரை நாள் தாமதத்துக்கு காரணத்தைக் கேட்டோம்.
''என்னை மட்டும்தான் கேட்பீரா? கருணாநிதியையும் சோனியாவையும் கேட்க மாட்டீரா? மதியம் 12 மணிக்கு சோனியாவைப் பார்த்திருக்க வேண்டிய கருணாநிதி, மாலை 5 மணிக்கு என்று மாறி, இரவு 7.30 மணிக்குத்தான் சந்தித்திருக்கிறார். நம்பர் 10, ஜன்பத் வீட்டின் நம்பர் கேம்தான் இதற்குக் காரணமாம்!'' என்றபடி தொடங்கினார்.
''டெல்லியில் கருணாநிதி கால் வைத்த நேரம் சரியில்லை என்றே நினைக்கிறேன்! அவர் கை வைத்த விஷயங்கள் அனைத்துமே கந்தலாகத் தொங்கியதால், மனிதர் அதிகமாகவே அப்செட். உள்நாட்டுப் பாதுகாப்பு குறித்த மாநாட்டில் கலந்து கொள்வதாகத்தான் கருணாநிதியின் டெல்லிப் பயணம் முதலில் திட்டமிடப்பட்டது. தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை உறுதிப்படுத்திவிட்டு காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகளை விட்டுத்தருவது என்பது குறித்து பேசுவதற்காகவும் இந்தப் பயணத்தை கருணாநிதி பயன்படுத்திக் கொள்ள நினைத்தார். காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகள் எதிர்பார்ப்பதையும், கருணாநிதி 50-க்கு தயாராக இருப்பதையும் ஏற்கெனவே சொல்லியிருந்தேன். ஆனால், இந்தக் கணக்கை காங்கிரஸ் மேலிடம் ஏற்றுக் கொள்ளவில்லையாம். அதனால், சோனியாவிடம் நேரில் பேசி கணக்கை முடிக்கக் கருணாநிதி திட்டமிட்டார்.''
''இந்த விஷயம் குறித்து இவர்களுக்கு முன்பு யார் பேசினார்களாம்?''
![மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P42a](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/06/images/p42a.jpg)
''அவருக்கு வேறு நாளே கிடைக்கவில்லையா? கருணாநிதி சந்திக்கும் அன்றுதான் கொடுக்க வேண்டுமா?''
![மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P43](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/06/images/p43.jpg)
''ம்!''
''சோனியாவைச் சந்திக்கும்போது, அவரிடம் விலாவாரியாகப் பேசிக் கொள்ளலாம் என்று கருணாநிதி காத்திருந்த போதுதான் அடுத்த ஷாக். சி.பி.ஐ. அலுவலகத்தில் இருந்து ஆ.ராசாவுக்கு தாக்கீது வந்தது. 'உங்களிடம் சில விளக்கங்களை வாங்க வேண்டியுள்ளது. வாருங்கள்...’ என்று அழைத்தார்கள். ஆ.ராசாவை சி.பி.ஐ. ஒரு பக்கம் கிரில்லிங் பண்ணிக் கொண்டிருக்க... இன்னொரு பக்கம் தொகுதிகளின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய நெருக்கடி கருணாநிதிக்கு. காங்கிரஸின் லாஜிக் அறிந்தவர்கள் இதை சோனியாவின் தந்திரம் என்கிறார்கள். சிவராஜ் பாட்டீல் அறிக்கை கொடுத்துவிட்டார், ஆ.ராசா சி.பி.ஐ. கஸ்டடியில் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறார்... இந்த நிலைமையில் தி.மு.க. தனக்கு அடங்கியே போகும் என்று சோனியா தரப்பு நினைத்திருக்கிறது. 'காந்தகார் விமானத்தைக் கடத்தி வைத்துக் கொண்டு நாங்கள் விரும்பும் ஆட்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தாலிபன் தீவிரவாதிகள் மிரட்டியது போல’த்தான் இருக்கிறது காங்கிரஸின் இந்த ஆபரேஷன். ஒரு புறம் ஆ.ராசாவின் மீது விசாரணை... மறுபுறம் கூட்டணி பேரம் என்று தொடர்ந்தன டெல்லிக் காட்சிகள்!'' என்று சொல்லி முடித்தவருக்கு சூடான மசாலா பால் கொடுத்தோம்.
''மதியம் 12 மணி அப்பாயின்ட்மென்ட்டை சோனியா கேன்சல் செய்ய என்ன காரணமாம்?''
''காய்ச்சல் என்கிறார்கள். கடந்த ஒரு வாரமாகவே உடல்நலக் குறைவுடன் இருந்தாராம் சோனியா. ஜனவரி 26-ம் தேதி குடியரசு தின விழாவில் பங்கேற்கவில்லை, அதற்கு மறுநாள் நடந்த என்.சி.சி. அணி வகுப்பைப் பார்வையிடவும் அவர் வரவில்லை. உடல் நிலை முழுமையாக தேறவில்லை அதனால் இருவரும் சந்திக்கவில்லை என்று சொன்னார்கள். 'அதை முன்னமே சொல்லி இருக்கலாமே’ என்று தி.மு.க. தரப்பு கொந்தளிக்க ஆரம்பித்தது. ஆனால் அகமது படேல், 'காங்கிரஸுக்கு தரப்போகிற ஸீட்டுகளின் எண்ணிக்கையைச் சொல்லாமல் மேடம் சந்திப்பதால் என்ன பிரயோஜனம்?’ என்று கேட்டதாகவும் சொல்கிறார்கள். எண்ணிக்கையை முடிவு செய்ய பிரணாப் முகர்ஜி, குலாம்நபி ஆசாத் ஆகிய இருவரையும் கருணாநிதி எதிர்பார்த்தார். ஆனால் இருவரையும் சோனியா அனுப்பி வைக்கவில்லை, அகமது படேலே தொடர்பில் வந்தார். தி.மு.க. தரப்பில் டி.ஆர்.பாலு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தி.மு.க-வின் ஸ்ருதி ரொம்பவே இறங்கியிருந்தது.''
![மிஸ்டர் கழுகு: ஒரு புறம் ராசா.. மறுபுறம் பேரம்.. P44](https://2img.net/h/new.vikatan.com/jv/2011/02/06/images/p44.jpg)
''இருக்கலாம்! பா.ம.க. நம்முடைய கூட்டணியில் இல்லாவிட்டால் 66 தொகுதிகள் வரைக்கும் கொடுக்கலாம்... என்று தி.மு.க. தரப்பு ஒரு கணக்குப் போட்டுச் சொன்னது. 'இன்றைக்கு எண்ணிக்கையை முடிவு செய்யாவிட்டாலும் பரவாயில்லை. முதல்வரை சோனியா சந்தித்தால் மட்டும் போதும். அவரைச் சந்திக்காமல் தமிழ்நாட்டுக்குச் சென்றால், 'கூட்டணியில் குழப்பம் என்று செய்திகள் வரும்’ என்று தி.மு.க. தரப்பு தன்னுடைய வருத்தங்களை பதிவு செய்தது. 55-ல் இருந்து 60-க்கு ஸீட்டை முடிவு செய்துவிடலாம் என்ற முடிவோடு இருந்த கருணாநிதி, 'எத்தனை ஸீட் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம்’ என்ற முடிவுக்கு வரும் அளவுக்கு டெல்லி டெம்பரேச்சர் எகிறிக் கொண்டே இருந்தது. '75 என்ற எண்ணிக்கை கருணாநிதி வாயில் இருந்து வரும் வரை... ஜன்பத் வீட்டுக் கதவு திறக்காது’ என்று டெல்லியில் இருந்து எனக்கும் எஸ்.எம்.எஸ். வந்தது!''
''க்ளைமாக்ஸுக்கு வாரும்...''
''மறுநாள் பிப்ரவரி 1-ம் தேதி காலையில் அமைச்சர்கள் மாநாடு இருக்கிறது. அதை முடித்துக் கொண்டு உடனே சென்னை திரும்பியாக வேண்டும், எனவே இரவு எத்தனை மணி ஆனாலும் சந்திப்பு நடந்தாகவேண்டும் என்று கருணாநிதி விரும்பினார். அதன்பிறகு அகமதுபடேலை தொடர்பு கொண்டு நெருக்கினார் பாலு. 'மரியாதை நிமித்தமான சந்திப்பாக சில நிமிடங்கள் பார்க்கலாம்’ என்று சோனியாவின் பாதுகாவலர் ஜார்ஜும் அனுமதிக்க... 8 மணிக்கு வாருங்கள் என்ற தகவல் 6 மணிக்கு தரப்பட்டதாம். டெல்லி குளிர் அதிகமாக இருக்க... 8 மணிக்கு முதல்வரால் வெளியில் வர முடியாது என்று 7 மணிக்கு மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதன்பிறகு வேண்டா வெறுப்பாக 7.30-க்கு அப்பாயின்ட்மென்ட் தரப்பட்டுள்ளது. 7.45 முதல் 8.15 வரை கருணாநிதி - சோனியா சந்திப்பு நடந்தது. சோனியாவுடன் ஆஸ்கர் பெர்னாண்டஸ், அகமது படேல் ஆகியோருடன் அமைச்சர் ஜி.கே.வாசனும் இருந்திருக்கிறார். பரஸ்பர அறிமுகம் செய்து கொண்ட பிறகு, திடீர் புயலாக உள்ளே நுழைந்திருக்கிறார் ராகுல். இதை கருணாநிதி கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லையாம். 'யாருக்கு எத்தனை ஸீட் என்று முடிவெடுக்கும் அளவுக்கு இன்றைக்கு என்னுடைய உடல்நிலை இடம் கொடுக்கவில்லை. அதனால் அது பற்றி பின்னர் பேசி முடிவெடுப்போம்!’ என்று சோனியா சொன்னதாகவும் கருணாநிதி தன்னுடைய கூட்டணி நிலைமையை விளக்க ஆரம்பித்திருக்கிறார். உடனடியாக ராகுல், 'காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது என்ற பட்டியலை நாங்கள் கணக்கெடுத்து வைத்திருக்கிறோம். நீங்கள் ஒரு குழு போடுங்கள். நாங்கள் ஒரு குழு போடுகிறோம். அந்தக் குழு ஃபைனல் பண்ணட்டும்’ என்று ராகுல் சொன்னதாகவும், 'அந்த மாதிரி நடைமுறை இல்லையே! எத்தனை தொகுதிகள் என்று எண்ணிக்கை முடிவு செய்துவிட்டு எந்தெந்தத் தொகுதிகள் என்று பிரித்துக் கொள்வதுதானே இதுவரை இருந்த நடைமுறை’ என்று கருணாநிதி சொன்னாராம், ஆனால் அதைக் கேட்கும் நிலையில் யாரும் இல்லை. 'தி.மு.க._ காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது என்பதில் மாற்றம் இல்லை’ என்று சோனியா உறுதிப்படுத்தினாராம். ஆனால் பிப்ரவரி 10-ம் தேதிக்குப் பிறகுதான் எதையும் இறுதியாக முடிவு செய்ய முடியும் என்று சொன்னாராம் ராகுல். கருணாநிதிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாத நிலையில் சோனியாவிடம் தனியாகப் பேசவேண்டும் என்று கேட்டிருக்கிறார். சோனியாவும் கருணாநிதியும் மட்டும் தனிமையில் இரண்டு நிமிடங்கள் பேசியிருக்கிறார்கள். அப்போது சோனியா சொன்ன சில வார்த்தைகள் கருணாநிதி மனதை அதிகம் பாதித்ததாம். ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு சில விமர்சனங்களை சோனியா சொன்னதாகச் சொல்கிறார்கள். ஏழரை மணி சந்திப்புக்கு டைம் தராவிட்டால் இரவு ஃபிளைட்டை பிடித்து சென்னைக்கு வந்துவிடவும் கருணாநிதி திட்டமிட்டிருந்ததாகச் சொல்கிறார்கள். மொத்தத்தில் டெல்லி விசிட் கருணாநிதியை வாட்டிவிட்டதாம்!''
''கருணாநிதி டெல்லி புறப்படும்போது காங்கிரஸுக்காக வைத்திருந்த எண்ணிக்கை டெல்லியில் இருந்து திரும்பும் போது கூடி விட்டதோ..?''
''ஆம்! டெல்லியில் அடுத்த சிக்கல் அனைவருக்கும் தெரிந்த டாக்டர் ராமதாஸ் மேட்டர். கூட்டணியில் பா.ம.க-வும் இருக்கிறது என்று கருணாநிதி சொன்னதை ராமதாஸ் ரசிக்கவில்லை. அந்த தரப்பில் போயஸ் கார்டனும் பேச்சுவார்த்தையில் இருக்கிறது. எண்ணிக்கையை சொன்னால்தான் கூட்டணி என்று ராமதாஸ் கொந்தளித்தாராம். 45 தொகுதி பட்டியல் கொடுத்திருக்கிறார். 'ராமதாஸுக்கு எத்தனை தொகுதியோ, அதில் பாதி எங்களுக்கு வேண்டும்’ என்று சிறுத்தை சீற ஆரம்பித்திருக்கிறது. பிப்ரவரி தொடக்கத்திலே கருணாநிதியின் பி.பி. எகிறத் தொடங்கியிருக்கிறது!'' என்றபடி பறந்து போனார் கழுகார்!
நன்றி ஜூவி
- nandhtihaதளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
அனைவருக்கும் வணக்கம்
கடமை கண்ணியம் கட்டுப் பாடு
காற்றில் பறக்குதடா
திடமாய் இருந்த மனமும் –இன்று
திணறித் தவிக்குதடா
பெற்ற பெருமை எல்லாம் -தில்லியில்
பனி போல் கரைந்ததடா
மற்றவர் முன்னே தலை கவிழ்ந்து – எனை
மண்டியிட வைத்ததடா.
கடமை கண்ணியம் கட்டுப் பாடு
காற்றில் பறக்குதடா
திடமாய் இருந்த மனமும் –இன்று
திணறித் தவிக்குதடா
பெற்ற பெருமை எல்லாம் -தில்லியில்
பனி போல் கரைந்ததடா
மற்றவர் முன்னே தலை கவிழ்ந்து – எனை
மண்டியிட வைத்ததடா.
nandhtiha wrote:அனைவருக்கும் வணக்கம்
கடமை கண்ணியம் கட்டுப் பாடு
காற்றில் பறக்குதடா
திடமாய் இருந்த மனமும் –இன்று
திணறித் தவிக்குதடா
பெற்ற பெருமை எல்லாம் -தில்லியில்
பனி போல் கரைந்ததடா
மற்றவர் முன்னே தலை கவிழ்ந்து – எனை
மண்டியிட வைத்ததடா.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை
- பாரதியார்-
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|