புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
by heezulia Yesterday at 11:20 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:01 pm
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:07 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Yesterday at 8:06 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:33 pm
» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 7:24 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:48 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 6:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 3:01 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:14 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jul 04, 2024 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jul 04, 2024 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Jul 04, 2024 10:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu Jul 04, 2024 5:26 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்குமா? டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி பரபரப்பு பேட்டி
Page 1 of 1 •
தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்குமா? டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி பரபரப்பு பேட்டி
#473361தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக் குமா என்ற கேள்விக்கு டெல்லியில் இருந்து திரும்பிய முதல்-அமைச்சர் கருணாநிதி பதில் அளித்தார்.
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்றிரவு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
தொகுதி பங்கீடு குழு
கேள்வி: உங்கள் டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது?
பதில்: வானம் நிர்மலமாக இருந்தது. வழியில் தடைகள் எதுவும் இல்லை. பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.
கேள்வி: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?
பதில்: காங்கிரசும், தி.மு.க.வும் அணி சேர்ந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை இடங்கள், யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பனவற்றை தி.மு.க.வின் தேர்தல் பணிக் குழுவோடு கலந்து பேசி தி.மு.க.வும், காங்கிரசும் அந்த விவரங்களை பிறகு அறிவிக்கும். நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியினுடைய குழுவிலே உள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடும். தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நான் பொதுச் செயலாளரோடு கலந்து பேசி, மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேசுகின்ற குழுவிலே யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிவிப்பேன்.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்?
கேள்வி: எத்தனை நாட்களுக்குள் தி.மு.க குழு அறிவிக்கப்படும்?
பதில்: இப்போது தானே டெல்லியிலிருந்து வந்திருக்கிறேன். பொதுச் செயலாளரோடு கலந்து பேசி அறிவிப்பேன்.
கேள்வி: சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலே பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உங்களிடம் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி ஏடுகளிலே வந்து கொண்டிருக்கிறதே, அது சரியா? தவறா?
பதில்: இதுவரையில் அது பற்றிய பேச்சு எதுவும் இல்லை.
அனுமானமாக கூறினேன்
கேள்வி: பா.ம.க. உங்கள் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் டெல்லி சென்றவுடன் சொன்னீர்கள். ஆனால், டாக்டர் ராமதாஸ் அன்றிரவே அதை மறுத்து விட்டார். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவர்கள் சார்பில் பொறுப்பிலே உள்ளவர்கள் எங்களிடம் கொண்ட தொடர்புகள், இவற்றை வைத்து பா.ம.க.வும், தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக்கூடும் என்பதை டெல்லியிலே அனுமானமாகக் கூறினேன். அதை பா.ம.க.வின் தலைவர் மறுத்திருக்கிறார் என்பதை நானும் டெல்லியிலே பத்திரிகைகளிலே பார்த்தேன். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
இல்லை என்று சொன்ன பிறகு...
கேள்வி: சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில் உங்கள் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று கடிதமே எழுதினார். அதற்குப் பிறகு சில பேச்சுவார்த்தையும் நடந்தது. முதலில் உங்கள் கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துவிட்டு, தற்போது மறுக்க வேண்டிய அவசியம் என்ன?
பதில்: இது இங்கே கேட்க வேண்டிய கேள்வி அல்ல.
கேள்வி: பா.ம.க. நேரடியாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க நீங்கள் உடன்படுவீர்களா?
பதில்: அவர்கள்தான் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தி.மு.க.வுடன் அணி சேருவது பற்றி அவர்கள் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கட்சியிலே உள்ள பல்வேறு மட்டங்களில் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்கள்.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
பதில்: நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை.
கேள்வி: டெல்லிப் பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது என்று கருதுகிறீர்களா?
பதில்: நிச்சயமாக.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: தேர்தல் வந்தால் புதிய கட்சிகள் வருவது இயற்கைதானே!
தொடர் நடவடிக்கை
கேள்வி: டெல்லியில் மீனவர்கள் பிரச்சினை குறித்து என்ன பேசினீர்கள்?
பதில்: மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று காலையில் டெல்லியில் நடைபெற்ற முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலே விரிவாகப் பேசியிருக்கிறேன். அதற்கு முன்பு நேற்று பகலில் பிரதமரிடமும் அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இன்றைய மாநாட்டிலும் அதை வலியுறுத்தி பேசி உடனடி நடவடிக்கை வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேன். இன்று மதியம் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவும், வெளி விவகாரத்துறை செயலாளர் நிருபமாராவும் என்னை தமிழ்நாடு இல்லத்திலே சந்தித்து, வெளி விவகாரத் துறை செயலாளர் இலங்கை சென்று வந்த விவரங்களை எல்லாம் கூறினார்கள். வெளி விவகாரத்துறை அமைச்சரும், அந்தத் துறையின் செயலாளரும் இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கச்சத்தீவு
கேள்வி: இலங்கைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என்று நிருபமா ராவ் சொல்லியிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பது குறித்து இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அப்படியொரு ஒப்பந்தம் போடப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமேயானால் கச்சத்தீவு பற்றியும் அதிலே இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.
தீவிர நடவடிக்கை
கேள்வி: மீனவர்கள் இனிமேல் தாக்கப்படமாட்டார்கள் என்று உறுதிமொழி ஏதாவது கொடுக்கப்பட்டதா?
பதில்: தாக்கப்பட்டால் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி: இதற்கு முன்பு எம்.கே.நாராயணன் ஒருமுறை இலங்கைக்குச் சென்றுவிட்டு வந்து இப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறதே?
பதில்: தாக்குதல் நடக்கும் போது நாம் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் நடந்தால் அதுபற்றி எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று யோசிப்போம்.
புதிதாக வந்திருக்கிறார்
கேள்வி: வெளி விவகாரத்துறை செயலாளரின் இலங்கைப் பயணம் கண் துடைப்பு என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சொல்லியிருக்கிறாரே?
பதில்: இப்போதுதான் அந்தக் கட்சிக்குத் தலைவராக புதிதாக வந்திருக்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: கச்சத்தீவை மீட்டுவிட்டால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: விவாதத்திற்கு உரியது.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
தினதந்தி
டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற அனைத்து மாநில முதல்-அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்றிரவு சென்னை திரும்பினார்.
விமான நிலையத்தில் இருந்து அண்ணா அறிவாலயம் வந்த முதல்-அமைச்சர் கருணாநிதி அங்கு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-
தொகுதி பங்கீடு குழு
கேள்வி: உங்கள் டெல்லிப் பயணம் எப்படி அமைந்தது?
பதில்: வானம் நிர்மலமாக இருந்தது. வழியில் தடைகள் எதுவும் இல்லை. பொதுவாக நன்றாக பயணம் அமைந்தது.
கேள்வி: கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் எந்த அளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது? காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடங்கள் என்று பேசப்பட்டதா?
பதில்: காங்கிரசும், தி.மு.க.வும் அணி சேர்ந்து இந்தத் தேர்தலில் போட்டியிடுவது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எத்தனை இடங்கள், யார் யாருக்கு என்னென்ன தொகுதிகள் என்பனவற்றை தி.மு.க.வின் தேர்தல் பணிக் குழுவோடு கலந்து பேசி தி.மு.க.வும், காங்கிரசும் அந்த விவரங்களை பிறகு அறிவிக்கும். நாளை அல்லது நாளை மறுநாள் காங்கிரஸ் கட்சியினுடைய குழுவிலே உள்ளவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படக்கூடும். தி.மு.க.வைப் பொறுத்தவரையில் நான் பொதுச் செயலாளரோடு கலந்து பேசி, மற்ற கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்து பேசுகின்ற குழுவிலே யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை அறிவிப்பேன்.
அமைச்சரவையில் காங்கிரசுக்கு இடம்?
கேள்வி: எத்தனை நாட்களுக்குள் தி.மு.க குழு அறிவிக்கப்படும்?
பதில்: இப்போது தானே டெல்லியிலிருந்து வந்திருக்கிறேன். பொதுச் செயலாளரோடு கலந்து பேசி அறிவிப்பேன்.
கேள்வி: சட்டசபை தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியிலே பங்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உங்களிடம் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி ஏடுகளிலே வந்து கொண்டிருக்கிறதே, அது சரியா? தவறா?
பதில்: இதுவரையில் அது பற்றிய பேச்சு எதுவும் இல்லை.
அனுமானமாக கூறினேன்
கேள்வி: பா.ம.க. உங்கள் கூட்டணியில் இருப்பதாக நீங்கள் டெல்லி சென்றவுடன் சொன்னீர்கள். ஆனால், டாக்டர் ராமதாஸ் அன்றிரவே அதை மறுத்து விட்டார். அதைப் பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதில்: சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவர்கள் சார்பில் பொறுப்பிலே உள்ளவர்கள் எங்களிடம் கொண்ட தொடர்புகள், இவற்றை வைத்து பா.ம.க.வும், தி.மு.க. கூட்டணியில் இடம் பெறக்கூடும் என்பதை டெல்லியிலே அனுமானமாகக் கூறினேன். அதை பா.ம.க.வின் தலைவர் மறுத்திருக்கிறார் என்பதை நானும் டெல்லியிலே பத்திரிகைகளிலே பார்த்தேன். அதற்கு நான் பதில் சொல்ல விரும்பவில்லை.
இல்லை என்று சொன்ன பிறகு...
கேள்வி: சில மாதங்களுக்கு முன்பு பா.ம.க. சார்பில் உங்கள் கூட்டணியில் இடம் பெற வேண்டுமென்று கடிதமே எழுதினார். அதற்குப் பிறகு சில பேச்சுவார்த்தையும் நடந்தது. முதலில் உங்கள் கூட்டணியில் இடம்பெற விருப்பம் தெரிவித்துவிட்டு, தற்போது மறுக்க வேண்டிய அவசியம் என்ன?
பதில்: இது இங்கே கேட்க வேண்டிய கேள்வி அல்ல.
கேள்வி: பா.ம.க. நேரடியாக காங்கிரசுடன் கூட்டணி வைக்க நீங்கள் உடன்படுவீர்களா?
பதில்: அவர்கள்தான் தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொல்லிவிட்டார்கள். தி.மு.க.வுடன் அணி சேருவது பற்றி அவர்கள் உறுதியாக எதுவும் சொல்லவில்லை. அவர்கள் கட்சியிலே உள்ள பல்வேறு மட்டங்களில் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்கள்.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற இன்னமும் வாய்ப்பு இருக்கிறது என்று கருதுகிறீர்களா?
பதில்: நாங்கள் இருப்பதாகச் சொன்னதை அவர் இல்லை என்று மறுத்த பிறகு, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை.
கேள்வி: டெல்லிப் பயணம் அரசு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் வெற்றிகரமாக அமைந்தது என்று கருதுகிறீர்களா?
பதில்: நிச்சயமாக.
கேள்வி: தி.மு.க. கூட்டணியில் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: தேர்தல் வந்தால் புதிய கட்சிகள் வருவது இயற்கைதானே!
தொடர் நடவடிக்கை
கேள்வி: டெல்லியில் மீனவர்கள் பிரச்சினை குறித்து என்ன பேசினீர்கள்?
பதில்: மீனவர்கள் பிரச்சினை குறித்து இன்று காலையில் டெல்லியில் நடைபெற்ற முதல்-அமைச்சர்கள் மாநாட்டிலே விரிவாகப் பேசியிருக்கிறேன். அதற்கு முன்பு நேற்று பகலில் பிரதமரிடமும் அதைப் பற்றிப் பேசியிருக்கிறேன். இன்றைய மாநாட்டிலும் அதை வலியுறுத்தி பேசி உடனடி நடவடிக்கை வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கிறேன். இன்று மதியம் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி எஸ்.எம். கிருஷ்ணாவும், வெளி விவகாரத்துறை செயலாளர் நிருபமாராவும் என்னை தமிழ்நாடு இல்லத்திலே சந்தித்து, வெளி விவகாரத் துறை செயலாளர் இலங்கை சென்று வந்த விவரங்களை எல்லாம் கூறினார்கள். வெளி விவகாரத்துறை அமைச்சரும், அந்தத் துறையின் செயலாளரும் இலங்கைப் பிரச்சினையில் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறேன்.
கச்சத்தீவு
கேள்வி: இலங்கைக்கும், தமிழக மீனவர்களுக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் என்று நிருபமா ராவ் சொல்லியிருக்கிறார். அந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவு அருகே மீன் பிடிப்பது குறித்து இடம் பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அப்படியொரு ஒப்பந்தம் போடப்படுகின்ற சூழ்நிலை ஏற்படுமேயானால் கச்சத்தீவு பற்றியும் அதிலே இடம் பெற வேண்டும் என்பதை நாங்கள் வலியுறுத்துவோம்.
தீவிர நடவடிக்கை
கேள்வி: மீனவர்கள் இனிமேல் தாக்கப்படமாட்டார்கள் என்று உறுதிமொழி ஏதாவது கொடுக்கப்பட்டதா?
பதில்: தாக்கப்பட்டால் அதற்கு தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
கேள்வி: இதற்கு முன்பு எம்.கே.நாராயணன் ஒருமுறை இலங்கைக்குச் சென்றுவிட்டு வந்து இப்படித் தான் சொன்னார்கள். ஆனால், அதற்குப் பிறகும் தொடர்ந்து மீனவர்கள் மீது தாக்குதல் நடக்கிறதே?
பதில்: தாக்குதல் நடக்கும் போது நாம் கண்டிக்கிறோம். இதற்கு மேலும் நடந்தால் அதுபற்றி எப்படிப்பட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கலாம் என்று யோசிப்போம்.
புதிதாக வந்திருக்கிறார்
கேள்வி: வெளி விவகாரத்துறை செயலாளரின் இலங்கைப் பயணம் கண் துடைப்பு என்று பா.ஜ.க. தலைவர் நிதின் கட்காரி சொல்லியிருக்கிறாரே?
பதில்: இப்போதுதான் அந்தக் கட்சிக்குத் தலைவராக புதிதாக வந்திருக்கிறார். அவரைப் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
கேள்வி: கச்சத்தீவை மீட்டுவிட்டால் இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று நினைக்கிறீர்களா?
பதில்: விவாதத்திற்கு உரியது.
இவ்வாறு கருணாநிதி பதில் அளித்தார்.
தினதந்தி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்குமா? டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி பரபரப்பு பேட்டி
#473365கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளதா என்று பார்க்கவும்
டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், முதல்வர் கருணாநிதி நடத்திய
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த
பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும்,
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற
கோரிக்கையை அக்கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருவதாலும், தி.மு.க., -
காங்கிரஸ் கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சக மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த 30ம் தேதி முதல்வர்
கருணாநிதி, டில்லிக்கு சென்றார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்கனவே
பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி செய்ததால், இந்த
பயணத்தின்போது காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட விஷயங்கள்
பேசி முடிவாகி விடும் என இருதரப்பினரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால்,
முதல்வர் டில்லி சென்றதும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது மூன்றாம்
கட்ட விசாரணையை சி.பி.ஐ., நடத்தியது தி.மு.க., வட்டாரத்தை அதிர்ச்சி
அடையச் செய்தது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தொடர்பான நீதிபதி சிவராஜ்
பாட்டீல் தலைமையிலான கமிஷன், அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், சோனியாவை
சந்திப்பதற்கு மதியமும், மாலையிலும் முதல்வரை அலைக்கழித்துள்ளனர். இந்த
மூன்று சம்பவங்களும் தி.மு.க., தரப்பிற்கு அதிருப்தியை அளித்தன.
ஒருவழியாக, நேற்று முன்தினம் இரவு சோனியாவை முதல்வர் சந்தித்தார். இந்த
சந்திப்பின்போது ராகுல், அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது
நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, "காங்கிரசுக்கு 80
தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து அமைச்சர் பதவிகள், துணை முதல்வர்
பதவி தரப்பட வேண்டும்' என, ராகுலின் விருப்பத்தை சோனியா தெரிவித்ததாகவும்,
அதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும்
காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேல், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இருதரப்பும்
தொடர விரும்பாததால், "இரு கட்சிகளின் சார்பில் தொகுதி பங்கீடு குழு
அமைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அவர்கள் முடிவெடுத்ததாக
கூறப்படுகிறது.சோனியாவை அவரது வீட்டில் முதல்வர் சந்தித்தபோது எடுத்த
புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை
முதல்வர் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித்
தொடர்பாளர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. முதல்வர் எதிர்பார்க்காத
வகையில், தொகுதிகள் எண்ணிக்கையை அதிகமாகவும், ஆட்சியில் பங்கும் காங்கிரஸ்
கேட்டது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.சென்னையில் நாளை நடக்கவுள்ள
தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு
எடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க., செவிசாய்க்கவில்லை என்றால், ராகுல்
பார்முலாவின் படி, காங்கிரஸ் தலைமையில் மாற்று அணியை உருவாக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பரிசீலிப்பதற்கு
தமிழக காங்கிரசாரின் நெருக்கடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி
அமைத்து போட்டியிடவும், தேர்தல் முடிவுக்கு பின் எந்த அணி ஆட்சியில் பங்கு
தருகிறதோ அந்த அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது காங்கிரஸ் திட்டம்.
தி.மு.க.,வை பொருத்தவரை, அதிகபட்சமாக 60 தொகுதிகளை காங்கிரசுக்கு
ஒதுக்கவும், தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சியில் பங்கு தருவது பற்றி முடிவு
எடுக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி
பங்கீடுக்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும்
ஓரிரு தினங்களில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைக்க பரிசீலனை
டில்லியில், காங்கிரஸ் தலைவர் சோனியாவிடம், முதல்வர் கருணாநிதி நடத்திய
முதல்கட்ட பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த
பேச்சுவார்த்தையில் கூட்டணி பற்றி காங்கிரஸ் மேலிடம் உறுதி செய்யாததாலும்,
தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைய வேண்டும் என்ற
கோரிக்கையை அக்கட்சி மேலிடம் பரிசீலனை செய்து வருவதாலும், தி.மு.க., -
காங்கிரஸ் கூட்டணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சக மாநாட்டில் கலந்து கொள்ள கடந்த 30ம் தேதி முதல்வர்
கருணாநிதி, டில்லிக்கு சென்றார். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியை ஏற்கனவே
பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உறுதி செய்ததால், இந்த
பயணத்தின்போது காங்கிரசுக்கு எத்தனை இடங்கள் என்பது உள்ளிட்ட விஷயங்கள்
பேசி முடிவாகி விடும் என இருதரப்பினரும் நம்பிக்கையுடன் இருந்தனர்.ஆனால்,
முதல்வர் டில்லி சென்றதும், முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா மீது மூன்றாம்
கட்ட விசாரணையை சி.பி.ஐ., நடத்தியது தி.மு.க., வட்டாரத்தை அதிர்ச்சி
அடையச் செய்தது. "ஸ்பெக்ட்ரம்' விவகாரம் தொடர்பான நீதிபதி சிவராஜ்
பாட்டீல் தலைமையிலான கமிஷன், அறிக்கையை தாக்கல் செய்தது. மேலும், சோனியாவை
சந்திப்பதற்கு மதியமும், மாலையிலும் முதல்வரை அலைக்கழித்துள்ளனர். இந்த
மூன்று சம்பவங்களும் தி.மு.க., தரப்பிற்கு அதிருப்தியை அளித்தன.
ஒருவழியாக, நேற்று முன்தினம் இரவு சோனியாவை முதல்வர் சந்தித்தார். இந்த
சந்திப்பின்போது ராகுல், அகமது படேல் ஆகியோரும் உடனிருந்தனர். அப்போது
நடந்த தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, "காங்கிரசுக்கு 80
தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும். ஐந்து அமைச்சர் பதவிகள், துணை முதல்வர்
பதவி தரப்பட வேண்டும்' என, ராகுலின் விருப்பத்தை சோனியா தெரிவித்ததாகவும்,
அதற்கு முதல்வர் எந்த பதிலும் கூறாமல் அமைதியாக இருந்தார் என்றும்
காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு மேல், தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை இருதரப்பும்
தொடர விரும்பாததால், "இரு கட்சிகளின் சார்பில் தொகுதி பங்கீடு குழு
அமைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம்' என, அவர்கள் முடிவெடுத்ததாக
கூறப்படுகிறது.சோனியாவை அவரது வீட்டில் முதல்வர் சந்தித்தபோது எடுத்த
புகைப்படங்களையும் காங்கிரஸ் வெளியிடவில்லை. கூட்டணி குறித்த கருத்துக்களை
முதல்வர் தெரிவித்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் செய்தித்
தொடர்பாளர்கள் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. முதல்வர் எதிர்பார்க்காத
வகையில், தொகுதிகள் எண்ணிக்கையை அதிகமாகவும், ஆட்சியில் பங்கும் காங்கிரஸ்
கேட்டது அவருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.சென்னையில் நாளை நடக்கவுள்ள
தி.மு.க., பொதுக்குழுவில், காங்கிரஸ் நிபந்தனை குறித்து விவாதித்து முடிவு
எடுக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.
காங்கிரஸ் நிபந்தனைக்கு தி.மு.க., செவிசாய்க்கவில்லை என்றால், ராகுல்
பார்முலாவின் படி, காங்கிரஸ் தலைமையில் மாற்று அணியை உருவாக்கவும்
திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முடிவை காங்கிரஸ் மேலிடம் பரிசீலிப்பதற்கு
தமிழக காங்கிரசாரின் நெருக்கடியும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.
தே.மு.தி.க., - பா.ம.க., மற்றும் சில சமுதாய அமைப்புகளுடன் கூட்டணி
அமைத்து போட்டியிடவும், தேர்தல் முடிவுக்கு பின் எந்த அணி ஆட்சியில் பங்கு
தருகிறதோ அந்த அணிக்கு ஆதரவு அளிக்கலாம் என்பது காங்கிரஸ் திட்டம்.
தி.மு.க.,வை பொருத்தவரை, அதிகபட்சமாக 60 தொகுதிகளை காங்கிரசுக்கு
ஒதுக்கவும், தேர்தல் முடிவுக்கு பின் ஆட்சியில் பங்கு தருவது பற்றி முடிவு
எடுக்கலாம் என பேச்சுவார்த்தை நடத்தி, தி.மு.க., - காங்கிரஸ் தொகுதி
பங்கீடுக்கு இறுதி வடிவம் கொடுக்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும்
ஓரிரு தினங்களில் கூட்டணி இழுபறி முடிவுக்கு வரும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
Read more: தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் 3வது அணி அமைக்க பரிசீலனை
Re: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்குமா? டெல்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி பரபரப்பு பேட்டி
#0- Sponsored content
Similar topics
» கூட்டணியில் இருந்து அவசரப்பட்டு விலகுவதை தி.மு.க. விரும்புவது இல்லை - கருணாநிதி பேட்டி
» தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: டெல்லியில் கருணாநிதி அறிவிப்பு
» பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி
» என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
» மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்
» தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.: டெல்லியில் கருணாநிதி அறிவிப்பு
» பிரபாகரன் எனது நண்பர்: கருணாநிதி பரபரப்பு பேட்டி
» என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
» மரண தண்டனையில் இருந்து தப்பி தாயகம் திரும்பிய இந்தியர்கள்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|