புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
26 Posts - 36%
ayyasamy ram
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
21 Posts - 29%
Dr.S.Soundarapandian
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
12 Posts - 17%
Rathinavelu
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
7 Posts - 10%
mohamed nizamudeen
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
3 Posts - 4%
Guna.D
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
mruthun
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
101 Posts - 47%
ayyasamy ram
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
7 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%
mruthun
ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_m10ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜீவகாருண்ய ஒழுக்கம்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:24 am

First topic message reminder :

சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் - முதற் பிரிவு
ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு


உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.

அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:- எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபமென்று உண்மையாக அறியவேண்டும்.

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரியவாழ்வை எதனால் அடையக்கூடுமென்று அறியவேண்டில்:- கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.

கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடுமல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வே றெந்த வழியாலும் பெறக்கூடாதென்பது எப்படி என்னில்:- அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம். சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம். இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும். வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.

அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும், அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும். சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும். ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும், பாவ மென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே என்றும் அறியப்படும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:37 am

எடுத்துக்கொண்ட தேகம் தவறினால் வேறு தேகம் எடுப்பதில்லையென்றால், முதல் சிருஷ்டி தொடங்கி இதுவரையில் அழிந்த தேகங்களுக்கு அளவில்லை. அப்படியே ஆன்மாக்களுக்கும் அளவில்லை; ஆகவே இனி ஆன்மாக்கள் தேகங்களை எடுக்காமலிருக்க வேண்டும். அப்படியில்லை; தேகங்களை எடுத்துக்கொண்டே யிருக்கிறார்கள். ஆயின் ஆன்மாக்களை நூதன நூதனமாகச் செய்து அது அதற்கு நூதன நூதனமாகத் தேகங்களை வருவிப்பதென்றால்; நூதன நூதனமாகத் தேக மாத்திரம் செய்யக்கூடும்; தேகத்துள்ளிருக்கிற ஆன்மாவை நூதனமாகச் செய்யப்படாது; ஆன்மா எக்காலத்தும் உள்ளதாய் விளங்கப்பட்டது. அது தோன்றுதலும் அழிதலுமில்லை. அதை ஆக்கவும் அழிக்கவும் படாது. ஆன்மாக்களும் குடத்தைப்போல் செய்யப்பட்ட தானால், சுக துக்கங்களை அனுபவிக்க அறியாது, புண்ணிய பாவங்களை அடைய மாட்டாது. குடம் அழிவதுபோல் அழிந்து போய்விடும். அழியுமானால், பந்த முத்திகளுமில்லை; புண்ணிய பாவங்களு மில்லை. ஆகலால் குடம் உடைகின்ற போது குடத்தினுள் இருந்த காற்றும் ஆகாயமும் உடையாமலிருப்பது சிறுவர்களுக்கும் தெரியும். ஆகலில் தேகம் அழியும் போது தேகத்தினுள் இருக்கின்ற ஆன்ம விளக்கமும் கடவுள் விளக்கமும் அழியாதென்றும், ஆன்மாக்கள் முயற்சி பேதத்தால் தேக போக பேதங்களை யடைவது உண்மை யென்றும் யுக்தியால் அறியவேண்டும்.

ஒரு தாய்தந்தைகளுக்கு ஒரு காலத்தில் இரட்டைப் பிள்ளை பிறக்கின்றது. அவற்றில் ஒரு பிள்ளை சிவந்தது. ஒரு பிள்ளை கறுத்தது. ஒரு பிள்ளை அங்கப் பழுதுள்ளது, ஒரு பிள்ளை அங்கப்பழுதில்லாதது; ஒரு பிள்ளை பால் குடிக்கின்றது, ஒரு பிள்ளை பால் குடிக்கில் சத்தி* பண்ணுகின்றது. ஒரு பிள்ளை வியாதியுள்ளது. ஒரு பிள்ளை வியாதியில்லாதது; ஒரு பிள்ளை இரண்டு வயதில் பேசுகின்றது. ஒரு பிள்ளை பேசத் தெரியாம லிருக்கின்றது. இந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு இந்த பேதம் இவ்விடத்தில் யாதொரு ஏதுக்களு மில்லாமல் வந்ததை ஊன்றி விசாரிக்கில், முன் பிறப்பில் எடுத்த தேகத்தின் கர்மமாகிய முயற்சி பேதங்களென்றும்; இந்த இரட்டைப் பிள்ளைகளுக்கு மூன்று வயதில் விளையாடும்போது தாய்தந்தைகள் தனித்தனி கொடுத்த தின்பண்டங்களை வைத்துத் தின்னுகிற தருணத்தில், இவ்விரண்டு பிள்ளைகளும் தவிர வேறு பிள்ளையொன்று வந்தால் அதைக் கண்டு இவ்விருவரில் ஒரு பிள்ளை தன் கையிலிருக்கின்ற தின்பண்டத்தைக் கொடுக்கின்றது. மற்றொரு பிள்ளை கொடுக்கப்படாதென்று தடுக்கின்றது. ஒரு பிள்ளை புத்தகத்தை எடுத்துச் சிறுவர் படிக்கின்றது போல் படிக்கின்றது, மற்றொரு பிள்ளை புத்தகத்தைப் பிடுங்கியெறிந்து படிக்கப்படாதென்று அடிக்கின்றது. ஒரு பிள்ளை பயப்படுகின்றது. மற்றொரு பிள்ளை பயப்படாம லிருக்கின்றது. இப்படியே இந்தப் பிள்ளைகளுக்குத் தயை அன்பு அறிவு செய்கை முதலியவைகள் தாய் தந்தையர்கள் கற்பியாத காலத்திற்றானே உள்ளதாகவும் இல்லதாகவும் எப்படி வந்ததென்று ஊன்றி விசாரிக்கத் தொடங்கில் இந்த இரண்டு பிள்ளைகளுக்கும் முன் பிறப்பில் எடுத்த தேகத்திலிருந்த வாசனை இந்தப் பிறப்பில் இந்தத் தேகத்தில் கற்பியாமல் வந்ததென்றும் அனுபவத்தால் கருதி யறியவேண்டும். இப்படி யறிந்தால் சீவர்களுக்கு முன்னும் பின்னும் தேகமுண்டென்பது நன்றாகத் தெரியும். இப்படி யறியமாட்டாமையால் பிறப்பில்லை என்கின்றார்களென் றறியவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:38 am

* சத்தி - வாந்தி

அன்றி, இந்தத் தூலதேகம் அழியாமலிருக்கிறபோதே சொப்பனத்தில் ஆன்மா வேறு தேகமெடுத்துப் பல பல விசித்திரங்களையனுபவிக்கின்ற தானால், இந்தத் தேகம் நீங்கும் போது வேறு தேகமெடுத்து வாசனைக் கடுத்த அனுபவங்களை அனுபவிக்கு மென்பதைச் சொல்லவேண்டுவ தில்லை. அன்றி, சித்தி விசேஷத்தால் இந்தத் தேகத்திலிருந்த ஒருவன் இந்தத் தேகத்தைவிட்டு வேறு தேகத்திற்குப் பிரவேசிக்கின்றான் என்றால், இந்தத் தேகம் அழியும்போது இதிலிருந்த ஆன்மா கன்ம பேதத்தால் வேறு தேகத்தில் பிரவேசிக்கு மென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை.

அன்றி, ஒரு பட்சியானது கால வேற்றுமையாலும் குண வேற்றுமையாலும் முன் முட்டை என்கின்ற ஒரு தேகத்திலிருந்து பின்பு குஞ்சு என்கின்ற மற்றொரு தேகத்தில் வருகிறதானால், ஆன்மாக்கள் கர்ம பேதத்தால் இந்தத் தேகத்திலிருந்து வேறு தேகத்தில் வருமென்பது சொல்லவேண்டுவதில்லை. அன்றி, ஒரு குளவியால் ஒரு கிருமி புழுவென்கின்ற தேகத்திலிருந்து குளவியென்கின்ற தேகத்தில் வருமேயானால், கருமத்தினால் ஒரு ஆன்மா ஒரு தேகத்திலிருந்து மற்றொரு தேகத்தில் வருமென்பதைச் சொல்லவேண்டுவதில்லை.

அன்றி, ஒரு ஆன்மா ஒரு பிறப்பிற்றானே சிசுதேகத்திலிருந்து பாலதேகத்திலும் பாலதேகத்திலிருந்து வாலிபதேகத்திலும் வாலிப தேகத்திலிருந்து வார்த்திப தேகத்திலும் வருமானால், அந்த ஆன்மா கன்மபேதத்தால் வேறு பிண்டதேகத்தில் வருமென்பதைச் சொல்ல வேண்டுவதில்லை. அன்றி, மந்திர தந்திர பேதத்தால் ஒரு பிறப்பிற்றானே பெண் தேகத்திலிருந்து ஆண் தேகத்திலும் ஆண்தேகத்திலிருந்து பெண்தேகத்திலும் ஆன்மாக்கள் வருமானால், கர்மபேதத்தால் வேறு தேகம் எடுக்கும் என்பது சொல்ல வேண்டுவதில்லை.**

** ச. மு. கந்தசாமி பிள்ளையவர்களின் திருவருட்பாப் பதிப்பில் (1924) இதுவரையுமே உள்ளது. இதற்கு மேல் இல்லை.

அன்றி, ஒரு தாவர தேகத்திலிருந்த ஆன்மாவானது அந்தத் தேகத்திற்றானே மரகதக்கிருமி என்கின்ற புழுதேகத்தில் வருகின்றது. அன்றி, ஓர் எறும்பானது அந்தத் தேகத்திலிருந்தே பிபீலிக பட்சி என்கின்ற தேகத்தில் வருகின்றது. அன்றி ஓர் பாம்பானது அந்தத் தேகத்திலிருந்தே சர்ப்ப பட்சியென்கின்ற வேறொரு தேகத்தில் வருகின்றது.

இப்படியே மனிதர் மிருகம் பறவை ஊர்வன நீர்வாழ்வன தாவர முதலிய அந்தந்தத் தேகங்களிலிருக்கின்ற ஆன்மாக்கள் அந்தந்தத் தேகத்திலிருந்தே வேறு தேகங்களை யெடுக்கின்றனவானால், அந்தந்தத் தேகங்களழியும்போது வேறு தேகங்க ளெடுக்குமென்பது சொல்லவேண்டுவதில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:38 am

சிலர் 'முன்தேகம் உண்டென்பது உண்மையானால், அந்தத் தேகத்தில் நீ யார்? உன் சரிதமெது? சொல்' என்கின்றார்களே; அவர் கேள்விக்கு உத்தரம் என் னென்றறிய வேண்டில்:- எழுபது வயதுள்ள ஒருவனைப் பார்த்து 'உனக்கு ஐந்து வயதில் உன்சரித்திரம் என்ன' வென்று கேட்டபோது, 'நேற்றைப் பொழுதில் நடந்த என் சரித்திரம் இன்றைப் பொழுதில் அவஸ்தையால் சொல்லத் தெரியாது விழிப்பே னென்றால், என் ஐந்து வயதின் சரித்திரத்தை எப்படிச் சொல்ல மாட்டுவேன்? நீ எப்படிக் கேட்கக்கூடும்?' என்கின்றான். ஒரு பிறப்பில் நடந்த அவனது சரித்திரங்களையே அவஸ்தை பேதங்களால் அறிந்து சொல்ல மாட்டாமல் திகைப்புண்டான தென்றால், முன் தேகத்தில் நடந்த சரித்திரங்களை அநேக அவஸ்தையில் திகைக்கின்ற நாம் எப்படியறிந்து சொல்லக் கூடும் என்பதே உத்தரம் என்றறியவேண்டும்.***

*** சென்னை சன்மார்க்க சங்கத்தின் திருவருட்பாப் பதிப்பில் இது வரையுமே உள்ளது. இதற்குமேல் ஆ. பாலகிருஷ்ணபிள்ளை பதிப்பில் மட்டுமே உள்ளவை.

சீவர்கள் முன்தேகத்திலே செய்த புண்ணிய பாவ கர்மங்கள் இந்தத் தேகத்திலும் வரும் என்பது எப்படி என்று அறிய வேண்டில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப்பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டை விட்டு வேறொரு வீட்டுக்குக் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் அந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல, ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் பாவ கர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோது அந்தப் பாவ கர்மங்கள் அந்தத் தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேருமென்றும் புண்ணிய கர்மங்களும் இப்படியே என்றும் அறியவேண்டும்.

முன்பிறப்பில் சீவகாருணிய ஒழுக்கத்தை விட்டுத் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களை இந்தப் பிறப்பில் பசி தாகம் முதலியனவற்றால் துக்கப்படச் செய்வது கடவுள் அருளாக்கினை நியதி என்றால், அந்தச் சீவர்கள் விஷயத்தில் தயவு வைத்து ஆகாரம் முதலியவை கொடுத்து அவர்கள் துக்கத்தை மாற்றுவது கடவுள் அருளாக்கினைக்கு விரோதமாகாதோ என்கின்ற சிறிய கேள்விக்கு உத்தரம் எது என்று அறிய வேண்டில்:- அரசன் தன் கட்டளைக்கு முழுதும் விரோதித்துக் கால்களுக்கு விலங்கிடப்பட்டுச் சிறைச்சாலையி லிருக்கின்ற பெரிய குற்றவாளிகளுக்கும் தன் சேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக்கின்றான். அதுபோல், கடவுள் தம் கட்டளைக்கு முழுதும் விரோதித்துப் பலவகையால் பந்தம் செய்யப்பட்டு நரகத்தில் இருக்கிற பாவிகளுக்கும் தம் பரிவார தேவர்களைக் கொண்டு ஆகாரங் கொடுப்பிக்கின்றார். அரசன் தன் கட்டளைப்படி நடவாமல் வேறுபட்ட சாதாரணக் குற்றவாளிகளைத் தன்னால் அவர்கள் பெறத்தக்க லாபத்தைப் பெறவொட்டாமல் உத்தியோகத்தினின்றும் நீக்கி, அவர்களுக்கு நல்லறிவு வருகிற நிமித்தம் அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்கு வெளிப்படுத்துகின்றான். அவர்கள் உத்தியோகம் இழந்தபடியால், சுகபோஜனம் முதலிய போகங்களையும் இழந்து ஊர்ப்புறங்களில் போய் ஆகாரம் முதலியவை குறித்து அலைந்து வருந்துகின்றார்கள். அப்போது, தயவுள்ளவர்கள் கண்டு ஆகாரம் முதலியவை கொடுக்கின்றார்கள். அதை அரசன் கண்ட காலத்திலும் கேட்டகாலத்திலும் ஆகாரம் கொடுத்தவர்களைத் தயவுள்ள நல்ல சமுசாரி என்று சந்தோஷ’த்து மேலான நிலையில் வைத்து உபசரிக்கின்றானல்லது கோபிக்கவில்லை. அதுபோல, கடவுள் தம் கட்டளைப்படி நடவாத சாதாரண குற்றமுடைய சீவர்களைத் தமது சக்தியால் அவர்கள் பெறத்தக்க இன்பங்களைப் பெற வொட்டாமல் தாம் கொடுத்த சௌக்கிய புவன போகங்களை விடுவித்து, அந்தச் சீவர்களுக்கு நல்லறிவு வருவிக்கும் நிமித்தம் அந்தத் தேகத்தினின்றும் நீக்கி வேறொரு தேகத்தில் விடுகின்றார். அந்தச் சீவர்கள் சௌக்கிய புவன போகங்களை இழந்தபடியால், சௌக்கிய போஜனம் முதலியவற்றையும் இழந்து வேறு வேறு இடங்களில் ஆகாரம் முதலியவை இல்லாமல் வருந்துகின்றபோது, தயவுள்ளவர்கள் அந்த வருத்தத்தைக் கண்டு ஆகாரம் முதலியவை கொடுக்கின்றார்கள். அப்படிக் கொடுக்கின்றவர்களை நல்ல தயவுள்ளவர்கள், மேன்மேலும் சுகத்தை அடையக் கடவர்கள் என்று சந்தோஷ’த்து மேல்நிலையில் வைத்து உபசரிப்பாரல்லது கோபிக்க மாட்டார். ஆதலால், கடவுள் அருளாக்கினைக்குச் சீவர்களிடத்தில் சீவர்கள் தயவு வைத்து உபசரிப்பதே சம்மதமென்று உண்மையறிந்து சொல்லுவதே உத்தரமென்று அறியவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:38 am

இந்தச் சீவகாருணிய ஒழுக்கத்தால் இகலோக ஒழுக்கம் விளங்குகின்றது. இல்லையாகில், இகலோக ஒழுக்கம் எவ்வளவும் விளங்க மாட்டாது. சீவகாருணியம் இல்லாதபோது அறிவும் அன்பும் தோன்றா. அவை தோன்றாதபோது கண்ணோட்டமும் ஒருமையும் உபகாரமும் விளங்கா. அவை விளங்காதபோது வலிய சீவர்களால் எளிய சீவர்கள் ஒழுக்கம் பொறாமை முதலானவையால் தடைப்பட்டு அழிந்துபோம். பின்பு வலிய சீவர்கள் ஒழுக்கங்களும், மதத்தினால் தாமச ஒழுக்கங்களாகி மாறுபட்டு அழிந்து போகும். சீவகாருணிய ஒழுக்கம் சிறிதும் இல்லாத புலி சிங்கம் முதலிய மிருகங்கள் வழங்குகின்ற காட்டில் இகலோக ஒழுக்கம் வழங்கவே இல்லை. சீவகாருணியம் இல்லாத மனிதர்கள் வழங்குமிடத்திலும் இகலோக ஒழுக்கமும் வழங்கவே மாட்டாதென்று அறியவேண்டும். பரலோக ஒழுக்கமும் சீவகாருணியத்தால் வழங்குகின்றது. அது இல்லையாயின் பரலோக ஒழுக்கமும் வழங்க மாட்டாது. சீவகாருணியம் இல்லாதபோது அருள் விளக்கம் தோன்றாது. அது தோன்றாதபோது கடவுள்நிலை கைகூடாது. அது கூடாதபோது முத்தியின்பம் ஒருவரும் அடையவே மாட்டார்கள். அடையாத பட்சத்தில் பரலோக ஒழுக்கம் வழங்கவே மாட்டா தென்று அறியவேண்டும்.

சீவகாருணிய ஒழுக்கம் மிகவும் வழங்காமையால் துஷ்டப் பிறவிகளே பெருகித் தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன. முன்தேகத்தில் சீவகாருணியம் இல்லாத பாவ சீவர்கள் எல்லாம் அவரவர் பாவச் செய்கைக்குத் தக்கபடி, சிலர் நரகவாசிகளாகவும், சிலர் சமுத்திரவாசிகளாகவும், சிலர் ஆரண்யவாசிகளாகவும், சிலர் புலி, கரடி, சிங்கம், யாளி, யானை, கடமை, கடா, பன்றி, நாய், பூனை முதலிய துஷ்ட மிருகங்களாகவும், சிலர் காக்கை கழுகு முதலிய பட்சி சண்டாளங்களாகவும், சிலர் பாம்பு தேள் முதலிய துர்ச்செந்துக்களாகவும், சிலர் முதலை சுறா முதலிய கடின செந்துக்களாகவும், சிலர் எட்டி கள்ளி முதலிய அசுத்த தாவரங்களாகவும் பிறந்திருக்கின்றார்கள். ஆகலால், தீய ஒழுக்கங்களே மிகவும் வழங்குகின்றன வென்று அறியவேண்டும்.

சீவகாருணியம் கடவுள் அருளைப் பெறுவதற்கு முக்கிய சாதனமாவதுமன்றி அந்த அருளின் ஏகதேசவிளக்கம் என்றும், சீவகாருணியம் ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் ஆகலால் அந்த இயற்கை விளக்கம் இல்லாத சீவர்களுக்குக் கடவுள்விளக்கம் அகத்திலும் புறத்திலும் வெளிப்படவே மாட்டாதென்றும் அறியவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:39 am

சீவகாருணியத்திற்கு லட்சியம் எது என்று அறியவேண்டில்:- ஆன்மாக்கள் எல்லாம் இயற்கை உண்மை ஏகதேசங்களாயும் இயற்கை விளக்கமாகிய அருள் அறிவுக்கறிவாய் விளங்குதற்கு ஒற்றுமை உரிமை இடங்களாயும் இருக்கின்றன என்றும் அந்த ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரிப்பதற்குப் பூதகாரியதேகங்களே உரிமையாகி இருக்கின்றன என்றும், அந்தத் தேகங்களில் ஆன்மாக்கள் சீவர்களாகி அதிகரியாவிடில் ஆன்மவிளக்கம் மறைபடும் என்றும், அது மறைவில் அருள் விளக்கம் வெளிப்படாதென்றும், வெளிப்படாதபோது மூடம் உண்டாகும் என்றும், அதுவே ஆன்மாக்களுக்குப் பந்தமாகும் என்றும் அது பற்றி அவசியம் பூதகாரியதேகம் வேண்டுமென்றும், பூதகாரிய தேகங்களுக்கு மாயை முதற்காரண மாதலால், அந்த மாயையின் விகற்ப ஜாலங்களாகிய பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் அந்தத் தேகங்களுக்கு அடிக்கடி அபாயங்கள் நேரிடும் என்றும், அப்படி அபாயங்கள் நேரிடாமல் கரணேந்திரிய சகாயங்களைப் பெற்ற தம் அறிவைக்கொண்டு சர்வ ஜாக்கிரதையோடு முயற்சி செய்து தடுத்துக் கொள்வதற்குத் தக்க சுதந்தரம் சீவர்களுக்கு அருளால் கொடுக்கப்பட்டதென்றும், அந்தச் சுதந்தரத்தைக் கொண்டு சீவர்கள் எல்லாம் தேகங்களிலிருந்து அபாயங்களை நீக்கி ஆன்மலாபத்தைப் பெறுவதற்கு முயற்சி செய்யக் கடவார்கள் என்றும், மேற்குறித்த பசி கொலை தாகம் பிணி ஆபத்து பயம் இன்மை இச்சை என்பவைகளால் வரும் அபாயங்களை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க சுதந்தரமில்லாமல் வருந்துகின்ற சீவர்கள் விஷயத்தில் அவை நிவர்த்தி செய்யத்தக்க சுதந்தரமுள்ள சீவர்கள் காருண்யத்தால் நிவர்த்தி செய்விக்க வேண்டும் என்றும், அப்படி நிவர்த்தி செய்விப்பதில் பசியினாலும் கொலையினாலும் வருந் துன்பங்களை நிவர்த்தி செய்விப்பது தலைமையான காருண்யம் என்றும், அது தவிர மற்றவைகளால் வருந் துன்பங்களை மாற்றுவது அபர சீவகாருணியம் என்றும், அது இவ்வுலக இன்பத்தை மாத்திரம் சிறிது உண்டு பண்ணுமென்றும், பசியினால் வருந் துன்பத்தையும் கொலையினால் வருந் துன்பத்தையும் நிவர்த்தி செய்விப்பது பரசீவகாருணியம் என்றும், அது இவ்வுலகஇன்பம் எல்லாவற்றையும் அளவிறந்த சித்தி இன்பங்களையும் எக்காலத்தும் அழியாத முத்தியின்பத்தையும் அருளால் அடைவிக்கும் என்றும், அன்னிய சீவர்களுக்கு நேரிடுகிற மேற்குறித்த அபாயங்களை நிவர்த்தி செய்விப்பதற்குத் தக்க சுதந்தரமும் அறிவும் இருந்தும் அவ்வாறு செய்யாமல் வஞ்சித்தவர்களுக்கு இவ்வுலக இன்பம் அவ்வுலக இன்பத்தோடு மோட்ச இன்பத்தை அனுபவிக்கச் சுதந்தரத்தை அடையப்படுவதில்லை என்றும், தற்காலத்தில் அனுபவிக்கின்ற புவன போக சுதந்தரங்களையும் இழந்துவிடுவார்கள் என்றும் கடவுளருளால் விதிக்கப்பட்டிருக்கின்றபடியால் அபாயங்களை நிவர்த்தி செய்து கொள்ளத் தக்க அறிவும் சுதந்தரமும் இல்லாத சீவர்கள் விஷயத்தில் அவைகளை நிவர்த்தி செய்விக்கத் தக்க அறிவும் சுதந்தரமும் உள்ளவர்கள் வஞ்சியாமல் நிவர்த்தி செய்விப்பதே சீவகாருணியத்திற்கு லக்ஷியம் என்று அறியவேண்டும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 27, 2008 1:39 am

பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது சீவகாருணியத்திற்கு லக்ஷியமாக இருக்கவும். இவ்விடத்துப் பசியினாலும் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது தலைப்படு காருணியம் என்று குறித்தது ஏன் என்று அறியவேண்டில்:- சீவகாருணிய ஒழுக்கத்தில் பரசீவகாருணிய மென்றும் அபரசீவகாருணியம் என்றும் இருவகையாம். அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணியம். மற்றவை அபரசீவகாருணியம். ஆகலில், பரசீவகாருணியம் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்று அறியவேண்டும். அன்றியும், பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குவதற்குத் தண்­ர் கொடாமலிரார்கள். தண்­ர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ர் ஏரி, குளம், கால்வாய் முதலிய இடங்களிலும் இருக்கின்றது.............


திருச்சிற்றம்பலம்
ஜீவகாருண்ய ஒழுக்கம் மூன்றாவது பிரிவு முற்றிற்று
சுத்த சன்மார்க்கத்தின் முதற் சாதனமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கம் முற்றிற்று

மூலம்:http://www.vallalarspace.com


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 11:18 pm

10 -வருடங்களுக்குப் பிறகு மீண்டும் உறவுகளின் பார்வைக்கு! (ஏதோ தேடலில் கிடைத்தது)



ஜீவகாருண்ய ஒழுக்கம் - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக