புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
52 Posts - 59%
heezulia
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10இந்தியா மிகப்பெரிய ................. Poll_m10இந்தியா மிகப்பெரிய ................. Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியா மிகப்பெரிய .................


   
   
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Mon Jan 31, 2011 7:04 pm

பினாயக் சென்னுக்கு ஆயுள் தண்டனை: கேள்விக் குறியாகிறதா இந்திய நீதித்துறை...?

- நந்தன்

ஆளும் அதிகாரவர்க்கத்தின் ஆடுகளமாகி விட்டதா....? அல்லது நடுநிலை பார்வைக் கோளாறில் பரிதவிக்கிறதா...? இந்திய நீதித்துறை என எண்ண வைத்துள்ளது பாரதீய ஜனதா கட்சி ஆட்சி நடத்தும் சத்தீஸ்கர் மாநிலத்தின் ராய்பூர் நீதிமன்றம் ஒரு மனித நேய மருத்துவருக்கு ஆயுள்தண்டனை அளித்து வழங்கிய தீர்ப்பு. பினாயக் சென் என்ற அந்த குழந்த்தைகள் நல மருத்த்துவர் செய்த ஒரே காரியம் அபலைகளுக்கு ஆதரவுக் குரல் கொடுத்ததுதுதான். இன்னமும் அப்பாவிகளாகவே வாழும் இந்தியாவின் சத்தீஸ்கர் மாநில பழங்குடி மக்களின் நலனுக்காக மருத்துவர் பினாயக் சென் மனித உரிமைப் போராளியாக மாறியதுதான் அவரைத் தீவிரவாதி என்று முத்திரை குத்தி ஆயுள்தண்டனைக் கைதியாக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டின் வேலூர் கிறீஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்ற டாக்டர் பினாய்க் சென் வறுமையில், ஏழ்மையில் வாடி வதங்கி மருத்துவ வசதி பெறமுடியாமல் தவித்த பாமர மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்து வந்ததும் இந்த சேவைக்காக எண்ணற்ற விருதுகள் பெற்றதும் அவரது சிறப்புக்கள். உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன்மன் விருது பெற்ற முதல் இந்தியர் என்பதைவிட, தெற்காசியாவிலேயே இந்த விருதை வென்ற முதல் வெற்றியாளர் என்பது பினாயக் சென்னின் கூடுதல் சிறப்பு. சத்தீஸ்கர் மாநில மக்களின் சுகாதார மற்றும் ஊட்டச் சத்து நிலையைக் கண்காணித்து நல்லதொரு ஆரோக்கிய அறிவுரையை வழங்கியது மட்டுமல்லாமல், பழங்குடி மற்றும் வறுமையில் வாழும் நபர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து மனித உரிமைப் போராளியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்டவர் பினாய்க் சென்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் இயற்கை வளங்கள், அந்த மாநில அரசின் முழு ஆதரவுடன் அந்நிய நிறுவனங்களால் நிர்மூலமாக்கப்பட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த நடவடிக்கையானது பழங்குடி மக்களின் வாழ்க்கையை வேட்டைக்காடு ஆக்கிவிடும் எனக்கூறி அதற்கு எதிராக களம் இறங்கினார்கள் மாவோயிஸ்டுகள். இதனை எதிர்கொள்ளத் திராணியற்ற அந்த மாநில பாஜக அரசு பழங்குடி மக்களிடையே ஒரு அணியை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, மாவோயிஸ்ட்களுடன் மோத விட்டது. "சல்வா ஜுடும்" என்று பெயர் சூட்டப்பட்ட இந்த கும்பல் பல்வேறு கொடுமைகளைச் செய்வதாக மனித உரிமையாளர்கள் அம்பலப்படுத்தினார்கள். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மாவோயிஸ்ட்டுகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் அபரிமிதமாக இருக்கும் இயற்கை வளங்களை அம்மநில அரசு, பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கூறுபோட்டு விற்பதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் என்று கூறிவருகிறார்கள். சதிஸ்கார் மாநில அரசும், வெளிநாட்டு நிறுவனங்களும் கூட்டடாகச் சேர்ந்து மேற்கொள்ளும் சுரண்டலுக்கு எதிராக காட்டுக்குள் இருந்து போராடுபவர்களில் முக்கியமான ஒரு தலைவர்தான் நாராயண் சான்யால் என்பவர்;. இந்த நாராயண் சான்யால் மீது நல்ல அபிப்ராயம் கொண்டவராக இருந்த டாக்டர் பினாயக் சென் சத்தீஸ்கர் மாநிலப் பழங்குடி மக்களுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளைத் வழங்கி வந்ததால், அவருடன் மிகவும் நெருக்கமானார். அதன் வெளிப்பாடு நாராயண் சான்யால், அம்மாநில அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது, உடல் நலம் குன்றி இருந்த அவருக்கு சிறைக்குள் சென்று சிகிச்சை அளித்தார் மருத்துவர் பினாயக் சென்.

மருத்துவம் பார்க்க சிறைக்குள் வந்த பினாயக் சென், வெளியே என்ன நடக்கிறது என்ற தகவலை எடுத்து வந்து நாராயண் சான்யாலுக்கு சொன்னார் - மாவோயிஸ்ட் இயக்க நடவடிக்கைகளை விவரித்தார் - அப்போது சில கடிதங்களை பினாயக் சென்னிடம் நாராயண் கொடுத்தார் - அதை அவர் வாங்கிச் சென்று பிஜு குஹாவா என்பவரிட்ம் கொடுத்தார் என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு 2007-ம் ஆண்டு மே 14 ஆம் தேதி, சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சத்தீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார் பினாயக் சென். இந்த பிஜு குஹாவா என்பவர் நாராயண் சான்யாலுக்குப் பொருளாதார ரீதியாகவும் கருத்தியல் ரீதியாகவம் வெளியில் இருந்து உதவியவர் எனத் தெரிவிக்கப்படுபவர்

கைது செய்யப்பட்ட பிநாயக் சென் மீது சதிஸக்கார் மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர் சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகளில் ஈடுப்ட்டவர் என குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. பினாயக்கை விடுதலை செய்யுமாறு இந்தியாவின் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட அவர்கள் சத்தீஸ்கர் அரசுக்கு இது தொடாபாக விளக்கம் அளிக்கமாறு அனுப்பிய நோட்டீசுக்கு நக்சல்களுடன் தொடர்புடையவர் இவர் என்று அரசு சார்பில் பதில் அனுப்பப்பட்து. இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்ட சென் நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பின் உச்சநீதிமன்றம் பிணை வழங்கியதால் 2009-இல் விடுதலை செய்யப்பட்டார். அவா மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வீட்டில் பல முறை சோதனைகள் செய்தும் வலுவான ஆவணங்களோ, சாட்சியங்களோ அரசுக்குச் சிக்கவில்லை. அதனால் வீட்டில் இருந்த பொதுவுடைமைக் கோட்பாட்டுப் புத்தகங்கள் மற்றும் சில கடிதங்களை எடுத்துச் சென்று அவற்றை மட்டுமே நீதிமன்ற ஆதாரமாக வைத்திருக்கிறார்கள் என்று மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லி வந்தார்கள்.

இந்நிலையில் பிநாயக் சென் மீதான வழக்கின் விசாரணை ராய்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 2010 டிசம்பர் 24 அன்று நடந்து முடிந்தது. டாக்டர் பினாயக் சென்னிற்கு தேசதுரோகம்(124-யு), கூட்டுச் சதி (120-டீ), சத்தீஸ்கர் சிறப்புப் பொதுப் பாதுகாப்புச் சட்டம் (8 (1)) ஆகியவற்றின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி பி.பி.வர்மா தீர்ப்பளித்தார். மேலும், மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த நாராயண சன்யால், பிஜு குஹாவா ஆகியோருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்து..

இவ்வழக்கில் பெரும்பாலான சாட்சிகள் பினாயக் சென்னிற்கு எதிராக சாட்சியம் அளிக்காத நிலையிலும்இசத்தீஸ்கர் காவல்துறையின் புனைவு நிறைந்த குற்ற அறிக்கையை ஏற்றும், சட்டத்தைச் சாராமலும் ராய்பூர் நீதிமன்றம் இந்தத் தண்டனையை வழங்கியுள்ளது. இந்திய நீதித்துறையில் நடக்கும் ஊழல்கள் பற்றி தினம் ஒரு செய்தி வெளியாகி வரும் இவ்வேளையில் இத்தீர்ப்பு இந்திய நீதி வழங்கும் முறையை மேலும் கேள்விக்குள்ளாக்குகிறது. மற்றவர்கள் போல் நகரத்தில் தொழில் செய்து வசதி வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமல்,பழங்குடியின மக்களின் நலனுக்காக கிராமங்களில் மருத்துவ சேவை புரிந்து வரும் பினாயக் சென்னிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்பதோடு கண்டனத்திற்கும் உரியது. இலட்சக்கணக்கான மக்கள் செத்துப்போன போபால் விச வாயுக்கசிவு வழக்கில் குற்றம்சாட்டப் பட்டவர்களுக்கு இரண்டு வருட சிறை. ஆனால், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் நலனுக்குச் செலவிட்டவருக்கு ஆயுள் தண்டனையா...? என்று கொந்தளித்து இருக்கிறார் பிhபல எழுத்தாழரும் சமூக ஆர்வலரமான அருந்ததி ராய்.

மகாத்மா காந்தி போன்ற தலைவர்களே தேசத்துரோகிகள் எனப் பார்க்கபப்ட்டு தண்டிக்கப்பட்டுள்ள நிலையில் பினாயக் சென்னுக்கு தண்டனை வழங்கியுள்ளது அவருக்கு பெருமைக் குறைவு இல்லை என்று எண்ண வைத்தாலும், சட்டத்தை மதித்து நடக்கும் ஒருவரை தேசதுரோகி என நீதிமன்றம் கூறியுள்ளது ஏற்புடையதல்ல. அவரது மனைவி லீனா கூறியது போல் இத்தீர்ப்பு இந்திய ஜனநாயகத்திற்கே விடப்பட்டுள்ள ஒரு சவாலாகும்.வெள்ளையர்களை எதிர்த்து சுதந்தரத்திற்காக போராடியவர்கள் மீது அடக்கு முறையை ஏவ 1898-இல் கொண்டு வரப்பட்டதே இந்திய தண்டனைச் சட்டத்தின் 124-யு என்பதும் நேரு பிரதமராக இருந்த போது இச்சட்டம் ஜனநாயக இந்தியாவிற்கு ஏற்புடையதல்ல மிகவும் ஆட்சேபகரமானது, என இந்திய பாராளுமன்றத்தில் எதிர்த்துக் கூறியதும் கவனிக்கத்தக்கது. இந்த 124-யு சட்ப்பிரிவை முக்கியமாக்கி பிநாயக் சென்னுக்கு வழங்கப்பட்ட தேசத்துரோகத் தீர்ப்பை சர்வதேச மன்னிப்பு சபை முதல் உள்ளூர் மனித உரிமை அமைப்புக்கள் வரை அனைவரும் கண்டித்துள்ளனர். புகழ் பெற்ற அறிஞர் நோம் சாம்ஸ்கி, வரலாற்றறிஞர் ரொமீலா தாப்பர், முன்னாள் நீதிபதி

ராஜேந்தர் சச்சார் உள்ளிட்டவர்களும் இத் தண்டனையை காட்டமாக எதிர்த்துள்ளனர். ஒரு நாட்டில் மனித உரிமை ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவும் வேளையில்,நீதி வேண்டும் மக்களின் கடைசி புகலிடமாக உள்ள நீதிமன்றங்களும் அவர்களுக்கு நீதி வழங்க மறுப்பது என்பது மனித உரிமையை ஒட்டு மொத்தமாக குழிதோண்டி புதைத்துவிடும் ஆபத்துள்ளது. ஒரு அரசை எதிர்த்து போராடினாலோ அல்லது குரல் கொடுத்தாலோ அவர்கள் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள், அரசை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டுகிறார்கள், தலைவர்களை கொல்வதற்கு முயற்சி செய்கிறார்கள் என்று பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி கைது செய்து சிறையில் அடைத்து முடக்கிவிட நினைப்பதை அரசுகளின் கையாலாகாத் தனமாகவே கொள்ள வேண்டும்.

மக்களுக்காக, அவர்களின் ஊட்டச்சத்துக் குறைவை ஆய்வுகள் மூலம் வெளிக் கொண்டுவந்த, ஜல்வா ஜுடும் போன்ற கொடூரங்களுக்கு எதிராக போராடிய பினாயக் சென் மீது தேசத்துரோக வழக்கு பாயக் காரணம் இது போன்ற மனிதநேயச் செயல்பாடுகள் தான் என்றால்,எது தேச பக்தி...? எது தேச துரோகம.;..?. அந்நிய நாட்டு நிறுவனங்கள் சொந்த நாட்டு கனிம வளங்களை கொள்ளையடிப்பதை அனுமதிப்பது தேச துரோகமா...? அதை எதிர்த்துப் போராடுவது தேச துரோகமா...? அப்படி போராடும் மக்களை அரசாங்கங்களே கூலிப்படைகளை அமைத்து ஆயுதங்கள் வழங்கி கொன்று குவிப்பது தேச துரோகமா...? அதை அம்பலப்படுத்திப் போராடுவது தேச துரோகமா...? எது தேசபக்தி...? எது தேச துரோகம்...? என்பது சட்த்தின் கண்களுக்கு சிலவேளை தெரியாமல் போகலாம் ஆனால் அமைதியை விரும்பும் சமாதானத்தை லிரும்பும் உலக சமுதாயம் அநீதிக்கு எதிராகவே செயல்படும்.

பினாயக்சென்னின் ஆயுள்தண்டனையை எதிர்த்து, இந்தியாவின் பிரபல சட்டமேதையும் பாஜக ஆட்சியில் மத்திய சட்ட அமைச்சராகவும் இருந்தவருமான ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் வாதாடப் போவதாக அவராகவே அறிவித்துள்ளதானது பினாயக் சென் மீதான நீதிமன்றத் தீர்ப்பில் அடங்கியள்ள (அ)நீதியை வெளிப்படுத்துவதுடன் நீதியான நீதியை பாரம்பரியம்மிக்க இந்திய நீதித்துறை வெளிப்படுத்தும் என்பதே உலகம் முழுதும் உள்ள மனிதநேய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக