புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
77 Posts - 36%
i6appar
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
4 Posts - 2%
Guna.D
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
2 Posts - 1%
prajai
புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_m10புத்திசாலி மனைவி v/s கணவன். Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்திசாலி மனைவி v/s கணவன்.


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 11:54 pm

விஜய் தொலைக்காட்சியில் - நீயா... நானா... நிகழ்ச்சி ஒன்றின் தலைப்பு இது. "புத்திசாலி மனைவி v/s கணவன்." இந்த பதிவுக்கும், அந்த நிகழ்ச்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தலைப்பு, இந்த பதிவுக்கும் பொருத்தமாக இருக்கலாம் என்பதால் தலைப்பை வைத்து கொண்டேன்.

புத்திசாலி கணவன் - மனைவி, புத்திசாலி கணவன் - புத்திசாலி மனைவி, சாமானிய கணவன் - சாமானிய மனைவி... இந்த மூன்று ஜோடிகளும் சந்திக்காத பிரச்சனைகளை எல்லாம், எழாத சிக்கல்களை எல்லாம் இந்த நான்காவது ஜோடி "புத்திசாலி மனைவி v/s கணவன்." சந்திக்கிறது. மற்ற எந்த ஜோடிகளையும் குறிப்பிடும் போதும், v/s என்று குறிப்பிடவில்லை. இந்த ஜோடிக்கு மட்டும் ஏன் v/s. என்ன காரணம். மனைவி புத்திசாலியாகவும், கணவன் சாமானியனாகவும் இருப்பதால்.

சரி. இப்படி ஜோடி அமைய பெற்றவர்கள் எல்லாம் மோதி கொண்டோ அல்லது மோதலுக்காண காரணங்கள் இருந்து கொண்டோ இருக்கும் என்று அர்த்தமா. இந்த ஜோடிகளுக்குள் மனவருத்தம் இருந்து கொண்டு தான் இருக்குமா. நான் பார்த்த பல ஜோடிகள் மோதலுக்குள்ளேயே தான் வாழந்து கொண்டிருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்னால், எங்கள் வீட்டிற்கு அருகாமையில் நடந்த ஒரு சம்பவமே, இந்த பதிவெழுத காரணம். அதை கடைசியாக சொல்லுகிறேன்.

புத்திசாலி மனைவி -கணவன் ஜோடிகளில் இரு வகைகள் உள்ளன. "நான் சாதாரணமான அறிவு பெற்றவன். என் மனைவி புத்திசாலி தான்" என்பதை நேர்மையாக ஒப்பு கொண்டு அல்லது ஏற்று கொண்டு, அதை கடுகளவு கூட பெரிது படுத்தாமல், "அவ சொல்றதை கேட்பதில் என்ன தப்பு இருக்கு" என்று யதார்த்தத்தை புரிந்து கொண்டு வாழ துவங்கினால், யாதொரு பிரச்சனையும் இராது. இது ஒரு வகை. ஆனால், இந்த மனோபாவம் அமைய பெற்ற கணவன்கள் மிக மிக குறைவே.

அடுத்த வகை... "தன் மனைவியின் புத்திசாலிசனத்தை சுத்தமாக ஏற்று கொள்ளாமலும், தானொரு புத்திசாலி இல்லை என்பதை ஏற்று கொள்ளாமலும்" இருக்கும் ரகம் மற்றொரு வகை. இவர்கள் மனதில் தான் மனைவியரின் நடத்தை குறித்து சந்தேகம் வருவது. அறிவோடு அழகும் இருந்து விட்டால், அந்த பெண்ணுக்கு வேறு வினையே இல்லை என்று சொல்லலாம்.

அப்படி தான் நடந்தது, நாமறிந்தவர்களின் வாழ்க்கை. அவர்கள் முதலில் எங்கள் தெருவில் தான் குடி இருந்தார்கள். அந்த பெண் அறிவோடும், அழகும் படைத்து இருந்தார். திருமணம் முடியும் வரை கிராமத்தில் வசித்தவர். அந்த கணவரை எனக்கு வெகு நாளாகவே தெரியும். சுய தொழில். வசதிக்கு பஞ்சமில்லை. பூர்விக சொத்து. மிக பெரிய காம்பவுண்ட் வீட்டின் மூலம் பல்லாயிரம் வாடகையாக கிடைத்தது. அப்பா தான் சொத்துகளை பராமரித்து வந்தார். கடை வைத்திருந்தார்கள். காலையில் பதினொரு மணிக்கு கடைக்கு போவார். போகும் போது, டாஸ்மாக் கடைக்கு போய் விட்டு தான் போவார்.

சில வருஷங்களுக்குள்ளாக குடும்பத்தின் நிலைமாறி சிக்கல் துவங்கியது. சில சொத்துக்கள் விற்கப்பட்டன. பணமாக, அவரவர் பங்கு பிரிக்கபட்டன. அந்த பெண்ணுக்கு புரிந்திருந்தது - தன் கணவன் புத்திசாலி இல்லை என்பது. அந்த பெண் மிக பெரிய புத்திசாலி. கிடைத்த பங்கு பணத்தை வைத்து, தங்கள் வாழ்க்கையை செப்பனிட முயற்சி கொண்டிருந்த வேளையில், தம்பதியருக்குள் மோதல் வெடித்தது. அவர் வேலைக்கே போகவில்லை. வீடு விற்று கிடைத்த பணத்தை வைத்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

எவ்வளவு காலம் சாப்பிட முடியும். அந்த பெண், ஏதேனும் தொழில் புரிய வாய்ப்பு தேடிய போது, கணவர் மனைவியை சந்தேகப்பட்டார். "தானும் புரியோஜனமில்லாமல்... பிறரையும் புரியோஜனப்பட விடாமல்"... மோதல் தான் வளர்ந்தது. "பிரச்சனைக்கு தீர்வு சொல்லாமல் அல்லது தீர்வு சொல்ல தெரியாமல்"... "நீ வெளிய போகக்கூடாது, யாரோடும் பேசக் கூடாது, எதுவும் செய்யக்கூடாது" என்றால்...

சந்தேகம் எல்லாவற்றையும் கொன்றுவிடும். சந்தோஷம், அன்பு, நம்பிக்கை என்று ஆரம்பித்து கடைசியில் தன்னையே. சரியாக இருபது தினங்களுக்கு முன்பாக, கணவன் விஷம் குடித்து விட்டான். மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனளிக்காமல் ஐந்தாவது நாள் இறந்து போனான். இரண்டு குழந்தைகள்... வயது முறையே பதினொன்று மற்றும் ஐந்து.


புத்திசாலிதனமாய் இல்லாமல் இருப்பதில் தவறே இல்லை. தான் புத்திசாலி இல்லை என்பது தெரிந்தும், அதன் பிறகும் எதுவுமே கற்காமல் இருப்பது தான் தவறு.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக