புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
25 Posts - 38%
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
4 Posts - 6%
Raji@123
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
2 Posts - 3%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
140 Posts - 38%
Dr.S.Soundarapandian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_m10ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்.....


   
   

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Jan 27, 2011 2:21 pm

First topic message reminder :

ஒரு தேசிய இனம் அடிமைப்பட்டிருக்கிறதா அல்லது ஆளும் இறையாண்மை பெற்றிருக்கிறதா என்பதை அதன் தாய்மொழி பெற்றிருக்கும் தகுதியை வைத்து அறிந்து கொள்ளலாம்.

அனைத்து நிலையிலும் அலுவல் மொழியாக அவ்வினத்தின் மொழி இருந்தால் அந்தத் தேசிய இனம் தன்னைத் தானே ஆண்டு கொள்கிறது என்று பொருள். அயல்மொழிதான் முதன்மை அலுவல் மொழியாக இருக்கும், அந்த அயல்மொழியின் தலைமைக்குக் கீழ்பட்டு சொந்த மொழி சிற்சில இடங்களில் பணிவாகத் தலைகாட்டும் என்றால் அந்த இனம் அடிமைப்பட்டிருக்கிறது என்று பொருள்.

இந்தியாவெங்கும் இந்தி கோலோச்சுகிறது. அது கொல்லைப்புற வழியாகக் கோலோச்சவில்லை. இறையாண்மையுள்ள ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதிகள் படி அது ஆட்சி புரிகிறது. தமிழ்? அந்த அரசமைப்புச் சட்டத்தின் கொல்லைப்புறத்தில் – பின்னிணைப்பு என்ற பெயரில் எட்டாவது அட்டவணையில் மொட்டையாக “மொழிகள்” என்ற தலைப்பின் கீழ் அகரவரிசைப்படி 16ஆவது இடத்தில் செருகப்பட்டுள்ளது.

அரசமைப்பு விதி 343(1)இன் படி அனைத்து இந்தியாவுக்கும் இந்தி ஆட்சி மொழி. தற்காலிகமாக ஆங்கிலம் கூடுதல் ஆட்சி மொழியாக இருக்கும்.[343(3)

இந்திய அரசு நிறுவனங்களில் ஆங்கிலம் பயன்படுத்துவதை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைக்க வேண்டும் என்கிறது அந்தச் சட்டம். [344-2(3)] இதன் பொருள் இந்தியை எந்த அளவு கூடுதலாகத் திணிக்க முடியுமோ அந்த அளவு திணிக்க வேண்டும் என்பதாகும்.

எட்டாவது அட்டவணையில் உள்ள மாநில அலுவல் மொழிகளை உயர்நீதிமன்றங்களில் வழக்காடும் மொழியாகப் பயன்படுத்த வழி கூரும் விதி 348(2). அதிலேயும் இந்திக்குத்தான் தனிச்சிறப்புரிமை. அந்த விதி இவ்வாறு கூறுகிறது:

“348(2) மேலே உள்ள உட்பிரிவு (a)யின் கிளை(1)இல் யாது கூறப்பட்டிருந்தாலும் ஒரு மாநிலத்தின் ஆளுநர், குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் இந்தி அல்லது ஏதாவதொரு மாநில அலுவல் மொழியை அம்மொழி பேசும் மாநிலத்தில் அமைந்துள்ள உயர்நீதிமன்றத்தில் பயன்படுத்த அதிகாரம் வழங்கலாம்.
ஆனால் உயர்நீதிமன்றத் தீர்ப்புகள், ஆணைகள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்”.


இவ்விதியைப் புரிந்து கொள்ள இவ்வாறு விளக்கலாம்.

குடியரசுத் தலைவரின் முன் அனுமதி பெற்று, தமிழக ஆளுநர், தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தி மொழியை அல்லது தமிழ் மொழியை வழக்காடு மொழியாக அறிவிக்கலாம்.

இந்த விதியின்படி, தமிழக உயர்நீதிமன்றத்தில் இந்தியை வழக்காடு மொழியாக அனுமதிக்குமாறு தமிழக அரசு கோரியிருந்தால் உடனடியாக அனுமதி வழக்கியிருக்கும் இந்திய அரசு. தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கேட்டதால்தான் இந்திய அரசு மறுத்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் பல்வேறு சூழ்ச்சிகளையும் மறைமுகச் சதிகளையும் உள்ளடக்கியிருக்கிறது. விதி 348(2ஐ மேம்போக்காகப் பார்த்தால், அது மாநில மொழிகளை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக்கிட வாய்ப்பளித்திருப்பது போல் தோன்றும். ஆனால் அவ்விதியிலும் இந்திக்குத்தான் முன்னுரிமை. இந்தி பேசும் மாநிலங்களில் இந்தியும் ஒரு மாநில மொழிதான். இந்தி அல்லது மாநில மொழி என்று போட வேண்டிய தேவையே இல்லை.

மாநில மொழிக்கு வாய்ப்பளிப்பது போல் காட்டிவிட்டு, இந்தியை இந்தி பேசாத மாநிலத்திலும் உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாக ஆக்கிட உறுதி அளிப்பதே 348(2) விதியின் உள்நோக்கம்.

அதனால்தான் பீகார், உத்திரபிரதேசம், மத்தியப் பிரதேசம், இராயத்தான் மாநிலங்களில் இதே 348(2) விதியைப் பயன்படுத்தி உயர்நீதிமன்ற மொழியாக இந்தியைச் செயல்படுத்திவிட்டது இந்திய அரசு.

இந்த விதியைப் பயன்படுத்தி தமிழக அரசு 2006ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழி ஆக்கிடக்கோரி இந்திய அரசுக்கு விண்ணப்பம் அனுப்பியது. ஓராண்டுக்குப் பின் அம்மனுவை இந்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. குடியரசுத் தலைவராக அப்போதிருந்த முனைவர் அப்துல் கலாம் பார்வைக்கே அந்த விண்ணப்பத்தை அனுப்பாமல் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.

குடியரசுத் தலைவர் அம்மனுவைத் திருப்பி அனுப்பிவிட்டதாக இந்திய அரசு அதிகாரிகள் அறிவித்தனர். அச்செய்தியை ஏடுகளில் பார்த்த அப்துல்கலாம் தம் பார்வைக்கே அம்மனு வரவில்லை என்று தம் செயலாளர் மூலம் அறிக்கை கொடுத்தார்.

மீண்டும் தமிழக அரசு விண்ணப்பம் போட்டுள்ளது. “மேற்கு வங்காளத்தில் வங்க மொழியை உயர்நீதிமன்ற வழக்காடு மொழியாகக் கேட்டார்கள். அக்கோரிக்கையை ஏற்கவில்லை. எனவே தமிழகத்தின் கோரிக்கையையும் ஏற்க முடியாது” என்று இந்திய அரசு கூறுயுள்ளது.

வங்க மொழியை ஏன் ஏற்கவில்லை? அதற்கான அரசமைப்புச் சட்டக் காரணம் என்ன? மேற்கு வங்கத்தைக் காரணம் காட்டி தமிழகத்திற்கு மறுப்பதற்கு அரசமைப்பில் ஏதாவது விதி இருக்கிறதா? இல்லை; இந்திய ஆளும் வர்க்கத்தின் சூதுதான் இருக்கிறது; ஆதிக்க இனத்திமிர்தான் இருக்கிறது.

இதே 348(2) விதியைப் பயன்படுத்தித்தானே மேற்சொன்ன நான்கு மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்காடு மொழி என்ற தகுதியை இந்திக்கு வழங்கியிருக்கிறார்கள்.

உயர்நிதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அனுமதிக்கக் கோரி மதுரையில் உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் ஆறு வழக்கறிஞ்சர்கள் 9.6.2010 முதல் சாகும் வரை பட்டினிப் போராட்டம் தொடங்கினர். அக்கோரிக்கையை ஆதரித்து சென்னையிலும் ஏழு வழக்கறிஞர்கள் காலவரம்பற்ற உண்ணாப் போராட்டம் தொடங்கினர். இரு இடங்களிலும் வழக்கறிஞர்கள் தளைப்படுத்தப்பட்டனர். சிறையிலும் உண்ணாப் போராட்டத்தை அவர்கள் தொடர்ந்தனர். 21.06.2010 முதல் தமிழில் வழக்காட வாய்மொழி வாக்குறுதி அளித்தார் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி திரு.இக்பால்.

ஆனால் இந்திய அரசு அசையவில்லை. தமிழக முதல்வர் வெற்று வேண்டுகோளோடு தம் கடமையை முடித்துக் கொண்டார். தமிழக அரசு அனுப்பிய விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்று தோண்டி துருவி செய்திகள் வெளியிட்டன ஏடுகள்.

உயர்நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட அனுமதி கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் முதலில் அன்றைய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, கே.யி.பாலகிருட்டிணன்(தற்போது கையூட்டு மற்றும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதற்காக விசாரணையில் இருப்பவர்) கருத்துரைக்கு அனுப்பப்பட்டது. அவர், மாநில மொழியில்(தமிழில்) வழக்காட அனுமதிக்கக் கூடாது. எல்லா மாநிலமும் அதே போல் உரிமை கேட்கும். அப்படிச் செய்தால் அது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஆபத்தாகும். இந்தியா முழுவதும் நீதித்துறை ஒரே சீராக இருப்பதைப் பாதிக்கும் என்று கூறினார்.

பிறகு, சட்ட அமைச்சகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பியுள்ளார்கள்.

தலைமை நீதிபதியின் கருத்தைக் கேட்க வேண்டிய தேவையே இல்லை. அதே போல் உள்துறை அமைச்சகத்திற்கும் விதி 348(2)க்கும் என்ன தொடர்பிருக்கிறது? ஒன்றுமில்லை.

காலம் கடத்தி, கைவிரிப்பதற்காக ஏகாதிபத்திய மனங்கொண்ட ஆட்சியாளர்கள் ‘அடிமைகளின் மொழியான தமிழுக்கு அரியணையா’ என்ற எண்ணத்தில் சூழ்ச்சி செய்கிறார்கள். சுற்றி அடிக்கிறார்கள்.

இதே ஏகாதிபத்திய அரசு இந்தியில் அரசமைப்புச் சட்டத்தின் அதிகாரம் படைத்த மொழியாக்கத்தை வெளியிட 1988இல் விதி 394A என்ற சட்டதிருத்தத்தை நிறைவேற்றியுள்ளது. இவ்விதியின் படி இன்றைக்கே உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் ஆகியவற்றில் இந்தியில் தீர்ப்பு எழுதினால் அதைச் செல்லாது என்று கூற முடியாது.

தமிழினம் தில்லிக்கு காலணியாக அடிமைப்பட்டிருக்கிறது என்பதற்கான சான்றுகள்தாம் மேற்சொன்னவை அனைத்தும்.

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கடும் மொழியாக, தீர்ப்பெழுதும் மொழியாகக் கொண்டு வரத் தொடர்ந்து போராடுவோம். அதே வேளை இந்திய ஏகாதிபத்தியத்தின் காலணியத் தளைகளிலிருந்து தமிழ்த் தேசம் விடுபடுவதற்கான போராட்டத்தை விரைவு படுத்துவோம்!


nan.thiru இந்த பதிவை விரும்பியுள்ளார்


கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 03, 2011 5:42 pm

இல்லை இப்பகூட நீங்க தப்பான ஒரு வ்ம்சத்தாலே ஆளப்படுகிரீர்கள் ,அது
காந்தி என இப்பவும் பின்னினைக்கிரார்கள் .சோனியாவின் கணவரா காந்தி ?ராகுலின் அப்பனா ?அல்லது வதேராவின் பாட்டனா ?இல்லையே மகாத்மா காந்தி இவர்களுக்கு சொந்தமில்லையே ? எப்படி இருக்கென்றால் மகரஜோதி கதைபோல நாங்கள் மனிதர்கள் ஜோதியினை ஏற்றுவதை பிரச்சாரப்படுத்தமாட்டோம் .ஆனால் நீங்கள் அது இறைவன் என நினைக்கலாம்
இந்திய மக்களின் சுகந்திர உணர்வின் உந்துதலாலும் அவர்களது ஆயுதப்போராட்ட முன்னேடுப்புகளாலும் தான் ஆங்கிலேயன் பயந்தும்
இரண்டாம் உலகப்போர் அழிவுகளும் தான் சுகந்திரத்தை பெற்று தந்தன .ஆனால் காந்தியின் வழியினை நான் குறைகூறவில்லை .
சரித்திரம் பலம் உள்ளவனது கதையினை தான் நம்பவைக்கும் அது தான் சரித்திரமும் கூட ...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Feb 03, 2011 7:19 pm

ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 230655 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 56667 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 56667 ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 56667
kannan3536 wrote:இல்லை இப்பகூட நீங்க தப்பான ஒரு வ்ம்சத்தாலே ஆளப்படுகிரீர்கள் ,அது
காந்தி என இப்பவும் பின்னினைக்கிரார்கள் .சோனியாவின் கணவரா காந்தி ?ராகுலின் அப்பனா ?அல்லது வதேராவின் பாட்டனா ?இல்லையே மகாத்மா காந்தி இவர்களுக்கு சொந்தமில்லையே ? எப்படி இருக்கென்றால் மகரஜோதி கதைபோல நாங்கள் மனிதர்கள் ஜோதியினை ஏற்றுவதை பிரச்சாரப்படுத்தமாட்டோம் .ஆனால் நீங்கள் அது இறைவன் என நினைக்கலாம்
இந்திய மக்களின் சுகந்திர உணர்வின் உந்துதலாலும் அவர்களது ஆயுதப்போராட்ட முன்னேடுப்புகளாலும் தான் ஆங்கிலேயன் பயந்தும்
இரண்டாம் உலகப்போர் அழிவுகளும் தான் சுகந்திரத்தை பெற்று தந்தன .ஆனால் காந்தியின் வழியினை நான் குறைகூறவில்லை .
சரித்திரம் பலம் உள்ளவனது கதையினை தான் நம்பவைக்கும் அது தான் சரித்திரமும் கூட ...


நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon Feb 14, 2011 11:24 pm

இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது. அதற்கு காரணம் காந்தி அல்ல. காந்தியைப் போல ஒரு சகுனியை எங்கும் காண முடியாது. உங்களுக்கு புரியவேண்டும் என்றால் அம்பேத்கார் படம் வெளிவந்துள்ளது. அதில் காந்தியின் தில்லாலங்கடி வேலைகளில் பல்வற்றை வெட்டிவிட்டு சிலவற்றை மட்டும் காட்டியுள்ளனர். அதையாவது ஒருமுறை பாருங்கள். மேலும் இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், சுபாசின் இந்திய இராணுவப் படையினை எதிர்கொள்ள முடியாமலுமே இந்த இந்திய பிராந்தியத்திற்கு விடுதலை வழங்கப்பட்டது. காந்தியின் எந்த பராக்கரமங்களுக்கும் அஞ்சி இங்கிலாந்து ஓடவில்லை.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 15, 2011 11:07 am

இருபதாம் நூற்றாண்டின் உலகின் தலைசிறந்த தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அமெரிக்க அதிபர் ஒசாமா எங்கு சென்றாலும் காந்தி புகழ் பாடுகிறார். மலேசியாவில் போராட்டம் செய்யும் இந்தியர்கள் கையில் காந்தியின் புகைப்படம்.

ஆனால் நீங்கள் இங்கு கூறியுள்ளது காந்தியைச் சிறுமைப்படுத்தவில்லை, உங்களை நீங்களே சிறுமைப்படுத்திக் கொண்டுள்ளீர்கள்.

நீங்கள் ஒரு மருத்துவர், உலக ஞானம் நிறைந்திருக்கும் என எண்ணுகிறேன். உங்கள் எண்ணங்களை நல்வழிப்படுத்துங்கள். மற்றவர்களைக் குறை கூறுவதை நிறுத்தி உங்களால் இந்தச் சமுதாயத்திற்கு என்ன செய்ய முடியும் என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படுங்கள்.

நாடென்ன செய்தது உனக்கு என்பதைவிட, நீயென்ன செய்தாய் நாட்டிற்கு என்பதே முக்கியம் என்பதுபோல், வளரும் தலைமுறைக்கு நல்ல கருத்துக்களை அளிக்கும் படைப்புக்களுக்கு முன்னுரிமை தாருங்கள்.

மற்றவர்மீது குறைகள் கண்டுபிடிப்பது எளிது, குறைகளில்லாதவனாக வாழ்ந்து காட்டுவதுதான் கடினம்.



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Tue Feb 15, 2011 4:20 pm

சிவா அண்ணா .உண்மையில் காந்தி இந்திய விடுதலைக்கு பங்காற்றி இருக்கிறார் ,ஆனால் இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு .வரலாற்றாசிரியர்கள் மற்றும் காந்தியின் காக்கா பிடிப்பாளர்கள் (இப்போ கருணாநிதிக்கு அருகில் உள்ளவர்கள் போல )அல்லது விசுவாசிகள் .அதனை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர் .ஏன் இன்றுவரை சுபாஷின் இராணுவத்தில் இருந்தவர்களை இந்திய அரசு பெருமெடுப்பில் கெளரவித்துள்ளதா ?இல்லை அவர்கள் இந்த தேசத்தை எப்படியாவது ஒன்றாக வைத்திருக்க ஆளும் வர்க்கம் விரும்புகிறது .உண்மை அது தான் .நீங்கள் பாருங்க எந்தனாட்டிலாவது இப்படி இலவசங்கள் வழங்க ஊக்கப்படுத்துகிறார்களா

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Feb 17, 2011 12:20 am

சிவா அவர்களே. இந்திய ஆளும் அரசுகள் காந்தியை வைத்து அரசியல் நடத்துகிறது. எங்கு பார்த்தாலும் காந்தியைப் பற்றித்தான் பாடங்கள் இருக்கும். நேதாஜி பற்றியோ, பகத்சிங் பற்றியோ, சேகுவேரா பற்றியோ எங்கும் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரிரு பக்கங்கள் மட்டுமே இருக்கும். காரணம் இந்திய மக்கள் அனைத்து அடக்குமுறைகளையும் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்த்து நிற்க கூடாது. அதனால் தான் இன்று மாவோயிட்டுகள் தீவீரவாதிகளாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்திய அரசால்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 12:27 am

kannan3536 wrote:சிவா அண்ணா .உண்மையில் காந்தி இந்திய விடுதலைக்கு பங்காற்றி இருக்கிறார் ,ஆனால் இந்தியாவுக்கு சுகந்திரம் கிடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு .வரலாற்றாசிரியர்கள் மற்றும் காந்தியின் காக்கா பிடிப்பாளர்கள் (இப்போ கருணாநிதிக்கு அருகில் உள்ளவர்கள் போல )அல்லது விசுவாசிகள் .அதனை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர் .ஏன் இன்றுவரை சுபாஷின் இராணுவத்தில் இருந்தவர்களை இந்திய அரசு பெருமெடுப்பில் கெளரவித்துள்ளதா ?இல்லை அவர்கள் இந்த தேசத்தை எப்படியாவது ஒன்றாக வைத்திருக்க ஆளும் வர்க்கம் விரும்புகிறது .உண்மை அது தான் .நீங்கள் பாருங்க எந்தனாட்டிலாவது இப்படி இலவசங்கள் வழங்க ஊக்கப்படுத்துகிறார்களா

மகாத்மா காந்தி மட்டுமே இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கித் தந்தார் என யாருமே கூறவில்லை கண்ணன்! இந்திய சுதந்திரப் போராட்டவாதிகளில் இவரும் ஒருவர்..!

இலவசங்களை மக்கள் ஆதரிக்கும்வரை, இதுபோன்ற நாட்டைப் பற்றிக் கவலைப்படாத அரசியல்வாதிகளை ஒன்றும் செய்ய முடியாது! இவர்கள் அளிக்கும் இலவசங்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும். ஆனால் மக்கள்தான் பல மணிநேரம் வரிசையில் நின்றாவது வாங்க வேண்டும் என்று காத்திருக்கிறார்களே? ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 128872



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 12:29 am

நிசாந்தன் wrote:சிவா அவர்களே. இந்திய ஆளும் அரசுகள் காந்தியை வைத்து அரசியல் நடத்துகிறது. எங்கு பார்த்தாலும் காந்தியைப் பற்றித்தான் பாடங்கள் இருக்கும். நேதாஜி பற்றியோ, பகத்சிங் பற்றியோ, சேகுவேரா பற்றியோ எங்கும் இருக்காது. அப்படியே இருந்தாலும் ஒரிரு பக்கங்கள் மட்டுமே இருக்கும். காரணம் இந்திய மக்கள் அனைத்து அடக்குமுறைகளையும் அமைதியாக ஏற்றுக்கொள்ள வேண்டும். எதிர்த்து நிற்க கூடாது. அதனால் தான் இன்று மாவோயிட்டுகள் தீவீரவாதிகளாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள் இந்திய அரசால்.

காந்தியை வைத்து அரசியல் நடத்துகிறது என்றால், மக்கள் அனைவருக்கும் அறிந்த தலைவராக காந்தி உருவெடுத்துள்ளதுதான் காரணம்! இன்னும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி என்று சொல்வதில்லையா? அதுபோலத்தான்!



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Thu Feb 17, 2011 9:36 am

காந்தி மக்கள் அறிந்த தலைவராக உருவாக்கப்பட்டார் ?இன்று கலைஞர் போல ?மக்களின் அறியாமையை பாருங்கள் இந்திரா ,ராஜீவ் ,சோனியா ,ராகுல் ,பிரியங்கா ,இவர்கள் எல்லாம் பின்னுக்கு எதுக்கு காந்தி சேர்க்கிறார்கள் .?அறிவாளிகள் மக்களை விழிப்புணர்வு ஊட்டுவதில்லை பாமரமக்கள் இவர்கள் எதோ காந்தி குடும்பத்தவர் என கருதுவர் என்பதால் தானே ?அது தானே உண்மையும் கூட ..
எங்களைப்போன்றவர்களுக்கு ,ஒரு கடமை இருக்கிறதல்லவா ?எம்மால் முடிந்தளவு விழிப்புணர்வை ஏற்படுத்த முடியுமல்லவா ?
உங்களை எங்களை போன்றவர்களால் அரசியல் வாதிகளை துகிலுரித்து காட்ட முடியுமல்லவா ?அந்த சிறு பணியினை ஈகரை முலமாக நாம் செய்வோமாக ?
நான் பார்த்தவரை இந்திய மத்திய மாநில அரசியல் வாதிகளை பாருங்கள் ,இவர்கள் மட்டும் தான் சக்கர நாற்காலியிலும் தவண்டும் மக்களுக்கு சேவை செய்கின்றனர் ?இப்போ அப்துல் கலாம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் ஒருவேளை காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டிருக்கும் ....மதவாத சாயம் பூசப்பட்ட பி‌ஜெ‌பி கூட இஸ்லாம் மதம் சேர்ந்தவரை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்தது ,ஆனால் காங்கிரஸ் பெண்களை முன்னிலைப்படுத்துவதாக கூறி பூம் பூம் மாடுகளை அல்லவா பதவிக்கு கொண்டு வருகின்றனர் ,இவர்கள் என்ன கதைத்தார்கள் இதுவரை ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 17, 2011 9:54 am

அரசியல்வாதிகளுக்கு எதிராகவும், மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் படைப்புகளுக்கும் என்றுமே நம் தளத்தில் ஆதரவு உண்டு. ஆனால் அந்தப் படைப்புகள் நாமும் இந்திய மண்ணில் பிறந்தவர்கள் என்ற நோக்குடன் இருக்க வேண்டுமேயொழிய, ஏதோ நாம் வேறு நாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் போல், நம் இந்திய தேசத்தைக் குறைகூறுவதாக இருக்கக் கூடாது.

ரஷ்ய கூட்டரசு சிதைந்ததில் இருந்து அந்த நாட்டின் பொருளாதாரம் பாதாளத்தில் கிடப்பதை நாம் காண்கிறோம். இன்னும் 50 வருடங்கள் ஆனால் கூட ரஷ்யாவால் முன்னேற முடியாத வீழ்ச்சி அது! அதுபோல் இந்தியாவில் உள்ள மாநிலங்களின் பிரிவினையைத் தூண்டும் சக்திகளை அழிக்க வேண்டும். இல்லயென்றால் இந்திய மாநிலங்கள் சிதறும். அவ்வாறு ஒரு நிகழ்வு ஏற்பட்டால் இந்தியாவிற்கு ரஷ்யாவின் நிலை வராது, மியான்மரை விட அடிமட்டத்திற்குச் சென்றுவிடும்.

எனவே உங்கள் கருத்துக்கள் எப்படி இருந்தாலும், அது இந்திய இறையாண்மையைப் பாதிக்காத வகையிலும், மக்களுக்கு விழிப்புணர்வு தரும் கருத்துக்களாகவும் இருத்தல் அவசியம்.

மாணவர் மத்தியில் ஏற்படும் விழிப்புணர்வுதான் நாட்டைக் காக்கும். எம் வருங்கால சமுதாயம் புரட்சிகரமான, விழிப்புணர்வான சமுதாயமாக உருவாகும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்து செயல்பட்டு அரசியல் சாக்கடையைச் சுத்தம் செய்வோம்!



ஆளும் மொழி இந்தி..... அடிமை மொழி தமிழ்..... - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக