புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
75 Posts - 58%
heezulia
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
37 Posts - 29%
mohamed nizamudeen
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
3 Posts - 2%
Abiraj_26
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
Guna.D
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
70 Posts - 58%
heezulia
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
35 Posts - 29%
mohamed nizamudeen
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
5 Posts - 4%
dhilipdsp
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
குடியரசு தினம் -18+  Poll_c10குடியரசு தினம் -18+  Poll_m10குடியரசு தினம் -18+  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடியரசு தினம் -18+


   
   
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 1:39 pm

குடியரசு தினம் -18+  Republic-day-flag-630
ஆளுநர்
கொடியேற்றம்
பாதுகாப்பு
அணிவகுப்பு
தலைவர்கள்
வாழ்த்து
குடியரசு தின
கொண்டாட்டங்கள்
தினசரிகளின் தலைப்போடு
கடந்து விட்டிருந்தது
மிட்டாயோடு
விடுமுறையோடு
கடந்து போகிறது
சிறார்களின்
குடியரசு
தொலைக்காட்சி
சிறப்பு நிகழ்வுகளில்
சவமாகிறது
பெரியவர்களின்
குடியரசு
எல்லாவற்றிர்க்கும்
சாட்சியாய்
பறக்கிறது கொடி
அந்தி முடியும் முன்
மடித்து வைக்கப்படும்
பொழுதை எண்ணி
நானும்
ஒன்றும் புடுங்க வில்லை
என் இனத்துக்கும்
தேசத்துக்கும்




உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Jan 27, 2011 2:09 pm

நெத்தியடி கவிதை மணி.நாம் நாட்டுல பாதி பேருக்கு குடியரசு தினம் எதுக்கு கொண்டாடுரோம்ன்னு தெரியாது என்பது வேதனையான விஷயம்



குடியரசு தினம் -18+  Uகுடியரசு தினம் -18+  Dகுடியரசு தினம் -18+  Aகுடியரசு தினம் -18+  Yகுடியரசு தினம் -18+  Aகுடியரசு தினம் -18+  Sகுடியரசு தினம் -18+  Uகுடியரசு தினம் -18+  Dகுடியரசு தினம் -18+  Hகுடியரசு தினம் -18+  A
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 2:12 pm

ஆமாம் அக்கா வெகுகாலம் வரயில் குடியரசு தினம் என்பதற்க்கு காரணமும் அர்த்தமும் தெரியாமல் இருந்தேன் சமீபத்தில் தான் அறிந்து கொண்டேன் அதன் வரலாறை

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Jan 27, 2011 2:14 pm

அதிகாரப் பூர்வமாக ஆண்டுக்கு இருமுறை கோலாகலமாக தேசியக் கொடி ஏற்றி இறக்கப்படுகின்றது.
உலக நாடுகள் எல்லாம் ஒருமுறை, அதாவது அந்தந்த நாடு சுதந்திரம் பெற்ற பொன் நாளை மட்டும் கொண்டாடி மகிழ்கின்ற நிலைதனையும், ஆனால் இந்தியத் திருநாட்டில் மட்டும் ... சுதந்திர தினம் என்றும், குடியரசு தினம் என்றும் இரு நாட்களாகக் கொண்டாடுகிற நிலைதனையும் பெற்றிருக்கிறோம் என்பதை எல்லோரும் அறிவோம்.

ஆனால், ஏன்? இப்படி இரண்டு நாட்கள் கொண்டாட வேண்டும்?

எதற்காக?எப்போதிருந்து என்பதற்கான விடை காண இன்றைய இளைய சமுதாயம் முயன்றதுண்டா?

அவர்களுக்கு அதற்கு நேரமோ, அவகாசமோ இதற்கெல்லாம் இல்லைதான்!

அரசியல் கட்சிகள், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சேவைச் சங்கங்கள்...... என்று குடியரசு தினத்தன்று மூவர்ணக் கொடியில் வண்ணப் பூக்களைக் கொட்டி கெட்டியாக கயிற்றால் கட்டி முடிச்சுப் போட்டு கொடிக் கம்பத்தோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டி வைத்திருப்பார்கள். அதை அவிழ்த்து அந்தக் கொடிக் கம்பத்தின் உச்சி முகர வைத்து ஒரே ஒரு உதறலில் முடிச்சு அவிழ்க்கப்பட்டு மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் பூக்களுக்கு விடுதலை அளித்து கொடி....கயிறை விட்டுப் போய் விடாமல் காற்றில் படபடவென பறக்க வைக்க ஒரு வி.ஐ.பி.! முப்படை அணி வகுப்பு! மாநிலங்கள் கண்ட சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணி வகுப்பு!

மாநிலங்களில், மாவட்டங்கள் சாதனை விளக்க ஊர்தி அலங்கார அணிவகுப்பு, சிறந்த சேவை புரிந்தோர்க்கு பதக்கங்கள், விருதுகள் கெளரவிப்புகள் என்று இந்தியத் துணைக் கண்டமே விழாக் கோலமாயிருக்கும்!

பட்டொளி வீசிப் பறக்கும் மணிக்கொடி! வண்ணமயமாய் மூவர்ணக்கொடி காற்றில் படபடக்கிறது.

பள்ளிச் சிறுவர்களுக்கு குதூகலம். வாயில் இனிக்கும் மிட்டாய். அதைவிட இனிப்பு....

இன்று பள்ளி விடுமுறையல்லவா?

கூடல்நகரில்.....!

நள்ளிரவு! அந்த நடுச்சாம வேளையில் பெயர் தெரியாத சில இளைஞர்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஊரே உறங்கிக் கொண்டிருக்கையில்.....இவர்களின் கண்களும் காதுகளும் விழித்துக் கொண்டிருக்க, அந்த மையிருட்டில் அவர்கள் உருவமே அவர்களுக்குத் தெரியாத நேரத்தில் அவர்கள் பேசிக் கொண்டது வேறு எவருக்கும் கேட்டிருக்க வாய்ப்பில்லை! பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞர்களிடம் ஒருவித துறுதுறுப்பு; ஒருவித பரபரப்பு தென்பட்டதை அந்தக் காரிருள் மறைத்துக் கொண்டது.

அவர்கள் பேச்சு ஒருவித முடிவுக்கு வந்ததற்கு அடையாளமாக எல்லோரின் தலையும் சம்மதம் என்பது போல ஆடி அசைய அந்த இளைஞர் குழுவின் தலைவன் எதையோ எடுத்து ஒவ்வொருவருக்கும் விநியோகிக்கின்றான்.

எல்லோரும் பெற்றுக் கொண்ட அடுத்த வினாடி....

அரைகால் டிரவுசர் அணிந்த இளைஞர்கள் எதையோ கைகளில் மறைத்துப் பிடித்துக் கொண்டு கால்கள் பின்னந்தலையில் இடிக்க ஓட்டமாய் ஓடி வருகின்றனர்!

அவர்கள் ஓடி வந்து நின்ற இடம் மதுரை மீனாட்சியம்மன் கோவில்.

கோவில் நடை திறக்கப்படவில்லை. திரைப்படக் காட்சி போல அடுத்தடுத்த காட்சிகள் அங்கு அரங்கேறுகிறது. மீனாட்சி அம்மன் கோவில் மதில்சுவரை ஒட்டி ஒரு சிறுவன் குனிந்துகொள்ள அவன் முதுகில் மற்றவன், அவன் முதுகில் இன்னொருவன் என்று மளமளவென்று ஒருவரை ஒருவர் ஏணியாக்கி மேலேறுகின்றனர்.

அங்கிருந்து கோபுரத்துக்குத் தாவுகின்றனர். கிடுகிடுவென கோபுரத்தில் செதுக்கியிருந்த சிலைகளைப் பற்றி தங்கள் கால்களில் மிதித்து ஏறி முன்னேறுகின்றனர். கோபுர உச்சியை அடைந்ததும் தாங்கள் கையோடு கொண்டு வந்ததை அங்கிருந்த கலசங்களில் கட்டுகின்றனர்.

கட்டி முடித்து விட்டு கீழே பார்க்கின்றனர்; தலை சுற்றிப் போகிறார்கள்; ஆஹா! இவ்வளவு உயரத்திலா இருக்கிறோம், என்று எண்ணுகிறார்கள்.

விடிந்தும் விடியாத காலைப் பொழுது; தூரத்தில் வருகிறவர் முகம் தெரியாத இருட்டு!

கூடல் மாநகராம் மதுரை மாநகர வீதிகளில் பெண்கள் தங்கள் முற்றத்தை பெருக்கி சாணம் தெளித்து மாக்கோலம் இட்டு, பசுஞ்சாணத்தை உருண்டை பிடித்து அதன் தலையில் இதழ் விரிக்காத பூசணிப் பூவை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிற காலை வேளை!

பால், தயிர், மோர் விற்கும் பெண்கள்! வீட்டுக்கு தண்ணீர் சுமக்கும் பெண்கள்! காலைக் கடன்களை முடிக்க வீட்டிலிருந்து வெளியேறும் ஆண்கள்! அத்தனை பேர்களின் கண்களும் மீனாட்சி அம்மன் கோவில் உச்சியைத் தரிசிக்கிறது!

ஆஹா! அடைந்து விட்டோமா!?

நாம் அந்தச் சுதந்திரத்தை என்று வியப்பு மேலோங்கப் பார்த்து பரவசப்படுகின்றனர். அன்றைக்கு அதிகாலையில் அவர்களின் கண்களுக்கு காட்சியளித்தது மீனாட்சி அம்மன் கோவில் கலசங்களில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்த இந்திய தேசியக் கொடிதான் அது! அதைத்தான் அந்தச் சிறுவர்கள் அங்கே... அந்த உச்சிக்கு எடுத்துச் சென்று கூடல் நகருக்கே தெரிய வேண்டுமென்று கட்டிப் பறக்க விட்டிருந்தார்கள்!

அவர்கள் அப்படிச் செய்யக் காரணம் காந்திஜி அவர்கள் நாட்டு மக்களுக்கு விடுத்திருந்த கட்டளை அது!

குடியரசு தினம் மலர்ந்த காரணம்...

1929-ம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ''பூரணசுயராச்சியமே நமது நாட்டின் உடனடியான இலட்சியம்'' என்ற தீர்மானம் நிறைவேறிற்று. அதனை செயல்படுத்த 'எங்கு, எப்போது, எவ்வாறு அகிம்சாபூர்வமான வரி கொடா இயக்கத்தைத் திரும்பவும் தொடரலாம் என்கிற விவரங்களை காந்திஜி அவர்களே நிர்ணயித்து அறிவிப்பார்' என்ற ஒருமனதான மற்றொரு தீர்மானத்தின்படி காந்திஜிக்குக் காங்கிரஸ் மகாசபை முழு அதிகாரம் வழங்கியது.

அதே நேரத்தில் நாட்டில் நிலவிய பொருளாதார மந்த நிலையும், அதன் விளைவாகப் பெருகி விட்ட வறுமையும், மக்களிடையே கொந்தளித்த தேசிய ஆர்வமும் ஒருங்கே திரிந்து, நாட்டில் ஆங்காங்கே தீவிரவாதக் குழுவினர் அரசுக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். அச்சூழ்நிலையில் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காங்கிரஸ் துவக்கி வைத்தால் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடையக் கூடிய அபாயத்தை காந்திஜி உணர்ந்தார். ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சைப் பாதையில் திசை திருப்ப எவ்வகையான இயக்கத்தை மேற்கொள்வது என்பது குறித்து காந்திஜி தீவிர சிந்தனையில் ஆழ்ந்தார்.

1930,ஜனவரி 26ம் தேதி- முதல் குடியரசு தினம்!

முதற் கட்டமாக, நாடு முழுவதும் ஜனவரி 26-ம் தேதி (1930) அன்று அமைதியாகச் சுதந்திர தினம் கொண்டாட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். அந்த நாள் இந்தியா சுதந்திரம் பெற்ற பின் குடியரசு தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அன்றைய தினம் நகர்ப் புறங்களிலும் கிராமங்களிலும் உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் கூட்டம் கூட்டி, காந்திஜி வழங்கிய சுதந்திர தினப் பிரக்ஞையை எடுத்துரைத்தனர்.

ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்கொண்ட அந்த உறுதி மொழியின் வாசகம் இதுதான்.

''நமது தாய் நாட்டிற்கு நான்கு விதத்திலும் கேடு விளைவித்து வரும் ஓர் அரசாட்சிக்கு அடங்கி நடப்பது, மனிதனுக்கும் இறைவனுக்கும் செய்யும் துரோகமே ஆகும்.'' ஆங்கிலேய ஆட்சியின் கீழ், நாட்டின் பொருளாதாரம், அரசியல், கலாச்சாரம் மற்றும் ஆன்மீகம் ஆகிய நான்கு வித சீரழிவைக் குறிப்பதாக அவ்வாசகம் அமைந்திருந்தது.

அன்று, அதாவது சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள் தான்...சுதந்திரம் பெற்ற பின் அந்த நாளை குடியரசு தினமாகக் கொண்டாட நேரு அமைச்சரவை முடிவு செய்து அறிவித்து செயல்படுத்தியது 1948ல்! இதுதான் குடியரசு நாள் தோன்றிய வரலாறு.

ஓங்கி வளர்ந்த கம்பம்தனில் பூக்களைக் கொட்டிக் கட்டி வைத்த கொடிக் கயிறின் முடிச்சு அவிழ்வதற்கு எத்தனை, எத்தனை தியாகிகளின் மனைவிமார்கள் தங்கள் தாலிக் கொடியை இழந்து இந்த வீர சுதந்திரத்தை வாங்கித் தந்திருக்கிறார்கள் என்று இந்த நாளில் நம் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

சுதந்திரமாகப் பறக்கத் துடி துடிக்கும் மூவர்ணக் கொடி உதிர்க்கும் மலர்கள் தியாகிகளின் மனைவியரின் கூந்தலிலிருந்து நிரந்தரமாகப் பிரிக்கப்பட்ட மலர்கள் என்று நம் பிள்ளைகளுக்கு அதன் வலியை உணரச் சொல்லிக் கொடுக்க வேண்டும்!

நன்றி முத்துக்கமலம்

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Thu Jan 27, 2011 2:52 pm

எனக்கும் இப்பொழுது தான் தெரிகிறது.... நன்றி நண்பா குடியரசு தினம் -18+  677196 குடியரசு தினம் -18+  677196 குடியரசு தினம் -18+  678642




குடியரசு தினம் -18+  Power-Star-Srinivasan
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 27, 2011 3:00 pm

நல்ல தகவல் நன்றி பைத்தியம் மகிழ்ச்சி மகிழ்ச்சி



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக