புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
5 Posts - 2%
i6appar
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
2 Posts - 1%
prajai
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
443 Posts - 47%
heezulia
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
30 Posts - 3%
prajai
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
5 Posts - 1%
i6appar
தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_m10தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Poll_c10 
4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Jan 27, 2011 12:42 pm

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே! Mel_001-w550


ஆண்டொன்று ஆனதையா அறிவுடைத் தந்தாய்
அவனியைப் பிரிந்துநீவீர் ஆண்டவன் பாதம்
வேண்டித்தான் சென்றீரே விலையில் மாண்பே
விடிவெமக்குத் தூரமில்லை விதியை நொந்தோம்
தாண்டிநாமும் செல்கின்றோம் தடைகள் நீக்கி
சார்புநெறி வகுத்திங்கு இயங்கு காலை
தூண்டிநிற்கும் நல்லறிவினைத் துணையாய்க் கொண்டு
தூயதிரு வடிபோற்றிப் புனைந்தேன் பாடல்.

கலைமகளாம் எம்தெய்வம் கல்விக்கரசி யென்றும்
களிப்புடனே வீணையிற் கவிமழை பொழிந்திட
அலைமகளாள் நிலம்நோக்கி அகம்குளிர்ந்து நீரடித்து
ஆர்ப்பரிப்பிற் றிளைத்து அணைத்து மகிழ்ந்திட
மலைமகளாள் மங்கலக் குங்குமமும் மனையும்
மாண்புடைத் திடமும் மேன்மையும் அளித்திட
விலையிலா வீரத்தின் விளைநிலமாய் விளங்கு
வள்ளல்நிறை பதியாம் வல்வைதந்த விறலே!

திருவேங்கடம் வேலுப்பிள் ளையெனத் திகழ்ந்து
சீர்மையுற வாழ்வினைச் செவ்வென நடத்தி
அரும்பெரும் சதிர்தனை அவனியொடு பொருதிய
ஆளுமைப் பேற்றின் அறிவுடை மூலமே!
திருவாசகம் தேவாரம் திருப்பல் லாண்டுநாளும்
தேனாக இசைத்திடு திருமனைத் தலையே!
தருமத்தின் இருப்பே! சான்றுயர் பெரியோனே!
தலைதாழ்த் தியும்தாள் பற்றினோம் ஐயா!

வெண்ணிற ஆடையில் விளங்கு நீறணிந்து
வேதாகம வழிகளில் விற்பனனாய் நின்று
கண்ணியமாய்க் கோவில்செல் காட்சிதனை ஊரார்
கண்களிற் பதித்துக் கையசைத்துக் களிப்புறுவர்
திண்ணிய ஞானத்தில் தெளிந்த சிந்தையில்
தேசுறு தோற்றத்தில் திகழ்திரு வேங்கடரே!
எண்ணத்தில் நிறைந்தீர்கள் இவ்வுல குள்ளவரை
இறவாத் தமிழோடு எஞ்ஞான்றும் கலந்திருப்பீர்!

நிர்வாக சேவையிற் காணியதி காரியாய்
நீடுபணியாற் றியேழை நெஞ்சங்களை வென்றீர்!
கருமத்திற் கண்ணாகக் கடமை வீரனாகக்
கருணையின் வடிவாக எளிமையின் இருப்பாக
உரையிலே உண்மையும் உறுதியும் உவப்பும்
ஒன்றாகப் பிணைந்து ஒழுக்கத்தை ஓம்பும்
கரையிட்ட வேட்டியும் காக்கிக்காற் சட்டையும்
கசடறக் கற்றோர் தகமையைக் காட்டும்!

பார்வதி மணாளனே! பக்தியின் திருவுருவே!
பாரதத் தலமாம் சிதம்பர வளர்ச்சிக்காய்
ஆர்க்குமிலா உள்ளத்தில் வள்ளலாய் விளங்கி
ஈய்ந்தீரே நிலபுலன் இமயமென உயர்ந்தீரே!
நேர்மையில் நெஞ்சுரத்தில் நின்மகன் நிர்மலனின்
நீண்ட வரலாற்றிற் பிணைந்த பெருந்தகையே!
பார்போற்றும் பகலவன் கரிகாலன் சேயோனைப்
பெற்றதனாற் சிவனென்றே உமைநா மறிந்தோம்!

தந்தையே! ஏந்தைக்கு நிகரான சான்றோனே!
தானையிற் தனையனுடன் சார்ந்தி ருந்து
முந்திச்செய் தவப்பேறால் ஈன்று புறம்தந்த
முதல்வன்தன் திறமைகளை மெச்சி மகிழ்ந்தீரே!
கந்தகச் சூழலிலும் கலங்கா உள்ளத்தில்
கயவர் முன்சென்று தந்தையென விளித்தீரே!
அந்திமப் பொழுதினிலும் அடங்காப் புலியென
அரசினர்க்குப் பணியாது இன்னுயிர் துறந்தீரே!

வெற்றித் திருமகன் வகுத்த பாதையில்
வீறுடன் தமிழினம் ஏழுந்து நிற்கிறது!
பற்றியுள்ள பகைநீக்கப் புலம்பெயர் இளந்தலை
போராடி நிமிர்கிறார் புறப்படுவார் தாயகம்!
கற்றிடும் கல்வியெலாம் காணும் ஈழத்தின்
கவினுறு வளர்ச்சிக்குக் கொடையென அளிப்பரே!
உற்ற துணையென உண்மையில் திண்மையில்
உழைத்திட என்றும் வாழ்த்தி நிற்பீரே!

தெய்வமகன் தனைத்திரு நாட்டிற்குத் தந்தவரே!
தேடுகிறோம் செல்வனை! தூதுநீர் செல்வீரே!
பையவே வாழ்விடம் சென்றங்கு பரிதியிடம்
பக்குவமாய் எடுத்துரைத்து விரைந்திடச் செய்திடுக!
ஐயஎம் விடுதலைக்காய் ஆன்றவும் குடும்பத்தின்
ஈகையை ஒருபோதும் உள்ளத்தில் மறவோம்
வையகத்தில் நின்பெருமை வார்த்தையில் நிறைவுறா
வானகத்திலும் வியத்தகு வாழ்வினையே பெறுவீர்!


தமிழீழ தேசிய தலைவரின் தந்தையார் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களின் முதலாமாண்டு நினைவான கவிதை.




--ஈழ நேசன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக