புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
21 Posts - 70%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
6 Posts - 20%
viyasan
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
213 Posts - 42%
heezulia
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
21 Posts - 4%
prajai
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_m10எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் "


   
   

Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Jan 24, 2011 11:07 pm

First topic message reminder :

அன்பு நண்பர்களே
இரண்டு ஆண்டுகளுக்கு முன் மின் தமிழ் குழுமத்தில்
எனக்குப் புரிந்தது இதுவே ! என்ற பெயரில் மனித மனத்தின் மாண்புகளைப்பற்றியும் ,சித்தர்கள்மனித உடலைப் பற்றி கூறிய தத்துவங்களையும் , உண்மைகளைப்பற்றியும் தொடராக சுமார் நாற்பது பகுதிகள் எழுதினேன் .

அதை மீள்பதிவாக நண்பர்களுக்கு வழங்கி பின் ,இதைத் தொடர எண்ணி இருக்கிறேன் .

தொடர் குறித்து அன்பர்கள் தங்கள் கருத்துக்களை வழங்கலாம் .

அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்


எனக்குப் புரிந்தது இதுவே !---1
---அண்ணாமலை சுகுமாரன்


யாருடனும் உன்னை ஒப்பிடாதே !
ஒவ்வொருவரும் அவரவர்
நிலையில் தனித்தனியே !
நீயும் உன் மகனும்
கூட வேறு வேறுதான்
அவரவர் வினையைப்
போக்கி ஞானம் பெறவே
அவரவர் வருகிறார்கள் !

உன் கடமை
உனது பாத்திரம் இப்போது தந்தை !
கொஞ்ச நாளுக்கு முன் நீயே
மகன்எனும் பாத்திரத்தில் இருந்தாய் !
இருக்கும் வரை கொடுத்த பாத்திரத்தை
குறைவரச் செய்வதே சுதர்மம் !

இதில் மற்றவருடன் உன்னை
ஒப்பிடுவது நாடகத்தில் அடுத்தவர்
வசனத்தை நீ பேசுவது போல் !,
அது உன் பணி அன்று !
அது உன்னையே நீ
அவமதித்துக் கொள்வது ஆகும் !

சுதர்மத்தில் வரும் தடைகளை
எண்ணி அதிகம் கலங்காதே !
எங்காவது சாவி இல்லாது
பூட்டுச் செய்கிறார்களா ?

எந்த பிரச்னையும் தீர்வுடன்தான்
வருகிறது ! சில சமயம் சாவியை
மறந்து விட்டுத் தேடுவது போல் ,
பல சமயம் நாம் தீர்வைத் தேடி அலைகிறோம் !
எப்போதும் தீர்வு ,பிரச்சனைக்கு
அருகில்தான் இருக்கும் !
பிரச்சினையை ஊன்றிப் பார் !

நீ சோகமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப்
பார்த்துச் சிரிக்கிறது !
கையால் ஆகாதவன் என்று !

நீ சந்தோஷமாக இருந்தால்
வாழ்க்கை உன்னைப் பார்த்து
மகிழ்கிறது ! நீ மற்றவரை
சந்தோஷப் படுத்தினால்
வாழ்க்கை உன்னை
வாழ்த்துகிறது ! வணங்குகிறது !

ஒவ்வொரு வெற்றி பெற்ற மனிதனின்
பின்னணியிலும் அவன் ஏறி வந்த
ஒரு கடினமான சோகக் கதை இருக்கும் !
ஒவ்வொரு துயரக் கதையிலும்
நிச்சயம் ஒரு வெற்றிகரமான
முடிவிருக்கும் !நீ அந்தச் சுழற்சியில்
எங்கு இருக்கிறாயோ ! கஷ்டத்தை
ஒப்புக்கொள் ! வெற்றிக்குத் தயார் ஆகு !

மற்றவர் செய்யும் தவறுகளைப்
பேச நமக்கு ரொம்ப ஆசைதான் !
ஆனால் நம் தவறுகளை நாம்
உணர நமக்கு நேரமில்லை !
அதைத் தெரிந்து கொள்ளும் கடைசி ஆளாக
நாம்தான் இருப்போம் !
அனைவருக்கும் தெரிந்த பிறகுதான்
நமக்குப் புரியும் நம் தவறுகள் !
அப்போது தெரிந்து கொண்டும் பலன் இராது !
சுற்றி யாரும் இருக்க மாட்டர்கள் நம்மைத்
தொந்தரவு செய்ய !
தனிமையில்தான் இனிமை காணவேண்டி இருக்கும் !!

உஷாராக நாம் காலுறை அணிவதுதான்
புத்திசாலித்தனம் !
சாலை முழுவதும் முள் இல்லாது கமபளம்
விரிக்க முடியுமா ?
ஊரைத் திருத்தப் போவதை விட
நம்மை திருத்திக் கொள்வது
மிகச் சுலபம் !

யாரும் பின்னால் சென்று நடந்த
நிகழ்வின் ,மோசமான ஆரம்பத்தை
மாற்ற முடியாது !
எனவே சென்றதை எண்ணிச்
செயலிழக்க வேண்டாம் !
ஆனால் யாராலும் புதிய ஒரு மாற்றத்தால்
ஒப்பில்லாத சந்தோஷ முடிவை அடைய முடியும் !
முடிந்து விட்ட பிரச்னையைப் பற்றி
வருந்தி என்ன பயன் ?
ஒரு பிரச்சனை முடியாது என்றால்
அதைக் குறித்துப் புலம்பி என்ன பயன் !

நம்மைத் தேடி வரும் பிரச்னையை
மகிழ்வுடன் எதிர்கொண்டு
சந்தோஷத்துடன் வழியனுப்பு !
அதில் நீ மட்டும் பட்டும் படாமல் இருக்கப்
பயின்று கொள் !

தவற விட்ட வாய்ப்புகளை எண்ணிக்
கண்ணீரால் கண்களை குளமாக்காதே !
எதிரில் வந்து நிற்கும் நல்ல ஒரு
புதிய வாய்ப்பை அந்தக் கண்களின்
கண்ணீர் மறைத்து விடக்கூடும் !

முகத்தை மட்டும் மாற்றினால்
ஏதாவது மாற்றம் வருமா ?
மாற்றத்தை எதிர் கொள்ளும்
முகம்தான் மறுமலர்ச்சி தரும்
யாரைப் பற்றியும் குறையில்லை ,
நாம் மாறினால் போதும் ,
வாழ்வின் இனிமைக்கு
பிறரைச் சார்ந்து இராதீர்கள் !

மற்றவர் அபிப்ராயம் உங்களுக்கு,
உங்கள் மன நிம்மதிக்கு
நிச்சயம் தேவையானால்
நீங்கள் மகிழ்ச்சி கொள்ள வாய்ப்பே இல்லை !
மற்றவர்களுக்கு வேறு பல வேலை உண்டு
உங்களை மகிழ்விப்பதைத் தவிர !
-------------------------------------------


*இது முதலில் கவிதை அன்று !
கருத்துக்களை சுருக்கமாக சொன்னதால்
கவிதையாகிவிடாது .
நான் நடந்து வந்த பாதையில்
கண்டெடுத்த கற்கள் இவை ! பாதத்தில்
தைத்ததில் சில வைரக் கற்களும் உண்டு !
இந்தக் கருத்துக்கள் எதுவும் புதியன இல்லை !
பலரும் பகர்ததுவே !
கொள்வோர் இருப்பின் தொடரும்
உத்தேசம் உண்டு !

அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Feb 24, 2011 6:50 pm

அருமையான மிகவும் பயனுள்ள பதிவு... ஏதோ குருகுலத்தில் சேர்ந்தது போல உணர்வு... பாகம் 5 வரை படித்தேன்.. நீங்கள் சொல்வது போல் தினமும் இடம் மாறி படுக்க முடியுமா என்பது புரியவில்லை...

என்கெங்கோ புத்தங்ககலை எல்லாம் ஒன்றாக்கி பழசுவை சாறு பருகுவது போல் இருக்கிறது..
தொடர என் வாழ்த்துக்கள்

கேள்விகள் வந்தால் கேட்கலாமா? இல்லை தனிமடலில் மட்டுமா ??

உங்களை வாழ்த்த் எனக்க்கு தகுதி இல்லை இருப்பினும் நீடுழி வாழ்க பயன் தருக



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Ila
avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Feb 24, 2011 6:54 pm

ஐயா வணக்கம்
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே. நம் முன்னோர்கள் இதனை தேஜஸ் என்றனர். இதனை நிழற்படமாகப் பிடித்தவர் தாம் கிர்லியன்.
அதற்கு முன்பே நம் முன்னோர்கள் இதனை அறிந்திருந்தனர். இந்தக் கருத்தில் வேறுபாடில்லை
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Feb 24, 2011 7:58 pm

அருமை



எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Pஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Oஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Sஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Iஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Tஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Iஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Vஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Eஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Emptyஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Kஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Aஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Rஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Tஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Hஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Iஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Cஎனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 K
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Feb 25, 2011 1:33 am

அடுத்த பாகம் படிக்க ஆவலுடன் இருக்கிறேன் ...என்னால் எல்லாம் செய்ய முடியாது என்பது புரிகிறது ...பல விஷயங்கள் என்னை அறியாமல் நடக்கிறது..அதாவது என்னுடைய கட்டுபாட்டுக்குள் இல்லாமல் ...இந்த இயந்திர உலகில் இப்படி வாழ முடியுயமா புரியவில்லை...ஏதோ ஒன்று ennai படிக்கும் பொது இழுத்து போகுறது ...இந்த உலகக்கில் எதை சாதிக்க இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் புரியவில்லை ..நிறைய கேள்விகளுடன் ஆவலுடன் உங்கள் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 154550 எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 Ila
varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Feb 25, 2011 3:39 am

[quote="sugumaran"]அன்புள்ள கலை அவர்களுக்கு ,
கட்டுரை குறித்த தங்கள் ஆர்வத்திற்க்கு நன்றி !
ஆனால் படிப்பவர் குறைவாக இருக்கிறார்களே ?
அவர்களை ஈர்க்க ஏதாவது வழி இருக்கிறதா ?
குஓட்டே
படிப்பவர்கள் அதிகமாக இருக்கலாம் ஆனால் பின்னோட்டம் குறைவாக இருக்கலாம். தொடருகள் அருமை அருமை. இண்ட்ரூ தான் எனக்கு வாய்பு கிடைதது .

varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Feb 25, 2011 3:46 am

ழகிய காரியம் செய்யும் போது " நான் "சற்று அடங்கி இருக்கும் ,
நடக்கும் போது கால் நினைவு எப்போதாவது வருகிறதா ?
ஆனால் காலில் ஒரு வலி ஏற்பட்டால் மனம் காலிலேயே நிற்கிறது;
அந்த வலியை எப்போதும் காட்டுகிறது ! ஒரு செயலைப் பழக்கமாக்கி
அதை ஒரு குணமாக்கும் போது 'நான்' சற்று குறைகிறது !
'நான்' குறையக் குறைய அது ஒரு இன்ப நிகழ்வாக மாறுகிறது !

நான் படிக்கிறேன் என்னும் உணர்வு இல்லாமல் படிப்பவனுக்கு
படிப்பே ஓர் ஆனந்த அனுபவமாகிறது !
தன்னை மறந்து ஆழ்ந்து படிக்கும் போது அங்கே மனம் தன்னை மறுக்கிறது .
அருகில் வருபவர் கூட மனதில் போதிவதில்

உண்மை தான். படிக்க படிக்க ஆர்வம் அதிகரித்து கொண்டு போகிறது



varsha
varsha
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Postvarsha Fri Feb 25, 2011 3:51 am

இளமாறன் wrote:அடுத்த பாகம் படிக்க ஆவலுடன் இருக்கிறேன் ...என்னால் எல்லாம் செய்ய முடியாது என்பது புரிகிறது ...பல விஷயங்கள் என்னை அறியாமல் நடக்கிறது..அதாவது என்னுடைய கட்டுபாட்டுக்குள் இல்லாமல் ...இந்த இயந்திர உலகில் இப்படி வாழ முடியுயமா புரியவில்லை...ஏதோ ஒன்று ennai படிக்கும் பொது இழுத்து போகுறது ...இந்த உலகக்கில் எதை சாதிக்க இப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேன் புரியவில்லை ..நிறைய கேள்விகளுடன் ஆவலுடன் உங்கள் அடுத்த பாகத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 154550 எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 154550
உண்மை தான் அண்ணா . இதே மன நிலையில் தான் நானும் இருக்கிறேன். எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 440806

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Feb 25, 2011 9:21 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (20)-

*சமஸ்காரம -- ஆசை எனும் வேகம் *



சமஸ்காரங்கள் என்பது முன் அனுபவங்களின் புதைப் பதிவுகள் !
இதில் முறப்பிறவி அனுபவங்களும் அடங்கும் !
இந்த சமஸ்காரங்கள் செயலற்ற மந்தப் பதிவுகள் அல்ல !
இவை சக்தி வாய்ந்த மன ஆற்றல் மண்டலங்களாகும் !

ஓடுகின்ற நதி எப்படி பாறைகளில் முட்டி மோதி
கிளை கிளையாக ஆற்றலுடன் பிரிகிறதோ அப்படியே
மனதில் தோன்றும் எண்ண ஓட்டமும் சமஸ்காரத்தால்
முட்டி மோதி கிளை கிளையாக கிளைததோடுகிறது ! சிதைவுறுகிறது !
இதுவே உணர்வு தடைகள் எனவும் கூறப் படுகிறது !

மேலை நாட்டு உளவியல் அறிஞர் பராய்டு மனம் பற்றி இரண்டு

முக்கிய முடிவுகளை கூறுகிறார் ! ஒன்று மனம் முழுவதும் நம்
உணர்வாதிக்கத்தில் இல்லை ! ஒரு சிறு பகுதியின்
செயல் பாடுகளையே நாம் உணர்கிறோம் ! உணரும் பகுதியை
உணர்வு பகுதி எனவும் , உணர்வாதிக்கத்தின் கிழ் இல்லாத பகுதியை
உணர்வறு பகுதி என்கிறார் !


இரண்டாவது உணர்ச்சி வேகங்கள் எப்படி நம்மை ஆட்டிப் படைகின்றன
என்பதை பொதுவாக நாம் உணர்வதில்லை ! ஏன் எனில் இவை உணர்வு பகுதிக்கு
வராமலேயே தடுக்கப்படுகிறது ! இதை உணர்வறு தடை என்கிறார் !


உதாரணமாக நமக்கு கோபம் வருகிறது அதை அடக்குகிறோம் ,
இது நம் உணர்வுடன் நடைபெறுகிறது ! இது உணர்வு தடை !
இதுவே உணவறு பகுதியில் நடை பெறுமானால் அது உணர்வுறு தடை !
ஆனால் அவர் இதற்க்கு காரணம் என்ன எனக் கூறவில்லை !

இதையே நமது சித்தர்களும் ரிஷிகளும் உணர்த்திருந்தனர் !
அவர்கள் நம் மனம் முழுவதும் உணர்வற்ற ஜடம் என்றனர் !


ஆன்மா மட்டுமே உணர்வு பொருள் ! ஆன்மாவின் ஒளியால்
ஒளிர்கின்ற பகுதியே நம் மனதின் உணர்வு பகுதி !

தமஸ் மேலோங்கிய எஞ்சிய உணவுறு பகுதி சித்தம் எனப் படுகிறது !
இதில் ஆன்மாவின் ஒளி படுவதில்லை ! இந்த உணர்வுறு பகுதியில் தான்
சமஸகாரங்கள் புதைந்துள்ளன ! இந்த சமஸ்காரத்தை துணை கொண்டுதான்
சித்தம் முடிவுகளை எடுக்கிறது !

அந்த சித்தத்தை நீக்குவதே யோகம் !

இதையே பதஞ்சலி யோக சூத்திரம் முதல் சூத்திரமாகக் கூறுகிறது .

சித்தத்தை அழிப்பதே யோகம் !

ஒழிப்பதற்க்குபதில் அதில் ஆன்மாவின் ஒளி பட செய்தால்

அது மனதின் உணர்வுப் பகுதியாக மாறிவிடுகிறது .
சித்தத்தில் ஆன்மாவின் ஒளி படச்செய்வதே யோகம் !

மொத்தத்தில் மனதின் முழுவதிலும் ஆன்மாவின் ஒளி பட செய்வதே யோகம் !

இதைத்தவிர சத்துவ குணம் மேலோங்கிய வேறு ஒரு பகுதி மனத்தில் உள்ளது !
இதுவே உயர்த்து ! இதுவே புத்தி எனப் படுவது ! ஆன்மீக பேறுணர்வுகள்
இங்கிருந்துதான் தோன்றுகின்றன ! இதுவே ஆன்மா !

மனதின் இருபுறமும் சித்தி புத்தியுடன் விளங்குவதை இரு மனைவியாக உருவகப்படுத்தியதே

சித்தி புத்தி விநாயகர் ! இதை பூரணமாக உணர்ந்து கொண்டால் எந்த விக்னகமும் இல்லை

சமஸ்காரத்தை இருவகையாக பிரிக்கிறார் பதஞ்சலி !
கர்மபீஜம் ,வாசனை இவை இரண்டும் சமஸ்காரத்தின் வகை !
கர்மபீஜம் ஆசைகளையும் ,உணர்ச்சி வேகங்களையும் தூண்டுகிறது !


வாசனை நினைவை எழுப்புகிறது !

ஒவ்வொரு செயலும் மனதில் ஒரு சமஸ்காரத்தை கர்ம பீஜத்தை உண்டாக்குகிறது !
அந்த சமஸ்காரங்கள் எழும்போது நாம் அதே செய்யலை
செய்யத் தூண்டப் படுகிறோம் ! இந்த தூண்டுதலையே நாம் ஆசை , வேகம் எனக்
கூறுகிறோம் ! செய்யும் ஆயிரம் செயலுக்கு தக்க கர்மபீஜம் சேர்கிறது .
இந்த கர்மபீஜத்தின் மொத்த தொகுதியே கர்மாசயம் எனப் படுகிறது !
கர்ம பீஜம் என்பது செயல்களின் சுருக்கம் ,அதன் விதை !

விதைகளின் மொத்த பத்தாயம் கர்மாசயம் எனப்படுவது-அதுவே

விதியாகவும் அமைகிறது ! விதைக்கேற்றபடியே அதன் விளைவும் ,

அதுவே மாறாத விதி ! .

அடுத்த பிறவி ,அதற்கேற்ற உடல் ஆயுள் ,அனுபவங்கள்
அதனையும் கர்மாசயம் முடிவு செய்கிறது .

ஒவ்வொரு செய்யலும் , ஒரு அனுபவத்தை நம்மிடம் உண்டாக்குகிறது !
ஒவ்வொரு அனுபவமும் ஒவ்வொரு சமஸ்காரத்தை மனதில் உருவாக்குகிறது !
இந்த அனுபவத்தின் சமஸ்காரம வாசனை எனப் படுகிறது !

புரிகிறதா ? செயலின் சமஸ்காரம கர்மபீஜம் !
அந்த செய்யலால் நாம் பெறும் அனுபவத்தின் சமஸ்காரம வாசனை !


செயல் ஆசையை தூண்டுகிறது ! செய்யசெய்ய ஆசை !
அனுபவம் வெறும் நினைவை தூண்டுகிறது ! நினைவுடன் நின்றால்
தப்பில்லை ! ஆனால் வேகம் கெடுக்க வேண்டும் !
வாசனையும் கர்மபீஜத்தின் தொடர்பை துண்டிக்க வேண்டும் !

செயலும் அனுபவமும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவை !
ஒன்று தூண்டப்பட்டால் அது மற்றதை தூண்டுகிறது !
இவ்வாறு செய்யலும் அனுபவமும் , கர்மபீஜமும்
வாசனையும் முடிவின்றி சுற்றி சுழலும் வட்டத்தை ஏற்ப்படுத்தி விடுகிறது !
ஆன்மீக வாழ்வின் முக்கிய நோக்கம் இந்த வட்டத்தை துண்டிப்பதே !

இந்த வேகங்களும் நினைவுகளும் பிணைவது, அதாவது
கர்மாசயமும் வாசனையும் இணைவதுதான் நம் பிரச்சனை !


இந்த ஆசை மனத்தின் உணர்வுறு பகுதியில் இருந்து
நினைவுகளின் மேல் பாய்ந்து பற்றிக்கொண்டு
மனதின் உணர்வு பகுதியில் தோன்றுகின்றது !


இது நிகழ்ந்ததும் இந்த செய்யலால் ஏற்ப்பட்ட
கடந்த கால வடுக்களை பற்றியோ ,
எதிர்கால விளைவுகளைப் பற்றியோ ,
சிறிதும் சிந்திக்காமல் ஒரு அடிமையைப் போல்
அந்த செய்யலை மீண்டும்மீண்டும் செய்யகிறோம்!

இதற்க்கு என்னதான் வழி ?
நினைவு -வேக பிணைப்பை எப்படிதுண்டிப்பது ?
வழிஇல்லாமலா இருக்கும் ?
இதை அடுத்தப் பகுதியில் பார்ப்போம் ?

இவைகள் மிக முக்கியமானபகுதிகள் மனத்தின் மர்மத்தை விடுவிக்கக்கூடியவை .

எனவே இதை மீண்டும் ஒருமுறை படிப்பதனால் ஒன்றும் தப்பில்லை !
அன்புடன் ,
அண்ணாமலை சுகுமாரன்


sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Fri Mar 11, 2011 7:07 pm

எனக்கு புரிந்தது இதுவே ! (25)-

எனக்கு புரிந்தது இதுவே ! (21)-

*வேகம் கெடுக்கும் வித்தை
!*

மனிதன் தனது மனத்தின் சமஸ்காரத்தின் காரணமாக
கண்டதையே காணவும் , தின்றதையே தின்னவும்
பெற்றதையே பெறவும் விரும்புகிறான் ,

இதனால் பழைய செயல்களையே திரும்ப செய்யும்
இச்சையினால் ,செய்ததையே செய்கிறான் !

இதற்க்கு மனத்தின் சமஸ்காரத்தின் கர்மபீஜங்களும் ,வாசனையும் காரணமாக அமைகிறது !
வாசனைகள் நினைவையும் ,கர்ம பீஜங்கள் செயலுக்கு வேகமும்
அளிக்கிறது ! எனவே புதிய செயல் செய்வது சாத்தியமில்லாமல் போகிறது !
இந்த வட்டத்தில்லேயே வாழ்வு கழிகிறது .

சமஸ்காரத்தின்அங்கமான நினைவுகளால் எந்த தீங்குகளும் இல்லை ,
நினைவுகள் உத்வேகங்களுடன் இணையும் போதுதான் பிரச்சனையே ஆரம்பம் ஆகிறது !


புகைப்பதில் இருக்கும் இன்பத்தைப் பற்றிய விளம்பரம் பார்த்தவுடன் ,
தான் முன்பு அனுபவித்த புகைத்தல் இன்பம் நினைவுக்கு வருகிறது ,

அது வேகத்துடன் சேருவதற்கு முன்னால் , மருத்துவர் சொன்ன புகைத்தால்

இறந்துவிடுவாய் எனும் எச்சரிக்கை பயம் எனும் உணர்ச்சியாக வந்து ,

அது கர்மபீஜம் எனும் செயலுடன் கூடிய வேகத்துடன், நினைவு சேராமல் தடுக்கிறது !

இந்த விதமாக அவன்எந்தவித சிந்தனைக் கொதிப்பு வேகம் இல்லாமல் சிகிரட்டை பற்றி நினைக்க மட்டும் முடிகிறது !

இதுவே பயம் எனும் உணர்வு கொண்டு சிகிரட்டை பிடிக்கும் ஆசை எனும்

வேகத்தை தடுக்கும் வழி ! ஒன்றை ஒன்றால் வெல்லுவது !
நினைவு -வேக பிணைப்பை அறுப்பது தியான வாழ்வின் முதல் கட்டம் !
மனத்தை தூய்மை படுத்துவது என்பது இதுவே !
பலஉருவங்களாகவும் ,எண்ணங்களாகவும் ,பல நினைவுகள் வரலாம் !
ஆனால் அவை உந்து வேகங்களுடன் இணைக்கப் படுவதில்லை !
நீல வானில் உலவும் வெண்மேகங்களைப்போல் இந்த நினைவுகளும் மனதின் உணர்வுப்
பகுதியில் சிறிது நேரம் உலவி விட்டு சென்றுவிடும் !

இதனால் நாம் முன்பு செய்த அதே கர்மத்தை செய்யும் ஆபத்தில் இருந்து
தப்பித்துவிடுகிறோம் ! மேலும் ஒரு சமஸ்காரம் மீண்டும் பதிவு ஆவது குறைகிறது
!சமஸ்காரத்தை தூய்மைப் படுத்துவது தான் மனத்தை தூய்மை
படுத்துவது ஆகும் ! இதில் முதல் வழி தவம் !

தவம் என்பது உத்வேகங்கள் தூண்டும் செயல்களை தவிர்த்தல் !
அந்த சூழ்நிலையை தவிர்த்தல் !இப்படி தொடர்ந்து செய்ய
வேகங்கள் பலகீனப் படும் ! தவம் என்பதை தவறாமல் செய்யவேண்டும் !

அடுத்தவழி தொடர்ந்து நற்கருமங்கள் செய்தல் !
இதன்மூலம் மனதில் நல்ல சமஸ்காரங்கள் உருவாக்குதல் !
நல்ல சமஸ்காரங்கள் புதியதாக தொடர்ந்து உருவாகும் போது
தீய சமஸ்காரங்கள் தலை தூக்காமல் தடுக்கப்படுகின்றன !
காலப் போக்கில் அவை மிக அடியே போய், வலுவிழக்கும் !

இது புகைப்பதில்ஆசை வராமல் இருக்க பாக்கைப் போட்டுக்கொள்வது போன்றது .

மேலும் ஒரு வழியை பதஞ்சலி கூறுகிறார் !
மனத்தில் தோன்றும் உருவங்கள் மனதை வெகுவாக பாதிக்கிறது !


தீய உத்வேகங்கள் எழும் போது அவற்றை தெய்வீக மனிதர்அல்லது ஒரு புனிதச சின்னத்துடன்
இணைத்தால் அந்த வேகங்கள் ஒரு கட்டுக்குள் வரும் !

எப்படி கெட்ட வேகங்கள் எழும் போது ,அவற்றை நல்ல உணர்ச்சியுடன் இணைத்தால்
அவை அடங்கும் ! இந்த இயல்பை மாற்றுவதற்கு பிரதிபட்ச பாவனம் என்பர் .
ஆனால் இதற்க்கு தொடர்ந்த விழிப்புணர்வு தேவை !



மேலும் ஒரு வழி உண்டு சற்று கடினம் , தியானத்தால் மட்டுமே
கைகூடும் !அது நான் எனும் சுயேச்சை உணர்வை விலக்குவது!
சாதனைகள் மூலமே இது கை கூடும் !இதை இறுதியில் பார்ப்போம் .

கர்மபீஜத்தால் தோன்றும் உத்வேகம் பொதுவாக மூன்று வகைப் படும்


அவைகள் ஒன்று பொருள்களை நோக்கி , அவைகளுக்கு எதிராக
அல்லது அதை விலக்கிவிடுதல் ! இவை முறையே ராக் த்துவேஷ் , பயம் !
பற்று வெறுப்பு ,அச்சம் இவையேஅதன் வெளிப்பாடு !

பொதுவாக வாசனையால் வரும் நினைவுகள் அல்லது உருவங்கள் நடுநிலைமைவகிப்பவை !

ஆனால் கர்மபீஜதின் உத்வேகத்தை
பெறும் போதுதான் அவை நல்லஅல்லது தீய நிறம் பெறுகின்றது !


எனவே கெட்ட எண்ணங்கள் மனதில் தோன்றினால் பயமோ ,சோர்வோ இல்லாது
அவைகளை கெட்ட உத்வேகத்தில் இருந்து பிரிக்கவேண்டும் !
ஆன்மாவை நினைவில் இருந்து பிரித்துவிட்டால் நினைவு மறைந்து விடும் !

இதையே மாணிக்கவாசகர் வேகம் கெடுத்தாண்ட வேந்தன் வாழ்க என்கிறார் .

நம் மனதில் இருக்கும் சமஸ்காரத்தை நாம் எப்போது உணர்கிறோம் !
மனதில் என்ன என்ன இருக்கிறது என்று நமக்கு தெரியுமா ? இல்லை !
அவை எண்ண அலைகளாகிய பின்னரே அறியமுடிகிறது ! நினைவுகளும் ,உத்வேகமும் எண்ண
அலைகளின் வேறு வடிவங்கள் ஆகும் !
இவைகள் தோன்றும் போதே முளையிலேயே கிள்ளப் படவேண்டும் !

இவை எப்போது செய்யல் படத்தொடங்குகிறது ? நம் மனதில் பதிந்துள்ள
சமஸ்காரங்கள் பிரபஞ்ச ஆற்றல் பாயத்தும் செய்யல் படத்துவங்குகிறது !
அந்த பிரபஞ்ச ஆற்றல் தான் பிராணன் ! பிராணன் என்பது காற்று மட்டும் அல்ல !
ஆனால் காற்றின் சக்தி ! வாசனை கர்மபீஜம் இரண்டையும் பிராணன்
தூண்டி செயல் படுத்துகிறது ! வாசனை ஏற்படுத்தும் நினைவுகள்
மனத்தின் மேல்பகுதியைமட்டும் பாதிக்கிறது ! ஆனால் கர்மாசயம் உண்டாக்கும்
ஆசைகளும் உத்வேகங்களும் மனம் முழுவதும் ஆட்டிப் படைகின்றன !

தியானத்க்தால் மனத்தின் மேற்ப்பரப்பில் எழும் தூலவிருத்திகளை மட்டும்
கட்டுப் படுத்த முடியும் என பதஞ்சலி கூறுகிறார் !
மனதை கட்டுப் படுத்த பிராணாயாமமும் ஒரு நிலையான வழியல்ல !
பிராணாயாமம சமஸ்காரத்தை கட்டுப்படுத்துமேத் தவிர அழிக்காது !
பிராணாயாமம செய்யாதபோது சமஸ்காரம மீண்டும் முளைக்கும் !

அப்படியானால் உணர்ச்சி போராட்டங்களால் தூண்டப்பட்ட மனத்தை
எப்படி சீராக்குவது ! அதற்க்கு ஒரே வழி கர்மாசயத்தின் செயல் பாடுகளை
கட்டுப்படுத்துவதே ஒரே வழி என்கிறார் பதஞ்சலி !

செயல் பாடுகளைக் கட்டுப் படுத்த அவை செயலாற்றும் முறையை சரிவர அறியவேண்டும் !
எல்லா சமஸ்காரங்களும் ஒரே நிலையில் இருப்பதில்லை !
அவை ஐந்து நிலையில் இருப்பதாக பதஞ்சலி கூறுகிறார் !
இவைகளைப் பற்றி அடுத்தப் பகுதியில் பார்ப்போம் ! சற்று
நீண்டு இருந்தாலும் முன்னமே விரிவாக தெரிந்து கொண்டால்
மனதை வெல்லும் மார்கத்தை அறிய சுலபமாக இருக்கும் !

இவைகளை சரிவர விளக்கத்தவறி இருந்தால் பொறுத்தருள்க ! இதில் என்குறையுண்டு !
நான் கருத்துக்களை சற்று சுருக்கமாகவே கூறுவதாக உணர்கிறேன் .!
எனினும் சேர்ந்து பயில முயற்சிப்போம் !
அன்புடன்
அண்ணாமலை சுகுமாரன்

--

ஜு4லியன்
ஜு4லியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 286
இணைந்தது : 22/02/2011

Postஜு4லியன் Fri Mar 11, 2011 8:44 pm

எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 677196 எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 677196 எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 677196 எனக்குப் புரிந்தது இதுவே -37 "வாழ்க்கையின் மானுவல் " - Page 5 677196மிக நல்ல பதிவுகளால் ஈகரை ஐ சிறப்பிக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் ,தொடரட்டும் தங்கள் அருஞ்ச் சேவை

Sponsored content

PostSponsored content



Page 5 of 13 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக