புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Today at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Today at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Today at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Today at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Today at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Today at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Today at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
75 Posts - 54%
heezulia
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
46 Posts - 33%
mohamed nizamudeen
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
6 Posts - 4%
dhilipdsp
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
3 Posts - 2%
Guna.D
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
70 Posts - 53%
heezulia
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
44 Posts - 34%
mohamed nizamudeen
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
6 Posts - 5%
dhilipdsp
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
4 Posts - 3%
வேல்முருகன் காசி
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_m10திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்


   
   
avatar
Guest
Guest

PostGuest Fri Jan 21, 2011 2:40 pm

திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Zதிருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Images?q=tbn:ANd9GcRiYh5kb5IvAs4vq_HGduyE2vbBKWGpS4GBUPyZKaPsSPn2RkfCதிருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Images?q=tbn:ANd9GcQ42H5zdq2S4PjyuLWeoAoUUkGGZx_7I84Db8nCQegoA6DIMtzp4Qதிருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Images?q=tbn:ANd9GcSpx9Ri1rBWcsnCTHbCvx7Sq8GMbtG4yggyxahPMDaB_DuQ3C8pதிருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Images?q=tbn:ANd9GcTfSoKZK8EQ2J_Kpv-7Kp-eqpK4IXXjT8cjj9mfymS3OtVXiTy1IGo1WD_Vதிருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  Images?q=tbn:ANd9GcQ8G05p6g7El46hxZ8cdcXMxeGWLffmcM1d3DH1ya8xzbab4T7jமீண்டும் என் மீனவ சொந்தத்தின் மீது துப்பாக்கிப் பாய்ச்சி இருக்கிறது, திமிர்எடுத்த சிங்களக் கடற்படை! கடந்த 60 ஆண்டுகளாக சிங்கள இனவெறியர்கள் தமிழக மீனவர்கள்மீது நடத்தும் வெறிகொண்ட தாக்குதல்கள், இந்த அரசாங்​கத்தின் செவிகளை அறையவில்லை.

இதுவரை 537 மீனவர்கள் சிங்களத் தாக்குதல்களால் செத்து மிதந்​திருக்கிறார்கள். இத்தனைக்குப் பிறகும் நம் இந்திய அரசு சொல்கிறது, 'இலங்கை நம் நட்பு நாடு’ என்று! பகை நாடாகச் சொல்லப்படும் பாகிஸ்தான்கூட எல்லைமீறும் இந்திய மீனவர்களை இதுவரைத் தாக்கி​யது இல்லை!

கடற்பரப்பில் எல்லையை நிர்மாணிப்பது கடினம். தெரியாமல் எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்வார்கள். எச்சரித்து அனுப்புவார்கள். கடற்பரப்பு கொண்ட அத்தனை நாடுகளும் அனுசரிக்கும் நியதி இதுதான். ஆனால், கோடானுகோடி பண உதவிகளையும் படை மரியாதைகளையும் ராணுவப் பயிற்சிகளையும் இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நட்பு நாடு என்கிற நாமகரணம் கொண்ட இலங்கை அரசு, தமிழக மீனவர்களைக் குருவியைப் போன்று சுட்டு வீழ்த்துகிறது! நடுக்கடலில் நம் தமிழ் மீனவர்கள் சிங்கள மீனவர்களால் எப்படி எல்லாம் சிதைக்கப்படுகிறார்கள் என்பது தெரியுமா? உறவுகளே... திருக்கை மீனோடு மனிதனை உறவுக்கு உட்படுத்தும் கொடூரங்களை இதுவரை உலகம் கேள்விப்​பட்டு இருக்கிறதா தமிழர்களே? அப்பனை விட்டு மகனை நிர்வாணமாக்குவது, சூடு போடுவது, பச்சை மீன்களை வாயில் திணிப்பது, ஒவ்வாத உறவுகளுக்கு உட்படுத்துவது... இப்படிச் சிங்கள வெறியர்களால் நடுக்கடலில் நம் உறவுகளுக்கு நிகழும் உபத்திரவங்கள் ஒன்றா, இரண்டா?

இதில் எல்லாம் ஏற்படாத இனப்பகை, 'எங்கள் மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ எனச் சொன்னதில் ஏற்பட்டுவிட்டதா? என்னை முடக்க நினைப்பவர்கள், சிங்கள மூர்க்கர்களை அடக்கத் துணியாதது ஏன்? உலக வல்லமை படைத்த இந்தியக் கடற்படை திறமைகள் எல்லாம் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் மட்டும் தடுமாறுவது ஏன்? எல்லை மீறும் சிங்கள மீன​வனை என்றைக்காவது இந்தியக் கடற்படை சுட்டிருக்கிறதா? தமிழ் மீன​வர்கள் தாக்கப்படும்போது, என்றைக்காவது குறுக்கே விழுந்து தடுத்திருக்கிறதா?

மும்பைக்குள் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் நூற்றுக்கும் மேற்பட்டோரைச் சுட்டுக் கொன்றபோது, எந்த நேரமும் போர் மூளும் என்கிற அளவுக்கு ஆக்ரோஷம் கொண்ட இந்திய அரசு, தவணை முறை​யில் தமிழர்கள் காவு வாங்கப்படும் துயரத்தை மட்டும் கண்டுகொள்வதில்லையே!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் செய்வது எல்லை மீறிய பயங்கரவாதம் என்றால் சிங்களவன் செய்வதும் அத்தகைய அயோக்கியத்தனம்தானே! தனுஷ்கோடி வரை தமிழக மீனவர்களை விரட்டிவந்து வேட்டையாடும் சிங்களக் கடற்படையை வேடிக்கை பார்க்கத்தான் எங்கள் கடற்படை கடலில் நிற்கிறதா? இந்தியக் கடற்​படைக் கப்பலில் பறக்கும் தேசியக் கொடிதானே எங்கள் மீனவன் படகிலும் பறக்கிறது. இந்தியக் கொடி கட்டிய படகு நொறுக்கப்படுவது இந்தியக் கடற்படைக்கு இழுக்கு இல்லையா?

சிங்கள மீனவர் ஒருவர், அவருடைய நண்பரைச் சந்திப்பதற்காக மதுரை சிறைக்கு வந்தார். முகச் சாயலை வைத்து சந்தேகத்தில் நம் காவல்துறை அவரை விசாரித்தது. அந்த சிங்கள மீனவரின் பதிலும் நடவடிக்கையும் சந்தேகத்தை மிகுதியாக்கவே ஒரு கட்டத்தில், சுட்டுக் கொன்றுவிட்டது நம் காவல்துறை. உடனடியாக அந்தச் சம்பவத்துக்கு பொறுப்பேற்ற நம் அரசு, நம் சார்பாகவே அந்த மீனவரின் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்கியது.

60 வருடங்களாக தமிழக மீனவர்களைத் தொடர்ந்து துயரத்துக்கு உள்ளாக்கும் இலங்கை ராணுவம் என்றைக்காவது எங்களின் துயரத்துக்குப் பொறுப்பேற்று இருக்கிறதா? மீனவப் பாண்டியனை நாங்கள் சுடவில்லை என்று இப்போதும் மறுக்கிறது சிங்கள அரசு. நீங்கள் சுடவில்லை என்றால், எங்கள் மீனவர்கள் தங்களைத் தாங்களே சுட்டுக்கொண்டு மடிகிறார்களா? இல்லை, உங்களுக்குக் கூட்டுப் பயிற்சி கொடுக்கும் எங்கள் இந்திய ராணுவமே எங்களைக் கொத்திக் குதறுகிறதா? எங்கள் இனத்தாரும் உள்துறை அமைச்சர் பெருமானுமாகிய ஐயா ப.சிதம்பரம், 'தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதே இல்லை’ என்கிறாரே? இத்தனை மீனவர்களின் பிணங்களையும் பார்த்துவிட்டுப் பேசுகிற பேச்சா இது? உங்களின் உளவுக் கண்களுக்கு எங்கள் வீட்டு இழவு ஏனய்யா தெரியாமல் போய்விட்டது? 'கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்தது, கொடுத்ததுதான்’ என எஸ்.எம். கிருஷ்ணா சொல்கிறாரே.... கர்நாடக மீனவன் ஒருவன் சிங்கள அட்டூழியத்தால் செத்து மிதந்திருந்தால், எஸ்.எம்.கிருஷ்ணாவால் இப்படிச் சொல்லி இருக்க முடியுமா? சட்டமன்றக் கூட்டத் தொடர் நடக்கிற நேரத்தில் இறந்ததாலோ என்னவோ எங்களின் முதல்வர், பாண்டியன் கொலைக்கு ரொம்பவே பதறி​விட்டார். அடுத்த கணமே 5 லட்சம் பண உதவி அறிவிப்பு வெளியானது. தமிழன் தலையில், இடி விழுந்தால்கூட தபால் மட்டுமே எழுதும் எங்கள் முதல்வரின் நடவடிக்கையில் இந்த முறை கொஞ்சம் முன்னேற்றம்! தபாலுக்கு பதிலாக பிரதமருக்கு தந்தி அனுப்பியிருக்கிறார்.

ஆழ்ந்த அனுதாபமும் அவசரத் தந்தியும் கொடுத்​திருக்கும் முதல்​வர், அடுத்த​கட்ட முயற்சிகளையும் முன்​னெடுப்பதாகச் சொல்லி​யிருக்கிறார். தமிழர்​களே, தைரியமாக இருங்கள். பறிபோன பாண்டியனின் உயிரை அவர் பத்திரமாக மீட்டுத் தந்துவிடுவார்!

கடல் அளவுக்குக் கண்ணீரோடு போராடும் நம் மீனவச் சொந்தங்களை நினைக்கும்போதெல்லாம் ஈழத்துக்கு போய்வந்த நினைவுகளே என்னுள் ஏக்கத்தோடு எழும்புகின்றன. ஈழத்துக்குப் போய்த் தங்கிவிட்டு நம் மண்ணுக்குத் திரும்பவும் புலித் தம்பிகளோடு படகில் புறப்​பட்டேன். அப்போது தூரத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் நின்றுகொண்டிருந்தன. ''அங்கே பார்த்தீர்களா, அண்ணா? நம் கட்டுப்பாட்டுப் பரப்பில் நம் தமிழகச் சொந்தங்கள் சுதந்திரமாக மீன்பிடிக்கிறார்கள்!'' எனக் கை காட்டிச் சொன்னார்கள். பக்கத்தில் போனபோது என் முகம் அறிந்து நம் மீனவர்கள் கையை அசைத்து ஆரவாரிக்க,
''இவர்களின் படகிலேயே உங்களை அனுப்பி வைத்துவிடலாம். அரை மணி நேரத்தில், நீங்கள் தமிழகம் போய்விடுவீர்கள். ஆனாலும் அண்ணன் திட்டு​வார்!'' எனச் சொன்னார்கள் புலித் தம்பிகள். என் நெஞ்சம் எல்லாம் நிரம்பி வழிந்த நேரம் அது. தமிழக மீனவர்களுக்குப் புலிகளின் கடற்படை துணை நின்ற தருணங்களை நினைக்கிறபோதெல்லாம் சிங்களவனின் வெறியாட்டம் ரெட்டிப்பு வேதனையாய் என் நெஞ்சை அறுக்கிறது. தாய்த்தமிழ் உறவுகளாகத் தழுவிய அந்தச் சொந்தங்களைத்தான் பயங்கரவாதிகளாக நம் தேசம் பிரகடனப்படுத்தியது. பாசம் காட்டியவர்கள் பயங்கர​வாதிகள்! படுகொலை செய்பவர்கள் பாசக்காரர்கள்! இந்தியாவின் அணுகுமுறை என்னே! என்னே!

வியன்னாவில், ஒரு சீக்கியனின் தலைமுடியை அறுத்தமைக்காக சீக்கிய இனமே மொத்தமாக தெருவில் இறங்கிப் போராடியது. ஆனால், இங்கே எங்கள் தலையையே அறுத்த பின்னும் ஒருவனுமே போராட​வில்லை. ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவன் தாக்கப்பட்டபோது, மொத்த தேசமும் பொங்கி வெடித்​ததே! இந்திய மாணவனுக்கு கொடுக்கும் குரலை இந்திய மீனவனுக்கு கொடுக்க ஏனய்யா மறுக்கிறீர்கள்? எங்களின் மீனவன் கடலில் மிதக்கும்போது 'இந்திய மீன​வனின் சடலம்’ என்கிற அடையாளத்தைக்கூட இந்த அரசாங்கம் கொடுப்பது இல்லை. தமிழக மீனவனை இந்திய தேசத்தில் இருந்து தள்ளிவைக்கும் சட்டத்தை என்றைக்கு அய்யா பிறப்பித்​தீர்கள்?

இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் எங்களின் முதல்வர் திருமகனார் 'மட்டற்ற மகிழ்ச்சியில் பொங்கல் திருநாளைக் கொண்டாடுவோம்’ என அறிவித்து, தமிழர் தலைவனாக தன் கடமையைச் செவ்வனே செய்கிறார். கொலையான பாண்டியனின் செந்நீரிலும் அவர் குடும்பத்துக் கண்ணீரிலும் எங்கே அய்யா தேடுவது 'மட்டற்ற மகிழ்ச்சியை?’ இதற்காகத்​தானடா 'தமிழா இன உணர்வு கொள்’ என்பதைத் தொண்டை வரள வலியுறுத்துகிறேன். 'கொல், கொல்’ எனக் குரூரம் காட்டுபவனை வெல்வதற்காகவாவது இன உணர்வு கொள்ளடா தமிழா!

இதைச் சொன்னாலும் மீண்டும் ஏவுவார்கள் சட்டத்தை. 'மீனவனை அடித்தால், சிங்கள மாணவனை அடிப்பேன்’ என்றதற்காக என்னைத் தேசியப் பாது​காப்புச் சட்டத்தில் அடைத்த அறிவாளிகளே... 'சட்ட​மீறல்’ என சந்திக்கு இழுத்தவர்களே... 'அத்துமீறல்’ என அலறிய அரசியல் நுண்ணறிவாளர்களே! நான் அடிப்​பேன் என்றதில் குலைந்துபோன தேசியப் பாதுகாப்பு, சிங்களவன் அடித்ததில் குலையவில்லையா? என் பேச்சால் உருவான இனப்பகை சிங்களவனின் குண்டு வீச்சால் உருவாகவில்லையா?

அன்றைக்கு என் வார்த்தைகளை 'வரம்பு மீறல்’ என உரைத்த உத்தமர்களே! இப்போது சொல்லுங்கள்... நான் என்ன செய்ய?

-- சீமான்



அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 21, 2011 2:53 pm

திருப்பி அடிப்பேன் - 11- ஒரு தமிழனின் கோபம்  25749828

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Jan 21, 2011 2:56 pm

கோடானுகோடி பண உதவிகளையும் படை மரியாதைகளையும் ராணுவப் பயிற்சிகளையும் இந்திய அரசிடம் பெற்றுக்கொள்ளும் நட்பு நாடு என்கிற நாமகரணம் கொண்ட இலங்கை அரசு, தமிழக மீனவர்களைக் குருவியைப் போன்று சுட்டு வீழ்த்துகிறது

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது



தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Fri Jan 21, 2011 2:58 pm

நிறைய பேரு இப்படி பேசி பேசிய தமிழ் மக்களை ஏமாற்ற போறஙக சீமான் == திருமா

avatar
Guest
Guest

PostGuest Fri Jan 21, 2011 4:58 pm

தமிழ்ப்ரியன் விஜி wrote:நிறைய பேரு இப்படி பேசி பேசிய தமிழ் மக்களை ஏமாற்ற போறஙக சீமான் == திருமா

என்ன விஜி அரசியல்வாதி மாதிரி பேசுரிங்க.... நம்மள மாதிரி தமிழர்கள் பேசாம போராடமா தானா.... அங்கே namma appa அம்மா தங்கசீ எல்லாதாயும் கூறு கூறா அறுந்து கொன்னாங்க ... இனிமேலும் பேசாம இருகனுமா? pesavathu ஆள் இருகனு சந்தோஷ பதுங்க..... இவுங்க நம்மள எல்லாம் ஏமதி கோடி கோடீய kollayadika போறாங்க.... அட போங்க பா

உசிர arukura காண் ஒளி காமிசபவே காஸா வாங்கிட்டு ootu போட்ட தமிழ் மக்கள் இவங்க கிட்ட ஏமாந்துரு வாங்கலாம் .... என்ன கொடுமை சார் இது

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Jan 21, 2011 6:33 pm

"தமிழ் மக்கள் மிகவும் விழிப்பாக இருக்கவேண்டு இல்லையேல் அவர்களின் வாழ்வு இருண்டதாகிவிடும் "
தியாகி லேப்.கேணல் திலீபன்
கண்ணன்3536
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கண்ணன்3536

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக