புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_vote_lcapபொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_voting_barபொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_vote_rcap 
5 Posts - 63%
heezulia
பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_vote_lcapபொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_voting_barபொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_vote_rcap 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_vote_lcapபொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_voting_barபொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  I_vote_rcap 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jan 21, 2011 9:35 am

காவலன்

'பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  Kaavalan-Music-Review

காதலன் ஆனால்..?!’ -மூன்றே வார்த்தைதான் கதை!

ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். 'அசின் விஜய்யோடு ஊரைவிட்டு ஓடப் போகிறார்’ என்று கசியும் தகவலால் இருவரையும் சிறைப்படுத்துகிறார் ராஜ்கிரண். ரயில் நிலையத்தில் காதலி காத்திருப்பாள் என்று விஜய் பரிதவிக்க ராஜ்கிரண் அவரை நம்ப மறுக்கிறார். 'நான் இங்கு உங்களுடன்தான் இருப்பேன்!’ என்று ராஜ்கிரணைச் சமாதானப்படுத்தி விஜய்யை அனுப்பிவைக்கிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

மலையாள 'பாடிகார்டை’த் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் சித்திக். பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபம் சம்பாதிக் கும் பழைய காவலன் கதைதான். அதில் செல் காதல் கொஞ்சல்ஸை அப்டேட் செய்துகொடுத்திருக்கிறார் சித்திக்.

பில்ட் - அப் ஓப்பனிங்இ சூப்பர்மேன் சூரத்தனம் பஞ்ச் பராக்கிரமம் ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும் 'எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!

கணக்குக்கு இல்லாமல் கணக்காகக் கதையை நகர்த்தும் ஹீரோயினாக... அசின். கலாட்டா காதல் கலக்கம் என கியர் மாற்றி நடிப்பதில் நல்ல தேர்ச்சி. படம் நெடுக வராவிட்டாலும் தலை காட்டும் சமயம் எல்லாம் தியேட்டரை அதிரச் செய்கிறார் வடிவேலு. 'கண்ணதாஸா... யேசுதாஸா?’ 'பாரதியாரா... பாரதிராஜாவா..? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு!’ என்று சொதப்பும் காட்சிகளில் அக்மார்க் வடிவேலு வெடி. தனது காப்பிரைட் கம்பீரத்துடன் வளைய வருவதைத் தவிர ராஜ்கிரணுக்கு வேறு பெரிய வேலை இல்லை.

க்ளைமாக்ஸ் உண்மையிலேயே அதிரவைக்கும் திருப்பம்தான். ஆனால் அதைத் தவிரஇ மற்ற அனைத்தும் நாம் கணிக்கும் திசையிலேயே பயணிக் கிறது. விஜய்க்கு நேரிலேயே பார்க்காதஇ அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத செல்போன் காதலி மேல் அத்தனை தீவிரமாகக் காதல் தோன்றுவது ஏன்? டூப் லெட்டராகவே இருந்தாலும் போலீஸுக்கு வந்த உத்தரவில் விஜய் பாடிகார்டாகச் செல்வது கல்லூரிக் குள் வளைய வருவது போன்ற லாஜிக் மீறல்களை காமெடி கலாட்டாக்களுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்போல!

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு வானவில் வண்ணங்களை படம் முழுக்கப் பரப்பி இருக்கிறது. பின்னணி இசைக்கு அழுத்தம் சேர்த்த வித்யாசாகர் பாடல்களுக்கு இன்னும் விட்டமின் சேர்த்திருக்கலாம்!

இண்டஸ்ட்ரியில் விஜய்யின் ஸ்டேட்டஸுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறான் இந்தக் 'காவலன்’!


நன்றி விடுப்பு

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jan 21, 2011 9:41 am

ஆடுகளம்

பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  Aadukalam2

சீறிப் பாயும் சேவல் சண்டைப் பின்னணியில் குரோதமும் துரோகமும் கொப்பளிக்க மனித மனங்கள் ஆவேசமாகப் போரிடும் களம் - இந்த 'ஆடுகளம்’!

வட்டாரத்தில் பெயர்பெற்ற சேவல் சண்டைக்காரர் 'பேட்டைக்காரன்’ வ.ஐ.ச.ஜெயபாலன் (அறிமுகம்). அவரது சிஷ்யப் பிள்ளைகள் தனுஷ் மற்றும் கிஷோர். ஜெயபாலனிடம் சேவல் போட்டியில் மோதி ஒருமுறையாவது ஜெயித்துவிட வேண்டும் என்பது இன்னொரு போட்டியாளர் இன்ஸ் பெக்டர் நரேனின் கனவு. போட்டியில் தேறாது என்று ஜெயபாலன் அறுக்கச் சொன்ன சேவலை வளர்த்துப் பாதுகாக்கும் தனுஷ் ஜெயபாலன் - நரேனுக்கு இடையிலான சேவல் மோதலில் அதைக் களமிறக்குகிறார். வெற்றியும் பெறுகிறார். இது ஜெயபாலனுக்கு ஈகோவைக் கிளறிவிடுகிறது. அது பொறாமையும் பொறுமலும் வன்மமும் வக்கிரமுமாக மாற... ஜெயபாலன் தந்திரங்களால் தனுஷை வீழ்த்தத் துடிக்கும் போராட்டங்களை உயிர்ப்புடன் சொல்கிறது கதை.

வழக்கமான மதுரை சினிமா என்று எதிர் பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம். மதுரை தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட ஒரு கலாசார விளை யாட்டைக் களமாகத் தேர்ந்தெடுத்து அதை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் வெற்றி மாறனுக்குப் பாராட்டுகள். உடல்மொழியும் குரல்மொழியும் மதுரை இளைஞனாக மாற்றி இருக்கிறது தனுஷை. ஆங்கிலோ இந்தியப் பெண்னின் பின்னால் பித்துப் பிடித்து அலைவது குருவின் குரோதம் தெரியாமல் வெகுளித்தனத்தால் தன் வாழ்க்கையைத் தொலைப்பது இறுதியில் உண்மை உணர்ந்து உடைந்து கலங்குவது என 'கருப்பு’ பாத்திர மாகக் கரைந்து கலந்திருக்கிறார் தனுஷ்.

படத்தில் தனுஷக்கு ஈடுகொடுக்கும் களநாயகன் பேட்டைக்காரனாக நடித்து வாழ்ந்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். போலீஸ் ஸ்டேஷனில் நரேனிடம் அவமானப்படுவது தனுஷின் வளர்ச்சியை எரிச்சலோடு கவனிப்பது தன் மனைவி கிஷோர் தனுஷ் என ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி துரோகத்தின் விளையாட்டை நிகழ்த் திக்காட்டுவது என்று ஜெயபாலனின் ஆடுகளம் அசுரகளம்.

டாப்ஸி பொம்மைப் பொண்ணு. நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெள்ளாவி தேவதையாக உலா வருவதோடு சரி! உறவுக்காக உருகுவது கோபத்தில் முறுக்குவது என்று மனிதர்களின் பலம் பலவீனத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் கிஷோர். படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் கதைக்குக் கனம் சேர்க்கிறார்கள்.
மதுரையின் ராத்திரி சேவக்கட்டு மைதானம் என்று இடங்களின் தன்மைக்கு ஏற்ப மறைந்து நிறைந்து விளையாட்டு காட்டுகிறது வேல்ராஜின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் இசையில் 'யாத்தே’ பாடலுக்குத் தியேட்டரே கைலியால் முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கிக் குத்தாட்டம் போடத் துடிக்கிறது. படத்தின் முதல் பாதி யிலேயே சேவல் சண்டையின் அதீத பரபரப்பு நிகழ்ந்து முடிந்துவிடுவதால் பின் பாதியின் மிக நீண்ட பயணம் அலுப்பூட்டுகிறது. தனுஷ்- டாப்ஸி காதலும் அந்நியமாகத் துருத்துகிறது. கலாசாரத் தடங்களையும் மனித மனதின் உருமாற்றங்களையும் இவ்வளவு அழகாக இதற்கு முன் எந்தப் படமும் சொன்னதில்லை என்றவகையில் இந்தக் களம் புதிது!

நன்றி விடுப்பு

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jan 21, 2011 9:45 am

சிறுத்தை

பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  Siruththai-Tamil-movie-trailer-and-poster

சென்னை பிக்பாக்கெட் 'ராக்கெட்’ ராஜா ஆந்திரா போலீஸ் ரத்தினவேல் பாண்டியன். இருவரின் உருவ ஒற்றுமை ஆள் மாறாட்ட அடிதடி வேட்டையுமே 'சிறுத்தை’.

கார்த்தியும் சந்தானமும் லோக்கல் திருடர்கள். திடீரென்று கார்த்தியிடம் வந்து சேரும் ஒரு குழந்தை அவரை 'அப்பா’ என்கிறது. மர்மத்துக்கு விடை தேடினால் குழந்தையின் உண்மையான அப்பா ரத்தினவேல் பாண்டியன் (இன்னொரு கார்த்தி). ஆந்திர ரௌடிகளின் உடம்பில் கபடி ஆடிய சின்சியர் போலீஸ் ஆபீஸர். அநியாய அட்டூழிய ரௌடிகளில் முக்கால்வாசிப் பேரை போலீஸ் கார்த்தி வேட்டையாடிவிட்டு மரணம் அடைகிறார். மீதமுள்ள 'தலை’களை பிக்பாக்கெட் கார்த்தி பார்சல் செய்வது யுத்த சத்த ரத்த க்ளைமாக்ஸ்!

தெலுங்கில் ஹிட் அடித்த 'விக்ரமார்குடு’வை சூடு காரம் சுவை குறையாமல் தமிழ்க் கடுகு போட்டுத் தாளித்து இருக்கிறார் இயக்குநர் சிவா. ஊரையே மிரட்டும் ரௌடிகள் ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டுப் பழங் கஞ்சியை பட்டாக் கத்தி வெட்டுக் குத்து மாசாலா பூசிப் படைத்து இருக்கிறார்.

முதன்முறையாக இரு வேடங்களில் கார்த்தி. காமெடிக்கு ராக்கெட் அடிதடிக்கு ரத்னவேல் என வஞ்சனை இல்லாத வெரைட்டி விருந்து. திருட நுழைந்த திருமண வீட்டில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று மதி மயங்குவதும் தமன்னாவுடனான காதலுக்காக அலைந்து திரிவதுமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் கார்த்தி. முழு மசாலா படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்பதில் கார்த்தியிடம் அபார தேர்ச்சி! 'சூப்பர்மேனுக்கே’ சவால் விடுவதுபோல எப்போதும் டஜன் ஆட் களைப் பரலோகத்துக்கு பாக்கெட் பண்ணிக்கொண்டே இருக்கும் ஒன்மேன் போலீஸ் டிபார்ட்மென்ட்டாக போலீஸ் கார்த்தி பரபரப்பது... காதுல பூ!

தம்மாத்துண்டு இடுப்பைத் திரையில் சரித்துக்கொண்டே நிற்கும் 'லைஃப் டைம் கேரக்டர்’ தமன்னாவுக்கு. மற்றபடி விசேஷம் இல்லை. சம்பவங்கள் இல்லாத முதல் பாதி முழுக்க 'சந்தான’ சாம்ராஜ்யம்! 'எத்தனையோ கடையில திருடிட்டேன். கடைசியில மருந்துக் கடையிலயே திருட வெச்சுட்டியேடா!’ என்று கலங்கிச் சதாய்ப்பதிலும் 'அது என்னடா எல்லா ரௌடிக்கும் 'டேய்’ங்கிறதுதான் ரிங்டோனா?’ என்று கலாய்ப்பதிலும் 'அட்றா சக்கை... அட்றா சக்கை’ அப்ளாஸ்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை மூளைக்கு வேலை வைக்காத திரைக்கதை! 'இவ்வளவு மோசமான ஒரு ஊர் எப்படி இந்தியாவில் இருக்க முடியும்?’ 'பிக்பாக்கெட் கார்த்தி எப்படி போலீஸ் கார்த்தியாக போலீஸ் யூனிஃபார்ம் அணிய முடியும்?’ என்று படம் முழுக்க முளைத்துக் கிளம்புகின்றன கேள்விகள்.

அந்த ஆந்திர ரௌடிகள் காமெடியில் சந்தானத் துக்குச் சவால்விடும் கிக்கிலி பிக்கிலி பிஸ்கோத்துகள். அனலடிக்கும் ஆந்திர வெயிலுக்குக் கறுப்பு போர்வை போர்த்தி நடமாடுகிறார் ஒருவர். 'ஆப்ஷன் ஏ சொல்லியிருக்கான். அப்போ அங்கேதான் குண்டு வெடிக்கும்!’ என்று கைப்புள்ள கணக்காகக் கதறித் திரிகிறார் இன்னொருவர். போலீஸ் அதிகாரி கார்த்தி மிடுக்காகச் செய்ய முடியாத காரியத்தைத் திருடன் கார்த்தி காமெடியாகச் செய்து முடிப்பது இரண்டு கேரக்டர்களையுமே காலி செய்கிறதே?

சிங்கத்தைப் பார்த்து சிறுத்தை கற்றுக்கொள்ள வேண்டும்!

நன்றி விடுப்பு

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Jan 21, 2011 10:08 am

அது சரி... இளைஞன் என்னாச்சு...?

எல்லா விமர்சனமும் ஒரே இடத்தில் பார்க்க வசதியாக இருக்கிறது..

மிக்க நன்றி வாலு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Jan 21, 2011 12:19 pm

விஜய்க்கு நீண்ட நாளுக்கு பின் ஒரு வெற்றி படம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Jan 21, 2011 12:24 pm

தெளிவான விமர்சனத்திற்கு நன்றி பிரியா



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Fri Jan 21, 2011 2:23 pm

பகிர்வுக்கு நன்றி..

அதானே.. இளைஞன் என்னாச்சு..?




பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  0018-2பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  0001-3பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  0010-3பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை  0001-3
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக