புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பொங்கலுக்கு வெளியாகிய திரைப்படங்கள் ஒரு பார்வை
Page 1 of 1 •
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
காவலன்
'
காதலன் ஆனால்..?!’ -மூன்றே வார்த்தைதான் கதை!
ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். 'அசின் விஜய்யோடு ஊரைவிட்டு ஓடப் போகிறார்’ என்று கசியும் தகவலால் இருவரையும் சிறைப்படுத்துகிறார் ராஜ்கிரண். ரயில் நிலையத்தில் காதலி காத்திருப்பாள் என்று விஜய் பரிதவிக்க ராஜ்கிரண் அவரை நம்ப மறுக்கிறார். 'நான் இங்கு உங்களுடன்தான் இருப்பேன்!’ என்று ராஜ்கிரணைச் சமாதானப்படுத்தி விஜய்யை அனுப்பிவைக்கிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
மலையாள 'பாடிகார்டை’த் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் சித்திக். பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபம் சம்பாதிக் கும் பழைய காவலன் கதைதான். அதில் செல் காதல் கொஞ்சல்ஸை அப்டேட் செய்துகொடுத்திருக்கிறார் சித்திக்.
பில்ட் - அப் ஓப்பனிங்இ சூப்பர்மேன் சூரத்தனம் பஞ்ச் பராக்கிரமம் ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும் 'எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!
கணக்குக்கு இல்லாமல் கணக்காகக் கதையை நகர்த்தும் ஹீரோயினாக... அசின். கலாட்டா காதல் கலக்கம் என கியர் மாற்றி நடிப்பதில் நல்ல தேர்ச்சி. படம் நெடுக வராவிட்டாலும் தலை காட்டும் சமயம் எல்லாம் தியேட்டரை அதிரச் செய்கிறார் வடிவேலு. 'கண்ணதாஸா... யேசுதாஸா?’ 'பாரதியாரா... பாரதிராஜாவா..? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு!’ என்று சொதப்பும் காட்சிகளில் அக்மார்க் வடிவேலு வெடி. தனது காப்பிரைட் கம்பீரத்துடன் வளைய வருவதைத் தவிர ராஜ்கிரணுக்கு வேறு பெரிய வேலை இல்லை.
க்ளைமாக்ஸ் உண்மையிலேயே அதிரவைக்கும் திருப்பம்தான். ஆனால் அதைத் தவிரஇ மற்ற அனைத்தும் நாம் கணிக்கும் திசையிலேயே பயணிக் கிறது. விஜய்க்கு நேரிலேயே பார்க்காதஇ அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத செல்போன் காதலி மேல் அத்தனை தீவிரமாகக் காதல் தோன்றுவது ஏன்? டூப் லெட்டராகவே இருந்தாலும் போலீஸுக்கு வந்த உத்தரவில் விஜய் பாடிகார்டாகச் செல்வது கல்லூரிக் குள் வளைய வருவது போன்ற லாஜிக் மீறல்களை காமெடி கலாட்டாக்களுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்போல!
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு வானவில் வண்ணங்களை படம் முழுக்கப் பரப்பி இருக்கிறது. பின்னணி இசைக்கு அழுத்தம் சேர்த்த வித்யாசாகர் பாடல்களுக்கு இன்னும் விட்டமின் சேர்த்திருக்கலாம்!
இண்டஸ்ட்ரியில் விஜய்யின் ஸ்டேட்டஸுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறான் இந்தக் 'காவலன்’!
நன்றி விடுப்பு
'
காதலன் ஆனால்..?!’ -மூன்றே வார்த்தைதான் கதை!
ராஜ்கிரண் மேல் மகா அபிமானம் வைத்திருக்கிறார் விஜய். கொலை மிரட்டல் காரணமாக ராஜ்கிரணின் மகள் அசினுக்கு பாடிகார்டாகச் செல்கிறார். விஜய்யின் 24X7 கெடுபிடியில் வெந்து தவிக்கிறார் அசின். விஜய்யை ரூட் மாற்றிவிடுவதற்காக செல்போனில் குரலை மாற்றிக் காதல் பேசுகிறார். ஒரு கட்டத்தில் செல்போன் காதலி மீது விஜய் வைத்துஇருக்கும் காதலில் நெகிழ்ந்து அவரிடம் தான் யார் என்கிற உண்மையைச் சொல்லத் தயாராகிறார் அசின். 'அசின் விஜய்யோடு ஊரைவிட்டு ஓடப் போகிறார்’ என்று கசியும் தகவலால் இருவரையும் சிறைப்படுத்துகிறார் ராஜ்கிரண். ரயில் நிலையத்தில் காதலி காத்திருப்பாள் என்று விஜய் பரிதவிக்க ராஜ்கிரண் அவரை நம்ப மறுக்கிறார். 'நான் இங்கு உங்களுடன்தான் இருப்பேன்!’ என்று ராஜ்கிரணைச் சமாதானப்படுத்தி விஜய்யை அனுப்பிவைக்கிறார் அசின். ரயில் நிலையத்தில் விஜய் காத்திருக்க காதலி வராவிட்டால் விஜய்யைக் கொல்வதற்கு ராஜ்கிரணின் ஆட்கள் காத்திருக்கிறார்கள். அசின் வந்தாரா? விஜய் உயிர் பிழைத்தாரா என்பது க்ளைமாக்ஸ்.
மலையாள 'பாடிகார்டை’த் தமிழ் பேச வைத்திருக்கிறார் இயக்குநர் சித்திக். பெரிய இடத்துப் பெண் மேல் காதல் கொண்டு எஜமானின் கோபம் சம்பாதிக் கும் பழைய காவலன் கதைதான். அதில் செல் காதல் கொஞ்சல்ஸை அப்டேட் செய்துகொடுத்திருக்கிறார் சித்திக்.
பில்ட் - அப் ஓப்பனிங்இ சூப்பர்மேன் சூரத்தனம் பஞ்ச் பராக்கிரமம் ஆக்ஷன் அவதாரம் என எந்த அலட்டல் மிரட்டலும் இல்லாத 'ஸோ ஸாஃப்ட்’ விஜய் சினிமா! காதலியை முதன்முதல் சந்திக்கப் போகும் தவிப்பில் பூங்கா இருக்கையில் இடறி விழுந்து சமாளிப்பதும் 'எனக்காக வேண்டிக்கங்க!’ என்று கலங்கிய கண்களுமாக... வெல்கம் விஜய்!
கணக்குக்கு இல்லாமல் கணக்காகக் கதையை நகர்த்தும் ஹீரோயினாக... அசின். கலாட்டா காதல் கலக்கம் என கியர் மாற்றி நடிப்பதில் நல்ல தேர்ச்சி. படம் நெடுக வராவிட்டாலும் தலை காட்டும் சமயம் எல்லாம் தியேட்டரை அதிரச் செய்கிறார் வடிவேலு. 'கண்ணதாஸா... யேசுதாஸா?’ 'பாரதியாரா... பாரதிராஜாவா..? பாவம் அவரே கன்ஃப்யூஸ் ஆயிட்டாரு!’ என்று சொதப்பும் காட்சிகளில் அக்மார்க் வடிவேலு வெடி. தனது காப்பிரைட் கம்பீரத்துடன் வளைய வருவதைத் தவிர ராஜ்கிரணுக்கு வேறு பெரிய வேலை இல்லை.
க்ளைமாக்ஸ் உண்மையிலேயே அதிரவைக்கும் திருப்பம்தான். ஆனால் அதைத் தவிரஇ மற்ற அனைத்தும் நாம் கணிக்கும் திசையிலேயே பயணிக் கிறது. விஜய்க்கு நேரிலேயே பார்க்காதஇ அதிகம் இம்ப்ரஸ் பண்ணாத செல்போன் காதலி மேல் அத்தனை தீவிரமாகக் காதல் தோன்றுவது ஏன்? டூப் லெட்டராகவே இருந்தாலும் போலீஸுக்கு வந்த உத்தரவில் விஜய் பாடிகார்டாகச் செல்வது கல்லூரிக் குள் வளைய வருவது போன்ற லாஜிக் மீறல்களை காமெடி கலாட்டாக்களுக்காகப் பொறுத்துக்கொள்ள வேண்டும்போல!
ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு வானவில் வண்ணங்களை படம் முழுக்கப் பரப்பி இருக்கிறது. பின்னணி இசைக்கு அழுத்தம் சேர்த்த வித்யாசாகர் பாடல்களுக்கு இன்னும் விட்டமின் சேர்த்திருக்கலாம்!
இண்டஸ்ட்ரியில் விஜய்யின் ஸ்டேட்டஸுக்குப் பாதுகாப்பு அளித்திருக்கிறான் இந்தக் 'காவலன்’!
நன்றி விடுப்பு
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
ஆடுகளம்
சீறிப் பாயும் சேவல் சண்டைப் பின்னணியில் குரோதமும் துரோகமும் கொப்பளிக்க மனித மனங்கள் ஆவேசமாகப் போரிடும் களம் - இந்த 'ஆடுகளம்’!
வட்டாரத்தில் பெயர்பெற்ற சேவல் சண்டைக்காரர் 'பேட்டைக்காரன்’ வ.ஐ.ச.ஜெயபாலன் (அறிமுகம்). அவரது சிஷ்யப் பிள்ளைகள் தனுஷ் மற்றும் கிஷோர். ஜெயபாலனிடம் சேவல் போட்டியில் மோதி ஒருமுறையாவது ஜெயித்துவிட வேண்டும் என்பது இன்னொரு போட்டியாளர் இன்ஸ் பெக்டர் நரேனின் கனவு. போட்டியில் தேறாது என்று ஜெயபாலன் அறுக்கச் சொன்ன சேவலை வளர்த்துப் பாதுகாக்கும் தனுஷ் ஜெயபாலன் - நரேனுக்கு இடையிலான சேவல் மோதலில் அதைக் களமிறக்குகிறார். வெற்றியும் பெறுகிறார். இது ஜெயபாலனுக்கு ஈகோவைக் கிளறிவிடுகிறது. அது பொறாமையும் பொறுமலும் வன்மமும் வக்கிரமுமாக மாற... ஜெயபாலன் தந்திரங்களால் தனுஷை வீழ்த்தத் துடிக்கும் போராட்டங்களை உயிர்ப்புடன் சொல்கிறது கதை.
வழக்கமான மதுரை சினிமா என்று எதிர் பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம். மதுரை தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட ஒரு கலாசார விளை யாட்டைக் களமாகத் தேர்ந்தெடுத்து அதை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் வெற்றி மாறனுக்குப் பாராட்டுகள். உடல்மொழியும் குரல்மொழியும் மதுரை இளைஞனாக மாற்றி இருக்கிறது தனுஷை. ஆங்கிலோ இந்தியப் பெண்னின் பின்னால் பித்துப் பிடித்து அலைவது குருவின் குரோதம் தெரியாமல் வெகுளித்தனத்தால் தன் வாழ்க்கையைத் தொலைப்பது இறுதியில் உண்மை உணர்ந்து உடைந்து கலங்குவது என 'கருப்பு’ பாத்திர மாகக் கரைந்து கலந்திருக்கிறார் தனுஷ்.
படத்தில் தனுஷக்கு ஈடுகொடுக்கும் களநாயகன் பேட்டைக்காரனாக நடித்து வாழ்ந்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். போலீஸ் ஸ்டேஷனில் நரேனிடம் அவமானப்படுவது தனுஷின் வளர்ச்சியை எரிச்சலோடு கவனிப்பது தன் மனைவி கிஷோர் தனுஷ் என ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி துரோகத்தின் விளையாட்டை நிகழ்த் திக்காட்டுவது என்று ஜெயபாலனின் ஆடுகளம் அசுரகளம்.
டாப்ஸி பொம்மைப் பொண்ணு. நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெள்ளாவி தேவதையாக உலா வருவதோடு சரி! உறவுக்காக உருகுவது கோபத்தில் முறுக்குவது என்று மனிதர்களின் பலம் பலவீனத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் கிஷோர். படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் கதைக்குக் கனம் சேர்க்கிறார்கள்.
மதுரையின் ராத்திரி சேவக்கட்டு மைதானம் என்று இடங்களின் தன்மைக்கு ஏற்ப மறைந்து நிறைந்து விளையாட்டு காட்டுகிறது வேல்ராஜின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் இசையில் 'யாத்தே’ பாடலுக்குத் தியேட்டரே கைலியால் முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கிக் குத்தாட்டம் போடத் துடிக்கிறது. படத்தின் முதல் பாதி யிலேயே சேவல் சண்டையின் அதீத பரபரப்பு நிகழ்ந்து முடிந்துவிடுவதால் பின் பாதியின் மிக நீண்ட பயணம் அலுப்பூட்டுகிறது. தனுஷ்- டாப்ஸி காதலும் அந்நியமாகத் துருத்துகிறது. கலாசாரத் தடங்களையும் மனித மனதின் உருமாற்றங்களையும் இவ்வளவு அழகாக இதற்கு முன் எந்தப் படமும் சொன்னதில்லை என்றவகையில் இந்தக் களம் புதிது!
நன்றி விடுப்பு
சீறிப் பாயும் சேவல் சண்டைப் பின்னணியில் குரோதமும் துரோகமும் கொப்பளிக்க மனித மனங்கள் ஆவேசமாகப் போரிடும் களம் - இந்த 'ஆடுகளம்’!
வட்டாரத்தில் பெயர்பெற்ற சேவல் சண்டைக்காரர் 'பேட்டைக்காரன்’ வ.ஐ.ச.ஜெயபாலன் (அறிமுகம்). அவரது சிஷ்யப் பிள்ளைகள் தனுஷ் மற்றும் கிஷோர். ஜெயபாலனிடம் சேவல் போட்டியில் மோதி ஒருமுறையாவது ஜெயித்துவிட வேண்டும் என்பது இன்னொரு போட்டியாளர் இன்ஸ் பெக்டர் நரேனின் கனவு. போட்டியில் தேறாது என்று ஜெயபாலன் அறுக்கச் சொன்ன சேவலை வளர்த்துப் பாதுகாக்கும் தனுஷ் ஜெயபாலன் - நரேனுக்கு இடையிலான சேவல் மோதலில் அதைக் களமிறக்குகிறார். வெற்றியும் பெறுகிறார். இது ஜெயபாலனுக்கு ஈகோவைக் கிளறிவிடுகிறது. அது பொறாமையும் பொறுமலும் வன்மமும் வக்கிரமுமாக மாற... ஜெயபாலன் தந்திரங்களால் தனுஷை வீழ்த்தத் துடிக்கும் போராட்டங்களை உயிர்ப்புடன் சொல்கிறது கதை.
வழக்கமான மதுரை சினிமா என்று எதிர் பார்த்துச் செல்பவர்களுக்கு இந்தப் படம் இனிய ஏமாற்றம். மதுரை தமிழர்களின் குருதியில் கலந்துவிட்ட ஒரு கலாசார விளை யாட்டைக் களமாகத் தேர்ந்தெடுத்து அதை நுட்பமாகச் செதுக்கியிருக்கும் வெற்றி மாறனுக்குப் பாராட்டுகள். உடல்மொழியும் குரல்மொழியும் மதுரை இளைஞனாக மாற்றி இருக்கிறது தனுஷை. ஆங்கிலோ இந்தியப் பெண்னின் பின்னால் பித்துப் பிடித்து அலைவது குருவின் குரோதம் தெரியாமல் வெகுளித்தனத்தால் தன் வாழ்க்கையைத் தொலைப்பது இறுதியில் உண்மை உணர்ந்து உடைந்து கலங்குவது என 'கருப்பு’ பாத்திர மாகக் கரைந்து கலந்திருக்கிறார் தனுஷ்.
படத்தில் தனுஷக்கு ஈடுகொடுக்கும் களநாயகன் பேட்டைக்காரனாக நடித்து வாழ்ந்திருக்கிறார் ஈழத்துக் கவிஞர் வ.ஐ.ச.ஜெயபாலன். போலீஸ் ஸ்டேஷனில் நரேனிடம் அவமானப்படுவது தனுஷின் வளர்ச்சியை எரிச்சலோடு கவனிப்பது தன் மனைவி கிஷோர் தனுஷ் என ஒவ்வொரு மனிதரிடமும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லி துரோகத்தின் விளையாட்டை நிகழ்த் திக்காட்டுவது என்று ஜெயபாலனின் ஆடுகளம் அசுரகளம்.
டாப்ஸி பொம்மைப் பொண்ணு. நடிக்க வாய்ப்பு இல்லாமல் வெள்ளாவி தேவதையாக உலா வருவதோடு சரி! உறவுக்காக உருகுவது கோபத்தில் முறுக்குவது என்று மனிதர்களின் பலம் பலவீனத்தை இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் கிஷோர். படத்தின் ஒவ்வொரு பாத்திரமும் கதைக்குக் கனம் சேர்க்கிறார்கள்.
மதுரையின் ராத்திரி சேவக்கட்டு மைதானம் என்று இடங்களின் தன்மைக்கு ஏற்ப மறைந்து நிறைந்து விளையாட்டு காட்டுகிறது வேல்ராஜின் கேமரா. ஜி.வி.பிரகாஷின் இசையில் 'யாத்தே’ பாடலுக்குத் தியேட்டரே கைலியால் முகத்தை மூடி குலுங்கிக் குலுங்கிக் குத்தாட்டம் போடத் துடிக்கிறது. படத்தின் முதல் பாதி யிலேயே சேவல் சண்டையின் அதீத பரபரப்பு நிகழ்ந்து முடிந்துவிடுவதால் பின் பாதியின் மிக நீண்ட பயணம் அலுப்பூட்டுகிறது. தனுஷ்- டாப்ஸி காதலும் அந்நியமாகத் துருத்துகிறது. கலாசாரத் தடங்களையும் மனித மனதின் உருமாற்றங்களையும் இவ்வளவு அழகாக இதற்கு முன் எந்தப் படமும் சொன்னதில்லை என்றவகையில் இந்தக் களம் புதிது!
நன்றி விடுப்பு
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
சிறுத்தை
சென்னை பிக்பாக்கெட் 'ராக்கெட்’ ராஜா ஆந்திரா போலீஸ் ரத்தினவேல் பாண்டியன். இருவரின் உருவ ஒற்றுமை ஆள் மாறாட்ட அடிதடி வேட்டையுமே 'சிறுத்தை’.
கார்த்தியும் சந்தானமும் லோக்கல் திருடர்கள். திடீரென்று கார்த்தியிடம் வந்து சேரும் ஒரு குழந்தை அவரை 'அப்பா’ என்கிறது. மர்மத்துக்கு விடை தேடினால் குழந்தையின் உண்மையான அப்பா ரத்தினவேல் பாண்டியன் (இன்னொரு கார்த்தி). ஆந்திர ரௌடிகளின் உடம்பில் கபடி ஆடிய சின்சியர் போலீஸ் ஆபீஸர். அநியாய அட்டூழிய ரௌடிகளில் முக்கால்வாசிப் பேரை போலீஸ் கார்த்தி வேட்டையாடிவிட்டு மரணம் அடைகிறார். மீதமுள்ள 'தலை’களை பிக்பாக்கெட் கார்த்தி பார்சல் செய்வது யுத்த சத்த ரத்த க்ளைமாக்ஸ்!
தெலுங்கில் ஹிட் அடித்த 'விக்ரமார்குடு’வை சூடு காரம் சுவை குறையாமல் தமிழ்க் கடுகு போட்டுத் தாளித்து இருக்கிறார் இயக்குநர் சிவா. ஊரையே மிரட்டும் ரௌடிகள் ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டுப் பழங் கஞ்சியை பட்டாக் கத்தி வெட்டுக் குத்து மாசாலா பூசிப் படைத்து இருக்கிறார்.
முதன்முறையாக இரு வேடங்களில் கார்த்தி. காமெடிக்கு ராக்கெட் அடிதடிக்கு ரத்னவேல் என வஞ்சனை இல்லாத வெரைட்டி விருந்து. திருட நுழைந்த திருமண வீட்டில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று மதி மயங்குவதும் தமன்னாவுடனான காதலுக்காக அலைந்து திரிவதுமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் கார்த்தி. முழு மசாலா படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்பதில் கார்த்தியிடம் அபார தேர்ச்சி! 'சூப்பர்மேனுக்கே’ சவால் விடுவதுபோல எப்போதும் டஜன் ஆட் களைப் பரலோகத்துக்கு பாக்கெட் பண்ணிக்கொண்டே இருக்கும் ஒன்மேன் போலீஸ் டிபார்ட்மென்ட்டாக போலீஸ் கார்த்தி பரபரப்பது... காதுல பூ!
தம்மாத்துண்டு இடுப்பைத் திரையில் சரித்துக்கொண்டே நிற்கும் 'லைஃப் டைம் கேரக்டர்’ தமன்னாவுக்கு. மற்றபடி விசேஷம் இல்லை. சம்பவங்கள் இல்லாத முதல் பாதி முழுக்க 'சந்தான’ சாம்ராஜ்யம்! 'எத்தனையோ கடையில திருடிட்டேன். கடைசியில மருந்துக் கடையிலயே திருட வெச்சுட்டியேடா!’ என்று கலங்கிச் சதாய்ப்பதிலும் 'அது என்னடா எல்லா ரௌடிக்கும் 'டேய்’ங்கிறதுதான் ரிங்டோனா?’ என்று கலாய்ப்பதிலும் 'அட்றா சக்கை... அட்றா சக்கை’ அப்ளாஸ்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை மூளைக்கு வேலை வைக்காத திரைக்கதை! 'இவ்வளவு மோசமான ஒரு ஊர் எப்படி இந்தியாவில் இருக்க முடியும்?’ 'பிக்பாக்கெட் கார்த்தி எப்படி போலீஸ் கார்த்தியாக போலீஸ் யூனிஃபார்ம் அணிய முடியும்?’ என்று படம் முழுக்க முளைத்துக் கிளம்புகின்றன கேள்விகள்.
அந்த ஆந்திர ரௌடிகள் காமெடியில் சந்தானத் துக்குச் சவால்விடும் கிக்கிலி பிக்கிலி பிஸ்கோத்துகள். அனலடிக்கும் ஆந்திர வெயிலுக்குக் கறுப்பு போர்வை போர்த்தி நடமாடுகிறார் ஒருவர். 'ஆப்ஷன் ஏ சொல்லியிருக்கான். அப்போ அங்கேதான் குண்டு வெடிக்கும்!’ என்று கைப்புள்ள கணக்காகக் கதறித் திரிகிறார் இன்னொருவர். போலீஸ் அதிகாரி கார்த்தி மிடுக்காகச் செய்ய முடியாத காரியத்தைத் திருடன் கார்த்தி காமெடியாகச் செய்து முடிப்பது இரண்டு கேரக்டர்களையுமே காலி செய்கிறதே?
சிங்கத்தைப் பார்த்து சிறுத்தை கற்றுக்கொள்ள வேண்டும்!
நன்றி விடுப்பு
சென்னை பிக்பாக்கெட் 'ராக்கெட்’ ராஜா ஆந்திரா போலீஸ் ரத்தினவேல் பாண்டியன். இருவரின் உருவ ஒற்றுமை ஆள் மாறாட்ட அடிதடி வேட்டையுமே 'சிறுத்தை’.
கார்த்தியும் சந்தானமும் லோக்கல் திருடர்கள். திடீரென்று கார்த்தியிடம் வந்து சேரும் ஒரு குழந்தை அவரை 'அப்பா’ என்கிறது. மர்மத்துக்கு விடை தேடினால் குழந்தையின் உண்மையான அப்பா ரத்தினவேல் பாண்டியன் (இன்னொரு கார்த்தி). ஆந்திர ரௌடிகளின் உடம்பில் கபடி ஆடிய சின்சியர் போலீஸ் ஆபீஸர். அநியாய அட்டூழிய ரௌடிகளில் முக்கால்வாசிப் பேரை போலீஸ் கார்த்தி வேட்டையாடிவிட்டு மரணம் அடைகிறார். மீதமுள்ள 'தலை’களை பிக்பாக்கெட் கார்த்தி பார்சல் செய்வது யுத்த சத்த ரத்த க்ளைமாக்ஸ்!
தெலுங்கில் ஹிட் அடித்த 'விக்ரமார்குடு’வை சூடு காரம் சுவை குறையாமல் தமிழ்க் கடுகு போட்டுத் தாளித்து இருக்கிறார் இயக்குநர் சிவா. ஊரையே மிரட்டும் ரௌடிகள் ஒடுங்கி வாழும் மக்கள் என 18-ம் நூற்றாண்டுப் பழங் கஞ்சியை பட்டாக் கத்தி வெட்டுக் குத்து மாசாலா பூசிப் படைத்து இருக்கிறார்.
முதன்முறையாக இரு வேடங்களில் கார்த்தி. காமெடிக்கு ராக்கெட் அடிதடிக்கு ரத்னவேல் என வஞ்சனை இல்லாத வெரைட்டி விருந்து. திருட நுழைந்த திருமண வீட்டில் 'கண்ணா லட்டு தின்ன ஆசையா?’ என்று மதி மயங்குவதும் தமன்னாவுடனான காதலுக்காக அலைந்து திரிவதுமாக வெளுத்துக் கட்டியிருக்கிறார் கார்த்தி. முழு மசாலா படத்தை ஒற்றை ஆளாகத் தாங்கி நிற்பதில் கார்த்தியிடம் அபார தேர்ச்சி! 'சூப்பர்மேனுக்கே’ சவால் விடுவதுபோல எப்போதும் டஜன் ஆட் களைப் பரலோகத்துக்கு பாக்கெட் பண்ணிக்கொண்டே இருக்கும் ஒன்மேன் போலீஸ் டிபார்ட்மென்ட்டாக போலீஸ் கார்த்தி பரபரப்பது... காதுல பூ!
தம்மாத்துண்டு இடுப்பைத் திரையில் சரித்துக்கொண்டே நிற்கும் 'லைஃப் டைம் கேரக்டர்’ தமன்னாவுக்கு. மற்றபடி விசேஷம் இல்லை. சம்பவங்கள் இல்லாத முதல் பாதி முழுக்க 'சந்தான’ சாம்ராஜ்யம்! 'எத்தனையோ கடையில திருடிட்டேன். கடைசியில மருந்துக் கடையிலயே திருட வெச்சுட்டியேடா!’ என்று கலங்கிச் சதாய்ப்பதிலும் 'அது என்னடா எல்லா ரௌடிக்கும் 'டேய்’ங்கிறதுதான் ரிங்டோனா?’ என்று கலாய்ப்பதிலும் 'அட்றா சக்கை... அட்றா சக்கை’ அப்ளாஸ்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை மூளைக்கு வேலை வைக்காத திரைக்கதை! 'இவ்வளவு மோசமான ஒரு ஊர் எப்படி இந்தியாவில் இருக்க முடியும்?’ 'பிக்பாக்கெட் கார்த்தி எப்படி போலீஸ் கார்த்தியாக போலீஸ் யூனிஃபார்ம் அணிய முடியும்?’ என்று படம் முழுக்க முளைத்துக் கிளம்புகின்றன கேள்விகள்.
அந்த ஆந்திர ரௌடிகள் காமெடியில் சந்தானத் துக்குச் சவால்விடும் கிக்கிலி பிக்கிலி பிஸ்கோத்துகள். அனலடிக்கும் ஆந்திர வெயிலுக்குக் கறுப்பு போர்வை போர்த்தி நடமாடுகிறார் ஒருவர். 'ஆப்ஷன் ஏ சொல்லியிருக்கான். அப்போ அங்கேதான் குண்டு வெடிக்கும்!’ என்று கைப்புள்ள கணக்காகக் கதறித் திரிகிறார் இன்னொருவர். போலீஸ் அதிகாரி கார்த்தி மிடுக்காகச் செய்ய முடியாத காரியத்தைத் திருடன் கார்த்தி காமெடியாகச் செய்து முடிப்பது இரண்டு கேரக்டர்களையுமே காலி செய்கிறதே?
சிங்கத்தைப் பார்த்து சிறுத்தை கற்றுக்கொள்ள வேண்டும்!
நன்றி விடுப்பு
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
தெளிவான விமர்சனத்திற்கு நன்றி பிரியா
"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- Sponsored content
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|