புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
by ayyasamy ram Yesterday at 11:35 pm
» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm
» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm
» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm
» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm
» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm
» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm
» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm
» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm
» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm
» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am
» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm
» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm
» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm
» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm
» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm
» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm
» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm
» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm
» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm
» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி |
இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்
பெருமானாரின் இறுதி hajj
Page 1 of 1 •
- mkamalபுதியவர்
- பதிவுகள் : 34
இணைந்தது : 17/01/2011
பெருமானாரின் இறுதி ஹஜ்
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
பாவக் கைகளின் பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத் துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
தன் உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர் அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து நின்றன !
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து கிடந்தன !
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
பெருமானார் அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !
(பி. எம். கமால், கடையநல்லூர்)
ஆயிரத்து நானூறு
ஆண்டுகட்கு முன்னால்
சூரியன் முகத்திலும்
சூனிய இருட்டுப்பூச்சு !
வெளிச்சம் செத்த
பாலை எங்கும் இருட்டு !
உளிகள் கொத்திக்
குதறிய கற்கள்
தௌஹீதுக் கொள்கைக்கு
தடைக் கற்களாயின !
வினாடிகளின் நாடித்துடிப்பு
வேர்பரிக்கத் துடித்தது !
இரவுகள் விடியலைத் தின்று
வீங்கிக் கிடந்தன !
ரணமாகிச் சீழ் பிடித்த
மாதங்கள்
சர்வரோக வருடத்தை
சாஸ்வதமாக்கின !
பாவக் கைகளின் பரிசாய்
கால ஓவியங்களில்
கறைகள்... கறைகள்...கறைகள் ....!
கறைகளைத் துடைத்து
ஒதுக்கவா ?
காலத்தையே உடைத்துப்
புதுக்கவா
அந்த ஒளி ?
இருட்டு அச்சில்
கரும்பந்தாய்
சுற்றிய உலகம்
தன் உருவத்தைக்
காறித் துப்பிவிட்டு
தன்
மூல ஒளியைக் காண
சிலிர்த்துக்
கோடிச் சூரியப்
பிரகாசமானது !
அந்த
மூல ஒளிதான்
இந்தப் பூமி அகலில்
சுடர் விட்டொளிரும்
மனிதத் திரிகளுக்கும்
ஒளியை வழங்கிய
வள்ளல் நாயகம் !
ஆமாம் !- தனது
பேரொளியைப் பகிர்ந்தளித்த
வானவன் தூதர்
வள்ளல் நாயகம் !
எங்கள் நாயகம் ஒளியா ?
இல்லை நிழல் !
ஓர் அருவத்தின் நிழல் !
நிஜத்தை உணர்த்த வந்த
நிழல் !
அந்த நிழலுக்கேது
இன்னொரு நிழல் ?
பெருமானார்-
சொர்கத்திற்கு
இறைவன் அளித்த
மக்கத்துப் பரிசு !
நேற்று-
வானமும் பூமியும்
பிறந்த தாய் மண்ணில்
வேர்களையும் மணக்க வைத்த
வெள்ளைப் பூக்கள்
தௌஹீதுத் தென்றலில்
தலையசைத்து நின்றன !
அந்த
மலர்களின் மத்தியில்
பெருமானார் பேசினார்கள் !
பேச்சா அது ?
இல்லை !-
இறைவழிப்பட்ட மூச்சு !
திருமறை மொழி
வெள்ளமாய்
பிரவகித்தோடிய
பெருங்கடல் மடைதிறப்பு !
அன்று-
வேற்றுமை பகைமை
பொய்மை ஆகிய
ஆன்மச்சுவரை
அழுக்காகுகின்ற
கருமைகளைப் பெருமானார்
காலடியில் மிதித்தார்கள் !
அந்தப் பெருவெளியில்
அண்ணல் பெருமானார்
திருமறையின் ரத்தினச்
சுருக்கத்தைப் பேசினார்கள் !
அன்று-
அரபாத் பெருவெளியில்
எங்கும் தலைகள் !
சிலைகள் என்னும்
தளைகள் உடைத்த
தத்துவத் தலைகள் !
அந்தச்
சமத்துவத் தலைகளில்
எதிர்காலத்தின்
வெளிச்சங்கள்
உறைந்து கிடந்தன !
அந்தப்
பெருவெளித் திடலில்
பெருமானாரிடம்
இறைவன் தனது
"சாவி" ஒன்றைத் தந்தான் !
இஸ்லாத்தின்
சம்பூர்ணச் செய்தியைத்
திறந்த சாவியது !
சாவி மட்டுமா அது ?
எம்பெருமானாரை
இறைவன் தன பக்கம்
அழைத்த சமிக்ஞைத
தூதும் அதுதானே ?
பெருமானாரின் ஹஜ்
மக்காவில் முடிந்தது !
நமது ஹஜ்ஜோ
மக்காவிலேயே முழுமை பெறாமல்
மதீனத்து மண்ணில்தான்
மகத்துவம் பெறுகிறது !
பெருமானார் அன்று
கஹ்பதுல்லாவிடம்
பிரியா விடைபெறச் சென்றார்கள் !
நாமோ
ஒவ்வொரு ஆண்டும்
ஆன்மாவின் அழுக்கை நீக்கி
அல்லாஹ்விடம் ஒப்படைக்கச்
செல்லுகிறோம் !
இருக்கின்றவர்க் கெல்லாம்
இறையில்லம் காபாவே
ஹஜ்ஜு செய்கின்ற
கடமைத் தலமாகும் !
இல்லாத ஏழையர்க்கோ
சலவாத்துக்களே
ஆன்மா வலம்வரும்
அற்புதக் காபா !
பெருமானார் செய்த ஹஜ்
ஹஜ் அல்ல-
உயிர்த்தவம் !
மனத்தின் கரங்கள்
இறைவனை அணைத்த
அற்புத நிகழ்ச்சி அது !
பெருமானார் செய்த ஹஜ்
இறுதி ஹஜ் மட்டுமல்ல-
முதல் ஹஜ்ஜும் அதுவேதான் !
ஹிஜ்ஜதுல் விதா-
பேரிறைவன் தன
மூல ஒளித் தூரிகையால்
சுவனத்துச் சித்திரமாய்
இஸ்லாத்தை வரைந்து
முழுமை ஆக்கிய
முக்கியத் திருநாள் !
ஹஜ்ஜென்னும் கடமை
விதியில்லை என்றிருந்தால்
பாவங்களின் தலைமையில்
நமது பயணம்
நரகத்தை நோக்கியே
நாளெல்லாம் தொடர்ந்திருக்கும் !
சமத்துவத்தின் கருத்தரிப்பு
சமாதிக்குள் போயிருக்கும் !
நாங்கள்
உள் வாங்கிய மூச்சு
வெளிப்படும்போது
ஏகத்துவ மணத்தை
எங்கும் பரப்புகிறது !
இது-
எங்கள் பெருமானார்
அன்றளித்த
பயிற்சியினாலன்றோ ?
இந்த மோன ரசவாதம்
இன்றும் தொடர்கிறது !
இறுதி நாள் வரை
இது
என்றும் தொடரும் !
- sakirபண்பாளர்
- பதிவுகள் : 66
இணைந்தது : 18/12/2010
மப்றுக் மப்றுக் உடன் பிறப்பே மிகவும் சிறப்பு உங்கள் வரிகள்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1