புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
68 Posts - 41%
heezulia
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
3 Posts - 2%
Guna.D
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
1 Post - 1%
prajai
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
319 Posts - 50%
heezulia
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
21 Posts - 3%
prajai
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Barushree
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%
Guna.D
தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_m10தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை)


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 20, 2011 11:21 am

தமிழே உன்னைக் கண்டால் அஞ்சித் தலையேசுற்றுதடி
தாகம் கொண்டேன் வாழ்வில் என்னைத் தனியே விட்டுடடி
அமுதே என்றுஉன்னைக் கற்றேன் ஆனா என்றெழுதி
ஆனாலின்றோ தமிழைப்பேசத் தலையே போகுதடி

அம்மா என்று மண்ணில் எழுதி அழித்தேன் அருச்சுவடி
அதனால்தானோ அன்னை மண்ணுள் அழியக் கொன்றவிதி
சும்மா தமிழைப் படியென் றப்பா சொல்லிப் போட்ட அடி
சொன்னாற் தமிழை விழுதேமுதுகில் எதிரி துவக்குப்பிடி

தாங்கா தலறும் போதிற் கூடத் தருணம் பார்த்துக்கடி
தமிழைப் பேசத் தலையும்போகும் சற்றே நிறுத்துங்கடி
நீங்காமனதில் கற்றோம்அன்று நெஞ்சில் கவிதையடி
நினவில் கனவில் நேரில் ஊரில்நிறைந்தாய் இன்பமடி

ஆனா லின்றோ தமிழைப்பேச அச்சம் கதவையடி
அக்கம் பக்கம் பார்த்தே மூடிப் பேசும் அவலமடி
தேனாய்ப் பேசிச் சிரித்தோம் தமிழை திமிரில் தலை நிமிர்த்தி
தெய்வத் தலைவன் இருந்த போது கதையே வேறுவழி

வயலின் பக்கம் சென்றேன் மாடு அம்மா என்றதடி
குலையும் நடுங்கி திகைத்தேன் எதிரி கிட்டே இல்லையடி
அயலில் ஆடு குழையைத் தின்று அம்மே என்றதடி
அடடா இதுவே போதும்என்று உளமே மிகிழுதடி
(அம்மா-தமிழ் அம்மே- சிங்களம்)

முடியை வெட்டக் கடையில் நின்றேன் முன்னே அவன்வந்தான்
முரட்டுப் பார்வை கண்டேன்”தமிழன் தானேநீ”யென்றான்
இடிபோ லெண்ணி ஏனோ என்றேன் இகழக் கண்வெட்டி
முடியைவெட்டத் தேவையில்லை சிரசைவெட்டென்றான்

முடியைவெட்டும் துணிவே போதும் தமிழன் தலைவெட்ட
முழுதாய் ஈழத்தமிழன் வாழ்வு பலியேஉயிர் கொள்ள
குடிநீர் கிணற்றில் பிணமேகாணும் கொடுமைஎன்சொல்ல
கேட்பார் எவரும் இல்லைத்தமிழே பிழைநீ நாமல்ல


புயலே வந்து புகுந்தாற்கூடத் தமிழே கொல்லுதடி
புனலும் ஓடிப் புகுந்தாற் கூட போவது ஈழமடி
அயலே நின்று அரவம் கூட ஆளைத் தீண்டுதடி
யார்தான் இவரேதமிழன் என்றால் ஆடிக் கொத்துதடி

வழியே நின்று தலைமுறையாக வாழ்ந்த ஈழமடி
வாசல்கதவை திறந்தா லின்று வருவது கொலைஞரடி
அழிவே என்று அணையும் தென்றல் அதுவும்போனதடி
அவனும்தெய்வம் அஞ்சி ஒளிந்தான் யாரும் இல்லையடி

தனியே நின்று தமிழைக் காக்கத் தவிக்கும் வேளையடி
தலையேஇன்றி போகும் நிலைமை தமிழர்க் கானதடி
எனியென் செய்வோம் எம்மைக்காக்க எவரும் எடுத்துஅடி
இரண்டே வைத்தால் போதும் உலகம் உள்ளேதள்ளுதடி

உரிமை என்றால் உயிரும்போயே உடல்தான் மிஞ்சுதடி
உணவைக் கேட்டால் உதைதான் நெஞ்சில் ஓங்கிப் படுகுதடி
அருமைதமிழை அறியா துரைத்தல் அருகில் கத்தியடி
அய்யோ என்று அலறக்கூட அச்சம் தமிழதடி

இருளில் வாழ்ந்து உயிரை கையில் எட்டிப் பிடித்தடி
எத்தனைகாலம் வீட்டுள் வாழ்வோம் சுற்றி மிருகமடி
அருகில் வந்து கதவின் ஓரம் அவைகள் நின்றபடி
அகலத்திறக்கும் தருணம் பார்த்து ஆளைதின்னுதடி

தமிழே எந்தன் தாயே உந்தன் புதல்வர் கோடியடி
தரணி எங்கும் பரந்தே வாழ்ந்தார் தனிநாடில்லையடி
தமிழன் கொல்லத் தட்டிக் கேட்க தலைவர் இல்லையடி
தமிழாம் ஈழம்இன்று, நாளை இன்னோர் தேசமடி

உலகத்தமிழா எண்ணிக்கொள்ளு இற்றை வரையும்நீ
எதுவுமில்லா அகதி, உரிமை எங்கும் அற்றாய்நீ
கலகம் எல்லாம் ஈழம்தானேகவலை ஏதென்று
கணக்குபோட்டால் கழித்துப்பார் எம்விடையே உன்மீதி

காலைப்பிடித்து கெஞ்சிகேட்டு வாழும்நிலைமைதான்
கடலில் கொல்ல கவிதைபாடி காலம் போகும்தான்
வேலை செய்து நாளும்போகும் வயிறும்நிறையும்தான்
வீரம்பேச காலைஊன்ற தேசம் இரவல்காண்

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Jan 20, 2011 11:26 am

அருமையான வரிகள் ...

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 20, 2011 11:31 am

அருமையாம கவிதை



பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Jan 20, 2011 11:33 am

இதையதை துளைதை வரிகள் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 20, 2011 3:43 pm

கருத்துக்கள் மூலம் என்மனதை கனியவைத்த அனைவருக்கும் நன்றிகள் உரித்தாகட்டும்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jan 20, 2011 3:50 pm

நம் தேன் தமிழ் இலங்கையில் படும் அவதியை நம் தமிழினமக்கள் எப்படி எல்லாம் நசுக்கப்படுகின்றனர் என்பதற்கு உதாரண வரிகள் கீறிய நெஞ்சில் ரத்தம் வடியவைக்கும் வரிகள்....
கன்னுக்குட்டி அம்மா என்றதும் அதிர்ந்து அம்மே என்ற ஆட்டுக்குட்டியின் சத்தத்துக்கு நிதானித்து காரணம் எல்லோருமே அறிவர்.. சோகம்

நிலை சுமுகமாகி தமிழினம் கண்டிப்பாக கம்பீர நடை போடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது... காலங்கள் இப்படியே இருக்க போவது இல்லை...

நசுக்கியவர்கள் எல்லோரும் மிதிபடுவர்... தான் செய்த இச்செயலை எண்ணி எண்ணி வெட்கப்பட்டு தம்மையே மாய்த்தும் கொள்வர்...

நாமிருப்போமோ இல்லையோ தெரியாது... ஆனால் நம் கனவு நிஜமாகும் ஐயா..

அன்பு வாழ்த்துக்கள் ஐயா ரத்த வரிகளின் சத்தியத்துக்கு...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தமிழைச் சொல்ல.. உயிரைக் கொல்ல..! (கவிதை) 47
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Thu Jan 20, 2011 4:01 pm

தங்கள் கருத்துக்கு பதிலாக காட்சி கலங்கியது. கண்ணை மறைத்தது! நன்றிகள்

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 20, 2011 4:42 pm

அனைவருக்கும் வணக்கம்
அடிதொறு மடியா? அடிவயிறு கலங்குதடி
முடிவ திதுயெந் நாளோ? முழுதுணர்ந்தோர் எவரோடி?

பிடியோடு களிறோட்டிப் பேரரசு நாட்டிய மும்
முடிச் சோழ மன்னனும் தான் மீண்டெழுந்து வாரானோ?
சிங்களைத்தைச் சிதைத்துச் செந்தமிழை அரசிருத்தி
எங்களினம் கொலுவேற ஏற்றவழி சொல்லேண்டி
பொங்கு தமி ழன்னையே! புவிமுழுது முன்னாண்டு
சங்கங் கண்டவளே தலைகுனிந்த தேனோடி?

திரிபுரம் எரித்தானின் சிரிப்பெங்கே போனதடி?
வரிசிலைக் கை காகுத்தன் வாளிக்கென் னாச்சுதடி?
கிரிகாசன் கதறுமொலி கேட்டிலதோ நின்செவிகள்
வரியுழுவைக் கொடிகொண்டான் வருநாளு மெந்நாளோ/
இதயத்தில் வலியுடன்
நந்திதா

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக