புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Today at 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Today at 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Today at 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Today at 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Today at 7:52 am

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 7:47 am

» கருத்துப்படம் 07/09/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 9:37 pm

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:25 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Yesterday at 9:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 07, 2024 11:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 7:47 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 7:01 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 07, 2024 6:50 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 07, 2024 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 07, 2024 4:28 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Sep 07, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

» இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Sep 06, 2024 9:16 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:29 am

» 05/09/2024 தேசிய ஆசிரியர் தினம்
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:23 am

» மாமனார் மருமகள் உறவு மேம்பட!
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:22 am

» மகிழ்வித்து மகிழ்வோம்.
by ayyasamy ram Fri Sep 06, 2024 4:19 am

» 102 வயதில் ஸ்கை டைவிங\
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:45 pm

» டால்பின் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Wed Sep 04, 2024 8:44 pm

» வேல் மாறல்.
by Renukakumar Tue Sep 03, 2024 12:03 pm

» வழிகாட்டியாக இருங்கள்!
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:06 am

» மொக்க ஜோக்ஸ்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:05 am

» உலகில் திருப்பம் தந்த ஆசிரியர்கள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:03 am

» பக்தர்கட்கு பக்தனின் வேண்டுகோள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:02 am

» ஆதிவராஹத்தலம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 10:01 am

» ஸ்ரீவெங்கடேஸ்வர ஸ்வாமி ஆலயம்,தொண்டைமான்புரம்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:59 am

» ஏணியில் 27 நட்சத்திரங்களுடன் காட்சிதரும் காளஹஸ்தி சிவன்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:57 am

» பிள்ளையார் வழிபாடு
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:56 am

» விக்னம் தீர்க்கும் விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:54 am

» விநாயகர் சிறப்புகள்
by ayyasamy ram Mon Sep 02, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
9 Posts - 82%
heezulia
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
1 Post - 9%
mruthun
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
76 Posts - 49%
ayyasamy ram
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
54 Posts - 35%
mohamed nizamudeen
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
8 Posts - 5%
Dr.S.Soundarapandian
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_m10மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மச்சுபிச்சு மலை ரகசியம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Jan 12, 2011 8:38 am

First topic message reminder :

மச்சுபிச்சு மலை ரகசியம் - Page 2 Special-in-tamil-166

குவியல் குவியலாய் பெண் சடலங்கள்.. பூகம்பத்துக்கும் அசராத கட்டிடங்கள்..
தென்அமெரிக்க நாடான பெருவில் காடுகள் மிகவும் பயங்கரமானவை. மலைகள்,
நதிகள், பள்ளத்தாக்கு, அடர்ந்த மரங்கள், வழிமறிக்கும் கொடிகள், இலைச்
சருகுகளுக்கு இடையே ஊர்ந்து மறையும் கட்டுவிரியன் பாம்புகள் என
காட்சியளிக்கும் அந்த காட்டு வழியாக பயணிப்பது மிகவும் கடுமையானது. 1911ம்
ஆண்டு அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பிங்காம், மர்ம
போர்வை அணிந்திருந்த காட்டுக்குள் ஆய்வுக்காக நுழைந்தார். மண்டிக் கிடந்த
புதர்களுக்கு இடையே, மலைச்சரிவுகளில் செதுக்கப்பட்ட தளங்கள்.. அதில்
கற்களால் கட்டப்பட்ட பிரமிக்க வைக்கும் கட்டுமானங்கள் தெரிந்தன.

உடனே அதை
மீட்டெடுக்கும் பணியில் இறங்கினார். புதர்களை அகற்றி ஆய்வுகளை
தொடங்கினார். பல நூற்றாண்டுகள் பராமரிப்பின்றி கிடந்தாலும் அவை சேதம்
ஏதும் அடையாமல் பரிமளித்தன. நீண்ட ஆய்வுக்கு பிறகு மச்சுபிச்சு மலை
அதிசயங்கள், அதில் மறைந்திருந்த ரகசியங்கள் குறித்து உலகுக்கு அறிவித்தார்.

பெரு
நாட்டில் வாழ்ந்த இன்கா சாம்ராஜ்யம் வளர்ச்சியின் உச்சத்தில் இருந்த
1450&ம் ஆண்டில் மச்சுபிச்சு மலை கட்டுமானங்கள் அமைக்கப்பட்டதாக
வரலாற்று ஆசிரியர்கள் கணிக்கின்றனர். இன்கா சாம்ராஜ்யத்தின் தலைநகரான
குஸ்கோ நகரில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் அடர்ந்த காடுகளுக்கு
இடையே மச்சுபிச்சு அமைந்துள்ளது.
இதன் 3 புறமும் சூழ்ந்து பாயும் உருபாமா
நதி மச்சுபிச்சுவுக்கு இயற்கை அகழிபோல் அமைந்துள்ளது. இது இன்கா
சக்கரவர்த்தி பச்சாகுட்டியின் மலை வாசஸ்தலம் எனவும், எதிரிகள் நெருங்க
முடியாத அளவுக்கு பாதுக்கப்பட்ட பகுதி எனவும் கூறப்படுகிறது.

சுமார்
நூறு ஆண்டுகள் புகழின் உச்சியில் இருந்த இன்கா சாம்ராஜ்யம் 1572&ல்
சரிந்தது. பெரியம்மை தாக்குதல் மற்றும் ஸ்பானிஷ் படையெடுப்பால் இன்கா இனம்
அழிந்து போனது. ஆனால் ஸ்பானிஷ் வீரர்களால் மச்சுபிச்சுவை மட்டும்
கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அது சேதப்படாமல் தப்பியது.
நிலநடுக்க
அபாயம் உள்ள பகுதி பெரு. எனவே அங்கு வசித்த இன்கா மக்கள் நிலநடுக்கத்தால்
பாதிக்கப்படாத கட்டிடங்களை கட்டுவதில் திறமை மிக்கவர்களாக இருந்துள்ளனர்.
பெரிய வழவழப்பான சதுர கற்களை அடுக்கி முக்கிய கட்டிடங்களின் சுவர்கள்
கட்டப்பட்டன.

இவை நிலநடுக்கத்தின்போது குலுங்கினாலும் நொறுங்கி விழாமல்
அசைந்து கொடுத்து, பின்னர் பழைய நிலைக்கே திரும்பி விடுமாம். இரு
கற்களுக்கு இடையே ஒரு பிளேடுகூட நுழைய முடியாத படி கனகச்சிதமாக சுவர்களை
அமைத்துள்ளனர். கதவு, ஜன்னல்கள் வளைவான முனைகளுடன் முக்கோண வடிவில்
கீழிருந்து மேல் சரிவாக அமைக்கப்பட்டுள்ளன. இதனால் பல நில அதிர்வுகளை
தாங்கி இன்றும் இந்த கட்டிடங்கள் நிமிர்ந்து நிற்கின்றன.

மச்சுபிச்சுமலை
மையப்பகுதியில் இன்டிகுவாட்னா, சூரிய கோயில் மற்றும் 3 ஜன்னல்கள் அறை என 3
முக்கிய கட்டிடங்கள் உள்ளன. இதில் இன்டிகுவாட்னா இன்கா மக்களின் சூரிய
கடிகாரம் மற்றும் நாள்காட்டி எனக் கருதப்படுகிறது. சூரியனை நோக்கி
நடப்பட்டிருக்கும் இந்த கல் ஏற்படுத்தும் நிழலை வைத்து நேரம் மற்றும்
நாட்களை அவர்கள் கணக்கிட்டனர். மச்சுபிச்சு மலையானது குடியிருப்பு பகுதி,
விவசாய பகுதி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
இரண்டுக்கும் இடையே பெரிய
மதில் சுவர். விவசாய தளங்களில் நீரூற்றுகள், ஓடைகள் என திட்டமிடப்பட்ட
பாசன வசதி செய்யப்பட்டுள்ளது. மச்சுபிச்சு மட்டுமின்றி அருகில் உள்ள
மலைகளிலும் கட்டுமானங்கள், விவசாய தளங்கள் உள்ளன. இவற்றுக்கு இடையே சாலை
வசதியும் செய்யப்பட்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.

இந்நிலையில்
பராமரிப்பின்றி விடப்பட்ட மச்சுபிச்சு மலை அடர்ந்த காடுகளால் மூடப்பட்டது.
அதற்கு பின்னர் பல நூற்றாண்டுகள் அது வெளியுலகுக்கு தெரியாமலே இருந்தது.
1911&ல் அமெரிக்க ஆராய்ச்சியாளர் பிங்காம் தான் கண்டறிந்து உலகுக்கு
அறிவித்தார். அப்போதிருந்துமச்சு பிச்சு சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த
தலமாகிவிட்டது. மச்சுபிச்சுவை பாதுகாக்கப்பட்ட, வரலாற்று முக்கியத்துவம்
வாய்ந்த பகுதியாக 1981&ல் பெரு அரசு அறிவித்தது. 1983&ல் யுனெஸ்கோ
அமைப்பு அதை உலக பாரம்பரிய தலமாக அறிவித்தது. 2007&ல் யுனெஸ்கோ
நடத்திய வாக்கெடுப்பில் மச்சுபிச்சு மலை 7 உலக அதிசயங்களில் ஒன்றாக
தேர்வானது. பெருநாட்டின் முக்கிய சுற்றுலா தலமாகியுள்ளது.

மச்சு
பிச்சுவில் ஆய்வு நடத்திய பிங்காம் அங்கிருந்த விலை மதிப்பற்ற கோப்பைகள்,
வெள்ளி சிலைகள், நகைகள், மனித எலும்புகள் உள்பட ஆயிரக்கணக்கான பொருட்களை
யேல் பல்கலைக்கழகத்துக்கு எடுத்துவந்துவிட்டார். தற்போதும் அவை யேல்
பல்கலைக்கழத்திலேயே உள்ளன. அவற்றை பெருவிடம் திருப்பி அளிக்க யேல் மறுத்து
வருகிறது. அவற்றை பாதுகாக்க பெருவில் போதிய வசதியில்லை என சாக்கு கூறி
யேல் பல்கலை தட்டிக்கழித்து வருகிறது.

கடல் மட்டத்தில் இருந்து
சுமார் 8 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் மச்சுபிச்சு மலையில்
கட்டிடங்களையும் சுவர்களையும் கட்ட இன்கா மக்கள் எங்கிருந்து கற்களை
எடுத்துச் சென்றார்கள் என்பது இன்று வரையில் புதிராக இருக்கிறது. மேலும்,
மச்சுபிச்சு பகுதியில் ஏராளமான மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருக்கின்றன.

இவற்றில் பெரும்பாலானவை பெண்களுடையது. பெண்கள் கூட்டம் கூட்டமாக கொலை
செய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது. கொத்துக் கொத்தாக
பெண்களை கொலை செய்ய என்ன அவசியம் வந்தது? மச்சுபிச்சு மர்மம் இன்றளவும்
தொடர்கிறது.


avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 10:07 am

பெருமதிப்புக்குரிய Dr.சிவா அவர்களுக்கு.
நமது தொல்லியல் துறை பற்றிப் பெருமையாகக் கூறுவதற்கு எதுவுமில்லை. தாங்கள் தயவுச் செய்து அழகர் மலைக்குச் செல்லுங்கள். அங்கு திருக்கோயிலின் முன்பு நாயக்கர் மண்டபம் என்ற ஒன்று உள்ளது. அதன் முகப்பில் இக்கட்டடம் தொல்லியல் துறையின் பாதுகாப்பில் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ளது. பிரவேசிக்க அனுமதி இல்லை என்ற அறிவிப்புப் பலகை உள்ளது. பழங்காலச் சின்னங்கள் இயற்கை மரணம் அடைய வேண்டுமென்றால் நமது தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப் படலாம் இது என் கருத்து, இந்த நிலையில் பெருவில் உள்ள மாச்சு பிச்சுவையா கவனிக்கப் போகிறார்கள். மேலும் இன்கா சிற்பங்களில் நாகம் அதிகம் இருக்கும். நாகப்பன் நாகராஜன் நாகம்மை என்ற பெயர்கள் தமிழகத்தில் மட்டுமே வைக்கப் படுபவை, நாகர் கோயில், நாகப் பட்டினம் என்ற பெயர்களும் உள்ளன, தெலுங்கர்கள் தமிழர்களை அரவவாடு என்பார்கள். அரவம் என்பதற்கு ஒலி பாம்பு என்ற பொருள்கள் உள்ளன. தாங்கள் மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பாதையிலோ அல்லது மதுரையிலிருந்து காரைக்குடி வழியாக ராமேஸ்வரம் செல்லும் பாதையிலோ ராணி மங்கம்மாள் கட்டிய வழிப்போக்கர்கள் மண்டபங்கள் பலவற்றை அழியும் நிலையில் காணலாம்,. மேலும் காரைக்குடியிலிருந்து தேவகோட்டை போகும் வழியில் சங்கரப் பதி காடு என்ற பகுதியில் மருதுசகோதரர்கள் கட்டிய ஒரு மண்டபம் புதர்களால் மூடி இருப்பதையும் காணலாம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததல்லவா? எத்துணை கோயில்கள் இடிபாடடைந்த நிலையில் உள்ளன. வருவாய் உள்ள திருக்கோயில்களைத் தானே அரசும் கையகப் படுத்துகிறது? தஞ்சைப் பெருவுடையார் கோயிலில் விழா எடுத்தவர்கள் அநாதையாகக் கிடக்கும் ராஜராஜனின் சமாதி பற்றி என்ன செய்தார்கள்? தாங்கள் விரும்பினால் இந்த தளத்துக்குச் சென்று பாருங்கள்
https://www.youtube.com/watch?v=0GqmsZIwNkY
இவைகள் எல்லாம் வேதனை அளிக்கக் கூடிய விடயங்கள், விரிவாக எழுத மனம் எண்ணிலாலும் பெருகும் கண்ணீர் எழுத விடாமல் தடுக்கிறது, என்ன செய்ய? தமிழர்களாகப் பிறந்து விட்டோம். தலை குனிந்து வாழ வேண்டியது தான். காஷ்மீரில் இஸ்லாமியர்கள் புனிதமாகக் கருதப் படும் ஒன்று காணாமல் போனவுடன் அரசு அலறி அடித்துக் கொண்டு தேடிக் கண்டு பிடித்தது. நமது நாட்டு நடராசர் சிலை திருடப் பட்டு லண்டனுக்குச் சென்று விட்டது, பெருமதிப்புக்குரிய தொல்லியல் நிபுணர் திரு நாகசாமி 1 வருடங்களுக்கும் மேலாக மிக அருமையாக வாதாடி அதனைப் பெற்று வந்தார், இன்னும் அநேக நாகசாமிகள் பிறந்தால் தான் இதற்கு விடிவு காலம் ஏற்படும்.
என்றும் மாறா அன்புடன்
நந்திதா

avatar
Guest
Guest

PostGuest Thu Jan 13, 2011 2:26 pm

என்ன செய்ய? தமிழர்களாகப் பிறந்து விட்டோம். தலை குனிந்து வாழ வேண்டியது தான்.

தன்மானம் இனம்... தலை கவிழ்ந்து கிடைக்கிறது... ஆனால் அது தலை நிமிரும் காலம் வெகு தொலைவில் இல்லை....

இந்த பதிவை பார்த்து யாரும் பின்னோட்டம் கூட இடாதது வேதனை அளிக்கிறது,....

avatar
nandhtiha
தளபதி

தளபதி
பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Postnandhtiha Thu Jan 13, 2011 5:55 pm

அன்புக்குரியீர்



வணக்கம்


தங்கள்
பின்னூட்டத்திற்கு நன்றி. ஒரு இனமே அழிக்கப் பட்டபோது உலகமே கதறியது. அப்பொழுதும்
ஊமையராய்ச் செவிடராய் குருடராய்ச் சிலர் இருந்ததைக் கண்டோம், விலங்குகளுக்கு இடையே
உள்ள ஒற்றுமை நம்மிடம் இல்லை என்பது வேதனைக் குரியது. கீழ்க் கண்ட தளத்தைப்
பாருங்கள்



என்றும்
மாறா அன்புடன்



நந்திதா


https://www.youtube.com/watch?v=LU8DDYz68kM

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக