புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
62 Posts - 63%
heezulia
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%
viyasan
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
254 Posts - 44%
heezulia
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
15 Posts - 3%
prajai
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
8 Posts - 1%
Guna.D
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
7 Posts - 1%
mruthun
கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_m10கஜூராகோ கோயில்கள் - Page 12 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கஜூராகோ கோயில்கள்


   
   

Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Aug 21, 2009 9:31 pm

First topic message reminder :

கஜூராகோ மத்யபிரதேசத்தில் சத்ரபூர் மாவட்டத்தில் உள்ளது. கஜுராஹே என்ற பேரானது ஈச்சமரத்து ஓலையில் இருந்து பெறப்பட்டது. காஜூர் என்று அது இந்த பகுதியின் ஹிந்தியில் அழைக்கப்படுகிறது. இப்பகுதியே ஈச்சங்காடாக இருந்திருக்கிறது. இப்போதும் இப்பகுதியில் ஈச்சமரங்களை அதிகமாகக் காணலாம்.

கஜுராஹோ ஒருகாலத்தில் சந்தேலா மன்னர்களின் தலைநகரமாக இருந்திருக்கிறது. அவர்கள் கிபி பத்தாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை ஆண்டிருக்கிறார்கள். கிபி 950 முதல் நூற்றைம்பது வருடக்கால இடைவெளியில் இங்குள்ள கோயில்கள் கட்டபப்ட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. சந்தேலர்களின் தலைநகரம் மஹோபாவுக்கு பின்னர் மாற்றப்பட்டாலும் இந்த நகரம் ஒரு புனிதத்தலமாகவே நீடித்தது. முகலாய ஆட்சிக்காலத்திற்கு முன்னரே இந்நகரம் கைவிடப்பட்டு காடுக்குள் மறைந்துவிட்டது. ஆகவே வட இந்தியாவில் உள்ள பேராலயங்கள் அனைத்தையும் முகலாயர்கள் அழித்தபோது இந்த ஆலயத்தொகை அவர்களால் அழிக்கபப்டாமல் எஞ்சியது. பின்னர் பிரிட்டிஷார் காலத்தில்தான் இந்த ஆலயங்கள் கண்டடையப்பட்டன. அவர்கள் இதை ஒரு மாபெரும் கலைச்சின்னமாக எண்ணி உரிய முறையில் பேணினார்கள். பிரிட்டிஷ் கலாகட்டத்திலேயே விரிவான அகழ்வாராய்ச்சிகளும் பாதுகாப்புப்பணிகளும் இந்த ஆலயங்களில் நிகழ்த்தப்பட்டுள்ளன.

இந்நகரின் எல்லைக்குள் கிட்டத்தட்ட 80 கோயில்கள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவற்றில் 22 கோயில்கள்தான் இப்போது ஓரளவாவது நல்லநிலையில் உள்ளன. பல கோயில்களின் அடித்தளங்கள் அகழ்ந்து எடுக்கபப்ட்டுள்ளன. இவை 21 சதுர மைல் பரப்பளவில் பல இடங்களிலாக சிதறிப்பரந்திருக்கின்றன. எல்லா கோயில்களும் செங்கல் நிறமுள்ள சிவப்புக்கல்லால் செய்யப்பட்டவை. இது மணல்பாறை ஆதலினால் மிகநுட்பமாக செதுக்க ஏற்றது. இதனால் இக்கோயில்களில் சிற்பங்கள் இல்லாத இடமே இல்லை. பல கோயில்களை இதழ் விரித்த மலர்கள் என்றே சொல்லி விடலாம். மலரின் அல்லிவட்டம் புல்லி வட்டம் போன்றவற்றில் உள்ள நெருக்கமான சிக்கலான பின்னல்களும் அடுக்குகளும் இக்கோயில் முழுக்க நிறைந்துள்ளன. அதேசமயம் இங்குள்ள தூண்கள் சாதாரணமான அறுபட்டை வடிவங்கள் மட்டுமே. காகதீய சாளுக்கிய பாணி கோயில்களில் தூண்கள் ஒவ்வொன்றும் சிற்பங்கள் மண்டிய கலைக்கூடங்களாக இருப்பதுடன் ஒப்பிட்டால் இது வியப்பூட்டுகிறது.

வட இந்தியாவில் உள்ள நாகர பாணி கோபுர அமைப்புக்கும் அடுக்குவடிவிலான கற்கட்டுமான முறைக்கும் மிகச்சிறந்த உதாரணங்களாக கஜுராஹோ கோயில்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. பெரும்பாலான புகழ்பெற்ற ஆலயங்கள் அழிக்கபப்ட்டுவிட்ட நிலையில் கஜுராஹோ எஞ்சியது ஒரு நல்லூழ்தான். பஞ்சாயதனம் [ஐந்து ஆயதனங்கள்] என்ற கட்டிட அமைப்பு கொண்டவை இவை. அதாவது ஒரு மையக்கருவறையும் அதன் இருபக்கங்களும் இரண்டு வீதம் நான்கு துணைக்கருவறைகளும் கொண்ட அமைப்பு இது. இங்குள்ள பழைமையான சில கோயில்கள் சமண ஆலயங்கள். மும்மூர்த்திகளுக்கும் ஜகதாம்பாள் போன்ற தேவியருக்கும் கோயில்கள் உள்ளன.

இங்குள்ள கோபுரவடிவை நாம் தென்நாட்டுக் கோயில்களில் வேறு ஒரு வடிவில் காணலாம். ஆனால் நம்முடைய கோபுரங்கள் ஒரே கூம்பு வடிவம் கொண்டவை. இவை பல கோபுரங்கள் இணைந்து ஒரு கொத்து போல தோற்றம் அளிப்பவை. கோபுரவடிவுக்குள் மேலும் கோபுரங்கள். இவை சிகரங்கள் என்று சொல்லபப்டுகின்றன ஒன்றன்மீது ஒன்றாக தட்டுகளாக அடுக்கபப்ட்டு மேலே குறுகிச் சென்று கலசத்தில் முடியும் அமைப்பு கொண்டவை. அதேசமயம் கூம்பு போன்ற அமைப்பு இல்லாமல் விளிம்பு வளைவாக இருக்கும். நட்டுவைத்த மக்காச்சோளக் கதிர்களைப்போன்று இருப்பதாக தோன்றுகிறது இ ங்குள்ள ஆகப்பெரிய ஆலயமான காந்தரிய மகாதேவர் கோயில் கோபுரத்தில் 84 சிகரங்கள் உள்ளன. 116 அடி உயரம் உள்ளது இந்த கோபுரம்.

தென்னாட்டில் ஹொய்ச்சள, விஜயநகர பாணி கோயில்களிலும் கோபுரங்கள் சிறு தட்டுகளாக மேலேறி சுருங்கிச்செல்லும் அமைப்பு உண்டு. இங்குள்ள கோபுரங்கள் அனைத்துமே கருவறைக்கு மேலேதான் உள்ளன. கற்களை அடுக்கிக் கட்டப்படுபவை நம்முடைய கோயில்கள். ஆகவே அவை பிரம்மிடு போன்று கூம்பிச்செல்பவை. கஜுராகோ ஆலயக்கோபுரங்கள் செங்குத்தாக எழுந்து செல்கிறது. சிற்பக்கற்கள் ஒன்றுடன் ஒன்று மாட்டப்பட்டு திருகப்பட்டுள்ளன என்று சொல்கிறார்கள்.

கஜுராஹோ கோபுரங்களின் அமைப்பு இமயமலைச் சிகரங்களை ஒத்தது என்று சொல்லபப்டுகிறது. இந்த விஷயத்தைப்பற்றி கலைவிமரிசகர்கள் எழுதியிருக்கிறார்கள். ஒரு பகுதியின் கட்டிடக்கலையில் அப்பகுதியின் மலைகளின் பாறைகளின் அமைப்பு அழகியல் ரீதியான பாதிப்பைச் செலுத்துகிறது. ற்றோப்பிய ஊசிக்கோபுரங்கள் பனியிருகும் அந்நாட்டு மலைமுடிகள். அரேபிய கும்மட்டங்கள் காற்று அரித்த மணல்பாறைகளின் வளைமுகடுகள். அப்படிப்பார்த்தால் செங்குத்தாக ஓங்கி எழுந்த நம்முடைய ராயகோபுரங்கள் தென்னகத்து கரும்பாறைகளின் மானுடநகல்கள்.

கஜுராகோ கோயில்களைச் சுற்றியிருந்த பாலைவனச்சாயல்கொண்ட புதர்க்காடுகளை அழித்து அவற்றைசுற்றி நந்தவனம் அமைக்கும் பணி பிரிட்டிஷ்காலத்திலேயே செய்யபப்ட்டுவிட்டது. காந்தரிய மகாதேவர் ஆலயம் உள்பட முக்கியமான கோயில்கள் அனைத்தும் ஒரே வளாகத்துக்குள் உள்ளன . வளாகத்துக்கு வெளியே உள்ள கோயில்கள் சிற்ப அடிபப்டையில் முக்கியமானவை அல்ல.


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84108
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Mar 28, 2015 7:09 pm

கஜூராகோ கோயில்கள் - Page 12 103459460
-

ஜெயமோகன் அவர்களின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி
(பகிர்தலுக்காக)
-
பலரும் எண்ணிவருவது போல கோயில்களின் சன்னிதிகளில்
பாலியல் சிற்பங்கள் ஏதும் கிடையாது.
-
பெரும்பாலும் புறச்சுற்றுச்சுவர்களிலும் அடிஸ்தானத்தின்
கற்களிலும்தான் புடைப்புச் சிற்பங்களாக பாலியல் சிற்பங்கள்
உள்ளன.
-
இன்னொன்று இந்தவகையான பாலியல் சிற்பகளிலில்
தேவர்களோ கந்தர்வர்களோ இல்லை. அன்றாட வாழ்க்கைச்
சித்தரிப்பின் பகுதிகளாகவே இவை உள்ளன.
-
அவற்றில் சித்தரிக்கபப்ட்டிருப்பவர்கள் பெரும்பாலும் தாசிகள்.
அவர்கள் அணிந்துள்ள நகைகளில் தாசிகளுக்கான தாலிகள்
இருப்பதிலிருந்து கலைவிமரிசகர்கள் இதை ஊகித்திருக்கிறார்கள்.
-
மேலும் இப்பெண்கள் ஒப்பனைசெய்துகொள்வது பாணர்களும்
நட்டுவர்களும் கூட ஆட ஆடல்கலைகளில் ஈடுபடுவது
போன்ற சிற்பங்கள் ஏராளமாக உள்ளன. பெரும்பாலான
தாசிகளுடன் தோழிகளும் காணப்படுகிறார்கள்.

நீராடுதல் உடைகளை மாற்றுதல் உடைகளைச் சரிசெய்தல்
போன்ற நிலைகளில் நளினமான அசைவுகளின் உறை
நிலையில் அவர்கள் நின்றிருக்கிறார்கள்.

செல்வமும் சமூக மதிப்பும் மத அங்கீகாரமும் கொண்ட
பரத்தை வாழ்க்கையின் சித்திரங்கள்தான் அவை என்பதே
ஊகிக்கக்கூடியதாக உள்ளது.

இங்குள்ள காமச்சித்தரிப்புகளை வாத்ஸ்யயனரின் காம
சூத்ரத்துடன் இணைத்து புரிந்துகொள்ள முயல்வது மேலை
நாட்டவரின் முறையாக உள்ளது.
ஆரம்பகால ஆய்வாளர்கள் பலர் அப்படி எழுதியுள்ளனர்.

ஆனால் இங்குள்ள காமச்சித்தரிப்புகள் அலங்காரத்தன்மையுடன்
மிகைப்படுத்தப்பட்டவை. உண்மையில் பல தோற்றங்கள்
வரைதளத்தை நிரப்பும் நோக்கத்துடன் உருவாக்கப்ப்ட்டவை.
அதீத நெளிவுகள் கைகால் பின்னல்கள் போன்றவை
இதனாலேயே உருவாகின்றன.

இத்தகைய காமச்சித்தரிப்புகளுக்கு என்ன காரணம் இருக்க
முடியும்? ப
லவகையான விளக்கங்கள் உள்ளன. வழிகாட்டிகள் பொதுவாக
‘காம குரோதங்களை வெளியே விட்டுவிட்டு உள்ளே செல்ல
வேண்டும்’ என்பதை காட்டுவதற்காக இவை
செதுக்கப்பட்டுள்ளன என்பார்கள். அது ஒரு பௌராணிக
விளக்கம் மட்டுமே. வரலாற்று ரீதியாகப் பார்த்தால்
இரண்டு விளக்கங்களைக் கொடுக்கலாம்.

ஒன்று அது அக்கால வாழ்க்கையின் பிரிக்கமுடியாத ஒரு கூறு.
அக்காலகட்ட வாழ்க்கை என்பது கொண்டாட்டத்தால் ஆனது.
ராமப்பாகோயில் மண்டபமே இதற்கு இன்னொரு உதாரணம்.
கலையும் கேளிக்கையுமாக பெரும் களியாட்டம் அந்த
மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளது.

இன்னொரு விளக்கம் இந்தச் சிற்பங்களுக்கு தாந்த்ரீக
வழிபாட்டு முறைமைகளுடன் நேரடியான உறவு உண்டு
என்பது. கஜுராஹோவில் தாந்த்ரீகம் வலுவாக இருந்திருப்பதை
இங்குள்ள பல்வேறு தாந்த்ரீக அடையாளங்கள் [யந்திரங்கள்]
மூலம் நாம் அறியலாம். தாந்த்ரீக வழிபாட்டுக்கு கோயிலின்
பெரும் கட்டமைப்புக்குள் ஓர் இடம் அளிப்பதற்காகவே
இச்சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கலாம். அவை புறச்சுவர்களில்
அமைந்திருப்பதும் முக்கியமானது.
-
----------------------------

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Mar 31, 2015 11:19 pm

அற்புதமான கட்டுரை மற்றும் படங்கள் சிவா புன்னகை................பகிர்வுக்கு ரொம்ப நன்றி................இன்னும் சில பக்கங்கள் பார்க்கணும் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 01, 2015 3:09 pm

ராஜா wrote:முதலில் ஈகரை தமிழ்களஞ்சியத்தில் புதைந்து கிடக்கும் இது போன்ற வரலாற்று சிறப்பு மிக்க பதிவுகளை திரும்ப வெளிக்கொண்டு வரவேண்டும். இல்லையென்றால் புதையல் போல மதிப்பு அதிகமென்றாலும் யாருக்கும் பயனில்லாமல் அமைதியாக எதோ ஒரு பக்கத்தில் உறங்கிக்கொண்டு தான் இருக்கும் இது போன்ற பதிவுகள். புன்னகை


மிக்க நன்றி தல புன்னகை



ஆமாம் தல!



கஜூராகோ கோயில்கள் - Page 12 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed Apr 01, 2015 5:27 pm

இது மாதிரி எல்லாம் இப்ப கணினியில மட்டும் தான் கட்ட முடியும்......

அடா டா டா என்ன அழகு ஆச்சர்யம்.




ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 12 of 12 Previous  1, 2, 3 ... 10, 11, 12

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக