புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_c10சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_m10சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_c10 
28 Posts - 85%
heezulia
சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_c10சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_m10சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_c10சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_m10சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறிலங்காவின் 'பெரிய அண்ணன்' இந்தியா


   
   
Ulavan
Ulavan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 28
இணைந்தது : 13/12/2010

PostUlavan Tue Dec 14, 2010 2:11 am

பிராந்திய வல்லரசுகள் தங்களது அயல்நாடுகளின் மீது ஆதிக்கத்தினைச் செலுத்துவது மலிந்துகிடக்கிறது. இலத்தீன் அமெரிக்காவுடன் தொடர்புடைய விடயங்கள் என்று வரும்போது ஐக்கிய அமெரிக்காவே முதன்மையான பங்கினை வகிக்க விரும்புகிறது.

இந்திய-சீன உறவில் சீனாவும் அதேபோன்றதொரு பங்கினை வகிக்கவே விரும்புகிறது.

இந்தியாவினது இராணுவ மற்றும் பொருளாதார பலம் வளர்ந்து செல்லும்போது இந்தியாவும்கூட தான்சார்ந்த இந்தியத் துணைக்கண்டப் பிராந்தியத்தில் 'பெரிய அண்ணன்' என்னும் முதன்மைப் பங்கினை வகிக்கவே விரும்புகிறது.

இவ்வாறு கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் ஆங்கில இதழில் Dinouk Colombage எழுதிய ஆய்வுக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை மொழியாக்கம் செய்தவர் தி.வண்ணமதி.

பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலும், பங்களாதேசுக்கும் நேபாளத்திற்கும் இடையிலும் மோசமான உறவு நிலவுவதானது இவர்கள் விடயத்தில் இந்தியா மூக்கினை நுழைக்க முடியாத நிலைமையினை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால், இந்தியாவின் சொற்படி நடக்கக்கூடிய 'இந்தியாவின் இளைய சகோதரன்' எனப் பெயரெடுக்கக்கூடிய ஒரேயொரு நாடு சிறிலங்காதான் என்ற நிலையினை இது தோற்றுவித்திருக்கிறது.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான உறவு 2500 ஆண்டு பழமை வாய்ந்தது.

தென்னிந்தியாவிலிருந்து தமக்குத் தேவையான வேலையாட்களை சிறிலங்காவில் ஆட்சியிலிருந்த சிங்கள மன்னர்கள் தருவித்த நிலையில் இரண்டுமே சம அந்தஸ்தினை உடைய நாடுகள் என்பதன் அடிப்படையிலேயே அப்போது இவர்களுக்கிடையிலான உறவு இருந்திருக்கிறது.

இவர்களுக்கிடையேயான உறவுநிலை இவ்வாறு தொடர்ந்துகொண்டிருந்தபோது கொலணித்துவ ஆட்சிக்கு இவ்விரு நாடுகளும் உட்பட்டிருந்தன. இப்போதுதான் இருநாட்டு உறவுக்கிடையில் இடைவெளி தோன்ற ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது தத்தமது நாடுகளின் சுதந்திரத்திற்கான முனைப்புக்களிலேயே இந்த இரண்டு நாடுகளும் தங்களது கவனத்தினைக் குவித்திருந்தன.

இந்தியாவும் சிறிலங்காவும் சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து தங்களது நெருங்கிய உறவினை மீண்டும் ஆரம்பித்திருந்தன.

எவ்வாறிருப்பினும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவு வளர்ந்து சென்றபோது இந்தியா முதன்மையான பங்கினைத் தனதாக்கிக்கொண்டது.

சிறிலங்காவில் இனப்போர் வெடித்தமையானது இலங்கைத்தீவினது கொள்கைகளில் இந்தியா அதிக பங்கினை வகிப்பதற்கான வழியினை ஏற்படுத்திக்கொடுத்தது எனலாம்.

தன்னையொரு பிராந்திய வல்லரசாக வலுப்படுத்துவதற்கான வாய்ப்பினை இது இந்தியாவிற்கு வழங்கியது.

சிறிலங்காவினைச் சேர்ந்த தமிழ் ஆயுதக்குழுக்களுக்கு இந்தியாவின் உளவு அமைப்பான 'றோ' ஆயுத தளபாடங்களையும், இராணுவப் பயிற்சிகளையும் நிதியுதவியினையும் வழங்கியதுதான் சிறிலங்கா மீதான இந்தியாவின் முதலாவது தலையீடு எனலாம்.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் இந்தியா எவ்வாறு செயற்பட விரும்புகிறது என்பதை முதன்முதலாக எடுத்துக்காட்டிய சம்பவமாக இது அமைந்தது.

சிறிலங்கா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து இலங்கைத்தீவு மீது அதிக செல்வாக்கும் செலுத்தும் வகையிலேயே இந்தியா செயலாற்றி வந்திருக்கிறது. பல துண்டுகளாக உடைந்துபோயிருந்த தமிழர்களது சுதந்திர அமைப்புக்கள்தான் சிறிலங்கா மீது இந்தியர்கள் செல்வாக்குச் செலுத்துவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்தன.

சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியா நேரடித் தலையீடினை மேற்கொண்டதன் விளைவாக யூலை 29 1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

சிறிலங்காவினது விவகாரத்தில் தலையீட்டினை மேற்கொள்வதிலிருந்து இந்தியா விலகியிருப்பதற்கான ஆரம்பந்தான் இந்திய இலங்கை சமாதான உடன்படிக்கையின் தோல்வி என அரசியல் ஆய்வாளர்கள் அப்போது எழுதியிருந்தார்கள்.

"1987ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட இந்திய இலங்கை உடன்படிக்கையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட பெரும்தோல்விதான் துணைக்கண்டத்தில் தனது அணுகுமுறையினை இந்தியா மாற்றிக்கொள்வதற்கு வழிவகுத்தது" என இந்திய அரசியல் ஆய்வாளரான மகேஸ் ரங்கராசன் கூறுகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளால் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டமையானது அந்த அமைப்பு இந்தியாவில் தடைசெய்யப்படுவதற்கு வழிவகுத்தது.

இதனைத் தொடர்ந்து நேரடித் தலையீடுகள் எதனையும் மேற்கொள்ளாத இந்தியா சிறிலங்காவில் இடம்பெறும் விடயங்களை ஒரு வெளியாரைப் போல அவதானித்து வந்ததோடு இடைக்கிடையே இடைத்தரகராகவும் செயற்பட்டது.

சிறிலங்கா அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான போர் உக்கிரமடைந்தபோது இந்தியா இரண்டுமுனையில் அரசியல் போர் நடாத்தவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.

சிறிலங்காவினது விவகாரத்தில் இந்தியா உடனடித் தலையீட்டினை மேற்கொண்டு தமிழர்களது அபிலாசைகளை நிறைவேற்றும் வகையில் செயற்படவேண்டும் என தமிழ்நாட்டு அரசியலாளர்கள் இந்திய மத்திய அரசாங்கத்தினைக் கோரினர்.

இதுபோல தென்னிந்திய மாநில அரசிடமிருந்த வந்த காத்திரமான அழுத்தங்களைத் தொடர்ந்து, சிறிலங்காவினது இனப்பிரச்சினைக்கு அமைதிவழித் தீர்வினை ஏற்படுத்துமாறு புதுடில்லி கொழும்பின் மீது தொடரான இராசதந்திர அழுத்தத்தினைப் பிரயோகித்தது.

சிறிலங்காவில் இடம்பெற்றுவந்த போரானது ஓர் உள்நாட்டு விவகாரமாகக் கருதப்பட்டமையினால், சிறிலங்கா அரசாங்கத்தினது உத்தியோகபூர்வ அழைப்புகள் ஏதுமின்றி இந்தியாவினால் உத்தியோகபூர்வத் தலையீடு எதனையும் மேற்கொள்ள முடியாது நிலை காணப்பட்டது.

இதன் காரணமாக சிறிலங்கா அரசாங்கத்துடன் தேவையற்ற முட்டிமோதல் நிலைப்பாட்டினை எடுப்பதைத் தவிர்த்த இந்தியா, கொழும்பு மீது இராசதந்திர அழுத்தத்தினைப் பிரயோகித்தது.

2009ம் ஆண்டினது முதற்பகுதியில் போர் முடிவுக்கட்டத்தினை எட்டியிருந்த வேளையில் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது இந்திய அரசாங்கம் செல்வாக்குச் செலுத்துவதாக ஆய்வாளர்கள் பலரும் குற்றம் சுமத்தியிருந்தார்கள்.

குறித்த இந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் தேர்தல்கள் பல இடம்பெற்றுவந்ததோடு தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரைக்கும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி வலிந்த தாக்குதலை நடாத்தவேண்டாம் என் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்தினைக் கோரியிருந்ததாக அப்போது அரசியல் அவதானிகள் கூறியிருந்தார்கள்.

இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுக்கு வந்து மூன்று நாட்கள் கடந்திருந்த நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிவுக்கு வந்துவிட்டதாக அதிபர் ராஜபக்ச அறிவித்திருந்தார்.

போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து சிறிலங்கா மீது தனது அதிகாரத்தினைச் செலுத்துவற்கான புதிய முனைப்புக்களை இந்தியா மோற்கொள்ளத் தொடங்கியது.

சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மீள்கட்டுமானப் பணிகள், இந்தியா தனது பொருளாதாரப் பலத்தினைக் காட்டுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது.

இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கை ஏற்படுத்தப்படுமிடத்து தமக்குப் பாதகமாக அமைகிறதெனக் கூறி சிறிலங்காவினது வர்த்த சமூகத்தினர் அதனை எதிர்க்கிறார்கள்.

சிறிலங்காவினது சந்தைகளில் இந்திய வர்த்தகர்களின் ஏகாதிபத்தியம் அதிகரிப்பதற்கே இந்த உடன்பாடு வழிசெய்யும் என நம்பப்படுகிறது.

எவ்வாறிருப்பினும் சிறிலங்கா மீது அதிகரித்துச் செயல்லும் சீனச் செல்வாக்கினைக் கட்டப்படுத்தும் அல்லது முறியடிக்கும் ஒரு முனைப்பாகவே இந்தியாவிற்கும் சிறிலங்காவிற்கும் இடையிலான பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையினை ஏற்படுத்துவதற்கு இந்தியா தொடர்ந்தும் முனைந்து வருகிறது.

சீனா சிறிலங்காவிற்கு எத்தகைய உதவிகளை வழங்கி வருகிறதோ அதேபோன்ற பொருளாதார உதவிகளை இந்தியாவும் சிறிலங்காவிற்கு வழங்குவதுதான் இலங்கைத்தீவு மீது இந்தியா செல்வாக்கினைச் செலுத்துவதற்கு வழிசெய்யும் என்பதை இந்திய அரசாங்கம் நன்கு விளங்கிக்கொண்டிருக்கிறது.

வடக்கே யாழ்ப்பாணத்திலும் சீன நிதியுதவியுடன் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள் அதிகம் மேற்கொள்ளப்பட்டுவரும் பிராந்தியமான அம்பாந்தோட்டையிலும் இந்தியா தனது துணைத் தூதரகங்களை அமைப்பதானது சிறிலங்காவில் அரசியல் மேலாதிக்கம் செலுத்துவதற்கு இந்திய அதிகம் வரும்பி நிற்பதையே காட்டுகிறது.

தங்களது நலனிலோ அன்றில் நாட்டினது குடிமக்களுடனோ நேரடியாகத் தொடர்புபட்டிருக்காத பிரதேசங்களில் நாடுகள் தங்களது தூதரகங்களை அமைப்பதில்லை. அப்பாந்தோட்டைப் பகுதியில் தனது துணைத் தூதரகத்தினை அமைப்பதன் ஊடாக அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் பல்வேறுபட்ட செயற்பாடுகளை அவதானிப்பதற்கு இந்திய விரும்புகிறது என்பதையே காட்டுகிறது என ராணி சிங் குறிப்பிடுகிறார்.

நாட்டினது தென்முனையிலுள்ள அம்பாந்தோட்டைப் பகுதியில் இந்திய தனது தூதரகத்தினை அமைப்பதை சிறிலங்கா அரம்பத்தில் எதிர்த்துவந்தாலும் பின்னர் புதுடில்லியின் கடுமையான அழுத்தத்தினைத் தொடர்ந்து அதனது கோரிக்கையினைக் கொழும்பு ஏற்றுக்கொண்டது. கடந்த நவம்பர் 28ம் திகதி இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா இந்தத் துணைத் தூதரகத்தினைத் திறந்திருக்கிறார்.

'ஒரு பெரும் துஷ்டன்' எனப் பலரும் கருதுமொரு நாட்டுடன் சிறிலங்கா ஏன் தொடர்ந்தும் 'நெருங்கிப்' பழகுகிறது என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

சிறிலங்காவில் சீனா வகிக்கும் பங்கு நாளுக்குநாள் அதிகரித்துச்செல்லும் நிலையில், தனது பிடியிலிருந்து சிறிலங்கா நழுவிச்செல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தியா சிறிலங்காவிற்கான தனது உதவிகளைத் தொடர்ந்தும் வழங்கும்.

இந்தியாவிடமிருந்து அரசியல் மற்றும் பொருளாதார ரீதியிலான நன்மைகளைத் தங்குதடையின்றிப் பெறும் வகையில் சிறிலங்காவும் இந்தியாவுடனான உளவினைத் தொடர்ந்தும் பேணவே விரும்புகிறது.

இவ்வாறு உண்மையிலேயே இந்தியாவுடன் இதயசுத்தியுடன் கூடிய நெருங்கிய உறவினை கொழும்பு இந்தியாவுடன் கொண்டிருக்கலாம் அல்லது புதுடில்லியிருந்து கிடைக்கும் உதவிகளைப் பெறும் வகையில் செயலாற்றாம், எது எவ்வாறிருப்பினும் சிறிலங்கா விடயத்தில் இந்தியா தொடர்ந்தும் முதன்மையான பங்கினை வகிக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக