புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
19 Posts - 54%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
5 Posts - 14%
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 9%
வேல்முருகன் காசி
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 9%
T.N.Balasubramanian
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 6%
Raji@123
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
2 Posts - 6%
kavithasankar
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
139 Posts - 40%
ayyasamy ram
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
134 Posts - 39%
Dr.S.Soundarapandian
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
8 Posts - 2%
prajai
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_m10தர்ஷன் கவிதைகள் - Page 6 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தர்ஷன் கவிதைகள்


   
   

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 12:56 pm

First topic message reminder :

காதல்


காதல் என்பது பார்வையின் மொழியே
கவிதை என்பது காதலின் மொழியே
கவிதையும் பார்வையும் வார்த்தைகள் பேசுமே
காதலும் நேசமும் உயிரினில் கலக்குமே-இது

காதல் தேசமடா-இங்கு
காதல் ஆட்சியடா-இது
காதல் வாழ்க்கையடா-இங்கு
காதல் சுவாசமடா

காற்றும் இங்கே கவிதை சொல்லுமே
கற்கள் கூட கனிகள் ஆகுமே
கானம் இசைக்கவே பூக்கள் மலருமே
காதலின் ஊடலை நிலவு ரசிக்குமே

இமைகள் அழைக்கவே மௌனம் பேசுமே
இதயம் பேசவே காதல் சிறகடிக்குமே
காதல் ஈர்ப்பிலே உலகம் அசையுமே
காதலர் மூச்சிலே உயிர்கள் பிறக்குமே

உறவு கொள்ளவே இளமை விரும்புமே
உயிரும் தீண்டவே உலகை மறக்குமே
ஒரு நொடி பிரிந்தாலே உள்ளம் வலிக்குமே
ஒரு உயிர் பிரிந்தாலே மறுஉயிர் மடியுமே


j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:37 pm

ஒருதலைராகம்


இன்னும் எத்தனை காலங்களுக்குத்தான்
உன்னை நான் ஒருதலையாகவே
நேசித்துக்கொண்டிருக்கமுடியும்......

அந்தி மாலையிலும்.....
அர்த்தஜாம வேளையிலும்......
நீர்த்த அதிகாலையிலும்........

எத்தனை முறை
உன்னைப் பார்த்திருப்பேன்.
எத்தனை முறை
உனக்குள்ளே முகம் புதைத்து
உன்னை ஸ்பரிசித்திருப்பேன்.
ஆனால் நீயோ
அருகிலே இருந்தும்
விலகியே இருக்கின்றாயே?

இப்பொழுது நானும் அப்படித்தான்.

எல்லாக் காதலரும் சொல்வதைப்போல
எந்தப் புத்தகத்தைப் புரட்டினாலும்,
எந்த நோட்டுக்களைப் புரட்டினாலும்
பக்கமெங்கும் உன் முகம்தான்

எனது விரல்களும்கூட
பேனாவைத் தழுவும் நேரங்களில்
எழுத நினைப்பதெல்லாம் உன்னையே.

எத்தனை முறை படித்தாலும்
பொருளே புரியமுடியாத
சங்க காலக் கவிதைபோல நீ
எப்படியாயினும் உன்னை அடைந்தே
தீருவதெஎன்ற ஆதங்கத்தில் நான்.

எனக்கு தோல்விகள் சகஜம்தான்
அதற்காக நீயுமா
என்னை ஏமாற்றிவிடப் பார்க்கின்றாய்.
நான் உன்னை ஒருபோதும்
தோற்கடிக்க நினைத்ததில்லை.
வெற்றிகொள்ளவே விரும்புகிறேன்.

உன்னோடு எனக்கு
கட்டாயக் கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு
இற்றோடு ஆண்டுகள் ஐந்து கடந்துவிட்டது.
உன்னை நான் நேசிக்கத் தொடங்கியது
என்னிடமிருந்து பருவங்கள் இரண்டு
பறிபோன பின்புதான்.

தாமதமாய் வந்தாலுமிது
தரமான காதல்.
உன் பார்வைகள் என்னைப்
பற்றிக்கொள்ளும் வரை
உன்னைப் பற்றியே
நினைந்துருகும்.

தெருவிலே போவோர்
உன்னைப் ‘பற்றிப்’
பேசிச்செல்லும்போதெல்லாம்
நான் உன்னோடு பேசிச் சிரிப்பதெல்லாம்
எப்போதென்று எனக்குள்ளும் ஓர் ஆதங்கம்

ஆதலால் சொல் அன்பே
என் மனவீட்டில் நீ குடிபுகுந்து
என் நாவினில் நின்று ஆட்சி புரியும்
அந்த நாள் எதுவென்று
சொல் ‘ஆங்கிலமே’ சொல்.....

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:38 pm

புதிய பாரதம் ...!


இராமனுடைய
சிந்தனை எல்லாம்
சீதையை மீட்பது பற்றியது அல்ல.
இலங்கையினை கவர்ந்து
அவனது
இப்போதைய நோக்கம்.

திரௌபதையின் சபதம் முடிக்க
தருமன்
சேர்ந்திருப்பதோ
துச்சாதனர்கள் கூட்டத்தோடு

ஆட்சிக்காக
இலட்சுமணனை ஏலம் விடவும்
துணிந்துவிட்டான்
இந்த இராமன்.
எடுத்தவன் இராவணன் என்பதால்
ஓலம் இடுகிறான்.

அனுமான்
இலங்கையை எரிக்க மறுத்ததால்
அனுமானையே எரித்துவிட்டான்
புரியாத இராமன்.

அரசியலிலே
அனுமான் என்ன
அண்ணன் தம்பி என்ன .....

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:38 pm

வாழ்க்கை


கிட்லரும் யேசுவும்
எனை சரி சமனாகவே
ஆட்சி செய்து கொள்கிறார்கள்.

சமனிலை தவறாமல் இருப்பதற்காக
கடுமையான
பிராயத்தனங்கள்.

கிட்லரை விடவும்
யேசுதான்
அதிகமாக ஆட்சி செலுத்துகிறார்.
என்னை
அதனாலே தான் தோள்கள் எங்கும்
அதீத பாரச் சுமைகள்.

ஆனாலும்
எங்கோ ஒரு ஓரத்திலே
கிட்லர் தூங்கிக் கொண்டுதான்
இருக்கிறான்.

யேசுவாக இருந்து கொண்ட
பாதி காலங்கள்
பறந்தன.
மிஞ்சியதெல்லாம் தேய்ந்த செருப்பும்
சிலுவை தூக்காத
துன்பமும் தான்....!

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:39 pm

மனிதசக்தியின் மகத்துவம்

கூரையினைப் பார்த்துக்கொண்டு
மூலையில் முடங்கிக் கொண்டு
நாளைக்காக காத்துக்கொண்டு
முறையான வாழ்வினை முடக்கிவிட்டு
தெளிவான வாழ்வினை தொலைத்துவிட்டு
தரங்கெட்டு, நன்மதிப்பு கெட்டு வாழும் - இந்த
மனித சமுகமே இன்னுமா உன்னுள் உறங்கிக்கிடக்கும்
"மனித சக்தியை " அறியவில்லை !
ஒருவேளை உணவிற்காக அடிமைப்பட்டு
உனது தன்மானத்தை விட்டெறிந்து
காசை நினைத்து காலம் தள்ளும் மானிடனே
உன்சக்தியினை நீ அறியவில்லையா
போதைக்கு அடிமைப்பட்டு
தன்னம்பிக்கையினைவிட்டு
நல்வாழ்விற்கு பூட்டு போட்டு வாழும் மானிடனே
ஜாதி,மதத்திற்கு உயிரை விட்டது போதும்
ஜிந்தறிவு ஜிவிகளிடமிருந்து உன்னை
வேறுபடுத்திக்கோள்
விண்ணைத் தொட்ட இந்த மனித சக்தி
மண்ணைவிட்டு நீங்குவதில்லை
நாள்தோறும் சவிற்காக நாளேட்டை பார்த்த
நோயாளிக்கு நுறுவயது தருமிந்த "மனிதசக்தி"
தனக்காக வாழாது, பிறருக்கென வாழ்ந்து
பிறர் நலத்தின தன்னலமாக கருதிய
அன்னை தெரசாவின் "கருனைசக்தி"
இதுபிரபஞ்சத்தினை மிஞ்சும் "மகா சக்தி

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:39 pm

தமிழ்


தழிழரின் நாவினில்
தவழ்ந்திடும் தமிழ்
தரணியின் களனியில்
தழைத்திடும் தமிழ்
உலகத்தின் பிறப்புடன்
உருவான தமிழ்

தொன்மையின் சான்றிலும்
தொலையாத தமிழ்
பிஞ்சுக் குழந்தையுடன்
கொஞ்சும் தமிழ்
மனசை மயக்கும்
மழலைத் தமிழ்

அன்னை மடியில்
அன்புத் தமிழ்
ஆசான் கரத்தில்
அறிவுத் தமிழ்
நண்பனின் மூச்சில்
நட்புத் தமிழ்

மடந்தையர் கண்களில்
மயங்கிடும் தமிழ்
காதலின் பேச்சில்
கவிதைத் தமிழ்
மன்னவர் சபையில்
மானத் தமிழ்

வள்ளுவன் எழுத்தில்
வாய்மைத் தமிழ்
பாரதி சொல்லில்
பற்சுவைத் தமிழ்
ஓளவையின் மொழியில்
அறிவுரைத் தமிழ்

கவிஞரின் உள்ளத்தில்
கனிந்திடும் தமிழ்
சங்ககாலம் வித்திட்ட
சாதனைத் தமிழ்
விளைகின்ற மண்ணில்
வீரத் தமிழ்

கடலின் அலையிலும்
கவிபாடும் தமிழ்
காற்றின் ராகத்தில்
கலந்திட்ட தமிழ்
மழையின் சாரலாய்
மகிழ்திடும் தமிழ்

வற்றாத ஆறாக
வழிந்தோடும் தமிழ்
பூவின் மென்மையாய்
புன்னகைக்கும் தமிழ்
பூவுலகம் சூட்டும்
புகழ்மாலைத் தமிழ்

வானத்தில் சிறகடிக்கும்
வசந்தகாலப்பறவைத் தமிழ்
சாத்வீக குணத்தின்
சாந்தத் தமிழ்
அன்பின் மார்க்கத்தை
ஆற்றுகின்ற தமிழ்

வறுமையின் பிடியிலும்
வாழ்ந்திடும் தமிழ்
அடிமையை எதிர்த்திடும்
ஆணவத் தமிழ்
உறவுகள் வாழ்ந்திட
உதவிடும் தமிழ்

மரணத்தின் படுக்கையில்
மரிக்காத தமிழ்
மறுஜென்ம பாதையில்
மறையாத தமிழ்
ஆண்டவன் தந்துவிட்ட
அகராதித் தமிழ்

குறையாத சுவை தமிழுக்கே
குன்றாத மொழி தமிழுக்கே
அழியாத அழகு தமிழுக்கே
அணையாத தீபம் தமிழுக்கே

எங்கும் தமிழ்
எதிலும் தமிழ்
என்றும் நிலைத்திட
எல்லாம் வல்லவனின்
ஆசியை பெற்று
அகிலம் நிலைபெறும்.

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:40 pm

தலைவா நீ வந்துவிடு


நெஞ்செல்லாம் பஞ்சாய் போய்
நெருப்பாய் வேகுது உள்ளம்
தலைவா நீ வந்துவிடு வெளியே
தமிழினமே தவிக்குது உனக்காய்

தரணியிலே தமிழர் வாழ
தலைவன் அண்ணன் நீதான் வேண்டும்
பட்டினியில் பச்சக்குழந்தை
பரிதாபமாய் செத்துப்போகுது

பள்ளிக்கூடம் போகும் பசங்க
முகாமில முடங்கி இருக்கிறான்
காப்பதற்கு யாரும் இல்லை
கேட்பதற்கு நாடும் இல்லை

தலைவா நீ வந்துவிடு வெளியே
தமிழினமே தவிக்குது உனக்காய்

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:41 pm

உயிர்த்தெழுவோம்


அள்ளி அணைத்து
உறவெல்லாம் ஆரத்தழுவும்

மெல்ல மலர்ந்து ஒரு
முல்லை சிரிக்கும்

சின்னக் குழந்தையாய்
அதன் உள்ளம் இருக்கும்

நல்ல தமிழாய் அதன்
வார்த்தை இனிக்கும்

வண்ணக் கனவுகள்
நின்று நிறைக்கும்

வார்த்தைக்கு வார்த்தை
அண்ணனை கதைக்கும்

அப்போது இன்னும் சில
நிமிடமே இருக்கும்

இனி சொல்ல வார்த்தையின்றி தவிக்கும்
அப்போதும் அந்த முகம் சிரிக்கும்

சின்னக் கை அசைத்து
விடை பெறும்

ஒரு வண்ணம்
ஓவியமாய்
உயிர்பெறும்

நல்ல காவியமாய்
தேசப்புயல் கடக்கும்

ஆம்

ஒரு கரும்புலி
கந்தகம் சுமந்து
நடக்கும்

பெரும் பகை மோதி
வெடி வெடிக்கும்

ஒரு உன்னத மனிதன் உயிர் விட
ஒரே உன்னத இலட்சியம் துளிர்விடும்
உயிர்ப்புற்று உறுதிபெறும்

மெல்ல வரும் காற்று
எங்கள் மேனி தொடும்

சொல்ல வார்த்தையின்றி
அது தன்னாலே தடவி அழும்

அலையும் கடலும்
கரை வந்து கரையும்

நாமும்
மெல்ல விழி கசிவோம்
நெஞ்சுக்குள் நெருப்பெரிப்போம்

மீண்டும் சின்னக்குழந்தைகளாய்
சிரிப்போம்

ஏனெனில்
நாங்கள் கரும்புலிகள்
எங்கள் தலைமுறைக்காக
எங்களை அர்ப்பணித்தவர்கள்

இலட்சியம் ஈடேறும் வரை
நாங்கள் சாவதில்லை
சந்ததிக்குள்ளே உயிர்த்தெழுவோம்
சத்தியம்
தமிழீழம் காண்போம்.

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:41 pm

அன்புள்ள அம்மா....!!



உன் உயிரிலே கருவாகிய
எமக்காகவே எல்லாவற்றையும் அர்ப்பணித்து
உன் உதிரத்தால் எமக்குணவூட்டி
எம் உயர்ச்சியிலே மனமகிழ்ந்த
எம் அன்பு அம்மாவிற்கு...!!

பெண் பிள்ளை வேண்டும் என்று
தவமிருந்து பெற்ற பிள்ளை நானென்றால்..
உன்னை அன்னையாக அடைய நான்
எத்தனை ஜென்ம புண்ணியம் செய்திருக்க வேண்டும்??

அறிவு தெரிந்த நாள் முதல்
உன் சேலைத் தலைப்பை இறுகப் பற்றியபடி
சுற்றி வரும் நான்..
நீ வேலை முடிந்து வீடு வரும் நேரம்
வழி மேல் விழி வைத்து காத்திருக்கும் நான்..
உயர்தரம் படிக்குமளவு வளர்ந்து விட்ட பின்னும்
உன் மடியில் தலை வைத்து தூங்கும் நான்...
உன் கையால் உணவுன்பதற்காகவே
சாப்பிடாமல் காத்திருக்கும் நான்..
இன்று உனைப் பிரிந்து
தொலை தூரம் இருக்க வேண்டி வந் ததும்
கொடூரமான விதியின் ஒரு தண்டனை தான்...!!

3மணித்தியாலம் உனைப் பிரிந்து இருக்க மறுத்து
nurseryபோக அடம்பிடிக்கும் நானும்
classroomல் எனை உள்ளே விட்டு விட்டு
பெரிய பிரம்பை நீட்டி
என்னுடன் இருந்தால் அம்மாவை
அடித்து விடுவேன் எண்டு
வெருட்டி உனை வெளியே விட்டு கதவை மூடும்
Reeta teacher
என் மூன்றாம் வயதின் வில்லன்...

கட்டுரை பேச்சுப் போட்டி
என்றால்
எனக்கு ஒரு பரீட்சை என்றால்
முடிவுகள் வரும் வரை
என்னை விட அதிகமாக
ரென்சனாவது கூட நீ தான்..

படிக்கும் நாட்களிலே
ஒரு நாள் கூட காலை உணவு
பாணுண்டு நாமறியோம்..
பாடசாலைக்கு கூட அம்மாவின் கைச்சமையல் தான்
பொறாமையுடன் எனை நோக்கும்
சக தோழியரிடையே
collar upபண்ணும் நான்..
இன்று
உனைப் பிரிந்து இருப்பதனால்
எத்த்னை நாள் சாப்பிடாமல்
சென்றிருப்பேன்...

அதிகாலை எழும்பியவுடன்
அம்மா முகத்தைப் பார்க்கவேணும் என்பதற்காகவே
கண்களை இறுக மூடியபடி
உனைத்தேடும் நான்..
காலை முதல் மாலை வரை நடந்த சகலமும்
உனக்கு ஒப்பித்து விட்டு
மறுவேலை பார்க்கும் நான்..
உனக்கு வந்த அந்த promotionஆல்
கொஞ்சம் ஆடித்தான் போய் விட்டேன்...
கொஞ்சம் தடம் மாறி விழுந்து விட்டேன்..
ஆயினும்
அப்பாவும் நீங்களும்
என்மேல் காட்டிய அன்பு மீண்டும் எழுந்து
உறுதியாக நடக்க வைத்தது...!!

எம்மூவருக்குமான
உங்கள் அன்பில் பாரபட்சமில்லை
ஆயினும் எனக்கு மட்டும் நீ
அதிகமாக வேண்டும் என்று
ஆசைப்படுவது என் அறியாமை தான் ஆயினும்
மாற்றமுடியவில்லை..

எது கேட்டாலும் மறுக்காத
உன் இயல்பு..
ஆனால்
அன்று மட்டும் நீ
அவ்வளவு உறுதியாக மறுத்திருக்காவிட்டால்..
காலம் செய்த சதியில்
இன்று நான் எங்கோ
காணாமல் போயிருப்பேன் என்பது மட்டும்
அறுதியான உண்மை...

வி்டுமுறை நாள் எண்ணி
வீடு வரும் வேளை
சலுகையாக உன் மடியில்
ஏறிப் படுக்கும் பூனைக் குட்டியை
முறைப்பதுவும்..
பொன்குஞ்சு எனக் கொஞ்சும்
அம்மாவின் அரவணைப்பில்
மகிழ்வதுவும்
அவளிற்கு எல்லாமே அம்மா தான் எண்டு
சலித்துக் கொள்ளும் அப்பாவை
சமாளிக்க நான் படும் பாடு...

உங்கள் அன்பை எழுத
இன்றொரு நாள் போதாது..
எழுதியும் முடியாது...!!

இறைவன் என்பவரின் இருப்பு உண்மையென்றால்...
அவரிடம் வேண்டுவது இது ஒன்று மட்டும் தான்..
நானிருக்கும் காலம் வரை நீங்கள் என்னுடன் வேண்டும்..
என்னால் உங்கள் முகத்தில் தொலைந்த அந்த புன்னகை
மீண்டும் மலர அவனருள் வேண்டும்...

China மட்டும் யாழ்ப்பாணத்தின் அருகில்
இருந்து விட்டால்..
தினம் தினம் உங்கள் முகம் காண ஒடி வருவேன்...
ஆயினும் நான் கொடுத்து வைத்தது இவ்வளவு தான்...

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:42 pm

ஏகாதிபத்தியம்


ஓ ! ஏகாதிபத்தியமே !
ஈழமே அங்கு எரிகிறதே
நீங்கள் யுத்தநிறுத்தம் செய்ய
பஞ்சாங்கம் பார்கிறீர்கள்

பாவமே அறியாத பச்சிளம் குழந்தைகள்
பச்சை உடம்பாய் சிதறிகிடக்கின்றன
வேகமாய் வரும் குண்டுகளோ
ஈழத்தமிழன் உடலில் பட்டு அடங்கிபோகின்றன
அங்கு தடுக்கி விழுந்தால் தரை தெரிவதில்லை
தமிழனின் உடல்தான் தெரிகிறது

ஐயோ!
கல்லும் கண்ணீர் வடித்து கரையுமே
ஈழத்தமிழர் நிலை கண்டால்
கணவான்களே!
உங்கள் மனமென்ன மண்ணா?
பூனைக்கும் நாய்க்கும் காவல் இருக்கும்
புத்திசாலிகளே!

ஈழத்தமிழன் என்ன அதனிலும் கேடா?
பிராந்திய நலனில் அக்கறை கொள்ளும்
முதலாளிகளே!
மகிந்த என்ன உங்கள் மாப்பிள்ளையா?
வல்லரசு என்று மார்தட்டிக்கொள்கிறீர்கள்
போரை நிறுத்தமுடியாமல்
வக்கத்து நிற்கிறீர்களே!?

j.tharsan
j.tharsan
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 15/08/2009

Postj.tharsan Wed Aug 19, 2009 1:42 pm

ஏழ்மையில் மக்களைத் தள்ளுவதோ அதை இன்பமெனச் சிலர் சொல்லுவதோ


மெய்வலியும் செல்நிலையும் வாழ்நாளும் தூ ஓழுக்கும்
மெய்யா யளிக்கும் வெறுக்கையிலார் வையத்து
பல்கிளையும்வாட பணையணைதோள் சேய்ந்திரங்க
நல்லறமும் பேணாது நின்றே யார்ப்பரிக்க
திரைகடலும் ஓடியங்கே தம்முயிரைப் பேண
விரண்டவர்க் கெல்லாம் எங்கனம் ஆவலுண்டு
கருமையின் மேனியர் எனவசைமொழி கூற
கருமயிர் தன்னை நரையிராக்கி கவலையுமறந்து
மேற்றிசை வாழும் வெண்ணிற மக்களுள்
பற்றிய செய்கையும் பரப்பிடு கொள்கையும்
கற்றிட நம்மவர் காரணி யாதெனில்
மற்றவர் புகழ்ந்திட முழுதுமே தழுவி
தரணியில் தமிழினம் பொய்தழிவெய்தி
காரணியின்றிக் கண்ணீர்க் கோலமாய்
பூரணவாழ்வு புரிந்திட்ட வகையில்
தாய்த்தமிழீழம் தறுகண் மிலேச்சரால்
மாய்த்திடலறியா மாற்றலர் தொழும்பராய்
தாய்பிறர் கைப்பட சகிப்பவனாகி
நாட்டிடை மாந்தர் பசியால் நலிந்திட - தன்னுதர
ஊட்டமே பெரிதாய்உண்டே நாள் தொறும்
சுற்றமும் நோக்கார் தோழமை மதியார்
அந்தகன் வரவறியா ஆடம்பரங்க ளெல்லாம்
சிந்தையிலே சிறகடித்துச் சிட்டாகப் பறப்பவர்கள்
உற்றோர் இடுக்கண் உயிர்கொடுத்து மாற்றாமல்
வெற்றுத்தனம் போல்வார் மேதினியில் பலருண்டு
சிறுமையொடு மடமைகாணாக் கடமையிலே நினைவுந்தொலைத்து
களிப்புறு வகையிங்கு காண்பவர் வகையறிவோம்
ஒளியின்றி மலைபோல துயர்ச்சுமை பெரிதாகி
வெளியுலகங் காணாத வாழ்க்கையது மாறாமல்
எளிமையிலே நித்தம் ஏக்கமுடன் வாழ்கையிலே
நிலையான வருமானம் நலிவோடு செல்வதனால்
அலைமோதி நின்மதியை காணாதுய்கின்ற வேளை
விலைவாசி யேற்றமுற வேதனையால் மிகவாடி
மேலுஞ் சுமைகண்டு சுருண்டுவிழும் ஏழ்மைநிலை
நாளுந் தெரிந்திருந்தும் ஒன்ற உணராதார் ஈங்கு!
உடலதனை மூலமாக்கி தினமுழைத்து உருகிப் போய்
கடன்சுமையால் வருகின்ற துன்பக்கடல் மூழ்கி
அடைமழையில் நனைகின்ற காட்சியை அறிந்தபின்னும்
ஆறோடி வளங்கூட்டும் இரக்கமில்லா மானிடத்தில்
வேறாகி நின்றங்கே வாய்பிழந்து நகையாடி
நீறாகும் வரையங்கு நிந்தைபல செய்திடுவார்
கற்பூரம் போலக் கடலுப்பு இருந்தாலும்
கற்பூரம் போலாமோ கடலுப்பு
பொற்பூகும் புண்ணியரைப் போலிரு ந்தாலும்
புல்லியர் தாம் புண்ணியராவாரோ அதுபோல
உள்ளந் தொழுதேதும் உவந்தளிப்ப தல்லால்
எள்ளளவும் ஈயஇசையாமல் எள்ளியங்கு நகையாடி
தாமுங் கொடார் கொடுப்போரை ஈயவிடார்
சேமஞ் செய்வாரை சினமூட்டச் செய்திடுவார்
தேறாது அவர்மனதில் ஏழ்மையென்று விட்டால்
கூறாத வார்த்தையெல்லாம் கூறியின்ப முற்று
கழிவிரக்கங் கொள்ளாமல் காண்கின்ற களிப்பெல்லாம்
அழிமுதலைத் தேடுகின்ற அத்திவார மறியாரே
சீலமில்லான் ஏதேனுஞ் செப்பிடினும் இவ்விடத்து
தானந்தக் காலம் ஏழ்மையிடமறிந்து இகழாரே
சிற்றுணர்வார் என்றும் சிலுசிலுப்பார் ஆன்றுமந்த
முற்றுணர்ந்தோர் என்றும் மொழியாரே
மற்றொருகால் சிந்தையது நோகாமல் தப்புமவன் உத்தமனே
கருவுறும் ஏழையவன் துயர்களைய இருந்தவோர் -கேள்வி
திருந்திடும் உயிர்க்கு சிற்றறிவேன் சாற்றிடுகவியில்
சொற்சிலம்பாக ஒருபொருளாகி உவமைபெறாது
வேற்றோர் கருத்தில் ஏற்றோர்க்கிசையா பேதமிருந்தால்
புவனியில் வாழும் பெருந்தகை யறிவோர்
இவ்வகைக் கவியில் மருவிடு குற்றங்களைந்து
வேண்டார் ஆயினும் விளம்புவீர் இனிதே!!

Sponsored content

PostSponsored content



Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக