புதிய பதிவுகள்
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
32 Posts - 42%
heezulia
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Manimegala
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
1 Post - 1%
jothi64
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
398 Posts - 49%
heezulia
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
26 Posts - 3%
prajai
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_m10‘ரங்கநாயகியின் காதலன்’  {குறுநாவல்} - Page 3 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Tue Aug 18, 2009 6:04 am

First topic message reminder :

‘ரங்கநாயகியின் காதலன்’ {குறுநாவல்}

[You must be registered and logged in to see this image.]



ரங்கநாயகியின் காதலன் என்ற இந்தக் குறுநாவல் ஒரு போர்வீரனுக்கும், ரங்கநாயகிக்கும் இடையான காதலாக மட்டும் படைக்கப்படாமல் காதலுடன் சேர்த்து தமிழர்களின் வீரமும் அவர்களுடைய ஆட்சித் திறனும் எவ்வாறு ஈழத்தில் நிலைகொண்டிருந்தன என்ற வரலாற்று உண்மைகளை ஆவணப்படுத்தும் வகையிலும் படைக்கப்பட்டிருப்பது ஈழத்தில் ஆட்சி நிலவியமைக்கான வரலாற்றுச் சான்றாதாரமாகவும் விளங்குகின்றது.


தம்பலகாமத்தின் சிறப்பையும் அங்கே அந்த அழகிய கிராமத்தை மருவிச் செல்லும் குடமுருட்டியாற்றையும், இயற்கை அழகின் எளிமையையும் வாசகர்களின் மனங்களில் மிக இலாவகமாகப் பதியச் செய்துள்ளார்.

ஈழத்தில் தமிழர் ஆட்சி ஒன்று இருந்ததா? என்ற வரலாற்றுத் திரிபு வழிகளுக்கு ஆப்புவைப்பதுபோல் தம்பலகாமம் க. வேலாயுதம் அவர்கள் இக்குறுநாவலினூடாக ஆங்காங்கே 800 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர் வாழ்ந்த அவர்களால் ஆட்சிசெய்யப்பட்ட பிரதேசங்களை இன்று ஆக்கிரமிப்பாளர்களால் எவ்வாறு பெயர்மாற்றம் செய்யப்பட்டன என்ற தகவல்களை இந்தக் குறுநாவலினூடாக அறிய முடிகின்றது.

தம்பலகாமம் நூறு வீதம் தமிழர்களால் நிர்வகிக்கப்பட்டதால் அது தமிழர் பட்டணம் என்ற பெயரில் அன்று இருந்ததை அறியும்போது எமது நெஞ்சுகளும் ஒரு கணம் நிமிர்கின்றன.

ரங்கநாயகியின் காதலை உணர்வுபூர்வமாக இக்குறுநாவலினூடாக வளர்த்துச் சென்று இறுதியில் வாசகர்களின் நெஞ்சங்களைக் கனக்கச் செய்யும் வகையில் கதையை முடித்து அவளது வரலாற்றை தம்பலகாமம் ஆதிகோணேசர் ஆலயத்துடன் முடித்து வைப்பது முத்தாய்ப்பாய் அமைந்துள்ளது.


வல்வை.ந. அனந்தராஜ்
திருக்கோணமலை.


jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Tue Aug 18, 2009 6:50 pm

பிரபு! போய்விட்டீர்களா பிரபு?, என்று அவன் ஓலமிட்டபோது உண்மையைப் புரிந்துகொண்ட வீரர்கள் வாய்விட்டு அலறத் தொடங்கினார்கள். வெகுநேரம் ஆயிற்று அவர்கள் அழுகை நிற்க.

இனி...

ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல் நிறைவுப்பகுதி

[You must be registered and logged in to see this image.]

தம்பன் கோட்டை அல்லோல கல்லோலப்பட்டுக் கொண்டு இருந்தது. கலிங்கவிஜயவாகு மன்னரின் எருதுக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. கோட்டையின் நான்கு மூலைகளிலும் கோட்டைக்கான கொடி அரைக்கம்பத்தில் ஏற்றிவிடப்பட்டது. கொம்பு, குழல், தப்பட்டை, தாரை, பறை போன்ற வாத்தியங்கள் சோகமாக ஒலித்துக் கொண்டிருந்தன.



அலங்கரிக்கப்பட்ட முன் மண்டபத்தில் தளபதியின் உடல் வைக்கப்பட்டிருந்தது. அரசருக்கு சேதி அனுப்பப்பட்டு பதில் எதிர்பார்க்கப்பட்டுக்கொண்டிருந்தது.



உதயனை, யானை போட்ட கல்லிலிருந்து விடிவதற்கு முன்னமே, தளபதியின் உடலை கோட்டைக்கு கொண்டு வந்து சேர்த்துவிட்டான் இளஞ்செழியன்.



(கல் நெருக்கக் காட்டுப்பகுதியைத் தற்போதைய அரசுகள் வெடிவைத்து அழித்து குடியேற்றங்களை உருவாக்கி வயல்பூமிகளாக மாற்றிக் கொடுத்திருக்கின்றன. காட்டில் இருந்த உதயனை யானை போட்ட கல் என்று காரணப்பெயராக அழைக்கப்பட்ட பகுதி இப்போதும் வயல்வெளிகளுக்கு மத்தியில் அதே பெயரோடு அறியப்பட்டு கிடக்கிறது)



இளஞ்செழியன்தான் முதலில் சுயநினைவுக்கு வந்தவன். உடனடியாக பத்து வீரர்களை சதுர்வேதமங்கலம் நோக்கி அரசரிடம் எப்படியாவது சேதியைச் சொல்லி பதிலைக் கொண்டு வருமாறு பணித்துவிட்டு, இன்னும் பத்துப்பேரை கடும்விரைவில் கோட்டைக்குள் சென்று ஆயத்தங்கள் செய்யுமாறு பணித்து விட்டு, உதயகுமரனின் உடலை நன்கு போர்வையால் சுற்றி குதிரைமேல் கிடத்தி தம்பன் கோட்டை நோக்கி மீதி வீரர்களுடன் விரைந்தான்.



தளபதி பொறுப்பை ஏற்ற சொற்ப காலங்களிலேயே அனைவரது அன்பையும் தன் எளிமையான பண்புகளால் கவர்ந்திழுத்திருந்த தளபதியின் சாவு பற்றி அறிந்ததும் எல்லோரும் வாய்விட்டுக் கதறினர்.


ஊர் மத்தியில் சேதி பரவி சாரி சாரியாக வந்து மரியாதை செலுத்திச் சென்றனர் மக்கள். சோகத்தின் மத்தியிலும் கண்ணீர் தாரையாக வடிந்து நிற்க படைவீரர்கள்மரியாதை அணிவகுத்து நின்றனர்.


ரங்கநாயகி விடிந்ததும் விடியாததுமாக வீட்டு முற்றத்தில் வந்து நின்று கொண்டிருந்தாள்.... அவள் மனம் வெறுமையாகக் கிடந்தது உற்சாகம் உடலிலும் இருக்கவில்லை. அவள் உணர்விலும் இருக்கவில்லை.


தீடீரென்று தடதடவென்று குதிரைக்குளம்பொலி அவர்களது வீட்டுப்பக்கம் வந்து கொண்டிருந்தது. அவர் வருகிறாரோ என்று நினைத்த மாத்திரத்திலே அவள் இதயம் அவனைப் பார்த்துவிட தொண்டைக்குழிவரை வந்துவிட்டது போலிருந்தது. வந்தது உதயகுமரனில்லை. ஒரு போர்வீரன்! செய்தியை இளஞ்செழியன் அனுப்பியிருந்தான்.அவன் சொன்ன சேதியைக் கேட்டதும் அப்பா| என்ற ஒரு அலறல் அவள் அடித்தொண்டையில் இருந்து வந்தது. பிறகு கொஞ்ச நேரம் கோட்டை இருந்த பக்கம் திரும்பி சலனம் ஏதுமின்றி
நின்றவள் அப்படியே மயங்கி வீழ்ந்தாள்.



மதியத்திற்கு முன்னதாக அவளை மயக்கம் தெளியப் பண்ணி அத்தையும், சில பெண்களுமாக கைத்தாங்கலாக அழைத்து வந்தனர். அவனைக் கடைசித் தடவையாகப் பார்க்க வேண்டும் என்று போராடத் தொடங்கிவிட்ட அவளை,அடக்கவேண்டுமானால் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற நிலை கண்டு அவளை அழைத்து வந்தனர்.



உதயகுமரனின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. நெற்றித் திலகம் அவனது முகத்தின் கவர்ச்சியை தூக்கலாக்கியது. வயிற்றுப்பகுதி சேதத்தை மறைக்கவோ என்னவோ அவனது வாளும் கேடயமும் வைக்கப்பட்டிருந்தன. அவனது உயிரற்ற உடலைக் கண்டதும் அவள் அலறிக் கத்திக்கொண்டு விழுந்து மூர்ச்சையானாள். அவளுக்குள் ஒரு நரம்பு அறுந்தமாதிரி ஒரு உணர்வுடனேயே அவள் நினைவிழந்தாள்.



மாட்டுவண்டி எடுத்துவந்து பிரேதம் போல அவளை வீடு கொண்டு சென்றனர். அவளுக்கு நினைவு தெளிய ஒரு நாளாயிற்று. அதற்கிடையில் உதயகுமரனை அரசரின் ஆக்ஞைப்படி சதுர்வேத மங்கலத்திற்கு மங்கலத்தேரில் வைக்கப்பட்டு எடுத்துக் கொண்டு போகப்பட்டது. தம்பலகாமம் பிரதேசம் அடங்கிலும் ஒரே சோகமயம்தான்.



இதற்கிடையில் மரக்கட்டைபோல் வீட்டிற்குக் கொண்டு வரப்பட்ட மகளைக் கண்டதும் வைத்திலிங்கம் பிள்ளை சிறு பிள்ளை போல அரற்றத் தொடங்கிவிட்டார். அவரைத் தேற்றுவதே பெரும்பாடாயிற்று.தம்பை நகர் என்ற தம்பலகாமத்து இராஜ வைத்தியர் நமச்சிவாயப் பரியாரியாரின் உயிர் காக்கும் மிர்தி சஞ்சீவி மாத்திரைப் பிரயோகமே அவளைப் பிழைக்கச் செய்தது.ரங்கநாயகி இறந்துவிடுவாள் என்றே பலரும் நம்பினர். ஆயினும் பிழைத்துக் கொண்டாள். கொடிய கருநாக சர்ப்பத்தின் வாயில் அகப்பட்டுத் தப்பிய தேரைபோல சில காலம் ஒடுங்கிக் போயிருந்தாள்.



முன்னாள் தளபதி தம்பருக்கே மருத்துவம் செய்து வித்தைகாட்டிய இராஜாங்க வைத்தியரின் கைராசியால் ரங்கநாயகியும் சற்றுத் தேறலானாள். அவளது சங்கீதத் திறமை, அழகு இரண்டையும் கேள்விப்பட்டு எத்தனையோ பல ஊர்களிலிருந்து பெண் கேட்டு வந்தார்கள். தன் அருமை மகளைத் தன் கண் மூட முன்னமே ஒரு நல்லவன் கையில் கொடுத்து அவளை ஒப்பேற்றி விடவேண்டும் என்ற நினைவிலேயே இருந்த வைத்திலிங்கம் பிள்ளை வரன்களை வரச்சொல்லி அவளது பதிலைக் கேட்டபோது, ரங்கநாயகி ஒரு தர்பாரே நடத்திவிட்டாள்.



அப்பா என் அன்பர் பயங்கர மரணம் அடைந்த சேதியைக் கேட்டதுமே நான் இறந்திருக்க வேண்டும். பாவி ஏன் உயிரோடு இருக்கிறேனோ தெரியவில்லை. அப்பா... நீங்கள் நான் இருக்கின்ற காலம் வரை இந்த நிம்மதியுடன் இருக்கவிடுவதாக இருந்தால் திருமணம் என்ற பேச்சை என் காது கேட்கச் சொல்லாதீர்களப்பா!



அவள் கேவிக் கேவி அழலானாள். அவரும் அவளுடன் சேர்ந்து அழுதார். இனி அவளிடம் இந்தப் பேச்சை எடுப்பதேயில்லை... அவளாக ஒரு முடிவுக்கு வந்தாலொழிய... நானாக அவளை நெருக்கக் கூடாது என்று அவள் இஷ்டத்திற்கு விட்டுவிட்டார்.

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Tue Aug 18, 2009 6:50 pm

சின்ன வயதிலேயே வெள்ளை உடுத்து விதவைக்கோலம்பூண்ட ரங்கநாயகி, சமயங்களில் குடமுருட்டியாறு வெண்மணல் பரப்பில் நின்று சத்தமாக ராகங்களை இசைப்பாள். அதை உதயகுமாரன் கேட்கவேண்டும், கேட்டுக்கொண்டிருப்பான் என்ற உணர்வு அவளுக்குள் இருக்கும், அல்லாது போனால் கலிங்கத்து விஜயன் கட்டி கலகக்காரர்களால் அழிக்கப்பட்டுப் பின்னர் குளக்கோட்டன் மன்னனால் கட்டப்பட்ட தம்பலகாமம் கோணேச்வரர் ஆலய தெற்கு வாயிலுக்கு எப்போதாவது வருவாள். உள்ளே எழுந்தருளி இருக்கும் கோணேஸ்வரப் பெருமானை நோக்கி இரு கரங்களையும் சிரசில் கூப்பி

[You must be registered and logged in to see this image.]

நீர்வளச் சிறப்பும் நிலவளச் சிறப்பும்
நிகரில்லாப் பெருவளம் கொழிக்கும்
ஊரதன் பெயரே தம்பலகாமம்
உழவர்கள் வாழ்ந்திடும் பேரூர்
சீர்மிகு வயல்கள் ஆறுடன் சூழ்ந்த
கோயில் குடியிருப்பெனும் பதியில்
கூர்வளைப் பிறையும் கொன்றையும் அணிந்த
கோண நாயகர் அமர்ந்தாரே


என்று தன் குயில்க் குரலால் பாடுவாள். அப்போது தானும் உதயகுமரனும் குடமுருட்டியாற்று வெண்மணற்பரப்பில் அமர்ந்து பாடிய நாட்கள் நினைவுக்கு வரும். அவள் கண்கள் இரண்டும் அருவியாய் மாறும்.



முற்றும்.


{ நன்றி - படங்கள் இணையத்தில் இருந்து }

தம்பலகாமம்.க.வேலாயுதம்

jeevaraj
jeevaraj
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 14/08/2009
http://www.geevanathy.com/

Postjeevaraj Wed Aug 19, 2009 4:59 pm

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம்


[You must be registered and logged in to see this image.]

அமரர் தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் திருகோணமலை மாவட்டத்தின் மூத்த எழுத்தாளர், சிறந்த கவிஞர், வீரகேசரிப் பத்திரிகையில் 50 வருடங்களுக்கு மேலாக நிருபராக அனைவரும் பாராட்டும் வகையில் கடமையாற்றியவர்.

வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன், தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் தனது கைவண்ணத்தைக் கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல், செய்தி மடல் என பலவகைகளில் பதிவு செய்தவர்.

1917 இல் தம்பலகாமத்தில் பிறந்த இவர் சிறுவயதுமுதலே இசை, நாடகம்,கூத்து என்பவற்றில் அதீத ஆர்வத்துடன் ஈடுபட்டதன் காரணமாக பள்ளிப்படிப்பினை 5ம் வகுப்பபுக்கு மேல் தொடரமுடியாது போனது.

இருந்தும் இடைவிடாத வாசிப்பு பழக்கமும், இயற்கையாகவே அமைந்த இலக்கிய ஆற்றலும் அவரை எழுத்துலகில் மிளிரவைத்த தென்றால் அது மிகையாகாது.


அவர் வீரகேசரி நிருபராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் ‘தம்பலகாமம்’ செய்திகளுக்கு ஒரு தனி மதிப்பு இருந்தது. வெறுமனே செய்திகளை மட்டும் எழுதாமல் ,கிராமத்தின் அத்தியாவசிய தேவைகளையும், அவற்றை எவ்வாறு தீர்க்கலாம் என்பதற்குரிய வழிவகைகளையும் கட்டுரைகள் மூலமாக தமிழ் கூறும் உலகிற்கு எடுத்துரைத்தவர்.


தம்பலகாமம்.க.வேலாயுதம் அவர்கள் 19.05.2009 அன்று தனது 92 வது வயதில் இயற்கை எய்தினார்.

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக