புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
69 Posts - 43%
ayyasamy ram
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
66 Posts - 41%
T.N.Balasubramanian
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
4 Posts - 2%
Balaurushya
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
2 Posts - 1%
prajai
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
2 Posts - 1%
Saravananj
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
432 Posts - 48%
heezulia
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
305 Posts - 34%
Dr.S.Soundarapandian
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
29 Posts - 3%
prajai
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_m10இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை


   
   
avatar
vmanirajan
பண்பாளர்

பதிவுகள் : 58
இணைந்தது : 06/11/2010

Postvmanirajan Sun Nov 28, 2010 1:54 pm

அறிவுமதி
அறிவுமதி, புகழ் பெற்ற தமிழ் கவிஞரும் பரவலாக அறியப்படும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார்.

அறிவுமதியின் இயற்பெயர் ‘மதியழகன்’. தனது நண்பர் ‘அறிவழகன்’ பெயரையும், தனது பெயரையும் சேர்த்து

‘அறிவுமதி’ என்று வைத்துக்கொண்டார்.



**********************



பிழைக்கும் வழி…



மொன்னைத் தமிழனே!
முதலில் அன்னைத்
தமிழை
அறவே
மற! மற!

பிழைக்க வேண்டுமா?
ஆங்கிலம்கற்றுக் கொள்!

அது போதுமா என்றா
கேட்கிறாய்!
போதும்!
போதும்!
அது மட்டும்
போதும்!

ஆனால்
உயிர்
பிழைக்க வேண்டுமா?

மும்பை என்றால்
மராத்தி
கற்றுக் கொள்!

கர்நாடகம் என்றால்
கன்னடம்
கற்றுக் கொள்!

கொழும்பு என்றால்
சிங்களம்
கற்றுக் கொள்!

————————————————



பூத்த நெருப்பு…



என்
மரணம்
அது
கண்ணீரை யாசிக்கும்
பிச்சைப்
பாத்திரமன்று

கவிதைக்குள்
முகம் புதைத்து
யாரங்கே
கதறியழுவது
என்
மரணம்
இரங்கற்பா
எழுதுவதற்கானதும்
அன்று

சவுக்கு மரத்து
ஊசி இலைகளில்
சறுக்கி விழுகிற
பனித் துளிகளாய்
நீங்கள் சிந்தும்
கண்ணீர்ச் சொற்களால்
என் பெயரை உச்சரிக்காதீர்கள்

பூமி
இது தண்ணீரின் கல்லறை
கடல்
அது
பூமியின் சமாதி
என் வார்த்தைகளுக்கு
வண்ணம் பூசுவதால்
கவிதையை
நீங்கள்
கெளரவப்படுத்தலாம்
வாழ்க்கையை
கெளரவிக்க
இந்த
வண்ணங்கள்
என்ன செய்யும்

மின்னல்
இருளின் விரோதியன்று
அது
மழையின் விளம்பரம்

கனவுகளையும்
கற்பனைகளையும்
மட்டுமே
காதலிக்கத் தெரிந்த
உங்களின்
கவிதைகள் கூட
காதல் தோல்விகளின்
கண்ணீர்
விளம்பரங்கள்தாமே

காதலையே
வெற்றிகொள்ள முடியாத
கோழைகளே
கவிஞர்கள் என்றால்
ஓ…
கவிஞர்களே
இந்த
வீரமரணத்தை
நீங்கள்
ஈரப்படுத்தாதீர்கள்
தூரப் போங்கள்
போய் விடுங்கள்

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

நேற்றுவரை
உங்களோடு
மலை முகடுகளில்
விவாதித்துச்
சேரி வீதிகளில்
வில்லுப் பாட்டிசைத்த
வீரக்
கவிமகன்தான்…இதோ
சாம்பற்
பொட்டலமாய்
உங்களைச்
சந்திக்க
வந்திருக்கிறேன்

தோழர்களே
என்
மரணம்
நிஜமானது
மாரடைப்புத்தான்
பொய்யானது

ஆம்
மரணம் எனக்கு
ஊட்டப்பட்டது

வேர்களைப் பற்றிய
விபரங்கள் புரியாமல்
விழுதுகள்
வெட்டப்படுகின்றன

கசக்கிப்
பிழிந்து
ருசித்துச்
சுவைத்த பின்
தூக்கி எறியப்படுகிற
மாங்கொட்டைகள்
மரங்களாய்
விஸ்வரூபமெடுக்கும்
என்பதை
இவர்கள்
மறந்து போயிருக்கிறார்கள்

கோழிக்
குஞ்சுகளைக்
காப்பாற்றுவதற்காகக்
கழுகுக் கூடுகளைக்
கலைக்கத் துடிப்பது
குற்றமா என்ன

சூரிய
முகங்களைச்
சுமந்த என்
தோழர்களே

ஒரே
ஒரு நிமிட
மெளன அஞ்சலியும்
வேண்டாம்

புறப்படுங்கள்
தொடரட்டும் நமது
மக்கள்பணி

———————————————



செம்மொழி



செல்லும் இடமெல்லாம்
செருப்படி
வாங்கி
சிவப்பாய் குருதி வழியும்
உதடுகளால்
பேசப் படுவதால்!

———————————————



கடைசி மழைத்துளி..


+++++++++++++++++++

அகதி முகாம்
மழையில் வருகிறது

மண் மணம்.

+++++++++

அவசரக் காற்று
முதல் மழை
புளியம் பூக்கள்.

++++++++++

மழைவிட்ட நேரம்
தேங்கிய நீரில்
முகம் பார்த்தது
தெருவிளக்கு.

+++++++++++

விற்பனையில்
வண்ணத்துப் பூச்சி
துடிக்கிறது பூச்செடி.

+++++++++

தாய்க்காகக் காத்திருக்கிறேன்
மரத்தில் சாய்ந்தபடி.

++++++++++

இறந்த வீரன்
மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது
பாதி எழுதிய மடல்.

++++++++++

விடிந்துவிடு இரவே
விழித்திருக்கிறான்
கூர்க்கா.

++++++++++

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.

+++++++++

எப்படிப் பாதுகாக்க
குடைக் கம்பியில்
உன் கைரேகை.

++++++++++

தொட்ட நினைவு
புரட்டிய பக்கத்தில்
கூந்தல் முடி.

+++++++++

பாவம் தூண்டில்காரன்
தக்கையின் மீது
தும்பி.

+++++++++

மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

++++++++

வாழ்க்கை என்னடா வாழ்க்கை
கருவேலங் காட்டிற்குள்
வண்ணத்துப் பூச்சி!

++++++++

எவன் நிலம்!
எவன் நாடு!
இலவச மனைப் பட்டா!

+++++++

நந்தனைக் கொன்றதே சரி
குலதெய்வம் மறந்த
குற்றவாளி.

+++++++


நொறுக்குவான் பண்ணையாரை
எல்லாக் கோபங்களோடும்
சுடுகாட்டில்.

+++++++

பிணப் பரிசோதனை
அய்யர் குடலிலும்
மலம்.

++++++++

தேவர் படித்துறை
பறையர் படித்துறை
அலைகள் மீறின
சாதி!

+++++++

பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.

++++++++

ஊருக்கு ஊர் வட்டிக்கடை
பொது இடங்களில்
தண்ணீர்த் தொட்டி
காறித்துப்புகிறான்
கணைக்கால் இரும்பொறை.

+++++++

குருட்டுப் பாடகன்
தொடர்வண்டி சக்கரத்தில்
நசுங்கியது
புல்லாங்குழல்.

+++++++

அன்று அதனை அடித்தாள்
இன்று அதுவாகி வெடித்தாள்
தாய் வழிச் சமூகம்.

+++++++

ஒரே தலையணை
வெண்சுருட்டுப்
புகைக்குள்
திணறும்
மல்லிகை மணம்.

+++++++

எங்கு தூங்குகிறதோ
என் கால்சட்டை காலத்தின்
குத்துப்படாத பம்பரம்.

+++++++

கல்லூரி மணிக்கூண்டு
பழைய மாணவன்
விசாரிக்கும் மணியோசை.

+++++++

ஒரு மரத்தை வெட்டுபவன்
மழையைக்
கொலை செய்கிறான்

+++++++

கண்ணில் ஓவியம்
காதில் இசை
மழைப் பாட்டு

++++++

‘இந்தியா டுடே‘யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

++++++

இரண்டு ஊதுபத்தி
புகையின் அசைவில்
நீ… நான்

++++++

உளி எடுத்துச்
சிற்பம் செதுக்கியவன்,
மூங்கில் அறுத்துப்
புல்லாங்குழல் செய்தவன்,
ஒலை கிழித்துக்
கவிதை எழுதியவன்..
இவர்களுக்கும்
பங்குண்டு
மழைக் கொலையில்.

ஒவ்வொரு செடிக்கும்
ஒவ்வொரு கொடிக்கும்
ஒவ்வொரு மரத்திற்கும்
பெயர்ச்சொல்லி,
உறவு சொல்லி
வாழ்ந்த வாழ்க்கை
வற்றிவிட்டது

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Sun Nov 28, 2010 3:57 pm

அருமையான தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை 677196

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Nov 28, 2010 4:50 pm

//பறையர் சுடுகாடு
படையாட்சி சுடுகாடு
தலைமுழுக
ஒரே ஆறு.//

வாழ்த்து அட்டை
முகவரியில் வருடினேன்
எழுதிய கையை.


மரக்கிளையில் குழந்தை
வரப்பில் பண்ணையார்
பயிரில் சிந்துகிறது பால்.

‘இந்தியா டுடே‘யில்
தமிழச்சி மார்புகள்!
கண்ணீரால் போர்த்தினேன்.

ஆழமான சமுதாயச் சிந்தனை கவிதைகள்.. வடித்தவருக்கும் இங்கு பதித்தவருக்கும் நன்றி..



இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Aஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Aஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Tஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Hஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Iஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Rஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Aஇலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 28, 2010 4:52 pm

நான் கூட அறிவு அதிகமாக இருப்பதால் அறிவுமதி என வைத்துக் கொண்டாரோ என நினைத்திருந்தேன்!



இலட்சியக்கவி அறிவுமதி தமிழ் / கவிதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக