புதிய பதிவுகள்
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
by ayyasamy ram Today at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm
» books needed
by Manimegala Yesterday at 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Sun May 12, 2024 10:03 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sun May 12, 2024 9:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun May 12, 2024 9:10 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun May 12, 2024 8:37 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun May 12, 2024 8:25 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun May 12, 2024 4:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 4:24 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 12:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun May 12, 2024 12:02 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:46 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun May 12, 2024 11:26 am
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm
» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm
» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm
» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm
» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm
» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm
» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm
» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
Rutu | ||||
Baarushree | ||||
Barushree | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
jairam |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாட்டெழுதித் தாராயோ? வசந்தங்கள் தருமோ வரம் (புதிய இணைப்பு)
Page 1 of 1 •
பரம்பொருளே தேவியிடை பாதி எடுத்தவனே
கரமெடுத்து வேண்டிக் கடைக்கண் பார் என்றேன்
சரம்தொடுத்துப் பாடியன்று தருமிக்கு பாட்டெழுதி
வரம்கொடுத்த வள்ளலென் வாழ்வுக்கும் ஈயாயோ
மரம் பழுத்துக் கனியும், மழை நீரும் தருமே
உரமெடுத்து விளைபயிரும் உண்ணப் பசுபாலும்
தரும்போது, விண்ணும் தலை சுற்று முலகும்
கருப்பொருளே படைத்தாய், கவி எழுதித்தாராயோ
வெறும் நிலையில் நின்று விடைதெரியா தொருமகனாய்
நறும் புகையும் தேன்கனியும் நாள்அலர்ந்தபூவெடுத்து
அறுஞ்சுவை தின்பண்டம் அளித்தே வணங்கியிவன்
குறுங்கவிதை ஒன்றெழுதிக் கொடு வென்றே தாழ்பணிந்தேன்
வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துமுறை தவறா குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!
கரமெடுத்து வேண்டிக் கடைக்கண் பார் என்றேன்
சரம்தொடுத்துப் பாடியன்று தருமிக்கு பாட்டெழுதி
வரம்கொடுத்த வள்ளலென் வாழ்வுக்கும் ஈயாயோ
மரம் பழுத்துக் கனியும், மழை நீரும் தருமே
உரமெடுத்து விளைபயிரும் உண்ணப் பசுபாலும்
தரும்போது, விண்ணும் தலை சுற்று முலகும்
கருப்பொருளே படைத்தாய், கவி எழுதித்தாராயோ
வெறும் நிலையில் நின்று விடைதெரியா தொருமகனாய்
நறும் புகையும் தேன்கனியும் நாள்அலர்ந்தபூவெடுத்து
அறுஞ்சுவை தின்பண்டம் அளித்தே வணங்கியிவன்
குறுங்கவிதை ஒன்றெழுதிக் கொடு வென்றே தாழ்பணிந்தேன்
வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துமுறை தவறா குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!
- Thanjaavooraanஇளையநிலா
- பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010
வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துதரம் அழகாய் குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!
மோனை விளையாடும் மோனத்தவ மிதுவோ
சானை பிடித்த சவரக் கத்தியினைப்போல்
பானை சோற்றுக்கு பதமொரு சோறினைப்போல்
ஊனை பிழிந்து உருவான உன்கவிதை
கானை பிளந்து கைலாசன் காதெத்தும்
வீணே புலம்பாது விடியும்வரை காத்திருப்பாய்.
வினுப்ரியா wrote:தோழரே எனக்கும் சேர்த்து கேளுங்கள்
அடடா இப்பதானே கேட்டிங்க! அவர் அப்பவே கொடுத்திட்டு போயிட்டாரே. இதோ
வரம் தராத வசந்தங்கள்
(இது போட்டிக்கில்லை EXTRA . போட்டிக்கு வேறு தருவேன். இது இறைவன் [மனதுக்குள்[] தந்த பாட்டு)
வரமொன்று வேண்டினேன் பெண்ணே -நல்
வடிவே நல்வாடாத மலரே செந்தமிழே
உரம்கொண்டு நான்பாடி உயிரே - உன்னை
உலகெங்கும் இல்லாத உயர்வாழ்வு தந்து
பரவிடும் உயர்வான வானமங்கு -நீள்
பரந்தோடும் மேகமாம் பஞ்சென்ற தேரில்
விரைந்தோடி விளையாடச் செய்யும் -அந்த
விதமான உயரின்பம் விளைந்தாக வேண்டும்
மணம் கொண்டமலராகும் உந்தன் -மீது
மாறாத அன்பெனும் சுவைகொண்டுநானும்
குணம் கொண்ட வண்டாகக் கூடி - ஒரு
குறைவற்ற இன்பங்கள் பெறவேண்டும் ஆடி
பணமென்று பின்னோடும் பூமி - இதில்
பண்பான உள்ளங்கள் குறைவென்று ஆகி
வனம் கொண்ட விலங்கான வாழ்வில் - வேறு
வகையாக நான் மாறும் வாழ்நிலை வேண்டும்
திசையெங்கும் சுழன்றோடும் காற்றில் -நீயும்
திருமேனி சிறகுகள் கொண்டே பறந்து
அசைந்தோடி வலம்வந்து புவியில் - கண்ணே
அயர்வாக குளிரோடும் ஆற்றோரம் நிற்க
பிசைந்தாசை ருசியோடுஅமுதம் - நான்
பேசுந்தமிழ்கொண்டு பாவென்று ஊட்ட
இசைகொண்டு நீபாட நானும் - மாலை
இரவாகும்வரை நின்று இன்பங்கள்கண்டு
ஒளிந்தோடிப் பொழில்தன்னில் ஆடிஓர்
உணர்வோடு களித்தேநல் எழில் தன்னைநாடி
களிகொண்டு திரிந்தாட வேண்டும் - வாழ்வு
கனவாகிப் போகாமல் விடிந்தே எழுந்தால்
அழிகின்றவாழ்வாக வேலை - அடிமை
ஆகின்ற நிலைவீடு பிள்ளைகள், நூறு
பழி சொல்லும் மனையாட்டி கோவம் -இன்னும்
பக்கத்து அயல்விட்டுப் பாவங்களாக
கிலிகொண்டு வாழ்ந்திடும் கோலம் - ஒரு
கீழெண்ணம் பணம்வேட்டை கூடாதகூட்டம்
பலிகொண்டும் எவரையும் பார்க்கும் -ஓர்
பரிதாப நிலைகொண்ட வாழ்வதும் வேண்டாம்
நிலைமாற்ற வேண்டினேன் விதியே -அதை
நிச்சயம்மாற்றிடு நினையன்று கேட்டும்
வலிகொண்டுவாழ்கிறேன் இன்றும்- ஏன்
வாரா வசந்தங்கள் வாழ்வில் நிறைத்தாய்?
- புவனாவி.ஐ.பி
- பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010
அண்ணா சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர் போல.... கவிதை அருமை... போட்டிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
புவனா wrote:அண்ணா சவாலுக்கு தயார் ஆகிவிட்டீர் போல.... கவிதை அருமை... போட்டிக்கு வாழ்த்துக்கள் அண்ணா...
இது போட்டிக்கு அல்ல. போட்டிக்கு ஒத்திகை. பாடிச் சுரம் சேர்க்கின்றேன். அங்கு வேறு கவி எழுதுவேன்.
எதை வைத்து கவி எழுதுவதென்று சிலவேளைகளில் கரு இல்லாமல் அலையும்போது இப்படிகிடைக்கும் தலைப்புக்களை வைத்து இரண்டுமூன்று கவிதை எழுதத் தோன்றும். எல்லாம் அங்கேபோட முடியாதே அதனால் இப்படி!
Thanjaavooraan wrote:வரம் தாரா வசந்தங்கள் வைத்த தலைப்பதற்கு
சிரம்தாழ்த்தி வணங்கினேன் சிறிதாய் கவியெழுதி
தரம் ஒன்றுக்கு ஐந்துதரம் அழகாய் குறை களைந்து
பரம்பொருளே மின்னஞ்சல் பார்த்தெனக்கு அனுப்பாயோ!
மோனை விளையாடும் மோனத்தவ மிதுவோ
சானை பிடித்த சவரக் கத்தியினைப்போல்
பானை சோற்றுக்கு பதமொரு சோறினைப்போல்
ஊனை பிழிந்து உருவான உன்கவிதை
கானை பிளந்து கைலாசன் காதெத்தும்
வீணே புலம்பாது விடியும்வரை காத்திருப்பாய்.
காத்தேன் விழிசரியாக் காவல்கிடந்திட்டேன்
கூத்தன் கொடுப்பனென கொண்டமனதிடத்தில்
சேர்த்தேன் இமையிரண்டு சிறியதுயில் கொண்டு
பூத்தண் ணிதழ்விரிக்கும்போழ்தெழவே விந்தையையா
எண்ணமதில் இருந்து ஏதோ எடுத்துரைத்தான்
சொன்னதமிழ் கண்டு சொல்லெழுதுகோல் கொண்டு
என்னமனம்கூறும் எண்ணமதை எழுதிவைத்தேன்’
சின்னவனுக்கில்லை இதுதிங்கள்முடி கொண்டவனாம்
அன்புடன் கிரிகாசன்
(பெண்ணொருத்தி)
வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்த மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இல்லறமும் கண்டபின்னே
கண்ணியமும் தாழ்ந்துமனக்
காதலுள்ளம் போனதென்ன?
பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
தேறுமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
மின்கணினி விட்டெனையே
மோகமிடும் வரம் வேண்டும்!
(மாணவன்)
தொந்திவயிறானவனே
தும்பிக்கை விநாயகனே
முந்தி நினை நான்தொழுது
முத்தேங்காய் போட்டுடைத்தேன்
வந்ததொரு சோதனையில்
வாராத சித்தியெண்ணி
நொந்து மனம்வாடுகிறேன்
நின்வரம் ஏன்கூடவில்லை
(கணவன்)
பத்துபவுண் போட்டுவைப்பேன்
பாதிசொத்து தந்திடுவேன்
குத்துமதிப் பாய்வயலும்
கோடிபணம்தேறுமென்றார்
நெத்தியிலே குங்குமத்தை
நீயெடுத்த பின்னாலே
மொத்தம்சொன்ன பொய்யதென்று
முன்னிருந்து பேசுகிறாய்
விட்டுவிட ஆகவில்லை
வைத்தஅன்பும் போகவில்லை
தட்டிநாலு போட்டுஉனைத்
தாய்வீடும் போக்கவில்லை
வட்டியின்றி வாழ்வினிலே
வந்தவளே வசந்தியம்மா
கொட்டி வரதட்சணையும்
கொண்டுவரா வசந்தமடி
(வாலிபன்)
எத்தனை நாள் இங்கிருப்பேன்
இன்பமலர் சுந்தரிகள்
அத்தனையும் பட்டுவண்ண
ஆடைகொண்ட பொற்சிலையாம்
புத்தகமும் கையில்கொண்டு
போகுமெழில் அற்புதமாம்
வித்தகியில் ஒருவள்தானும்
வேண்டும்காதல் வரமீயாளோ
(முடிவு)
சுற்றும்புவி மீதினிலே
சொல்லரிய உள்ளங்கள்
பற்றும் வரம் வேண்டி மனம்
பரிதவிக்கும் வாழ்க்கையடா
கற்பனையில் காணுவது
கையில்வரவில்லையெனில்
குற்றமடா வாழ்வு வரம்
தாராத வசந்தங்களே
வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்த மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இல்லறமும் கண்டபின்னே
கண்ணியமும் தாழ்ந்துமனக்
காதலுள்ளம் போனதென்ன?
பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
தேறுமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
மின்கணினி விட்டெனையே
மோகமிடும் வரம் வேண்டும்!
(மாணவன்)
தொந்திவயிறானவனே
தும்பிக்கை விநாயகனே
முந்தி நினை நான்தொழுது
முத்தேங்காய் போட்டுடைத்தேன்
வந்ததொரு சோதனையில்
வாராத சித்தியெண்ணி
நொந்து மனம்வாடுகிறேன்
நின்வரம் ஏன்கூடவில்லை
(கணவன்)
பத்துபவுண் போட்டுவைப்பேன்
பாதிசொத்து தந்திடுவேன்
குத்துமதிப் பாய்வயலும்
கோடிபணம்தேறுமென்றார்
நெத்தியிலே குங்குமத்தை
நீயெடுத்த பின்னாலே
மொத்தம்சொன்ன பொய்யதென்று
முன்னிருந்து பேசுகிறாய்
விட்டுவிட ஆகவில்லை
வைத்தஅன்பும் போகவில்லை
தட்டிநாலு போட்டுஉனைத்
தாய்வீடும் போக்கவில்லை
வட்டியின்றி வாழ்வினிலே
வந்தவளே வசந்தியம்மா
கொட்டி வரதட்சணையும்
கொண்டுவரா வசந்தமடி
(வாலிபன்)
எத்தனை நாள் இங்கிருப்பேன்
இன்பமலர் சுந்தரிகள்
அத்தனையும் பட்டுவண்ண
ஆடைகொண்ட பொற்சிலையாம்
புத்தகமும் கையில்கொண்டு
போகுமெழில் அற்புதமாம்
வித்தகியில் ஒருவள்தானும்
வேண்டும்காதல் வரமீயாளோ
(முடிவு)
சுற்றும்புவி மீதினிலே
சொல்லரிய உள்ளங்கள்
பற்றும் வரம் வேண்டி மனம்
பரிதவிக்கும் வாழ்க்கையடா
கற்பனையில் காணுவது
கையில்வரவில்லையெனில்
குற்றமடா வாழ்வு வரம்
தாராத வசந்தங்களே
போட்டிக் கவிதையை அங்கே பாராட்டிய இருவருக்கும் இங்கே நன்றி கூறுகிறேன்
திங்கள்தனை முகிலணைக்கும்
தீந்தமிழை மொழியணைக்கும்
மங்குமிருள் புவியணைக்கும்
மாலைத்தென்றல் மலரணைக்கும்
பொங்குகடல் அலையணைக்கும்
பூவிழியை இமையணைக்கும்
இஙகுவரும் இதயங்களோ
என்கவியைசொல்லணைத்து
தங்கமென ஊட்டமிட்டு
தமிழ்மனதில் ஊற்றெடுக்க
பங்குதரும் அன்பதற்கு
பலகோடி நன்றிகளாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|