புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
62 Posts - 34%
i6appar
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
62 Posts - 34%
i6appar
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
4 Posts - 2%
Guna.D
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
மரத் தாத்தா Poll_c10மரத் தாத்தா Poll_m10மரத் தாத்தா Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரத் தாத்தா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 22, 2010 2:59 pm

அழகான அணில் ஒன்று அந்த மரத்தின் மீது விளையாடிக் கொண்டிருந்தது.

"அணில் தம்பி...'' யாரோ கூப்பிடும் குரல் கேட்டு விளையாடுவதை நிறுத்திச் சுற்றும் முற்றும் பார்த்தது.

"அணில், நான்தான் மரம் பேசுறேன்...''

"மரமா... நீங்களும் பேசுவீங்களா?'' அணில் திகைப்புடன் கேட்டது.

"நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேட்கும். அணில் தம்பி, நாளையிலிருந்து நீங்கள் என்மீது ஏறி இறங்கி விளையாட முடியாது'' என்றது மரம்.

"ஏன் முடியாது? நீங்க இங்கதானே இருப்பீங்க...'' அணில் ஒன்றும் விளங்காமல் கேட்டது.

"நாளைக்கு ஒன்பது மணிக்கு என்னை ஒருவர் வெட்டி விடுவார். அதனால நீங்க விளையாட முடியாது.''

"அப்படியா! வரட்டும். அவரைக் கடித்து விரட்டி விடுவேன்'' அணில் வெகுளித் தனமாகப் பேசியது.

"அது முடியாது, அவர் பலசாலி. உன்னை ஒரே அடியில நசுக்கிக் கொன்னுடுவார். மரத்தை வெட்டாமல் இருக்கனும்னா, அவரோட மனைவியிடம் நீ பேசணும். அந்தம்மா சொன்னாத்தான் அவர் கேட்பார்.''

"அதெப்படி? அந்தம்மா யாருன்னு எனக்குத் தெரியாதே...''

"நான் உனக்கு அவங்க இருப்பிடம் எங்கேன்னு சொல்லுறேன்... ஆனா, நீ நேரடியா அந்த அம்மா கிட்டப் பேசமுடியாது. அந்த அம்மாவுக்கு பூனைக்குட்டின்னா ரொம்ப ஆசை. அது என்ன சொன்னாலும் கேட்பாங்க.''

மரம் சொல்லியபடியே அந்தப்பூனை இருக்கும் வீட்டின் பின்புறம் சென்றது அணில். அங்கு பூனை விளையாடிக் கொண்டிருந்தது. அணில் மெல்லிய சத்தம் எழுப்பி பூனையின் கவனத்தை ஈர்த்தது.

"பூனை அண்ணா, உங்களால ஒரு நன்மை நடக்க வேண்டி இருக்கு'' என்று மெல்லப் பேச்சை ஆரம்பித்தது அணில். பூனை செய்ய வேண்டியது என்ன என்பதை மரம் சொல்லிக்கொடுத்த மாதிரியே பூனையிடம் எடுத்துச் சொல்லியது அணில். உடனே பூனை பரிதாபமாகக் குரல் எழுப்பியபடி வீட்டினுள் நுழைந்தது.

"என் செல்லமே... ஏன்டா ஒருமாதிரியா கத்துறே'' பூனையின் பரிதாபமான குரல் கேட்டு வந்த அந்த வீட்டுக்கார அம்மாள், பூனையைத் தன் மடிமீது எடுத்து வைத்து தடவியபடியே பேசினார்.

"எனக்கு ஒன்னும் இல்லைம்மா... என்னு டைய நண்பனுக்குத்தான் ஒரு துன்பம். அதை நீங்கதான் போக்கணும்... நாளைக்கு அப்பா ஒரு மரத்தை வெட்டப் போறாங்கள்ல, அந்த மரத்தை வெட்டாம இருக்கணும். அதுலதான் என்னுடைய நண்பன் ஓடி ஆடி விளையாடிக்கிட்டு இருக்கான்.''

"இல்லடா செல்லம், அந்த மரத்தை வெட்டி வித்து கிடைக்குற பணத்திலிருந்துதான் அக்காவோட கல்யாணம் நடக்கப்போவுது. இல்லாட்டி கல்யாணம் நடக்காதுப்பா. உன் நண்பனுக்கு அந்த மரம் இல்லாட்டி பக்கத்து மரத்துல விளையாட முடியும். ஆனா, நமக்கு அவ்வளவு பெரிய மரத்தைவிட்டா வேற வழி இல்லப்பா. அதனாலதான் அப்பா அந்த மரத்தை வெட்டப்போறார்.''

"ஆமால்ல, அக்கா கல்யாணத்துக்குப் பணம் வேணும்ல. இருங்க வர்றேன்...'' மடியிலிருந்து குதித்து வெளியே ஓடியது பூனை.

பூனையின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்த அணில், பூனையிடம் "என்னாச்சு... காயா? பழமா?'' என மிகுந்த ஆர்வத்துடன் கேட்டது.

அம்மா சொல்லியதை அப்படியே சொல்லியது பூனை. அதைக்கேட்ட அணிலும், "ம்... எனக்கும் என்ன செய்யிறதுன்னு தெரியல. நம்ம ரெண்டு பேரும் மரத் தாத்தாகிட்ட போவோம். அவர் ஏதாவது வழி சொல்லுவார்'' என்றது. இரண்டும் மரம் இருக்கு மிடத்திற்குச் சென்றன.

"வா அணில் தம்பி, உன் நண்பன் பூனையையும் கூட்டிகிட்டு வந்திட்டியா'' என இருவரையும் வரவேற்றது மரம். அம்மா சொன்னதையெல்லாம் ஒன்றுவிடாமல் மரத்திடம் சொல்லியது பூனை.

"உண்மைதான், என்னை வெட்டிப் பணம் வாங்கி அவங்க மகளோட கல்யாணத்தை நல்லவிதமா முடிக்கட்டும். இந்த நூறு வருசத்தில எத்தனையோ பேர் என்னால பயன் அடைஞ்சு இருக்காங்க. இப்பவும் எனக்கு ரொம்ப மகிழ்ச்சிதான். ஆனா, என்னை வெட்டுறதுக்கு முன்னாடி பத்து மரங்களையாவது நட்டு வச்சு வளர்க்கச் சொல்லுங்க. அது போதும் எனக்கு'' என்றது மரம்.

உடனே அணிலும், பூனையும் வீட்டுக்குச் சென்றன.

"அம்மா, மரத் தாத்தா தன்னை வெட்டச் சொல்லிட்டார்... ஆனா, அதுக்குப் பதிலா பத்து மரங்களையாவது வைக்கணுமாம்'' என்று சொல்லி முடித்தது பூனை.

"சரிடா, அப்பாகிட்டச் சொல்லி இருபது மரங்களை வைக்கச் சொல்லுறேன். மரங்கள் தான் நிழல், காய், கனி, மழை தருகின்றன, சுற்றுச்சூழலைப் பாதுகாக்கின்றன, வீடுகட்ட உதவுகின்றன, விறகு, நாற்காலி, கட்டில்... இப்படி இன்னும் எத்தனையோ பயன்களைத் தருகின்றன. அவை இல்லாட்டி நாம உயிர்வாழ முடியாது'' என்ற அம்மாவின் வார்த்தைகளைக் கேட்ட இரண்டும் துள்ளிக்குதித்தபடி ஓடின.


ரா. சின்னதுரை



மரத் தாத்தா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon Nov 22, 2010 3:08 pm

இந்த கதைக்குள் முக்கியமான விடயமாக மரங்களின் முக்கியத்துவம் பதியப்படு இருக்கின்றது ...
அருமை ..
அண்ணா நன்றி பகிர்வுக்கு

Thanjaavooraan
Thanjaavooraan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 818
இணைந்தது : 16/09/2010

PostThanjaavooraan Mon Nov 22, 2010 3:36 pm

மரத் தாத்தா 677196

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக