புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
4 Posts - 1%
mruthun
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து


   
   

Page 2 of 2 Previous  1, 2

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 12:45 pm

First topic message reminder :

2.1 அரசனின் இயல்புகள்

ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குச் சில இயல்புகள் இருக்க
வேண்டும். அவனுக்கு உரிய பண்புகளாகச் சில அமைய வேண்டும்.
இவை பொருந்தி இருப்பவனே நாட்டை ஆளும் மன்னனாகத்
திகழ்வதற்கு உரியவன் என்பது வள்ளுவர் கருத்து.

சில இயல்புகள், நம்மிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். சில
நாமாக முயன்று பெறக் கூடியவையாக இருக்கும். பின்னர் அவை
நம் பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. வள்ளுவர்,
மன்னனுக்குரிய பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார் அவை
முறையே அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும்
ஆகும். இவைகளை உடையவனே மன்னனாக ஏற்றுக்
கொள்ளத்தகுந்தவன் என்பது வள்ளுவர் கருத்து.


அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

(குறள்: 382)



எதனையும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றலும், பிறருக்குக்
கொடுக்கும் ஈகைத் தன்மையும், நூற்களைக் கற்றுப் பெறும்
அறிவும் ஊக்கமும் மன்னனுக்கு முழுமையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகள்.

நன்றி- Tamil virtual university
2.1.1 அஞ்சாமை

நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்று
பொதுவாகக் குறிப்பிடுவர். இதற்கு என்ன காரணம்? நல்ல
இயல்புகள் ஒருவன் கொண்டிருந்தாலும், அவன் கோழையாக
இருந்தால் அவனால் எதையும் செயல்படுத்த முடியாது. எந்தச்
சூழலாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய மனத்திண்மை
(Boldness) அல்லது வீரம் வேண்டும். அப்பொழுதுதான்
நினைத்ததை ஒருவனால் செய்ய முடியும். இந்தத் மனத்திண்மை
அல்லது வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று
குறிப்பிடுகிறார்.

செய்யும் பணியின் வெற்றி மனத்திண்மையுடன் அஞ்சாமல்
செயல்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு
செயலில் ஈடுபட்டாலும், அஞ்சாத் தன்மையுடன் ஈடுபட வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் செய்யும் வினை அல்லது செயல்
வெற்றிபெறும். மனத்திண்மையில்தான் வினைத் திட்பம்
அமைந்திருக்கிறது என்கிறார் வள்ளுவர்.


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

(குறள்: 661)



ஒருவனது செயல்பாட்டில், அவனது மனத்திண்மையாகிய
அஞ்சாமையே முதன்மையானது. ஏனையவை எல்லாம் அதற்குப்
பின்னர்தான் என்பது வள்ளுவர் கருத்து. இது அரசர்களுக்கு உரிய
இயல்புகளில் முதன்மையானது.


2.1.2 ஈகை

வறுமையைப் பற்றி இன்னோர் இடத்தில் கூறும் பொழுது
வள்ளுவர், பற்றினால் நம்மை அழிக்கக் கூடிய தீயினுள் கூட
ஒருவன் தூங்கலாம், ஆனால் நம் உடலில் பசி என்ற ஒன்று
இருந்தால் தூங்க முடியாது என்று குறிப்பிடுவார். அத்தகைய
கொடுமை வாய்ந்தது பசி. மணிமேகலை என்னும் காப்பியத்தை
இயற்றிய சீத்தலைச் சாத்தனார் கூட பசியின் கொடுமையை
உணர்ந்து, ‘பசிப்பிணி எனும் பாவி’ என்று கூறுவார்.

இத்தகைய துன்பம் மிகுந்த பசியைப் போக்குவது ஒரு சிறந்த
செயல். அவ்வாறு செய்வது வறுமையோடு வருந்தும் ஒருவனை
இறப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதாகும். எனவே சீத்தலைச்
சாத்தனார்.


மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே’

(மணிமேகலை : 11: 95?96)


என்று குறிப்பிடுகிறார்.

வறுமையின் அல்லது பசியின் கொடுமையை உணர்ந்தவர்
வள்ளுவர். எனவே பிறர் துன்பத்தை நீக்கும் இரக்க உணர்வு,
நாட்டை ஆளும் மன்னனுக்கு இயற்கையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.

இரக்க உணர்வு கொண்டவன்தான் பிறர் துன்பத்தைப் போக்கும்
ஈகை உள்ளம் கொண்டவன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களின்
வறுமையை - துன்பத்தை நீக்க வேண்டியது மன்னனின்
முதன்மையான கடமை. அந்தக் கடமையைத் தனக்கு இருக்கும்
ஈகைக் குணத்தால் அல்லது இயல்பால்தான் நிறைவேற்ற முடியும்.
அந்த ஈகைக் குணம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

(குறள்: 226)



என்று குறிப்பிடுகிறார்.

(அற்றார் = வறியவர், அழி = அழிவைத் தரக் கூடிய,
வைப்புஉழி = சேமித்து வைக்கும் இடம் (உழி - இடம்) (Savings
Bank)

வறியவர்களது அழிவு தரக்கூடிய பசியை நீக்க வேண்டும்.
இத்தகைய செயல், தான் ஈட்டிய பொருளைத் தனக்கு உதவும்படி
சேமித்து வைக்கும் வைப்பு நிதி போன்றது என்கிறார் வள்ளுவர்.

எனவே, ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு நாட்டிலுள்ள மக்களின்
வறுமையைப் போக்க வேண்டும் என்ற இயல்பு இருக்க வேண்டும்.
அந்த இயல்பு வருங்காலத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்குச்
சேமித்து வைக்கும் செல்வம் போல் பயன்தரும். அது எவ்வாறு?

உலகில் நிகழும் பல்வேறு வகையான தீய செயல்களுக்கும்,
வன்முறைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது? வறுமை.
திருடினவனைப் பார்த்து ‘நீ ஏன் திருடினாய்?’ என்று கேட்டால்
‘வறுமை’ என்று குறிப்பிடுவான். இதைப் போல் பிற தீய
செயல்களில் பலவும் வறுமையின் காரணமாக நிகழ்கின்றன. எனவே
தீமைகளுக்குக் காரணமான வறுமையை ஒரு மன்னன் ஈகை
என்னும் தன் இயல்பால் நீக்கினால், அவன் நாட்டில் நிகழும் தீய
செயல்கள் குறையும் இல்லையா? அதன் காரணமாக அந்த நாடு
நலம் பெறும். அந்த இயல்பு வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு
சேமிப்பு நிதி போன்றது தானே? எனவேதான் வள்ளுவர்,
மன்னனுக்கு இயல்பாக ஈகை செய்யும் இயல்பு இருக்க வேண்டும்
என்கிறார்.







sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 3:40 pm

உங்கள் பாராட்டு மழையில் நனைந்து ஜலதோசம் பிடித்துவிட்டது போங்க விரைவாக மாத்தரையை அனுப்பவும்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 3:42 pm

sshanthi wrote:உங்கள் பாராட்டு மழையில் நனைந்து ஜலதோசம் பிடித்துவிட்டது போங்க விரைவாக மாத்தரையை அனுப்பவும்

Actifed and Clarinase உடனே சாந்திக்கு அனுப்புங்கள்!



அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Nov 17, 2010 6:45 pm

நன்றி சாந்தி.. நல்ல கருத்துக்கள். அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 678642
முதல் குறளைத்தவிர ஏனைய அனைத்தும் அரசருக்கு மட்டுமன்றி அனைவருக்கும் இருக்க வேண்டியது.



அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Aஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Aஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Tஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Hஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Iஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Rஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Aஅரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து - Page 2 Empty
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக