புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_m10அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து


   
   

Page 1 of 2 1, 2  Next

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 12:45 pm

2.1 அரசனின் இயல்புகள்

ஒரு நாட்டை ஆளும் அரசனுக்குச் சில இயல்புகள் இருக்க
வேண்டும். அவனுக்கு உரிய பண்புகளாகச் சில அமைய வேண்டும்.
இவை பொருந்தி இருப்பவனே நாட்டை ஆளும் மன்னனாகத்
திகழ்வதற்கு உரியவன் என்பது வள்ளுவர் கருத்து.

சில இயல்புகள், நம்மிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும். சில
நாமாக முயன்று பெறக் கூடியவையாக இருக்கும். பின்னர் அவை
நம் பண்பாக மாறி அமையும் தன்மை உடையன. வள்ளுவர்,
மன்னனுக்குரிய பண்புகளாகச் சிலவற்றைக் குறிப்பிடுகின்றார் அவை
முறையே அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம், ஆகிய நான்கும்
ஆகும். இவைகளை உடையவனே மன்னனாக ஏற்றுக்
கொள்ளத்தகுந்தவன் என்பது வள்ளுவர் கருத்து.


அஞ்சாமை, ஈகை, அறிவு, ஊக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தற்கு இயல்பு

(குறள்: 382)



எதனையும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றலும், பிறருக்குக்
கொடுக்கும் ஈகைத் தன்மையும், நூற்களைக் கற்றுப் பெறும்
அறிவும் ஊக்கமும் மன்னனுக்கு முழுமையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகள்.

நன்றி- Tamil virtual university
2.1.1 அஞ்சாமை

நல்லவனாக இருந்தாலும் வல்லவனாக இருக்க வேண்டும் என்று
பொதுவாகக் குறிப்பிடுவர். இதற்கு என்ன காரணம்? நல்ல
இயல்புகள் ஒருவன் கொண்டிருந்தாலும், அவன் கோழையாக
இருந்தால் அவனால் எதையும் செயல்படுத்த முடியாது. எந்தச்
சூழலாக இருந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய மனத்திண்மை
(Boldness) அல்லது வீரம் வேண்டும். அப்பொழுதுதான்
நினைத்ததை ஒருவனால் செய்ய முடியும். இந்தத் மனத்திண்மை
அல்லது வீரத்தைத்தான் வள்ளுவர் அஞ்சாமை என்று
குறிப்பிடுகிறார்.

செய்யும் பணியின் வெற்றி மனத்திண்மையுடன் அஞ்சாமல்
செயல்படும் தன்மையில்தான் அமைந்துள்ளது. எனவே எந்த ஒரு
செயலில் ஈடுபட்டாலும், அஞ்சாத் தன்மையுடன் ஈடுபட வேண்டும்.
அப்பொழுதுதான் அவன் செய்யும் வினை அல்லது செயல்
வெற்றிபெறும். மனத்திண்மையில்தான் வினைத் திட்பம்
அமைந்திருக்கிறது என்கிறார் வள்ளுவர்.


வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற

(குறள்: 661)



ஒருவனது செயல்பாட்டில், அவனது மனத்திண்மையாகிய
அஞ்சாமையே முதன்மையானது. ஏனையவை எல்லாம் அதற்குப்
பின்னர்தான் என்பது வள்ளுவர் கருத்து. இது அரசர்களுக்கு உரிய
இயல்புகளில் முதன்மையானது.


2.1.2 ஈகை

வறுமையைப் பற்றி இன்னோர் இடத்தில் கூறும் பொழுது
வள்ளுவர், பற்றினால் நம்மை அழிக்கக் கூடிய தீயினுள் கூட
ஒருவன் தூங்கலாம், ஆனால் நம் உடலில் பசி என்ற ஒன்று
இருந்தால் தூங்க முடியாது என்று குறிப்பிடுவார். அத்தகைய
கொடுமை வாய்ந்தது பசி. மணிமேகலை என்னும் காப்பியத்தை
இயற்றிய சீத்தலைச் சாத்தனார் கூட பசியின் கொடுமையை
உணர்ந்து, ‘பசிப்பிணி எனும் பாவி’ என்று கூறுவார்.

இத்தகைய துன்பம் மிகுந்த பசியைப் போக்குவது ஒரு சிறந்த
செயல். அவ்வாறு செய்வது வறுமையோடு வருந்தும் ஒருவனை
இறப்பிலிருந்து மீட்டுக் கொண்டு வருவதாகும். எனவே சீத்தலைச்
சாத்தனார்.


மண்திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம் உண்டி கொடுத்தோர்
உயிர் கொடுத்தோரே’

(மணிமேகலை : 11: 95?96)


என்று குறிப்பிடுகிறார்.

வறுமையின் அல்லது பசியின் கொடுமையை உணர்ந்தவர்
வள்ளுவர். எனவே பிறர் துன்பத்தை நீக்கும் இரக்க உணர்வு,
நாட்டை ஆளும் மன்னனுக்கு இயற்கையாக அமைந்திருக்க
வேண்டிய இயல்புகளில் ஒன்று என்று குறிப்பிடுகிறார்.

இரக்க உணர்வு கொண்டவன்தான் பிறர் துன்பத்தைப் போக்கும்
ஈகை உள்ளம் கொண்டவன். தன் ஆட்சிக்கு உட்பட்ட மக்களின்
வறுமையை - துன்பத்தை நீக்க வேண்டியது மன்னனின்
முதன்மையான கடமை. அந்தக் கடமையைத் தனக்கு இருக்கும்
ஈகைக் குணத்தால் அல்லது இயல்பால்தான் நிறைவேற்ற முடியும்.
அந்த ஈகைக் குணம் எத்தகைய சிறப்பு வாய்ந்தது என்பதனை


அற்றார் அழிபசி தீர்த்தல் அஃது ஒருவன்
பெற்றான் பொருள் வைப்பு உழி

(குறள்: 226)



என்று குறிப்பிடுகிறார்.

(அற்றார் = வறியவர், அழி = அழிவைத் தரக் கூடிய,
வைப்புஉழி = சேமித்து வைக்கும் இடம் (உழி - இடம்) (Savings
Bank)

வறியவர்களது அழிவு தரக்கூடிய பசியை நீக்க வேண்டும்.
இத்தகைய செயல், தான் ஈட்டிய பொருளைத் தனக்கு உதவும்படி
சேமித்து வைக்கும் வைப்பு நிதி போன்றது என்கிறார் வள்ளுவர்.

எனவே, ஒரு நாட்டை ஆளும் அரசனுக்கு நாட்டிலுள்ள மக்களின்
வறுமையைப் போக்க வேண்டும் என்ற இயல்பு இருக்க வேண்டும்.
அந்த இயல்பு வருங்காலத்தில் நாட்டைப் பாதுகாப்பதற்குச்
சேமித்து வைக்கும் செல்வம் போல் பயன்தரும். அது எவ்வாறு?

உலகில் நிகழும் பல்வேறு வகையான தீய செயல்களுக்கும்,
வன்முறைகளுக்கும் அடிப்படைக் காரணம் எது? வறுமை.
திருடினவனைப் பார்த்து ‘நீ ஏன் திருடினாய்?’ என்று கேட்டால்
‘வறுமை’ என்று குறிப்பிடுவான். இதைப் போல் பிற தீய
செயல்களில் பலவும் வறுமையின் காரணமாக நிகழ்கின்றன. எனவே
தீமைகளுக்குக் காரணமான வறுமையை ஒரு மன்னன் ஈகை
என்னும் தன் இயல்பால் நீக்கினால், அவன் நாட்டில் நிகழும் தீய
செயல்கள் குறையும் இல்லையா? அதன் காரணமாக அந்த நாடு
நலம் பெறும். அந்த இயல்பு வருங்காலத் தலைமுறையினருக்கு ஒரு
சேமிப்பு நிதி போன்றது தானே? எனவேதான் வள்ளுவர்,
மன்னனுக்கு இயல்பாக ஈகை செய்யும் இயல்பு இருக்க வேண்டும்
என்கிறார்.






சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:04 pm

சிறந்த கட்டுடைக்கு நன்றி சாந்தி. ஆனால் இவைகள் எல்லாம் இன்று எழுத்தளவில் மட்டுமே உள்ளது. நடைமுறைப் படுத்த யாருமே விரும்புவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விடயம்!



அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:20 pm

அருமை அக்கா இன்னொரு விஷயம் இந்த தகுதிகள் எல்லாமே எனக்கு இருக்கு நம்புங்க ப்ளீஸ்

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Nov 17, 2010 2:48 pm

அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:50 pm

sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்

இறைவா நான் அரசியலுக்கு வரலான தமிழகத்தை யார் காப்பாற்றுவார்கள் சொல்லுங்க அக்கா சொல்லுங்க

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 2:52 pm

sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்

தமிழ் உங்களிடம் கொஞ்சி விளையாடுகிறது! அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196



அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 2:55 pm

sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும் அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196 அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 2:57 pm

ராஜா wrote:
sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும் அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196 அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196

நம்ம சகோதர ரத்தமல்லவா

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Nov 17, 2010 3:01 pm

maniajith007 wrote:
ராஜா wrote:
sshanthi wrote:அப்ப தம்பி நீ அரசியலில் வரமுடியாது அது திருவள்ளுவர் காலம் இது தெருஅள்ளுபவர் காலம்
அடேங்கப்பா................நம்ம சாந்தியா இது ?! என்ன ஒரு முன்னேற்றம் , இனிமேல் சாந்திகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா தான் பேசணும் அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196 அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 677196
நம்ம சகோதர ரத்தமல்லவா
அதானே ...... அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 678642

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed Nov 17, 2010 3:02 pm

ராஜா wrote:அதானே ...... அரசருக்கு இருக்க வேண்டிய தகுதி சில - திருக்குறலிலிருந்து 678642

நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக