புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
7 Posts - 64%
heezulia
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
8 Posts - 2%
prajai
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_m10இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Nov 17, 2010 3:21 am

-வன்னியிலிருந்து ஆதவன்

இது கார்த்திகை மாதம். நம் இல்லங்கள் தோறும் சோகத்தின் வெளிச்சம். அப்படியும் ஒரு காலம் இருந்தது என்பதை நாம் மறுக்கவில்லை. ஆனால் எல்லாமும் முடிந்துவிட்டது. சரிகளுடனும் பிழைகளுடன் நகர்ந்த நமது முன்று தசாப்த கால (அந்த) அரசியல் வாழ்வு முற்றுப் பெற்றுவிட்டது. அது பல்லாயிரக் கணக்கான மக்களின், போராளிகளின் தியாகத்தால் உருப்பெற்ற ஒன்று. வெறும் வாய்ச் சொல் வீரத்தாலோ, விதண்டா வாதங்களாலோ நிலைபெற்ற ஒன்றல்ல. எனவே இனி அதனை நாம் காயப்படுத்தவும் தேவையில்லை. கொச்சைப்படுத்தவும் தேவையில்லை.

சமீப நாட்களாக நடந்தேறிக் கொண்டிருக்கும் சில நிகழ்வுகளை பார்த்தால் எல்லாவற்றையும் தூக்கி வீசிப்போட்டு போனால் என்ன என்று கூட யோசிப்பதுண்டு. ஒரு புறம், உணவுக்காவும், தங்கள் மானம் மறைப்பதற்கான உடு துணிக்காகவும் கையேந்தி நிற்கும் மக்கள் கூட்டம். மறுபுறமோ எதுவுமே நடக்காதது போன்று நல்லூர் கோயில் திருவிழாவில் முட்டி மோதிக் கொண்டிருக்கும் மக்கள் கூட்டம். அடுத்து தமிழ்செல்வனுக்கு சிலை வைப்பதாகக் கூறி இன்னொரு கூட்டம். இப்போது மாவீரர் தினக் கொண்டாட்டத்திற்கான அழைப்பு விடும் பிறிதொரு கூட்டம். இது போதாதென்று தங்களை தாங்களே பிரதமர் என்றும் அமைச்சர்கள் என்றும் சொல்லிக் கொண்டும், அதற்காக பணத்தை வாரி இறைத்துக் கொண்டிருக்கும் இன்னொரு பிரிவு. கோமாளித்தனத்தின் எல்லை கூட எங்களுக்குத் தெரியவில்லை.

அரசியல் குறித்து சிந்திப்பதோ அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபவதையோ எவரும் பிழையென்று சொல்லிவிட முடியாது. அவ்வாறு அரசியிலில் ஈடுபடுவது ஒரு பிரச்னையும் அல்ல. ஆனால் அது எந்த தளத்தில் இருந்து மேற்கொள்ளப்படுகிறது? அது எவரின் நிழலில் நிலைகொண்டுள்ளது என்பதுதான் இங்கு பிரச்சனைக்குரியதாகிறது. ஒருவர் தண்ணீர் ஊற்றி வளாத்த மரத்தின் நிழலில் வசதியாக ஒதுங்கிக் கொண்டு அந்த மரத்தையே தங்கள் நலனுக்காக விலைபேசுவதை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும். அதனை எப்படி நம்மால் ஜீரணித்துக் கொள்ள முடியும். நமது புலம்பெயர் சூழலில் நிகழும் அரசியல் சித்து விளையாட்டுக்களைப் பார்க்கும் போதும் இப்படி ஒரு நிலைமையே துலாம்பரமாகிறது. எமது கடந்தகால போராட்ட அரசியல் என்பது தன்னலமற்ற பல்லாயிரம் போராளிகளின் குருதி சிந்தலால் விழைந்த ஒன்று. அதற்காக எத்தனையோ மக்கள் தங்கள் உயிர்களையும் உடைமைகளையும் விலையாக கொடுத்திருக்கின்றனர். ஆனால் எந்த விலையும் கொடுக்காமல் அவர்களது தியாகத்தை உழைப்பை விலைபேசும் அரசியல் செயற்பாடுகளை நாம் எவ்வாறு அங்கிகரிக்க முடியும். இன்று புலம்பெயர் சூழலில் பேசப்படும் எந்தவொரு தீவிரவாத அரசியல் வாதங்களும், அவற்றை பேசுவோரின் சொந்த அர்ப்பணிப்பினால் விழைந்தவை அல்ல. அனைத்துமே யாரோ முன்னர் மூட்டிய நெருப்பில் குளிர்காயும் செயற்பாடுகள்தான். எனவே புலம்பெயர் சூழலில் குடும்பங்களுடன் வசதியாக இருந்து கொண்டு, தங்கள் பிள்ளைகளை சர்வதேச பல்கலைக்கழகங்களில் படிப்பித்துக் கொண்டு, அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடுவோர் உங்களது அரசியலுக்கான பொறிமுறைகளை உங்களது சொந்த முயற்சியாலும் அர்ப்பணிப்பாலும் உருவாக்க முடியுமா என்ற கேள்வியையே உங்கள் முன்வைக்கிறோம். புலிகளின் அரசியல் மைதானத்தில் (Political Ground) விழையாடுவதைவிட்டு ஒரு மைதானத்தை உருவாக்கி அதில் விளையாடுவதுதான் நேர்மையானது.

இந்தப் பின்புலத்தில்தான் உங்களது மாவீரர் தின கொண்டாட்டங்களில் தலையிட வேண்டியிருக்கிறது. கடந்த முன்று தசாப்த கால போர் வாழ்வில் தன்னலமற்று தங்கள் உயிர்களை தியாகம் செய்தவர்களை நினைவு கொள்ள வேண்டும் என்பதில் தவறில்லை ஆனால் இறந்தவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் சிறிதளவாவது இறந்து கொண்டிருக்கும் எங்கள் மக்களுக்கும் சரணடைந்த முன்னாள் போராளிகளுக்கும் ஏன் உங்களால் கொடுக்க முடியவில்லை. அவர்கள் குறித்து ஏன் உங்களால் கர்சினை கொள்ள முடியவில்லை. அவர்கள் செய்த துரோகம்தான் என்ன?

இப்படி எத்னையோ கேள்விகள் மனதை வருத்தும் போது கூடவே இன்னொரு கேள்வியும் எழுவதுண்டு. உண்மையிலேயே நாங்கள் ஒரு விடுதலை அவாவிய சமுகம்தானா? நடப்பவற்றை பார்த்தால் அப்படி நம்ப ஏனோ மனம் மறுக்கிறது. எப்படி எங்களால் இவ்வளவு சாதாரணமாக பாதிக்கப்பட்ட உறவுகளை, ஒன்றாக இருந்த போராளித் தோழர்களை உதறித் தள்ளிவிட்டு சிந்திக்க முடிகின்றது? கடந்த மூன்று தசாப்தங்களாக போராட்டத்தின் பக்கபலமாக இருந்த உறவுகள்தான் இன்று நடு வீதியில் வாழ வழியின்றி இருக்கின்றனர். இந்த போராட்டத்தின் உயிர் மூச்சாக இருந்தவர்கள்தான் இன்று சரணடைந்து எதிகாலத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் விருப்பங்களுக்கு பலியான மக்கள் இன்று மரணத்திற்கு இரையாகிக் கொண்டிருக்கின்றனர். உங்கள் கனவிற்கு முகம் கொடுக்கப் போராடிவர்கள்தான் இன்று தங்கள் சமூகமுகமிழந்து (Social Face) பட்டிணியற்ற வாழ்வுக்காக போராடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை காப்பாற்ற வேண்டிய பெறுப்பு ஒவ்வொரு புலம்பெயர் தமிழனுக்கும் உண்டு. இதனை தட்டிக் கழிக்கும் எவருமே நிட்சயமாக மனச்சாட்சியுள்ள மனிதர்களாக இருக்க முடியாது. ஏனென்றால் நீங்கள் அனைவரும் இன்று சிறப்பாக வாழ்ந்து கொண்டிருப்பது அவர்களது பேரால்தான். இன்று களத்திலும் புலத்திலும் நீங்கள் தூக்கி பிடிக்கும் அரசியல் சுலோகங்களில் இருப்பதெல்லாம் அவர்களின் குருதி தொட்டு எழுதிய வாசகங்களே!

இந்தச் சூழலில்தான் மாவீரர் தினத்திற்கான அழைப்புக்கள் விடுக்கப்படுகின்றன. உண்மையில் இது ஒரு கொச்சைப்படுத்தலுக்கான அழைப்புத்தான். மீண்டும் சிலரது பிழைப்பிற்கு அடித்தளம் இடப்படுகிறதா என்ற சந்தேகமே வலுக்கிறது. இறந்து கொண்டிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்வு மீது சிறிதளவு கூட அக்கறை கொள்ளாதவர்கள் இறந்து போன போராளிகளை நினைவு கொள்வதை எந்தவகையில் உண்மையானது என்று நம்புவது? தயவு செய்து அவர்களை உங்களது அற்ப பிழைப்புக்காக கொச்சைப்படுத்தாதீர்கள். பல்லாயிரக் கணக்கான போராளிகளும் பல நூற்றுக் கணக்கான தளபதிகளும் தங்களை இழந்த இந்த போராட்டத்தில்; சு.ப.தமிழ்செல்வனுக்கு மட்டும் ஏன் ஒரு பிரத்தியேக சிலை வழிபாடு. அந்த பணத்தில் பத்து அனாதரவான குழந்தைகளுக்கான எதிகாலத்தை உவாக்க முடியும். முகம் சிதைந்து மற்றவர்கள் முன் தோன்றுவதற்கே அஞ்சி ஒழியும் முன்னாள் பெண் போராளிகளின் வாழ்வை மீட்டெடுக்க முடியும்.

துரோகத்திற்கு உங்களிடம் ஏராளம் விளக்கங்கள் இருக்கலாம் நன்பர்களே! ஆனால் நம்மை நம்பிய ஏழை மக்களை வஞ்சிப்பதுதான் உண்மையான துரோகம். இன்று புலம்பெயர் சூழலில் வசதியாக இருந்து கொண்டு அரசியல் செய்வோரும், உதவி செய்ய முன்வருவோரைக் கூட தடுத்துக் கொண்டிருக்கும் கனவான்களும் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் உங்களால் பலிக்கடாவாக்கப்பட்ட அந்த ஏழை மக்களுக்கும், எங்கள் அண்ணன்மார் இருக்கின்றனர் அவர்கள் எங்களைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த அந்த போராளிகளுக்கும் நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த பச்சை துரோகத்தை வரலாறு நிட்சயம் பதிவு செய்யும்.

ஆயிரம் சாட்சிகளை விட பெரியது மனச்சாட்சி என்று ஒரு கருத்துண்டு. மனச்சாட்சி உறுத்தலுக்கு ஆட்படும் ஒவ்வொருவரும் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்தும், முன்னாள் போராளிகள் குறித்தும் ஏதோவொரு வகையில் குற்ற உணர்விற்கு ஆட்பட்டவர்களாகவே இருக்கின்றனர். கே.பி அண்ணருடன் கதைத்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர் அவ்வாறானதொரு குற்ற உணர்விற்கு ஆட்பட்டவராகவே பேசியிருந்தார். எல்லோரும் ஒன்றுபட்டு கண்ட கனவு, தொடங்கிய பயணம் ஆனால் அதன் வலிகளையும் வேதனைகளையும் ஒரு குறிப்பிட்ட மக்களை மட்டும் அனுபவிக்கச் சொல்லுவது என்ன நியாயம். இதுதான் அவரின் கேள்வி. மனச்சாட்சிக்கு அஞ்சும் ஒவ்வொரு மனிதனையும் இந்த கேள்வி அலைக்கழிக்கின்றது. கே.பி ஒரு மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் மனிதர். அவர் பாவப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களை விட்டுவிட்டு ஒதுங்கி வாழ விரும்பவில்லை. அதிலும் கே.பி அண்ணர் இந்த போராட்டத்தின் ஆதி அந்தம் வரை இருந்த ஒருவர் என்ற வகையில், அவர்களது இன்றைய இருண்ட வாழ்வில் தனக்கும் பங்குண்டு என்பதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளும் துணிவு அவரிடமுண்டு. எனவே தனது இறுதிக் காலத்தில் தன்னால் இயன்றதை அந்த மக்களுக்காக செய்ய முயல்கின்றார். அவருடன் பேசிய சந்தாப்பங்களிலெல்லாம் நான் இதனையே புரிந்து கொண்டேன். இதுதான் அவரது பணியின் அடிப்படை. இதற்கு பலரும் பல்வேறு விளங்கங்களைச் சொல்லலாம். நாம் விளக்கங்களில் காலங்களை கடத்தியதுதானே அதிகம்.

கார்த்திகை மாதத்தை முன்வைத்து புதுவை அண்ணன் எழுதிய கவிதை வரிகள் இவை. கேட்கிறதா மணி? கேட்கிறதா பாடல்? தெரிகிறதா நெய் விளக்கு? எங்களாலும் சில ஓலிகளை கேட்க முடிகிறது. எங்களாலும் சில காட்சிகளை கான முடிகின்றது நண்பர்களே! அது – எங்களை காப்பாற்றுங்கள் என்னும் பாதிக்கப்பட்ட மக்களின் கதறல்கள். இறப்பை நெருங்கிக் கொண்டிருக்கும் அங்கவீனமடைந்த அந்த போராளிகளின் இறுதிக் குரல்கள். வெள்ளத்தில் இடுப்பளவு தண்ணீரில் தனது கைக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நிற்கும் தாய்மாரின் காட்சிகள். இரவில் தான் தூங்கிவிட்டால் தன் குழந்தைகளை பாம்பு தீண்டிவிடுமோ, நட்டுவக்காலி குத்திவிடுமோ என்று அஞ்சி விழித்துக் கொண்டிருக்கும் உறவுகளின் காட்சிதான் எங்குமே தெரிகிறது. அவர்களில் அழு குரல்கள்தான் எங்குமே கேட்கிறது. மணியும் இல்லை, பாடலும் இல்லை, எரியும் நெய்விளக்கும் இல்லை நன்பர்களே! கதறலும் கண்ணீரும் அவமானத்தில் கூனிக்குறுகிய முகங்களும்தான் இங்கு வாழ்வு. அவர்கள் இப்போதும் இருக்கிறார்கள் அனால் பின்னர் இறந்து போகலாம். இறந்து கொண்டிருப்பர்களை காப்பாற்றுவதே உங்கள் முன்னுள்ள ஒரேயோரு கடமையாகும். மனச்சாட்சியுள்ள ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும்; ஒரு கணம் இறந்து கொண்டிருக்கும் உங்கள் உறவுகள் குறித்து சிந்திக்குமாறு நாம் கோருகிறோம். இறந்த போராளிகள் குறித்து சிந்திக்க முற்படும் இவ் வேளையிலாவது இறந்து கொண்டு இருக்கும் மக்கள் குறித்தும் முன்னாள் போராளிகள் குறித்தும் ஒரு கணம் சிந்திக்குமாறு அழைக்கிறோம்.


http://www.nerdo.lk/?p=946



இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 20, 2010 10:44 am

படிக்கும் போது மனதில் ஒரு கலக்கம் தோணுது சிவா. ஆனால் நம்மால் எதுவும் இவர்களுக்காக செய்ய முடியலன்னு நினைக்கும்போது நமது இயலாமை மீது எனக்கும் கோபம் வருகிறது.




இறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Uஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Dஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Aஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Yஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Aஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Sஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Uஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Dஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? Hஇறந்து கொண்டிருக்கும் எங்கள் உறவுகளின் குரல்கள் கேட்கிறதா? A
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Nov 20, 2010 10:57 am

உதயசுதா wrote:படிக்கும் போது மனதில் ஒரு கலக்கம் தோணுது சிவா. ஆனால் நம்மால் எதுவும் இவர்களுக்காக செய்ய முடியலன்னு நினைக்கும்போது நமது இயலாமை மீது எனக்கும் கோபம் வருகிறது.

அதே அதே... இயலாமை எம்மைக் கட்டிப்போட்டு வைக்கிறது..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக