புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
by ayyasamy ram Today at 9:08 am
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm
» கருத்துப்படம் 25/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 12:49 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm
» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm
» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm
» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm
» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm
» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm
» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெல்ல முடியாத வீரம்!
Page 1 of 1 •
எதிர்வரும் 27 நவம்பர் அன்று ஈழத்தமிழ் மக்களின், போரில் இழந்த வீரமைந்தர் நினைவு நாளைக் குறித்து இது அமைகிறது. இதைபற்றிய கருத்துக்கள் குறை நிறை விரும்பின் தாருங்கள். .
மானாடி மயிலாடி மரம்மீது குயில்கூவி
மகிழுமோர் நாட்டினிலே
தேனோடி சுவைக்கின்ற தீந்தமிழ் மொழிபேசும்
திருநாட்டின் நிலம் காக்கவே
வானோடி நிலமோடி வளையுகடல் நீரோடி
வெல்கின்ற படைகொண்டுமே
தானோடி எல்லோர்க்கும் தமிழர்க்கு முன்னோடி
தலைவனும் இருந்தானங்கே
போராடி வெல்கின்ற தீரமும் நெஞ்சிலே
பொய்மையே அற்ற மறமும்
வீராதிவீரர்கள் விளையாடிக் களம்கண்டு
வெற்றியைக் கொள்ளும் பலமும்
மாறாத நிலைகொண்ட மைந்தரும் கண்டுலகு
மனதிடை பயம் கொண்டதோ
ஊராகி நாடாகி உலகாளும் வீரரென்
றுளம்மீது கிலிகொண்டதோ
கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே
பூநாடிவரும் வண்டு போலாகி தானுண்ணப்
புகுந்ததோ நம்வீட்டிலே
சேய்நாடி வருகின்ற தாயென்றுசொல்லியே
தெரியாமல் விஷம் பற்றியே
வாய்மீது அமுதூட்டும் வழிதன்னில் விசமாக்கி
வா என்று பால் தந்ததே!
போராடி வெல்லாத படையுமோர் படைதானோ
பொய்மையில் கால்கொண்டுமே
தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே
நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே
மார்தட்டிப் பயில்வானும் சண்டைக்கு வருகையில்
ஒருவனுக் கொரு சோடியே
பாரெங்கும் பலம்பார்க்க அவனுக்கு இவனென்று
பார்ப்பது ஒருநீதியே
ஊருக்குத் தமீழீழ உயிருக்கு அதுஇல்லை
நூறுக்கு ஒன்றானதே
யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே
நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே
ஆபத்து ஒன்றல்ல அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே
ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே
கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்
நீதிக்கு நானென்று நிற்பவன் யாவரும்
நெஞ்சத்தில் பொய்கூறியே
பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே
சேதிக்குஅல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமே
பூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்
புதுயுகம் பிறக்கட்டுமே!
மானாடி மயிலாடி மரம்மீது குயில்கூவி
மகிழுமோர் நாட்டினிலே
தேனோடி சுவைக்கின்ற தீந்தமிழ் மொழிபேசும்
திருநாட்டின் நிலம் காக்கவே
வானோடி நிலமோடி வளையுகடல் நீரோடி
வெல்கின்ற படைகொண்டுமே
தானோடி எல்லோர்க்கும் தமிழர்க்கு முன்னோடி
தலைவனும் இருந்தானங்கே
போராடி வெல்கின்ற தீரமும் நெஞ்சிலே
பொய்மையே அற்ற மறமும்
வீராதிவீரர்கள் விளையாடிக் களம்கண்டு
வெற்றியைக் கொள்ளும் பலமும்
மாறாத நிலைகொண்ட மைந்தரும் கண்டுலகு
மனதிடை பயம் கொண்டதோ
ஊராகி நாடாகி உலகாளும் வீரரென்
றுளம்மீது கிலிகொண்டதோ
கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே
பூநாடிவரும் வண்டு போலாகி தானுண்ணப்
புகுந்ததோ நம்வீட்டிலே
சேய்நாடி வருகின்ற தாயென்றுசொல்லியே
தெரியாமல் விஷம் பற்றியே
வாய்மீது அமுதூட்டும் வழிதன்னில் விசமாக்கி
வா என்று பால் தந்ததே!
போராடி வெல்லாத படையுமோர் படைதானோ
பொய்மையில் கால்கொண்டுமே
தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே
நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே
மார்தட்டிப் பயில்வானும் சண்டைக்கு வருகையில்
ஒருவனுக் கொரு சோடியே
பாரெங்கும் பலம்பார்க்க அவனுக்கு இவனென்று
பார்ப்பது ஒருநீதியே
ஊருக்குத் தமீழீழ உயிருக்கு அதுஇல்லை
நூறுக்கு ஒன்றானதே
யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே
நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே
ஆபத்து ஒன்றல்ல அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே
ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே
கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்
நீதிக்கு நானென்று நிற்பவன் யாவரும்
நெஞ்சத்தில் பொய்கூறியே
பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே
சேதிக்குஅல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமே
பூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்
புதுயுகம் பிறக்கட்டுமே!
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
சகோதரர் கிரி அவர்களே.... அருமையான படைப்பு.
நடந்த அத்தனையும் கண்முன்னே கொண்டுவந்து என்னை மறுபடி கலங்கச் செய்துவிட்டீர்.
கொடுமைகளின் உச்சமென மிச்சமில்லாமல் செய்த சதிச்செயல்களை செய்வதறியாது ஒட்டுமொத்தத் தமிழினமும் திகைத்து நின்றதே. தமிழினத்தை அழிப்பதையே தனது கொள்கையென கொண்டதை தெளிவாகக் கூறியுள்ளீர் இவ்வரிகளில்....
"கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே"
இலங்கையில் அந்தக் கொடூரம் அரங்கேறிய வேளையில் வல்லரசாக மாறுவதாக மார்தட்டிக் கொண்டு நல்லரசுகளாக நடித்துக் கொண்டிருக்கும்
எல்லாஅரசுகளும் வீரம் செறிந்த படைகொண்டிருந்தும் ஏதும் செய்ய முடியாத திறனற்றதாயிருந்ததை கோபமும் ஆதங்கமும் ஒருசேரக் கூறியுள்ளீர் இங்கு.
"தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே"
தமிழர்களின் வீரத்தை அழகாகக் கூறி நேருக்கு நேர் வெல்லமுடியாமல் மறைந்திருந்து ராமன் வாலியைக் கொன்று அறம் காத்ததாய் கூறியதுபோல் தானே இங்கும் அரங்கேறியது என்று நேரடியாய்க் கூறியுள்ளீர்..
“நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே”
செவிடர் சமுதாயத்தில் சங்கொலி கேட்குமா? எங்கு சென்று நாம் முறையிடுவதென்று அரசாங்கம் கைவிட்ட அநாதைகளாக அலைந்த நேரத்தை அப்படியே பதித்துள்ளீர்
“யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே
நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே”
மனதைப் பிசைகின்ற வலிஉணர்கிறேன் இந்த வரிகள் வாசிக்கும்போது
"அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே"
அடுத்த வரிகளைப் படிக்கும்போது கண்ணெதிரே தெரிகிறது மீண்டும் அக்காட்சிகள் கண்ணீரில் மிதக்கிறது மீண்டும் அந்நினைவுகள்.
"ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே
கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்?"
பழுதாகிப்போன மனிதம்
முழுதாகத் தெரிகிறது எனக்கு
பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே"
சேதிக்கு அல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமேபூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்" -எனக்கூறி
மிகத் தெளிவாகாக முடித்துள்ளீர் இக்கவிதையை...
பாராட்டுக்கள் கூற இது மகிழ்ச்சியான தருணமல்ல.... இவ்வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.
தங்கள் தமிழ்த் தங்கை
யாதுமானவள்
நடந்த அத்தனையும் கண்முன்னே கொண்டுவந்து என்னை மறுபடி கலங்கச் செய்துவிட்டீர்.
கொடுமைகளின் உச்சமென மிச்சமில்லாமல் செய்த சதிச்செயல்களை செய்வதறியாது ஒட்டுமொத்தத் தமிழினமும் திகைத்து நின்றதே. தமிழினத்தை அழிப்பதையே தனது கொள்கையென கொண்டதை தெளிவாகக் கூறியுள்ளீர் இவ்வரிகளில்....
"கூனோடி நிமிராத கொள்கையைக் கொண்டொரு
கொடுமைகொள் நிலமானதே"
இலங்கையில் அந்தக் கொடூரம் அரங்கேறிய வேளையில் வல்லரசாக மாறுவதாக மார்தட்டிக் கொண்டு நல்லரசுகளாக நடித்துக் கொண்டிருக்கும்
எல்லாஅரசுகளும் வீரம் செறிந்த படைகொண்டிருந்தும் ஏதும் செய்ய முடியாத திறனற்றதாயிருந்ததை கோபமும் ஆதங்கமும் ஒருசேரக் கூறியுள்ளீர் இங்கு.
"தேரோட முடியாது திறனற்ற படைதானும்
திருநாட்டின் ஒரு ஊனமே"
தமிழர்களின் வீரத்தை அழகாகக் கூறி நேருக்கு நேர் வெல்லமுடியாமல் மறைந்திருந்து ராமன் வாலியைக் கொன்று அறம் காத்ததாய் கூறியதுபோல் தானே இங்கும் அரங்கேறியது என்று நேரடியாய்க் கூறியுள்ளீர்..
“நேரோடி வெல்கின்ற நெஞ்சத்து உரம்கொண்ட
நெறிகாத்த தமிழ் வீரரைப்
போராடி வெல்லவே முடியாது என்றிடப்
புகை நஞ்சில் கொலைசெய்ததே”
செவிடர் சமுதாயத்தில் சங்கொலி கேட்குமா? எங்கு சென்று நாம் முறையிடுவதென்று அரசாங்கம் கைவிட்ட அநாதைகளாக அலைந்த நேரத்தை அப்படியே பதித்துள்ளீர்
“யாருக்கு நீதியைக் கேட்பதோ உலகெங்கும்
போருக்கு எதிர்நின்றதே
நீபத்து போட்டிடில் நான்பத்து குண்டென
போட்டிக்கு பொருள் ஈந்ததே”
மனதைப் பிசைகின்ற வலிஉணர்கிறேன் இந்த வரிகள் வாசிக்கும்போது
"அகிலத்து நிலமெங்கும்
அணிதிரண் டுயிர் கொன்றதே"
அடுத்த வரிகளைப் படிக்கும்போது கண்ணெதிரே தெரிகிறது மீண்டும் அக்காட்சிகள் கண்ணீரில் மிதக்கிறது மீண்டும் அந்நினைவுகள்.
"ஓர்பத்து வயதான உரம்கொண்ட சிறுவனை
ஈர்பத்து பயில்வான்களே
கால்பற்ற ஒருவனும் கைபற்ற ஒருவனும்
கழுத்துக்குச் சுருக்கிட்டதேன்?"
பழுதாகிப்போன மனிதம்
முழுதாகத் தெரிகிறது எனக்கு
பாதிக்கு மனிதனும் மீதிக்கு மிருகமும்
பார்க்கின்ற நிலையானதே"
சேதிக்கு அல்லநீ சிந்தையில் கொண்டிடு
சிதைகின்ற அறம்யாவுமேபூமிக்கு அழிவென்ற போர்வைக்கு வழிகோலும்" -எனக்கூறி
மிகத் தெளிவாகாக முடித்துள்ளீர் இக்கவிதையை...
பாராட்டுக்கள் கூற இது மகிழ்ச்சியான தருணமல்ல.... இவ்வேதனையில் நானும் பங்கேற்கிறேன்.
தங்கள் தமிழ்த் தங்கை
யாதுமானவள்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|