புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
81 Posts - 67%
heezulia
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
1 Post - 1%
viyasan
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
273 Posts - 45%
heezulia
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
18 Posts - 3%
prajai
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
8 Posts - 1%
Guna.D
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10ஓடிப்போனவள் - வி.லதா Poll_m10ஓடிப்போனவள் - வி.லதா Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிப்போனவள் - வி.லதா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Nov 14, 2010 2:51 pm

சுசிலா ஆட்டோவில் இருந்து இறங்கியதுமே வீட்டிலிருந்த அம்மா பார்வதி ஓடி வந்து கட்டிக் கொண்டாள்,

"இப்படி பண்ணிட்டாளேடி பாவி! நான் என்ன பண்ணுவேன்? என் தலையில் கல்லைத் தூக்கி போட்டுட்டாளே... நான் இன்னும் உயிரோடு இருக்கணுமா?''

பார்வதி தலையில் அடித்துக் கொண்டு அழுதாள். அழுது அழுது கண்கள் சிவந்திருந்தன, தொண்டை வறண்டிருந்தது,

"அம்மா, அம்மா அழுகையை நிறுத்தும்மா. வா, வாம்மா, உள்ளே வா...'' கையை பிடித்து வீட்டிற்குள் கூட்டி வந்தாள்.

உள்ளே ஒரு கூட்டமே இருந்தது. மாமா, அத்தை, சித்தி சித்தப்பா, சித்தி மகன் தினேஷ், இன்னும் பக்கத்தில் உள்ளவர்கள்... தெருவில் உள்ளவர்கள்...

"வா சுசீலா! மாப்பிள்ளை வரலியா?'' கேட்ட சித்தி குழந்தை ஆகாஷை வாங்கிக் கொண்டாள்.

"வரலை சித்தி. அவருக்கு வேலை அவசரம். அதான்....'' சமாளித்தாள் சுசீலா.

வரும்போது அவள் கணவன் பேசிய வார்த்தைகள் இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தது.

`இந்த வயசுல வீட்டை விட்டு ஓடிப் போகணும்ன்னா என்ன துணிச்சல்! அதுவும் வேற ஜாதியாமே! ஏண்டி, நான் உன்னை கல்யாணம் பண்ணாம இருந்தேன்னா, நீ கூட இப்படித்தான் ஓடிப் போயிருப்பியா? சொல்லுடி?...இப்ப நீ உங்கவீட்டுக்கு போறது சரி. ஆனா நாளைக்கு வீட்டுக்கு வந்து நிக்கணும்! அவளைப் போல நீயும் யார் கூடவாவது போயிராதே..'

அவள் கலைந்தாள்

"யாரு சித்தி அது?''

"கூட படிச்சவளோட அண்ணனாம். அடுத்த தெரு, ஆனா, பையன் நல்ல வேலையில் இருக்கான்.''

"பாவி, பாவி, ப்ரண்ட் வீட்டுக்கு போறேன், போறேன்னு இப்படி ஒரேயடியா போயிட்டாளே....''

பார்வதி மீண்டும் அழுததில் மயக்கம் வந்தது. அத்தை முகத்தில் தண்ணீர் தெளித்தாள். மெதுவாக கண்களை திறந்தாள் பார்வதி.

"நேத்துல இருந்து உங்கம்மா தண்ணி கூட குடிக்கல சுசீலா! பின்னே மயக்கம் வராம என்ன செய்யும்? இந்த காபியாவது குடிக்கா''. சித்தி காபி கொடுத்தாள்.

"எனக்கு வேண்டாம்.''

"நீ எங்களுக்கு வேணும்மா. குடிம்மா''

அழுதாள் சுசீலா. "அந்த மனுசரை பாரு, அப்படியே படுத்துட்டார் அவரை தலைகுனிய வச்சுட்டாளே! நான் என்ன பண்ணுவேன்...''

உள் அறையில் அப்பா படுத்திருந்தார். நேற்றிலிருந்து அவர் படுத்த படுக்கையாகி விட்டார்.

அக்கா, அவங்க மரியாதையாகத்தான் வீட்டுக்கு வந்து பொண்ணு கேட்டாங்க. பெரியப்பா தான் சத்தம் போட்டு விரட்டி விட்டுட்டார்.''-சித்தி மகன் தினேஷ் சொல்ல...

"என்னடா சொல்ற?''

"ஆமாக்கா. நம்ம சுஜாவுக்கும், அந்த லோகேஷ்க்கும் இரண்டு வருஷம் லவ்.''

"அவளை நம்ம சுஜான்னு சொல்லாதேடா. நம்மை எல்லோரையும் தலை குனிய வச்சுட்டா. அவளை எப்படியாவது கூட்டிட்டு வந்திரலாம்னு நெனச்சா, கழுதை ரிஜிஸ்டர் வேற பண்ணி மானத்தை வாங்கிட்டா, இனிமே அவளுக்கும், நமக்கும் எந்த உறவும் கிடையாது.''

சித்தப்பா கோபத்துடன் சொல்லிவிட்டு போய்விட்டார்.

நேரம் ஆக, ஆக, ஒவ்வொருவராக கலைந்தனர்.

ஆளாளுக்கு பேசியதில் சுசீலாவுக்கு அந்த லோகேஷ் நல்லவனாகவே தெரிந்தான். பார்வதி அழுகையை நிறுத்துவதாக இல்லை.

"அம்மா, அழுகையை நிறுத்தும்மா, நடந்தது நடந்து போச்சு, இனி நடக்க வேண்டியதை பாரும்மா.''

"இனி என்னடி நடக்க வேண்டியிருக்கு. அதான் நடத்திட்டாளே. நாளும் கிழமையும் பார்க்காம கல்யாணம்... அவ நல்லா

இருப்பாளா?''"நல்லாவே இருப்பா...''

"என்னடி சொல்றே?''

"அம்மா, நாள் பார்த்து, நட்சத்திரம் பார்த்து, குலம் கோத்திரம் பார்த்து, ஜாதி அந்தஸ்து எல்லாம் பார்த்து என்னை கல்யாணம் பண்ணி குடுத்தீங்க. ஆனா, நான் நல்லா இருக்கேன்னு நீ நினைக்கிறியாம்மா?''

"ஏண்டி, உனக்கென்ன குறைச்சல்? கண் நெறஞ்ச மாப்பிள்ளை, ஊர் மெச்ச கல்யாணம், இப்போ கையில ஒரு குழந்தை, இதை விட வேற என்ன வேணும்?''

சந்தோஷம் வேணும்மா...நிம்மதி வேணும்மா... இந்த இரண்டுமே எனக்கு இல்ல.''

நீ என்னடி சொல்ற? மாப்பிள்ளை உன்னை நல்லா பார்த்துக்கலியா?''

அம்மா முகத்தில் எதிர்பார்த்திராத அதிர்ச்சி ரேகைகள்.

"நான் படும் வேதனை எனக்குத்தான் தெரியும். அவர் வாயில விஷம். நாக்கு தேள். ஒவ்வொரு வார்த்தையும் என்னை கொன்னுட்டே இருக்கு. அத்தனையும் நான் ஏன் பொறுத்துக்கிட்டு இருக்கேன்னா...,அதுக்கு காரணம் நம்ம சுஜாவாலதான்! அவர் சண்டை போடும் போது நான் நம்ம வீட்டுக்கு வந்திரலாம்னு புறப்படுவேன். ஆனா, அந்த ராஸ்கல் சொல்லுவான், நீ வாழா வெட்டியா உன் வீட்டுக்குப் போனா உன் தங்கச்சிய எவன்டி கட்டிப்பான்னு. அதனால்தான் நான் எல்லாம் பொறுத்துக்கிட்டு, உங்ககிட்டையும் சொல்லாம இருந்தேன்.''

"என்னம்மா சொல்ற? மாப்பிள்ளைக்கும் உனக்கும் சண்டையா? உனக்கு ஜோசியமெல்லாம் பார்த்து தானம்மா கல்யாணம் பண்ணி வச்சோம். பத்து பொருத்தம் இருக்குன்னு சொன்னாரே?''

அம்மா குரல் தளர்ந்தாள்.

"நீ நாள் நட்சத்திரம் பார்த்து, ஜோசியம் எல்லாம் பார்த்தே, ஆனா, மாப்பிள்ளை நல்லவரான்னு பாக்கலம்மா.''

பார்வதி சுசீலாவை அதிர்ச்சியாக பார்த்தாள்.

"ஆமாம்மா, ஆனா, நம்ம சுஜா இதெல்லாம் பார்க்காம நல்ல மாப்பிள்ளையா பாத்திருக்கா. அதனால நிச்சயம் அவ சந்தோஷமாக இருப்பா. ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் பண்ணுனதால நாட்டுல ஒற்றுமையை காட்டியிருக்கா. ரிஜிஸ்டர் பண்ணுனதால சட்டத்தை மதிச்சிருக்கா. அந்த லோகேஷை எல்லாரும் நல்லவன்னுதான் சொல்றாங்க.அதனால நம்ம சுஜாவை நிச்சயம் கண் கலங்காம வச்சு காப்பாத்துவான். அதுவுமில்லாம நாமெல்லாம் ஊர் மெச்ச கல்யாணம் முடிச்சோம்கிற கர்வத்தில வீணாப்போறோம். ஆனா, அதுங்களுக்கு நாம வீட்டை விட்டு வந்துட்டோமேனு மனசில் ஒரு உறுத்தல் இருந்துக்கிட்டே இருக்கும்.

அந்த உறுத்தலே அவங்களை நல்லபடி வாழ்ந்து காட்ட வைக்கும். அதனால் அவங்க நல்லா இருப்பாங்க. நீ கவலைப்படாதேம்மா. போகப் போக எல்லாம் சரியாயிடும். அதனால் நீ அழுகையை நிறுத்து. முகத்தை கழுவிட்டு சாப்பிட வாம்மா.''

சுசீலா சொல்லச் சொல்ல, அம்மா பார்வதிக்கு இளைய மகள் சுஜா பற்றிய கவலை நீங்கி, பெரிய மகள் சுசீலா மீது முதன்முதலாக கவலை எட்டிப்பார்த்தது. மகளை ஆறுதலாக அணைத்துக் கொண்டாள். `நானிருக்கிறேன்' என்பதான ஆறுதல் அந்த அணைப்பில் இருந்தது!


- வி.லதா




ஓடிப்போனவள் - வி.லதா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக