புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_c10 
5 Posts - 63%
heezulia
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 1:58 am

1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்


தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.

புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 1:59 am

2. சுதரிசன் சூழ்ச்சி

எண்சீர் விருத்தம்

சுதரிசன்சிங்க் திம்மனிடம் பேசு கின்றான்;
தோகைமேல் அவன்உளத்தைச் செலுத்து கின்றான்.
எதையோதான் பேசுகின்றான் சுப்பம் மாமேல்
ஏகியதன் நெஞ்சத்தை மீட்டா னில்லை!
இதையறியான் திம்மன்ஒரு கவட மில்லான்;
இளித்தவா யால்"உம்உம்" எனக்கேட் கின்றான்!
கதைநடுவில் சுதரிசன்சிங்க் தண்ணீர் கேட்பான்;
கனிஇதழாள் வரமகிழ்வான்; போனால் நைவான்!

உளம்பூத்த சுதரிசனின் ஆசைப் பூவும்
ஒருநொடியில் பிஞ்சாகிக் காயும் ஆகித்
தளதளத்த கனியாகிப் போன தாலே
தாங்காத நிலையடைந்தான். சூழ்ச்சி ஒன்றை
மளமளென நடத்தஒரு திட்டம் போட்டான்;
'வாஇங்கே திம்மாநீ விரைவிற் சென்று
குளத்தெதிரில் மரத்தினிலே கட்டி வைத்த
குதிரையினைப் பார்த்துவா' என்று சொன்னான்.

'விருந்தினரை வரவேற்பான் தமிழன்; அந்த
விருந்தினர்க்கு நலம்செய்வான் தமிழன்; சாவா
மருந்தேனும் வந்தவர்கள் பசித் திருக்க
வாயில்இடான் தமிழன்;இது பழமை தொட்டே
இருந்துவரும் பண்பாகும். எனினும் வந்தோன்
எவன்அவனை ஏன்நம்ப வேண்டும்' என்று
துரும்பேனும் நினையாத தாலே இந்நாள்
தூய்தமிழன் துயருற்றான்! வந்தோர் வாழ்ந்தார்!

'குதிரைகண்டு வருகின்றேன்' என்று திம்மன்
குதித்துநடந் தான்!சென்றான்; சுதரி சன்சிங்க்
முதிராத பழத்துக்குக் காத்தி ருந்து
முதிர்ந்தவுடன் சிறகடிக்கும் பறவை யைப்போல்
அதிராத மொழியாலே அதிரும் ஆசை
அளவற்றுப் போனதோர் நிலைமை யாலே
'இதுகேட்பாய் சுப்பம்மா சும்மா வாநீ
ஏதுக்கு நாணுகின்றாய்' என்று சொன்னான்.

'ஏன்'என்று வந்துநின்றாள். 'சுப்பம் மாநீ
இச்சிறிய ஊரினிலே இருக்கின் றாயே
நானிருக்கும் செஞ்சிக்கு வருகின் றாயா?
நகைகிடைக்கும் நல்லநல்ல ஆடை யுண்டு.
மான்அங்கே திரிவதுண்டு மயில்கள் ஆடும்
மகிழ்ச்சியினை முடியாது சொல்வ தற்கே;
கானத்தில் வள்ளிபோல் தனியாய் இங்கே
கடுந்துன்பம் அடைகின்றாய்' என்று சொன்னான்.

'இல்லையே! நான்வேல னோடு தானே
இருக்கின்றேன் உளமகிழ்ச்சி யாக' என்று
சொல்லினாள்; சுதரிசனின் வஞ்சம் கண்டாள்;
துயரத்தை வௌிக்காட்டிக் கொள்ள வில்லை;
இல்லத்தின் எதிரினிலே சிறிது தூரம்
எட்டிப்போய் நின்றபடி 'போனார் இன்னும்
வல்லை' என்று முணுமுணுத்தாள். சுதரி சன்சிங்க்
வந்தவழி யேசென்றான் தோழ னோடே!

'சுப்பம்மா வுக்கிழைத்த தீமை தன்னைச்
சுப்பம்மா திம்மனிடம் சொல்லி விட்டால்
தப்புவந்து நேர்ந்துவிடும்; கொண்ட நோக்கம்
சாயாதே' எனஎண்ணிச் சுதரி சன்சிங்க்
அப்போதே எதிர்ப்பட்ட திம்ம னின்பால்
அதைமறைக்கச் சிலசொற்கள் சொல்லு கின்றான்:
'அப்பாநீ இங்கிருந்து துன்ப முற்றாய்.
அங்கேவந் தால்உனக்குச் சிப்பாய் வேலை

தரும்வண்ணம் மன்னரிடம் சொல்வேன்; மன்னர்
தட்டாமல் என்பேச்சை ஒப்புக் கொள்வார்.
திரும்புகின்ற பக்கமெலாம் காட்டு மேடு
சிற்றூரில் வாழ்வதிலே பெருமை இல்லை;
விருந்தாக்கிப் போட்டஉன்னை மறக்க மாட்டேன்
வீட்டினிலே சுப்பம்மா தனிமை நன்றோ?
கரும்புவிளை கொல்லைக்குக் காவல் வேண்டும்.
காட்டாற்றின் ஓட்டத்தில் மான்நிற் காதே.

இளமங்கை உன்மனைவி நல்ல பெண்தான்
என்றாலும் தனியாக இருத்தல் தீது!
'குளக்கரைக்குப் போ'என்றேன் நீயும் போனாய்
கோதையொடு தனியாக நாங்கள் தங்க
உளம்சம்ம தித்ததா? வந்தோம் உன்பால்!
உனக்குவௌி வேலைவந்தால் போக வேண்டும்.
இளக்கார மாய்ப்பேசும் ஊர்பெண் ணென்றால்
உரைக்கவா வேண்டும்?நீ உணர்ந்தி ருப்பாய்.

ஒருமணிநே ரம்பழகி னாலும் நல்லார்
உலகம்அழிந் தாலும்மறந் திடுவ தில்லை.
பருகினேன் உன்வீட்டுப் பசும்பால் தன்னைப்
பழிநினைக்க முடியுமா? திம்மா உன்னை
ஒருநாளும் மறப்பதில்லை. செஞ்சிக் கேநான்
உனைக்கூட்டிப் போவ'தென முடிவு செய்தேன்.
வருவாய்நீ! சிப்பாய்என் றாக்கி உன்னை
மறுதிங்கள் சுபேதாராய்ச் செய்வேன் உண்மை.

இரண்டுநா ளில்வருவேன் உன்க ருத்தை
இன்னதென்று சொல்லிவிட வேண்டும். செஞ்சி
வருவதிலே உனக்குமிக நன்மை உண்டு!
வரவழைத்த எனக்குமொரு பேரு முண்டு!
கருதாதே நம்நட்பைப் புதிய தென்று!
கடலுக்குள் ஆழத்தில் மூழ்கி விட்டேன்;
பெரிதப்பா உன்அன்பு! கரையே இல்லை!
பிறகென்ன? வரட்டுமா? என்றான்; சென்றான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 1:59 am

3. திம்மன் பூரிப்பு


தென்பாங்கு-கண்ணிகள்

'நற்காலம் வந்ததடி பெண்ணே - இங்கு
நாமென்ன நூறுசெல விட்டோம்?
சொற்போக்கில் வந்தவிருந் தாளி - அவன்
சூதற்ற நல்லஉளம் கொண்டோன்;
பற்காட்டிக் கெஞ்சவில்லை நாமும் - நம்
பங்கில்அவன் நல்லஉள்ளம் வைத்தான்.
புற்காட்டில் நாளும்உழைத் தோமே - செஞ்சி
போய்அலுவல் நான்புரிய வேண்டும்.

என்றுபல திம்மன்உரைத் திட்டான் - அவன்
இன்பமனை யாளும்உரைக் கின்றாள்:
'தென்னைஇளந் தோப்புமுதி ராதா? - நம்
தெற்குவௌிப் புன்செய்விளை யாதா?
சின்னஎரு மைவிலைக்கு விற்றால் - கையில்
சேரும்பணம் ஏர்அடிக்கப் போதும்.
என்னஇருந் தாலும்சுபே தாரை - நான்
என்வரைக்கும் நம்பமுடி யாது.

நம்குடிக்கு நாம்தலைமை கொள்வோம் - கெட்ட
நாய்ப்பிழைப்பில் ஆயிரம்வந் தாலும்
பங்கமென்று நாமும்அறி வோமே - இதில்
பற்றுவைக்க ஞாயமில்லை' என்றாள்.
'தங்கமயி லேஇதனைக் கேட்பாய் - என்சொல்
தட்டிநடக் காதிருக்க வேண்டும்.
பொங்குதடி நெஞ்சில்எனக் காசை - செஞ்சிப்
பொட்டலில் கவாத்துசெய்வ தற்கே!

தின்றதனை நாடொறுமே தின்றால் - நல்ல
சீனியும் கசக்குமடி பெண்ணே.
தென்னையையும் குத்தகைக்கு விட்டுப் - புன்
செய்தனையும் குத்தகைக்கு விட்டுப்
பின்னும் உள்ள காலிகன்று விற்று - நல்ல
பெட்டையையும் சேவலையும் விற்றுச்
சின்னதொரு வீட்டினையும் விற்று - நல்ல
செஞ்சிக்குடி ஆவமடி' என்றான்.

நாளைஇங்கு நல்லுசுபே தாரும் - வந்து
நம்மிடத்தில் தங்குவதி னாலே
காளைஒன்றை விற்றுவரு கின்றேன் - உன்
கைந்நிறையக் காசுதரு கின்றேன்.
வேளையொடு சோறுசமைப் பாயே - அந்த
வெள்ளரிப்பிஞ் சைப்பொரிக்க வேண்டும்;
காளிமுத்துத் தோட்டத்தினில் பாகல் - உண்டு
கட்டிவெல்லம் இட்டுவை குழம்பு!

கார்மிளகு நீர்இறக்கி வைப்பாய் - நல்ல
கட்டித்தயிர் பாலினில் துவைப்பாய்;
மோரெடுத்துக் காயமிட்டுத் தாளி - நல்ல
மொச்சைஅவ ரைப்பொரியல் வேண்டும்.
சீருடைய தாகிய தென்பாங்கு - கறி
செய்துவிடு வாய்இவைகள் போதும்.
நேரில்வட பாங்கும்மிக வேண்டும் - நல்ல
நீள்செவிவெள் ளாட்டுக்கறி ஆக்கு.

பாண்டியனின் வாளையொத்த வாளை - மீன்
பக்குவம் கெடாதுவறுப் பாயே.
தூண்டிலில் வரால்பிடித்து விற்பார் - பெருந்
தூணைஒத்த தாய்இரண்டு வாங்கு;
வேண்டியதைத் தின்னட்டும் சுபேதார்' - என்று
வெள்ளைமனத் திம்மன்உரைத் திட்டான்.
தாண்டிநடந் தார்இரண்டு பேரும் - உண்ணத்
தக்கபொருள் அத்தனையும் சேர்க்க!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 1:59 am

4. சுதரிசன் நினைவு

எண்சீர் விருத்தம்

செஞ்சிக்குச் சென்றிருந்த சுதரி சன்சிங்க்
செஞ்சியிலே தன்உடலும் வளவ னூரில்
வஞ்சியிடம் நினைவுமாய் இருந்தான். அன்று
மலைக்கோட்டை காத்துவரும் சிப்பாய் மாரைக்
கொஞ்சமுமே தூங்காமல் விடியு மட்டும்
குதிரைமேல் திரிந்துமேற் பார்வை பார்க்கும்
நஞ்சான வேலையிலே மாட்டிக் கொண்டான்!
நள்ளிரவில் சுதரிசன்சிங்க் தென்பால் வந்தான்.

'தெற்குவா சல்காப்போன் எவன்காண்' என்று
செப்பினான் சுதரிசன்சிங்க். 'ரஞ்சித்' என்று
நிற்கும்சிப் பாய்உரைத்தான். சுதரி சன்சிங்க்
'நீதானா ரஞ்சித்சிங்க்! கேட்பா யப்பா.
முற்றிலுமே அவள்நினைவால் நலிந்தே னப்பா
அன்னவளை மறப்பதற்கு முடியாதப்பா.
விற்புருவ அம்புவிழி பாய்ந்த தோஎன்
விலாப்புறத்தில் தானப்பா; செத்தே னப்பா.

அப்படியோர் மங்கையினைப் பார்த்த தில்லை.
நானுந்தான் ஆனபல்லூர் சுற்றி யுள்ளேன்!
ஒப்படியென் றால்அவளோ ஒப்ப மாட்டாள்.
உருப்படியை இவ்விடத்தில் கொண்டு வந்து
கைப்பிடியில் வைத்துவிட்டால் என்க ருத்துக்
கைகூடும். பொழுதுவிடிந் ததும்நா னங்கே
எப்படியும் போய்ச்சேர வேண்டும்' என்றான்
இன்னும்அவன் கூறுகின்றான் அவளைப் பற்றி;



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:00 am

5. அவன் பொய்யுரை

பஃறொடை வெண்பா

'என்மீதில் ஆசைஅவட் கில்லா மலும்இல்லை;
என்மீதில் ஆசையே இல்லா தவள்போலே
ஏன்நடந்தாள் என்றுகேள்; என்னை இன்னானென்று
தான்அறிவ தற்குள்தன் னைக்காட்டிக் கொள்வாளா?
மட்டுப் படுத்தினாள் நெஞ்சை! வளர்காதல்
கட்டுப் படுத்தினேன் நானும் கடைசிவரை!
அன்னவளின் நெஞ்சத்தின் ஆழத்தை என்சொல்வேன்?
என்மீதில் ஆசையே இல்லாதவள் போலும்
வீட்டுக்கா ரன்மேல் விருப்பமுடை யாள்போலும்
காட்ட நடந்துபோய்க் கண்ணால் வழிபார்த்து
நெஞ்சத்தை மட்டும்என் நேயத்தில் வைத்தாளே!
வஞ்சி திறமை வரைதல் எளிதா?
குறுநகைப்பும் கொஞ்சும் கடைநோக்கும் கூட்டி
உறுதி குறித்தாள் உனக்குத் தெரியாமல்.
மேலும் இதுகேட்பாய் வீட்டில் நடந்தவற்றை.
ஓலைத் தடுக்கில்நான் திண்ணையில்உட் கார்ந்திருந்தேன்;
உள்ளிருந்து பார்ப்பாள் ஒளிந்துகொள்வாள்; என்முகந்தான்
கள்ளிருந்த பூவோ! களிவண்டோ மாதுவிழி!
'தன்கணவன் எப்போது சாவானோ, இச்சுதரி
சன்கணவன் ஆவதென்றோ' என்பதவள் கவலை.
இன்னும் விடியா திருக்குதடா ரஞ்சித்சிங்க்;
பொன்னங் கதிர்கிழக்கிற் பூக்கா திருக்குதடா!
சேவலும் கூவா திருக்குதடா! செக்குந்தான்
காவென்றும் கர்ரென்றும் கத்தா திருக்குதடா!
மாவின் வடுப்போன்ற கண்ணாள்காண்! மாங்குயிற்கும்
கூவும் இனிமைதனைச் சொல்லிக் கொடுப்பவள்காண்!
யாவரும் தம்அடிமை என்னும் இரண்டுதடும்
கோவைப் பழமிரண்டின் கொத்து! நகைமுல்லை!
அன்னம் பழித்தும் அகத்தில் குடிபுகுந்தும்
பின்னும்எனை வாட்டுகின்ற பெண்நடைபோற் காணேன்!
கொடிபோல் இடைஅசைந்து கொஞ்சுகையில், யானைப்
பிடிபோல் அடிகள் பெயர்க்கையிலே அம்மங்கை
கூட்ட வளையல் குலுங்கக்கை வீசிடுவாள்
பாட்டொன்று வந்து பழிவாங்கிப் போடுமடா!
அன்னவள்தான் என்னுடைய வாழ்வே! அழகுடையாள்
என்னைப் புறக்கணித்தல் என்பதென் றன்சாவு!
நிலவுமுகம் அப்பட்டம்! சாயல் நினைத்தால்
கலப மயிலேதான்! கச்சிதமாய்க் கொண்டையிட்டுப்
பூச்சூடி மண்ணிற் புறப்பட்ட பெண்ணழகை
மூச்சுடையேன் கண்டுவிட்டேன்; செத்தால் முகமறப்பேன்'
என்று சுதரிசன்சிங்க் சொன்னான். இரவில்நொடி
ஒன்றொன்றாய்ப் போபோஎன் றோட்டி ஒருசேவல்
நெட்டைக் கழுத்தை வளைக்க நெடும்பரியைத்
தட்டினான்; வீட்டெதிரே சாணமிடும் சுப்பம்மா
அண்டையிலே நின்றான்! வரவேற்றாள் அன்னவனைக்
கண்ட இனியகற் கண்டு!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:00 am

6. சுப்பம்மா தொல்லை

கலிவெண்பா

அப்போது தான்திம்மன் கண்விழித்தான்! 'ஆ'என்றான்;
'எப்போது வந்தீர்கள்?' என்றெழுந்தான் - 'இப்போது
தான்வந்தேன்' என்றான் சுதரிசன். 'தங்கட்கு
மீன்வாங்க நான்போக வேண்டுமே - ஆனதினால்
இங்கே இருங்கள் இதோவருகின் றே'னென்று
தங்காது திம்மன் தனிச்சென்றான் - அங்கந்தச்
சுப்பம்மா தன்னந் தனியாகத் தோட்டத்தில்
செப்புக் குடம்துலக்கிச் செங்கையால் - இப்புறத்தில்
வைக்கத் திரும்பினாள்; வந்த சுதரிசன்சிங்க்
பக்கத்தில் நின்றிருந்தான்; பார்த்துவிட்டாள் - திக்கென்று
தீப்பற்றும் நெஞ்சோடு 'சேதிஎன்ன?' என்றுரைத்தாள்.
'தோப்புக்குப் போகின்றேன் சொல்லவந்தேன் - சாப்பிட்டுச்
செஞ்சிக்குப் போவதென்ற தீர்ப்போடு வந்தேன்.நீர்
அஞ்சிப்பின் வாங்காதீர்; அவ்விடத்தில் - கெஞ்சி
அரசரிடம் கேட்டேன்; அதற்கென்ன என்றார்.
அரசாங்கத் துச்சிப்பாய் ஆக்கி - இருக்கின்றேன்
திம்மனுக்கு நான்செய்ய வேண்டியதைச் செய்துவிட்டேன்.
ஐம்பது வராகன் அரசாங்கச் - சம்பளத்தை
வாங்கலாம் நீங்கள் வயிறாரச் சாப்பிடலாம்;
தீங்கின்றி எவ்வளவோ சேர்க்கலாம் - நாங்களெல்லாம்
அப்படித்தான் சேர்த்தோம். அதனால்தான் எம்மிடத்தில்
இப்போது கையில் இருப்பாக - முப்பத்து
மூவா யிரவரா கன்சேர்த்து மூலையிலே
யாவருங் காணாமல் இருத்தினோம்; - சாவுவந்தால்
யாரெடுத்துப் போவாரோ? பெண்டுபிள்ளை யாருமில்லை.
ஊரெடுத்துப் போவதிலும் உங்கட்குச் - சேருவதில்
ஒன்றும் கவலையில்லை. உங்கட்குப் பிள்ளைகள்
இன்றில்லை யேனும் இனிப்பிறக்கும்; - என்பிள்ளை
வேறு பிறர்பிள்ளை வேறா? இதைநீயே
கூறுவாய்' என்று சுதரிசன் - கூறினான்.
'திண்ணையிலே குந்துங்கள்' என்றுரைத்தாள் சேல்விழியாள்.
வெண்ணெய்என்ற பிள்ளைக்கு மண்ணையள்ளி - உண்ணென்று
தந்ததுபோல் இவ்வாறு சாற்றினளே - இந்தமங்கை
என்று நினைத்த சுதரிசன் திண்ணைக்கே
ஒன்றும்சொல் லாமல் ஒதுங்கினான் - பின்அவளோ
கூடத்தைச் சுற்றிக் குனிந்து பெருக்கினாள்;
'மாடத்திற் பற்கொம்பு வைத்ததுண்டோ? - தேடிப்பார்'
என்றுரைத்துக் கொண்டே எதிர்வந்து 'சுப்பம்மா
ஒன்றுரைக்க நான்மறந்தேன் உன்னிடத்தில் - அன்றொருநாள்
செஞ்சியில் ஒருத்தி சிவப்புக்கல் கம்மலொன்றை
அஞ்சு வராகன் அடகுக்குக் - கெஞ்சினாள்
முற்றுங் கொடுத்தேன் முழுகிற்று வட்டியிலே.
சிற்றினச் சிவப்போ குருவிரத்தம் - உற்றதுபோல்
கோவைப் பழத்தில் மெருகு கொடுத்ததுபோல்
தீவட்டி போல்ஒளியைச் செய்வதுதான் - தேவை யுண்டா?
என்று சுதரிசன் கேட்டான். 'எனக்கதுஏன்?'
என்றுசுப் பம்மா எதிர்அறைக்குச் - சென்றுவிட்டாள்.
திண்ணைக்குச் சென்றான் சுதரிசன்சிங்க். இன்னுமென்ன
பண்ணுவேன் என்று பதறுகையில் - பெண்ணாள்
தெருவிலே கட்டிவைத்த சேங்கன்று தின்ன
இருகையில் வைக்கோலை ஏந்தி - வரக்கண்டே
'இப்பக்கம் நன்செய்நிலம் என்ன விலை?'என்றான்.
'அப்பக்கம் எப்படியோ அப்படித்தான் - இப்பக்கம்'
என்று நடந்தாள். இவனும் உடன்சென்றே
'இன்றுகறி என்ன?' எனக்கேட்டான் - ஒன்றுமே
பேசா திருந்தாள். பிறகுதிண் ணைக்குவந்தான்.
கூசாது பின்னும் குறுக்கிட்டு - 'நீசாது
வேலைஎலாம் செய்கின்றாய்; வேறு துணையில்லை
காலையிலி ருந்துநான் காணுகின்றேன் - பாலைக்
கறப்பாயா? எங்கே கறபார்ப்போம்' என்றான்.
அறப்பேசா மல்போய் அறைக்குள் - முறத்தில்
அரிசி எடுத்தாள். அவனும் அரிசி
பெரிசிதன் என்றுரைத்தான். பேசாள் - 'ஒருசிறிய
குச்சிகொடு பற்குத்த' என்பான். கொடுத்திட்டால்
மச்சுவீ டாய்இதையேன் மாற்றவில்லை? - சீச்சீ
இதுபோது மாஎன்பான். சுப்பம்மா இந்தப்
புதுநோயை எண்ணிப் புழுங்கிப் - பதறாமல்
திம்மனுக் கஞ்சித் திகைத்தாள்.அந் நேரத்தில்
திம்மனும் வந்தான் சிடுசிடுத்தே - 'இம்மட்டும்
வேலையொன்றும் பாராமல் வீணாக நீவீட்டு
மூலையிலே தூங்கினாய் முண்டமே! - பாலைவற்றக்
காய்ச்'சென்றான். சென்றாள் கணவனது கட்டளைக்குக்
கீச்சென்று பேசாக் கிளி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:01 am

7. திம்மன் ஆவல்

தென்பாங்கு-கண்ணிகள்

காலை உணவருந்திச் - சுதரிசன்
காய்ச்சிய பால்பருகி
ஓலைத் தடுக்கினிலே - திண்ணைதனில்
ஓய்ந்து படுத்திருந்தான்.
'வேலை கிடைக்கும்என்றீர் - உடனே
விண்ணப்பம் போடுவதா?
நாலைந்து நாட்களுக்குப் - பிறகு
நான்அங்கு வந்திடவா?'

என்றுதிம் மன்வினவச் - சுதரிசன்
'யாவும் முடித்துவிட்டேன்;
இன்று கிளம்பிவந்தால் - நல்லபயன்
ஏற்படும் அட்டிஇல்லை.
ஒன்றும் பெரிதில்லைகாண் - திம்ம,நீ
ஊருக்கு வந்தவுடன்
மன்னர் இடத்தினிலே - உன்னையும்
மற்றுன் மனைவியையும்

காட்டி முடித்தவுடன் - கட்டளையும்
கையிற் கிடைத்துவிடும்.
வீட்டுக்கு நீவரலாம் - சிலநாள்
வீட்டிலே தங்கியபின்
போட்ட தலைப்பாகை - கழற்றிடப்
போவதில் லைநீதான்;
மாட்டிய சட்டையினைக் - கழற்றியும்
வைத்திடப் போவதில்லை.

எண்பது பேருக்குநான் - உதவிகள்
இதுவ ரைக்கும்செய்தேன்;
மண்ணில் இருப்பவர்கள் - நொடியினில்
மாய்வது திண்ணமன்றோ!
கண்ணிருக் கும்போதே - இவ்வரிய
கட்டுடல் மாயுமுன்னே
நண்ணும் அனைவருக்கும் - இயன்றிடும்
நன்மைசெய் தல்வேண்டும்.

வண்டியினை அமர்த்து - விரைவினில்
மனைவி யும்நீயும்
உண்டி முடிந்தவுடன் - வண்டிதான்
ஓடத் தொடங்கியதும்
நொண்டி எருதெனினும் - செஞ்சியினை
நோக்கி நடத்துவித்தால்
கண்டிடும் பத்துமணி - இரவினில்
கட்டாயம் செஞ்சிநகர்.

வீட்டையும் பேசிவிட்டேன் - இருவரை
வேலைக் கமைத்துவிட்டேன்;
கோட்டையிற் சிப்பாயாய் - அமரும்
கொள்கையி லேவருவார்
காட்டு மனிதர்அல்லர் - என்றுநான்
கண்டித்துப் பேசிவிட்டேன்.
கேட்டு மகிழ்ந்தார்கள் - நிழல்போல்
கிட்ட இருப்பார்கள்.'

திம்மன் இதுகேட்டான் - கிளம்பிடத்
திட்டமும் போட்டுவிட்டான்!
'பொம்மை வரும்'என்றதும் - குழந்தைகள்
பூரித்துப் போவதுபோல்
'உம்'என்று தான்குதித்தான் - விரைவினில்
உண்டிட வேண்டுமென்றான்.
அம்முடி வின்படியே - தொடங்கினர்
அப்பொழு தேபயணம்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:01 am

8. காடு

எண்சீர் விருத்தம்

'நாளைநடப் பதைமனிதன் அறியான்' என்று
நல்லகவி விக்தர்யுகோ சொன்னான். திம்மன்
காளைஇரண் டிழுக்கின்ற வண்டி ஏறிக்
கதைஇழுக்க மனைவியைக்கை யோடி ழுத்துத்
தேளையொத்த சுதரிசனின் பேச்சை நம்பிச்
செஞ்சிக்காட் டின்வழியே செல்லு கின்றான்.
வேளைவர வில்லைஎன்று சுப்பம் மாவும்
வௌிக்காட்ட முடியவில்லை தன்க ருத்தை!

குதிரைமேல் சுதரிசனும் ஏறிக் கொண்டு
கோணாமல் மாட்டுவண்டி யோடு சென்றான்.
முதிர்மரத்தில் அடங்கினபோய்ப் பறவை யெல்லாம்;
முன்நிலவும் அடங்கிற்று. முத்துச் சோளக்
கதிர்அடிக்கும் நரிகள்அடங் கினநு ழைக்குள்.
காரிருளும் ஆழ்ந்ததுபோய் அமைதி தன்னில்.
உதிர்ந்திருந்த சருகினிலே அதிர்ச்சி ஒன்றே
உணர்ந்தார்கள்; பின்அதனை அருகில் கேட்டார்.

மெதுவாகப் பேசுகின்ற பேச்சுங் கேட்டார்;
விரைவாகச் சிலர்வருவ தாய் உணர்ந்தார்.
சுதரிசனின் எதிர்நோக்கி வந்திட் டார்கள்;
தோள்நோக்கிக் கத்திகளின் ஒளிகண் டார்கள்;
எதிர்வருவோர் அடையாளம் தெரிய வில்லை.
எலிக்கண்போல் எரிந்ததுவண் டியின் விளக்கும்;
இதோகுதிரை என்றார்கள் வந்த வர்கள்;
எதிர்த்தோன்றும் மின்னல்கள் வாளின் வீச்சு!

பறந்துவிட்டான் சுதரிசன்போய்! வண்டிக் குள்ளே
பதறினார் இருந்தவர்கள்! வண்டிக் காரன்
இறங்கி'எமை ஒன்றும்செய் யாதீர்' என்றான்.
'எங்கிருந்து வருகின்றீர்?' என்றார் வந்தோர்.
'பிறந்துவளர்ந் திட்டஊர் வளவ னூர்தான்;
பெயர்எனக்குச் சீனன்'என்றான் வண்டிக் காரன்.
'உறங்குபவர் யார்உள்ளே?' என்று கேட்டார்.
உளறலொடு திம்மன்'நான் வளவ னூர்தான்'

என்றுரைத்தான். 'இன்னும்யார்?' என்று கேட்டார்.
'என்மனைவி' என்றுரைத்தான் திம்மன். கேட்ட
கன்னலைப்போல் மொழியுடையாள் துடிது டித்தாள்!
'காரியந்தான் என்ன' வென்றார். நடுங்குந் திம்மன்
தன்கதையைக் கூறினான்; கேட்டார். அன்னோர்
சாற்றுகின்றார்: 'திம்மனே மோசம் போனாய்;
பன்னாளும் தமிழர்களின் மானம் போக்கிப்
பழிவாங்கும் வடக்கருக்குத் துணைபோ கின்றாய்;

தமிழ்மொழியை இகழ்கின்றான், தமிழர் தம்மைத்
தாழ்ந்தவர்என் றிகழ்கின்றான்; தமிழப் பெண்டிர்
தமதுநலம் கெடுக்கின்றான்; தன்நாட் டாரைத்
தான்உயர்வாய் நினைக்கின்றான்; அவன்தான் நாளும்
சுமைசுமையாய்ச் செய்துவரும் தீமை தன்னைச்
சொன்னாலும் கேட்பதில்லை. அந்தோ அந்தோ!
அமுதான மனைவியுடன் வடக்கன் ஆட்சி
அனலுக்கா செல்கின்றீர் வண்டி ஏறி?

நல்லதொரு தொண்டுசெய்வாய்; செஞ்சி யாளும்
நாய்க்கூட்டம் ஒழிந்துபட எம்பால் சேர்ந்து
வெல்லஒரு தொண்டு செய்வாய்; கள்வரல்ல
வீணரல்லயாம்; தமிழை இகழ்ந்தோர் வாழ்வின்
சல்லிவேர் பறிப்பதுதான் எமது மூச்சே!
சலிப்பதிலே தோன்றுவதே எம்சாக் காடே!
இல்லயெனில் உன்எண்ணம் போல்ந டப்பாய்;
என்ன'என்றார். திம்மன்,'விடை தருவீர்' என்றான்.

'போகின்றாய்?போ! பிறன்பால் வால்கு ழைக்கப்
போ!அடிமைக் குழிதன்னில் வீழ்ந்தி டப்போ!
போ!கிண்ணிச் சோற்றுக்குத் தமிழர் மானம்
போக்கப்போ! ஒன்றுசொல்வோம் அதையே னுங்கேள்.
சாகின்ற நிலைவரினும் நினைப்பாய் முன்னைத்
தமிழர்மறம்! தமிழர்நெறி!'என்றார். நங்கை
'போகின்றேன் என்னிடத்தில் கத்தி ஒன்று
போடுங்கள்' என்றுரைத்தாள். ஆஆ என்றார்!

ஐந்துபேர் தரவந்தார் குத்துக் கத்தி!
அவற்றில்ஒரு கத்தியினை வாங்கிக் கொண்டாள்.
'தந்தோம்எம் தங்கச்சி வெல்க! வெல்க!
தமிழச்சி உன்கத்தி வெல்க!' என்றார்.
வந்தோரின் வியப்புக்கு வரையே இல்லை.
மாட்டுவண்டி சென்றதுசெஞ் சியினை நோக்கி!
பந்தாகப் பறந்திட்ட சுபேதார் சிங்கைப்
பத்துக்கல் லுக்கப்பால் திம்மன் கண்டான்!





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:01 am

9. சிங்கம்

தென்பாங்கு-கண்ணிகள்

'காட்டு வழிதனிலே சிங்கமே! - எம்மைக்
காட்டிக் கொடுத்துவந்த சிங்கமே!
ஓட்டம் பிடித்துவிட்ட சிங்கமே! - உங்கள்
உள்ளம் பதைத்ததென்ன சிங்கமே?
நீட்டிய உங்கள்கத்தி கள்ளரைக் - கண்டு
நெட்டுக் குலைந்ததென்ன சிங்கமே?
கூட்டி வழிநடந்து வந்திரே' - என்று
கூறிச் சிரித்தான்அத் திம்மனும்!

'அங்கே வழிமறித்த யாவரும் - திரு
வண்ணா மலைநகர வீரர்கள்;
இங்கே எமக்கவர் விரோதிகள் - தக்க
ஏற்பாட்டி லேஎதிர்க்க வந்தவர்;
உங்கட் கிடர்புரிய எண்ணிடார் - இந்த
உண்மை தெரியும்எனக் காதலால்
எங்கே உமைவிடுத்த போதிலும் - உங்கட்
கிடரில்லை' என்றனன் சுதரிசன்!





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:02 am

10. சுப்பம்மா

எண்சீர் விருத்தம்

இவ்வாறு கூறிப்பின் சுதரி சன்சிங்க்
இதோகாண்பீர் செஞ்சிமலை சார்ந்த சிற்றூர்!
அவ்விடத்தில் தனிக்குடிசை ஒன்றில் நீவிர்
அமைதியாய் இருந்திடுவீர்; உணவு யாவும்
செவ்வையுற ஏற்பாடு செய்வேன்; என்றன்
சேவகத்தை நான்பார்க்க வேண்டு மன்றோ?
எவ்விதத்தும் விடிந்தவுடன் வருவேன்' இங்கே
எவற்றிற்கும் எற்பாடு செய்வேன்' என்றான்.

கைவேலைக் காள்கொடுத்தான்; துணைகொ டுத்தான்;
கழறியது போலவே உணவுந் தந்தான்;
வைவேலை நிகர்கண்ணாள் கண்ணு றக்கம்
வராதிருந்தாள்; அவளுடைய நெஞ்ச மெல்லாம்
பொய்வேலைச் சுதரிசன்செய் திடஇ ருக்கும்
பொல்லாங்கில் இருந்தது!குத் துக்கத் திக்கு
மெய்யாக வேலைஉண்டோ? அவ்வா றொன்றும்
விளையாமை வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக