புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
26 Posts - 39%
prajai
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 5%
mohamed nizamudeen
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
M. Priya
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Jenila
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
75 Posts - 60%
ayyasamy ram
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
26 Posts - 21%
mohamed nizamudeen
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
6 Posts - 5%
prajai
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
5 Posts - 4%
Jenila
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Rutu
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
manikavi
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_m10தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழச்சியின் கத்தி - புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 1:58 am

First topic message reminder :

1. சுதரிசன் சிங்க் துடுக்கு
அகவல்


தில்லியில் பாதுசா செங்கோல் செலுத்தினான்;
ஆர்க்காட்டுப் பகுதி அவன்ஆ ணைப்படி
நவாப்பினால் ஆட்சி நடத்தப் பட்டது.
நுவலும்அவ் வார்க்காடு நூற்றெழு பத்திரண்டு
பாளைய மாகப் பகுக்கப் பட்டது;
பாளையத் தலைவர்பேர் பாளையப் பட்டுகள்;
பகர்நற் செஞ்சிப் பாளையப் பட்டாய்த்
தேசிங்கு வாழ்ந்தான் சிற்சில ஆண்டுகள்.
தேசிங்கு வடக்கிருந்து தென்னாடு போந்தவன்;
தமிழரை இகழும் தன்மை வாய்ந்தவன்;
தேசிங் கினையும் தென்னாடு வெறுத்தது.
சிப்பாய் களிலே சிலர்க்கொரு தலைவன்
இருப்பான். 'சுபேதார்' என்ப தவன்பெயர்.
சுதரிசன் சிங்க்எனும் சுபேதா ருக்குத்
தேசிங் கிடத்தில் செல்வாக் குண்டு.

புதுவைக் கடற்கரை போனான் சுதரிசன்;
வருகையில் இடையில் வளவனூர்ப் புறத்தில்
தென்னந் தோப்பில் திம்மனைக் கண்டான்.
தௌிவிலாத் தமிழில் திம்மனைக் கேட்டான்:
உன்னதா இந்தத் தென்னந் தோப்பென்று!
திம்மன் ஆம்என்று செப்பி வரவேற்றுக்
குளிர்ந்த இளநீர் கொடுத் துதவினான்.
சுதரிசன் உன்வீடு தொலைவோ என்றான்.
அருகில் என்றான் அன்புறு திம்மன்.
சுதரிசன் அவனின் தோழன் ரஞ்சித்தும்
திம்மன் வீடு சேர்ந்தனர்; இருந்தார்!
மாடு கறந்து வழங்கினான் பாலும்;
ஆடு சமைத்தும் அருத்தினான் திம்மன்.
திண்ணையில் சுதரிசன் திம்மன் ரஞ்சித்
உண்ட இளைப்பொடும் உட்கார்ந் திருந்தனர்.
திம்மன் மனைவி 'சுப்பம்மா' என்பவள்
எம்மனி தனையும் ஈன்ற பிள்ளையாய்க்
கொள்ளும் உள்ளம் கொண்டவள்
பிள்ளை இல்லாதவள் ஆத லாலே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:02 am

11. பொன்துளிர்

எண்சீர் விருத்தம்

சுப்பம்மா கால்தூக்கம், சுப்பம் மாவின்
துணைவனின்ஒன் றேமுக்கால் தூக்கம் எல்லாம்
தொப்பெனவே இல்லாது மறையும் வண்ணம்
துளிர்த்ததுபொற் றுளிர்கிழக்கு மாம ரத்தில்!
அப்போதில் சுப்பம்மா 'அத்தான்' என்றாள்;
'அவசரமா' எனத்திம்மன் புரண்டான் ஆங்கே.
'இப்படிப்போ' என்றுபகல் இருளைத் தள்ளி
எழுந்துவந்து திம்மனெதிர் சிரித்த தாலே.

'அம்மா'என் றிருகையை மேலே தூக்கி
'ஆ'என்று கொட்டாவி விட்டுக் குந்தித்
திம்மன்எழுந் தான்!அவனும், சுப்பம் மாவும்
சிறுகுடிசை விட்டுவௌிப் புறத்தில் நின்றே
அம்மலையின் தோற்றத்தைக் கண்டார். காலை
அரும்புகின்ற நேரத்தில் பொற்கதிர் போய்ச்
செம்மையுறத் தழுவியதால் மலைகோட் டைமேல்
சிறுகுவிரித் தெழுங்கருடக் கொடியைக் கண்டார்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:02 am

12. வானப்படம்

தென்பாங்கு - கண்ணிகள்

'பொன்னான வானப் படத்தில் - வியிரப்
புதிதான வண்ணம் குழைத்துத்
தன்னேர் இலாதமலை எழுதித் - திகழ்
தளிர்படும் பூஞ்சோலை எழுதி
உன்னை மகிழ்வித்த காட்சி - எனக்கும்
உவகை கொடுத்ததடி பெண்ணே'
என்றுரைத் தான்நல்ல திம்மன் - அந்த
ஏந்திழை தான்புகல் கின்றாள்:

'விண்மீதில் அண்ணாந்த குன்றம் - அதனை
மெருகிட்டு வைத்தசெங் கதிர்தான்
ஒண்ணீழல் செய்திடும் சோலை - யதனை
ஒளியில் துவைத்ததும் காண்க!
கண்காணும் ஓவியம் அனைத்தும் - அழகு
காட்டப் புரிந்ததும் கதிர்தான்!
மண்ணிற் பிறந்தோர் எவர்க்கும் - பரிதி
வாய்த்திட்ட அறிவாகும்' என்றாள்.

மங்கையும் திம்மனும் இயற்கை - அழகில்
வாழ்கின்ற போதிற்சு பேதார்
செங்கையில் மூட்டையொடு வந்தான் - 'புதுமை
தெரியுமோ உங்களுக்' கென்றான்.
அங்காந்த வாயோடு திம்மன் - விரைவில்
'அதுவென்ன புகலுவீர்' என்றான்!
'சிங்கன் முயற்சி வீணாமோ? - புதிய
சிப்பாயும் நீயாகி விட்டாய்.

இந்தா இதைப்போடு! சட்டை! - இதுவும்
எழிலான சல்லடம்! மாட்டு!
இந்தா இதைப்போடு! பாகை! - இன்னும்
இந்தா இடைக்கச்சை! கட்டு!
செந்தாழை மடல்போன்ற கத்தி - இடையில்
சேர்த்திறுக் கித்தொங்க வைப்பாய்!
வந்துபோ என்னோடு திம்மா! - விரைவில்
வா'என் றழைத்தனன் சிங்கன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:03 am

13. புதிய சிப்பாய்

எண்சீர் விருத்தம்

'சுதரிசன்சிங்க் செய்தநன்றி பெரிது கண்டாய்!
சுப்பம்மா விடைகொடுப்பாய்' என்றான் திம்மன்.
இதற்கிடையில் சுதரிசன்சிங்க் 'நாளைக் குத்தான்
இங்குவர முடியும்நீ' என்று ரைத்தான்.
'அதுவரைக்கும் நான்தனியாய் இருப்ப துண்டோ
அறிமுகமில் லாவிடத்தில்?' என்றாள் அன்னாள்.
'இதுசரிதான் இன்றிரவே உனைய னுப்ப
ஏற்பாடு செய்கின்றேன்' என்றான் சிங்கன்.

'சிங்குநமக் கிருபெண்கள் துணைவைத் தாரே
சிறிதும்உனக் கேன்கவலை?' என்றான் திம்மன்.
'இங்கெதற்கும் அச்சமில்லை சுப்பம் மாநீ
இரு'என்று சிங்கனுரைத் திட்டான். திம்மன்
பொங்கிவரும் மகிழ்ச்சியிலே பூரித் தானாய்ப்
புறப்பட்டான் சிங்கனொடு! சுப்பம் மாவும்
சுங்குவிட்ட தலைப்பாகை கட்டிக் கொண்டு
துணைவன்போ வதுகண்டு சொக்கி நின்றாள்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:03 am

14. அன்றிரவு

அகவல்

மாலை ஆயிற்று! வரும்வழி பார்த்துச்
சோலை மலர்விழி துளிகள் உதிர்க்கக்
குடிசையின் வாசலில் குந்தி யிருந்தாள்!
சுப்பம் மாவுக்குத் துணையாய் இருந்த
குப்பும் முருகியும் செப்பினார் தேறுதல்.
குப்பு 'மங்கையே, சிப்பாய் இப்போது
வருவார்; அதற்குள் வருத்தமேன்?' என்றாள்.
முருகி, 'இதற்கே உருகுகின் றாயே
சிப்பாய் வேலைக் கொப்பிச் சென்றவர்
மாசக் கணக்காய் வாரக் கணக்காய்
வீட்டை மறந்து கோட்டையில் இருப்பார்;
எப்படி உன்னுளம் ஒப்பும்?' என்றாள்.
கோதைசுப் பம்மா கூறு கின்றாள்:
'புயற்காற்று வந்து போகாது தடுப்பினும்
அயலில் தங்க அவருக்குப் பிடிக்காது;
நெஞ்சம் எனைவிட்டு நீங்கவே நீங்காது;
பிரிந்தால் எனக்கும் பிடிக்கா துலகமே!
வீட்டை விட்டவர் வௌியே செல்வது
கூட்டைவிட் டுயிர்வேறு கூடு செல்வதே!
அதென்ன மோயாம் அப்படிப் பழகினோம்.
அயல்போ வாரெனில் அதுவும் எங்கே?
வயல்போ வதுதான். வலக்கைப் பக்கத்து
வீடு, மற்றொரு வீடு, தோப்பு
மாமரம் அதனருகு வயல்தான்! முருகியே
இப்போ தென்ன இருக்கும் மணி?அவர்
எப்போது வருவார்?' என்று கேட்டாள்!
குப்பு,மணி ஆறென்று கூறினாள்! முருகி
விளக்கு வைக்கும் வேளை என்றாள்!
குப்பு, முருகி, சுப்பம்மா இவர்
இருந்த இடமோ திருந்தாக் குடிசை!
நாற்பு றம்சுவர் நடுவி லேஓர்
அறையு மில்லை. மறைவு மில்லை.
வீட்டு வாசல், தோட்ட வாசல்
இருவா சல்களும் நரிநுழை போலக்
குள்ள மாகவும் குறுக லாகவும்
இருந்தன. முருகி எழுந்து விளக்கை
ஏற்றிக் கும்பிட்டுச் சோற்றை வட்டித்தாள்.
குப்பு மகிழ்ந்து குந்தினாள் சாப்பிட.
சுப்பம் மாமுகம் சுருக்கிக் கூறுவாள்:
'கணவர் உண்டபின் உணவு கொள்வேன்;
முதலில் நீங்கள் முடிப்பீர்' என்றனள்.
குப்பு 'வாவா சுப்பம் மாநீ
இப்படி வா!நான் செப்புவ தைக்கேள்.
வருவா ரோஅவர் வரமாட் டாரோ?
சிப்பாய் வேலை அப்படிப் பட்டது.
உண்டு காத்திரு. சிப்பாய் வந்தால்
உண்பார்; உணவு மண்ணாய் விடாது.
சொல்வதைக் கேள்'என்று சொல்லவே மங்கை
'சரிதான் என்று சாப்பிட் டிருந்தாள்.
காலம் போகக் கதைகள் நடந்தன.
முருகி வரலாறு முடிந்ததும் குப்பு
மாமியார் கதையை வளர்த்தினாள். பிறகு
மூவரும் தனித்தனி மூன்று பாயில்
தலையணை யிட்டுத் தலையைச் சாய்த்தனர்.
அப்போது தெருப்புறம் அதிக மெதுவாய்
'என்னடி முருகி' என்ற ஒருகுரல்
கேட்டது. முருகி கேட்டதும் எழுந்துபோய்
'ஏனிந் நேரம்' என்று வரவேற்று
வீட்டில் அழைத்து வெற்றிலை தந்தாள்.
இருவரு மாக ஒரேபாய் தன்னில்
உட்கார்ந் தார்கள்! உற்றுப் பார்த்த
சுப்பம் மாஉளம் துண்டாய் உடைந்தது!
சிங்கன் இரவில் இங்கு வந்ததேன்?
முருகியும் அவனும் அருகில் நெருங்கி
உரையாடு கின்றனர். உறவும் உண்டோ?
என்று பலவா றெண்ணி இருக்கையில்
முருகிக்குச் சிங்கன் முத்த மிட்டான்.
குப்பும் கதவினைத் தொப்பென்று சாத்திச்
சூழ நடந்து சுடர்விளக் கவித்தாள்.
'மேல்என் னென்ன விளையுமோ? கண்ணிலாள்
போல்இவ் விருளில் புரளு கின்றேன்;
சுதரிசன் சிங்கின் துடுக்குக் கைகள்
பதறிஎன் மீது பாய்ந்திடக் கூடுமோ?'
என்று நினைத்தாள்; இடையில் கத்தியை
இன்னொரு தரம்பார்த்துப் பின்னும் மறைத்தாள்.
கரைகண்டு கண்டு காட்டாற்றில் மூழ்கும்
சேய்போல் நங்கை திடுக்கிடும் நினைப்பில்
ஆழ்வதும் மீள்வது மாக இருந்தாள்.
கருவிழி உறங்கா திரவைக் கழிக்கக்
கருதினாள்; ஆயினும் களையுண் டானதால்
இருட்சேற் றுக்குள் இருந்த மணிவிழியைக்
கரும்பாம் பாம்துயில் கவர
இரவு போயிற்றே! இரவு போயிற்றே!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:04 am

15. மகிழ்ந்திரு

தென்பாங்கு -- கண்ணிகள்

நீரடை பாசியில்
தாமரை பூத்தது போலே - நல்ல
நீலத் திரைகடல் மேலே - பெருங்
காரிருள் நீக்கக்
கதிர்வந்து பூத்ததி னாலே

வாரிச் சுருட்டி
எழுந்தனன் சிங்கனப் போது - உடை
மாற்றினன் தன்னுடல் மீது - அவன்
நேரில் அழைத்தனன்
வந்துநின் றாளந்த மாது.

'ஆயிரம் பேரொடு
திம்மனும் அங்கிருக் கின்றான் - கவாத்
தாரம்பம் செய்திருக் கின்றான் - அவன்
ஞாயிறு செல்லத்திங்
கட்கிழ மைவரு கின்றான்.

போயிருந் தாலென்ன
அச்சம் உனக்கென்ன இங்கு? - ந
பொன்போலப் பாயில்உ றங்கு - இரு
தாய்மாரும் உண்டு
துயர்செய்வ தெந்தக்கு ரங்கு?

ஆவிஉன் மேல்வைத்த
திம்ம னிடத்திலும் சென்று - நான்
ஆறுதல் கூறுவேன் இன்று - நீ
தேவை இருப்பதைக்
கேள்இங்குத் தங்குதல் நன்று.

கோவை படர்ந்திட்ட
கொய்யாப் பழந்தரும் தோட்டம் - இங்குக்
கூவும் பறவையின் கூட்டம் - மிக
நாவிற்றுப் போகும்
இனிக்கும் பழச்சுளை ஊட்டம்.

தெற்குப் புறத்தினில்
ஓடி உலாவிடும் மானும் - அங்குச்
செந்தினை மாவோடு தேனும் - உண்டு
சற்றே ஒழிந்திடில்
செல்லுவ துண்டங்கு நானும்!

சிற்றோடை நீரைச்
சிறுத்தையின் குட்டி குடிக்கும் - அதைச்
செந்நாய் தொடர்ந்து கடிக்கும் - அங்கே
உற்ற வரிப்புலி<
நாயின் கழுத்தை ஒடிக்கும்.

மாங்குயில் கூவிஇவ்
வண்ணத் தமிழ்மொழி விற்கும் - இந்த
வையமெலாம் அதைக் கற்கும் - களி
தாங்காது தோகை
விரித்தாடி மாமயில் நிற்கும்.

பாங்கிலோர் காட்டில்
படர்கொடி ஊஞ்சலில் மந்தி - ஒரு
பாறையின் உச்சியை உந்தி - உயர்
மூங்கில் கடுவனை
முத்தமிடும் அன்பு சிந்தி

கைவைத்த தாவில்
பறித்திட லாகும்ப லாக்காய் - நீ
கால்வைத்த தாவில்க ளாக்காய் - வெறும்
பொய்யல்ல நீஇதைப்
போயறி வாய்காலப் போக்காய்.

ஐவிரல் கூட்டி
இசைத்திடும் யாழ்கண்ட துண்டு - யாழின்
அப்பனன் றோவரி வண்டு? - மக்கள்
உய்யும் படிக்கல்ல
வோஇவை செய்தன தொண்டு?

'போய்வரு வேன்'என்று
சொல்லிச் சுதரிசன் போனான் - அந்தப்
பூவையின் மேல்மைய லானான் - அவன்
வாய்மட்டும் நல்லது;
உள்ளம் நினைத்திடில் ஈனன்.

தூய்மொழி யாளும்
சுதரிச னைநம்ப வில்லை - என்று
தொலையுமோ இப்பெருந் தொல்லை - என்று
வாய்மொழி இன்றி
இருந்தனள் அக்கொடி முல்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:04 am

16. சுதரிசன் மயக்கம்

அறுசீர் விருத்தம்

சுதரிசன் தொலைந்தான்! அன்னோன்
கூத்திமார் இரண்டு பேரும்
'எதற்கும்நீ அஞ்ச வேண்டாம்'
என்றுபக் கத்தில் குந்தி
சுதரிசன் புகழை யெல்லாம்
சொல்லிடத் தொடங்கி னார்கள்.
புதுத்தொல்லை யதனில் மங்கை
புழுவாகத் துடிக்க லானாள்.

அழகுள்ள ஆளாம் எங்கும்
அவன்போலே அகப்ப டாராம்!
ஒழுக்கமுள் ளவனாம் சொத்தும்
ஒருநூரா யிரமும் உண்டாம்!
ஒழுகுமாம் காதில் தேனாய்
ஒருபாட்டுப் பாடி விட்டால்!
எழுதினால் ஓவி யத்தை
எல்லாரும் மயங்கு வாராம்!

நடுப்பகல் உணவா யிற்று;
நங்கைக்குக் கதை யுரைக்க
எடுத்தனர் பேச்சை. நங்கை
'தப்புவ தெவ்வா' றென்று
துடித்தனள். 'எனக்குத் தூக்கம்
வருகின்ற' தென்று கூறிப்
படுத்தனள்; கண்கள் மூடிப்
பகற்போதைக் கழித்து விட்டாள்.

'பகலெலாம் கணவ ருக்குப்
பலபல வேலை யுண்டு.
முகங்காட்டிப் போவ தற்கும்
முடியாதா இரவில்?' என்று
நகம்பார்த்துத் தலைகு னிந்து
நங்கையாள் நலிவாள்! அந்த
அகம்கெட்ட மாதர் வந்தே
'சாப்பிட அழைக்க லானார்.'

உணவுண்டாள் நங்கை அங்கே
ஒருபுறம் உட்கார்ந் திட்டாள்!
முணுமுணு என்று பேசி
இருந்திட்ட இருமா தர்கள்
அணுகினார் நங்கை யண்டை
அதனையும் பொறுத் திருந்தாள்!
தணல்நிகர் சுதரி சன்சிங்க்
தலைகண்டாள்; தளர்வு கொண்டாள்.

எதிரினில் சுதரி சன்சிங்க்
உட்கார்ந்தான்; 'என்ன சேதி?
புதுமலர் முகமேன் வாடிப்
போனது? சுப்பம் மாசொல்!
குதித்தாடும் பெண்நீ சோர்ந்து
குந்திக்கொண் டிருக்கின் றாயே?
அதைஉரை' என்றான். நங்கை
'அவர்எங்கே?' என்று கேட்டாள்.

'திம்மனைச் சிங்கம் வந்தா
விழுங்கிடும்? அச்சம் நீக்கிச்
செம்மையாய் இருப்பாய்' என்றான்.
இதற்குள்ளே தெருவை நோக்கி
அம்மங்கை முருகி சென்றாள்
அவள்பின்னே குப்பும் போனாள்.
'உம்'என்றாள்; திகைத்தாள் நங்கை!
சுதரிசன் உளம் மகிழ்ந்தே,

'நங்கையே இதனைக் கேட்பாய்
நானுன்றன் கணவ னுக்கே
இங்குநல் லுத்தி யோகம்
ஏற்பாடு செய்து தந்தேன்;
பொங்கிடும் என்னா சைக்குப்
புகலிடம் நீதான்; என்னைச்
செங்கையால் தொடு; மறுத்தால்
செத்துப்போ வதுமெய்' என்றான்.

'நான்எதிர் பார்த்த வண்ணம்
நடந்தது; நங்கை மாரும்
யான்இங்குத் தனித்தி ருக்க
ஏற்பாடு செய்து போனார்;
ஏன்என்று கேட்பா ரில்லை
இருக்கட்டும்' என்று வஞ்சி
தேன்ஒத்த மொழியால் அந்தத்
தீயன்பால் கூறு கின்றாள்:

'கொண்டவர்க் குத்தி யோகம்
கோட்டையில் வாங்கித் தந்தீர்;
அண்டமே புரண்டிட் டாலும்
அதனையான் மறக்க மாட்டேன்.
அண்டையில் வந்துட் கார்ந்தீர்
அடுக்காத நினைவு கொண்டீர்;
வண்கையால் 'தொடு' மறுத்தால்
சாவது மெய்யே என்றீர்.

உலகில்நான் விரும்பும் பண்டம்
ஒன்றுதான்; அந்தச் செம்மல்
தலைமிசை ஆணை யிட்டுச்
சாற்றுவேன்: எனது கற்பு
நிலைகெட்ட பின்னர் இந்த
நீணில வாழ்வை வேண்டேன்.
மலையும்தூ ளாகும் நல்ல
மானிகள் உளந் துடித்தால்!

கொண்டஎண் ணத்தை மாற்றிக்
கொள்ளுவீர்; நரியும் யானைக்
கண்டத்தை விரும்பும்; கைக்கு
வராவிடில் மறந்து வாழும்!
கண்டஒவ் வொன்றும் நெஞ்சைக்
கவர்ந்திடும், அந்நெஞ் சத்தைக்
கொண்டொரு நிலையிற் சேர்ப்பார்
குறைவிலா அறிவு வாய்ந்தோர்.'

என்றனள். சுதரி சன்சிங்க்
ஏதொன்றும் சொல்லா னாகி
'நன்றுநீ சொன்னாய் பெண்ணே!
நான்உன்றன் உளம்சோ தித்தேன்;
இன்றிங்கு நடந்த வற்றைத்
திம்மன்பால் இயம்ப வேண்டாம்.'
என்றனன் கெஞ்சி னான்;'போய்
வருகின்றேன்' என்றெ ழுந்தான்.

இருளினில் நடந்து போனான்
எரிமலைப் பெருமூச் சோடு!
இருளினை உளமாய்க் கொண்ட
இருமாதர் உள்ளே வந்தார்.
அருளினால் கூறு கின்றாள்
சுப்பம்மா அம்மா தர்க்கே:
'ஒருபோதும் இனிநீர் இந்த
உயர்விலாச் செயல்செய் யாதீர்.

ஆயிரம் வந்திட் டாலும்
அடாதது செயாதீர்; ஆவி
போயினும் தீயார் நட்பிற்
பொருந்துதல் வேண்டாம்; உம்மைத்
தாயினும் நல்லார் என்று
தான்நினைத் திருந்தேன். தாழ்வை
வாயினால் சொல்லிக் காட்ட
வரவில்லை என்னே என்னே!

கண்ணகி என்னும் இந்தத்
தமிழ்நாட்டின் கண்ணே போன்ற
பெண்கதை கேட்டி ருப்பீர்;
அப்பெண்ணைப் பெற்ற நாட்டுப்
பெண்களே நீரும்! அந்தப்
பெரும்பண்பே உமக்கும் வேண்டும்;
எண்ணமேன் இவ்வா றானீர்?
திருந்துங்கள்' என்று சொன்னாள்.

'யாம்என்ன செய்து விட்டோம்?
எம்மிடம் நீதான் என்ன
தீமையைக் கண்டு விட்டாய்?
தெரிவிப்பாய்; தெருவிற் சென்றோம்
சாமிக்குத் தெரியும் எங்கள்
தன்மை.நீ அறிய மாட்டாய்!
ஏமுரு கியேஇ தென்ன
வெட்கக்கே டெ'ன்றாள் குப்பு.

'சிங்க்இங்கே இருந்தார்; நாங்கள்
தெருவிற்குச் சென்றால் என்ன?
பங்கமோ இதுதான்? மேலும்
பயந்துவிட் டாயா? சிங்கு
தங்கமா யிற்றே! சிங்கு
தறுதலை யல்ல பெண்ணே.
எங்களை இகழ்ந்த தென்ன?'
என்றனள் முருகி என்பாள்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:05 am

17. சுப்பம்மா நிலை

அறுசீர் விருத்தம்

விடிந்தது சுப்பம் மாவும்
விழித்தனள்; திம்ம னில்லை.
வடிந்தது கண்ணீர்! மெய்யும்
வாடிற்று! நுண்ணி டைதான்
ஒடிந்தது! தேனி தழ்தான்
உலர்ந்தது! தூளாய் உள்ளம்
இடிந்தது! 'செய்வ தென்ன'
என்றெண்ணி இருந்தாள் மங்கை!

காலையில் உணவை உண்டார்
அனைவரும்! முருகி சொன்னாள்:
'மாலையில் வருவோம் நாங்கள்
மைத்துனர் வீடு சென்று
மூலையில் தூங்கி டாதே;
முன்கத வைமூ டிக்கொள்;
வேலையைப் பார்; சமைத்துக்
கொள்'என்றாள்; வௌிச்சென் றார்கள்.

தனிமையில் இருந்தாள் அந்தத்
தனிமயில்! கணவன் என்ற
இனிமையில் தோய்வாள் அந்த
எழில்மயில்! மீண்டும் தீயன்
நனிமையற் பெருக்கால் என்ன
நடத்திட இருக்கின் றானோ?
இனிமெய்யாய் இங்கி ருத்தல்
சரியல்ல!' எனநி னைத்தாள்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:05 am

18. திம்மன் நிலை

எண்சீர் விருத்தம்

கோட்டையிலே அடைப்பட்டுக் கிடந்தான் வீட்டில்
கோழிஅடை பட்டதுபோல் அந்தத் திம்மன்!
ஓட்டையிலே ஒழுகுவது போலே நீரை
ஒழுகவிடும் இருவிழியும், உடைந்த நெஞ்சும்,
வாட்டமுறும் முகமுமாய் இருந்தான். என்றன்
மனைவிநிலை எப்படியோ? இங்கு வைத்து
வாட்டுகின்றார்! கவாத்தெங்கே? வீணில் தூங்க
வலுக்கட்டா யம்செய்யும் வகைதான் என்னே!

ஏதோஓர் சூழ்ச்சிஇதில் இருக்கக் கூடும்.
இல்லைஎனில் எனக்கிந்த நிலைஎ தற்கு?
மாதுதனை எனைவிட்டுப் பிரிப்ப தற்கே
வம்பன்இது செய்தானோ? சுப்பம் மாவும்
தீதேதோ கண்டதால் அன்றோ, அன்று
செப்பினாள் 'அவனைநான் நம்பேன்' என்று!
'தாதுசிங்கைக் கேட்கின்றேன்; வீடு செல்லத்
தக்கவழி கூறுவான்' என்று சென்றே

'எதற்கிங்கே நான்பத்தொன் பதுநாள் தங்கி
இருப்ப'தென்று வினவினான். அந்தச் சிப்பாய்
'அதற்கென்ன காரணமோ அறியேன்; அந்த
அதிகாரி வைத்ததுதான் சட்ட' மென்றான்.
மிதக்கின்ற பாய்க்கப்பல் மூழ்கிப் போக
வெறுங் கட்டை அதுவுங்கை விட்டதைப் போல்
கொதிக்கின்ற மனத்தோடு கோட்டைக் குள்ளே
குந்தினான் கண்ணீரைச் சிந்தி னானே!

கோட்டைக்குள் இவ்விருளாம் கரிய பாம்பு
கொடியவால் காட்டியெனை அஞ்ச வைத்தால்
காட்டைநிகர் சேரியிலே அந்தப் பாம்பு
கண்விழித்தால் சுப்பம்மா நிலைஎன் ஆகும்?
'தோட்டமுண்டு; வயலுண்டு; போக வேண்டாம்
தொல்லை'என்று சொன்னாளே கேட்டே னாநான்?
கேட்டேனா கிளிக்குச்சொல் வதுபோல் சொன்னாள்
கெட்டேனே' என்றலறிக் கிடந்தான் திம்மன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:06 am

19. சுதரிசன் நிலை

தென்பாங்கு - கண்ணிகள்

மாவடு வொத்த விழிக்கும் - அவள்
மாம்பழம் போன்ற மொழிக்கும்
காவடிப் பிச்சைஎன் றேனே - அந்தக்
கள்ளி மறுத்துவிட் டாளே!
தூவடி என்உடல் மீதில் - உன்
தூயதோர் கைம்மலர் தன்னை
ஆவி நிலைத்திடும் என்றேன் - அவள்
அட்டி உரைத்துவிட் டாளே!

என்று சுதரிசன் எண்ணி - எண்ணி
ஏங்கி இருந்தனன்! பின்பு
ஒன்று நினைத்தனன் சூழ்ச்சி - மிக
ஊக்கம் மிகுந்தது நெஞ்சில்!
பின்புறக் கோட்டையை நாடிச் - சில
பேச்சுக்கள் பேசிட ஓடித்
தன்துணை வர்களைக் கண்டான் - கண்டு
தன்கருத் துக்களைச் சொன்னான்.

கோட்டையில் வேறொரு பக்கம் - வந்து
குப்பு, முருகியைக் கண்டான்.
நாட்டம் அனைத்தும் உரைத்தான் - அவர்
நன்றென்று கூறி நடந்தார்.
'பாட்டு நிகர் மொழியாளை - என்
பக்கம் திருப்பிடச் செய்வேன்
காட்டுவேன் வேடிக்கை' என்றே - சிங்கன்
கையினை வீசி நடந்தான்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Nov 08, 2010 2:06 am

20. இங்கே செல்லாது

தென்பாங்கு - கண்ணிகள்

தூங்கும் குயிலினை நோக்கி ஓராயிரம்
துப்பாக்கி சூழ்ந்தது போல் - துயர்
தாங்கருங் கிள்ளையை நோக்கிக் கவண்பலர்
தாங்கி நடந்தது போல்
ஏங்கும் விளக்கினை நோக்கிப் பெரும்புயல்
ஏற்பட்டு வந்தது போல் - நொடி
ஆங்கிருக் கும்சுப்பம் மாவின் குடிசையை
ஆட்கள் பலர் சூழ்ந்தார்!

தீய முருகியுங் குப்பும் இருந்தனர்
சேயிழை பக்கத் திலே - வீட்டு
வாயிற் கதவினைத் தட்டிய தட்டோடு
வந்தது பேச்சுக் குரல்!
'ஆயிரம் ஆயிரம் ஆக வராகன்
அடித்துக்கொண் டோடி வந்தீர் - நீர்
தூயவர் போலிந்த வீட்டில் இருந்திடும்
சூழ்ச்சி தெரியா தோ?'

என்று வௌியினில் கேட்ட குரலினை
இவ்விரு மாதர் களும் - உயிர்
கொன்று பொருள்களைக் கொள்ளை யடிப்போர்
குரலிது வென்றுரைத் தார்.
புன்மை நடையுள்ள அவ்விரு மாதரும்
பொத்தென வேஎழுந் தார் - அவர்
சின்ன விளக்கை அவித்துக் கதவைத்
திறந்தனர் ஓடிவிட் டார்!

மங்கை இருந்தனள் வீட்டினுள் ளேஇருள்
வாய்ந்த இடத்தி னிலே - பின்னர்
அங்கும் இங்கும்பல ஆட்களின் கூச்சல்
அலைவந்து மோது கையில்
மங்கையின் மேல்ஒரு கைவந்து பட்டது.
*வாள்பட்ட தால் விட்டது. - அட
இங்குச்செல் லாதென்று மங்கைசொன் னாள்!வந்த
இழிஞர்கள் பேச வில்லை.

* சுப்பம்மாமேல் ஒரு கைபட்டது. உடனே சுப்பம்மாவின்
வாள் அக்கையின்மேல் பட்டவுடன் அக்கை எடுபட்டது.

மேலும் நடப்பது யாதென்று மங்கை
விழிப்புடன் காத்திருந் தாள் - அந்த
ஓலைக் குடிசைக்குத் தீயிட்ட தாக
உணர்ந்து நெஞ்சந் துடித்தாள்!
மூலைக்கு மூலை வழிபார்த் தாள்புகை
மொய்த்த இருட் டினிலே - அவள்
ஏலுமட் டும்இரு தாழைத் திறந்திட
என்னென்ன வோ புரிந்தாள்.

கூரை எரிந்தது! கொள்ளிகள் வீழ்ந்தன!
கூட்டத்தி லே ஒருவன் - 'சொல்
ஆரங்கே' என்றனன்; தாழைத் திறந்தனன்;
'அன்னமே' என்றழைத் தான்.
கூரை எரிந்தது! கொள்ளி எரிந்தது
கொல்புகை நீங்கிய தால் - 'முன்
ஆரங்கே' என்றவன் சுதரிசன் என்பதை
அன்னம் அறிந்தவ ளாய்

கத்தியை நீட்டினாள்; 'தீஎன்னை வாட்டினும்
கையைத் தொடாதே யடா! - இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
மூச்சுப் பெரிதில்லை காண்!'
குத்தும் குறிப்பும் கொதித்திடும் பார்வையும்
கொண்டிது கூறி நின்றாள் - வந்த
தொத்தல் பறந்தது! சூழ இருந்தவர்
கூடத் தொலைந்து விட்டார்.





[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக