புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:27 pm

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
14 Posts - 48%
mohamed nizamudeen
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
4 Posts - 14%
heezulia
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
3 Posts - 10%
வேல்முருகன் காசி
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
3 Posts - 10%
T.N.Balasubramanian
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
2 Posts - 7%
Raji@123
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
2 Posts - 7%
kavithasankar
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
19 Posts - 6%
Rathinavelu
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
8 Posts - 2%
prajai
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
4 Posts - 1%
mruthun
சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_m10சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களப் பேரினவாதம் என்ற பேரிருளை நீக்க வந்த பேரொளி தலைவர் பிரபாகரன்: மா. க. ஈழவேந்தன்


   
   
3tamil78
3tamil78
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 03/11/2010

Post3tamil78 Mon Nov 08, 2010 5:54 pm



அகவை 56 அடைந்துள்ள அவரை தமிழ் கூறும் நல்லுலகம் வாழ்த்துகிறது.

எம் அடிமை விலங்கை அறுத்தெறிந்து சிங்களப் பேரினவாதத்திலிருந்து எம்மை விடுவிக்க தோன்றியவர் தான் எங்கள் மேதகு தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள். அவரது 56வது அகவையை தமிழீழம் மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகமும் தமக்குள் அன்புப் போட்டி நடாத்தி விழா எடுத்து மகிழ இருக்கின்றனர் வருகிற நவம்பர் 26இல்.

தலைவர் இருக்கிறாரா? இல்லையா? எங்கள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறாரா? அல்லது சென்ற ஆண்டு நடந்த போரில் வீரச்சாவு அடைந்தாரா? என்ற கேள்வியும் கருத்து மோதலும் உலகெங்கும் உள்ள அரசியல் வட்டாரங்களில் வாதத்துக்குரிய பொருளாக இருக்கிறது. அவரை சாகடித்து விட்டோம் என்று வெறி கொண்ட சிங்கள அரசு கொக்கரிக்கிறது. எம்மை அழிக்கும் சிங்கள அரசின் வெறி போராட்டத்திற்கு துணை நின்ற இந்திய அரசிற்கு பக்கபலமாக நின்று துரோகி என்று வரலாற்றில் அழிக்க முடியாத பட்டத்தை பெற்றுள்ள கலைஞர் கருணாநிதியும் தமக்குள் உள்ளுர மகிழலாம். தம் பூகோள நலனை மட்டும் கருதிச் செயற்படும் உலக வல்லரசுகள் கூட புலிகளையும் புலிகளின் தலைவனையும் அழித்ததால் பயங்கரவாத்ததை ஒழித்துகட்டி விட்டோம் என்று எக்காளம் விட்டுச் சிரிக்கலாம். ஆனால், எதனையும் அளந்து பேசுகின்ற பொறுப்பு வாய்ந்த பழ. நெடுமாறன் அவர்கள், இந்திய அரங்கில் தனி முத்திரை பதித்துள்ள வையம் ஏற்றும் வை. கோ அவர்கள், செந்தமிழ்ச் சீமானும் தலைவரும் பொட்டம்மானும் சூசையும் இருக்க வேண்டிய இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்றும் உரிய நேரத்தில் வெளி வருவார்கள் என்றும் மீண்டும் மீண்டும் கூறி வருவதை எளிதிற் புறக்கணிக்க முடியாது. அத்தோடு 22-மார்ச் 2010 அன்று வெளிவந்த தமிழ் வின் இணையத்தில் சிங்கள அரசிற்கு மீண்டும் ஓர் அதிர்ச்சி வைத்தியத்தை விடுதலைப் புலித் தலைவர்கள் கொடுத்துள்ளனர். நாங்கள் நல்ல உடல் நலத்துடன் பத்திரமாக இருக்கிறோம் என்று பிரபாகரனும் பொட்டம்மானும் தமிழக அரசியற் தலைவர்கள் உட்பட 5 பேருக்கு எழுதிய கடிதம் சிறீலங்கா அரசிற்கும் இந்திய அரசிற்கும் அதிர்ச்சி அளித்தபடியே இருக்கிறது.

நாடு கடந்த தமிழீழ அரசு ஆற்ற வேண்டிய நற்பணி ஆயுதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் வல்லமை விடுதலைப் புலிகளிடம் இருப்பதாக அனைத்துலகப் போர் வல்லுனர்கள் ஏற்கனவே கூறியுள்ளனர். எதிர் கால விடுதலைப் போராட்டம் தொடக்கத்தில் அறவழி போராட்டம், பின்பு ஆயுதப் போராட்டமாக உருவெடுத்தது. பின்பு காலத்தின் கருத்தோட்டத்திற்கேற்ப நாடுகடந்த தமிழீழ அரசை உருவாக்கி உலகின் கவனத்தை ஈர்க்கும்

முறையில் தமிழர்களின் போராட்டம் வேறு வடிவம் எடுத்துள்ளது. தலைவர் குறிப்பிட்டதிற்கமைய காலத்திற்குக் காலம் போராட்ட வடிவங்கள் வௌவேறு வடிவம் எடுக்கும் ஆனால், குறிக்கோள் - இலட்சியம் என்றும் மாற்றமுற மாட்டாது என்பதற்கமைய எங்கள் போராட்ட வழிமுறைகள் மாற்றத்திற்குள்ளாகியபடி இருக்கின்றன.

இக்கட்டுரையாளரை பொறுத்த வரை எம் தலைவரும் பொடட்மான், சூசை போன்ற தலைவர்களும் ஏதோ ஒரு நட்புறவு நாட்டில் தஞ்சம் புகுந்து தம் பணியைத் தொடர்கின்றனர். விடுதலை வரலாற்றில் இத்தகைய வழிமுறைகள் புதிதல்ல. எம்மைப் பொறுத்த வரையில் எம் தலைவரும் அவர் குழுவும் இறைவன் போல் வெளிப்படையாக தெரியாத நிலையில் தோன்றாத் துணையாக எங்கேயோ இயங்கிக் கொண்டு இருக்கிறார் என்பது தான் எம் கருக்து. ஏற்பவர் ஏற்கலாம், ஏற்க மறுப்பவர்கள் தம் காரணங்களைக் காட்டலாம். ஆனால், எம் தலைவர் தொடர்ச்சியாக சொல்லி வந்ததற்கமைய எம் விடுதலைப் பணி தொடர்ந்தே ஆக வேண்டும்.

தலைவர் பற்றி கலாநிதி குலமோகன் எங்கள் தலைவனுக்கு அகவை 50 என்ற தலைப்பில் திருமதி கலாநிதி குலமோகன் அவர்கள் அமெரிக்காவில் இருந்து எழுதிய ஒரு கட்டுரையில் ?எங்கள் கரிகாலனுக்கு அகவை 50. நாங்கள் வரம் பெற்ற 50 ஆண்டுகளின் நிறைவினால் தங்கத்தமிழீழத் தவம் தமிழனாய் வந்து தலை எடுத்த நன்னாள். வங்கக் கடல் அருகில் வந்து இறங்கிய வரலாறு அரை நூற்றாண்டைத் தனதாக்கி அடி எடுத்து வைக்கும் அழகு நாள். பல நூண்றாண்டு அரசியற் வெறுமையைப் போக்கி தமிழர்களுக்கு தனிப் பெருந்தலைமை வந்தத் தங்கத் திருநாள்.

இந்த 50 ஆண்டுகளையும் அள்ளி எடுத்து வந்து ஆராய்ந்து பாருங்கள். அருமை அழகு காட்டும், தகமை தலைதூக்கும், புதுமை புன்னகைக்கும், பெருமை புகழ் கூட்டும், உரிமை உயிர் பூட்டும், திறமை திறல் சேர்க்கும். இந்தத் தன்னிகர் அற்ற தலைவனின் தலைமை தனித்து நின்று தலைமைக்கு அணியாகும். அத்தனையும் அழகு, அழகு, மிகு மிகு அழகு. "உள்ளுவதெல்லாம் உயர்வு உள்ளல்" என்ற உயர்ந்த வாக்கு, இந்த பெருந்தகையின் உயிரானது. எங்கள் அனைவரதும் அன்பிற்குரிய தம்பியின் பள்ளிப் பருவமான 16 வயது, எமக்கு பால பாடமானது. அதன் பின் ஒவ்வொரு அகவையின் நகர்வும் யுத்த காண்டத்தில் போரியல் புதுமைகளாய் மலர்ந்து மனம் கமிழ்ந்தது" என்று திருமதி கலாநிதி குலமோகன் தலைவனின் 50 ஆண்டில் கூறிய செய்தி அவரின் 56வது அகவைக்கும் முற்றும் பொருந்தும்.

தலைவர் பற்றி கலையரசி கருணாகரன் மேற்குறித்த பெண்மணியை அன்புப் போட்டியில் வெல்லும் முறையில் நியூ யோக்கில் இருந்து கலையரசி கருணாகரன் பின்வருமாறு தலைவரை வாழ்த்துகிறார்.

"அலை வந்து ஆற்பறிக்கும் தமிழீழ மண்ணின் வல்லை மகள் வளர்த்தெடுத்த வரலாற்று நாயகன்

விலையிட முடியா விடுதலை வேள்விக்கு வித்திட்டு புயலெனவே புறப்பட்டு போர் செய்த புலியே நீ வாழி!" என்றும்

"வேலுப்பிள்ளை பெற்றெடுத்த வீர மைந்தன் காலம் எமக்களித்த கரிகாலச் சோழன் ஞாலம் போற்றும் நம் இனத்தின் தனித் தலைவன் நல்லவன், தமிழர் நலம் பேண வந்தவன் நீ வாழி!" என்று கலையரசி கருணாகரன் வாழ்த்தும் பாமாலைக்கு நாம் வழிமொழி கூறுகிறோம். காரணம், தலைவனின் பிறப்பை அவர் படம் எடுத்துக் காட்டும் பாங்கு எம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது.

தலைவர் பற்றி அடேல் பாலசிங்கம் தமிழ்ப் பெண்மணிகள் இருவர் எம் தலைவன் பிரபாகரனை ஏற்ற முறையில் எடுத்துரைக்கையில் நாம் என்ன சலித்தவரோ என்று வெள்ளைக்காரப் பெண் மதிவுரையாளர் பாலசிங்கத்தின் மனைவி அடேல் பாலசிங்கம் பிரபாகரனுடைய தோற்றத்தை, ஒளிபடைத்தக் கண்களை, பின்வருமாறு வர்ணிக்கிறார். அவர் வர்ணித்தது ஆங்கிலத்தில், நாம் தருவது தமிழில். "பிரபாகரனுடைய இளம் முகம் தெளிவானதாக, ஒளிமையமாக இருக்கும். அவருடைய அகன்ற கண் வழிகளில் ஊடுருவும் பார்வை உள்ளே ஊடறுத்து எம் உயிர் நிலையை உற்றுப் பார்ப்பது போன்ற உணர்வே மற்றவர்களுக்கு ஏற்படுத்தும். அவருடைய கண்களின் ஆழமே அவரது மனதையும் சிந்தனையையும் எதிரொலித்துக் காட்டும். மற்றவருடைய முகத்தை நுணுக்கமாக அளவிடுவது ஒரு பொதுவான நிகழ்வு. மற்றவருடைய ஒவ்வொரு சொல்லையும் அவரது பார்வை ஊடறுக்கும் பொழுது உரையாடலில் எவ்விதப் பொய்கலோ அன்றி ஏமாற்றுகளோ நுழைவது என்பது இயலாத செயல்.? அடேல் பாலசிங்கம் வர்ணிக்கும் பிரபாகரனின் ஊடுருவும் கண்களைப் பற்றி பலர் வியந்து போற்றுவது நாம் அறிந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

நக்கீரன் நவில்வது திறனாய்வாளராக விளங்குகிற நக்கீரன் அவர்கள் பிரபாகரனை பற்றி ?குனிந்த தமிழனின் தலையை நிமிர்த்தினாய்! கூனிய தமிழனின் முதுகெழும்பை நேராக்கினாய்! கும்பிட்ட கைகளில் குண்டுகளை கொடுத்தாய்! பறைத்தமிழனை புலித்தமிழனாக்கினாய்! என்று கூறும் கூற்று எம் சிந்தனைக்கு விருந்து.

அனித்தா பிரதாப் அறைந்தவை எம் தலைவன் பிரபாகரனை அடிக்கடி நேர் காணல் கண்டவர் அனித்தா பிரதாப் அவர்கள். அவர் தனது செங்குருதி படிந்த தீவு "ஐளடயனெ ழக டீடழழன" என்ற நூலில் "அடுத்து பிரபாகரன் பற்றி எனக்கு ஏற்பட்ட ஆழமான கருத்துப் பதிவு என்னவென்றால் அது தமிழீழ இலட்சியத்திற்கான அவரது தடுமாற்றம் இல்லா ஈடுபாடு. அந்த ஈடுபாடு ஆழமானது, பேரத்திற்கு அப்பாற்பட்டது. நான் அவரை பல முறை நேர் காணல் கண்டிருக்கிறேன். காலப் போக்கில் அவரிடம் பல மாற்றங்கள் ஏற்பட்டன. அவருக்கு வயது போய்விட்டது, சற்று பருத்து விட்டார், மீசையை எடுத்து விட்டார். ஆனால் அவரது இலட்சியத்திற்கான ஈடுபாட்டை பொறுத்தளவில் எந்த மாற்றமோ மெத்தனப் போக்கோ அல்லது நீர்ப்பத்தன்மையோ இல்லை" என்று கூறும் அனித்தா பிரதாப் அவர்கள் மேலும் பிரபாகரனை பின்வருமாறு படம் பிடித்துக் காட்டுகிறார்.

"தாக்கப்பட்டால் பிரபாகரன் வெஞ்சினம் பூண்டு விடுகிறார். புலி இலட்சிணையை சும்மா அவர் தேர்ந்தெடுக்கவில்லை. பிரபாகரனது கரவு, பாய்தல், சூழ்ச்சி, தந்திரம், வழி மறித்துத் தாக்குதல் இவையெல்லாம் புலியினால் தூண்டப் பட்ட உணர்வுகள் ஆகும். புலியைப் போல அவரது வீரம் பச்சையானது. பெருமையுடைத்தும் ஆகும். சிறிது காலத்திற்கு முந்தி நான் அவரிடம் ஒரு வேள்வி கேட்டேன். "கடந்த 2 சகாப்த காலமாக ஒரு கொரிலா வீரனாக இருந்து வருகிறீர்கள். இந்தக் கால இடைவெளிக்குள் நீங்கள் கற்றுக் கொண்ட பாடம் என்ன?" அவர் அளித்த பதில் "எவன் துணிகிறானோ அவர் வெல்கிறான் (ர்ந றாழ னயசநள றiளெ)" என்பது தான். ஆறு மாதம் கழித்து சஞ்சிகையில் எனது நேர்காணல் வெளியிடபட்ட பொழுது அதற்கு "டைம்" இதழ் கொடுத்த தலைப்பு அதுதான்.

மேற்குறித்த மேற்கோள்கள் பிரபாகரனுடைய உள்ள உறுதிக்கும் தொலை நோக்கு சிந்தனைக்கும் தலை சிறந்த எடுத்தக்காட்டு.

தலைவரின் 2008 மாவீரர் உரை 2008 ஆம் ஆண்டு கார்த்திகை 27ஆம் நாள் அவருடைய இறுதி மாவீரர் உரையாக, வரலாற்றில் இடம்பெறும் உரையாக அமைகிறது. ?எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காக தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புகளை எமது மண்ணிலே எமது மண்ணிற்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள்.?

"மனித துயரங்கள் எல்லாம் அடங்காத அருவெறுப்பான ஆசைகளில் இருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையில் இருந்தே தோற்றம் அளிக்கின்றன. ஆசையின் பிடியில் இருந்து மீட்சி பெறாத வரை சோகத்தின் சுமையில் இருந்தும் விடுபெற முடியாது. மண்ணாசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையில் இறங்கிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகின்றது. இராணுவ வெற்றி பற்றிய கனவுகளில் வாழுகிறது. சிங்களத்தின் இந்த கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒரு நாள் நனவாகும். இது திண்ணம்.?

தலைவரின் கூற்று பற்றி கட்டுரையாளரின் கருத்து இக்கட்டுரையை நாம் வரைகின்ற வேளையில் மண்ணாசை பிடித்த சிங்கள அரசு அம்பாறையை அபகரித்து, திருமலையை விழுங்கி ஏப்பமிட்டு ? திருமலையை எரிமலை ஆக்கி, மட்டக்களப்பு மண்ணையும் தனதாக்கி நிறைவடையாத நிலையில் கேடினை நீக்கும் கேதீஸ்வரனுக்கும் கேடுகளை விழைவிக்கின்ற முறையில் புதை பொருள் ஆய்வு என்ற பெயரில் தமிழன் வரலாற்றை புதைக்க முனைகின்ற இவ்வரசு, மடுமாதாவையும் தனதாக்கிக் கொண்டு, முல்லைத்தீவை முற்றுகையிட்டு, மணலாற்றை வெலிஓயா என்ற சிங்களப் பெயர் சூட்டி அபகரிக்க முயல்கிறது சிங்கள அரசு. இத்தோடு வெறியடங்காத சிங்கள அரசு வணங்கா வன்னி மண்ணையும் தன் வலைக்குள் சிக்க வைத்து, வன்னி மண்ணை ஆண்ட பண்டாரவன்னியனின் சிலையை சிதறடித்து, முறிகண்டியை முற்றுகையிட்டு, நயினாதீவு அம்மனையும் அப்புறப்படுத்தும் முயற்சியல் ஈடுபட்டுள்ள சிங்கள அரசு சங்கமித்தா குடி புகுந்த மண் என்று கூறி மாதகலையும் தனதாக்க முயல்கிறது. கொடியோடு, முடியோடு, சீரோடு, சிறப்போடு சங்கிலி மன்னன் ஆண்ட நல்லூரையும் கைப்பற்றும் நோக்குடன் நல்லூர் முருகன் கோயிலும் முற்றுகையிடப் படுகிறது. கிட்டுவின்

பூங்கா சின்னாபின்னம் ஆக்கப்பட்டுள்ளது, திலீபனின் சிலை சுக்கு நூறு ஆக்கப்பட்டுள்ளது. இந்த வெறியாட்டத்தைத் தொடர்ந்து கொழும்புத்துறையில் உள்ள மணியம் தோட்டத்தில் அயிரக்கணக்கான சிங்களவரை குடியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. யாழ்ப்பாண தொடர் வண்டி நிலையத்தை சுற்றியுள்ளப் பகுதி சிங்களவர் புகுந்து அட்டகாசம் செய்கின்றனர். தந்தை செல்வாவின் சிலை சீரழிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண நூலகத்திற்குள்ளும் புகுந்து அங்குள்ள நூல்களை தூக்கி எறிந்த வெறியாட்டத்தையும் நாம் அறிந்துள்ளோம். 1981இல் உலகில் தலை சிறந்த யாழ் நூலகம் எறிக்கப் பட்டதை நாம் மறக்கவில்லை. மீண்டும் இந்நூலகத்தை எரியூட்டும் நிகழ்ச்சி உருவாகின் அது எமக்கு வியப்பில்லை. தலைவர் குறிப்பிடும் சிங்களவரின் மண்ணாசைக்கு இவை தலை சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

தலைவரின் 2008ஆம் ஆண்டு மாவீரர் உரை முழுவதையும் நாம் ஆய்வு செய்ய விரும்பினும் செய்தி இதழ்களில் ஏற்படும் இட நெருக்கடி காரணமாக நாம் விரிக்க விரும்பவில்லை. எனினும் ?பூமிப் பந்திலே ஈழத்தமிழினம் சிறிய தேசமாக இருக்கின்ற பொழுதும் நாம் பெரும் வலிமை வாய்ந்த ஒரு சக்தி மிக்க இனம். தன்னிகர் அற்ற ஒரு தனித்துவமான இனம். தனித்துவமான மொழியையும் பண்பாட்டு வாழ்வையும் வரலாற்றையும் கொண்ட ஒரு பெருமை மிக்க இனம். இப்படியான எமது அருமை, பெருமைகளை எல்லாம் அழித்து தமிழீழத் தேசத்திலே தமிழரின் இறையாண்மை தகர்த்து விட்டு இராணுவ பலத்தால் சிங்களம் தமது இiறாண்மையை திணித்து விட துடிக்கிறது. தமிழரின் சுதந்திர இயக்கம் என்ற வகையில் நாம் எமது மண்ணில் சிங்கள ஆக்கிரமிப்புக்கோ சிங்கள ஆதிக்கத்திற்கோ என்றுமே இடம் அளிக்கப் போவதில்லை என்று தலைவர் கூறும் கூற்றை நாம் நினைவு கொள்வோமாக.

எத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர் கொண்டாலும் எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில், காலம் விட்ட கட்டளைப்படி, சிங்கள அந்நிய ஆக்கிமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.

இந்த வரலாற்று சூழமைவில் தமிழர் உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் எந்தக் கோடியில் வளர்ந்தாலும் எமது தேச விடுதலைக்கு உறுதியாக குரல் எழுப்பி, எமது சுதந்திர இயக்கத்தின் கரங்களை பலப்படுத்துமாறு அன்போடு வேண்டுகின்றேன். அத்துடன் தங்களது தாராள உதவிகளை வழங்கி தொடர்ந்தும் பங்களிக்குமாறும் உரிமையோடும் கேட்டுக் கொள்கின்றேன். இந்த சந்தர்ப்பத்தில் தேச விடுதலைப் பணியை தீவிரமாக முன்னெடுத்து வருகின்ற புலம்பெயர்ந்து வாழும் எமது இளைய சமுதாயத்தினருக்கும் எனது அன்பையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சத்திய இலட்சியத்தீயில் தம்மை அழித்து சரித்தரமாகிவிட்ட எமது மாவீரர் வழியில் சென்று நாம் எமது இலட்சியத்தை அடைவோம் என உறுதி எடுத்துக் கொள்வோமாக."

தலைவரின் உரை அனைத்து முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் புலம்பெயர்ந்த மக்களுக்கு, குறிப்பாக இளம் தமிழ் சமுதாயத்திற்கு விடுக்கின்ற வேண்டுகோள் எம் சிந்தனையைத் தூண்ட வேண்டிய குறிப்பாகும்.

எம் விடுதலை போராட்டத்தில் நாம் எவரும் பார்வையாளராய் இருக்க முடியாது. அனைவரும் பங்காளிகளாக மாற வேண்டும். செய்யத் தவறின் வரலாறு எம்மீது வசை பாடும். எம் வழித் தோன்றள்களே எம்மீது

பழிசுமத்துவார்கள். இதற்கு நாம் இடம் கொடுக்க முடியுமா என்பது தான் நாம் எம்மை கேட்க வேண்டியக் கேள்வியாகும்.

தலைவர் பற்றி நூற்றாண்டு கண்ட நவரத்தினம் நவிந்தவை இவ்விடத்தில் இறுதியாக நூற்றாண்டு நிறைவைக் கண்டுள்ள பிரபாகரன் உள்ளத்தை ஆட்கொண்ட தமிழரசுக் கட்சியின் மூளை என்று வர்ணிக்கப்பட்ட திரு. வ. நவரத்தினம் அவர்கள் குயடட யனெ சுளைந ழக வுயஅடை யேவழைn ? தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் என்ற நூலில் பக்கம் 389இல் எங்கள் தலைவன் பிரபாகரனை பற்றி கூறியுள்ள சொற்கள் பொருள் பொதிந்தவை ஆகும் - பொன் எழுத்தில் பொறிக்கப்பட வேண்டியவை ஆகும். இதோ அவர் எடுத்து இயம்பியவை.

"எல்லாப் பக்கத்திலும் இருந்து தாக்குதல் நடாத்தி தமிழ் மக்களின் நம்பிக்கைகளையும் அரசியற் வேட்கைகளையும் சாகடிக்கிற முயற்சிகள் நடைபெறுகின்ற வேளையில் ஈழத்தமிழ் மக்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட தலைவனாக வேலுப்பிள்ளை பிரபாகரன் தென்னாசியா அகன்ற பூகோள அரசியலில் வகிக்கும் நிலை மிகப் பெரியது. தமிழ் இனத்தை முடித்துக்கட்டும் முயற்சி நடைபெறுகிற வேளையில் எம்மை பாதுகாக்கும் அரணாக அவர் விளங்குகின்றார்.

எம்மினம் மிகப் பேரழிவை எதிர் நோக்குகின்ற வேளையில் நாம் மாறுபட்டு, வேறுபட்டு தன்னலத்திற்கு அடிமையாக வாழ்ந்து எம் வழித்தோன்றல்கள் எம்மீது வசைபாட இடம் கொடாது அவர் தலைமையில் விளங்குகின்ற அணிக்கு பக்க துணையாக இருக்க வேண்டும். எம் வழித்தோன்றல்கள் தன்மானத்தோடும் பெருமையோடும் ஒரு நாட்டைக் கட்டிக் காக்கும் முறையில் விடுதலை பெற்ற இறமையுள்ள தமிழீழத்தை முந்தையோர் எமக்கு தந்துள்ளனர் எனப் பெருமை கொள்ளும் வகையில் எம் சிந்தனையும் செயற்பாடும் அமைய வேண்டும். உலகில் எந்தப் பாகத்திலும் இன்னலுக்கு ஆளாகுகின்ற எம் மக்களுக்காக நாம் தோற்றுவிக்கும் தமிழீழம் துணையாக அமைய வேண்டும்."

தமிழன் வாழாத நாடில்லை. ஆனால், தமிழனுக்கு ஒரு நாடு இல்லை. இதை மாற்றி அமைக்கும் வகையில் தமிழனுக்கு ஒரு நாடு உண்டு, இது தமிழீழ நாடு. அது உலக வரலாற்றை மாற்றும். இதுவே எம் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இட்ட கட்டளையை நிறைவேற்றும் பணியாகும். இதுவே மறைந்தும் மறையாத தமிழ்ச்செல்வனுக்கும் மற்றைய மாவீரர்களுக்கும் நாம் செய்கின்ற கைம்மாறு ஆகும்.

மா. க. ஈழவேந்தன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
நாடுகடந்த தமிழீழ அரசின்
கனடாப் பேராளர்

http://www.seithy.com/breifArticle.php?newsID=35375&category=Article&language=தமிழ்


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக