புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
82 Posts - 44%
ayyasamy ram
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
62 Posts - 34%
i6appar
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
11 Posts - 6%
Anthony raj
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
6 Posts - 3%
Dr.S.Soundarapandian
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
4 Posts - 2%
Guna.D
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
1 Post - 1%
prajai
திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_m10திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்


   
   
Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Nov 06, 2010 4:59 pm

திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள்:-



رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

1. எங்கள் இறைவா! எங்களுக்கு இவ்வுலகில் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும் காத்தருள்வாயாக! (2:201)          


             

رَبَّنَا لاَ تُؤَاخِذْنَا إِنْ نَسِيْنَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلاَ تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلاَ تُحَمِّلْنَا مَا لاَ طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلاَنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

2. எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ, அல்லது தவறிழைத்து விட்டாலோ எங்களை தண்டித்துவிடாதே! எங்கள் இறைவனே! எங்களுக்கு முன் சென்றோர் மீது சிரமத்தை சுமத்திய போன்று எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டதை எங்கள் மீது சுமத்திவிடாதே! எங்கள் பாவங்களை பொறுத்து எங்களை மன்னிப்பாயாக! எங்களுக்கு கருணை புரிவாயாக! நீயே எங்கள் அதிபதி! (உன்னை) மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக! (2:286)


                              

رَبَّنَا لاَ تُزِغْ قُلُوْبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ

3. எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் உள்ள‌ங்களை தடம் புர‌ளச் செய்துவிடாதே! இன்னும் எங்களுக்கு உன் அருளை வழங்குவாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளனாக இருக்கிறாய்! (3:8)


            

رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ

4. எங்கள் இறைவனே! நிச்சயமாக நாங்கள் (உன் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே எங்கள் பாவங்களை மன்னித்தருள்வாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (3:16)


             

رَبِّ هَبْ لِيْ مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ

5. என் இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக ஒரு தூய்மையான‌ சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவிமடுப்போனாக இருக்கின்றாய். (3:38)


             

 رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوْبَنَا وَإِسْرَافَنَا فِيْ أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِيْنَ

6. எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்புமீறிச் செய்தவற்றையும் மன்னித்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!(உன்னை)மறுக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக. (3:147)


             

رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِيْنَ

7. எங்கள் இறைவனே! நாங்கள் (இவ்வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது என்று) சாட்சி சொல்வோருடன் எங்களையும் பதிவு செய்வாயாக! (5:83)


             

رَبَّنَا ظَلَمْنَا أَنْفُسَنَا وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُوْنَنَّ مِنَ الْخَاسِرِيْنَ

8. எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து அருள் செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் (7:23)


             



عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلْقَوْمِ الظَّالِمِيْنَ وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِيْن    

9. நாங்கள் அல்லாஹ்வையே சார்ந்துவிட்டோம். எங்கள் இறைவா! அநீதி இழைக்கும் கூட்டத்தின் கொடுமைக்கு எங்களை ஆளாக்கிவிடாதே! உனது அருளால் (உன்னை) மறுக்கும் கூட்டத்திலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக! (10:85,86)


            

رَبِّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أَسْأَلَكَ مَا لَيْسَ لِيْ بِهِ عِلْمٌ وَإِلاَّ تَغْفِرْ لِيْ وَتَرْحَمْنِيْ أَكُنْ مِنَ الْخَاسِرِيْن 

10. என் இறைவனே! எனக்கு எதைப் பற்றி அறிவில்லையோ அதை உன்னிடத்திலே கேட்பதை விட்டும் உன்னிடம் நான் பாதுகாப்பு தேடுகிறேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோரில் நான் ஆகிவிடுவேன்.
 (11:47)
              



رَبِّ اجْعَلْنِيْ مُقِيْمَ الصَّلاَةِ وَمِنْ ذُرِّيَّتِيْ رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

11. என் இறைவனே! என்னையும், என்னுடைய சந்ததிகளையும் தொழுகையை நிலை நிறுத்துவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவனே! என்னுடைய பிரார்த்தனையையும் ஏற்றுக் கொள்வாயாக! (14:40)


              

رَبَّنَا اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِلْمُؤْمِنِيْنَ يَوْمَ يَقُوْمُ الْحِسَابُ

 12. எங்கள் இறைவனே! என்னையும், என் பெற்றோர்களையும், நம்பிக்கைக் கொண்டோரையும் விசாரணை நடைபெறும்(மறுமை)நாளில் மன்னிப்பாயாக!  (14:41)

                                       

رَبَّنَا آتِنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً وَهَيِّئْ لَنَا مِنْ أَمْرِنَا رَشَدًا

13.  எங்கள் இறைவனே! நீ உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்கு சீராக்கித் தருவாயாக! (18:10)
              

رَبِّ زِدْنِيْ عِلْمًا

14. என் இறைவா! கல்வியறிவை எனக்கு அதிகப்படுத்துவாயாக! (20:114)
              

رَبِّ لاَ تَذَرْنِيْ فَرْدًا وَأَنْتَ خَيْرُ الْوَارِثِيْنَ

 15. என் இறைவனே! நீ என்னை (சந்ததியில்லாமல்) தனியாளாக விட்டுவிடாதே! நீயே வாரிசுரிமை கொள்வோரில் மிக்க மேலானவன்(21:89)          




                         

رَبِّ أَعُوْذُ بِكَ مِنْ هَمَزَاتِ الشَّيَاطِيْنِ

16. என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களை விட்டும் உன்னிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்(23:97). 
                         

رَبَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

17. எங்கள் இறைவனே! நாங்கள் (உன் மீது) நம்பிக்கைக் கொண்டோம். எங்கள் குற்றங்களை மன்னித்து அருள்புரிவாயாக! கருணையாளர்களிலெல்லாம் நீயே மிகச் சிறந்தவன்(23:109).                                         


   

رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ

18. என் இறைவனே! மன்னித்து அருள்புரிவாயாக! அருள்புரிவோரில் மிக்க மேலானவன் நீயே!(23:118)                                     


   

رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا

19. எங்கள் இறைவனே! எங்களைவிட்டும் நரகத்தின் வேதனையைத் தடுப்பாயாக! நிச்சயமாக அதன் வேதனை நிரந்தரமானதாகும்.(25:65) 
            

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ إِمَامًا

20. எங்கள் இறைவனே! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், எங்கள் சந்ததியரிடமிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியை அளிப்பாயாக! இன்னும் (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்கியருள்வாயாக! (25:74)

                                                                              


 رَبِّ هَبْ لِيْ حُكْمًا وَأَلْحِقْنِيْ بِالصَّالِحِيْنَ وَاجْعَلْ لِيْ لِسَانَ صِدْقٍ فِي الْآخِرِيْنَ 

21. என் இறைவனே! எனக்கு அதிகாரத்தை அளிப்பாயாக. மேலும் நல்லவர்களுடன் என்னைச் சேர்த்து வைப்பாயாக! இன்னும், பின்வரும் மக்களிடம் எனக்கு நற்பெயரை ஏற்படுத்துவாயாக! (26:83,84)
          

وَاجْعَلْنِيْ مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيْمِ

22. மேலும் இன்பம் நிறைந்த சுவனபதியின் வாரிசுகளில் என்னையும் ஆக்கிவைப்பாயாக! (26:85)





Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009
http://islamintamil.forumakers.com/

PostHasan1 Sat Nov 06, 2010 5:01 pm

وَلاَ تُخْزِنِيْ يَوْمَ يُبْعَثُوْنَ

23. இன்னும் மனிதர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாளில் என்னை இழிவு படுத்திவிடாதே! (26:87)                
                                                                                                                                                               

رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَدْخِلْنِيْ بِرَحْمَتِكَ فِيْ عِبَادِكَ الصَّالِحِيْنَ

23. என் இறைவா! என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்துள்ள உன் அருட்கொடைகளுக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையக்கூடிய நல்லறங்க‌ள் செய்யவும் எனக்கு உதவி செய்வாயாக! இன்னும் உன் அருளால் உன்னுடைய நல்லடியார்களில் என்னையும் சேர்த்தருள்வாயாக! (27:19)                

  

رَبِّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ فَاغْفِرْ لِيْ




24. என் இறைவா! நிச்சயமாக என‌க்கே நான் அநியாயம் செய்துவிட்டேன்; என‌வே என்னை மன்னிப்பாயாக! (28:16)              

  

رَبِّ هَبْ لِيْ مِنَ الصَّالِحِيْنَ

25. என் இறைவனே! நல்லவர்களிலிருந்து எனக்கு வாரிசை தந்தருள்வாயாக.  (37:100)
               


رَبِّ أَوْزِعْنِيْ أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِيْ أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِيْ فِيْ ذُرِّيَّتِيْ إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّيْ مِنَ الْمُسْلِمِيْنَ

26. என் இறைவனே! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய நல்லவற்றை நான் செய்யவும் எனக்கு வாய்ப்பளிப்பாயாக! எனக்காக‌ என்னுடைய சந்ததிகளை சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்னிடம் மன்னிப்பு கேட்கிறேன். இன்னும் நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவனாக இருக்கின்றேன். (46:15)
               


رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِيْنَ سَبَقُوْنَا بِالْإِيْمَانِ وَلاَ تَجْعَلْ فِيْ قُلُوْبِنَا غِلاًّ لِلَّذِيْنَ آمَنُوْا رَبَّنَا إِنَّكَ رَءُوْفٌ رَحِيْمٌ

27. எங்கள் இறைவா! எங்களையும், நம்பிக்கையுடன் எங்களை முந்திவிட்ட எங்களுடைய சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! நம்பிக்கைக் கொண்டவர்கள் மீது எங்களுடைய உள்ள‌ங்களில் வெறுப்பை ஏற்படுத்திவிடாதே! எங்கள் இறைவா! நிச்சயமாக நீயே மிக்க இரக்கமுடையவன்; நிகரற்ற அன்புடையோன். (59:10)



                                                                                                

رَبَّنَا لاَ تَجْعَلْنَا فِتْنَةً لِلَّذِيْنَ كَفَرُوْا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنْتَ الْعَزِيْزُ الْحَكِيْمُ

28. எங்கள் இறைவனே! உன்னை மறுப்போருக்கு சோதனையாக எங்களை ஆக்கிவிடாதே!  எங்களுக்கு மன்னிப்பு அருள்வாயாக, எங்கள் இறைவா! நிச்சயமாக நீ (யாவரையும்) மிகைத்தவன்; ஞானம் மிக்கவன். (60:5)
              


رَبَّنَا أَتْمِمْ لَنَا نُوْرَنَا وَاغْفِرْ لَنَا إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

29. எங்கள் இறைவனே! எங்களுடைய ஒளியை எங்களுக்கு முழுமையாக்கி வைப்பாயாக! எங்களை மன்னிப்பாயாக! நிச்சயமாக நீ எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றலுடையவன். (66:8)
               

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا

30. என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாக நுழைந்தவர்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ ஆண்களுக்கும், நம்பிக்கைக் கொண்ட‌ பெண்களுக்கும் மன்னிப்பளிப்பாயாக! மேலும், இந்த அநீதி இழைத்தோருக்கு அழிவைத் தவிர வேறு எதையும் அதிகமாக்காதே! (71:28)
              



நன்றி : http://payanikkumpaathai.blogspot.com/



அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat Nov 06, 2010 5:05 pm

رَبِّ اغْفِرْ لِيْ وَلِوَالِدَيَّ وَلِمَنْ دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنَاتِ وَلاَ تَزِدِ الظَّالِمِيْنَ إِلاَّ تَبَارًا
அனைத்து துவாக்களும் மிக முக்கியமான துஆக்கள் நன்றி
ஜஸாக்கல்லாஹுஹைறா



திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Nov 06, 2010 5:07 pm

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பா மேலும் தொடரட்டும்



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

திருக்குர்ஆனில் உள்ள‌ பிரார்த்தனைகள் Logo12
avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Sat Nov 06, 2010 8:22 pm

thank u Mr.Hasan....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக