புதிய பதிவுகள்
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Today at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Today at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Today at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Today at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Today at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Today at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Today at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Today at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_c10ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_m10ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_c10 
30 Posts - 88%
heezulia
ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_c10ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_m10ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_c10 
2 Posts - 6%
வேல்முருகன் காசி
ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_c10ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_m10ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Poll_c10 
2 Posts - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்?


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Nov 06, 2010 10:01 am

தீபாவளியை சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தினருடன் கொண்டாடலாம் என்ற ஏக்கத்துடன் புறப்பட்ட பயணிகளிடம் தனியார் பேருந்துகள் (ஆம்னி ப‌ஸ்) நிறுவனங்கள் அடிக்கும் கொள்ளை இதுவரை காணாத மோசடியாய் இருக்கிறது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் இப்படி பயணிகளிடம் கொள்ளை அடிப்பதை ஆம்னி நிறுவனங்கள் நிறுத்த வேண்டும் என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும், வழக்கம்போல் கட்டணக் கொள்ளை தொடர்கிறது. இந்தக் கட்டணக் கொள்ளை எந்த அளவை எட்டியுள்ளது என்று பார்த்தால் அதிர்ச்சியாய் இருக்கிறது. மற்ற நாட்களி்ல வசூலிப்பதை விட இரண்டு மடங்கு முதல் நான்கைந்து மடங்கு வரை வசூலிக்கின்றனர். ஆனால் அரசோ காவல்துறையினரோ இந்த பகல், இரவுக் கொள்ளையை கண்டுகொள்வதில்லை.

பண்டிகை, விடுமுறை என்றாலே சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல முற்படுபவர்கள், இரயில், பேரு‌ந்துகளில் இடம் கிடைக்காமல் திண்டாடுவது தொடர்கதையாகி வருகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகைகளுக்கு இந்த நிலை மேலும் மோசமாகிவிடும். இரயில்களில் மூன்று மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருந்தும், சில நொடிகளில் டிக்கெட்டுகள் அனைத்தும் தீர்ந்துவிடும். சிறப்பு இரயில்கள் அறிமுகம் செய்தாலும் இதே நிலைதான்.

அரசு பேரு‌ந்துகளிலும் டிக்கெட்டுகள் வேகமாக தீர்ந்து விடுவதால், தனியார் ஆம்னி பேரு‌ந்துகளையே நம்பும் நிலைக்கு பயணிகள் தள்ளப்படுகின்றனர். இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் பயணச் சீட்டு முகவர்களும், தனியார் பேரு‌ந்து நிறுவனங்களும் டிக்கெட் விலையை பன்மடங்கு உயர்த்தி கொள்ளை லாபம் பார்க்கின்றனர்.

பண்டிகை காலங்களில் ரயில் டிக்கெட்டுகளை மொத்தமாக முன்பதிவு செய்து வைத்துக்கொள்ளும் முகவர்கள், அவற்றை இரு மடங்கு விலைக்கு விற்பனை செய்து வந்தனர். ஆனால், இம்முறை சென்னையிலிருந்து ஈரோடு செல்வதற்கான இரண்டாம் வகுப்பு ரயில் டிக்கெட்டுக்கு ரூ. 500 முதல் ரூ. 600 வரை வசூலிக்கின்றனர்.

ஆம்னி பேருந்துகளில் மிக மோசம். சென்னையிலிருந்து ஈரோடு, திருச்சி செல்லும் ஆம்னி பேரு‌ந்துகளில் டிக்கெட் விலையை இரண்டு மடஙகாக்கியுள்ளனர். இதேபோல் சென்னையிலிருந்து மதுரை செல்லும் பெரும்பாலான பேரு‌ந்துகளில் டிக்கெட் விலை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

''அனைத்து ஆம்னி பேரு‌ந்துகளிலும் 20 தினங்களுக்கு முன்பே டிக்கெட்டுகள் அனைத்தும் முடிந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்துக்கு நேரடியாக வருபவர்களிடம், இதுபோன்று மறைமுக கொள்ளையில் இவர்கள் இறங்குகின்றனர். சாதாரண நாட்களில் சென்னை - மதுரை ஆம்னி ஏ.சி. பேரு‌ந்துகளில் ரூ. 450ம், சாதாரண ஆம்னி பேரு‌ந்துகளில் ரூ. 350ம் வசூலிக்கப்படும். ஆனால், நே‌ற்‌றிரவு சென்னை - மதுரை ஏ.சி. பேரு‌ந்‌தி‌ல் 800 ரூபா‌ய் கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதற்கான ரசீதையும் அவர்கள் கொடுத்துள்ளனர். சாதாரண பேரு‌ந்துக‌ளி‌ல் 500 ரூபா‌ய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆம்னி பேரு‌ந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகர கமிஷனர் ராஜேந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் காவ‌ல்துறை‌யின‌ர் முன்னிலையிலேயே பேரம் நடைபெறுகிறது'' எ‌ன சென்னையிலிருந்து மதுரைக்கு தனியார் ஆம்னி பேரு‌ந்‌தி‌ல் பயணம் செய்த த‌மிழரசு என்ற பய‌ணி ஆதர‌ங்க‌த்துட‌ன் கூறு‌‌கிறா‌ர்.

ஆ‌ம்‌னி பேரு‌‌ந்துக‌ளி‌ல் ‌விமான‌த்‌தி‌ற்கு இணையாக க‌ட்டண‌‌ம் வசூ‌‌லி‌க்க‌ப்படு‌கிறது. இதனா‌ல் ஏழை, நடு‌த்தர ம‌க்க‌ள் அரசு பேரு‌ந்துகளை ந‌ம்‌பி செ‌ன்னை கோய‌ம்பேடு பேரு‌ந்து ‌நிலைய‌த்‌தி‌ல் வ‌ந்தா‌ல் பேரு‌ந்து ‌கிடை‌க்காம‌ல் த‌வி‌த்து வரு‌‌கிறா‌ர்க‌ள். வெ‌ளியூ‌ர்களு‌க்கு அரசு பேரு‌ந்துக‌ள் ‌மிகவு‌ம் குறைவாக இய‌க்க‌ப்படுவதா‌ல் மு‌ண்டியடி‌ப்பவ‌ர்க‌ள் இட‌ம்‌பிடி‌த்து புற‌ப்ப‌ட்டு செ‌ல்‌கிறா‌ர்க‌ள். ஆனா‌ல் மனை‌வி, குழ‌ந்தைகளுட‌ன் வ‌ந்தவ‌ர்க‌ள் இட‌ம் ‌கிடை‌க்கா‌ம‌ல் பல ம‌ணி நேர‌ம் த‌வி‌க்கு‌ம் ‌நிலை உருவா‌கியு‌ள்ளது.

இடஒது‌க்‌கீடு கோ‌ரி போராடி வரு‌ம் மக‌ளிரு‌க்கு வெ‌ளியூ‌ர் பேரு‌ந்துக‌‌ளி‌ல் இட‌ங்க‌ள் ‌கிடை‌க்காம‌ல் அவ‌ர்‌க‌ள் ப‌‌ரித‌‌வி‌க்‌கி‌ன்றன‌ர். கூடுதலாக பேரு‌ந்துகளை இய‌க்க த‌மிழக போ‌க்குவர‌த்‌துறை நடவடி‌க்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்பது பய‌ணிக‌ளி‌‌ன் கோ‌ரி‌க்கையாகு‌ம்.

‌வி‌டி‌ய ‌விடிய பேரு‌ந்து‌க்காக கா‌த்‌தி‌க்கு‌ம் இவ‌ர்க‌ள் இ‌ந்தா‌‌ண்டு ‌‌தீபாவ‌ளியை குடு‌ம்ப‌த்துட‌ன் சொ‌ந்த ஊ‌ரி‌ல் கொ‌ண்டாட முடியுமா? அ‌ல்லது கோய‌ம்பேடு பேரு‌ந்து ‌நிலைய‌த்த‌ி‌ல் முடி‌ந்து ‌விடுமா? எ‌ன்பது பேரு‌ந்து வச‌திக‌ளை பொறு‌த்தே அமையு‌ம்!

எ‌ப்போதுடா ப‌ண்டிகை வரு‌ம் பண‌த்தை வா‌ரி சுரு‌ட்டல‌ா‌ம் எ‌ன்ற ‌நிலை‌யி‌ல் இரு‌‌க்கு‌ம் இ‌ப்படி‌‌ப்ப‌ட்ட ஆ‌ம்‌னி பேரு‌ந்து ‌நிறுவன‌‌ங்க‌ள் ‌மீது அரசு நடவடி‌க்கை எடு‌க்க தய‌ங்‌குவது ஏ‌ன்? ‌விமான க‌ட்டண‌த்தை போ‌‌ல் டி‌க்கெ‌ட்டுகளை ‌வி‌ற்பனை செ‌ய்யு‌ம் ஆ‌ம்‌னி பேரு‌ந்துக‌ளை ம‌க்க‌ள் புற‌க்க‌ணி‌த்தா‌ல் ம‌‌ட்டுமே இத‌ற்கு ‌தீ‌ர்வு ‌கிடை‌க்கு‌ம்!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Nov 06, 2010 2:05 pm

அது பரவாயில்லை சார் மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் அரசு பேருந்துக்கு முன் பதிவு செய்ய சென்ற பொது சென்னைக்கு இடம் இல்லை முன் பதிவு முடிந்ததாக கூறினார் சரி என்று திரும்பியபோது அங்கே அருகே நின்றவர் நான் எடுத்து தருகிறேன் சூப்பர் டீலக்ஸ் 500 என்றார் அந்த அலுவர்கள் முன்னிலையில் 180 பயணசீட்டு 500 அரசு நிர்வாகத்திலேயே கொள்ளை நடக்கிறது

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 06, 2010 2:51 pm

அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை




ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Uஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Dஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Aஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Yஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Aஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Sஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Uஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Dஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? Hஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? A
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Nov 06, 2010 2:52 pm

உதயசுதா wrote:அது எப்படி சார் அரசாங்கம் இதை கவனத்தில் எடுக்கும்.
ஆம்னி பஸ் வச்சு இருக்கறவங்க இவங்களோட கட்சி காரங்க.
அப்படி கட்சி காரனா இல்லாம இருந்தா கிடைக்க வேண்டிய தொகை இவங்களுக்கு கிடைச்சுடுது.அப்புறம் எதுக்கு இதை பத்தி அவங்க கவலை படனும்.மக்களை பத்தி அரசுக்கு என்ன கவலை, அவங்க வீட்டு கஜானாவை பத்திதான் கவலை
ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 678642 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 154550 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 678642 ஆ‌ம்‌னி பேரு‌ந்து க‌ட்டண கொ‌ள்ளை: அரசு க‌‌ண்டு கொ‌ள்ளாதது ஏ‌ன்? 154550

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக