புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 4:06 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Sun Jun 09, 2024 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
21 Posts - 64%
heezulia
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
11 Posts - 33%
Geethmuru
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
148 Posts - 55%
heezulia
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
94 Posts - 35%
T.N.Balasubramanian
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
9 Posts - 3%
prajai
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
2 Posts - 1%
Srinivasan23
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10விரல் நுனியில் ஆபத்து...! Poll_m10விரல் நுனியில் ஆபத்து...! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரல் நுனியில் ஆபத்து...!


   
   
avatar
Guest
Guest

PostGuest Thu Nov 04, 2010 1:37 am

இந்தியாவில் 2001-ம் ஆண்டு செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை சுமார் 50 லட்சம். ஆனால் கடந்த ஆகஸ்ட் 2010 புள்ளிவிவரத்தின்படி 67 கோடி இணைப்புகள். இந்த அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துவிட்டதால், செல்போன் திருட்டு, செல்போன் பறிப்பு போன்ற குற்றங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.

சென்னை மாநகர காவல்நிலையங்களில் ஒரு மாதத்தில் சராசரியாக செல்போன் திருட்டு தொடர்பான புகார்கள் 200-க்கும் அதிகமாகப் பதிவாகின்றன. பெங்களூரில் மாதம் 500 செல்போன் திருட்டு புகார்கள் வருகின்றன. மும்பை ரயில்நிலையங்களில் மட்டுமே 2009-ம் ஆண்டில் 669 செல்போன்கள் திருடு போனதாகப் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய திருட்டுகளில் பாதிக்கும் மேற்பட்டவை காவல்துறையில் பதிவு செய்யப்படுவதே இல்லை. அதையும் மீறிப் பதிவு செய்ய வந்தாலும்கூட, புகாரை விசாரணையின்றிக் கிடப்பில் போட்டுவிடுவதற்கு ஏதுவாக இருக்கும்வகையில், செல்போனை தவறவிட்டுவிட்டேன் (மிஸ்ஸிங்) என்று எழுதிக் கொடுக்கச் சொல்லும் காவல்துறையின் நாகரிக உத்திகளும் உண்டு. அவற்றையும் மீறிப் பதிவாகும் குற்றங்கள்தான் காவல்துறையின் கணக்கில் வருகின்றன. இப்படியாக திருட்டு என்று

பதிவு செய்யப்படும் செல்போன் திருட்டு குற்றங்களில் தேடிக் கண்டுபிடித்து மீட்கப்படும் செல்போன்களின் எண்ணிக்கை 5 சதவீதம் முதல் 10 சதவீதம்வரை மட்டுமே.

திருடுபோன செல்போனை சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.இ.ஐ) மூலமாகக் கண்டறிய முடியும். செயலிழக்கச் செய்ய முடியும் என்றாலும், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க வருவோரிடம் அந்த அடையாள எண் இருப்பதில்லை. செல்போன் வாங்கிய ரசீது இருப்பதில்லை. குறைந்தபட்சமாக, தான் வைத்திருப்பது எந்த மாடல் என்பதும்கூட சிலருக்குத் தெரியாது என்பதுதான் நடைமுறை உண்மை.

இந்த செல்போன்களின் விலை 1,000 முதல் 20,000 ஆயிரம் வரை இருக்கிறது என்பது ஒருபக்கம் இருந்தாலும், இந்த செல்போன்களில் பதிவு செய்துள்ள அந்தரங்க விடியோ பதிவுகளும், அனுப்பி வைத்து சேகரிப்பில் கிடக்கும் குறுந்தகவல்களும், அதில் உள்ள ரகசியப் பரிமாற்றங்கள், தகவல்களும் வேறுபல இழப்புகளுக்கு அதன் உரிமையாளரை ஆளாக்குகின்றன என்பதுதான் வேதனையானது.

நியூயார்க் நகரில் பயன்படுத்தப்பட்டு மறு விற்பனைக்கு வந்த 50 செல்போன்களை ஆய்வு செய்ததில் பாதிக்கும் மேற்பட்டவைகளில் தங்கள் காதல் இணையுடன் அந்தரங்கமாக இருக்கும் படங்களும், கிரெடிட் கார்டு தகவல்களும், வங்கிக் கணக்கு எண் தகவல்களும் அழிக்கப்படாமலேயே சந்தைக்கு வந்திருப்பது தெரியவந்துள்ளது. இதே நிலைமைதான் இந்திய செல்போன் பயன்பாட்டாளர்களுக்கும் உள்ளது.

உலகிலேயே அதிக அளவில் செல்போன் நுகர்வோரைக் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது என்பதும், 67 கோடி இணைப்புகள் இருப்பின், ஏறக்குறைய இதில் பாதி பேர் இரண்டு செல்போன்களைப் பயன்படுத்துவோர் என்பதும் அனைவரும் அறிந்ததுதான். ஒரு செல்போன் எப்போது வேண்டுமானாலும் திருடு போகும் வாய்ப்பு உள்ளது என்பதால் எத்தகைய தகவல்களை மட்டுமே சேகரித்து வைக்க வேண்டும் என்கிற முன்யோசனை குறித்து எந்தவிதமான விழிப்புணர்வும் செல்போனைப் பயன்படுத்துவோரிடம் இல்லை. பலருடைய செல்போன்களில் ஒரு ஜிபி அல்லது இரண்டு ஜிபி அளவுக்குப் படங்கள், தகவல்கள் சேகரிக்கும் வசதிகள் இன்றைய செல்போன்களில் உள்ளன.

திருட்டு செல்போனை வாங்குவோர் இத்தகைய தகவல்களை, அந்தரங்கப் படங்களை வைத்துக் காசாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள். அதன்பிறகு அதை சந்தையில் விலைக்கு கொண்டுவருகிறார்கள்.

பழைய செல்போன்களை விற்பதில் எந்தவிதமான கட்டுப்பாடும் ஒழுங்குமுறையில் இந்தியாவில் இல்லை என்பது இத்தகைய திருட்டை மேலும் ஊக்கப்படுத்துவதாக இருக்கிறது.

ஒரு வாகனத்தை இன்னொருவருக்கு விற்க வேண்டுமானால் அதற்கான ஆர்சி புத்தகத்தில் அந்த பரிமாற்றத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாகக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. ஆனால் செல்போனை ஒருவர் விற்றால் அதன் உரிமையாளர் யார் என்பதே தெரியாமல், அது யாரிடமிருந்து யாருக்கு விற்கப்பட்டது என்ற பதிவு இல்லாமல் விற்பனை நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு திருட்டு செல்போனையும் வெளிப்படையாக, பயமின்றி சந்தையில் இரண்டாம் நபருக்கு விற்க முடிகிறது.

சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.ஐ.இ.) இருக்கும் செல்போன்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டத்தை அமல்படுத்தி, ஒழுங்குபடுத்தியதைப்போல, பயன்படுத்திய செல்போனை இரண்டாம் நபருக்கு விற்பனை செய்வதிலும்கூட ஒரு ஒழுங்குமுறையை, நிபந்தனைகளை அரசு உருவாக்க வேண்டும்.

முன்பெல்லாம் வானொலிப் பெட்டி வைத்திருக்கக்கூட லைசென்ஸ் முறை இருந்தது. அந்த லைசென்ஸ்களும் கட்டணமும் தபால் நிலையங்களில் வசூலிக்கப்பட்டன. இப்போது தபால்துறையின் கடித சேவை குறைந்துவிட்ட நிலையில் செல்போன்களுக்கும் கட்டாய லைசென்ஸ் முறையும், அதன் மூலம் நுகர்வோர் பற்றிய புள்ளிவிவரங்களும் தபால்துறையிடம் ஒப்படைக்கப்பட்டால் என்ன? சமூக விரோதிகள் மற்றும் தீவிரவாதிகளை அடையாளம் காணவும், முறையான செல்போன் பயனாளிகளின் புள்ளிவிவரங்கள் அரசுக்குக் கிடைக்கவும் இது வழிகோலுமே...

செல்போன் பயனாளிகள் பற்றிய தன்விவரக் குறிப்புகள் தனியார் செல்போன் மற்றும் சிம்கார்டு நிறுவனங்களிடம் இருப்பதைவிட அரசின் தபால் துறையிடம் இருப்பதுதான் நல்லது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் குடிமக்களின் தன்விவரக் குறிப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவது தவிர்க்கப்படும்.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 04, 2010 8:49 am

மிக்க நன்றி நண்பா ....
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Nov 04, 2010 11:13 am

உதுமான் மைதீன். wrote:ஒரு வாகனத்தை இன்னொருவருக்கு விற்க வேண்டுமானால் அதற்கான ஆர்சி புத்தகத்தில் அந்த பரிமாற்றத்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையாகக் கட்டணம் செலுத்தி பதிவு செய்யும் நடைமுறை இருக்கிறது. ஆனால் செல்போனை ஒருவர் விற்றால் அதன் உரிமையாளர் யார் என்பதே தெரியாமல், அது யாரிடமிருந்து யாருக்கு விற்கப்பட்டது என்ற பதிவு இல்லாமல் விற்பனை நடைபெறுகிறது. இதனால் எந்தவொரு திருட்டு செல்போனையும் வெளிப்படையாக, பயமின்றி சந்தையில் இரண்டாம் நபருக்கு விற்க முடிகிறது.

சர்வதேச செல்போன் அடையாள எண் (ஐ.எம்.ஐ.இ.) இருக்கும் செல்போன்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற சட்டத்தை அமல்படுத்தி, ஒழுங்குபடுத்தியதைப்போல, பயன்படுத்திய செல்போனை இரண்டாம் நபருக்கு விற்பனை செய்வதிலும்கூட ஒரு ஒழுங்குமுறையை, நிபந்தனைகளை அரசு உருவாக்க வேண்டும்.

விரல் நுனியில் ஆபத்து...! 677196 விரல் நுனியில் ஆபத்து...! 677196 நல்ல கருத்து , செல் ஃபோன்களை விற்கும் போதும் IMEI நம்பரை உரிமையாளர் விபரத்துடன் சரிபார்த்து விற்கவேண்டும் / வாங்க வேண்டும் என்ற நடைமுறைபடுத்தினால்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 11:17 am

நல்ல தகவலுக்கு நன்றி.. உதுமான். ஆனால் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? விரல் நுனியில் ஆபத்து...! 230655 ஓடிக்கொண்டிருக்கும் உலகில்..



விரல் நுனியில் ஆபத்து...! Aவிரல் நுனியில் ஆபத்து...! Aவிரல் நுனியில் ஆபத்து...! Tவிரல் நுனியில் ஆபத்து...! Hவிரல் நுனியில் ஆபத்து...! Iவிரல் நுனியில் ஆபத்து...! Rவிரல் நுனியில் ஆபத்து...! Aவிரல் நுனியில் ஆபத்து...! Empty
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu Nov 04, 2010 11:21 am

Aathira wrote:நல்ல தகவலுக்கு நன்றி.. உதுமான். ஆனால் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? விரல் நுனியில் ஆபத்து...! 230655 ஓடிக்கொண்டிருக்கும் உலகில்..

ஆமா அதுவும் நூறு கிலோமீட்டர் ஸ்பீடில் ஓடும்போது இதெல்லாம் தெரியுமா என்னா????


Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Nov 04, 2010 11:45 am

சாந்தன் wrote:
Aathira wrote:நல்ல தகவலுக்கு நன்றி.. உதுமான். ஆனால் அதற்கெல்லாம் யாருக்கு நேரம் இருக்கிறது? விரல் நுனியில் ஆபத்து...! 230655 ஓடிக்கொண்டிருக்கும் உலகில்..

ஆமா அதுவும் நூறு கிலோமீட்டர் ஸ்பீடில் ஓடும்போது இதெல்லாம் தெரியுமா என்னா????
என்ன இது அதே பக்கம் பந்து வீசுவதா(same side goal).. வழி நடத்துநரே..



விரல் நுனியில் ஆபத்து...! Aவிரல் நுனியில் ஆபத்து...! Aவிரல் நுனியில் ஆபத்து...! Tவிரல் நுனியில் ஆபத்து...! Hவிரல் நுனியில் ஆபத்து...! Iவிரல் நுனியில் ஆபத்து...! Rவிரல் நுனியில் ஆபத்து...! Aவிரல் நுனியில் ஆபத்து...! Empty
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu Nov 04, 2010 2:02 pm

சரியான கருத்து உதுமான் சார் அதுபோல வருடம் ஒருமுறை ஓட்டுனர் உரிமம் மறுபதிவு செய்வது போல் சிம் கார்டுகளுக்கும் முறைபடுத்தினால் குற்றங்கள் குறையும்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Nov 04, 2010 6:17 pm

அரசாங்கமே செல்போன்களை வாங்கி ரேஷன் கடையில் வைத்து விற்கலாம்..

அரசாங்கமே கடைகள் திறந்து நம்பிக்கையானவர்களுக்கு விற்று லாபம் பார்க்கலாம்.

கலர் டிவி வழ்ங்கிய புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் விரிவாக்கம் செய்து இலவச மொபைல் போன்கள் வழங்கலாம்..!

திமுகவினரை ஏஜண்டுகளாக்கி செல்போனை விற்கச்செய்து கட்சிக்காரர்களைச் செழிக்க வைக்கலாம்.

செல்போன் இலாகா ஒன்றை ஒதுக்கி கலைஞர் குடும்பத்தில் எதுக்கும் லாயக்கில்லாத ஒரு உறுப்பினருக்கு மந்திரி பதவி தரலாம்...!

- ஐடியா வேந்தன்






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
Guest
Guest

PostGuest Fri Nov 05, 2010 1:52 am

நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக