புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
81 Posts - 67%
heezulia
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
5 Posts - 4%
sureshyeskay
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
1 Post - 1%
viyasan
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
273 Posts - 45%
heezulia
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
221 Posts - 37%
mohamed nizamudeen
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
18 Posts - 3%
prajai
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
8 Posts - 1%
Guna.D
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதிர்பாராமல்...! Poll_c10எதிர்பாராமல்...! Poll_m10எதிர்பாராமல்...! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பாராமல்...!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 02, 2010 7:52 pm

வாசலருகே வந்து நின்ற காரைக் கண்டதும் துணுக்குற்றார்கள், சிவாவும், உமாவும்.

``சம்பந்தியாகப் போகிறவர்கள் திடுதிப்பென்று வந்து நிற்கிறார்களே...!'' என்று எண்ணினாலும் சுதாரித்துக் கொண்டு வரவேற்றார்கள்."வாங்க...வாங்க''

``இந்தப் பக்கம் ஒரு வேலையா வந்தோம். அப்படியே உங்களையும் எட்டிப்பார்த்து விட்டுப் போகலாமேன்னு...'' சமாளிப்பு பதிலை சரியாகச் சொன்னார்கள், வந்தவர்கள்.

வந்தவர் பெரிய தொழிலதிபர். சங்கரைப் பற்றி கேள்விப்பட்டவர்கள், தம் பெண்ணைத் தர விரும்பி ஒருமுறை நேரிலும் வந்தார்கள். பேசினார்கள். பிடித்தது. இனி கல்யாண தேதியை உறுதிசெய்யவேண்டியதுதான் என்ற நிலையில் இப்போது எதிர்பாராமல் மறுபடி வருகை.

அவர்கள் வந்த நேரம் வீடு அவ்வளவு பளிச்சென்று இல்லை. அப்பாவும், அம்மாவும் சாதாரண உடையில் இருந்தார்கள். மகள் சுனந்தா மட்டும் முகம் கழுவி பளிச்சென்று இருந்தாள். விடுமுறை நாளாதலால் சங்கர் வீட்டிலிருந்தான். ஆனால் கொல்லைப்புறத்தில் செடிகளுடன் மல்லு கட்டிக்கொண்டிருந்தான்.

டிரைவரிடம் பைகளை வாங்கிய சம்பந்தியம்மா அதிலிருந்த இனிப்பு டப்பாவையும், பழங்களையும் உமாவிடம் தந்தாள்.

`இதெல்லாம் என்னத்துக்குங்க...! என்று தயக்கத்துடன் கூறினார் சிவா.

``மாப்பிள்ளை வீட்டுக்கு வர்றோம். வெறுங்கையுடன் வரலாமா? வாங்கிக்குங்கம்மா...'' என்றார் சம்பந்தியம்மா.

அப்போது தான் சங்கரின் நினைவு வந்தது உமாவுக்கு.

``சங்கர்...'' என்று குரல் கொடுத்தாள்.

அம்மாவின் குரலைக் கேட்டவன் வந்திருப்பவர்களை கண்டதும் சட்டை போடாமல் பனியனுடன் இருப்பதை உணர்ந்தான். அவசர கதியில் சட்டையை தாறுமாறாக மாட்டிக்கொண்டு வந்தான். வந்தவர்கள் அவனை மேலும், கீழும் நன்றாகப் பார்த்தார்கள்.

அப்பா சிவா தான் தடுமாறினார்.

`சம்பந்திகள் வந்திருக்கும் போது இவன் கோலம் பொருத்தமாய் இல்லையே...!

உமா காபி போட்டுக்கொண்டிருந்தாள். சங்கர் நின்று கொண்டிருந்தான். அவன் தலை கலைந்திருந்தது. முகத்தில் வியர்வை படர்ந்திருந்தது. சட்டையை ஏனோதானோவென்று போட்டிருந்தான். பொத்தான் மேலும், கீழுமாய் மாட்டியிருந்தது.

ப்ரிட்ஜிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தாள் சுனந்தா. பின்னால் காபித் தட்டை உமா கொண்டு வந்தாள்.

சம்பந்திமார்கள் காபி குடித்ததும் கிளம்பமுற்பட்டார்கள்.

சம்பந்தியம்மாவுக்கு குங்குமம் தந்தாள் உமா.

ஒருமணி நேரம் முன்னாடி சொல்லியிருந்தாக் கூட சுதாரிச்சிருப்போம்...!

மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் தவித்தார்கள் சிவாவும், உமாவும்.

சங்கரும் தன்னைக் கடிந்து கொண்டான்.

`சே.... அவங்க வர்ற நேரம் பார்த்துதான் நான் தோட்டத்துச் செடிகளுக்கு மராமத்து பண்ணிக்கிட்டிருக்கணுமா? சட்டை, கூடப் போடாம...! லீவு நாளாயிருந்தாலும் ஹாய்யா மாப்பிள்ளை ரெஸ்ட் எடுக்கறாரு... நாளைக்கு நம்ம பொண்ணு இங்க வாழ்க்கைப் பட்டா விடுமுறை நாள்ல ஷாப்பிங், ஓட்டல்னு கூட்டிக்கிட்டு போவாரான்னு நெனச்சிருப்பாங்க.... அவசர கதியில சட்டையை மாட்டிக்கிட்டு, பொத்தானைக்கூட ஏத்தியும் தாழ்த்தியும் போட்டுக்கிட்டு வந்திருக்கேன்... என்னதான் சாப்ட்வேர் எஞ்சினியரா கை நெறைய சம்பாதித்தாலும் டீசன்ட்டா இல்லையேன்னு நெனைக்க மாட்டாங்களா? என்ற யோசனையில் சங்கர் மூழ்கினான்.

கேஷூவலா நாம எப்படி இருக்கோம்னு பார்க்க வந்த மாதிரி தெரியுது. அதுக்கு ஒரு சாக்குப் போக்கு.... தகவல் சொல்லிட்டு வந்திருந்தாங்கன்னா எவ்வளவு நீட்டா இருந்திருக்கும்.... என்று ஆதங்கத்தை தனக்குள் கொட்டிக் கொண்டான்.

காரில் போய்க் கொண்டிருந்த நாராயணன் லட்சுமியைப் பார்த்தார்.

"நீ எப்படி பீல் பண்ற லட்சுமி..?''

"நாம சொல்லாம கொள்ளாமப் போனாலும் சுதாரிச்சுக்கிட்டாங்க பாருங்க... ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்காம அனுசரிச்சுக்கிட்டாங்க... அந்தப் பொண்ணு பளிச்சின்னு இருந்தா மூக்கும் முழியுமா. வீடு சாதாரணமாவே சுத்தமா இருக்கு. தின்பண்டம் வச்சிருக்காங்க. சாப்பிடக் குறையில்லை. மாப்பிள்ளை சாப்ட்வேர் வேலை பார்த்தாலும் `ஹார்ட்வேர்' வேலையும் பண்றார். நாம கிளம்புற வரையிலும் நின்னுகிட்டேயிருந்து மரியாதையைக் காட்டி விட்டார். உடல் உழைப்பை ஈடுபாட்டோட செய்யறார். ஆரோக்கிய வாழ்க்கைக்கு உழைப்பு அடித்தளம் இல்லியா?

நம்ம மகன் ரமேஷை எதுக்கு சிங்கப்பூர்ல தெரிஞ்ச கம்பெனியில மெக்கானிக்கா வேலை பார்க்க வச்சிருக்கீங்க? உழைக்கத் தயங்கக் கூடாதுன்னுதானே..... நம்ம வித்யாவுக்கு இந்த இடம்தான் சரிப்படுங்க..... எங்கப்பா எப்படி என்னை உங்களை நம்பிக் கொடுத்தாரோ, அதே மாதிரி இந்த மாப்பிள்ளையை நம்பி வித்யாவைக் கொடுக்கலாம்...

மனைவியை அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார் நாராயணன்.

***
இடைப்பாடி அமுதன்




எதிர்பாராமல்...! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Nov 02, 2010 10:08 pm

நல்ல கதை..! பகிர்வுக்கு நன்றி சிவா..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
kungumapottu gounder
kungumapottu gounder
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 01/11/2010

Postkungumapottu gounder Tue Nov 02, 2010 10:39 pm

நடைமுறை வாழ்வை கண்முன் நிருத் தி விட்டீர் .நன்றி [b]

புவனா
புவனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3357
இணைந்தது : 14/08/2010

Postபுவனா Wed Nov 03, 2010 3:15 am

பகிர்வுக்கு நன்றி அன்பு மலர் அன்பு மலர்



கோபத்தில் பேசும் முன் யோசி,,,,, யோசித்த பின் அதையும் பேசாதே
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக