புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_c10சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_m10சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_c10 
5 Posts - 63%
heezulia
சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_c10சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_m10சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_c10சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_m10சின்ன சின்ன கைவைதியங்கள்  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன சின்ன கைவைதியங்கள்


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 31, 2010 6:06 pm

நீர்க்கடுப்பு தொல்லை போக: . இதோ, சுலபமான வழி. ராத்திரி படுக்கப் போகும்போது வெள்ளைச் சுண்ணாம்பை தண்ணீர் விட்டுக் குழைத்து, இரண்டு கால்களின் பெருவிரல்களிலும் (நகம் உள்பட) மேல்புறம் பூசிக்கொண்டு தூங்கினால் மறுநாள் காலை விழிக்கும் போது நீர்க்கடுப்பு போயே போச்சு!

* உஷ்ணத்தாலே வயிறு வலிச்சு "நச்சு, நச்சு'னு பேதியாகிறதா? எட்டு மிளகு, ஒரு ஸ்பூன் துவரம் பருப்பு, ஒரு கல்லு உப்பு, மூன்றையும் பொடி பண்ணி, சுடச்சுட சாதத்தின் மேல் போட்டு, பொரிய, பொரிய ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் காய்ச்சி, அதன் மேல் விட்டுப் பிசைந்து, மூன்று கவளங்கள் சாப்பிட்டால் உஷ்ணபேதி உடனே நின்று விடும்.

* சிலருக்கு வெயிலில் வெளியே போய் விட்டு வந்தால் கண்களை இருட்டிக் கொண்டு தலை சுற்றி பூமியே தட்டாமாலை ஆடுவது போல் இருக்கும். அதுபோல சமயங்களில் கொட்டை பாக்கு அளவு புளி, ஒரு துண்டு வெல்லம், ஒரு ஸ்பூன் சீரகம் மூன்றையும் ஒன்றாக நசுக்கி, உருட்டி, வாயில் அடக்கிக் கொண்டு, கண்களை இறுக மூடிக்கொண்டு படுத்துக்கொள்ளுங்கள். தலையணை கூடாது. இந்த ரசம் தொண்டையில் இறங்க இறங்க தலை சுற்றல குறையும்.

* சூடு அதிகமாகி, கண்ணிலிருந்து ஜலம் கொட்டுகிறதா?
கண்களைக் கசக்கிக் கொண்டே இருக்கணும் போலத் தோன்றுகிறதா? ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரை திறந்தவுடன் சாதத்திலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து, ஒரு சின்ன வெள்ளைத் துணியில் வைத்து மூட்டையாகக் கட்டி, இந்த விளக்கெண்ணெயில் தேய்த்து, கண் இமைகள் மீது ஒற்றி, ஒற்றி எடுங்கள். இதுபோல மூன்று நாள் செய்தால் நான்காம் நாள் கண் தெளிவாகத் தெரிவதோடு வலியும் இருக்காது.
ஒருநாள் விட்டு ஒருநாள் தலைக்கு எண்ணெய் தேய்து குளிக்க உடல் சுடு குறையும்.

* பல் வலியா? நாட்டு மருந்துக்கடையில் லவங்கத் தைலம் கிடைக்கும். அதை பஞ்சில் நனைத்து, வலி இருக்குமிடத்தில் வைத்தால் வலி குறைவதோடு இதமாகவும் இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முறையாவது இந்த வைத்தியத்தை செய்ய வேண்டும்.கெட்ட நீர் வெளியே வருவதோடு கிருமித் தொற்றும் கட்டுப்படும். பிறகு பல் டாக்டரிடம் போகலாம்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Oct 31, 2010 6:17 pm

நீர்க்கடுப்புக்கான (Dysuria) மருத்துவம் புதிதாக உள்ளது! பயனுள்ள தகவல்களுக்கு வாழ்த்துகள் தோழி!



சின்ன சின்ன கைவைதியங்கள்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 31, 2010 6:20 pm

* சளி, கோழை எதுவுமில்லாமல் வெயில் காலத்தில் வரட்டு இருமல் வந்து தொல்லை தருமே. இதோ இருக்கிறது மிளகு உருண்டை. ஒரு ஸ்பூன் மிளகை தூளாக்கவும். இலுப்பைக் கரண்டியில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு அதில் ஒரு துண்டு வெல்லத்தையும், இந்த மிளகுப் பொடியையும் போட்டு சூடு பண்ணவும். திரண்டு வரும்போது இறக்கி, சிறு, சிறு உருண்டைகளாகப் பண்ணி வைத்துக் கொள்ளவும். ஒரு உருண்டையை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால், அந்தக்காரம், தித்திப்பு இரண்டும் சேர்த்து, தொண்டையில் இறங்க இறங்க, தொண்டைக்கு இதமாக இருக்கும். வரட்டு இருமலும் குறையும்.

* ராத்திரி முழுவதும் கண் விழித்து பரீட்சைக்குப் படித்ததெல்லாம் தேர்வு முடிந்த பின்னால் தான் படுத்த ஆரம்பிக்கும். ஆம், அதுதான் பித்தம். சாப்பாட்டைப் பார்த்தாலே குமட்டிக்கொண்டு வரும். இதற்கு எளிய வழி உண்டு. 100 கிராம் சீரகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். நான்கு பெரிய எலுமிச்சம் பழங்களைப் பிழிந்து ரசம் எடுத்து, அதில் இந்தச் சீரகத்தை இரண்டுநாள் ஊற வையுங்கள். ரசம் நன்றாக சீரகத்தில் ஏற வேண்டும். வாயில் போட்டுப் பார்த்தால் தெரியும். பிறகு ஊறிய சீரகத்தை எடுத்து வெயிலில் உலர்த்த வேண்டும். நன்றாக உலர்ந்ததும், காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். பித்தம் அதிகமாகி, குமட்டிக் கொண்டு வரும்போது, ஒரு ஸ்பூன் சீரகத்தை எடுத்து வாயில் அடக்கிக்கொண்டால் பித்தம் தானாக குறையும்.

* காலில் பித்த வெடிப்பா ? மெழுகுவர்த்தி எரியும் போது உருகி வரும் மெழுகை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெயில் இந்த மெழுகைக் கலந்து வெடிப்பின் மேல் தடவி ஒரு பழைய ஸாக்ஸை போட்டுக் கொண்டு தூங்குங்கள். காலையில் எழுந்ததும் ஒரு வாளியில் மிதமான வெந்நீர் எடுத்துக் கொண்டு, அதில் ஒரு பிடி கல் உப்பைப் போடுங்கள். உப்பு கரைந்ததும் அதில் இரண்டு கால்களையும் ஐந்து நிமிடம் வைத்திருங்கள். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்தால் வெடிப்பு மறைவதோடு உள்ளங்காலும் மெத்தென்று பட்டுப் போலாகும்.

* வயிறு மப்பும், மந்தாரமாக இருக்கிறதா? குழந்தைக்கு என்றால், இதை மந்தம் தட்டியிருக்கிறது என்போம். பெரியவர்களுக்கானால் இதை "அஸிடிட்டி' என்போம். இதற்கு கைகண்ட மருந்து ஓமம்தான். இரண்டுதம்ளர் சுத்தமான தண்ணீரில் ஒரு பிடி ஓமத்தைப் போட்டு நன்றாகக் கொதிக்க வேண்டும். இரண்டு தம்ளர் ஒரு தம்ளராகச் சுண்ட வேண்டும். இந்த ஓம ரசத்தை குழந்தைகளுக்கு ஒரு பாலாடையும், பெரியவர்களுக்கு அரைத் தம்ளரும் கொடுக்கலாம். ஒரு நாளைக்கு ஒருமுறை என்று மூன்று நாள் சாப்பிட்டால் இந்த மந்தம் குறைந்து ""கலகல'' என பசி எடுக்கும். புளி ஏப்பமும் குறையும்.

"குழந்தை ஏன் அழுதது? woodwards gripe water தரசொல்லு, என்காம்மா எனக்கு அதுதான் தந்தா" விளம்பரம் நினைவுக்கு வருதா ? அதேதான்

* வாய்ப்புண். இது வந்து விட்டால் ஒன்றும் சாப்பிட முடியாது. ஒரு துண்டு கொப்பரை, ஒரு ஸ்பூன் கசகசா, இரண்டையும் ஒன்றாக சேர்த்தரைத்து, ஒரு தம்ளர் பசும்பாலில் அதை போட்டுக் கொதிக்க வைத்து காலையும், மாலையும் மூன்று நாள் சாப்பிட்டால் வாய்ப்புண் மறைந்து போகும்.

அல்லது துருவின தேங்காயை வாயில் போட்டுக்கொண்டு நன்கு மென்று, அந்த பாலை மட்டும் விழுங்க வேண்டும் . சக்கையை துப்பிடனும். இதனாலும் வாய் புண் குறையும்.

அல்லது ஒரு கை மணததக்காளி கீரையை வாயில் போட்டு மென்று துப்பனும்.
தந்த கீரை கொஞ்சம் கசக்கும் ஆனாலும் ரொம்ப நல்ல மருந்து.

அல்லது ஒரு கை மணததக்காளி கீரையை கூட்டு , கறியமுது பண்ணி சாப்பிடலாம்.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 31, 2010 6:30 pm

சிவா wrote:நீர்க்கடுப்புக்கான (Dysuria) மருத்துவம் புதிதாக உள்ளது! பயனுள்ள தகவல்களுக்கு வாழ்த்துகள் தோழி!

nandri நண்பரே ! நன்றி மேலே கூறியது குழந்தைகளுக்கு கூட பலன் அளிக்கும். பெரியவர்கள் என்றால், ஒரு மிளகு அளவு சுண்ணாம்பு (வெத்தலை போடும்போது உபயோகிப்பது ) எடுத்து அரை டம்பளர் நீரில் கரைத்து
குடித்து விடவேண்டும். அரைமணி இல் சரியாகிவிடும்.

குறிப்பு: சுண்ணாம்பு அதிகமானால் வாய் வெந்துவிடும். பிறகு அதற்காக வெண்ணை சாப்பிடனும். புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக