புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
7 Posts - 64%
heezulia
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
8 Posts - 2%
prajai
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_m10அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள அண்ணா! -மனதை பிழியும் முல்லைத்தீவு கடிதம்!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 28, 2010 7:49 pm

முல்லைத்தீவிலிருந்து அதீதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)ங்கிற 14 வயசு பொண்ணு எழுதுறேன். அண்ணா. நல்லாயிருக்கீங்களா? நாங்க இங்கு நல்லாயில்லையண்ணா. ‘நல்லாயிருக்கீங்களா… எப்படி இருக்கீங்க’ன்னு கேட்க எந்த ஒரு சனமும் இல்லையண்ணா. நல்லாயிருக்கீங்களான்னு ஒரு வார்த்தையை எங்க செவிகள் கேட்டு ரொம்ப நாளாச்சு. எங்கிருந்தாவது அந்த வார்த்தை ஒருமுறை எங்க செவிகள்ல விழாதான்னு ஏங்கிக் கிடக்குறோமண்ணா.

உக்கிரமான போர் முடிஞ்சதும் வவுனியா முகாமுக்குள் நாங்க அடைத்து வைக்கப்பட்டோம். நாங்கன்னா… நான், என் அம்மா, என் தாத்தா, என் அண்ணன். எங்க அப்பா (சந்திரேசன்) போரில் வீர மரணம் அடைஞ்சிட்டாரு. கதிர்காமம் முகாமுலதான் அடைக்கப்பட்டோம். இங்கு வந்த மூன்றாவது நாள் என் அண்ணாவை இயக்கத்தை சேர்ந்தவன்னு சொல்லி இழுத்துக்கிட்டு போய்விட்டது சிங்கள ஆர்மி. என் அண்ணாவுக்கு 23 வயசு இருக்கும். என் அண்ணன் இயக்கத்தை சேர்ந்தவனில்லை. முல்லைத்தீவு மருத்துவமனையில் பணியாளனாக இருந்தான்.

இறுதி கட்டத்தில் நடந்த போர், அதன் பிறகு சித்திரவதை கூடங்களாக மாறிவிட்ட நலன்புரி முகாம்கள், அதில் அடைத்து வைக்கப்பட்ட எங்கட சனங்களுக்கு நடந்த கொடுமைகள் எல்லாம் இந்த உலகத்துக்கு தெரிந்த மாதிரி உங்களுக்கும் தெரிந்திருக்கும் அண்ணா. அன்னைக்கு நடந்ததையெல்லாம் இன்னைக்கு நினைவுபடுத்தி உங்களையெல்லாம் சோகப்படுத்த விரும்பலை. ஆனா, முகாமிலிருந்து விடுவிக்கப்பட்ட எங்க சனத்தோட நிலைமைகள் என்னன்னு இந்த உலகத்துக்கு தெரியுமா அண்ணா? எந்த கொடுமைகள் தமிழ் பெண்களுக்கு நடக்கக்கூடாதுன்னு தேசிய தலைவர் இயக்கம் கட்டினாரோ… அந்த கொடுமைகள் இன்னைக்கு தடையில்லாம நடக்குது. செத்து செத்து பிழைகிறோம் அண்ணா. அதைச் சொல்லத்தான் இந்தக் கடிதத்தை எழுதுறேன். இந்த கடிதம் உங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ…. தெரியாது. ஆனா, ஏதோ ஒரு நம்பிக்கையில் எழுதிக்கொண்டிருக்கிறேன். நம்பிக்கைங்கிற ஒத்த வார்த்தை இன்னும் எங்கட சனங்க மனசுல இருக்கிறதாலதான் இன்னமும் உயிர் வாழ்ந்துகிட்டு இருக்கினம்.

6 மாதங்களுக்கு முன்பு முகாமிலிருந்து முல்லைத்தீவுக்கு 1500 பேர்களை கொண்டு வந்து இறக்கிவிட்டுப் போனார்கள். அவர்களோடு நாங்களும். முல்லைத்தீவு, ஒரு பசுமையான பிரதேசம். இன்னைக்கு, பொட்டல் காடாக கிடக்கிறது. வீடுகள், கடைகள், பள்ளிக்கூடங்கள், மோட்டார் செட்டுகள், மருத்துவமனைகள் எல்லாம் இடிந்துபோய் சுடுகாடு மாதிரி கிடக்கிறது. என்னையும் தாத்தாவையும் இழுத்துக்கிட்டு எங்க வீட்டைத் தேடி ஓடினாள் அம்மா. வீடு இருந்த அடையாளமே தெரியலை. எல்லாம் சிதிலமடைந்து போயிருந்தது. எல்லா சனங்களும் இப்படிதான் ஓடிஓடி அலைஞ்சாங்க. யாருக்கும் எதுவும் கிடைக்கலை. ஆனா எங்கு பார்த்தாலும் ஆமிகாரன் நின்னுகிட்டு இருந்தான்.

மீள் குடியேற்றம் செய்து மக்களை குடியமர்த்தியிருக்கிறோம்னு சிங்கள அரசு சொல்லுது. ஆனா, முல்லைத்தீவில் அப்படி எதுவும் செய்யப்படலை அண்ணா. ஒரே ஒரு தகர சீட் கொடுத்தார்கள். அதை வைத்து எங்களையே வீடுகட்டிக்க சொன்னது ஆமி. ஆமிகாரனே… “நீ போய் அந்த இடத்துல கட்டிக்க… நீ இந்த இடத்த எடுத்துக்கோ”ன்னு பாகம் பிரிச்சு கொடுத்தான். யாரோட இடத்தை எவன் பாகம் பிரிச்சு கொடுக்குறதுன்னு கோபம் கோபமாக வந்தது அண்ணா. ஆனா கோபத்தை காட்டமுடியுமா?

உங்க ஊரில் ஆடு மாடுகள் அடைச்சி வைக்க ஒரு பட்டி செய்திருப்பாங்க இல்லையா அண்ணா… அது மாதிரி பன ஓலைகளால் வேயப்பட்ட மட்டைகளை வைத்து ஒரு பட்டியை அமைச்சிகிடுச்சி எங்கட சனம். அந்த பட்டிக்குள்ளே… சதுரமா மண் சுவரை நாலா புறமும் எழுப்பி அதன் மேலே தகர சீட்டை கிடத்தி சின்னதா ஒரு குடிலை கட்டிக்கிட்டாங்க. நாங்களும் அப்படியே ஒரு பட்டியம் அதுக்குள்ளே ஒரு குடிலையும் உருவாக்கிட்டோம். இந்த பட்டியும் குடிலும் சில இடங்களில் பக்கத்தில் பக்கத்திலும் பல இடங்களில் தூரம் தூரமாகவும் இருக்கும்.

ஒரு தேநீர்கடை பெட்டிக்கடை கூட இங்கு இல்லை. எங்கட சனத்துக்கிட்ட யாரிடமும் காசும் கிடையாது. 10 நாளைக்கு ஒருமுறை ஆர்மி வண்டியில அரிசி, பருப்பு, காய்கறிகள் வரும். ஒரு குடிலுக்கு 1 கிலோ அரிசி, அரை கிலோ பருப்பு தருவாங்க. காய்கறிகள் கொஞ்சமே கொஞ்சம் தருவாங்க. உப்பு மட்டும் வரவே வராது. இன்னைக்கு வரைக்கும் முல்லைத்தீவில் எங்கட சனம் உப்பு போடாமத்தான் சாப்பிடுது அண்ணா. ஒரு கிலோ அரிசியும் அரை கிலோ பருப்பும் எத்தனை நாளைக்கு வந்துவிடும்? பட்டினியும் பசியுமாகத்தான் எங்க நாட்கள் நகர்ந்துக்கிட்டு இருக்கு.

இப்போ முல்லைத்தீவில் 2000-த்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் ஆமிக்காரன்கள் நின்னுகிட்டு இருக்காங்க. அதே மாதிரி முல்லைத்தீவில் முழுக்க பொண்ணுகளும் அவர்களோட அம்மாக்களும் வயதான தாத்தா பாட்டிகளும் மட்டும்தான் இருக்காங்க. இளைஞர்களையெல்லாம் வெவ்வேறு முகாம்களுக்கு கடத்திட்டாங்க.

ஒரு நாள் இரவு 10 மணி இருக்கும். சாப்பிடுவதற்கு எதுவும் இல்லாமல் அம்மாவின் மடியைக் கட்டிக்கொண்டு படுத்துக்கிடந்தேன். என் தாத்தா வெளியே படுத்திருந்தார். அப்போ 3 ஆமிகாரன் பன ஓலையை பிரிச்சு எரிஞ்சிட்டு உள்ளே வந்தான்கள். ஒவ்வொருத்தன் கையிலயும் பெரிய அளவிலான துப்பாக்கி இருந்தது. அதை பார்த்த என் தாத்தா எழுந்து, எதுக்கு உள்ளே வர்றீங்கன்னு பயத்துடன் கேட்டார். அப்போ ஒருத்தன், “இன்னைக்கு அந்த பொண்ணை(என்னை) பார்த்தேன். அவளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. இன்னைக்கு இராத்திரி அவ எங்களுக்கு வேணும். அதான் வந்தோம்” என்று சொல்ல, அந்த சத்தத்தை கேட்டு நானும் அம்மாவும் வெளியே வந்தோம். 3 ஆமிக்காரன்களைப் பார்த்து அம்மா மிரண்டாள். எதுக்கு இங்க வந்தீங்கன்னு சத்தம் போட்டாள் அம்மா. அப்போ ஆமிக்காரன்களின் காலைப் பிடிச்சிக்கிட்டு… ‘வேணாம்… வேணாம்… அவ சின்ன பொண்ணு… விட்டுடுங்க…’ன்னு கெஞ்சினார் என் தாத்தா. நானோ பயந்துபோய் என் அம்மா சேலைக்குள்ளே புகுந்துகிட்டேன். தாத்தாவை எட்டி உதைச்சி தன் காலை உருவிக்கிட்ட ஆமிக்காரன்… “ நாங்க வந்துட்டோம் ரொம்ப பசியா இருக்கு… சாப்பிட்டுட்டுத்தான் போவோம்…”னு சொல்லிக்கிட்டே தாத்தாவை துப்பாக்கியால் இடித்து தள்ளினான். சாப்பிட்டுட்டுத்தான் போவோம்ங்கிறதன் அர்த்தம் அப்போதைக்கு எனக்கு விளங்கலையண்ணா.

மூணு பேரில் ஒருத்தன் என்னையும் ரெண்டு பேர் என் அம்மாவையும் பிடித்து இழுத்தனர். என் தாத்தா, ஒரு கட்டையை எடுத்து வந்து அவன்களை அடிக்கப் பார்த்தார். ஆனால், ஒருத்தன் அதனை தடுத்து என் தாத்தாவின் காலில் துப்பாக்கியால் அடிக்க, அவர் அப்படியே விழுந்துவிட்டார். அதற்குள் இன்னும் 3 பேர் வந்துவிட்டனர். எங்களை தூரமாக ஒரு இடத்துக்கு இழுத்துப் போனார்கள். எவ்வளவோ திமிறியும் போராடியும் பார்த்தோம். முடியவில்லை. சுட்டு கொன்னுடுவோம்னு மிரட்டினார்கள். நிலவு வெளிச்சம் படர்ந்த இடத்துக்கு இழுத்துப்போய்……?

இன்னைக்கு நான் 4 மாதம் கர்ப்பமாக இருக்கிறேன் அண்ணா. என் அம்மா சித்தபிரமை பிடித்த மாதிரி இருக்கிறாள். தாத்தா செத்துப்போய்விட்டார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் அழுதுகொண்டிருக்கிறேன். என்னை மாதிரி இங்கு 13,14,15 வயசு பொண்ணுங்க நிறைய பேர் கர்ப்பமாக இருக்கிறார்கள் அண்ணா. சிங்கள ஆமி காடைகள் பெண்களை நாசப்படுத்திக் கொண்டிருக்கிறது.

எங்க குடிலுக்கு அருகில் இருக்கும் குடிலில் ரெண்டு பொண்ணுகளோடு ஒரு தாய் இருக்கிறார். ஒரு வாரமா எதுவும் சாப்பிடலை அவர்கள். காரணம் ஆமி கொண்டு வந்த பொருட்கள் எல்லோருக்கும் கிடைக்கவில்லை. அதனால் அவர்களுக்கு அரிசியும் பருப்பும் கிடைக்கவில்லை. அதை பயன்படுத்திக் கொண்டு, அரிசி தருவதாகக் கூறி அந்த பெண்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு போய்… தங்களின் இச்சையை தீர்த்துக்கொண்டனர். அதே சமயம் அம்மாக்கள் பலர், தங்கள் குழந்தைகளை காப்பாற்ற அரிசிக்காகவும் ரொட்டிக்காகவும் சிங்கள ஆமிக்காரனின் இச்சைக்கு விருப்பப்பட்டே பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். பகல் என்றோ இரவு என்றோ பாராமல் தங்களுக்கு இச்சை வரும்போதெல்லாம் தமிழ் பொண்ணுகளை – அதுவும் சின்ன சின்ன பொண்ணுகளை கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கல். ஆமிக்காரனின் இந்த கொடுமைகளால் தாயும் மகளும் கர்ப்பமாக இருக்கும் அவலமும் இங்கு இருக்கு அண்ணா. சின்ன வயசுலேயே வயித்துல பிள்ளையை சுமக்கும் கொடுமையை எங்கேனும் கேள்விப்பட்டிருக்கீங்களா? கர்ப்பத்தை கலைக்க முடியாமலும் கருவை சுமந்துகொண்டும் நான் படுற அவஸ்தையை வார்த்தையால் எப்படி விவரிக்கிறதுன்னு புரியல அண்ணா.

இங்கு ஒரு மருத்துவமனை மட்டும் இருக்கு. அதில் ஒரே ஒரு மருத்துவச்சி. ஆனா அங்கு போதுமான மருத்துவ உபகரணங்கள் எதுவும் இல்லை. என் வயித்துல வளரும் சிங்களவனின் கருவை கலைச்சிடலாம்னு மருத்துவமனைக்கு போனேன். ஆனா மருத்துவச்சி கலைக்க மருத்துட்டாள். காரணம்… இலங்கையில் கருவை அழிப்பது சட்டவிரோதமாம். அதனால் கருவை கலைக்க முடியாதுன்னு கூறிவிட்டாள் மருத்துவச்சி. கரு வளரும்… அதை முறையா பராமரிக்கலைன்னா உயிருக்கு ஆபத்துன்னும் சொல்லி பயமுறுத்துறா மருத்துவச்சி. இந்த கொடுமைகளை அனுபவிக்கிறதுக்கு போரிலேயே நாங்க செத்துப்போயிருக்கலாம் அண்ணா.

வெளியிலயும் நடமாட முடியவில்லை. 20 அடிக்கு ஒரு ஆமிக்காரன் நிக்கிறான். நடந்து போனா… கூப்பிட்டு வச்சு கிண்டலும் கேலியும் பேசுறான். 10 நாளைக்கு முன்னால் தண்ணி எடுத்துவர… வெளியே வந்தேன். நடந்து போய்க்கிட்டு இருந்தேன். ஒரு இடத்தில் ஒரு அக்காவை வழி மறிச்சி கேலி பேசின ஆமிக்காரன், அந்த அக்காவின் உறுப்புகளை தொட்டு தொட்டு ஆபாசமாக நடந்துகிட்டான். அவன் கையை தட்டிவிட்டு அழுதுகொண்டே இருந்தது அந்த அக்கா. தட்டிவிட்ட அந்த கையை ஒரு ஆமிக்காரன் துப்பாக்கியால் அடித்தான். அந்த நேரம் என்கிட்ட ஒரு துப்பாக்கி இருந்திருக்க வேண்டும். இல்லையே. ரொம்ப நேரம் ஆபாசமா நடந்துகிட்ட ஆமிக்காரன்… இன்னைக்கு இராத்திரிக்கு வீட்டுக்கு வருவேன்… என்று சொல்லி அனுப்பி வைத்தான். பயந்துகொண்டே அந்த அக்காள் ஓடினாள்.

இப்படி அவனுங்க கொடுமைகளை செய்யும்போதுகூட அவன்களிடம் ஒரு பயம் இருப்பது போலத்தான் தெரிகிறது. ஒருமுறை ரெண்டு பேர் பேசிக்கிட்டிருந்ததை கேட்டேன். அந்தப் பேச்சில் தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாகவும் நம் அரசாங்கம் நம்மளை ஏமாத்திக்கிட்டு இருப்பதாகவும் பேசிக்கொண்டனர். தேசியத் தலைவர் உயிரோடு இருப்பதாக அவர்கள் நம்புவதால் வந்த பயமாகக் கூட இருக்கலாம்.

சாலைகளை செப்பனிட்டு தருவதற்காக சைனாகாரன்களையும் நிறைய இங்கு இறக்கிவிட்டிருக்காங்க. அவன்களும் ஆமிக்காரன்களோடு சேர்ந்து எங்களை நாசப்படுத்திக்கிட்டு இருக்காங்க அண்ணா. மீள் குடியேற்றம்ங்கிற பேரில் முகாமிலிருந்து முல்லைத்தீவுக்கு கொண்டுவந்து விட்டாங்க. ஆனா, முல்லைத்தீவே ஒரு முகாமாகத்தான் இருக்கு இப்போ. இங்குள்ள எங்கட சனங்கள் ஊமைகளாகவும், மனநோயாளிகளாகவும் இருக்கிறார்கள். ஒருத்தருக்கொருத்தர் பேசிய பல நாட்கள் ஆகின்றன. சிரிப்பை தொலைத்து வெகு நாட்கள் ஆகிறது அண்ணா. தமிழர்கள் எல்லாம் அவரவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட்டிடுப்பதாக சிங்கள அரசு சொல்வதை நம்பாதீர்கள். வதைமுகாமில் அனுபவித்த அத்தனை இடர்களையும் முல்லைத்தீவுக்குள் அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம் அண்ணா. முல்லைத்தீவுக்குள் ஒரு தொண்டு நிறுவனமோ, செஞ்சிலுவைச் சங்கமோ, ஊடகமோ எதுவும் இங்கே வரமுடியாது. வரவும் இல்லை. வருவதற்கு அனுமதி கொடுக்கவும் மறுக்கிறது சிங்கள அரசாங்கம். என்ன பாவம் அண்ணா நாங்கள் செய்தோம். தமிழராய் பிறந்ததைத் தவிர நாங்கள் செய்த பாவம் தான் என்ன?

ஏதோ ஒரு நம்பிக்கையில் இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறேன். முல்லைத்தீவிலிருந்து இந்தக் கடிதம் வெளியே வந்து உங்கள் கைகளுக்கு கிடைக்குமானால் முல்லைத்தீவில் நடக்கும் அவலத்தை வெளியே கொண்டு வாருங்கள் அண்ணா.”

இப்படிக்கு

சிங்களவன் கருவைச் சுமக்கும் அபலை அதீதி


இந்தக் கடிதம் ௨௦-௨௨ ஒக்ரோபர் தேதியிட்ட நக்கீரன் இதழில் வெளிவந்தது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக