புதிய பதிவுகள்
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
1 Post - 25%
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
285 Posts - 45%
heezulia
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
238 Posts - 37%
mohamed nizamudeen
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
20 Posts - 3%
prajai
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
7 Posts - 1%
mruthun
மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_m10மகுடபதி - அமரர் கல்கி - Page 6 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகுடபதி - அமரர் கல்கி


   
   

Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 2:24 am

First topic message reminder :

[You must be registered and logged in to see this image.]
மகுடபதி - அமரர் கல்கி




முதல் அத்தியாயம் - திறந்த வீடு

அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.

கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.

வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.

பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.

கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?

இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?

1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.

மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.

அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.

ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:01 am

அவன் போன சிறிது நேரத்துக்கெல்லாம் பெரியண்ணன் கிருஷ்ணனிடம் "தம்பி! எனக்கு இங்கே ஒருவரைப் பார்க்க வேண்டும். போய்ப் பார்த்துவிட்டு வருகிறேன். சுவாமியார் கேட்டால் இரண்டு பேரும் ஊர் சுற்றிப் பார்க்கப் போயிருக்கிறோம் என்று சொல்லிவிடு" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினான்.

சுவாமியார் சொன்ன யோசனை சரியானது என்று மகுடபதி ஒப்புக் கொண்ட போதிலும், செந்திருவைப் பார்க்காமல் திரும்ப அவன் மனம் ஒப்பவில்லை. உலகத்தைத் துறந்த சுவாமியாருக்கு மகுடபதியின் உள்ளம் செந்திருவைப் பார்க்க எப்படித் துடித்தது என்பது தெரிவதற்கும் நியாயமில்லை. ஆகவே, அவரிடம் சொல்லாமல் எப்படியும் தேவகிரி எஸ்டேட் பங்களாவுக்குப் போய் அவளை ஒரு தடவை கண்ணால் பார்த்துவிட்டாவது திரும்ப வேண்டும் என்று அவன் தீர்மானித்துக் கொண்டான். கவுண்டர்கள் நேற்றுத்தான் வந்துவிட்டுத் திரும்பியிருக்கிறார்கள். ஆகையால் இன்று இங்கே இருக்கமாட்டார்கள். பங்களாவுக்கு வெளித்தோட்டத்தில் அவள் வந்து உலாவுகிறாள் என்றும் தெரிகிறது. ஆகவே, அவளைப் பார்ப்பது சாத்தியந்தான். "பயப்படாதே! நான் இருக்கிறேன்" என்று இரண்டு வார்த்தை சொல்லுவதுகூடச் சாத்தியமாகலாம். ஏன் முடியாது? இந்த நோக்கத்துடன் தான் மகுடபதி இப்போது உதகமண்டலம் போகும் மலைச்சாலையில் போய்க் கொண்டிருந்தான்.

போகும் போது அவன் உள்ளத்தில் எத்தனை எத்தனையோ எண்ணங்கள் தோன்றின. செந்திரு உண்மையிலேயே அங்கே இருப்பாளா? நாம் பார்ப்போமா? அவளை விடுதலை செய்வதற்கு சுவாமியாரின் முயற்சியையே நம்பியிருக்க வேண்டியதுதானா? ஆகா! என்ன சமர்த்து அவள்! எப்பொழுதோ தோழியிடம் பேசின ஞாபகத்தை வைத்துக் கொண்டு பைத்தியம் போல் நடிக்கிறாளே? "எல்லாம் உன் பேரில் உள்ள அன்பினால்தானே?" என்று எண்ணிய போது மகுடபதிக்கு உடம்பெல்லாம் புல்லரித்தது. அத்தகைய அன்புக்குப் பாத்திரமாக நாம் என்ன செய்திருக்கிறோம்? எத்தனையோ நாவல்கள் படித்திருக்கிறோமே? இம்மாதிரிச் சந்தர்ப்பத்தில் உபயோகப்படக்கூடிய யுக்தி ஒன்றும் இப்போது ஞாபகத்திற்கு வரவில்லையே? - தோட்டக்காரனிடம் ஏதாவது சொல்லிச் சிநேகம் செய்து கொண்டு பங்களாவுக்குள் போய் அவனைத் திடீரென்று ஓர் அறையில் தள்ளிப் பூட்டிவிட்டாலென்ன? செந்திருவை அழைத்துக் கொண்டு நேரே ரயில்வே ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிச் சென்னைக்குப் போய் விடலாமா - ஆகா! செந்திருவைப் போல் ஒரு வாழ்க்கைத் துணைவி மட்டுமிருந்தால், எப்படி எப்படியெல்லாம் தேசத் தொண்டும், சமூகத் தொண்டும் செய்யலாம் என்று மகுடபதி மனோ ராஜ்யம் செய்து கொண்டே நடந்தான். இதனால் வழி நடக்கும் களைப்பே அவனுக்குத் தெரியவில்லை. கிருஷ்ணன் சொன்ன அடையாளப்படி, சற்று தூரத்தில் ஒரு மேடான இடத்தில் பங்களா தெரிந்ததுந்தான் அவனுக்கு இப்போதைய நிலைமை ஞாபகம் வந்தது.

பங்களா அருகில் தயங்கித் தயங்கிப் போய் முன்புறத் தோட்டத்தில் செந்திருவைப் பார்க்கும் ஆவலுடன் கண் கொட்டாமல் பார்த்தான். ஆனால், பங்களாவிலோ, தோட்டத்திலோ மனித சஞ்சாரம் இருப்பதாகவே தெரியவில்லை. சற்று நேரம் கழித்து இன்னும் சமீபத்தில் சென்றான். இந்த பங்களாதானா, அல்லது தவறான இடத்துக்கு வந்துவிட்டோ மா என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. தோட்டத்தின் முன் கேட்டுக்கு அருகில் தைரியமாய்ப் போனான். கேட்டின் கதவு திறந்து கிடந்தது. "சரி, இந்த வீடு இல்லை" என்று அவனுக்கு நிச்சயமாயிற்று ஆயினும் உள்ளே போய் யாராவது இருந்தால் அவர்களை விசாரிக்கலாம் என்று போனான். பங்களா முகப்புக்கு அவன் வந்த போது, கதவைத் திறந்து கொண்டு ஒரு மனிதன் வெளியே வந்தான். அவனைப் பார்க்கப் பயங்கரமாயிருந்தது. முரட்டு மனிதனாகக் காணப்பட்டான். ஒரு வேளை இந்தப் பங்களா தானோ, இவன் தான் அந்த முரட்டுத் தோட்டக்காரனோ என்று தோன்றியது. படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது.

"யார் ஐயா நீ?" என்று அந்த மனிதன் கேட்டதற்கு மகுடபதி சரியான பதில் சொல்லாமல், "இது யார் பங்களா அப்பா? வீட்டில் ஒருவரும் இல்லையோ?" என்றான்.

"ஒருவரும் இல்லாமல் என்ன? உனக்கு யார் வேணும்?" என்று எரிந்து விழுந்தான் அம்மனிதன்.

"வீட்டு எஜமானைப் பார்க்கணும்" என்றான் மகுடபதி, தடுமாற்றத்துடன்.

"உள்ளே இருக்கார், போ!"

இந்த பங்களா இல்லையென்று மகுடபதிக்கு உறுதியாயிற்று இருந்தாலும் இவ்வளவு தூரம் விசாரித்துவிட்டு உள்ளே போகாமல் திரும்பக் கூடாது என்று நினைத்துக் கொண்டே வாசற்படியில் நுழைந்து நடையில் போனான். நடையில் வலது புறத்தில் ஒரு வாசற்படி இருந்தது. அதன் அருகில் அவன் போனதும் வெளி வாசற் கதவு திடீரென்று சாத்திய சத்தத்தைக் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். அதே சமயத்தில் அறைக்குள்ளேயிருந்து "வாடா, அப்பா, வா!" என்று ஒரு தெரிந்த குரல் - பயங்கரமான குரல் கேட்டது. மகுடபதி திகிலுடன் அறைக்குள் நோக்கினான். அங்கே, கையில் சுழல் துப்பாக்கியுடன் கள்ளிப்பட்டிக் கார்க்கோடக் கவுண்டர் நின்று கொண்டிருந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:01 am

இருபத்தி நான்காம் அத்தியாயம் - "அண்ணா வந்தார்!"

அன்று காலையில் செந்திரு அளவில்லாத துயரத்தில் ஆழ்ந்தவளாய் உள்ளமும் உடலும் குன்றி உட்கார்ந்திருந்தாள். "இந்த உலகில் ஏன் பிறந்தேன் நான்" என்பதாக அவள் கேட்டிருந்த ஒரு பாட்டின் அடி திரும்பத் திரும்ப அவளுடைய ஞாபகத்துக்கு வந்து கொண்டிருந்தது. நாலு வருஷத்துக்கு முன்பு வரையில் அவளுடைய வாழ்க்கை எவ்வளவு ஆனந்தமயமாயிருந்தது என்பதையும், திடீரென்று எப்படித் துன்ப மயமாக மாறிவிட்டதென்பதையும் நினைத்து நினைத்துப் பொருமினாள். "கடவுள் எதற்காக எனக்கு இவ்வளவு கஷ்டத்தையும் கொடுத்தார்? நான் யாருக்கு என்ன கெடுதல் செய்தேன்?" என்று அடிக்கடி எண்ணினாள். இவ்வளவு சொந்தத் துயரங்களுக்கிடையேதான் கடிதத்துடன் கட்டிப் போட்ட கல் சுவாமியாரின் தலையில் விழுந்து காயப்படுத்திய விபரீதத்தை நினைத்து நினைத்து வேதனையடைந்தாள். சுவாமியாருக்குப் பெரிய காயம் ஏற்பட்டிருக்குமோ? ஒரு வேளை சாபம் கொடுத்து விடுவாரோ? ஐயோ! தான் ஏற்கெனவே படும் கஷ்டம் எல்லாம் போதாதா? என்ன பைத்தியக்காரத்தனம்? பைத்தியம் மாதிரி நான் நடித்ததல்லவா உண்மையில் பைத்தியக்காரத்தனமாய்ப் போய்விட்டது? இனிமேல் இந்தப் பைத்திய வேஷம் வேண்டாம் என்று அவள் முடிவாகத் தீர்மானித்துக் கொண்டாள். அடுத்த தடவை சித்தப்பா வரும்போது அவரைக் கேட்டுப் பார்க்க வேண்டியது தனக்கு விடுதலை யளிக்கும்படி; அதற்கு அவர் சம்மதிக்காவிட்டால் உயிரை விட்டு விடுவதுதான் சரி. நல்ல வேளையாக இந்த மலைப் பிராந்தியத்தில் உயிரை விடுவது அவ்வளவு கஷ்டமான காரியமல்ல. கிராதி மேல் ஏறி கீழே குதித்தாலும் தீர்ந்தது. இப்படி எண்ணிய போதெல்லாம் காலஞ்சென்ற தந்தையின் நினைவும் அவளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருந்தது. "அப்பா! நீ எங்கேயாவது இருக்கிறாயா? உன் அருமை மகள் படும் கஷ்டங்களெல்லாம் உனக்குத் தெரியுமா? இந்தப் பாவிகள் செய்யும் கொடுமைகளையெல்லாம் நீ பார்த்துக் கொண்டு தானிருக்கிறாயா?" என்று அவளுடைய மனம் கதறிற்று.

ஒரு தடவை இன்னொரு எண்ணமும் அவளுக்குத் தோன்றியது: "இந்தக் கஷ்டங்கள் எல்லாம் நாமாக விலைக்கு வாங்கிக் கொண்டதுதானே? எத்தனையோ பெண்கள் வயதானவர்களைக் கல்யாணம் செய்து கொள்ளவில்லையா? கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் இதே பங்களாவில் கைதியாக இருப்பதற்குப் பதிலாக எஜமானியாக இருக்கலாமல்லவா?" என்று நினைத்தாள். அவளுக்குத் தெரிந்த குடும்பங்களுக்குள்ளே வயதானவர்களை - கள்ளிப்பட்டிக் கவுண்டரைவிடக் கிழவர்களை கல்யாணம் செய்து கொண்டவர்களின் ஞாபகமெல்லாம் அவளுக்கு வந்தது. ஆனால், அதே சமயத்தில், மூன்று வருஷத்துக்கு முன் ஒரு நாள் ஓடைக் கரையில் நடந்த சம்பவமும் அவளுடைய நினைவுக்கு வந்தது. மூர்ச்சை யடைந்தது போல் தான் பாசாங்கு செய்ததும், காந்திக் குல்லா அணிந்த அந்த வாலிபன் ஜலம் கொண்டு வந்து தன் முகத்தில் தெளித்ததும், மூக்கின் அருகில் கையை வைத்து மூச்சு இருக்கிறதா என்று பார்த்ததும், தான் எழுந்து உட்கார்ந்து கலகல வென்று சிரித்ததும், நேற்றுத்தான் நடந்தது போல் அவள் மனதில் தோன்றி, தேகம் சிலிர்க்கச் செய்தது. பின்னர், அந்தக் கோயமுத்தூர் வீட்டில் அன்றிரவு தன்னைச் சித்தப்பா பிரம்பினால் அடித்தபோது, மகுடபதி கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்து தடுத்ததும், அவனைக் கவுண்டர்கள் கட்டிப் போட்டதும், சோபாவின் காலில் கட்டிப் போட்டிருந்தபோது அவ்வாலிபனுடைய முகத்தில் தோன்றிய தீரமும், தன்னை அடிக்கடி 'பயப்படாதே!' என்று சொல்கிறவன் போல் பார்த்ததும் - இவையெல்லாம் அவள் மனக்கண்ணின் முன் மீண்டும் தோன்றின. தான் மணம் செய்துகொள்வதாயிருந்தால் மகுடபதியை மணம் செய்துகொண்டு வாழ்வது, இல்லாவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்று உறுதி செய்து கொண்டாள்.

இப்படிப் பலவிதச் சிந்தனைகளில் அவள் ஆழ்ந்திருந்த சமயத்தில் வாசலில் கார் வரும் சத்தம் கேட்டது. ஜன்னல் வழியாகப் பார்த்த போது, கள்ளிப்பட்டிக் கார்தான் என்று தெரிந்து கொண்டாள். உடனே, அவள் அலமாரிக்குச் சென்று, கறிகாய் நறுக்குவதற்காக உபயோகிக்கப்பட்ட ஒரு சிறு கத்தியைத் தேடி எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டு, கவுண்டர்களைச் சந்திப்பதற்கு ஆயத்தமானாள். அவளுடைய அறைக்கு வெளியே காலடிச்சத்தம் கேட்ட போது, ஒரு கையை இடுப்பில் கத்திப் பிடியின் மேல் வைத்துக் கொண்டு எழுந்து நின்றாள்.

உள்ளே தங்கசாமிக் கவுண்டர் மட்டுந்தான் வந்தார். சாவதானமான குரலில் "செந்திரு! உடம்பு எப்படியிருக்கிறது?" என்று கேட்டுக் கொண்டே வந்தவர், செந்திரு ஆவேசங் கொண்டவள் போல் நிற்பதைப் பார்த்துச் சிறிது திடுக்கிட்டார்.

"எனக்கு உடம்பு ஒன்றுமில்லை" என்றாள் செந்திரு.

"ரொம்ப நல்லது; அப்படியானால் உட்கார். ஏன் இவ்வளவு பதட்டப்படுகிறாய்? உன்னை யார் என்ன செய்கிறார்கள்?" என்றார்.

கவுண்டர் நாற்காலியிலும், செந்திரு அவளுடைய கட்டிலிலும் உட்கார்ந்தார்கள்.

"அநாவசியமாகப் பதட்டப்பட்டுத்தானே அந்த சுவாமியாரின் மொட்டை மண்டையில் கல்லைப் போட்டாய்? பாவம்! சாகக் கிடக்கிறார்!" என்றார்.

"ஐயோ?" என்று அலறினாள் செந்திரு.

"பிழைத்தால் புனர்ஜன்மந்தான். செத்துப் போனால் உன் மேல் கேஸ் வந்தாலும் வரும். நீ பைத்தியம் என்று வேஷம் போட்டது போக, நிஜமாகவே உனக்குப் பைத்தியம் என்று ருசுச் செய்யும்படி வரலாம்" என்றார்.

செந்திரு திகைத்துப் போய் உட்கார்ந்திருந்தாள். விஷயம் அவளுக்கு நன்றாக விளங்கக் கூட இல்லை. சுவாமியார் சாகக் கிடக்கிறார் - தான் எறிந்த கல்லினால் - என்பது மட்டுந்தான் மனதில் நின்றது.

"குழந்தை! இதையெல்லாம் நீயாகவே பண்ணிக் கொண்டாய் என்பதை நினைத்தால் ரொம்ப வருத்தமாகயிருக்கிறது" என்றார் தங்கசாமிக் கவுண்டர்.

"சித்தப்பா! சத்தியமாகச் சொல்லுங்கள். இதெல்லாம் நானாகச் செய்துகொண்டதா? இந்தக் கதிக்கு என்னைக் கொண்டு வந்தது நீங்கள் இல்லையா?" என்று செந்திரு கதறினாள்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:02 am

"இருக்கலாம், அம்மா! என் பேரிலும் கொஞ்சம் தப்புத்தான். ஒப்புக் கொள்கிறேன். கள்ளிப்பட்டிக் கவுண்டரின் அந்தஸ்தை உத்தேசித்து உன்னை அவருக்குக் கட்டிக் கொடுக்க எண்ணினேன். அந்த மனுஷருக்கும் ஆண் குழந்தை இல்லையே, உன் வயிற்றில் ஒரு ஆண் குழந்தை பிறந்தாள் அவ்வளவு சொத்தும் வருமே என்ற ஆசைப் பட்டேன். ஆனால், உனக்கு இஷ்டமில்லை என்றால் அதைச் சொன்னால் போதாதா? சொல்லாமல் கொள்ளாமல், ஊரை விட்டு ஓடி வரலாமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இதனால் நம்மெல்லோருக்குமே எவ்வளவு அவமானம் பார்! உன்னுடைய இஷ்டமில்லாமல் பலவந்தப்படுத்திக் கல்யாணம் செய்து கொடுத்துவிடுவோமா? இதெல்லாம் இந்தக் காலத்தில் நடக்கக் கூடிய காரியமா?... படித்த பெண்ணாகிய உனக்கு இது தெரியாமல் போய் விட்டதே!... ஆனால், உன் பேரில் தவறு இல்லை. 'கரைக்கிறவர்கள் கரைத்தால் கல்லுங்கரையும்' என்பதுபோல், யாருடைய துர்ப்போதனையையோ கேட்டு நீ இந்த மாதிரி செய்து விட்டாய்...!"

கவுண்டர் இவ்வாறு பேசி வந்தபோது முதலிலெல்லாம் செந்திருவுக்குத் தன் பேரிலே தான் ஒருவேளை பிசகோ என்று தோன்றியது. ஆனால், கடைசியில் 'துர்ப்போதனை' என்றதும், அவர் மகுடபதியைத்தான் குறிப்பிடுகிறார் என்று அறிந்து கொண்டாள். அடங்கியிருந்த கோபமெல்லாம் பொங்கியது. "நான் யாருடைய துர்ப்போதனையையும் கேட்கவில்லை. அப்படிச் சொன்னால் பாவம். நீங்கள் தான்..." என்று ஆரம்பித்தாள்.

கவுண்டர் குறுக்கிட்டு, "போனதைப் பற்றி இனிமேல் என்ன செந்திரு! இரண்டு பேரும் அதையெல்லாம் மறந்துவிடுவோம். நேற்று இரவு கனவில் அண்ணன் வந்தார். 'உன்னை நம்பி என் குழந்தையை ஒப்புவித்தேனே! எங்கேயடா என் குழந்தை?' என்று கேட்பது போலிருந்தது. தூக்கத்தில் ஓவென்று அழுதுவிட்டேன். எல்லோரும் என்ன என்று கேட்டுக் கொண்டு வந்துவிட்டார்கள்..." என்று சொல்லி, வேறு பக்கம் திரும்பிக் கண்களைத் துடைத்துக் கொண்டார்.

செந்திருவுக்கு மனம் இளகி விட்டது. அவளும் சேலைத் தலைப்பினால் முகத்தை மூடிக் கொண்டு விம்மி விம்மி அழத் தொடங்கினாள்.

தங்கசாமிக் கவுண்டர் அவளுடைய தலை மீது தடவிக் கொடுத்து, "வேண்டாம் அம்மா! போனதெல்லாம் போகட்டும். என் அண்ணனுக்கு நான் கொடுத்த வாக்கைக் கட்டாயம் நிறைவேற்றுவேன். நீ ஊருக்கே திரும்பி வந்து விடு. கல்யாணத்தைப் பற்றி உன்னை இனிமேல் வற்புறுத்த மாட்டேன். நீ மேஜர் ஆவதற்கு இன்னும் ஒன்றரை வருஷம் தான் இருக்கிறது. அதுவரையில் பொறுத்திரு. அப்புறம் உன் இஷ்டம் போல் செய். இப்போது கிளம்பு, போகலாம்" என்றார்.

மறுபடியும் ஏதாவது சூழ்ச்சி செய்கிறார்களோ என்று ஒரு நிமிஷம் செந்திருவுக்குச் சந்தேகம் தோன்றிற்று. ஆனாலும் இந்த மலைச் சிறையில் இருப்பதைக் காட்டிலும், ஊருக்குப் போனாலும் பாதகமில்லை என்று கருதினாள். எனவே சித்தப்பாவுடன் புறப்படச் சம்மதித்தாள்.

பங்களாவின் வாசலுக்கு வந்த போது, அங்கே கள்ளிப்பட்டிக் கவுண்டரைக் கண்டதும் அவளுக்கு நெஞ்சு திடுக்கிட்டது. ஆனால், கள்ளிப்பட்டிக் கவுண்டர் அவர்களைத் தொடர்ந்து வந்த காரில் ஏறவில்லை. இது அவளுக்குத் தைரியத்தை உண்டாக்கிற்று. அவர் இல்லாமலே கார் கிளம்பிய போது அவளுக்கு உற்சாகமே உண்டாகிவிட்டது. "இவர்களுக்குள் ஏதோ சண்டை போலிருக்கிறது; ரொம்ப நல்ல காரியம். அந்தப் பாவியின் சிநேகம் இல்லாவிட்டால் சித்தப்பா நல்லவராகவே ஆகிவிடுவார்" என்று நினைத்தாள்.

கார் போன பிறகு, கள்ளிப்பட்டிக் கவுண்டர் நடையில் வாசற்படியுள்ள முன் அறையில் போய் உட்கார்ந்து கொண்டார். அங்கிருந்து ஜன்னல் வழியாகப் பார்த்தார். அந்தப் பங்களாவுக்கு வரும் பாதை நன்றாகத் தெரிந்தது. அடிக்கடி அந்தப் பாதையைக் கவுண்டர் ஆவலுடன் உற்று நோக்கிய வண்ணமிருந்தார். வலையை விரித்து விட்டு, பட்சி எப்போது வந்து சிக்கிக் கொள்ளும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வேடனுடைய முகபாவம் கவுண்டரின் முகத்தில் அப்போது தோன்றிற்று. சாப்பாடு, சிற்றுண்டி முதலியவையும் அந்த அறையிலேயே நடந்தது. மேஜை டிராயரிலிருந்து அடிக்கடி கைத்துப்பாக்கியை எடுப்பதும், அதன் விசையில் விரலை வைப்பதும், மறுபடியும் மேஜைக்குள் வைத்து மூடுவதுமாக இருந்தார். தோட்டக்காரனையும் அடிக்கடி கூப்பிட்டு, பாதையைப் பார்த்துக் கொண்டிருக்கும்படியும், யாராவது வருவது தெரிந்தால் உடனே தெரிவிக்கும்படியும் கட்டளையிட்டார். நேரம் ஆக ஆக, அவருடைய பொறுமை குறைந்து வந்தது. அறையில் அங்குமிங்கும் வேகமாக உலாவினார். கடைசியில், தூரத்தில் மகுடபதி வருவது தெரிந்ததும், அவருடைய முகத்திலும் கண்களிலும் பயங்கரமான குரோதத்தின் விகாரம் தோன்றியதுடன், உற்சாகத்தின் அறிகுறியும் காணப்பட்டது. வேலைக்காரனை மறுபடியும் கூப்பிட்டு வருகிற ஆளை உள்ளே விட்டு வெளிக் கதவை சாத்தி விடும்படிக் கட்டளையிட்டார். பிறகு கைத்துப்பாக்கியைக் கையில் எடுத்துக் கொண்டு மேஜைக்கு முன்புறமாக வந்து நின்றார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் சென்ற அத்தியாயத்தில் இறுதியில் கூறியபடி, மகுடபதி உள்ளே நுழைந்தான். "வா அப்பா, வா! உனக்காகத்தான் காத்திருக்கிறேன்!" என்று அவனை வரவேற்றார் கவுண்டர்.

மகுடபதி சொல்ல முடியாத ஏமாற்றத்துடனும் பயங்கரத்துடனும் கார்க்கோடக் கவுண்டரையும் அவர் கையிலிருந்த துப்பாக்கியையும் மாறி மாறிப் பார்த்தான். இதைக் கவனித்த கவுண்டர், "ஓகோ! இங்கே என்னை எதிர்பார்க்கவில்லையாக்கும். வேறு யாரையோ எதிர்பார்த்தாயாக்கும்! பாதகமில்லை வா! முன் இரண்டு தடவை என்னிடமிருந்து தப்பித்துக் கொண்டாய்; இந்தத் தடவை தப்பிக்க முடியாது!" என்றார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:03 am

இருபத்தைந்தாம் அத்தியாயம் - "கவுண்டா! சுடாதே!"

கார்க்கோடக் கவுண்டர் "இந்தத் தடவை தப்பிக்க முடியாது" என்று சொன்னபோது மகுடபதி அதனுடைய உண்மையைப் பூரணமாக உணர்ந்தான். ஒரு நிமிஷ நேரத்துக்குள் அவன் உள்ளத்தில் ஆயிரம் எண்ணங்கள் தோன்றி மறைந்தன. ஆகா! கடைசியில் இதுதானா முடிவு? இந்தக் கொலைகாரன் கையினால் சாவதற்குத்தானா இவ்வளவு பிரயாசமும்! சாமியாரின் பேச்சைத் தட்டி விட்டு வந்தேனே?... பெரியண்ணன் எப்படித் தவிப்பான்?... ஐயோ! செந்திரு... அவள் கதி என்ன? அடுத்த ஜன்மத்திலாவது அவளை அடைவோமா?

"என்னடா திருட்டு முழி முழிக்கிறாய்? இங்கே எதற்காக வந்தாய்? இது உன் அப்பன் வீடா..." என்ற கவுண்டரின் கடுமையான குரலைக் கேட்ட மகுடபதி சுய நினைவை அடைந்தான். "உன் அப்பன் வீடா?" என்ற கேள்வி அவனுக்கு என்னவெல்லாமோ ஞாபகங்களை உண்டாக்கிற்று. தான் தாய் தந்தையில்லாத அனாதை என்பதும், திருவிழாக் கூட்டத்தில் கிடந்து அகப்பட்டவனென்பதும் நினைவுக்கு வந்தது. வளர்ப்புப் பெற்றோர்களில் தகப்பனார் காலமாகி விட்டார். தாயார் மட்டுந்தான் வேங்கைப்பட்டிக் கிராமத்தில் ஓர் இடிந்த வீட்டில் இருக்கிறாள். ஐயோ! தன்னை எத்தனையோ அன்பாய் வளர்த்த அந்த அம்மாள் இவ்விதம் தான் செத்ததை அறிந்தால் எவ்வளவு துக்கப்படுவாள்?

ஏற்கெனவே பலவிதத் துயரங்களினாலும் ஏமாற்றங்களினாலும் இளகியிருந்த மகுடபதியின் உள்ளம் இந்த நினைவினால் ரொம்பவும் உருகிவிட்டது. அவன் கண்களில் குபீரென்று நீர் ததும்பியது.

"அடே கோழை! அழுகிறாயா? உன் வீர தீரமெல்லாம் இவ்வளவுதானா? மீட்டிங்குகளிலே பிரமாதமய்ப் பேசினதெல்லாம் வெறும் வாய்ப் பேச்சுத்தானோ? கள்ளை ஒழிப்பதற்காக 'உயிரைக் கொடுப்பேன்' என்றெல்லாம் வீராப்புப் பேசினாயே? இப்போது பெண்பிள்ளை மாதிரி அழுகிறாயே?' என்றார் கவுண்டர்.

மகுடபதியின் உள்ளத்தில் அமுங்கிக் கிடந்த கோபமெல்லாம் பொங்கி எழுந்தது.

"பாவி! துரோகி...!" என்று ஆரம்பித்தான். ஆனால் ஆத்திரமிகுதியினாலே ஒன்றும் பேச முடியவில்லை.

"அவ்வளவுதானா!" என்று கவுண்டர் கூறிப் பயங்கரமாய்ச் சிரித்தார்.

"கொலைகாரா!..." என்றான் பல்லைக் கடித்துக் கொண்டு.

"அப்புறம்?"

"அப்புறம் நீ நரகத்துக்குப் போவாய். உன்னோடு பேச எனக்கு இஷ்டமில்லை. உன் எதிரில் நிற்பதே பாவம். துப்பாக்கியை வைத்துக் கொண்டு ஏன் நிற்கிறாய்? குண்டு இருக்கிறதா? வெறும் ஓட்டைத் துப்பாக்கியா?" என்றான் மகுடபதி.

"செத்துப் போவதற்கு அவ்வளவு அவசரமா?" என்றார் கவுண்டர்.

"அவசரந்தான். உன்னைப் போன்ற பாவிகள் உலகத்தில் இருக்கிறதை விட இறந்து போவது மேல்..."

"அப்படியானால், உயிரோடிருக்கவே உனக்கு இஷ்டமில்லையா?"

இதைக் கேட்டதும் மகுடபதிக்குச் சிறிது நம்பிக்கை உண்டாயிற்று. ஒரு வேளைக் கார்க்கோடக் கவுண்டரின் மனது கூட இளகிவிட்டதோ? தன்னைக் கொல்வதற்கு அவருக்கு மனம் வரவில்லையோ? இல்லாவிட்டால் இத்தனை நேரம் ஏன் தயங்கிக் கொண்டு நிற்கிறார்? அவருடைய மனது உண்மையில் இளகியிருக்கும் பட்சத்தில் இந்தச் சமயத்தில் கொஞ்சம் போதனை செய்து அவருடைய மனதைத் திருப்ப முயல்வதே மேல் அல்லவா? மகாத்மா, அவருடைய அஹிம்சா தர்மம், அன்பு மதம் எல்லாம் மகுடபதியின் மனதில் தோன்றின. "பகைவனுக்கருள்வாய்" என்னும் பாரதியார் பாட்டின் வரிகளையும் நினைவு படுத்திக் கொண்டான். தன்னுடைய துவேஷம், கோபம், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டு, முகத்தில் மலர்ச்சியை வருவித்துக் கொண்டு கவுண்டரைப் பார்த்துச் சொன்னான்:

"அப்படியொன்றும் நான் வாழ்வை வெறுத்து விடவில்லை. இந்த உலகத்தில் ஜீவித்திருக்கத்தான் விரும்புகிறேன். தேசத்துக்காக இன்னும் எவ்வளவோ தொண்டுகளைச் செய்ய விரும்புகிறேன். இந்தப் பாரத தேசம் சுதந்திரம் அடைந்து பார்க்க ஆசைப்படுகிறேன். இந்தியக் குடியரசின் முதலாவது பிரசிடெண்டாக பண்டித ஜவஹர்லால் நேரு வருவதைப் பார்க்க விரும்புகிறேன். நீங்களும் இந்தத் தேசத்தில் பிறந்தவர் தான்; பாரத மாதாவின் புதல்வர்தான். உங்கள் கையினால் சாவதைக் காட்டிலும், போலீஸ் துப்பாக்கியினால் சாக நேர்ந்தால் எவ்வளவோ சந்தோஷமாக உயிரை விடுவேன் ஐயா! உண்மையில், உங்களுக்கு நான் என்ன கெடுதல் செய்தேன்? எதற்காக என்னை நீங்கள் கொன்று பாவத்துக்குள்ளாக வேண்டும்? உங்களுடைய இதயத்தில் கையை வைத்துச் சொல்லுங்கள்..."

மகுடபதியின் பேச்சினால் கவுண்டரின் மனம் எவ்வளவு தூரம் மாறியதோ, என்னமோ, தெரியாது. அவர், "இந்தப் பிரசங்கமெல்லாம் வேண்டியதில்லை. நீ உயிர் தப்ப வேண்டுமானால், அதற்கு வழியிருக்கிறது" என்றார்.

மகுடபதி மௌனமாயிருந்தான். அவன் உள்ளத்தில் மறுபடியும் சந்தேகங்கள் தோன்றின.

"இங்கே வா! இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டாயானால் இங்கிருந்து பிழைத்துப் போகலாம்" என்று கவுண்டர் சொல்லி, தம்முடைய சட்டைப் பையிலிருந்து ஒரு காகிதத்தையும் பௌண்டன் பேனாவையும் எடுத்து மேஜை மேல் வைத்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:04 am

மகுடபதி தயக்கதுடன் மேஜையண்டை நெருங்கினான். மேஜைமேல் விரித்து வைத்திருந்த காகிதத்தைப் படிக்கத் தொடங்கினான். பக்கத்தில் கவுண்டர் கையில் பிடித்த துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.

காகிதத்தில் சில வரிகள் படித்ததுமே மகுடபதியின் இரத்தம் கொதிக்கத் தொடங்கியது. ஆத்திர மிகுதியினால் மண்டை வெடித்துவிடும் போலிருந்தது. பக்கத்தில் நின்ற கவுண்டரை அவனுடைய உடம்பின் ஒவ்வொரு அணுவும் வெறுத்தது.

அந்தக் காகிதத்தில் எழுதியிருந்தது இதுதான்:

"கள்ளிப்பட்டி மகா-ள-ள-ஸ்ரீ கார்க்கோடக் கவுண்டர் அவர்களுக்கு மகுடபதி தாழ்மையுடன் நமஸ்காரம் செய்து எழுதிக் கொண்ட விண்ணப்பம்.

நான் இத்தனை நாளும் செய்த குற்றங்களை மனப்பூர்வமாக ஒப்புக் கொண்டு தங்களுடைய மேலான மன்னிப்பைக் கோருகிறேன். காங்கிரஸ் தொண்டன் என்று நான் வேஷம் போட்டுக் கொண்டு பணம் வசூலித்துத் துன்மார்க்கமான காரியங்களுக்கு உபயோகப்படுத்தியது உண்மை. தங்களுடைய கண்டிராக்ட்டில் உள்ள கள்ளுக்கடைகளை மறியல் செய்யாமலிருப்பதற்காகத் தங்களிடம் பணம் கேட்டது நிஜம். தாங்கள் கொடுக்காதபடியினால் தங்களுடைய கள்ளுக்கடைகளில் கடுமையாக மறியல் நடத்தியதும் நிஜம். சிங்கமேடு தங்கசாமிக் கவுண்டர் தமையனார் பெண் செந்திரு சித்த சுவாதீனமில்லாமலிருப்பது தெரிந்ததும், அவளுடைய நகைகளை அபகரிக்கும் எண்ணத்துடன் அவளை ஊரை விட்டுக் கடத்திக் கொண்டு போனேன். பெரியண்ணன் வந்து என்னைக் கைப்பிடியாய்ப் பிடித்த போது, அவனைக் கத்தியால் குத்திவிட்டேன். இப்பேர்ப்பட்ட பாதகமான காரியங்களையெல்லாம் செய்ததன் பொருட்டு மிகவும் பச்சாதாபப் படுகிறேன். தாங்களும், மகா-ள-ள-ஸ்ரீ தங்கசாமிக் கவுண்டரும் ரொம்பவும் பெரிய மனது செய்து என்னை இந்தத் தடவை மன்னித்து விட்டுவிட்டால், இனிமேல் இப்பேர்ப்பட்ட துர்க்காரியங்களில் இறங்குவதில்லை என்று கடவுள் சாட்சியாகப் பிரமாணம் செய்கிறேன். அதோடு, இந்தக் கோயமுத்தூர் ஜில்லாவில் அடி வைப்பதில்லையென்றும் பிரமாணம் செய்கிறேன். துராக்கிரமாக இன்றைக்கு உங்களுடைய பங்களாவில் நுழைந்ததற்காகவும் என்னை மன்னித்துவிடும்படி வேண்டிக் கொள்கிறேன்."


கடிதத்தை எப்படியோ முழுவதும் மகுடபதி படித்து முடித்தான். ஆனாலும், கடிதத்தை விட்டுக் கண்களை அகற்றாமல் தீவிரமாக யோசனை செய்யத் தொடங்கினான். இந்தக் காகிதத்தில் தன்னைக் கையெழுத்திடச் செய்யும் நோக்கம் இன்னதென்பது அவனுக்கு ஸ்பஷ்டமாக விளங்கிவிட்டது. செந்திருவிடம் இதைக் காட்டித் தன்னிடம் அளவில்லாத அருவருப்பு அவளுக்கு உண்டாகும்படி செய்வர்கள். இன்னும் பலருக்குப் பகிரங்கப்படுத்திக் கோயமுத்தூர் ஜில்லாவில் தான் தலைகாட்ட முடியாதபடி செய்வார்கள். காங்கிரஸின் பெயருக்கே அழியாத மாசு தன்னால் உண்டாகிவிடும்... இந்தக் காகிதத்தில் கையெழுத்துப் போட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்வதைக் காட்டிலும் உயிரை விட்டு விடுவதே மேல். சித்திரவதை செய்தாலும் இதில் கையெழுத்துப் போடக்கூடாது. ஆனால் தான் உயிரை ஏன் விட வேண்டும்? இப்பேர்ப்பட்ட பாதகன் உலகத்தில் ஏன் ஜீவித்திருக்க வேண்டும்? தான் சாக வேண்டியிருந்தாலும் இவனைக் கொன்று விட்டு ஏன் சாகக் கூடாது? ஆம்; மகுடபதி பல்லைக் கடித்துக் கொண்டு அவ்விதம் தீர்மானித்தான். எப்படியாவது இன்றைக்கு இந்தக் கொடும் பாதகனை யமலோகத்துக்கு அனுப்பிவிட வேண்டும். பிறகு தனக்கு என்ன கதி நேர்ந்தாலும் பாதகமில்லை. ஆனால், எப்படி?...எப்படி?... இவன் கையிலுள்ள துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டு சுட்டால் என்ன? ... அது சாத்தியமா? படீரென்று தட்டி விடலாமா? ஆளையே பலமாகப் பிடித்துத் தள்ளி விடலாமா?... மேஜையின் கீழ் புகுந்து அப்பால் சென்று நாற்காலியை எடுத்து எறியலாமா?...

"என்னப்பா கையெழுத்துப் போடப் போகிறாயா?" என்று கவுண்டரின் குரல் கேட்டது.

மகுடபதி நிதானமான குரலில், "கடவுள் சாட்சி போதுமா?" என்றான்.

"போதாது; நீ கடவுள் இல்லையென்று சாதித்து விடுவாய். மடத்துச் சாமியாரை இங்கே அழைத்துவரச் செய்கிறேன். அவர் சாட்சி போட வேணும்... ஆ!"

கவுண்டர் அடுத்த கணத்தில் சுவரில் போய்ப் படார் என்று மோதினார். அவர் கையிலிருந்த துப்பாக்கி இன்னொரு பக்கம் போய் விழுந்தது. அதிலிருந்து 'டுடும்' என்று ஒடு வெடி வெடித்தது. அறையில் புகை சூழ்ந்தது. மகுடபதி நாலாபுறமும் பார்த்துவிட்டு அந்தத் துப்பாக்கியை எடுத்துக் கொள்வதற்கு ஓடினான். அதற்குள் அறைக் கதவு திடீரென்று திறந்தது. யமகிங்கரன்போல் வேலைக்காரன் ஓடி வந்து மகுடபதியைக் கட்டிப் பிடித்தான். தட்டுத் தடுமாறி எழுந்திருந்த கவுண்டர், "கட்டு அவனை! மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டு!" என்றார். தோட்டக்காரன் அவ்வாறே மகுடபதியை இழுத்துச் சென்று, தான் மேலே போட்டிருந்த வேட்டியினால் மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டினான்.

கவுண்டர் துப்பாக்கியை மறுபடியும் எடுத்துக் கொண்டார். மகுடபதியை நோக்கிக் குறி பார்த்தார். "அடே! இந்த வேலை கூடத் தெரியுமா உனக்கு? காந்தியின் சீடன் என்றல்லவா பார்த்தேன்?" என்று கூறி ஹஹ்ஹஹ்ஹா என்று பேய் சிரிப்பது போல் சிரித்தார்.

"இதோ பார்! இந்த ரிவால்வரில் இன்னும் ஐந்து குண்டுகள் இருக்கின்றன. ஆனால், உன்னை அவ்வளவு சுலபமாய் விட்டுவிடுவேன் என்று நினைக்காதே! முனியா! கொண்டுவா, சவுக்கை!" என்று கர்ஜித்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:04 am

முனியன் அறைக்கு வெளியே சென்றான். மறுகணத்தில் நடையில் ஏதோ தடபுடல் சத்தம் கேட்டது. "விடு விடு" என்று ஒரு குரல் அலறிற்று. பின்னால் இருந்து இழுத்த முனியனை மீறிக் கொண்டு பெரியண்ணன் உள்ளே வந்தான். அவனுடைய வெறிகொண்ட கண்களால் விழித்துப் பார்த்தான். மகுடபதி கட்டுப் பட்டிருப்பதையும், கார்க்கோடக் கவுண்டர் அவனைச் சுடும் பாவனையாகத் துப்பாக்கியைக் குறிவைத்து நிற்பதையும் கவனித்தான்.

"கவுண்டா! சுடாதே!" என்று அலறினான்.

"ஓகோ! நீயும் வந்துவிட்டாயா?" என்றார் கார்க்கோடக் கவுண்டர்.

"ஆமாம்; வந்து விட்டேன் கவுண்டா! நல்ல சமயத்தில் தான் வந்தேன். அவனைச் சுடாதே! உன் தலை மேல் ஆணை!" என்று பெரியண்ணன் கத்தினான்.

"சீ, நாயே! உன்னை யார் கேட்டது? முனியா! இழுத்துக் கட்டு அவனையும்!" என்றார் கவுண்டர்.

"என்னைக் கட்டு! என்னைச் சுடு! கொல்லு! அந்தப் பிள்ளையைச் சுடாதே!"

"ஓகோ! அப்படியா? உன் கண்ணெதிரிலேயே சுடுகிறேன் பார்!" என்று கார்க்கோடக் கவுண்டர் மகுடபதியை நோக்கிக் குறி பார்த்து விசையிலும் கையை வைத்தார்.

"ஐயோ வேண்டாம், கவுண்டா! அவன் உன் மகன்!" என்று பெரியண்ணன் அலறினான்.

"என்ன!" என்று கூவினார் கவுண்டர்.

"ஆமாம்; காணாமற்போன உன் மகன் தான். இடது காதுக்குப் பின்னால் அடையாளம் இருக்கிறது. வேணுமானால் பார்த்துக் கொள்" என்றான் பெரியண்ணன்.

கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய உடம்பு வெட வெடவென்று ஒரு நிமிஷம் நடுங்கியது. அவருடைய கையிலிருந்த துப்பாக்கி கீழே விழுந்தது. மறுகணம் அவரும் தள்ளாடி சுருண்டு கீழே விழுந்தார்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:05 am

இருபத்தாறாம் அத்தியாயம் - காணாமற் போன குழந்தை

"என் அருமைத் தோழி பங்கஜத்துக்கு உன் அன்பும் ஆறுதலும் நிறைந்த கடிதம் கிடைத்தது. ஆமாம்; என் வாழ்க்கையில் மகா அதிசயமான சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. நீ கற்பனை செய்து எழுதிய எந்த நாவலிலும் இம்மாதிரி அற்புத சம்பவங்கள் நடந்திருக்க முடியாது. கடிதத்தில் விரிவாக எழுதுவதற்கில்லை. நேரில் பார்க்கும் போது எல்லாம் சொல்லுகிறேன். என்னுடைய காதலருக்கு நீ அன்றிரவு செய்த ஒத்தாசையைப் பற்றிச் சொன்னார். ரொம்ப ரொம்ப ரொம்ப வந்தனம். மற்றவை நேரில்.

இப்படிக்கு
செந்திரு"

மேற்படிக் கடிதத்தைப் பங்கஜம் கையில் வைத்துக் கொண்டு அதைத் திரும்பத் திரும்ப படிப்பதும், எழுந்து அறைக்குள் நடமாடுவதும், ஜன்னல் வழியாய் எட்டிப் பார்ப்பதுமாயிருந்தாள். "இன்னும் அப்பா வரக் காணோமே?" என்று அதிருப்தியுடன் முணுமுணுத்துக் கொண்டாள்.

கடைசியில், வாசலில் வண்டி வந்து நின்றது. அய்யாசாமி முதலியார் வண்டியிலிருந்து இறங்கி உள்ளே வந்தார். பங்கஜம் ஓடி அவரை வரவேற்றுக் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வந்து ஈஸிசேரில் உட்கார வைத்தாள்.

"சொல்லுங்கள்; உடனே சொல்லுங்கள். ஒன்று விடாமல் சொல்ல வேணும்!" என்றாள்.

"மூச்சு விடுவதற்குக் கொஞ்சம் அவகாசம் கொடேன்!" என்றார் முதலியார்.

"அதெல்லாம் முடியாது. உடனே சொல்ல வேணும். என்ன ஆச்சரியம் அப்பா! மகுடபதி கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய சொந்தப் பிள்ளையாமே? நிஜந்தானா?" என்று பங்கஜம் துடித்தாள்.

"நிஜந்தான் அம்மா, நிஜந்தான். இன்னும் எவ்வளவோ அதிசயம். கேட்டாயானால், நீ கதை எழுதுவதையே விட்டு விடுவாய்?" என்றார்.

பிறகு முதலியார் நீட்டி முழக்கி வளர்த்திக் கூறிய வரலாற்றின் சாராம்சம் பின்வருமாறு:

மகுடபதியின் தாயார் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய இரண்டாவது மனைவி. மகுடபதிக்கு நாலு வயதாயிருந்த போது அவள் அடுத்த பிரசவத்துக்காகச் சேவல் பாளையத்திலிருந்த தன் தாயார் வீட்டுக்குப் போனாள். மகுடபதியையும் பின்னோடு அழைத்துப் போயிருந்தாள். கவுண்டருடைய மற்ற மனைவிமாருக்கு ஆண் குழந்தைகள் இல்லை. ஆகையால் அவர்களுக்கெல்லாம் மகுடபதியின் தாயிடம் ரொம்பவும் வயிற்றெரிச்சல். இரண்டாவது, கர்ப்பத்தின் போது அவர்கள் சாப்பாட்டில் விஷ பதார்த்தம் கலந்து தனக்குக் கொடுத்து விட்டதாக அவள் சந்தேகங் கொண்டிருந்தாள். அதற்குத் தகுந்தாற்போல், இரண்டாவது குழந்தை செத்துப் பிறந்தது. தானும் பிழைப்பது துர்லபம் என்று அவளுக்குத் தெரிந்து போகவே, அவளிடம் அந்தரங்க விசுவாசம் வைத்திருந்த பெரியண்ணனைக் கூப்பிட்டு, "மாமா! இந்தக் குழந்தையை நீதான் காப்பாற்ற வேண்டும். கள்ளிப்பட்டியிலிருந்தால் கட்டாயம் என் சக்களத்திமார்கள் கொன்று விடுவார்கள். எங்கேயாவது கண்காணாத சீமைக்குக் கொண்டு போய் விடு. வயதான பிறகு அழைத்துக் கொண்டு வந்து இவனுடைய அப்பனிடம் ஒப்புவி. அடையாளத்துக்கு இதைக் காட்டு!" என்று சொல்லி, குழந்தையின் இடது காதுக்குப் பின்னால் முக்கோணம் போல் இருந்த மூன்று மச்சங்களையும் காட்டினாள். தான் இரகசியமாகச் சேர்த்து வைத்திருந்த பணத்தையும் தன் நகைகளையும் கூடப் பெரியண்ணனிடம் கொடுத்து, தான் சொன்னபடி செய்வதாக அவனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டாள். இதெல்லாம் அவளுடைய பிறந்த வீட்டில் கூட யாருக்குமே தெரியாது.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:05 am

பெரியண்ணன் அன்றிரவே குழந்தையை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். ரயிலில் ஏறினால் தெரிந்து போய்விடுமென்று கால்நடையாகவே சில நாள் பிரயாணம் செய்து கொண்டு போனான். குழந்தைக்குப் பெரியண்ணனிடம் ஆசை உண்டு என்றாலும், தாயார், பாட்டி முதலியவர்களைப் பிரிந்ததனாலும் ஊர் ஊராய்ப் போனதனாலும் ரொம்பவும் அழுது தவித்துக் கொண்டிருந்தது. பெரியண்ணன் பழனிக்குப் போனபோது, அங்கே கிருத்திகை உற்சவம் பலமாக நடந்து கொண்டிருந்தது. ஏகக் கூட்டம். பெரியண்ணன் எவ்வளவோ நல்லவன் தான்; ஆனால் மதுபானப் பழக்கமுள்ளவன். ஒரு கள்ளுக்கடைக்குப் பக்கத்தில் குழந்தையை விட்டு விட்டுக் கடைக்குள் போனான். திரும்பி வந்து பார்த்தால் குழந்தையைக் காணோம். அலறிப் புடைத்துக் கொண்டு அந்த உற்சவக் கூட்டத்தில் தேடுதேடென்று தேடினான். பிரயோசனப்படவில்லை. உற்சவம் முடிந்த பிறகும் ஒரு மாதம் வரையில் பழனியில் தங்கித் தெருத் தெருவாய்ப் பைத்தியக்காரன்போல் சுற்றி அலைந்து கொண்டிருந்தான். பிரயோசனப்படவில்லை. ஊருக்குத் திரும்பிப் போகவும் மனம் வரவில்லை. ஆகவே, கண்டிக்குப் போய்விட்டான். பலவருஷங் கழித்துத் திரும்பி வந்து கோயமுத்தூர் ஜில்லாவிலேயே பெரிய குடிகாரன் பெயர் வாங்கினான். இப்படிப்பட்ட சமயத்திலேதான் அவன் காங்கிரஸ் தொண்டு செய்து வந்த மகுடபதியைச் சந்தித்தான். முதலில் பரம விரோதியாயிருந்து, கேஸில் தனக்குச் சாதகமாகப் பேசி விடுதலை செய்த பிறகு, அவனுக்கு ரொம்ப வேண்டியவனாகி, மதுவிலக்குப் பிரச்சாரமும் செய்துவந்தான். மகுடபதி ஒரு நாள் தனக்குத் தாய் தகப்பன் இல்லையென்றும், தன்னுடைய வளர்ப்புப் பெற்றோர்கள் பழனி உற்சவக் கூட்டத்தில் தன்னைக் கண்டெடுத்தார்கள் என்றும் சொன்னபோது, பெரியண்ணனுக்குத் தூக்கி வாரிப் போட்டது. மகுடபதி நன்றாய்த் தூங்கும் சமயத்தில் அவனுடைய இடது காதை மடித்துப் பார்த்து அடையாளமிருப்பதைத் தெரிந்து கொண்டான். அதைத் தக்க சமயத்தில் வெளியிட வேண்டுமென்று காத்திருந்தான்.

கூனூர் மடத்திலிருந்து மகுடபதி கிளம்பியபோது, பெரியண்ணனுக்கு மனது சமாதானம் ஏற்படவில்லை. கொஞ்ச தூரம் பின்னாலேயே அவனைத் தொடர்ந்து போனான். தக்க சமயத்தில் பங்களாவுக்குள் தோட்டக்காரனை மீறிக் கொண்டு நுழைந்து, உண்மையை வெளியிட்டு மகுடபதியின் உயிரைக் காப்பாற்றியதுடன், கள்ளிப்பட்டிக் கவுண்டரையும் புத்திர ஹத்தி பாவத்திலிருந்து காப்பாற்றினான்.

எல்லாம் கேட்ட பிறகு, "சரி அப்பா! இப்போது எப்படி இருக்கிறார்கள் எல்லோரும், சந்தோஷமாயிருக்கிறார்களா?" என்று பங்கஜம் கேட்டாள்.

"சந்தோஷத்துக்கு என்ன குறைவு? கார்க்கோடக் கவுண்டர் மட்டுந்தான் படுத்த படுக்கையாகிவிட்டார். ஏற்கெனவே, அவருக்குக் கொஞ்சம் பட்ச வாத ரோகம் உண்டாம். இந்த அதிர்ச்சியினால் அது முற்றிவிட்டது. கைகால்கள் கூட அசைக்க முடியாமல் கிடக்கிறார். ஆனாலும் செய்ய வேண்டியதையெல்லாம் செய்து விட்டார். சொத்தையெல்லாம் மகுடபதிக்கே 'உயில்' எழுதி வைத்திருக்கிறார். பையன் இருக்கிறானே, உத்தமமான குணம், உயர்ந்த நோக்கம். பூர்வீகமான சொத்தை மட்டும் தான் வைத்துக்கொண்டு, கள்ளுக்கடையில் வந்த பணத்தை யெல்லாம் தர்மத்துக்குக் கொடுத்து விடுகிறானாம். கூனூர் சச்சிதானந்த மடத்துக்கு நல்ல வேட்டை. நமது சைவ சித்தாந்தக் கழகத்துக்குக் கூட நன்கொடை கேட்டிருக்கிறேன். இருக்கட்டும். பங்கஜம்! அந்தப் பையன் நம்ம வீட்டில் வந்து ஒருநாள் சமையல் பண்ணினானாம். நீதான் அவனுக்குப் பணங் கொடுத்துக் கூனூருக்கு அனுப்பினாயாமே?" என்றார்.

"ஆமாம் அப்பா!"

"பலே கைகாரி நீ! உன் தோழிக்கு உன்னை உடனே பார்க்க வேணுமாம். இன்னும் எத்தனையோ அந்தரங்கம் உன்னிடம் சொல்ல வேண்டியிருக்கிறதாம். நாளைக்கே புறப்பட்டு வரச் சொல்லியிருக்கிறாள்."

"நாளைக்கா அப்பா! இன்றைக்கே புறப்படக் கூடாதா?" என்றாள் பங்கஜம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:07 am

இருபத்தேழாம் அத்தியாயம் - ஓடைக்கரை

சிங்கமேட்டு ஓடைக்கரை இந்த வரலாற்றில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிக்கிறது. அந்த அழகான இடத்துக்கு இன்னொரு தடவை போகாமல் கதையை முடிப்பதற்கு மனம் வரவில்லை.

மாலை நாலு மணி இருக்கும். ஓடை ஜலம் நிர்மலமாயிருந்தது. ஆங்காங்கே கரையோரத்தில் உட்கார்ந்திருந்த வெண் கொக்குகள் நீரில் பிரதிபலித்தன. ஓடைக் கரையில் இருபுறமும் வளர்ந்திருந்த கல்யாண முருங்கை மரங்களில் இளந்தளிர்களும் சிவப்புப் பூக்களும் குலுங்கிக் கொண்டிருந்தன. மந்தமாகத் தவழ்ந்து வந்த குளிர்ந்த காற்றில் அவை இலேசாக ஆடின. மரக் கிளைகளில் உட்கார்ந்திருந்த குருவிகள், ஒன்றின் மூக்கை ஒன்று கொத்திக் கலகலவென்று சப்தித்தும், அவ்வப்போது ஜிவ்வென்று பறந்து போய்த் திரும்பி வந்து உட்கார்ந்தும் விளையாடிக் கொண்டிருந்தன.

குருவிகள் குரலுடன் போட்டியிடுவது போல் கலகலவென்று பெண்கள் சிரிக்கும் ஒலி கேட்டது. பங்களாவின் பக்கமிருந்து இரண்டு இளம் பெண்கள் வந்து கொண்டிருந்தார்கள். கைகோத்துக் கொண்டு நடந்த அவர்களுடைய முகத்தில் குதூகலம் தாண்டவமாடியது. அவர்கள் வேறு யாருமில்லை, செந்திருவும் பங்கஜமுந்தான்.

பங்கஜத்தின் குரல்தான் ஓங்கியிருந்தது. "எந்த மரமடி அது? அதோ தெரிகிறதே, அதுவா? நீ எப்படிப் படுத்துக் கொண்டிருந்தாய்? கண்ணை எவ்விதம் மூடிக் கொண்டிருந்தாய்? அவன் என்ன செய்தான்? - என்றெல்லாம் நடந்தது போலவே காட்டவேண்டும். நீ என்ன பேசினாய்? அவன் என்ன பதில் சொன்னான் என்பதையெல்லாம் ஒரு வார்த்தை விடாமல் சொல்ல வேண்டும்" என்று பங்கஜம் மூச்சு விடாமல் பேசிக் கொண்டே வந்தாள்.

செந்திரு சிரித்துக் கொண்டே ஓடி, ஒரு மரத்தடிக்கு வந்ததும், "இந்த மரந்தானடி" என்றாள்.

"சரி; நான் தான் அந்தக் காந்திக் குல்லாக்காரன் என்று வைத்துக்கொள். நீ என்ன செய்தாய்? அந்த மாதிரியே செய்து காட்டு!" என்றாள் பங்கஜம்.

செந்திரு தரையில் படுத்துக் கொண்டு கண்ணையும் மூடிக் கொண்டாள்.

அப்போது பங்கஜம், நாடகமேடைக் கதாநாயகனுடைய தோரணையில் செந்திருவின் பக்கத்தில் மண்டியிட்டு உட்கார்ந்து, "என் கண்ணே! கண்மணியே! தாமரை இதழையும், கருவண்டையும், மீனையும், வேலையும் ஒத்த உன் அழகான கண்களைத் திறந்து என்னைப் பாராயோ?" என்று சொல்லிக் கொண்டு சட்டென்று குனிந்து செந்திருவின் கன்னத்தில் முத்தமிட்டாள். குபீரென்று சிரித்துக் கொண்டு செந்திரு எழுந்து உட்கார்ந்தாள்.

பங்கஜம் அவளுடைய கழுத்தைக் கட்டிக் கொண்டு, "அடியே! நிஜமாகச் சொல்! இப்படித்தானே அவன் உண்மையில் செய்தான்? நீ என்னிடம் சொன்னதெல்லாம் பொய் தானே?" என்றாள்.

பதினாறு, பதினேழு வயதுப் பெண்கள் இரண்டு பேர் சேர்ந்தால் அவர்களுடைய பேச்சு, கொஞ்சம் அசட்டுப் பிசட்டு என்றும், தத்துப் பித்து என்றும் இருப்பதில் வியப்பில்லையல்லவா? எனவே, இவர்களும் அம்மாதிரி பேசுவதற்குப் பதினைந்து நிமிஷம் கொடுத்து விடுவோம். ஓடைக்கரையை ஒரு சுற்றுச் சுற்றுவிட்டு வருவோம்.

பதினைந்து நிமிஷம் கழித்து நாம் திரும்பி வந்து பார்க்கும் போது காட்சி ஒருவாறு மாறியிருப்பதைக் காண்கிறோம். அதே இரண்டு பெண்கள் அதே மரத்தடியில்தான் இருக்கிறார்கள். ஆனால் இருவர் முகத்திலும் குதூகலத்துக்குப் பதிலாகச் சோகக் குறி காணப்படுகிறது.

செந்திருவின் கண்களில் ஜலம் ததும்பிக் கொண்டிருக்கிறது. "மறுபடியும் இந்த ஓடைக் கரையில் இவ்வளவு சந்தோஷமாக ஒருநாள் உட்கார்ந்திருப்போம் என்று நான் சொப்பனத்திலும் எண்ணவில்லை, பங்கஜம்!" என்றாள் செந்திரு.

"போனதைப் பற்றி இனிமேல் என்ன? கடவுள் அருளால் எல்லாந்தான் சந்தோஷமாக முடிந்து விட்டதே!" என்றால் பங்கஜம்.

"கடவுள் அருள்தான்; சந்தேகம் என்ன? ஒரு தடவையா? இரண்டு தடவையா? கடைசியில் தான் பாரேன்! பெரியண்ணக் கவுண்டன் இன்னும் ஐந்து நிமிஷம் கழித்து வந்திருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? ஐயோ! நினைப்பதற்கே பயமாயிருக்கிறது" என்று செந்திரு கூறியபோது, அவளுடைய உடம்பு நடுங்கிற்று.

"என்ன ஆகியிருக்கும், சொந்தப் பிள்ளையைத் தகப்பன் சுட்டுக் கொன்றிருப்பான்! எனக்கு என்ன அதிசயம் என்றால், அப்பேர்ப்பட்ட தகப்பனிடத்தில் திடீரென்று பிள்ளைக்கு இவ்வளவு வாஞ்சையும், பக்தியும் எப்படி உண்டாயிற்று என்பதுதான். உலக இயற்கைக்கே மாறாய்த் தோன்றுகிறது எனக்கு."

"கடவுள்தான் அவரைத் தண்டித்து விட்டாரே, பங்கஜம்! இனிமேல் சாகிற வரையில் அவர் படுத்த படுக்கையாய்த் தான் கிடக்க வேண்டுமாம். கை கால் சுவாதீனமே இராதாம். படுக்கையில் எழுந்து உட்கார வேண்டுமானால் இரண்டு பேர் பிடித்துத் தூக்கிவிட வேண்டுமாம். இப்படியாகி விட்ட தகப்பனாரிடம் எந்தப் பிள்ளைக்குத்தான் கோபம் இருக்க முடியும்? அவரையாவது என்னையாவது பார்த்துவிட்டால் போதும், கவுண்டருடையை கண்களில் ஜலம் பெருகிவிடுகிறது. ஏதோ பேசுவதற்கு முயற்சிக்கிறார். வாய் குழறுகிறது. உடனே அழுது விடுகிறார். எனக்கே எல்லாம் மறந்து போய் அவரிடம் பரிதாபமாயிருக்கிறது. பெற்ற பிள்ளைக்கு எப்படி இருக்கும்?"

"ஆமாமடி! நீ கோயமுத்தூருக்கு ஓடி வந்த கதையை அப்புறம் சொல்வேனென்றாயே; சொல்லவே யில்லை, பார்த்தாயா? இப்போது சொல்லிவிடு. நாளைக்குக் கல்யாணம் ஆகிவிட்டால் அப்புறம் உன்னோடு பேசுவதற்கு சமயம் கிடைக்குமா? என்னைத் திரும்பித்தான் பார்ப்பாயா?"

"நாங்கள் ஒன்றும் அப்படிப்பட்டவர்கள் அல்ல"

"நாங்களா? அதற்குள்ளே பாத்யதை கொண்டாடுவதைப் பார்த்தாயா?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:07 am

"பரிகாசம் இருக்கட்டுமடி! கல்யாணம் ஆகிக் கையில் கங்கணத்துடன் அவர் சத்தியாக்கிரகம் செய்து ஜெயிலுக்குப் போகப் போகிறார்; ஆறு மாதமோ ஒரு வருஷமோ, எப்போது திரும்பி வருவாரோ, தெரியாது."

"கல்யாணம் ஆகியும் பிரம்மச்சாரி, கடன் வாங்கியும் பட்டினி என்கிற கதைதான் அப்படி அவர் போகும் பக்ஷத்தில், நீ எங்களுடன் இருந்திரு, செந்திரு!"

"அது முடியாதே, அம்மா! அவர் ஜெயிலுக்குப் போனால் நானும் கூட வருவேன் என்று சொன்னேன். 'கூடாது; நீதான் என் தகப்பனாரைப் பார்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். அப்படியே பார்த்துக் கொள்வதாக வாக்களித்து விட்டேன்."

"ஆஹா! தகப்பனாரிடம் தான் என்ன பக்தி! பிள்ளையென்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!..."

"பல நாள் கழித்துக் கிடைத்த அப்பா அல்லவா பங்கஜம்? மேலும் இவர் என்ன சொல்லுகிறார் தெரியுமா? 'பகைவனுக்கு அருள்வாய்' என்று பாரதியார் பாடியிருப்பதன் கருத்து இப்போதுதான் இவருக்கு விளங்குகிறதாம். மஹாத்மா காந்தி போதிக்கும் அஹிம்சா தர்மத்தின் மேன்மையும் இப்போதுதான் நன்றாய்த் தெரிகிறதாம்..."

"அஹிம்ஸையாவது, தர்மமாவது! நல்ல பைத்தியத்தை நீ கட்டிக் கொள்ளப் போகிறாயடி! நீ மட்டும் என்ன இலேசா? ஏண்டி சுட்டி! ரொம்ப நன்றாய் பைத்தியம் வேஷம் போட்டாயாமே! அதோடேயா? யாரோ ஒரு சாமியார் தலையிலே கல்லைத் தூக்கிப் போட்டாயாமே?" என்று பங்கஜம் சொல்லி வரும்போது, செந்திருவின் கண்களிலே ஜலம் ததும்பிற்று

"அசடே! இதென்ன? எல்லாம் முடிந்த பிறகு இப்போதென்ன கண்ணீர்?" என்றாள் பங்கஜம்.

"உனக்கு வேடிக்கையாக இருக்கிறதடி அம்மா! ஐயோ! அந்த மலை பங்களாவில் நான் பட்ட கஷ்டத்தை நினைத்தால்..."

"போடி போ! ஜாலக்காரி! நீ பட்ட கஷ்டங்களைப் போல் நூறு மடங்கு கஷ்டங்களை நான் அனுபவிக்கத் தயார் தெரியுமா?..." என்று பங்கஜம் கூறி, செந்திருவின் காதண்டை வாயை வைத்து, மெதுவாக, "உனக்குக் கிடைத்தது போல், ஒரு காதலன் எனக்குக் கிடைப்பதாய் இருந்தால்!" என்றாள்.

செந்திருவின் முகம் மலர்ந்தது. அவள் பங்கஜத்தின் கன்னத்தைக் கிள்ளினாள்.

அச்சமயத்தில் ஏதோ சத்தம் கேட்க இருவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தார்கள். சற்று தூரத்தில் மகுடபதி ஓடையில் இறங்கித் தண்ணீரில் கையால் சலசலவென்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தான்.

உடனே, பங்கஜம், "கிள்ளாதேடி! இதோ நான் போகிறேன்! இதோ நான் போகிறேன்! 'அவர் வந்து விட்டார், நீ போய்த் தொலை' என்று மரியாதையாய்ச் சொல்லுவதுதானே?" என்று எழுந்திருந்து போகத் தொடங்கினாள். வழியில் ஓடை அருகில் நின்று மகுடபதியைப் பார்த்து, "ஓய் தவசுப்பிள்ளை! முன்மாதிரியெல்லம் இனிமேல் ஏய்க்கமுடியாதே. நன்றாய்ச் சமையல் செய்ய வேணும். இல்லாவிட்டால் செந்திரு உம்மை லேசில் விடமாட்டாள்" என்றாள்.

மகுடபதி அசட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

"அதோ பார்த்தீரா? அங்கே ஒரு பைத்தியம் இருக்கிறதே ஜாக்கிரதை! ஒரே கூச்சல் போடும். அப்புறம் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டாலும் போடும்! கையைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு வாயை இறுக்கி மூடிவிடும்!" என்று சொல்லிவிட்டு விரைவாக பங்களாவை நோக்கிச் சென்றாள்.

அவள் மரங்களின் பின்னால் மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு, மகுடபதி செந்திரு இருந்த இடத்தை நோக்கி நடந்தான்.

செந்திரு அவன் வருவதைக் கடைக் கண்ணால் பார்த்தாள். உடனே சட்டென்று, முன்னைப் போல் தரையில் படுத்துக் கொண்டு கண்களையும் மூடிக் கொண்டாள். அவளுடைய இதழ்களில் வெட்கத்துடன் கூடிய புன்னகை மலர்ந்தது; அவளுடைய அழகிய கன்னங்களில் குழி விழுந்தது.

அந்த மரத்தின் மேலே இரண்டு தூக்கணாங் குருவிகள் உட்கார்ந்திருந்தன. அவை தலையைச் சாய்த்துச் சிறிது நேரம் கீழே உற்றுப் பார்த்தன. பிறகு ஒன்றையொன்று பார்த்து பறவைகளின் பாஷையில் கலகலவென்று சிரித்தன.


முற்றும்




[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 6 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக