புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
bala_t | ||||
prajai | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகுடபதி - அமரர் கல்கி
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
முதல் அத்தியாயம் - திறந்த வீடு
அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.
கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.
வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.
பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?
இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?
1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.
மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.
அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.
ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.
முதல் அத்தியாயம் - திறந்த வீடு
அன்று சாயங்காலம், சூரியன் வழக்கம் போலத்தான் மேற்கு மலைத் தொடருக்குப் பின்னால் அஸ்தமித்தான். ஆனால், அப்போது சூழ்ந்து வந்த இருள், வழக்கமான இருளாகத் தோன்றவில்லை. காவியங்களில் கவிகள் வர்ணிக்கும் இருளைப் போல், கோயமுத்தூர் நகரவாசிகளின் மனத்தில் பீதியையும் கவலையையும் அதிகமாக்கிக் கொண்டு, அந்த இருள், நகரின் வீதிகளிலும் சந்து பொந்துகளிலும் புகுந்து பரவி வந்தது. வழக்கம்போல் அன்று தெரு வீதிகளில் முனிசிபாலிடி விளக்குகள் சரியான காலத்தில் ஏற்றப்படாதபடியால் சாதாரண அந்தி இருட்டானது, நள்ளிரவின் கானாந்தகாரத்தை விடப் பயங்கரமாகத் தோன்றியது.
கோயமுத்தூர் நகரம் அன்று அந்தி வேளையில் அளித்த சோககரமான காட்சியைப் போல் அதற்கு முன்னால் அளித்தது கிடையாது; பின்னாலும் அளித்தது கிடையாது. நகரின் பிரதான வீதிகளில் விளக்கேற்றும் நேரத்தில் சாதாரணமாய்க் காணப்படும் 'ஜே ஜே' என்ற ஜனக்கூட்டமும், வண்டிகளின் போக்குவரத்தும் கலகலப்பும் அன்று காணப்படவில்லை. கடைத் தெருக்கள் பாழடைந்து காணப்பட்டன.
வீதிகளில் வீடுகளெல்லாம் சாத்திக் கிடந்தன. ஜன்னல் கதவுகளும் மூடப்பட்டிருந்தன. மேல் மாடிகளிலிருந்து எட்டிப் பார்ப்பவர் கூட இல்லை.
பெரிய வீதிகளில் ஜன நடமாட்டமே கிடையாது. சின்னத் தெருக்களிலும் சந்துகளிலும் அங்கே இங்கே அபூர்வமாக இரண்டொருவர் நடமாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களும், முன்னாலும் பின்னாலும் பீதியுடன் பார்த்துக் கொண்டு நடந்தார்கள். அவர்களுடைய முகங்களைப் பார்த்தால், பேயடித்தவர்களின் முகங்களாகக் காணப்பட்டன. தெருக்களில் நிற்க மனமில்லாதவர்களைப் போல் அவர்கள் அவசர அவசரமாகப் போய்க் கொண்டிருந்தார்கள்.
கோயமுத்தூருக்கு என்ன நேர்ந்தது? நேற்றுவரை அவ்வளவு கலகலப்பாகவும், திருமகள் விலாசத்துடனும் விளங்கிய நகரம் இன்று பாழடைந்து கிடப்பானேன்? திருமகள் தமக்கையின் ஆதிக்கம் இன்று அந்நகரில் எவ்விதம் ஏற்பட்டது?
இதன் காரணத்தை அறிய வேண்டுமானால், நமது கதை ஆரம்பமாகும் காலத்தை - வருஷம் மாதம் தேதியைக் கூட கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
வருஷம், 1931; மாதம், ஜனவரி; தேதி, 6; வாசகர்களுக்கு ஏதாவது ஞாபகம் வருகிறதா?
1930 டிசம்பர் கடைசியில் மகாத்மா காந்தி லண்டனில் நடந்த இரண்டாவது வட்ட மேஜை மகாநாட்டிலிருந்து வெறுங்கையுடன் திரும்பிப் பம்பாய்க்கு வந்து சேர்ந்தார். அவரை வரவேற்பதற்கு அப்போது இந்தியாவிலிருந்து வில்லிங்டன் சர்க்கார் தக்க ஏற்பாடு செய்திருந்தார்கள்! அவர் பம்பாய் வந்து இறங்குவதற்கு நாலு நாளைக்கு முன்பு காந்தி-இர்வின் ஒப்பந்தம் காற்றில் விடப்பட்டது. பண்டித ஜவஹர்லால் நேரு கைது செய்யப்பட்டார்.
மகாத்மா பம்பாய் வந்திறங்கியதும், வைஸ்ராய் வில்லிங்டனுக்குத் தந்தி அடித்தார். பதில் திருப்திகரமாயில்லை. எனவே, காங்கிரஸ் காரியக் கமிட்டி கூடி, மறுபடியும் சத்தியாக்கிரக இயக்கத்தைத் தொடங்குவதென்று, தீர்மானித்தது. உடனே மகாத்மாவும் காரியக் கமிட்டி அங்கத்தினரும் கைது செய்யப்பட்டார்கள்.
அதன்மேல், நாடெங்கும் இரண்டாவது சத்தியாக்கிரக இயக்கம் ஆரம்பமானது போலவே, கோயமுத்தூர் நகரிலும் ஆரம்பித்தது.
ஆனால், 1929-ல் இயக்கத்தை வளரவிட்டதுபோல் இந்தத் தடவை வளரவிடக்கூடாதென்றும், முளையிலேயே கிள்ளி எறிந்துவிட வேண்டும் என்றும், வில்லிங்டன் சர்க்காரின் தாக்கீது நாடெங்குமுள்ள அதிகார வர்க்கத்தாருக்கு வந்திருந்தது. ஆகவே, ஒவ்வொரு ஜில்லாவிலும், இயக்கத்தை முளையிலேயே கிள்ளி எறிந்துவிடும் பொருட்டு, ஜில்லா அதிகாரிகள் வேண்டிய குண்டாந்தடி முதலிய ஆயுதங்களுடன் தயாராயிருந்தார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
எட்டாம் அத்தியாயம் - அந்தகாரம்
இருட்டறைக்குள் இருந்த மகுடபதிக்கு ஹாலில் நடந்த பேச்சுவார்த்தையெல்லாம் நன்றாய்க் காதில் விழுந்தன. குரலிலிருந்து, யார் யார் பேசுகிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொண்டான். செந்திரு கொஞ்சமும் பயப்படாமல் பேசிய தீரம் நிறைந்த மொழிகள் அவனுடைய காதில் விழுந்த போதெல்லாம், அவனுக்கு மயிக்கூச்செறிந்தது. அந்தச் சமயம் செந்திரு சாதாரணப் பெண்ணாகவே அவனுக்குத் தோன்றவில்லை. காவியங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப்படும் வீர நாரீமணியாகவே தோன்றினாள். இவளுக்காக ஓர் உயிரை அல்ல, நூறு உயிர் ஒருவனுக்கு இருந்தால் அவ்வளவையும் கொடுக்கலாம் என்று நினைத்தான். ஓடைக் கரைக் காட்சியும், அங்கே அவளுக்கு, தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தன. அந்த வாக்குறுதியை இத்தனை நாளும் நிறைவேற்றாமலிருந்ததை எண்ணி அப்போது வெட்கத்தினால் அவனுடைய உள்ளம் குன்றியது. அதற்கெல்லாம் இப்போது பரிகாரம் செய்து விட வேண்டுமென்றும் இந்த இரக்கமற்ற அரக்கர்களிடமிருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்றும் உறுதி கொண்டான். இப்பேர்ப்பட்ட ஆபத்தான சமயத்தில் தன்னை அந்த வீட்டில் கொண்டு வந்து சேர்த்த தெய்வச் செயலை எண்ணி அதிசயித்தான். இப்படியெல்லாம் பலவித எண்ணங்கள் அவனுடைய உள்ளத்தைக் குழப்பினவே தவிர, செந்திருவை எப்படி இவர்கள் கையிலிருந்து தப்புவிப்பது என்பதற்கு மட்டும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
இந்த நிலைமையில்தான் தங்கசாமிக் கவுண்டர் பிரம்பினால் செந்திருவை அடிக்க, அவள் வீரிட்ட குரல் மகுடபதியின் காதில் விழுந்தது. பிறகு அவனால் அந்த இருட்டறையில் சும்மா இருக்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தான்.
அறைக்குள்ளிருந்து ஓடிவந்த மகுடபதியைப் பார்த்ததும், தங்கசாமிக் கவுண்டருக்கு ஏற்பட்ட பிரமிப்பையும் கோபத்தையும் சொல்லத் தரமல்ல. "இதெல்லாம் நிஜமாக நடப்பவைதானா? இந்திரஜாலக் கனவா?" என்று சந்தேகப்பட்டவர் போல், அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார்.
"தங்கசாமி! நான் சொன்னபோது நீ நம்பவில்லை. இப்போது தெரிந்து கொண்டாயா! சிநேகிதப் பெண்ணைப் பார்க்க வந்தது என்பதெல்லாம் பொய் என்று தெரிகிறதா?..." என்றார் கார்க்கோடக் கவுண்டர்.
தங்கசாமிக் கவுண்டரின் கண்களில் தீப்பொறி பறந்தது. "பாவி, என்ன காரியம் செய்தாய்? குலத்தைக் கெடுக்கவா நீ வந்தாய்?" என்று சொல்லி அவர் மறுபடியும் செந்திருவை நோக்கிப் பிரம்பை ஓங்கினார்.
அப்போது சில நிமிஷநேரம் அந்த ஹாலில் பெருங்குழப்பம் உண்டாயிற்று.
மகுடபதி ஓடி வந்து, தங்கசாமிக் கவுண்டருடைய கைப்பிரம்பைப் பிடிக்க முயன்றான். பெரியண்ணன் குறுக்கே வந்து, மகுடபதியைப் பிடித்து இழுத்தான். "பாட்டா! நீ சும்மா இரு. ஒரு பேடி ஒரு சிறு பெண்ணைப் பிரம்பால் அடிக்கும் போது நீ பார்த்துக் கொண்டு நிற்கிறாய். என்னையும் சும்மா இருக்கச் சொல்கிறாயா?" என்று மகுடபதி சொல்லிக்கொண்டே, பெரியண்ணனிடமிருந்து திமிற முயன்றான். பெரியண்ணன் அவனை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் கட்டிக் கொண்டு கீழே விழுந்தார்கள். பெரியண்ணனுடைய தலை அரிக்கன் லாந்தர் மீது படாரென்று மோதிற்று. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்து அவிந்தது. ஒரு நிமிஷம் அந்த ஹாலில் இருள் சூழ்ந்தது.
செந்திரு, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள்.
பளிச்சென்று டார்ச் லைட்டின் வெளிச்சம் அடித்தது. கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்துதான் டார்ச் லைட் பிரகாசித்தது. வெளிச்சம் பெரியண்ணன் - மகுடபதியின் மேல் விழுந்தது. பெரியண்ணன் பிரக்ஞையற்றுக் கிடந்தான். மகுடபதி திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
கார்க்கோடக் கவுண்டரின் கர்ண கடூரமான குரல், "தங்கசாமி! அந்தப் பையனை சோபா காலோடு சேர்த்துக் கட்டு" என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.
பெரியண்ணன் கீழே பிரக்ஞையற்றுக் கிடப்பதைப் பார்த்து செந்திரு அலறிக் கொண்டு அவன் அருகில் வந்து முகத்தை உற்று நோக்கினாள்.
திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த மகுடபதியைக் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டுவந்து சோபாவின் காலோடு சேர்த்து கட்டினார்கள். மகுடபதி அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி ஒன்றும் பலிக்கவில்லை.
செந்திரு பெரியண்ணனுடைய மூக்கினருகில் விரலை வைத்துப் பார்த்தபின், மூச்சு வருவது தெரிந்ததும், கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. முகத்தில் தெளிக்கத் தண்ணீர் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தாள். மகுடபதி சோபாவின் காலில் கட்டுப்பட்டிருப்பதையும் அவன் பக்கத்தில் இரண்டு கவுண்டர்களும் நிற்பதையும் கண்டாள். கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்த டார்ச் லைட் கட்டுப்பட்டிருந்த மகுடபதியின் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மகுடபதியின் அழகிய முகம் அப்போது மிகவும் பயங்கரத் தோற்றமடைந்திருந்தது. அளவில் அடங்காத கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் அவன் முகத்தின் நரம்புகள் எல்லாம் புடைத்திருந்தன. நெடிய பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. கண்கள் தணலைப் போல் சிவந்திருந்தன.
"பேடிகளா! என்னை ஏன் கட்டிப் போடுகிறீர்கள்? ஆண் பிள்ளைகளாயிருந்தால் கட்டை அவிழ்த்து விடுங்கள் - இப்படிப்பட்ட அக்கிரமங்களை ஏன் செய்கிறீர்கள்? ஆஹா! இந்தப் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியைப் போன்ற உத்தமரும் பிறந்தார் - உங்களைப் போன்ற பாதகர்களும் பிறந்திருக்கிறார்களே!..." என்றான் மகுடபதி.
"அடே! நிறுத்தடா, உன் அதிகப் பிரசங்கத்தை!" என்று சீறினார் கார்க்கோடக் கவுண்டர். மேலும் ஏளனம் செய்யும் குரலில் அவர் கூறினார்:
"மகாத்மா காந்தியினுடைய அந்தரங்க சிஷ்யனல்லவா நீ? அதனால் தான் மைனர்ப் பெண்ணைத் திருட்டுத்தனமாய் அழைத்துக் கொண்டு ஓடப்பார்த்தாயாக்கும்!... ஆஹா! நல்ல காந்தி சிஷ்யன், அப்பா! தங்கசாமி! எங்கே பிரம்பை எடு! இன்றைக்கு இவன் சிநேகிதர்கள் கடைத் தெருவில் சத்தியாக்கிரகம் செய்து அடிவாங்கினார்கள். இவன் மட்டும் அவர்களுக்குக் குறைந்து போகலாமா? அப்புறம் காந்தி மகாத்மா இவனைப்பற்றிக் குறைவாக எண்ணிக் கொள்ளமாட்டாரா?... சேச்சே! எங்கே அந்தப் பிரம்பை எடு!"
தங்கசாமிக் கவுண்டர் அப்போது பிரம்பை எடுத்துக் கார்க்கோடக் கவுண்டர் கையில் கொடுத்தார்.
இதுவரையில் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு, "சித்தப்பா! அவர்மேல் ஒரு குற்றமும் இல்லை. அவர் என்னை அழைத்து வரவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் சிநேகியைப் பார்க்க நானாகத்தான் வந்தேன். பாட்டன், கடுதாசிகூடக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தான். அவரை விட்டுவிடுங்கள். அவரை விட்டுவிட்டால், இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன். அவரை ஏதாவது செய்தீர்களோ, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டுவேன்" என்று சொல்லிக் கொண்டு செந்திரு ஜன்னல் பக்கம் போனாள்.
இருட்டறைக்குள் இருந்த மகுடபதிக்கு ஹாலில் நடந்த பேச்சுவார்த்தையெல்லாம் நன்றாய்க் காதில் விழுந்தன. குரலிலிருந்து, யார் யார் பேசுகிறார்கள் என்பதையும் ஊகித்துக் கொண்டான். செந்திரு கொஞ்சமும் பயப்படாமல் பேசிய தீரம் நிறைந்த மொழிகள் அவனுடைய காதில் விழுந்த போதெல்லாம், அவனுக்கு மயிக்கூச்செறிந்தது. அந்தச் சமயம் செந்திரு சாதாரணப் பெண்ணாகவே அவனுக்குத் தோன்றவில்லை. காவியங்களிலும், இதிகாசங்களிலும் வர்ணிக்கப்படும் வீர நாரீமணியாகவே தோன்றினாள். இவளுக்காக ஓர் உயிரை அல்ல, நூறு உயிர் ஒருவனுக்கு இருந்தால் அவ்வளவையும் கொடுக்கலாம் என்று நினைத்தான். ஓடைக் கரைக் காட்சியும், அங்கே அவளுக்கு, தான் கொடுத்த வாக்குறுதியும் ஞாபகம் வந்தன. அந்த வாக்குறுதியை இத்தனை நாளும் நிறைவேற்றாமலிருந்ததை எண்ணி அப்போது வெட்கத்தினால் அவனுடைய உள்ளம் குன்றியது. அதற்கெல்லாம் இப்போது பரிகாரம் செய்து விட வேண்டுமென்றும் இந்த இரக்கமற்ற அரக்கர்களிடமிருந்து அவளை எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்றும் உறுதி கொண்டான். இப்பேர்ப்பட்ட ஆபத்தான சமயத்தில் தன்னை அந்த வீட்டில் கொண்டு வந்து சேர்த்த தெய்வச் செயலை எண்ணி அதிசயித்தான். இப்படியெல்லாம் பலவித எண்ணங்கள் அவனுடைய உள்ளத்தைக் குழப்பினவே தவிர, செந்திருவை எப்படி இவர்கள் கையிலிருந்து தப்புவிப்பது என்பதற்கு மட்டும் ஒரு யோசனையும் புலப்படவில்லை.
இந்த நிலைமையில்தான் தங்கசாமிக் கவுண்டர் பிரம்பினால் செந்திருவை அடிக்க, அவள் வீரிட்ட குரல் மகுடபதியின் காதில் விழுந்தது. பிறகு அவனால் அந்த இருட்டறையில் சும்மா இருக்க முடியவில்லை. கதவைத் திறந்து கொண்டு ஓடி வந்தான்.
அறைக்குள்ளிருந்து ஓடிவந்த மகுடபதியைப் பார்த்ததும், தங்கசாமிக் கவுண்டருக்கு ஏற்பட்ட பிரமிப்பையும் கோபத்தையும் சொல்லத் தரமல்ல. "இதெல்லாம் நிஜமாக நடப்பவைதானா? இந்திரஜாலக் கனவா?" என்று சந்தேகப்பட்டவர் போல், அவர் கள்ளிப்பட்டிக் கவுண்டரைப் பார்த்தார்.
"தங்கசாமி! நான் சொன்னபோது நீ நம்பவில்லை. இப்போது தெரிந்து கொண்டாயா! சிநேகிதப் பெண்ணைப் பார்க்க வந்தது என்பதெல்லாம் பொய் என்று தெரிகிறதா?..." என்றார் கார்க்கோடக் கவுண்டர்.
தங்கசாமிக் கவுண்டரின் கண்களில் தீப்பொறி பறந்தது. "பாவி, என்ன காரியம் செய்தாய்? குலத்தைக் கெடுக்கவா நீ வந்தாய்?" என்று சொல்லி அவர் மறுபடியும் செந்திருவை நோக்கிப் பிரம்பை ஓங்கினார்.
அப்போது சில நிமிஷநேரம் அந்த ஹாலில் பெருங்குழப்பம் உண்டாயிற்று.
மகுடபதி ஓடி வந்து, தங்கசாமிக் கவுண்டருடைய கைப்பிரம்பைப் பிடிக்க முயன்றான். பெரியண்ணன் குறுக்கே வந்து, மகுடபதியைப் பிடித்து இழுத்தான். "பாட்டா! நீ சும்மா இரு. ஒரு பேடி ஒரு சிறு பெண்ணைப் பிரம்பால் அடிக்கும் போது நீ பார்த்துக் கொண்டு நிற்கிறாய். என்னையும் சும்மா இருக்கச் சொல்கிறாயா?" என்று மகுடபதி சொல்லிக்கொண்டே, பெரியண்ணனிடமிருந்து திமிற முயன்றான். பெரியண்ணன் அவனை இன்னும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். இரண்டு பேரும் கட்டிக் கொண்டு கீழே விழுந்தார்கள். பெரியண்ணனுடைய தலை அரிக்கன் லாந்தர் மீது படாரென்று மோதிற்று. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்து அவிந்தது. ஒரு நிமிஷம் அந்த ஹாலில் இருள் சூழ்ந்தது.
செந்திரு, "ஐயோ! ஐயோ!" என்று அலறினாள்.
பளிச்சென்று டார்ச் லைட்டின் வெளிச்சம் அடித்தது. கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்துதான் டார்ச் லைட் பிரகாசித்தது. வெளிச்சம் பெரியண்ணன் - மகுடபதியின் மேல் விழுந்தது. பெரியண்ணன் பிரக்ஞையற்றுக் கிடந்தான். மகுடபதி திகைப்புடன் சுற்றுமுற்றும் பார்த்தான்.
கார்க்கோடக் கவுண்டரின் கர்ண கடூரமான குரல், "தங்கசாமி! அந்தப் பையனை சோபா காலோடு சேர்த்துக் கட்டு" என்று சொல்லியது அவன் காதில் விழுந்தது.
பெரியண்ணன் கீழே பிரக்ஞையற்றுக் கிடப்பதைப் பார்த்து செந்திரு அலறிக் கொண்டு அவன் அருகில் வந்து முகத்தை உற்று நோக்கினாள்.
திகைத்துப் போய் உட்கார்ந்திருந்த மகுடபதியைக் கார்க்கோடக் கவுண்டரும் தங்கசாமிக் கவுண்டரும் பிடித்துக் கரகரவென்று இழுத்துக் கொண்டுவந்து சோபாவின் காலோடு சேர்த்து கட்டினார்கள். மகுடபதி அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்குச் செய்த முயற்சி ஒன்றும் பலிக்கவில்லை.
செந்திரு பெரியண்ணனுடைய மூக்கினருகில் விரலை வைத்துப் பார்த்தபின், மூச்சு வருவது தெரிந்ததும், கொஞ்சம் தைரியம் உண்டாயிற்று. முகத்தில் தெளிக்கத் தண்ணீர் இருக்கிறதா என்று திரும்பிப் பார்த்தாள். மகுடபதி சோபாவின் காலில் கட்டுப்பட்டிருப்பதையும் அவன் பக்கத்தில் இரண்டு கவுண்டர்களும் நிற்பதையும் கண்டாள். கார்க்கோடக் கவுண்டரின் கையிலிருந்த டார்ச் லைட் கட்டுப்பட்டிருந்த மகுடபதியின் மேல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. மகுடபதியின் அழகிய முகம் அப்போது மிகவும் பயங்கரத் தோற்றமடைந்திருந்தது. அளவில் அடங்காத கோபத்தினாலும் ஆத்திரத்தினாலும் அவன் முகத்தின் நரம்புகள் எல்லாம் புடைத்திருந்தன. நெடிய பெருமூச்சு வந்து கொண்டிருந்தது. கண்கள் தணலைப் போல் சிவந்திருந்தன.
"பேடிகளா! என்னை ஏன் கட்டிப் போடுகிறீர்கள்? ஆண் பிள்ளைகளாயிருந்தால் கட்டை அவிழ்த்து விடுங்கள் - இப்படிப்பட்ட அக்கிரமங்களை ஏன் செய்கிறீர்கள்? ஆஹா! இந்தப் பாரத தேசத்தில் மகாத்மா காந்தியைப் போன்ற உத்தமரும் பிறந்தார் - உங்களைப் போன்ற பாதகர்களும் பிறந்திருக்கிறார்களே!..." என்றான் மகுடபதி.
"அடே! நிறுத்தடா, உன் அதிகப் பிரசங்கத்தை!" என்று சீறினார் கார்க்கோடக் கவுண்டர். மேலும் ஏளனம் செய்யும் குரலில் அவர் கூறினார்:
"மகாத்மா காந்தியினுடைய அந்தரங்க சிஷ்யனல்லவா நீ? அதனால் தான் மைனர்ப் பெண்ணைத் திருட்டுத்தனமாய் அழைத்துக் கொண்டு ஓடப்பார்த்தாயாக்கும்!... ஆஹா! நல்ல காந்தி சிஷ்யன், அப்பா! தங்கசாமி! எங்கே பிரம்பை எடு! இன்றைக்கு இவன் சிநேகிதர்கள் கடைத் தெருவில் சத்தியாக்கிரகம் செய்து அடிவாங்கினார்கள். இவன் மட்டும் அவர்களுக்குக் குறைந்து போகலாமா? அப்புறம் காந்தி மகாத்மா இவனைப்பற்றிக் குறைவாக எண்ணிக் கொள்ளமாட்டாரா?... சேச்சே! எங்கே அந்தப் பிரம்பை எடு!"
தங்கசாமிக் கவுண்டர் அப்போது பிரம்பை எடுத்துக் கார்க்கோடக் கவுண்டர் கையில் கொடுத்தார்.
இதுவரையில் பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த செந்திரு, "சித்தப்பா! அவர்மேல் ஒரு குற்றமும் இல்லை. அவர் என்னை அழைத்து வரவில்லை. சத்தியமாகச் சொல்கிறேன். என் சிநேகியைப் பார்க்க நானாகத்தான் வந்தேன். பாட்டன், கடுதாசிகூடக் கொண்டு போய்க் கொடுத்துவிட்டு வந்தான். அவரை விட்டுவிடுங்கள். அவரை விட்டுவிட்டால், இனிமேல் நீங்கள் சொன்னபடி கேட்கிறேன். அவரை ஏதாவது செய்தீர்களோ, கூச்சல் போட்டு ஊரைக் கூட்டுவேன்" என்று சொல்லிக் கொண்டு செந்திரு ஜன்னல் பக்கம் போனாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"தங்கசாமி! அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோட கட்டு!" என்றார் கார்க்கோடக் கவுண்டர்.
செந்திரு எவ்வளவோ திமிறியும் பயன்படவில்லை. தங்கசாமிக் கவுண்டர் அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டிவிட்டார்.
கார்க்கோடக் கவுண்டர் சொன்னார்: "தங்கசாமி! காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க இப்போது சமயமில்லை. இரண்டில் ஒன்று உடனே தீர்ந்துவிட வேண்டும். இந்தப் பையன் இரண்டு விஷயத்துக்குச் சம்மதிக்கிறானா என்று கேள். மைனர்ப் பெண்ணைக் கடத்தி வந்த குற்றம் செய்ததாகவும், மன்னிக்கும்படியும் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிமேல் கள்ளுக்கடைப் பக்கம் போவதில்லை. மதுவிலக்குப் பிரசாரம் செய்வதில்லை என்று சத்தியம் செய்யவேண்டும். மகாத்மா காந்திமேல் ஆணை வைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். சம்மதிக்கிறானா, கேள்!"
மகுடபதியின் காதில் இது விழுந்ததும், அவன் பொங்கிக்கொண்டு கத்தினான்: "ஒரு நாளும் மாட்டேன். உயிர்போனாலும் மாட்டேன். என்னை என்னவேணுமானாலும் செய்யுங்கள். அந்தப் பெண்ணை மட்டும் ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தீர்களோ, நீங்கள் செய்து வரும் அக்கிரமக் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் எழுதி, உங்கள் பெயர் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி அடித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்றான்.
கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தார்.
"ஓகோகோ! அப்படியா சேதி? - இதுதான் கடைசி வார்த்தையா, கேட்டுவிடு தங்கசாமி!" என்றார்.
இடுப்பிலிருந்து ஒரு பெரிய பேனாக் கத்தியை எடுத்தார். அதன் மடலைப் பிரித்து டார்ச் லைட்டுக்கு நேரே பிடித்தார். கத்தியின் மடல் பளபளவென்று மின்னிற்று. அதன் விளிம்பு கூராயிருக்கிறதா என்று கவுண்டர் விரலால் தடவிப் பார்த்தார்.
செந்திருவுக்கு அடிவயிற்றை என்னமோ செய்தது. அவள் என்னவெல்லாமோ பேச வேண்டுமென்று நினைத்தாள். கூச்சல் போட விரும்பினாள். ஆனால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து பேச்சு வரவில்லை; சத்தம் போடக்கூட முடியவில்லை.
கார்க்கோடக் கவுண்டர் ஒருகையில் டார்ச் லைட்டுடனும், ஒரு கையில் பிரித்த கத்தியுடனும் மகுடபதியை நெருங்கினார். "அடே! என்னடா சொல்கிறாய்?" என்று கர்ஜித்துக் கொண்டு கத்தியை ஓங்கினார்.
மகுடபதிக்கு அச்சமயம், "இதெல்லாம் நிஜமல்ல - கனவு கண்டு கொண்டிருக்கிறோம்" என்ற பிரமை உண்டாயிற்று. அவன் அண்ணாந்து, ஓங்கிய கத்தியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஓங்கிய கத்தி கீழே வரத் தொடங்கியது. அந்த வினாடியில் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. பெரியண்ணன் குறுக்கே ஓடிவந்து விழுந்தான். (சற்று முன்னால் மூர்ச்சை தெளிந்து அவன் இந்தக் கோரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.) கவுண்டரின் கத்தி, பெரியண்ணன் வலது மார்பண்டை ஆழமாய்ப் பதிந்தது. அவன் "ஆ" என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தான். அவனுடைய வாய் ஏதோ முணுமுணுத்தது. கார்க்கோடக் கவுண்டர் கீழே குனிந்து அதைக் கவனித்தார். "இரகசியம் ... இரகசியம் ... இத்தனை நாளாய் ... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன. உடனே பெரியண்ணனுடைய தலை சாய்ந்தது; பேச்சு நின்றது.
கார்க்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டை நாலு புறமும் சுழற்றினார். செந்திரு மூர்ச்சையடைந்திருப்பதையும், அவளுடைய தலை தொங்குவதையும் கண்டார். பிரமித்து நின்ற தங்கசாமிக் கவுண்டரைப் பார்த்து, "ஏனப்பா, இப்படி நிற்கிறாய்? அவளுடைய கட்டை அவிழ்த்துத் தூக்கி கொண்டு போய்க் காரில் போடு, அவள் மூர்ச்சையானதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிட்டால் ரொம்ப ரகளை செய்திருப்பாள்" என்றார்.
தங்கசாமிக் கவுண்டர் மறு வார்த்தை சொல்லாமல், செந்திருவைத் தூக்கிக்கொண்டு போனார்.
அவர்கள் போனதும், கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் டார்ச் லைட்டைக் கட்டுண்ட மகுடபதியின் மேலும், குத்துப்பட்டுத் தரையில் கிடந்த பெரியண்ணன் உடல் மீதும் செலுத்தினார். பயங்கரமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்.
"அடே! 'ஜெயிலுக்குப் போகவும் தூக்குமேடை ஏறவும் தயார்' என்று ஆயிரம் கூட்டங்களில் பேசி வந்தாயல்லவா? இப்போது ஜெயிலுக்குப் போகலாம்; அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்" என்று அவர் சொன்னது கனவில் கேட்பது போல் மகுடபதியின் காதில் விழுந்தது.
அடுத்த நிமிஷம் கார்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டுடன் மச்சுப்படி இறங்கச் சென்றார்.
ஹாலில் அந்தகாரம் சூழ்ந்தது.
செந்திரு எவ்வளவோ திமிறியும் பயன்படவில்லை. தங்கசாமிக் கவுண்டர் அவளை இழுத்துக் கொண்டு வந்து மேஜைக் காலோடு சேர்த்துக் கட்டிவிட்டார்.
கார்க்கோடக் கவுண்டர் சொன்னார்: "தங்கசாமி! காலத்தை ஓட்டிக் கொண்டிருக்க இப்போது சமயமில்லை. இரண்டில் ஒன்று உடனே தீர்ந்துவிட வேண்டும். இந்தப் பையன் இரண்டு விஷயத்துக்குச் சம்மதிக்கிறானா என்று கேள். மைனர்ப் பெண்ணைக் கடத்தி வந்த குற்றம் செய்ததாகவும், மன்னிக்கும்படியும் எழுதிக் கொடுக்க வேண்டும். இனிமேல் கள்ளுக்கடைப் பக்கம் போவதில்லை. மதுவிலக்குப் பிரசாரம் செய்வதில்லை என்று சத்தியம் செய்யவேண்டும். மகாத்மா காந்திமேல் ஆணை வைத்துச் சத்தியம் செய்ய வேண்டும். சம்மதிக்கிறானா, கேள்!"
மகுடபதியின் காதில் இது விழுந்ததும், அவன் பொங்கிக்கொண்டு கத்தினான்: "ஒரு நாளும் மாட்டேன். உயிர்போனாலும் மாட்டேன். என்னை என்னவேணுமானாலும் செய்யுங்கள். அந்தப் பெண்ணை மட்டும் ஒன்றும் செய்ய வேண்டாம். ஏதாவது செய்தீர்களோ, நீங்கள் செய்து வரும் அக்கிரமக் காரியங்கள் எல்லாம் எனக்குத் தெரியும். பத்திரிகைகளில் எழுதி, உங்கள் பெயர் சிரிப்பாய்ச் சிரிக்கும்படி அடித்துவிடுவேன், ஜாக்கிரதை!" என்றான்.
கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் பயங்கரமாகச் சிரித்தார்.
"ஓகோகோ! அப்படியா சேதி? - இதுதான் கடைசி வார்த்தையா, கேட்டுவிடு தங்கசாமி!" என்றார்.
இடுப்பிலிருந்து ஒரு பெரிய பேனாக் கத்தியை எடுத்தார். அதன் மடலைப் பிரித்து டார்ச் லைட்டுக்கு நேரே பிடித்தார். கத்தியின் மடல் பளபளவென்று மின்னிற்று. அதன் விளிம்பு கூராயிருக்கிறதா என்று கவுண்டர் விரலால் தடவிப் பார்த்தார்.
செந்திருவுக்கு அடிவயிற்றை என்னமோ செய்தது. அவள் என்னவெல்லாமோ பேச வேண்டுமென்று நினைத்தாள். கூச்சல் போட விரும்பினாள். ஆனால் நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக் கொண்டது. வாயிலிருந்து பேச்சு வரவில்லை; சத்தம் போடக்கூட முடியவில்லை.
கார்க்கோடக் கவுண்டர் ஒருகையில் டார்ச் லைட்டுடனும், ஒரு கையில் பிரித்த கத்தியுடனும் மகுடபதியை நெருங்கினார். "அடே! என்னடா சொல்கிறாய்?" என்று கர்ஜித்துக் கொண்டு கத்தியை ஓங்கினார்.
மகுடபதிக்கு அச்சமயம், "இதெல்லாம் நிஜமல்ல - கனவு கண்டு கொண்டிருக்கிறோம்" என்ற பிரமை உண்டாயிற்று. அவன் அண்ணாந்து, ஓங்கிய கத்தியை இமை கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
ஓங்கிய கத்தி கீழே வரத் தொடங்கியது. அந்த வினாடியில் தடதடவென்று காலடிச் சத்தம் கேட்டது. பெரியண்ணன் குறுக்கே ஓடிவந்து விழுந்தான். (சற்று முன்னால் மூர்ச்சை தெளிந்து அவன் இந்தக் கோரமான காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான்.) கவுண்டரின் கத்தி, பெரியண்ணன் வலது மார்பண்டை ஆழமாய்ப் பதிந்தது. அவன் "ஆ" என்று அலறிக் கொண்டு கீழே விழுந்தான். அவனுடைய வாய் ஏதோ முணுமுணுத்தது. கார்க்கோடக் கவுண்டர் கீழே குனிந்து அதைக் கவனித்தார். "இரகசியம் ... இரகசியம் ... இத்தனை நாளாய் ... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் அவருடைய காதில் விழுந்தன. உடனே பெரியண்ணனுடைய தலை சாய்ந்தது; பேச்சு நின்றது.
கார்க்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டை நாலு புறமும் சுழற்றினார். செந்திரு மூர்ச்சையடைந்திருப்பதையும், அவளுடைய தலை தொங்குவதையும் கண்டார். பிரமித்து நின்ற தங்கசாமிக் கவுண்டரைப் பார்த்து, "ஏனப்பா, இப்படி நிற்கிறாய்? அவளுடைய கட்டை அவிழ்த்துத் தூக்கி கொண்டு போய்க் காரில் போடு, அவள் மூர்ச்சையானதே நல்லதாய்ப் போயிற்று. இல்லாவிட்டால் ரொம்ப ரகளை செய்திருப்பாள்" என்றார்.
தங்கசாமிக் கவுண்டர் மறு வார்த்தை சொல்லாமல், செந்திருவைத் தூக்கிக்கொண்டு போனார்.
அவர்கள் போனதும், கார்க்கோடக் கவுண்டர் மறுபடியும் டார்ச் லைட்டைக் கட்டுண்ட மகுடபதியின் மேலும், குத்துப்பட்டுத் தரையில் கிடந்த பெரியண்ணன் உடல் மீதும் செலுத்தினார். பயங்கரமாக ஒரு சிரிப்புச் சிரித்தார்.
"அடே! 'ஜெயிலுக்குப் போகவும் தூக்குமேடை ஏறவும் தயார்' என்று ஆயிரம் கூட்டங்களில் பேசி வந்தாயல்லவா? இப்போது ஜெயிலுக்குப் போகலாம்; அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்" என்று அவர் சொன்னது கனவில் கேட்பது போல் மகுடபதியின் காதில் விழுந்தது.
அடுத்த நிமிஷம் கார்கோடக் கவுண்டர் டார்ச் லைட்டுடன் மச்சுப்படி இறங்கச் சென்றார்.
ஹாலில் அந்தகாரம் சூழ்ந்தது.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ஒன்பதாம் அத்தியாயம் - ஏமாற்றம்
கார்க்கோடக் கவுண்டர் டார்ச்சு லைட்டுடன் போன பிறகு, சற்று நேரம் வரையில் மகுடபதி சிந்தனா சக்தியையே இழந்திருந்தான். சிறிது சிறிதாக, அவனுடைய மனம் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. இன்று காலையில் அவன் கிராமத்திலிருந்து கிளம்பிய போது, அன்று இரவுக்குள் தனக்கு இத்தகைய சம்பவங்கள் நேருமென்று யாராவது சொல்லியிருந்தால், இடிஇடியென்று சிரித்திருப்பான். அவ்விதம் சொன்னவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகும்படி கூறியிருப்பான்.
அவனுடைய மனோ நிலைமையில் இப்போது பயங்கரம் அதிகமாயிருந்ததா, அதிசயம் அதிகமாயிருந்ததா, அல்லது கவலைதான் அதிகமா என்று சொல்வதற்கியலாமலிருந்தது. செந்திருவைப்பற்றி எண்ணியபோது உள்ளத்தில் கவலை மீறியது. ஐயோ! பாவிகள் அவளை எங்கே கொண்டு போனார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ? பலவந்தமாகக் கல்யாணம் நடந்து விடுமோ? அந்தத் தீரப் பெண் அதற்குச் சம்மதிப்பாளா? சம்மதியாமல் அவள் பிடிவாதம் பிடித்தால் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ? சமயத்தில் போய்க் கல்யாணத்தைத் தடுத்து அவளை மீட்டுக் கொண்டு வரும் சக்தியைக் கடவுள் தனக்கு அளிப்பாரா?
தான் இன்னும் உயிரோடிருப்பதே கடவுளுடைய செயல்தான்! தன் மேல் பாய வேண்டிய கத்தியல்லவா பெரியண்ணன் மேல் பாய்ந்தது? - ஆஹா! சத்தியாக்கிரகம், அஹிம்சை என்றெல்லாம் பேசுகிறோமே? உண்மையான அஹிம்சா தர்மி - சத்தியாக்கிரகி - பெரியண்ணன் அல்லவா? தன்னுடைய உயிரை இன்னொருவனுக்காகக் கொடுக்கத் துணிந்தானே!
ஆனால், பெரியண்ணன் நிஜமாகவே இறந்து போய் விட்டானா? தன் பக்கத்திலே இருக்கும் பெரியண்ணனுடைய உடல் உயிரற்ற சவமா? ஒரு கத்திக் குத்தில் பிராணன் போயிருக்குமோ? உடனே வைத்தியரைக் கூட்டி வந்து சிகிச்சை செய்தால், ஒருவேளை அவன் பிழைத்தாலும் பிழைக்கலாம் அல்லவா? - அடடா! பாவிகள் தன்னை இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்களே...!
மகுடபதி, கட்டை அவிழ்த்துக் கொள்ளும் பொருட்டு இப்படியும் அப்படியுமாகத் திமிறினான். சோபாவும் அவன் கூட வந்ததே தவிரக் கட்டு அவிழவில்லை. அப்புறம், கைகளினால் முடிச்சு எங்கே இருக்கிறதென்று தேடத் தொடங்கினான். அப்போது அவனுடைய மனதில், "ஆஹா! கிழவனுடைய உயிர் மட்டும் போயிருக்கட்டும். எப்படியாவது பழிக்குப் பழி வாங்கியேயாக வேண்டும். அஹிம்சையாவது மண்ணாங் கட்டியாவது! இப்பேர்ப்பட்ட பாதகர்களை இப்பூவுலகில் இல்லாதபடி செய்வதே பெரிய புண்ணியம்" என்று எண்ணினான். கயிற்றின் முடிச்சு எங்கே இருக்கிறதென்று அவன் தேடிய போது பெரியண்ணனுடைய உடல் மேல் கைபட்டது. அவனுடைய உடம்பு ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது அது பிரேதமா, உயிருள்ள உடலா? - இதைத் தெரிந்து கொள்ளும் ஆவலினால் நடுங்கிக் கொண்டே மறுபடியும் உடம்பு தட்டுப்பட்டது. பிரேதமானால் ஜில்லிட்டிருக்கு மென்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த உடம்பு ஜில்லென்று இல்லை; சிறிது சூடு இருப்பதுபோல் தோன்றியது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். மிகமிக இலேசாக மூச்சுவிடும் சப்தம் கேட்பது போலிருந்தது.
உடனே, மகுடபதியின் பரபரப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. எப்படியாவது ஓடிப்போய் டாக்டரை, அழைத்து வந்து பெரியண்ணனைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால்... கார்க்கோடக் கவுண்டர் போகும்போது சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன. "ஜெயிலுக்கும் போகலாம்! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்!" இந்த வார்த்தைகளின் அர்த்தம் பளிச்சென்று இப்போது அவனுக்குப் புலனாயிற்று. கார்க்கோடக் கவுண்டர் போலீஸாரை அழைத்து வருவார். தன்னைக் கைது செய்வார்கள். பெரியண்ணனைக் கொலை செய்ததாகத் தன் பேரில் கேஸ் நடக்கும்! கவுண்டர்களே சாட்சி சொல்வார்கள்! குற்றம் ருசுவாகிவிடும்! தன்னைத் தூக்கு மேடையில் ஏற்றுவார்கள்! - தன்னுடைய பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் பேச்சுத்தான் எடுபடும்!... பெரியண்ணனுடைய உயிரைக் காப்பாற்றினாலொழிய, தான் தூக்குமேடை ஏற வேண்டியதுதான்! அப்போது செந்திருவின் கதி என்ன ஆகும்?...
மகுடபதி, வெறி பிடித்தவனைப்போல் அப்படியும் இப்படியுமாகத் திமிறினான். 'பட்' என்று சப்தம் கேட்டது. சற்று நிதானித்துப் பார்த்தபோது அந்தப் பழைய சோபாவின் கால் இவன் இழுத்த இழுப்பில் முறிந்து விட்டது என்று தெரிந்தது. உடனே துள்ளிக் குதித்து எழுந்தான். கயிற்றைக் கீழே தளர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் கட்டிலிருந்து விடுபட்டான்.
கிழவனை மறுபடியும் தொட்டுப் பார்த்தான்; சூடு இருந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டு மச்சுப் படியை அடைந்து கீழே இறங்கினான். கீழே நடையில், புகையடைந்த அரிக்கன் லாந்தர் முன் போலவே எரிந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இழுத்துப் பார்த்தான். திறக்கவில்லை. வாசற்புறம் கதவைப் பூட்டிக் கொண்டுதான் அவர்கள் போயிருக்க வேண்டும். ஆகையால், அந்தக் கதவைத் திறக்க முயல்வதில் உபயோகமில்லை. கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறத்தை நோக்கி விரைந்து நடந்தான். நாலு கதவுகளைத் திறந்து தாழ்ப்பாளையும் திறந்து கொண்டு வெளியே வந்தான். அது சிறு சந்து என்று தெரிந்தது. லாந்தரை உட்புறம் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் நாதாங்கி போட்டுக் கொண்டு, தனக்குத் தெரிந்தவரான டாக்டர் புஜங்கராவின் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.
சுமார் ஒரு மைல் தூரம் நடந்து, அவன் டாக்டர் புஜங்கராவின் வீட்டை அடைந்தபோது நள்ளிரவு இருக்கும். படபடவென்று கதவைத் தட்டினான். புஜங்கராவ் தேசியப் பற்றுள்ள டாக்டர்; காங்கிரஸ் அபிமானி. அன்று சாயங்காலம் போலீஸ் தடியடியினால் காயமடைந்த தொண்டர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்துவிட்டு, அரைமணி நேரத்துக்கு முன்பு தான் அவர் வீட்டுக்கு வந்து படுத்தார். அதற்குள் யாரோ வந்து கதவை இடிக்கவே, தொண்டர் யாருக்காவதுதான் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, அவர் வந்து கதவைத் திறந்தார்.
மகுடபதியைப் பார்த்ததும், "ஓகோ! யார் மகுடபதியா? நீ எப்போது வந்தே? சாயங்காலமெல்லாம் உன்னைக் காணவில்லையே!" என்றார்.
மகுடபதி பதறிய குரலில் "டாக்டர்! டாக்டர்! உடனே வரவேணும். ஒரு உயிரைக் காப்பாற்றவேணும். அதோடு என்னையும் தூக்குமேடைக்கு போகாமல் காப்பாற்ற வேணும்" என்றான். அவனுடைய பதட்டத்தையும், முகத்தில் தோன்றிய பீதியையும் பார்த்து, குழறிய வார்த்தைகளையும் கேட்ட டாக்டருக்கு அவனுடைய மண்டையில் போலீஸ் அடி பட்டதினால் மூளை குழம்பி விட்டதோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.
"மகுடபதி! இப்படி உள்ளே வா! என்ன விஷயம்? யாருக்கு என்ன உடம்பு? நிதானமாய்ச் சொல்லு."
"நிதானமாய்ச் சொல்வதற்கு இது சமயமில்லை, ஸார்! நீங்கள் கிளம்புங்கள். போகும்போதே சொல்கிறேன்" என்றான் மகுடபதி.
"என்ன கேஸ் என்று தெரியாமல் எப்படியப்பா கிளம்புகிறது? தெரிந்தால்தானே அதற்குத் தகுந்த ஆயுதங்களுடன் கிளம்பலாம்?"
"கத்திக் குத்து, டாக்டர், பெரியண்ணன் தெரியுமோ, இல்லையோ பெரியண்ணன்? அவன் மார்பிலே கத்திக் குத்து, இன்னும் உயிர் இருக்கிறது? டாக்டர்! சீக்கிரம் கிளம்புங்கள்."
கார்க்கோடக் கவுண்டர் டார்ச்சு லைட்டுடன் போன பிறகு, சற்று நேரம் வரையில் மகுடபதி சிந்தனா சக்தியையே இழந்திருந்தான். சிறிது சிறிதாக, அவனுடைய மனம் யோசிக்கும் சக்தியைப் பெற்றது. இன்று காலையில் அவன் கிராமத்திலிருந்து கிளம்பிய போது, அன்று இரவுக்குள் தனக்கு இத்தகைய சம்பவங்கள் நேருமென்று யாராவது சொல்லியிருந்தால், இடிஇடியென்று சிரித்திருப்பான். அவ்விதம் சொன்னவனைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குப் போகும்படி கூறியிருப்பான்.
அவனுடைய மனோ நிலைமையில் இப்போது பயங்கரம் அதிகமாயிருந்ததா, அதிசயம் அதிகமாயிருந்ததா, அல்லது கவலைதான் அதிகமா என்று சொல்வதற்கியலாமலிருந்தது. செந்திருவைப்பற்றி எண்ணியபோது உள்ளத்தில் கவலை மீறியது. ஐயோ! பாவிகள் அவளை எங்கே கொண்டு போனார்களோ? என்ன செய்யப் போகிறார்களோ? பலவந்தமாகக் கல்யாணம் நடந்து விடுமோ? அந்தத் தீரப் பெண் அதற்குச் சம்மதிப்பாளா? சம்மதியாமல் அவள் பிடிவாதம் பிடித்தால் என்னென்ன விபரீதங்கள் நேரிடுமோ? சமயத்தில் போய்க் கல்யாணத்தைத் தடுத்து அவளை மீட்டுக் கொண்டு வரும் சக்தியைக் கடவுள் தனக்கு அளிப்பாரா?
தான் இன்னும் உயிரோடிருப்பதே கடவுளுடைய செயல்தான்! தன் மேல் பாய வேண்டிய கத்தியல்லவா பெரியண்ணன் மேல் பாய்ந்தது? - ஆஹா! சத்தியாக்கிரகம், அஹிம்சை என்றெல்லாம் பேசுகிறோமே? உண்மையான அஹிம்சா தர்மி - சத்தியாக்கிரகி - பெரியண்ணன் அல்லவா? தன்னுடைய உயிரை இன்னொருவனுக்காகக் கொடுக்கத் துணிந்தானே!
ஆனால், பெரியண்ணன் நிஜமாகவே இறந்து போய் விட்டானா? தன் பக்கத்திலே இருக்கும் பெரியண்ணனுடைய உடல் உயிரற்ற சவமா? ஒரு கத்திக் குத்தில் பிராணன் போயிருக்குமோ? உடனே வைத்தியரைக் கூட்டி வந்து சிகிச்சை செய்தால், ஒருவேளை அவன் பிழைத்தாலும் பிழைக்கலாம் அல்லவா? - அடடா! பாவிகள் தன்னை இப்படிக் கட்டிப் போட்டுவிட்டுப் போய் விட்டார்களே...!
மகுடபதி, கட்டை அவிழ்த்துக் கொள்ளும் பொருட்டு இப்படியும் அப்படியுமாகத் திமிறினான். சோபாவும் அவன் கூட வந்ததே தவிரக் கட்டு அவிழவில்லை. அப்புறம், கைகளினால் முடிச்சு எங்கே இருக்கிறதென்று தேடத் தொடங்கினான். அப்போது அவனுடைய மனதில், "ஆஹா! கிழவனுடைய உயிர் மட்டும் போயிருக்கட்டும். எப்படியாவது பழிக்குப் பழி வாங்கியேயாக வேண்டும். அஹிம்சையாவது மண்ணாங் கட்டியாவது! இப்பேர்ப்பட்ட பாதகர்களை இப்பூவுலகில் இல்லாதபடி செய்வதே பெரிய புண்ணியம்" என்று எண்ணினான். கயிற்றின் முடிச்சு எங்கே இருக்கிறதென்று அவன் தேடிய போது பெரியண்ணனுடைய உடல் மேல் கைபட்டது. அவனுடைய உடம்பு ஒரு குலுக்குக் குலுக்கிப் போட்டது அது பிரேதமா, உயிருள்ள உடலா? - இதைத் தெரிந்து கொள்ளும் ஆவலினால் நடுங்கிக் கொண்டே மறுபடியும் உடம்பு தட்டுப்பட்டது. பிரேதமானால் ஜில்லிட்டிருக்கு மென்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இந்த உடம்பு ஜில்லென்று இல்லை; சிறிது சூடு இருப்பதுபோல் தோன்றியது. கவனமாகக் காது கொடுத்துக் கேட்டான். மிகமிக இலேசாக மூச்சுவிடும் சப்தம் கேட்பது போலிருந்தது.
உடனே, மகுடபதியின் பரபரப்பு பன்மடங்கு அதிகமாயிற்று. எப்படியாவது ஓடிப்போய் டாக்டரை, அழைத்து வந்து பெரியண்ணனைக் காப்பாற்ற வேண்டும். இல்லாவிட்டால்... கார்க்கோடக் கவுண்டர் போகும்போது சொன்ன வார்த்தைகள் இப்போது நினைவுக்கு வந்தன. "ஜெயிலுக்கும் போகலாம்! அங்கிருந்து தூக்கு மேடைக்கும் போகலாம்!" இந்த வார்த்தைகளின் அர்த்தம் பளிச்சென்று இப்போது அவனுக்குப் புலனாயிற்று. கார்க்கோடக் கவுண்டர் போலீஸாரை அழைத்து வருவார். தன்னைக் கைது செய்வார்கள். பெரியண்ணனைக் கொலை செய்ததாகத் தன் பேரில் கேஸ் நடக்கும்! கவுண்டர்களே சாட்சி சொல்வார்கள்! குற்றம் ருசுவாகிவிடும்! தன்னைத் தூக்கு மேடையில் ஏற்றுவார்கள்! - தன்னுடைய பேச்சை யாரும் நம்ப மாட்டார்கள். அவர்கள் பேச்சுத்தான் எடுபடும்!... பெரியண்ணனுடைய உயிரைக் காப்பாற்றினாலொழிய, தான் தூக்குமேடை ஏற வேண்டியதுதான்! அப்போது செந்திருவின் கதி என்ன ஆகும்?...
மகுடபதி, வெறி பிடித்தவனைப்போல் அப்படியும் இப்படியுமாகத் திமிறினான். 'பட்' என்று சப்தம் கேட்டது. சற்று நிதானித்துப் பார்த்தபோது அந்தப் பழைய சோபாவின் கால் இவன் இழுத்த இழுப்பில் முறிந்து விட்டது என்று தெரிந்தது. உடனே துள்ளிக் குதித்து எழுந்தான். கயிற்றைக் கீழே தளர்த்திக் கொண்டு வந்து, கடைசியில் கட்டிலிருந்து விடுபட்டான்.
கிழவனை மறுபடியும் தொட்டுப் பார்த்தான்; சூடு இருந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டு மச்சுப் படியை அடைந்து கீழே இறங்கினான். கீழே நடையில், புகையடைந்த அரிக்கன் லாந்தர் முன் போலவே எரிந்து கொண்டிருந்தது. வாசல் கதவை இழுத்துப் பார்த்தான். திறக்கவில்லை. வாசற்புறம் கதவைப் பூட்டிக் கொண்டுதான் அவர்கள் போயிருக்க வேண்டும். ஆகையால், அந்தக் கதவைத் திறக்க முயல்வதில் உபயோகமில்லை. கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு கொல்லைப் புறத்தை நோக்கி விரைந்து நடந்தான். நாலு கதவுகளைத் திறந்து தாழ்ப்பாளையும் திறந்து கொண்டு வெளியே வந்தான். அது சிறு சந்து என்று தெரிந்தது. லாந்தரை உட்புறம் வைத்துவிட்டுக் கதவைச் சாத்தி வெளிப்புறம் நாதாங்கி போட்டுக் கொண்டு, தனக்குத் தெரிந்தவரான டாக்டர் புஜங்கராவின் வீட்டை நோக்கி ஓட்டமும் நடையுமாய்ச் சென்றான்.
சுமார் ஒரு மைல் தூரம் நடந்து, அவன் டாக்டர் புஜங்கராவின் வீட்டை அடைந்தபோது நள்ளிரவு இருக்கும். படபடவென்று கதவைத் தட்டினான். புஜங்கராவ் தேசியப் பற்றுள்ள டாக்டர்; காங்கிரஸ் அபிமானி. அன்று சாயங்காலம் போலீஸ் தடியடியினால் காயமடைந்த தொண்டர்களுக்கெல்லாம் சிகிச்சை செய்துவிட்டு, அரைமணி நேரத்துக்கு முன்பு தான் அவர் வீட்டுக்கு வந்து படுத்தார். அதற்குள் யாரோ வந்து கதவை இடிக்கவே, தொண்டர் யாருக்காவதுதான் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறதோ என்று எண்ணிக் கொண்டு, அவர் வந்து கதவைத் திறந்தார்.
மகுடபதியைப் பார்த்ததும், "ஓகோ! யார் மகுடபதியா? நீ எப்போது வந்தே? சாயங்காலமெல்லாம் உன்னைக் காணவில்லையே!" என்றார்.
மகுடபதி பதறிய குரலில் "டாக்டர்! டாக்டர்! உடனே வரவேணும். ஒரு உயிரைக் காப்பாற்றவேணும். அதோடு என்னையும் தூக்குமேடைக்கு போகாமல் காப்பாற்ற வேணும்" என்றான். அவனுடைய பதட்டத்தையும், முகத்தில் தோன்றிய பீதியையும் பார்த்து, குழறிய வார்த்தைகளையும் கேட்ட டாக்டருக்கு அவனுடைய மண்டையில் போலீஸ் அடி பட்டதினால் மூளை குழம்பி விட்டதோ என்ற சந்தேகம் உண்டாயிற்று.
"மகுடபதி! இப்படி உள்ளே வா! என்ன விஷயம்? யாருக்கு என்ன உடம்பு? நிதானமாய்ச் சொல்லு."
"நிதானமாய்ச் சொல்வதற்கு இது சமயமில்லை, ஸார்! நீங்கள் கிளம்புங்கள். போகும்போதே சொல்கிறேன்" என்றான் மகுடபதி.
"என்ன கேஸ் என்று தெரியாமல் எப்படியப்பா கிளம்புகிறது? தெரிந்தால்தானே அதற்குத் தகுந்த ஆயுதங்களுடன் கிளம்பலாம்?"
"கத்திக் குத்து, டாக்டர், பெரியண்ணன் தெரியுமோ, இல்லையோ பெரியண்ணன்? அவன் மார்பிலே கத்திக் குத்து, இன்னும் உயிர் இருக்கிறது? டாக்டர்! சீக்கிரம் கிளம்புங்கள்."
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
கத்திக்குத்து என்றதும் டாக்டருடைய தயக்கம் இன்னும் அதிகமாகிவிட்டது. விவரமாய்ச் சொன்னால் தான் கிளம்ப முடியும் என்றார். அதன் மேல் மகுடபதி அவசர அவசரமாக அன்று சாயங்காலம் முதல் தனக்கு நேர்ந்தவைகளை ஒரு மாதிரி சொல்லி முடித்தான்.
எல்லாவற்றையும் கேட்டு, விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட புஜங்கராவ், "அப்பா! மகுடபதி! இது டாக்டர் கேஸ் மட்டுமல்ல; இது போலீஸ் கேஸ். ஏற்கனவே நம் பேரில் போலீஸாருக்குக் 'காட்டம்' இருக்கிறது. இந்தமாதிரி விஷயத்தில் அவர்கள் இல்லாமல் தலையிட்டோ மானால், ஆபத்தாய் முடியலாம். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்கிருந்து போலீஸ் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு நீ சொல்லும் வீட்டிற்குப் போவோம்" என்றார். வேறு வழியில்லாமல் மகுடபதி ஒத்துக் கொண்டான்.
டாக்டர் புஜங்கராவ், மோட்டார் டிரைவர் போய் விட்டபடியால், காரைத் தாமே எடுத்து மகுடபதியையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். மகுடபதி மட்டும் போய் மேற்படி கதையைச் சொல்லியிருந்தானானால், என்ன நடந்திருக்குமோ, எப்படியாகி யிருக்குமோ, தெரியாது. டாக்டரும் கூடப் போயிருந்த படியால், ஒரு போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் டாக்டரின் வண்டியிலேயே கிளம்பினார்கள்.
அனுமந்தராயன் சந்தில், குறிப்பிட்ட வீட்டு வாசலில் போய் வண்டி நின்றது. எல்லாரும் அவசரமாய் இறங்கினார்கள். வாசற் கதவு பூட்டியிருந்தது.
"இந்த வீட்டு மச்சிலேதான் கிழவன் குத்துண்டு கிடக்கிறான். சீக்கிரம், சீக்கிரம்!" என்றான் மகுடபதி.
"கதவு பூட்டியிருக்கிறதே!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"பூட்டை உடைத்தால் போகிறது!"
"பூட்டை உடைப்பதற்கு ரூல் இல்லயே தம்பி!"
"அப்படியானால் வாருங்கள்; கொல்லைப் புறமாகப் போகலாம்."
கார் மறுபடியும் கிளம்பிற்று. கொல்லைப்புறச் சந்து ரொம்பக் குறுகலா யிருந்தபடியால், வண்டியைச் சற்றுத் தூரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தார்கள். மகுடபதி எல்லாருக்கும் முன்னால் விரைவாக ஓடினான். மற்றவர்கள் வருவதற்குள் வெளி நாதாங்கியைக் கழற்றிக் கதவைத் திறந்து உள்ளே போய், அவன் வைத்த இடத்திலேயே இருந்த அரிக்கன் லாந்தரைத் தூண்டிவிட்டு எடுத்துக் கொண்டான். எல்லாரும் வீட்டினுள் பிரவேசித்து வாசல் கடைக்கு வந்து மச்சு மேலும் ஏறினார்கள்.
மகுடபதி, பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ என்ற அசாத்திய கவலையுடன், மச்சு ஏறியதும், லாந்தரைத் தூக்கிப் பிடித்தான்.
அவனுடைய இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிற்று. ஏனெனில், சோபாவுக்குப் பக்கத்தில் அவன் எதிர்பார்த்த இடத்தில் பெரியண்ணனுடைய உடலைக் காணவில்லை!
ஹாலில் சுற்று முற்றும் பார்த்தான். எங்கும் காணவில்லை. ஓடிப்போய்த் தான் ஒளிந்திருந்த அறைக்குள் பார்த்தான். அங்கும் இல்லை.
சோபாவுக்குப் பக்கத்தில் சென்று தரையில் இரத்தக் கறை இருக்கிறதா என்று குனிந்து தேடினான். அதுவும் இல்லை. சட்டென்று பெரியண்ணன் சமுக்காளத்தில் விழுந்து கிடந்தான் என்பது நினைவு வந்தது. சமுக்காளத்தையே காணோம். அவர்கள் டிபன் சாப்பிட்ட பொட்டணக் காகிதம், ஜலம் இருந்த கூஜா ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அந்த வீடுதானா என்பதே மகுடபதிக்குச் சந்தேகமாகி விட்டது. மேஜை நாற்காலிகளும், கால் ஒடிந்த சோபாவும், அந்த வீடுதான் என்ற உறுதியை அவனுக்கு உண்டாக்கின.
இன்னொரு அடையாளமும் இருந்தது. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்தபோது மண்ணெண்ணெய் கொட்டிற்றல்லவா? அந்தக் கறையும், நாற்றமும் இருந்தன.
ஆனால், பெரியண்ணன் என்னவானான்? அல்லது அவனுடைய உடல் என்னவாயிற்று? மாயமாய் அல்லவா மறைந்து போயிருக்கிறது?
"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணினாயா?" என்று ஸப்-இன்ஸ்பெக்டர் ஏளனமும் கோபமும் கலந்த குரலில் கேட்டார்.
எல்லாவற்றையும் கேட்டு, விஷயத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட புஜங்கராவ், "அப்பா! மகுடபதி! இது டாக்டர் கேஸ் மட்டுமல்ல; இது போலீஸ் கேஸ். ஏற்கனவே நம் பேரில் போலீஸாருக்குக் 'காட்டம்' இருக்கிறது. இந்தமாதிரி விஷயத்தில் அவர்கள் இல்லாமல் தலையிட்டோ மானால், ஆபத்தாய் முடியலாம். முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போவோம். அங்கிருந்து போலீஸ் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு நீ சொல்லும் வீட்டிற்குப் போவோம்" என்றார். வேறு வழியில்லாமல் மகுடபதி ஒத்துக் கொண்டான்.
டாக்டர் புஜங்கராவ், மோட்டார் டிரைவர் போய் விட்டபடியால், காரைத் தாமே எடுத்து மகுடபதியையும் ஏற்றிக் கொண்டு போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார். மகுடபதி மட்டும் போய் மேற்படி கதையைச் சொல்லியிருந்தானானால், என்ன நடந்திருக்குமோ, எப்படியாகி யிருக்குமோ, தெரியாது. டாக்டரும் கூடப் போயிருந்த படியால், ஒரு போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டரும் இரண்டு போலீஸ் கான்ஸ்டேபிள்களும் டாக்டரின் வண்டியிலேயே கிளம்பினார்கள்.
அனுமந்தராயன் சந்தில், குறிப்பிட்ட வீட்டு வாசலில் போய் வண்டி நின்றது. எல்லாரும் அவசரமாய் இறங்கினார்கள். வாசற் கதவு பூட்டியிருந்தது.
"இந்த வீட்டு மச்சிலேதான் கிழவன் குத்துண்டு கிடக்கிறான். சீக்கிரம், சீக்கிரம்!" என்றான் மகுடபதி.
"கதவு பூட்டியிருக்கிறதே!" என்றார் இன்ஸ்பெக்டர்.
"பூட்டை உடைத்தால் போகிறது!"
"பூட்டை உடைப்பதற்கு ரூல் இல்லயே தம்பி!"
"அப்படியானால் வாருங்கள்; கொல்லைப் புறமாகப் போகலாம்."
கார் மறுபடியும் கிளம்பிற்று. கொல்லைப்புறச் சந்து ரொம்பக் குறுகலா யிருந்தபடியால், வண்டியைச் சற்றுத் தூரத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடந்தார்கள். மகுடபதி எல்லாருக்கும் முன்னால் விரைவாக ஓடினான். மற்றவர்கள் வருவதற்குள் வெளி நாதாங்கியைக் கழற்றிக் கதவைத் திறந்து உள்ளே போய், அவன் வைத்த இடத்திலேயே இருந்த அரிக்கன் லாந்தரைத் தூண்டிவிட்டு எடுத்துக் கொண்டான். எல்லாரும் வீட்டினுள் பிரவேசித்து வாசல் கடைக்கு வந்து மச்சு மேலும் ஏறினார்கள்.
மகுடபதி, பெரியண்ணனுக்கு உயிர் இருக்கிறதோ இல்லையோ என்ற அசாத்திய கவலையுடன், மச்சு ஏறியதும், லாந்தரைத் தூக்கிப் பிடித்தான்.
அவனுடைய இருதயம் ஒரு நிமிஷம் நின்றே போயிற்று. ஏனெனில், சோபாவுக்குப் பக்கத்தில் அவன் எதிர்பார்த்த இடத்தில் பெரியண்ணனுடைய உடலைக் காணவில்லை!
ஹாலில் சுற்று முற்றும் பார்த்தான். எங்கும் காணவில்லை. ஓடிப்போய்த் தான் ஒளிந்திருந்த அறைக்குள் பார்த்தான். அங்கும் இல்லை.
சோபாவுக்குப் பக்கத்தில் சென்று தரையில் இரத்தக் கறை இருக்கிறதா என்று குனிந்து தேடினான். அதுவும் இல்லை. சட்டென்று பெரியண்ணன் சமுக்காளத்தில் விழுந்து கிடந்தான் என்பது நினைவு வந்தது. சமுக்காளத்தையே காணோம். அவர்கள் டிபன் சாப்பிட்ட பொட்டணக் காகிதம், ஜலம் இருந்த கூஜா ஒன்றும் இல்லை. ஒரு நிமிஷம் அந்த வீடுதானா என்பதே மகுடபதிக்குச் சந்தேகமாகி விட்டது. மேஜை நாற்காலிகளும், கால் ஒடிந்த சோபாவும், அந்த வீடுதான் என்ற உறுதியை அவனுக்கு உண்டாக்கின.
இன்னொரு அடையாளமும் இருந்தது. அரிக்கன் லாந்தர் கவிழ்ந்தபோது மண்ணெண்ணெய் கொட்டிற்றல்லவா? அந்தக் கறையும், நாற்றமும் இருந்தன.
ஆனால், பெரியண்ணன் என்னவானான்? அல்லது அவனுடைய உடல் என்னவாயிற்று? மாயமாய் அல்லவா மறைந்து போயிருக்கிறது?
"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணினாயா?" என்று ஸப்-இன்ஸ்பெக்டர் ஏளனமும் கோபமும் கலந்த குரலில் கேட்டார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பத்தாம் அத்தியாயம் - "உள்ளே தள்ளு!"
ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கட ஹரிராவ் நாயுடுவின் முகத்தில், அவர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய போதிருந்தே, ஒருவிதக் கேலிப் புன்னகை குடிகொண்டிருந்தது. அதன் காரணத்தை நாம் அறிய வேண்டுமானால், மகுடபதி டாக்டர் புஜங்கராவ் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் மேற்படி ஸப்-இன்ஸ்பெட்கரின் வீட்டுக்கு நாம் போக வேண்டும்.
அன்று மாலை நடந்த போலீஸ் தடியடி வைபவத்தில் சங்கட ஹரிராவ் நாயுடுவும் கலந்து கொண்டு தம்முடைய பங்கை நிறைவேற்றி வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் வாசலில் கார் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கார்க்கோடக் கவுண்டர் தான். இரண்டு பேருக்கும் ரொம்பவும் சிநேகிதம்.
"என்ன, பிரதர்! என்ன விசேஷம் இந்த நேரத்தில்?" என்று நாயுடுகாரு கேட்டார். உடனே, எதையோ நினைத்துக் கொண்டு, "ஓகோ?" மறந்தே போய்விட்டேனே? - இந்தக் கலாட்டாவில் உங்கள் காரியம் ஒன்று பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தீர்களே? காரியம் ஆச்சா?" என்று கேட்டார்.
"ஆச்சு - ஆகவில்லை!" என்றார் கார்க்கோடாக் கவுண்டர்.
"அப்படியென்றால் என்ன?"
"பாதி ஆகிவிட்டது. நீ கொஞ்சம் மனது வைத்தால் பாக்கிப் பாதியும் ஆகிவிடும்."
"என்ன பிரதர், புதிர் போடுகிறீர்கள்?" என்று நாயுடு கேட்டார்.
பிறகு, கார்க்கோடக் கவுண்டர் சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "பையனைக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். அவனைத் தூக்குமேடைக்கு அனுப்புவது உன் பொறுப்பு" என்றார்.
சங்கட ஹரிராவ் நாயுடு சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தார். "கவுண்டரண்ணே! விஷயம் நீங்கள் சொல்லுவது போல் அவ்வளவு சுலபமில்லை. கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. பையன் நடந்த விஷயத்தை 'ஸ்டேட்மெண்ட்' கொடுத்தால், சாட்சிக்குப் பெண்ணைக் கூப்பிட வேண்டியதாகும். பெண் எங்கே என்று தேடும் போது வம்பு வந்து சேரும். மேலும் அவள் யாருக்கோ கடிதம் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லுகிறீர்கள். அதனால் ஏதாவது தொல்லை வந்தாலும் வரும்" என்றார்.
"என்னப்பா, திடீரென்று உனக்குத் தொடை நடுக்கம் வந்துவிட்டது? இதைவிட எத்தனையோ கஷ்டமான கேஸையெல்லாம் சமாளித்திருக்கிறாயே."
"உங்களுக்குத் தெரியாது, பிரதர்! இப்போது டிபார்ட்மெண்ட் முன்னைப்போல இல்லை. துரை ரொம்பப் பொல்லாதவனா யிருக்கான். ஏதோ இந்தக் காங்கிரஸ்காரர்கள் கலாட்டாவினாலே, நமக்கெல்லாம் டிபார்ட்மெண்டிலே கொஞ்சம் மதிப்பு இருந்து வருகிறது. இல்லாமல் போனால்..."
"உன் அழுகையை ஆரம்பித்து விட்டாயாக்கும், இப்போது என்னதான் செய்யலாம் என்கிறாய்? - நேரம் ஆகிறது."
"வாஸ்தவம். இங்கே, உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் பிடிபடாது. 'ஸ்பாட்டு'க்குப் போய்ப் பார்ப்போம். தடையங்கள் எல்லாம் எப்படியிருக்கிறதென்று பார்த்துக் கொண்டு தீர்மானிக்கலாம். அந்த லெட்டர் டெலிவரி ஆச்சா, இல்லையா என்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டால் தேவலை" என்று சொல்லிக் கொண்டே சங்கடஹரிராவ் நாயுடு எழுந்திருந்தார்.
இருவரும் காரில் ஏறி, 'ஸ்பாட்டு'க்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே, இவர்களுக்குப் பெரிய அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. கட்டிப் போட்டிருந்த மகுடபதியைக் காணோம். அதோடு, கிழவனிடமிருந்து முனகல் சப்தம் வந்தது.
கார்க்கோடக் கவுண்டர், டார்ச் லைட்டைப் பெரியண்ணனுடைய முகத்துக்கு நேராகக் காட்டினார். அவனுடைய கண்கள் சிறிது திறந்தன. கவுண்டரின் முகத்தைப் பார்த்து அக்கண்கள் திறுதிறுவென்று விழித்தன. கொஞ்சம் ஞாபகத்தின் அறிகுறி தோன்றியது. கிழவனுடைய வாய் பேசுவதற்கு முயன்றது. மிக மெலிந்த குரலில் "இரகசியம்... சொல்லாமற் போனால்... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் குழறிக் கொண்டு வந்தன. கிழவன் மறுபடியும் ஞாபகத்தை இழந்துவிட்டான்.
"கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி; கத்தி அதிக ஆழம் போகவில்லை. உடனே சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.
கார்க்கோடக் கவுண்டர் நாயுடுவின் முகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றார்.
"அண்ணே! வெறுமே திகைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பையன் அனேகமாய் ஸ்டேஷனுக்குத்தான் போயிருப்பான். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன். உடனே கிழவனை அப்புறப்படுத்திவிட வேண்டும்..."
கவுண்டரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; யோசிப்பதில் பிரயோசனம் இல்லை. கிழவனைப் பிழைக்க வைத்து விடுவதுதான் நல்லது. எது எப்படியிருக்குமோ, என்னமோ? பையனை வேறு விதத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம்" என்றார் நாயுடு.
கவுண்டர், "நீ எப்படி ஸ்டேஷனுக்குப் போவாய்? கொண்டுவிட்டுத் திரும்பட்டுமா" என்று கேட்டார்.
ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கட ஹரிராவ் நாயுடுவின் முகத்தில், அவர் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய போதிருந்தே, ஒருவிதக் கேலிப் புன்னகை குடிகொண்டிருந்தது. அதன் காரணத்தை நாம் அறிய வேண்டுமானால், மகுடபதி டாக்டர் புஜங்கராவ் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்த சமயத்தில் மேற்படி ஸப்-இன்ஸ்பெட்கரின் வீட்டுக்கு நாம் போக வேண்டும்.
அன்று மாலை நடந்த போலீஸ் தடியடி வைபவத்தில் சங்கட ஹரிராவ் நாயுடுவும் கலந்து கொண்டு தம்முடைய பங்கை நிறைவேற்றி வைத்துவிட்டு, இரவு பத்து மணிக்குத் தான் வீட்டுக்கு வந்தார். அவர் வந்த அரை மணி நேரத்துக்கெல்லாம் வாசலில் கார் சத்தம் கேட்டது. உள்ளே வந்தவர் கார்க்கோடக் கவுண்டர் தான். இரண்டு பேருக்கும் ரொம்பவும் சிநேகிதம்.
"என்ன, பிரதர்! என்ன விசேஷம் இந்த நேரத்தில்?" என்று நாயுடுகாரு கேட்டார். உடனே, எதையோ நினைத்துக் கொண்டு, "ஓகோ?" மறந்தே போய்விட்டேனே? - இந்தக் கலாட்டாவில் உங்கள் காரியம் ஒன்று பார்த்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தீர்களே? காரியம் ஆச்சா?" என்று கேட்டார்.
"ஆச்சு - ஆகவில்லை!" என்றார் கார்க்கோடாக் கவுண்டர்.
"அப்படியென்றால் என்ன?"
"பாதி ஆகிவிட்டது. நீ கொஞ்சம் மனது வைத்தால் பாக்கிப் பாதியும் ஆகிவிடும்."
"என்ன பிரதர், புதிர் போடுகிறீர்கள்?" என்று நாயுடு கேட்டார்.
பிறகு, கார்க்கோடக் கவுண்டர் சாங்கோபாங்கமாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, "பையனைக் கட்டிப் போட்டுவிட்டு வந்திருக்கிறேன். அவனைத் தூக்குமேடைக்கு அனுப்புவது உன் பொறுப்பு" என்றார்.
சங்கட ஹரிராவ் நாயுடு சிறிது நேரம் ஆழ்ந்து யோசித்தார். "கவுண்டரண்ணே! விஷயம் நீங்கள் சொல்லுவது போல் அவ்வளவு சுலபமில்லை. கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. பையன் நடந்த விஷயத்தை 'ஸ்டேட்மெண்ட்' கொடுத்தால், சாட்சிக்குப் பெண்ணைக் கூப்பிட வேண்டியதாகும். பெண் எங்கே என்று தேடும் போது வம்பு வந்து சேரும். மேலும் அவள் யாருக்கோ கடிதம் கொடுத்து அனுப்பியதாகச் சொல்லுகிறீர்கள். அதனால் ஏதாவது தொல்லை வந்தாலும் வரும்" என்றார்.
"என்னப்பா, திடீரென்று உனக்குத் தொடை நடுக்கம் வந்துவிட்டது? இதைவிட எத்தனையோ கஷ்டமான கேஸையெல்லாம் சமாளித்திருக்கிறாயே."
"உங்களுக்குத் தெரியாது, பிரதர்! இப்போது டிபார்ட்மெண்ட் முன்னைப்போல இல்லை. துரை ரொம்பப் பொல்லாதவனா யிருக்கான். ஏதோ இந்தக் காங்கிரஸ்காரர்கள் கலாட்டாவினாலே, நமக்கெல்லாம் டிபார்ட்மெண்டிலே கொஞ்சம் மதிப்பு இருந்து வருகிறது. இல்லாமல் போனால்..."
"உன் அழுகையை ஆரம்பித்து விட்டாயாக்கும், இப்போது என்னதான் செய்யலாம் என்கிறாய்? - நேரம் ஆகிறது."
"வாஸ்தவம். இங்கே, உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தால் ஒன்றும் பிடிபடாது. 'ஸ்பாட்டு'க்குப் போய்ப் பார்ப்போம். தடையங்கள் எல்லாம் எப்படியிருக்கிறதென்று பார்த்துக் கொண்டு தீர்மானிக்கலாம். அந்த லெட்டர் டெலிவரி ஆச்சா, இல்லையா என்று மட்டும் நிச்சயமாய்த் தெரிந்து போய்விட்டால் தேவலை" என்று சொல்லிக் கொண்டே சங்கடஹரிராவ் நாயுடு எழுந்திருந்தார்.
இருவரும் காரில் ஏறி, 'ஸ்பாட்டு'க்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே, இவர்களுக்குப் பெரிய அதிசயம் காத்துக் கொண்டிருந்தது. கட்டிப் போட்டிருந்த மகுடபதியைக் காணோம். அதோடு, கிழவனிடமிருந்து முனகல் சப்தம் வந்தது.
கார்க்கோடக் கவுண்டர், டார்ச் லைட்டைப் பெரியண்ணனுடைய முகத்துக்கு நேராகக் காட்டினார். அவனுடைய கண்கள் சிறிது திறந்தன. கவுண்டரின் முகத்தைப் பார்த்து அக்கண்கள் திறுதிறுவென்று விழித்தன. கொஞ்சம் ஞாபகத்தின் அறிகுறி தோன்றியது. கிழவனுடைய வாய் பேசுவதற்கு முயன்றது. மிக மெலிந்த குரலில் "இரகசியம்... சொல்லாமற் போனால்... மன்னிக்க வேணும்..." என்ற வார்த்தைகள் குழறிக் கொண்டு வந்தன. கிழவன் மறுபடியும் ஞாபகத்தை இழந்துவிட்டான்.
"கிழவனுக்கு உயிர் ரொம்பக் கெட்டி; கத்தி அதிக ஆழம் போகவில்லை. உடனே சிகிச்சை செய்தால் பிழைத்துக் கொள்வான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.
கார்க்கோடக் கவுண்டர் நாயுடுவின் முகத்தைப் பார்த்தபடி திகைத்து நின்றார்.
"அண்ணே! வெறுமே திகைத்துக் கொண்டிருப்பதில் பிரயோசனம் இல்லை. பையன் அனேகமாய் ஸ்டேஷனுக்குத்தான் போயிருப்பான். நான் அவனைப் பார்த்துக் கொள்கிறேன். உடனே கிழவனை அப்புறப்படுத்திவிட வேண்டும்..."
கவுண்டரின் முகத்தில் தோன்றிய கேள்விக் குறியைப் பார்த்துவிட்டு, "ஆமாம்; யோசிப்பதில் பிரயோசனம் இல்லை. கிழவனைப் பிழைக்க வைத்து விடுவதுதான் நல்லது. எது எப்படியிருக்குமோ, என்னமோ? பையனை வேறு விதத்தில் சரிப்படுத்திக் கொள்ளலாம்" என்றார் நாயுடு.
கவுண்டர், "நீ எப்படி ஸ்டேஷனுக்குப் போவாய்? கொண்டுவிட்டுத் திரும்பட்டுமா" என்று கேட்டார்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"வேண்டாம்; ஸ்டேஷன் இங்கிருந்து கிட்டத்தில் தான் இருக்கிறது. நான் போய்விடுகிறேன். உங்கள் வண்டியில் நான் வந்ததாகவே தெரியவேண்டாம். பையன் அங்கே காத்துக் கொண்டிருந்தால் வம்பு. நீங்களும் அவசரமாய்க் காரியத்தைப் பார்க்க வேண்டும். இங்கே இருக்கிற சமுக்காளம், லாந்தர், பெட்டி, சாமான் ஒன்றும் இருக்கக்கூடாது. போய்விட வேண்டும்."
"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கே ஒரு பிசகும் இருக்காது. நீ மட்டும் உன் காரியத்தைச் சரியாய்ப் பார்க்கவேண்டும்.
இந்தப் பேச்சு நடந்து பதினைந்து நிமிஷத்துக்குப் பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்; அங்கே இருந்த ஸ்டேஷன் ஆபீசர், கான்ஸ்டேபிள்கள் முதலியவர்களிடம், இன்று கலாட்டா நடந்திருக்கிறபடியால், ஏதாவது ஒரு வேளை 'அர்ஜெண்ட் கால்' வரலாம் என்று ஸ்டேஷனுக்கு வந்ததாகச் சொன்னார். பிறகு, அவர்களுடன் அன்றைய சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு, மகுடபதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தனியாய் வந்தால் என்ன செய்வது, யாருடனாவது வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர் மனம் யோசனை செய்து கொண்டிருந்தது.
நாயுடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியிருக்கும். பையன் பயந்து எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட்டான். இனிமேல் வரமாட்டான் என்று அவர் எண்ணத் தொடங்கிய சமயத்தில், டாக்டர் புஜங்கராவும் மகுடபதியும் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, ஸப்-இன்ஸ்பெக்டர், தாம் ஆலோசித்து வைத்திருந்த இரண்டாவது முறையைக் கையாண்டு, அவர்களுடன் அனுமந்தராயன் தெருவுக்குச் சென்றார். மகுடபதி அடைந்த ஏமாற்றத்தைத்தான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.
"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணுகிறாயா?" என்று ஸ்ப-இன்ஸ்பெக்டர் ஏளனமாய்க் கேட்டதும், மகுடபதி அவமானத்தினால் மனம் குன்றினான்.
டாக்டர் புஜங்கராவ் ஸப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து "நாயுடுகாரு! என் பேரில் பிசகு. இந்தப் பையன் சொன்னதைக் கேட்டு உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்" என்றார்.
"பரவாயில்லை, டாக்டர்! உங்கள் பேரில் மிஸ்டேக் இல்லை. இந்தப் பையன் ஏதோ 'ட்ரிக்' பண்ணுகிறான் என்று அப்போதே எனக்கு 'டவுட்' இருந்தது. நீங்கள் கூட வந்ததனால் தான் கிளம்பி வந்தேன். கதர் கட்டியிருப்பதைப் பார்த்து நீங்கள் 'டிஸீவ்' ஆகிவிட்டீர்கள்" என்றார்.
மகுடபதி டாக்டரை நோக்கி, "இல்லை டாக்டர்! நான் உங்களை ஏமாற்றவில்லை. சத்தியமாய்ச் சொல்கிறேன். கடவுள்மேல் ஆணையாய்ச் சொல்கிறேன். நான் உங்களிடம் சொன்னதெல்லாம் உண்மை. இந்த அறையில், நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் பெரியண்ணன் கிடந்தான். அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அவன் குத்தப்பட்டு வீழ்ந்ததை இந்தக் கண்களாலே பார்த்தேன்..." என்று ஆத்திரத்துடன் கூறிவந்த போது நாயுடுகாரு குறிக்கிட்டார்.
"சரிதான், நாயனா, சரிதான்! எல்லாரும் காதாலே பார்ப்பார்கள். நீ மட்டுந்தான் கண்ணாலே பார்த்தே! ஒரு வேளை 'ட்ரீம்'லே பார்த்தாயோ, என்னமோ? இல்லாவிட்டால், டிலிரியம் ட்ரீமன்ஸோ? எப்படியிருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் எழுதி வைத்து விட்டுப் போ!" என்று சொல்லிவிட்டு புஜங்கராவைப் பார்த்து, "வாருங்கள் டாக்டர், போகலாம். மணி ஒன்று அடிக்கப் போகிறது. நல்ல 'வொயிட் கூஸ் கேஸ்' இன்று ராத்திரி" என்றார். சங்கடஹரிராவ் நாயுடுவுக்கு உற்சாகம் வந்தால், ஒரே மணிப்பிரவாள நடையில் இங்கிலீஷும் தமிழும் கலந்து பேசுவார் என்பது பிரசித்தமான விஷயம்.
டாக்டர் முன்னால் போகவும், மற்றவர்கள் எல்லாம் அவரைத் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக்கொண்டார்கள். மோட்டார் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் டாக்டரைத் தவிர பாக்கி எல்லாரும் இறங்கினார்கள்.
"குட் நைட், டாக்டர்!" என்றார் நாயுடு.
"குட் நைட் நாயுடுகாரு!" என்று சொல்லிவிட்டு டாக்டர் வண்டியை விட்டார்.
"டாக்டர்! நான் சொன்னது அவ்வளவும் சத்தியம். ஏதோ பெரிய மர்மம் நடந்திருக்கிறது. அப்புறம் வந்து சாவகாசமாய்ச் சொல்கிறேன்..." என்று மகுடபதி இரைந்து கத்திக் கொண்டே இருக்கையில் வண்டி போய்விட்டது.
ஸப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், "அடே! முந்நூற்றறுபத்தைந்து! பையனை உள்ளே தள்ளு! கையிலே காப்பை மாட்டு!" என்றார்.
இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்த மகுடபதி, "என்னத்திற்காக, ஸார்! என் பேரில் என்ன கேஸ்?" என்று கேட்டான்.
"என்ன கேஸா? எத்தனையோ இருக்கிறது! போலீஸாரிடம் பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்த கேஸ்; பூட்டியிருந்த வீட்டுக்குள் பின்புறமாக நுழைந்த கேஸ்; கள்ளுக்கடைக்குத் தீ வைத்த கேஸ்; சட்டத்தை மீறி மறியல் செய்வதற்கு வந்த கேஸ்; இவ்வளவுந்தான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.
அடுத்த நிமிஷம் இரண்டு போலீஸ் சேவகர்கள் மகுடபதியின் கையில் விலங்கை மாட்டி, அவனை லாக் அப்பிற்குள் தள்ளி அடைந்தார்கள்.
"அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கே ஒரு பிசகும் இருக்காது. நீ மட்டும் உன் காரியத்தைச் சரியாய்ப் பார்க்கவேண்டும்.
இந்தப் பேச்சு நடந்து பதினைந்து நிமிஷத்துக்குப் பிறகு ஸப்-இன்ஸ்பெக்டர் சங்கடஹரிராவ் நாயுடு போலீஸ் ஸ்டேஷனை அடைந்தார்; அங்கே இருந்த ஸ்டேஷன் ஆபீசர், கான்ஸ்டேபிள்கள் முதலியவர்களிடம், இன்று கலாட்டா நடந்திருக்கிறபடியால், ஏதாவது ஒரு வேளை 'அர்ஜெண்ட் கால்' வரலாம் என்று ஸ்டேஷனுக்கு வந்ததாகச் சொன்னார். பிறகு, அவர்களுடன் அன்றைய சம்பவங்களைப் பற்றிப் பேசிக் கொண்டு, மகுடபதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். அவன் தனியாய் வந்தால் என்ன செய்வது, யாருடனாவது வந்தால் என்ன செய்வது என்பதைப் பற்றி அவர் மனம் யோசனை செய்து கொண்டிருந்தது.
நாயுடு போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகியிருக்கும். பையன் பயந்து எங்கேயோ போய் ஒளிந்து கொண்டு விட்டான். இனிமேல் வரமாட்டான் என்று அவர் எண்ணத் தொடங்கிய சமயத்தில், டாக்டர் புஜங்கராவும் மகுடபதியும் வந்து சேர்ந்தார்கள். ஆகவே, ஸப்-இன்ஸ்பெக்டர், தாம் ஆலோசித்து வைத்திருந்த இரண்டாவது முறையைக் கையாண்டு, அவர்களுடன் அனுமந்தராயன் தெருவுக்குச் சென்றார். மகுடபதி அடைந்த ஏமாற்றத்தைத்தான் சென்ற அத்தியாயத்தில் நாம் பார்த்தோம்.
"என்ன தம்பி! 'ஜோக்' பண்ணுகிறாயா?" என்று ஸ்ப-இன்ஸ்பெக்டர் ஏளனமாய்க் கேட்டதும், மகுடபதி அவமானத்தினால் மனம் குன்றினான்.
டாக்டர் புஜங்கராவ் ஸப்-இன்ஸ்பெக்டரைப் பார்த்து "நாயுடுகாரு! என் பேரில் பிசகு. இந்தப் பையன் சொன்னதைக் கேட்டு உங்களுக்குத் தொந்தரவு கொடுத்துவிட்டேன். மன்னிக்கவேண்டும்" என்றார்.
"பரவாயில்லை, டாக்டர்! உங்கள் பேரில் மிஸ்டேக் இல்லை. இந்தப் பையன் ஏதோ 'ட்ரிக்' பண்ணுகிறான் என்று அப்போதே எனக்கு 'டவுட்' இருந்தது. நீங்கள் கூட வந்ததனால் தான் கிளம்பி வந்தேன். கதர் கட்டியிருப்பதைப் பார்த்து நீங்கள் 'டிஸீவ்' ஆகிவிட்டீர்கள்" என்றார்.
மகுடபதி டாக்டரை நோக்கி, "இல்லை டாக்டர்! நான் உங்களை ஏமாற்றவில்லை. சத்தியமாய்ச் சொல்கிறேன். கடவுள்மேல் ஆணையாய்ச் சொல்கிறேன். நான் உங்களிடம் சொன்னதெல்லாம் உண்மை. இந்த அறையில், நீங்கள் இப்போது நின்று கொண்டிருக்கும் இதே இடத்தில் இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் பெரியண்ணன் கிடந்தான். அவன் மார்பில் கத்தி பாய்ந்திருந்தது. அவன் குத்தப்பட்டு வீழ்ந்ததை இந்தக் கண்களாலே பார்த்தேன்..." என்று ஆத்திரத்துடன் கூறிவந்த போது நாயுடுகாரு குறிக்கிட்டார்.
"சரிதான், நாயனா, சரிதான்! எல்லாரும் காதாலே பார்ப்பார்கள். நீ மட்டுந்தான் கண்ணாலே பார்த்தே! ஒரு வேளை 'ட்ரீம்'லே பார்த்தாயோ, என்னமோ? இல்லாவிட்டால், டிலிரியம் ட்ரீமன்ஸோ? எப்படியிருந்தாலும் ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மெண்ட் எழுதி வைத்து விட்டுப் போ!" என்று சொல்லிவிட்டு புஜங்கராவைப் பார்த்து, "வாருங்கள் டாக்டர், போகலாம். மணி ஒன்று அடிக்கப் போகிறது. நல்ல 'வொயிட் கூஸ் கேஸ்' இன்று ராத்திரி" என்றார். சங்கடஹரிராவ் நாயுடுவுக்கு உற்சாகம் வந்தால், ஒரே மணிப்பிரவாள நடையில் இங்கிலீஷும் தமிழும் கலந்து பேசுவார் என்பது பிரசித்தமான விஷயம்.
டாக்டர் முன்னால் போகவும், மற்றவர்கள் எல்லாம் அவரைத் தொடர்ந்து போய்க் காரில் ஏறிக்கொண்டார்கள். மோட்டார் போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும் டாக்டரைத் தவிர பாக்கி எல்லாரும் இறங்கினார்கள்.
"குட் நைட், டாக்டர்!" என்றார் நாயுடு.
"குட் நைட் நாயுடுகாரு!" என்று சொல்லிவிட்டு டாக்டர் வண்டியை விட்டார்.
"டாக்டர்! நான் சொன்னது அவ்வளவும் சத்தியம். ஏதோ பெரிய மர்மம் நடந்திருக்கிறது. அப்புறம் வந்து சாவகாசமாய்ச் சொல்கிறேன்..." என்று மகுடபதி இரைந்து கத்திக் கொண்டே இருக்கையில் வண்டி போய்விட்டது.
ஸப்-இன்ஸ்பெக்டர் ஸ்டேஷனுக்குள் நுழைந்ததும், "அடே! முந்நூற்றறுபத்தைந்து! பையனை உள்ளே தள்ளு! கையிலே காப்பை மாட்டு!" என்றார்.
இந்த மாதிரி ஏதாவது நடக்கும் என்று எதிர்பார்த்த மகுடபதி, "என்னத்திற்காக, ஸார்! என் பேரில் என்ன கேஸ்?" என்று கேட்டான்.
"என்ன கேஸா? எத்தனையோ இருக்கிறது! போலீஸாரிடம் பொய் ஸ்டேட்மெண்ட் கொடுத்த கேஸ்; பூட்டியிருந்த வீட்டுக்குள் பின்புறமாக நுழைந்த கேஸ்; கள்ளுக்கடைக்குத் தீ வைத்த கேஸ்; சட்டத்தை மீறி மறியல் செய்வதற்கு வந்த கேஸ்; இவ்வளவுந்தான்" என்றார் ஸப்-இன்ஸ்பெக்டர்.
அடுத்த நிமிஷம் இரண்டு போலீஸ் சேவகர்கள் மகுடபதியின் கையில் விலங்கை மாட்டி, அவனை லாக் அப்பிற்குள் தள்ளி அடைந்தார்கள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பதினோராம் அத்தியாயம் - மலைச் சிறை
மகுடபதியைப் போலீஸ் 'லாக்-அப்பிற்குள் தள்ளி அடைத்தபோது இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். கிட்டத்தட்ட அதே சமயத்தில், கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டி மேட்டுப்பாளையம் போகும் ரஸ்தாவில் ஒரு மோட்டார் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டியில் பின் ஸீட்டில் தங்கசாமிக் கவுண்டரும் செந்திருவும் இருந்தார்கள். டிரைவருடைய ஆசனத்தில் கார்க்கோடக் கவுண்டர் உட்கார்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார்.
செந்திருவுக்கு முன்னமே சுயப் பிரக்ஞை உண்டாகிவிட்டது. ஆனாலும், இன்னும் அவள் உள்ளத்தின் பிரமை நீங்கவில்லை. மகுடபதி சோபாவின் காலில் கட்டுண்டு கிடப்பதும், கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவதும், பெரியண்ணன் குறுக்கே பாய்வதும், கத்தி அவன் மார்பில் பதிவதும், பெரியண்ணன் கீழே விழுவதுமான காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனக்கண் முன் வந்து கொண்டிருந்தன. வேறு விஷயங்களில் அவள் மனது செல்ல மறுத்தது. கத்திக்குத்து, அரிவாள் வெட்டு முதலியவைகளைக் குறித்துப் பேசுவதை அவள் சர்வ சாதாரணமாய்க் கேட்டிருக்கிறாள். ஆனால் இம்மாதிரிச் சம்பவம் எதையும் அவள் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. ஆகையால்தான் அந்தப் பயங்கரக் காட்சி அவள் மனதில் அவ்வளவு ஆழமாய்ப் பதிந்துவிட்டது. கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவது நினைவில் வரும்போது, அவள் கண்களை இறுக்கி மூடிக் கொள்வாள். உடம்பு வெடவெடவென்று நடுங்கும். பெரியண்ணன் மார்பில் குத்திய கத்தி, உண்மையில் தன்னுடைய மார்பில் பாய்ந்து விட்டதாக அவளுக்குச் சில சமயம் தோன்றும். கத்தி பாய்ந்த இடத்தில் வலிப்பது போலவும் இருக்கும்.
காரில் வேகமாய் சென்றபோது, இரவு நேரத்தின் குளிர்ந்த காற்று விர்ரென்று அவளுடைய முகத்தில் அடிக்கத் தொடங்கியது. இதனால் சிறிது சிறிதாக அவளுக்கு சிந்திக்கும் சக்தி ஏற்பட்டது. தான் காரில் போவதும், தன் பக்கத்தில் தங்கசாமிக் கவுண்டர் உட்கார்ந்திருப்பதும் மெதுவாக மனதில் வந்தன. கார் எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்தது. சுற்றுமுற்றும் சாலையைப் பார்த்தாள். இருட்டாயிருந்தாலும், அது மேட்டுப்பாளையம் போகிற சாலையென்று ஒருவாறு தெரிந்தது. தன்னைச் சிங்கமேட்டுக்குத்தான் கொண்டு போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.
அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக அன்று காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா என்று அடிக்கடி சந்தேகம் உண்டாயிற்று. அந்த வீட்டில், தான் மூர்ச்சையடைந்து விழுந்த பிறகு என்ன நடந்திருக்கும்? பெரியண்ணன் செத்துப் போனவன் தானா? ஒருவேளை பிழைத்திருப்பானா? ஐயோ! பாவிகள் அந்த அழகிய வாலிபரையும்...
இச்சமயத்தில் ஏதோ மங்கிய கனவில் கேட்டது போல், பின்வரும் பேச்சுவார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.
"பையனை என்ன செய்திருக்கிறீர்கள்?"
"செய்கிறது என்ன? சோபாவின் காலோடுதான் கட்டியிருக்கிறதே? பத்திரமாயிருக்கிறான். பையனை ஒரு மாதத்திற்குள் தூக்கு மேடைக்கு அனுப்பாமற் போனால் நான் கள்ளிப்பட்டி சென்னிமுத்துக் கவுண்டன் மகன் அல்ல..."
"பையன் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டால்?"
"நாம் சொல்வதை நம்புவார்களா, அவன் சொல்வதை நம்புவார்களா?"
"இந்தப் பெண் சாட்சி சொன்னால்?..."
"சீ! பைத்தியமே? இவளுக்குக் கூடப் பயப்படுகிறாயா? இனிமேல் இவளை யார் வெளியில் விடப் போகிறார்கள்? நம்மை மீறிச் சாட்சி சொல்லி விடுவாளா?"
"போலீஸ் உளவு விசாரித்தால்..."
"போலீஸ், போலீஸ் என்று அடித்துக் கொள்ளாதே, போலீஸெல்லாம் என் கைக்குள் என்று தெரியாதா? நீ பேசாமலிரு. நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்."
இவ்விதம் தன் சித்தப்பாவின் குரலும் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய குரலும் பேசிக் கொண்டது அவளுக்கு இலேசாக நினைவு வந்தது. அவர்கள் எங்கே இவ்விதம் பேசினார்கள்? தான் எங்கே இருந்து அந்தப் பேச்சைக் கேட்டது? செந்திரு கண்களை இறுக்கி மூடிக் கொண்டு யோசனை செய்தாள். அனுமந்தராயன் தெரு வீட்டிலிருந்து தன்னை வேறொரு வீட்டில் கொண்டு போய்ப் போட்டதும், அங்கே ஒரு கட்டிலில் தான் கொஞ்ச நேரம் கிடந்ததும் - பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் நினைவுக்கு வந்தன. அந்த வீட்டில், தான் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதான், தனக்கு உணர்வு வந்துவிட்டது என்பதை அறியாமல் அவர்கள் அவ்விதம் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
அந்தச் சம்பாஷணையை - துண்டு துண்டாகவும் - விட்டு விட்டும் நினைவு வந்த அந்தச் சம்பாஷணையை - செந்திரு அடிக்கடி சிந்தனை செய்தாள். அதனுடைய கருத்து இன்னதென்பதை அவள் அறிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. விஷயம் இன்னதென்று தெரிந்த போது அவளுக்கு உண்டான பயத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை.
பெரியண்ணனைக் கொன்றதாக அந்தக் காந்திக் குல்லாக்காரர்மேல் கொலைக் குற்றம் சாட்டப் போகிறார்கள்! அந்தக் குற்றத்துக்காக அவரைத் தூக்கில் போடப் போகிறார்கள்! - ஆகா, எப்பேர்ப்பட்ட பாதகம்! என்ன பயங்கரமான அக்கிரமம்!
மகுடபதியைப் போலீஸ் 'லாக்-அப்பிற்குள் தள்ளி அடைத்தபோது இரவு சுமார் இரண்டு மணி இருக்கும். கிட்டத்தட்ட அதே சமயத்தில், கோயமுத்தூர் நகரின் எல்லையைத் தாண்டி மேட்டுப்பாளையம் போகும் ரஸ்தாவில் ஒரு மோட்டார் வண்டி போய்க் கொண்டிருந்தது. அந்த வண்டியில் பின் ஸீட்டில் தங்கசாமிக் கவுண்டரும் செந்திருவும் இருந்தார்கள். டிரைவருடைய ஆசனத்தில் கார்க்கோடக் கவுண்டர் உட்கார்ந்து வண்டியை ஓட்டிக் கொண்டு போனார்.
செந்திருவுக்கு முன்னமே சுயப் பிரக்ஞை உண்டாகிவிட்டது. ஆனாலும், இன்னும் அவள் உள்ளத்தின் பிரமை நீங்கவில்லை. மகுடபதி சோபாவின் காலில் கட்டுண்டு கிடப்பதும், கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவதும், பெரியண்ணன் குறுக்கே பாய்வதும், கத்தி அவன் மார்பில் பதிவதும், பெரியண்ணன் கீழே விழுவதுமான காட்சிகள் திரும்பத் திரும்ப அவள் மனக்கண் முன் வந்து கொண்டிருந்தன. வேறு விஷயங்களில் அவள் மனது செல்ல மறுத்தது. கத்திக்குத்து, அரிவாள் வெட்டு முதலியவைகளைக் குறித்துப் பேசுவதை அவள் சர்வ சாதாரணமாய்க் கேட்டிருக்கிறாள். ஆனால் இம்மாதிரிச் சம்பவம் எதையும் அவள் இதுவரைக்கும் பார்த்தது கிடையாது. ஆகையால்தான் அந்தப் பயங்கரக் காட்சி அவள் மனதில் அவ்வளவு ஆழமாய்ப் பதிந்துவிட்டது. கார்க்கோடக் கவுண்டர் கத்தியை ஓங்குவது நினைவில் வரும்போது, அவள் கண்களை இறுக்கி மூடிக் கொள்வாள். உடம்பு வெடவெடவென்று நடுங்கும். பெரியண்ணன் மார்பில் குத்திய கத்தி, உண்மையில் தன்னுடைய மார்பில் பாய்ந்து விட்டதாக அவளுக்குச் சில சமயம் தோன்றும். கத்தி பாய்ந்த இடத்தில் வலிப்பது போலவும் இருக்கும்.
காரில் வேகமாய் சென்றபோது, இரவு நேரத்தின் குளிர்ந்த காற்று விர்ரென்று அவளுடைய முகத்தில் அடிக்கத் தொடங்கியது. இதனால் சிறிது சிறிதாக அவளுக்கு சிந்திக்கும் சக்தி ஏற்பட்டது. தான் காரில் போவதும், தன் பக்கத்தில் தங்கசாமிக் கவுண்டர் உட்கார்ந்திருப்பதும் மெதுவாக மனதில் வந்தன. கார் எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்தது. சுற்றுமுற்றும் சாலையைப் பார்த்தாள். இருட்டாயிருந்தாலும், அது மேட்டுப்பாளையம் போகிற சாலையென்று ஒருவாறு தெரிந்தது. தன்னைச் சிங்கமேட்டுக்குத்தான் கொண்டு போகிறார்கள் என்று எண்ணிக் கொண்டாள்.
அப்புறம் கொஞ்சங் கொஞ்சமாக அன்று காலையிலிருந்து நடந்த சம்பவங்கள் நினைவுக்கு வந்தன. அவையெல்லாம் உண்மையாக நடந்தவைதானா என்று அடிக்கடி சந்தேகம் உண்டாயிற்று. அந்த வீட்டில், தான் மூர்ச்சையடைந்து விழுந்த பிறகு என்ன நடந்திருக்கும்? பெரியண்ணன் செத்துப் போனவன் தானா? ஒருவேளை பிழைத்திருப்பானா? ஐயோ! பாவிகள் அந்த அழகிய வாலிபரையும்...
இச்சமயத்தில் ஏதோ மங்கிய கனவில் கேட்டது போல், பின்வரும் பேச்சுவார்த்தைகள் அவள் நினைவுக்கு வந்தன.
"பையனை என்ன செய்திருக்கிறீர்கள்?"
"செய்கிறது என்ன? சோபாவின் காலோடுதான் கட்டியிருக்கிறதே? பத்திரமாயிருக்கிறான். பையனை ஒரு மாதத்திற்குள் தூக்கு மேடைக்கு அனுப்பாமற் போனால் நான் கள்ளிப்பட்டி சென்னிமுத்துக் கவுண்டன் மகன் அல்ல..."
"பையன் நடந்ததையெல்லாம் சொல்லிவிட்டால்?"
"நாம் சொல்வதை நம்புவார்களா, அவன் சொல்வதை நம்புவார்களா?"
"இந்தப் பெண் சாட்சி சொன்னால்?..."
"சீ! பைத்தியமே? இவளுக்குக் கூடப் பயப்படுகிறாயா? இனிமேல் இவளை யார் வெளியில் விடப் போகிறார்கள்? நம்மை மீறிச் சாட்சி சொல்லி விடுவாளா?"
"போலீஸ் உளவு விசாரித்தால்..."
"போலீஸ், போலீஸ் என்று அடித்துக் கொள்ளாதே, போலீஸெல்லாம் என் கைக்குள் என்று தெரியாதா? நீ பேசாமலிரு. நான் எல்லாம் பார்த்துக் கொள்கிறேன்."
இவ்விதம் தன் சித்தப்பாவின் குரலும் கள்ளிப்பட்டிக் கவுண்டருடைய குரலும் பேசிக் கொண்டது அவளுக்கு இலேசாக நினைவு வந்தது. அவர்கள் எங்கே இவ்விதம் பேசினார்கள்? தான் எங்கே இருந்து அந்தப் பேச்சைக் கேட்டது? செந்திரு கண்களை இறுக்கி மூடிக் கொண்டு யோசனை செய்தாள். அனுமந்தராயன் தெரு வீட்டிலிருந்து தன்னை வேறொரு வீட்டில் கொண்டு போய்ப் போட்டதும், அங்கே ஒரு கட்டிலில் தான் கொஞ்ச நேரம் கிடந்ததும் - பூர்வ ஜன்மத்து ஞாபகம் போல் நினைவுக்கு வந்தன. அந்த வீட்டில், தான் கட்டிலில் படுத்துக் கிடந்த போதுதான், தனக்கு உணர்வு வந்துவிட்டது என்பதை அறியாமல் அவர்கள் அவ்விதம் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும்.
அந்தச் சம்பாஷணையை - துண்டு துண்டாகவும் - விட்டு விட்டும் நினைவு வந்த அந்தச் சம்பாஷணையை - செந்திரு அடிக்கடி சிந்தனை செய்தாள். அதனுடைய கருத்து இன்னதென்பதை அவள் அறிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது. விஷயம் இன்னதென்று தெரிந்த போது அவளுக்கு உண்டான பயத்துக்கும், ஆத்திரத்துக்கும் அளவே இல்லை.
பெரியண்ணனைக் கொன்றதாக அந்தக் காந்திக் குல்லாக்காரர்மேல் கொலைக் குற்றம் சாட்டப் போகிறார்கள்! அந்தக் குற்றத்துக்காக அவரைத் தூக்கில் போடப் போகிறார்கள்! - ஆகா, எப்பேர்ப்பட்ட பாதகம்! என்ன பயங்கரமான அக்கிரமம்!
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
இதை நினைக்க நினைக்க, செந்திருவின் அறிவு விரைவாகத் தெளிந்து வந்தது. அந்த அக்கிரமத்தைத் தவிர்க்கக் கூடியவள் தான் ஒருத்திதான் என்பதை அவள் உணர்ந்தாள். பெரியண்ணன் இன்னொருவர் கையினால் குத்துப்பட்டதை அவள் கண்ணால் பார்த்திருக்கிறாள். கோர்ட்டில் அவள் போய்ச் சொன்னால், நிச்சயமாக அந்தக் காந்தி மனுஷருக்குத் தண்டனை விதிக்க மாட்டார்கள். இதை எப்படியாவது தான் நிறைவேற்ற வேண்டும் என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு தீர்மானித்தாள். அதற்கு எத்தனையோ காரணங்கள் இருந்தன. பெரியண்ணன் தன் பேரில் அன்பு வைத்த காரணத்தினால் குத்திக் கொல்லப்பட்டான்; அவனுக்காகப் பழிக்குப் பழி வாங்க வேண்டும். அந்த வாலிபர் தன்னால் இந்தப் பெரிய அபாயத்தில் மாட்டிக் கொண்டிருக்கிறார். ஒரு எறும்பைக் கூடக் கொல்லத் தயங்கக்கூடிய அந்த காந்தி மனுஷர், தன்னால் இப்போது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிறார். அவரை எப்படியாவது விடுவிக்க வேண்டும். கார்க்கோடக் கவுண்டரை தான் மணந்து கொள்வதென்பது - அதுவும் அன்று இராத்திரிக்குப் பிறகு - ஒரு நாளும் இயலாத காரியம். அந்தப் பாவி - கொலைகாரன் இன்னும் இந்த உலகத்தில் இருந்தால் என்னென்ன துர்க்கிருத்தியங்கள் செய்வானோ! அந்த அழகிய வாலிபரையல்லவா இவன் தூக்குமேடையில் பார்ப்பதாகச் சொன்னான்? அதற்குப் பதிலாக இவனைத் தூக்கு மேடைக்கு அனுப்புவது தன்னுடைய காரியம்.
கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி, கடைசியில் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், தன் காதில் இருந்த வைரத் தோட்டை உடைத்துப் பொடி பண்ணிச் சாப்பிட்டு உயிரை விட்டுவிடுவதென்று ஏற்கெனவே செந்திரு தீர்மானித்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தை அவள் கைவிட்டாள். தன் உயிரை எப்படியாவது கெட்டியாகக் காப்பாற்றிக் கொள்வது அவசியம்; அப்போதுதான் பெரியண்ணனுடைய அநியாயக் கொலைக்குப் பழி வாங்க முடியும்; அந்த வாலிபரின் உயிரையும் காப்பாற்ற முடியும்.
இப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போது, சாலையின் ஒரு புறத்தில் சிங்கமேட்டு ஓடையும், வீடும் தெரிந்தன. வெண்ணிலாவில் ஓடை நீர் வெள்ளிமயமாய்ப் பிரகாசித்தது. அந்த ஓடைக்கரையில், முதன் முதலில் மகுடபதியைத் தான் சந்தித்ததை நினைத்தபோது, அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. மூன்று வருஷமாகத் தன்னைச் சிறை வைத்திருந்த வீட்டுக்கே மறுபடி போகிறோம் என்ற எண்ணம் அவளை என்னமோ செய்தது. முதல் நாள் காலையில் அங்கிருந்து ஒருவரும் அறியாமல் கிழவனுடன் கிளம்பியபோது எவ்வளவு பிசகாய்ப் போயிற்று? தான் நினைத்ததென்ன? மறுபடியும், அன்று இராத்திரியே அந்த ஜெயிலுக்குத் திரும்பி வருவோமென்று...
ஆனால், இதென்ன? வண்டி சிங்கமேட்டுக் குறுக்குப்பாதையில் திரும்பாமல் நேரே போகிறதே? டிரைவர் ஒரு வேளை தெரியாமல் விட்டுக் கொண்டு போகிறனோ? சித்தப்பாவைக் கேட்கலாமென்று செந்திரு வாய் எடுத்தாள். அதே சமயத்தில், தங்கசாமிக் கவுண்டர் "அண்ணே! நன்றாக யோசனை செய்துவிட்டீர்களா? நேரே போக வேண்டியதுதானே?" என்றார்.
"தம்பி! நீ என்னத்திற்கு வீணாகக் கவலைப்படுகிறாய்? யோசனை செய்கிற விஷயத்தையெல்லாம் என்னிடம் விட்டுவிடு" என்ற கார்க்கோடக் கவுண்டரின் குரலைக் கேட்டதும், செந்திரு தேள் கொட்டியவளைப் போல் துடித்தாள். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது கள்ளிப்பட்டிக் கவுண்டர்தான் என்பதை இதுவரைக்கும் அவள் கவனிக்கவில்லை. அந்தக் கொலைகார மனுஷருடன் ஒரே வண்டியில் போகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எவ்வளவோ துன்பத்தை உண்டாக்கிற்று. ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினாள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்னும் பழைய உறுதியை எண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டாள். கள்ளிப்பட்டிக் கவுண்டரும் கூட இருப்பதால், ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.
மோட்டார் வண்டி மேட்டுப்பாளையத்தைத் தாண்டி மேலே சென்றது. நீலகிரி மலையின் அடிவாரத்தை அடைந்தது. மலைப்பாதையில் ஏறிப்போகத் தொடங்கியது.
அப்போது செந்திரு, "ஓகோ! கூனூர் பங்களாவில் நம்மை விடப்போகிறார்கள்" என்று நினைத்தாள். இதனால் ஒரு குதூகலம் உண்டாயிற்று. அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் அவர்கள் கோடைக்குக் கூனூருக்கு வருவது உண்டு. கூனூரில் அவர்களுக்குச் சொந்த பங்களா இருந்தது. பங்களாவுக்குப் பக்கத்தில் தபாலாபீஸ் உண்டு என்பது அவளுக்கு நினைவு வந்தது. பங்களாவில் இருந்த வேலைக்காரன் கூட அவளுடைய மனக்கண் முன் வந்தான். பங்கஜத்துக்கும் அவளுடைய தகப்பனாருக்கும் எம்மாதிரி கடிதம் எழுதுவது, வேலைக்காரனைச் சரிப்படுத்தி எப்படித் தபாலாபீஸில் போடச் சொல்லுவது என்றெல்லாம் யோசனை செய்யத் தொடங்கினாள். இந்த யோசனையிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.
தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு பதறிச் செந்திரு கண் விழித்த போது, பலபலவென்று பொழுது விடிந்திருப்பதையும், வண்டி மலையின் மேலே ஒரு மேட்டு பங்களாவின் வாசலில் நிற்பதையும் கண்டாள். அது அவர்களுடைய கூனூர் பங்களா இல்லை. சுற்றிலும் வெகு தூரத்துக்கு மனித வாசஸ்தலமே காணப்படவில்லை. நாலாபுறமும் செங்குத்தாக வளர்ந்த யுகலிப்டஸ் மரங்கள் தான் காணப்பட்டன.
தங்கசாமி கவுண்டர் கீழே இறங்கிச் செந்திருவைப் பார்த்து, "இறங்கு கீழே!" என்றார். செந்திரு இறங்கினாள்.
"போ, உள்ளே!" என்று உத்தரவு பிறந்தது.
செந்திருவுக்கு அந்தச் சூனியமான பங்களாவில் புகுவதற்கு தைரியம் வரவில்லை. குளிரினாலும் பீதியினாலும் நடுங்கிக் கொண்டே, "சித்தப்பா! என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்? நான் இந்த வீட்டிற்குள் போகமாட்டேன். சிங்கமேட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு போ! இல்லாவிட்டால்..."
"தங்கசாமி! அந்தத் தறிதலையைப் பேசவிட்டுவிட்டுப் பேசாமல் நிற்கிறாயே? இழுத்துக் கொண்டு போய் உள்ளே விடு!" என்று கள்ளிப்பட்டியார் கர்ச்சித்தார்.
தங்கசாமிக் கவுண்டர் செந்திருவின் கையைப் பற்றிய போது அவள் திமிறினாள். அப்போது கள்ளிப்பட்டிக் கவுண்டர் அங்கு வந்து, தன் இரும்புக் கைகளினால் செந்திருவைப் பற்றினார். கரகரவென்று இழுத்துக் கொண்டு போய், பங்களாவுக்குள் புகுந்து ஒரு அறையில் அவளைத் தள்ளி வெளியே கதவை இழுத்துச் சாத்திக் கதவில் நாதாங்கியை மாட்டினார். கீழே விழுந்த செந்திரு பரபரப்புடன் எழுந்து வந்து, கதவைப் படீர் படீர் என்று அடித்தாள்.
கார்க்கோடக் கவுண்டரைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி, கடைசியில் நிர்ப்பந்தம் ஏற்பட்டால், தன் காதில் இருந்த வைரத் தோட்டை உடைத்துப் பொடி பண்ணிச் சாப்பிட்டு உயிரை விட்டுவிடுவதென்று ஏற்கெனவே செந்திரு தீர்மானித்திருந்தாள். இப்போது அந்த எண்ணத்தை அவள் கைவிட்டாள். தன் உயிரை எப்படியாவது கெட்டியாகக் காப்பாற்றிக் கொள்வது அவசியம்; அப்போதுதான் பெரியண்ணனுடைய அநியாயக் கொலைக்குப் பழி வாங்க முடியும்; அந்த வாலிபரின் உயிரையும் காப்பாற்ற முடியும்.
இப்படி அவள் எண்ணிக் கொண்டிருக்கும்போது, சாலையின் ஒரு புறத்தில் சிங்கமேட்டு ஓடையும், வீடும் தெரிந்தன. வெண்ணிலாவில் ஓடை நீர் வெள்ளிமயமாய்ப் பிரகாசித்தது. அந்த ஓடைக்கரையில், முதன் முதலில் மகுடபதியைத் தான் சந்தித்ததை நினைத்தபோது, அவளுக்கு மயிர்க்கூச்செறிந்தது. மூன்று வருஷமாகத் தன்னைச் சிறை வைத்திருந்த வீட்டுக்கே மறுபடி போகிறோம் என்ற எண்ணம் அவளை என்னமோ செய்தது. முதல் நாள் காலையில் அங்கிருந்து ஒருவரும் அறியாமல் கிழவனுடன் கிளம்பியபோது எவ்வளவு பிசகாய்ப் போயிற்று? தான் நினைத்ததென்ன? மறுபடியும், அன்று இராத்திரியே அந்த ஜெயிலுக்குத் திரும்பி வருவோமென்று...
ஆனால், இதென்ன? வண்டி சிங்கமேட்டுக் குறுக்குப்பாதையில் திரும்பாமல் நேரே போகிறதே? டிரைவர் ஒரு வேளை தெரியாமல் விட்டுக் கொண்டு போகிறனோ? சித்தப்பாவைக் கேட்கலாமென்று செந்திரு வாய் எடுத்தாள். அதே சமயத்தில், தங்கசாமிக் கவுண்டர் "அண்ணே! நன்றாக யோசனை செய்துவிட்டீர்களா? நேரே போக வேண்டியதுதானே?" என்றார்.
"தம்பி! நீ என்னத்திற்கு வீணாகக் கவலைப்படுகிறாய்? யோசனை செய்கிற விஷயத்தையெல்லாம் என்னிடம் விட்டுவிடு" என்ற கார்க்கோடக் கவுண்டரின் குரலைக் கேட்டதும், செந்திரு தேள் கொட்டியவளைப் போல் துடித்தாள். வண்டியை ஓட்டிக் கொண்டு வந்தது கள்ளிப்பட்டிக் கவுண்டர்தான் என்பதை இதுவரைக்கும் அவள் கவனிக்கவில்லை. அந்தக் கொலைகார மனுஷருடன் ஒரே வண்டியில் போகிறோம் என்னும் எண்ணம் அவளுக்கு எவ்வளவோ துன்பத்தை உண்டாக்கிற்று. ஓடும் வண்டியிலிருந்து கீழே குதித்து விடலாமா என்று ஒரு கணம் எண்ணினாள். தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமென்னும் பழைய உறுதியை எண்ணிப் பல்லைக் கடித்துக் கொண்டாள். கள்ளிப்பட்டிக் கவுண்டரும் கூட இருப்பதால், ஜாக்கிரதையாய் நடந்து கொள்ள வேண்டுமென்றும் தீர்மானித்துக் கொண்டாள்.
மோட்டார் வண்டி மேட்டுப்பாளையத்தைத் தாண்டி மேலே சென்றது. நீலகிரி மலையின் அடிவாரத்தை அடைந்தது. மலைப்பாதையில் ஏறிப்போகத் தொடங்கியது.
அப்போது செந்திரு, "ஓகோ! கூனூர் பங்களாவில் நம்மை விடப்போகிறார்கள்" என்று நினைத்தாள். இதனால் ஒரு குதூகலம் உண்டாயிற்று. அவளுடைய தகப்பனார் இருந்த காலத்தில் அவர்கள் கோடைக்குக் கூனூருக்கு வருவது உண்டு. கூனூரில் அவர்களுக்குச் சொந்த பங்களா இருந்தது. பங்களாவுக்குப் பக்கத்தில் தபாலாபீஸ் உண்டு என்பது அவளுக்கு நினைவு வந்தது. பங்களாவில் இருந்த வேலைக்காரன் கூட அவளுடைய மனக்கண் முன் வந்தான். பங்கஜத்துக்கும் அவளுடைய தகப்பனாருக்கும் எம்மாதிரி கடிதம் எழுதுவது, வேலைக்காரனைச் சரிப்படுத்தி எப்படித் தபாலாபீஸில் போடச் சொல்லுவது என்றெல்லாம் யோசனை செய்யத் தொடங்கினாள். இந்த யோசனையிலேயே கண்ணயர்ந்துவிட்டாள்.
தூக்கத்தில் என்னவெல்லாமோ பயங்கரமான கனவுகள் கண்டு பதறிச் செந்திரு கண் விழித்த போது, பலபலவென்று பொழுது விடிந்திருப்பதையும், வண்டி மலையின் மேலே ஒரு மேட்டு பங்களாவின் வாசலில் நிற்பதையும் கண்டாள். அது அவர்களுடைய கூனூர் பங்களா இல்லை. சுற்றிலும் வெகு தூரத்துக்கு மனித வாசஸ்தலமே காணப்படவில்லை. நாலாபுறமும் செங்குத்தாக வளர்ந்த யுகலிப்டஸ் மரங்கள் தான் காணப்பட்டன.
தங்கசாமி கவுண்டர் கீழே இறங்கிச் செந்திருவைப் பார்த்து, "இறங்கு கீழே!" என்றார். செந்திரு இறங்கினாள்.
"போ, உள்ளே!" என்று உத்தரவு பிறந்தது.
செந்திருவுக்கு அந்தச் சூனியமான பங்களாவில் புகுவதற்கு தைரியம் வரவில்லை. குளிரினாலும் பீதியினாலும் நடுங்கிக் கொண்டே, "சித்தப்பா! என்னை எங்கே அழைத்து வந்திருக்கிறாய்? நான் இந்த வீட்டிற்குள் போகமாட்டேன். சிங்கமேட்டுக்கு என்னை அழைத்துக் கொண்டு போ! இல்லாவிட்டால்..."
"தங்கசாமி! அந்தத் தறிதலையைப் பேசவிட்டுவிட்டுப் பேசாமல் நிற்கிறாயே? இழுத்துக் கொண்டு போய் உள்ளே விடு!" என்று கள்ளிப்பட்டியார் கர்ச்சித்தார்.
தங்கசாமிக் கவுண்டர் செந்திருவின் கையைப் பற்றிய போது அவள் திமிறினாள். அப்போது கள்ளிப்பட்டிக் கவுண்டர் அங்கு வந்து, தன் இரும்புக் கைகளினால் செந்திருவைப் பற்றினார். கரகரவென்று இழுத்துக் கொண்டு போய், பங்களாவுக்குள் புகுந்து ஒரு அறையில் அவளைத் தள்ளி வெளியே கதவை இழுத்துச் சாத்திக் கதவில் நாதாங்கியை மாட்டினார். கீழே விழுந்த செந்திரு பரபரப்புடன் எழுந்து வந்து, கதவைப் படீர் படீர் என்று அடித்தாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
பன்னிரண்டாம் அத்தியாயம் - மறைந்த கடிதம்
மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் ஐம்பத்தைந்து பிராயம் வரையில் பொருட்செல்வம் தேடிய பிறகு இப்போது அருட்செல்வம் ஈட்டுவதில் முனைந்திருந்தார். சைவத்தொண்டர் மகாநாடுகளிலும், மற்றும் சிவனடியார் திருக்கூட்டங்களிலும் அவரைத் தவறாமல் முன்னணியில் பார்ப்பது சாத்தியமாயிருந்தது. "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்னும் விந்தை மனிதர்" கூட்டத்தை அவர் சேர்ந்தவர் அல்ல. சைவத் திருக்கூட்டங்களுக்கு அவர் தமது இல்லக் கிழத்தியையும் குழந்தைகளையும் அழைத்துப் போவதுண்டு.
பேரூரில் நடந்த சைவத்தொண்டர் மகாநாட்டுக்கு அவர் தமது குடும்பத்துடன் சென்று, ஞானியார் சுவாமிகளின் அமுதமொழிகளையும், இன்னும் பல சைவத்திருவாளர்களின் அரிய சொற்பொழிவுகளையும் செவிகளால் பருகிவிட்டுக் கோயமுத்தூருக்குத் திரும்பி வந்துசேர்ந்தார்.
கோயமுத்தூரில் அய்யாசாமி முதலியாரின் பங்களா அமைதியான சுகவாசத்துக்கென்றே அமைந்ததென்று சொல்லலாம். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் உத்தியோகம் பார்த்த அய்யாசாமி முதலியார், மயிலாப்பூரில் அவருக்குச் சொந்த வீடு இருந்தும், கோயமுத்தூரின் சீதோஷ்ண ஸ்திதியை முன்னிட்டு, அந்நகரைத் தமது வாசத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அப்படிப்பட்டவர், நல்ல பங்களாவாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை அல்லவா?
அந்த விஸ்தாரமான அழகிய பங்களாவில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை இருந்தது. அவற்றில், பங்களாவின் முகப்பு அறைகள் இரண்டில் ஒன்று பங்கஜத்தினுடையது. அய்யாசாமி முதலியாரின் அறைக்கு அடுத்தபடியாகப் பங்கஜத்தின் அறையில்தான் புத்தகங்கள் அதிகமாயிருக்கும். ஐந்தாவது பாரத்தில் பங்கஜத்தின் படிப்பை முதலியார் நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு அவளுடைய அறிவை விசாலிக்கச் செய்யும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு பக்கத்தில் முதலியார் பங்கஜத்துக்குச் சைவ சமய அறிவையும், தமிழ் இலக்கியத்தின் சுவையையும் ஊட்டிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம், அச்செல்வி சர்க்குலேடிங் லைப்ரெரியிலிருந்து நாவல்கள் வாசித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். இதுவரையில் சுமார் முந்நூறு நாவல்கள் வாசித்திருந்தபடியால் தானே ஒரு நாவல் எழுதவும் ஆரம்பித்திருந்தாள். அதில் முக்கால் பங்கு எழுதி, கதாநாயகனையும் கதாநாயகியையும் மிகவும் ரசமான ஒரு கட்டத்தில் கொண்டு விட்டிருந்தாளாதலால், பேரூரில் அவள் செவிகள் ஒரு பக்கம் சைவச் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கையில் இன்னொரு பக்கம் அவளுடைய மனம் வீட்டில் விட்டு வந்த நாவல் கையெழுத்துப் பிரதிக்குத் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டிருந்தது ரசமான விஷயமாகும்.
எனவே, அன்று காலையில் பேரூரிலிருந்து திரும்பி பங்களாவுக்கு வந்து சேர்ந்ததும், பங்கஜம் அவசர அவசரமாகத் தன்னுடைய அறையைத் திறப்பதற்குப் போனாள். பங்களாவில், தோட்ட வேலை, மேஜை நாற்காலிகளைத் துடைக்கும் வேலை எல்லாவற்றிற்கும் மருதக் கவுண்டர் என்று ஒருவன் இருந்தான். அவன் கையில் மேஜை துடைக்கும் துணியுடன் பங்கஜத்தின் பின்னோடு வந்து "சாவியை இங்கே கொடு, அம்மா! நான் திறக்கிறேன்" என்றான்.
"எல்லாம் நானே திறந்து கொள்கிறேன்" என்று பங்கஜம் பூட்டைத் திறந்தாள். வழக்கம் போல சுலபமாய்த் திறக்காமல், சாவி சுழல்வதற்குக் கஷ்டப்பட்டது.
"இது என்ன, யாராவது பூட்டை மறுசாவி போட்டுத் திறந்தார்களா?" என்று கேட்டுக் கொண்டே, பங்கஜம் அழுத்தித் திறந்தாள். பூட்டும் திறந்து கொண்டது.
மருதன், "அதென்ன அம்மா, அப்படிச் சொல்றே? இங்கே எவன் மறுசாவி போட்டுத் திறக்கிறவன்?" என்று கேட்டுக் கொண்டே பங்கஜத்தின் பின்னோடு அறைக்குள் நுழைந்து மேஜை நாற்காலிகளையும் புத்தகங்களையும் மளமளவென்று தட்டத் தொடங்கினான்.
"ஒரே தூசாயிருக்கிறதே? தட்டின அப்புறம் வந்தா நல்லாயிருக்குமே?" என்றான் மருதன். அப்போது அவனுடைய கண்கள் அறையின் நாலாபக்கமும் சுழன்று சுழன்று பார்த்தன.
பங்கஜம் அவன் சொன்னதையும் கவனிக்காமல் தூசையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நாவல் கையெழுத்துப் பிரதியை ஆவலாகப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.
மருதன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவன், வாசல் ஜன்னலண்டை திடீரென்று குனிந்து எதையோ எடுத்தான்.
அது பங்கஜத்துக்குத் தெரிந்துவிட்டது. அவன் எடுத்தது வெள்ளையாய் ஏதொ ஒரு கடுதாசி மாதிரி இருந்தது.
"அது என்ன மருதா, இங்கே கொண்டு வா!" என்றாள்.
"ஒன்றுமில்லை, அம்மா, குப்பை கடுதாசி" என்று சொல்லிக் கொண்டே மருதக் கவுண்டன் கடுதாசியைக் கையில் கசக்கினான்.
"கொண்டு வா என்றால் கொண்டு வா!" என்று பங்கஜம் வீடு இடியும் படி கத்தினாள். அவள் கண்களின் தீப்பொறி பொறிந்தது.
முன்னொரு தடவை பங்கஜம் கதை எழுதியிருந்த காகிதம் ஒன்று பறந்து போய்த் தரையில் விழுந்தது. அதை வீடு கூட்டுகிறவள் குப்பைத் தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டாள். அதுமுதல் எந்தக் காகிதமானாலும் அதை வேலைக்காரர்கள் தொட்டால், பங்கஜத்துக்குப் பிரமாதமான கோபம் வந்துவிடும்.
மருதன் "ஏன் அம்மா கோவிச்சுக்கிறே? இந்தா!" என்று கொடுத்தான்.
பங்கஜம், அதை வாங்கிப் பிரித்துப் படித்தாள். படிக்கும் போதே அவளுடைய முகத்தில் எல்லையற்ற ஆச்சரியத்தின் அறிகுறி உண்டாயிற்று.
"முட்டாள்! இதைப் போய்க் கசக்கி எறியப் பார்த்தாயே?" என்று சொல்லிக்கொண்டே அவள் மருதன் இருந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவனைக் காணவில்லை. பங்கஜம் கடிதம் படிக்கும்போதே அவன் நழுவி விட்டான்.
"மருதா! மருதா!" என்று கூப்பிட்டுவிட்டு, மறுபடியும் ஒரு தடவை கடிதத்தைப் படித்தாள். உடனே அந்த அறையிலிருந்து வெளிக்கிளம்பி, தகப்பனாரின் அறையை நோக்கிச் சென்றாள். வழியில் தாழ்வாரத்தில் மருதன் எதிர்ப்பட்டான்.
"இந்தக் காகிதம் எப்படியடா வந்தது? யார் என் அறையில் போட்டார்கள்?" என்று கோபமாக அவனைக் கேட்டாள்.
"எனக்குத் தெரியாது. அம்மா! நான் போட்டிருந்தால் அதை எடுத்துக் கசக்குவேனா? எந்த நாய் போட்டதோ?" என்றான்.
பங்கஜம் விரைந்து அப்பாவின் அறைக்குள் சென்றாள். அங்கே அப்பாவைக் காணவில்லை.
"மருதா! அப்பா எங்கே?" என்று கத்தினாள்.
"ஸ்நானம் செய்யறாங்க!" என்றான் மருதன்
இதற்குள், சமையர் கட்டிலிருந்து, "பங்கஜம்! காப்பி சாப்பிட்டுப் போ!" என்று தாயாரின் குரல் கேட்டது.
பங்கஜம் கடிதத்தை முதலியாரின் மேஜை மேலிருந்த பெரிய புராணத்துக்குள் வெளியில் கொஞ்சம் தெரியும்படி நீட்டி வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்றாள். அந்தக் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை.
சற்று நேரத்துக்கெல்லாம், பங்கஜம் காப்பி சாப்பிட்டுவிட்டு முதலியாரின் அறைக்கு வந்தபோது அங்கே அவர் இருந்தார். பங்கஜம் பெரிய புராணத்தைப் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்.
தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இந்தப் புத்தகத்துக்குள் ஒரு கடிதம் வைத்தேனே, எடுத்தீர்களா?" என்றாள்.
மாஜி ஸப்-ஜட்ஜ் அய்யாசாமி முதலியார் ஐம்பத்தைந்து பிராயம் வரையில் பொருட்செல்வம் தேடிய பிறகு இப்போது அருட்செல்வம் ஈட்டுவதில் முனைந்திருந்தார். சைவத்தொண்டர் மகாநாடுகளிலும், மற்றும் சிவனடியார் திருக்கூட்டங்களிலும் அவரைத் தவறாமல் முன்னணியில் பார்ப்பது சாத்தியமாயிருந்தது. "வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைப்போம் என்னும் விந்தை மனிதர்" கூட்டத்தை அவர் சேர்ந்தவர் அல்ல. சைவத் திருக்கூட்டங்களுக்கு அவர் தமது இல்லக் கிழத்தியையும் குழந்தைகளையும் அழைத்துப் போவதுண்டு.
பேரூரில் நடந்த சைவத்தொண்டர் மகாநாட்டுக்கு அவர் தமது குடும்பத்துடன் சென்று, ஞானியார் சுவாமிகளின் அமுதமொழிகளையும், இன்னும் பல சைவத்திருவாளர்களின் அரிய சொற்பொழிவுகளையும் செவிகளால் பருகிவிட்டுக் கோயமுத்தூருக்குத் திரும்பி வந்துசேர்ந்தார்.
கோயமுத்தூரில் அய்யாசாமி முதலியாரின் பங்களா அமைதியான சுகவாசத்துக்கென்றே அமைந்ததென்று சொல்லலாம். தென்னிந்தியாவில் பல இடங்களிலும் உத்தியோகம் பார்த்த அய்யாசாமி முதலியார், மயிலாப்பூரில் அவருக்குச் சொந்த வீடு இருந்தும், கோயமுத்தூரின் சீதோஷ்ண ஸ்திதியை முன்னிட்டு, அந்நகரைத் தமது வாசத்துக்குத் தேர்ந்தெடுத்தார். அப்படிப்பட்டவர், நல்ல பங்களாவாகத் தேர்ந்தெடுத்ததில் வியப்பில்லை அல்லவா?
அந்த விஸ்தாரமான அழகிய பங்களாவில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி அறை இருந்தது. அவற்றில், பங்களாவின் முகப்பு அறைகள் இரண்டில் ஒன்று பங்கஜத்தினுடையது. அய்யாசாமி முதலியாரின் அறைக்கு அடுத்தபடியாகப் பங்கஜத்தின் அறையில்தான் புத்தகங்கள் அதிகமாயிருக்கும். ஐந்தாவது பாரத்தில் பங்கஜத்தின் படிப்பை முதலியார் நிறுத்திவிட்டார். அதற்குப் பிறகு அவளுடைய அறிவை விசாலிக்கச் செய்யும் பொறுப்பைத் தாமே ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு பக்கத்தில் முதலியார் பங்கஜத்துக்குச் சைவ சமய அறிவையும், தமிழ் இலக்கியத்தின் சுவையையும் ஊட்டிக் கொண்டிருக்கையில், மற்றொரு பக்கம், அச்செல்வி சர்க்குலேடிங் லைப்ரெரியிலிருந்து நாவல்கள் வாசித்துத் தள்ளிக் கொண்டிருந்தாள். இதுவரையில் சுமார் முந்நூறு நாவல்கள் வாசித்திருந்தபடியால் தானே ஒரு நாவல் எழுதவும் ஆரம்பித்திருந்தாள். அதில் முக்கால் பங்கு எழுதி, கதாநாயகனையும் கதாநாயகியையும் மிகவும் ரசமான ஒரு கட்டத்தில் கொண்டு விட்டிருந்தாளாதலால், பேரூரில் அவள் செவிகள் ஒரு பக்கம் சைவச் சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டே இருக்கையில் இன்னொரு பக்கம் அவளுடைய மனம் வீட்டில் விட்டு வந்த நாவல் கையெழுத்துப் பிரதிக்குத் திரும்பத் திரும்பப் போய்க் கொண்டிருந்தது ரசமான விஷயமாகும்.
எனவே, அன்று காலையில் பேரூரிலிருந்து திரும்பி பங்களாவுக்கு வந்து சேர்ந்ததும், பங்கஜம் அவசர அவசரமாகத் தன்னுடைய அறையைத் திறப்பதற்குப் போனாள். பங்களாவில், தோட்ட வேலை, மேஜை நாற்காலிகளைத் துடைக்கும் வேலை எல்லாவற்றிற்கும் மருதக் கவுண்டர் என்று ஒருவன் இருந்தான். அவன் கையில் மேஜை துடைக்கும் துணியுடன் பங்கஜத்தின் பின்னோடு வந்து "சாவியை இங்கே கொடு, அம்மா! நான் திறக்கிறேன்" என்றான்.
"எல்லாம் நானே திறந்து கொள்கிறேன்" என்று பங்கஜம் பூட்டைத் திறந்தாள். வழக்கம் போல சுலபமாய்த் திறக்காமல், சாவி சுழல்வதற்குக் கஷ்டப்பட்டது.
"இது என்ன, யாராவது பூட்டை மறுசாவி போட்டுத் திறந்தார்களா?" என்று கேட்டுக் கொண்டே, பங்கஜம் அழுத்தித் திறந்தாள். பூட்டும் திறந்து கொண்டது.
மருதன், "அதென்ன அம்மா, அப்படிச் சொல்றே? இங்கே எவன் மறுசாவி போட்டுத் திறக்கிறவன்?" என்று கேட்டுக் கொண்டே பங்கஜத்தின் பின்னோடு அறைக்குள் நுழைந்து மேஜை நாற்காலிகளையும் புத்தகங்களையும் மளமளவென்று தட்டத் தொடங்கினான்.
"ஒரே தூசாயிருக்கிறதே? தட்டின அப்புறம் வந்தா நல்லாயிருக்குமே?" என்றான் மருதன். அப்போது அவனுடைய கண்கள் அறையின் நாலாபக்கமும் சுழன்று சுழன்று பார்த்தன.
பங்கஜம் அவன் சொன்னதையும் கவனிக்காமல் தூசையும் பொருட்படுத்தாமல், தன்னுடைய நாவல் கையெழுத்துப் பிரதியை ஆவலாகப் புரட்டிப் பார்க்கத் தொடங்கினாள்.
மருதன், சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டே வந்தவன், வாசல் ஜன்னலண்டை திடீரென்று குனிந்து எதையோ எடுத்தான்.
அது பங்கஜத்துக்குத் தெரிந்துவிட்டது. அவன் எடுத்தது வெள்ளையாய் ஏதொ ஒரு கடுதாசி மாதிரி இருந்தது.
"அது என்ன மருதா, இங்கே கொண்டு வா!" என்றாள்.
"ஒன்றுமில்லை, அம்மா, குப்பை கடுதாசி" என்று சொல்லிக் கொண்டே மருதக் கவுண்டன் கடுதாசியைக் கையில் கசக்கினான்.
"கொண்டு வா என்றால் கொண்டு வா!" என்று பங்கஜம் வீடு இடியும் படி கத்தினாள். அவள் கண்களின் தீப்பொறி பொறிந்தது.
முன்னொரு தடவை பங்கஜம் கதை எழுதியிருந்த காகிதம் ஒன்று பறந்து போய்த் தரையில் விழுந்தது. அதை வீடு கூட்டுகிறவள் குப்பைத் தொட்டியில் கொண்டு போய்ப் போட்டுவிட்டாள். அதுமுதல் எந்தக் காகிதமானாலும் அதை வேலைக்காரர்கள் தொட்டால், பங்கஜத்துக்குப் பிரமாதமான கோபம் வந்துவிடும்.
மருதன் "ஏன் அம்மா கோவிச்சுக்கிறே? இந்தா!" என்று கொடுத்தான்.
பங்கஜம், அதை வாங்கிப் பிரித்துப் படித்தாள். படிக்கும் போதே அவளுடைய முகத்தில் எல்லையற்ற ஆச்சரியத்தின் அறிகுறி உண்டாயிற்று.
"முட்டாள்! இதைப் போய்க் கசக்கி எறியப் பார்த்தாயே?" என்று சொல்லிக்கொண்டே அவள் மருதன் இருந்த இடத்தை நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அவனைக் காணவில்லை. பங்கஜம் கடிதம் படிக்கும்போதே அவன் நழுவி விட்டான்.
"மருதா! மருதா!" என்று கூப்பிட்டுவிட்டு, மறுபடியும் ஒரு தடவை கடிதத்தைப் படித்தாள். உடனே அந்த அறையிலிருந்து வெளிக்கிளம்பி, தகப்பனாரின் அறையை நோக்கிச் சென்றாள். வழியில் தாழ்வாரத்தில் மருதன் எதிர்ப்பட்டான்.
"இந்தக் காகிதம் எப்படியடா வந்தது? யார் என் அறையில் போட்டார்கள்?" என்று கோபமாக அவனைக் கேட்டாள்.
"எனக்குத் தெரியாது. அம்மா! நான் போட்டிருந்தால் அதை எடுத்துக் கசக்குவேனா? எந்த நாய் போட்டதோ?" என்றான்.
பங்கஜம் விரைந்து அப்பாவின் அறைக்குள் சென்றாள். அங்கே அப்பாவைக் காணவில்லை.
"மருதா! அப்பா எங்கே?" என்று கத்தினாள்.
"ஸ்நானம் செய்யறாங்க!" என்றான் மருதன்
இதற்குள், சமையர் கட்டிலிருந்து, "பங்கஜம்! காப்பி சாப்பிட்டுப் போ!" என்று தாயாரின் குரல் கேட்டது.
பங்கஜம் கடிதத்தை முதலியாரின் மேஜை மேலிருந்த பெரிய புராணத்துக்குள் வெளியில் கொஞ்சம் தெரியும்படி நீட்டி வைத்துவிட்டு, சமையலறைக்குச் சென்றாள். அந்தக் கடிதத்தைப் பற்றித் தாயாரிடம் சொல்ல அவள் விரும்பவில்லை.
சற்று நேரத்துக்கெல்லாம், பங்கஜம் காப்பி சாப்பிட்டுவிட்டு முதலியாரின் அறைக்கு வந்தபோது அங்கே அவர் இருந்தார். பங்கஜம் பெரிய புராணத்தைப் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்; மறுபடியும் புரட்டினாள்.
தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இந்தப் புத்தகத்துக்குள் ஒரு கடிதம் வைத்தேனே, எடுத்தீர்களா?" என்றாள்.
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
"நான் எடுக்கவில்லையே? என்ன கடிதம்?"
"இது என்ன அதிசயமா யிருக்கே!" என்று சொல்லிக் கொண்டே பங்கஜம் மேஜை மேலிருந்த திருமந்திரம், திருவாசகம், திருக்குறள், கலித்தொகை, கம்பராமாயணம் முதலிய புத்தகங்களையும் புரட்டத் தொடங்கினாள். ஒன்றிலும் அகப்படவில்லை.
"இதென்ன மாயமாயிருக்கே? அதற்குள் எப்படிப் போயிருக்கும்?" என்றாள் பங்கஜம்.
"நீ எழுதுகிற நாவலில் யாராவது துப்பறிகிறவன் வருகிறானோ இல்லையோ? அவனை அழைத்துக் கொண்டு வந்து கண்டுபிடிக்கச் சொல்லு. என்ன கடிதம், என்ன விஷயம் என்று எனக்குத் தெரியப்படுத்துவது உசிதமாயிருந்தால், அவ்விதமே செய். இல்லாவிட்டால் உன்னுடைய அறைக்குப் போய் நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுது!" என்று முதலியார் தமாஷ் செய்தார்.
"நாலாவது, ஒன்றாவது, அப்பா! நாவலில் நடப்பதையெல்லாம் காட்டிலும் அதிசயமான சம்பவம் நடந்திருக்கிறது. செந்திருவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ, இல்லையோ?"
"ஞாபகம் இல்லாமல் என்ன? அதுகிட்டேயிருந்து கடிதம் வரவில்லை என்று தான் நீ உருகிக்கொண்டிருந்தாயே! கடிதம் அதனிடமிருந்து வந்ததுதானா?"
"ஆமாம், அப்பா! ஆனால், கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் ரொம்ப ஆச்சரியம்."
"ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியமா?"
"விளையாட்டுக்குச் சொல்லவில்லை, அப்பா! இரண்டு மூன்று தடவை நான் வாசித்தேன்; அதனால் அப்படியே ஞாபகம் இருக்கிறது. அதில் எழுதியிருந்தபடியே உங்களுக்கு எழுதிக் காட்டி விடுகிறேன்" என்று கூறி மளமளவென்று காகிதமும் பேனாமும் எடுத்துப் பின்வருமாறு எழுதினாள்:
"என் உயிரினுமினிய அருமைத் தோழி பங்கஜத்துக்குச் செந்திரு அன்புடன் எழுதிக் கொண்டது. இரண்டு மாதத்துக்கு முன்பு நீ போட்ட கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் போடாததற்கு காரணம் நான் ஜெயிலிலே இருந்தது தான். மூன்று வருஷமாய் நான் ஜெயிலிலேதான் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு பெரிய ஆபத்து வருவதற்கு இருக்கிறது. அதனால் இன்று காலையில் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். இந்தக் கடிதம் கொண்டு வருகிற பாட்டனுக்கு என்னிடம் ரொம்பவும் அபிமானம். அது மற்ற விவரம் எல்லாம் சொல்லும். நீ உடனே புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவும். உன்னிடமும் மாமாவிடமும் யோசனை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைத் தவிர எனக்கு வேறு கதி கிடையாது. உங்கள் வீடு தெரியாதபடியால் பாட்டனை அனுப்பியிருக்கிறேன். ஊரில் கலாட்டாவாக யிருப்பதால், உடனே நீயாவது மாமாவாவது வந்து என்னை அழைத்துப் போகவும். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
மேற்கண்டவாறு பங்கஜம் எழுதி, முதலியாரிடம் கொடுத்தாள். முதலியார் அதைப் படித்துவிட்டு, "இது என்ன வேடிக்கை, குழந்தை! நீ எழுதும் நாவலில் யாராவது கதாநாயகி இப்படிக் கடிதம் எழுதுகிறாளா" என்று கேட்டார்.
பங்கஜம் சிறிது ஆத்திரத்துடன், "இல்லவே இல்லை அப்பா! சத்தியமாய்ச் சொல்கிறேன். நிஜமாகவே வந்த கடிதந்தான்" என்றாள்.
"அதைச் செந்திருதான் எழுதினாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?"
"என் தோழியின் கையெழுத்து எனக்குத் தெரியாதா, அப்பா?"
முதலியார் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். "மேலே விலாசம், தேதி போட்டிருந்ததா?" என்று கேட்டார்.
"கோயமுத்தூர் என்று போட்டிருந்தது. தேதி போட்டிருந்ததாக ஞாபகம் இல்லை."
"கடிதம் எங்கேதான் போயிருக்கும்? ஆனால் உன்னிடம் அது எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லவில்லையே?" என்றார் முதலியார்.
பங்கஜம் விவரமாகச் சொன்னாள்.
"மருதா! மருதா!" என்று முதலியார் கூப்பிட்டார். மருதன் வரவில்லை. மருதன் வீட்டிலேயே இல்லையென்று தெரிந்தது.
அப்போது மருதன், அந்தப் பங்களா இருந்த சாலை முனைக்கு அப்பால் ஒதுங்கி நின்ற மோட்டார் வண்டியின் டிரைவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். டிரைவர் அதை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் ஐம்பது நோட்டாகக் கொடுத்தான்.
"இந்த ஐம்பது ரூபாய் என்னத்துக்கு ஆச்சு? எனக்கு வேலை போய்விடும் போலிருக்கு" என்றான் மருதன்.
"வேலை போனால் நேரே கள்ளிப்பட்டிக் கவுண்டர் வீட்டுக்கு வந்துவிடு. வேலை கொடுப்பாரு!" என்றான் டிரைவர்
"இது என்ன அதிசயமா யிருக்கே!" என்று சொல்லிக் கொண்டே பங்கஜம் மேஜை மேலிருந்த திருமந்திரம், திருவாசகம், திருக்குறள், கலித்தொகை, கம்பராமாயணம் முதலிய புத்தகங்களையும் புரட்டத் தொடங்கினாள். ஒன்றிலும் அகப்படவில்லை.
"இதென்ன மாயமாயிருக்கே? அதற்குள் எப்படிப் போயிருக்கும்?" என்றாள் பங்கஜம்.
"நீ எழுதுகிற நாவலில் யாராவது துப்பறிகிறவன் வருகிறானோ இல்லையோ? அவனை அழைத்துக் கொண்டு வந்து கண்டுபிடிக்கச் சொல்லு. என்ன கடிதம், என்ன விஷயம் என்று எனக்குத் தெரியப்படுத்துவது உசிதமாயிருந்தால், அவ்விதமே செய். இல்லாவிட்டால் உன்னுடைய அறைக்குப் போய் நாவலின் அடுத்த அத்தியாயத்தை எழுது!" என்று முதலியார் தமாஷ் செய்தார்.
"நாலாவது, ஒன்றாவது, அப்பா! நாவலில் நடப்பதையெல்லாம் காட்டிலும் அதிசயமான சம்பவம் நடந்திருக்கிறது. செந்திருவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதோ, இல்லையோ?"
"ஞாபகம் இல்லாமல் என்ன? அதுகிட்டேயிருந்து கடிதம் வரவில்லை என்று தான் நீ உருகிக்கொண்டிருந்தாயே! கடிதம் அதனிடமிருந்து வந்ததுதானா?"
"ஆமாம், அப்பா! ஆனால், கடிதத்தில் எழுதியிருந்த விஷயம் ரொம்ப ஆச்சரியம்."
"ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியமா?"
"விளையாட்டுக்குச் சொல்லவில்லை, அப்பா! இரண்டு மூன்று தடவை நான் வாசித்தேன்; அதனால் அப்படியே ஞாபகம் இருக்கிறது. அதில் எழுதியிருந்தபடியே உங்களுக்கு எழுதிக் காட்டி விடுகிறேன்" என்று கூறி மளமளவென்று காகிதமும் பேனாமும் எடுத்துப் பின்வருமாறு எழுதினாள்:
"என் உயிரினுமினிய அருமைத் தோழி பங்கஜத்துக்குச் செந்திரு அன்புடன் எழுதிக் கொண்டது. இரண்டு மாதத்துக்கு முன்பு நீ போட்ட கடிதம் கிடைத்தது. அதற்கு நான் பதில் போடாததற்கு காரணம் நான் ஜெயிலிலே இருந்தது தான். மூன்று வருஷமாய் நான் ஜெயிலிலேதான் இருந்து வருகிறேன். எனக்கு ஒரு பெரிய ஆபத்து வருவதற்கு இருக்கிறது. அதனால் இன்று காலையில் ஜெயிலிலிருந்து தப்பித்துக் கொண்டு ஓடி வந்துவிட்டேன். இந்தக் கடிதம் கொண்டு வருகிற பாட்டனுக்கு என்னிடம் ரொம்பவும் அபிமானம். அது மற்ற விவரம் எல்லாம் சொல்லும். நீ உடனே புறப்பட்டு வந்து என்னை அழைத்துப் போகவும். உன்னிடமும் மாமாவிடமும் யோசனை கேட்க வேண்டியிருக்கிறது. உங்களைத் தவிர எனக்கு வேறு கதி கிடையாது. உங்கள் வீடு தெரியாதபடியால் பாட்டனை அனுப்பியிருக்கிறேன். ஊரில் கலாட்டாவாக யிருப்பதால், உடனே நீயாவது மாமாவாவது வந்து என்னை அழைத்துப் போகவும். ஒவ்வொரு நிமிஷமும் ஒவ்வொரு யுகமாக உன்னை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புள்ள தோழி,
செந்திரு"
உன் அன்புள்ள தோழி,
செந்திரு"
மேற்கண்டவாறு பங்கஜம் எழுதி, முதலியாரிடம் கொடுத்தாள். முதலியார் அதைப் படித்துவிட்டு, "இது என்ன வேடிக்கை, குழந்தை! நீ எழுதும் நாவலில் யாராவது கதாநாயகி இப்படிக் கடிதம் எழுதுகிறாளா" என்று கேட்டார்.
பங்கஜம் சிறிது ஆத்திரத்துடன், "இல்லவே இல்லை அப்பா! சத்தியமாய்ச் சொல்கிறேன். நிஜமாகவே வந்த கடிதந்தான்" என்றாள்.
"அதைச் செந்திருதான் எழுதினாள் என்று உனக்கு எப்படித் தெரியும்?"
"என் தோழியின் கையெழுத்து எனக்குத் தெரியாதா, அப்பா?"
முதலியார் சிறிது சிந்தனையில் ஆழ்ந்தார். "மேலே விலாசம், தேதி போட்டிருந்ததா?" என்று கேட்டார்.
"கோயமுத்தூர் என்று போட்டிருந்தது. தேதி போட்டிருந்ததாக ஞாபகம் இல்லை."
"கடிதம் எங்கேதான் போயிருக்கும்? ஆனால் உன்னிடம் அது எப்படிக் கிடைத்தது? அதைச் சொல்லவில்லையே?" என்றார் முதலியார்.
பங்கஜம் விவரமாகச் சொன்னாள்.
"மருதா! மருதா!" என்று முதலியார் கூப்பிட்டார். மருதன் வரவில்லை. மருதன் வீட்டிலேயே இல்லையென்று தெரிந்தது.
அப்போது மருதன், அந்தப் பங்களா இருந்த சாலை முனைக்கு அப்பால் ஒதுங்கி நின்ற மோட்டார் வண்டியின் டிரைவரிடம் ஒரு கடிதத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தான். டிரைவர் அதை வாங்கிக் கொண்டு அவனிடம் ரூபாய் ஐம்பது நோட்டாகக் கொடுத்தான்.
"இந்த ஐம்பது ரூபாய் என்னத்துக்கு ஆச்சு? எனக்கு வேலை போய்விடும் போலிருக்கு" என்றான் மருதன்.
"வேலை போனால் நேரே கள்ளிப்பட்டிக் கவுண்டர் வீட்டுக்கு வந்துவிடு. வேலை கொடுப்பாரு!" என்றான் டிரைவர்
[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|