புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
7 Posts - 64%
heezulia
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
16 Posts - 5%
Rathinavelu
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
8 Posts - 2%
prajai
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
4 Posts - 1%
Guna.D
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
3 Posts - 1%
mruthun
""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_m10""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை


   
   
கார்த்திக்
கார்த்திக்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6467
இணைந்தது : 08/04/2010

Postகார்த்திக் Tue Oct 26, 2010 8:58 am


நாம் எதை கண்டு அதிகம் பயப்படுகிறோம்? இறப்பு, புற்றுநோய், கண் பார்வை பறிபோகுதல், இப்படி... கண்ணில் கோளாறு ஏற்பட்டால், உடனே டாக்டரிடம் ஓடுகிறோம்.

தற்போது மெட்ராஸ் / டில்லி/ கோல்கட்டா ஐ என்றழைக்கப்படும் கண் நோய் (தமிழ்நாட்டில் மெட்ராஸ் ஐ) ஆங்கிலத்தில், "கன்ஜங்டிவிட்டிஸ்' என்றழைக்கப்படுகிறது. இது, காட்டுத் தீயைப் போல வேகமாகப் பரவும் தன்மை கொண்டால், மக்கள் கவலை கொள்கின்றனர். கண் சிவப்பாவது மட்டுமல்லாமல், அரிப்பு, வீக்கமும் ஏற்படுகிறது. வீட்டில் ஒருவருக்கு வந்தால், மற்ற அனைவருக்கும், பள்ளியில் ஒரு மாணவருக்கு வந்தால், அனைவருக்கும் தொற்றும் தன்மை கொண்டது இது.

ஒவ்வாமை, தொற்று, வெளிப் பொருட்கள் படிதல், நீர் சுரக்கும் துளையில் அடைப்பு ஏற்படுதல் ஆகிய காரணங்களால், விழியின் மேல் படலம் சிவப்பாகிறது. மேலே கூறிய காரணங்களால், மேல் படலத்தில் உள்ள ரத்தக் குழாய்கள் வீக்கமடைவதால், சிவப்பு நிறம் தெளிவாகத் தெரிகிறது. தொற்று அதிகமானால், வீக்கம் இன்னும் அதிகரிக்கும். கண்ணில் உறுத்தல், அரிப்பு ஏற்பட்டு, கண்ணிலிருந்து வெள்ளை நிறக் கழிவு வெளியேறும். கண்ணில் நீர் வரும்.

தொற்றினால், "மெட்ராஸ் ஐ' ஏற்படுகிறது. குறிப்பிட்ட காலத்தில் ஏற்படும் அடினோ அல்லது இன்ப்ளுயென்சா வைரஸ் தொற்று இது. சிலருக்கு, இந்த உபாதையுடன் கூட, தொண்டை வறட்சி, சளி பிடிக்கலாம். எனினும், இவற்றுக்கு சிகிச்சை தேவையில்லை; மூன்று அல்லது நான்கு நாட்களில், தானாகவே சரியாகி விடும். சூடான அல்லது குளிர்ந்த ஒத்தடம் கொடுப்பது, கண்ணுக்கு இதம் அளிக்கும். பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள கண்ணிலிருந்து வெளிப்படும் கழிவு, மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதற்கு, இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சொட்டு மருந்து ஊற்ற வேண்டும். இரவு நேரங்களில், களிம்பு போட வேண்டும்.

வைரஸ் அல்லது பாக்டீரியா பாதிப்பால் ஏற்படும் கண் தொற்று, வெகு வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. வகுப்பறைகளில், ஒரு கூட்டத்தினரிடையே, ஒரு வீட்டில் என, ஒருவருக்கு ஏற்பட்டால், மற்ற அனைவருக்கும் ஏற்பட்டு விடும்.

ஆனால், கண் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பார்த்தாலே, நமக்கும் கண் நோய் ஏற்படும் என்று கருத வேண்டாம். பாதிக்கப்பட்டவர்கள் தன் கண்ணில் கையை வைத்து, அதே கையால் மேஜை, நாற்காலி, பலரும் பயன்படுத்தும் பொருட்களை தொட்டால், அவற்றை நாம் தொட்டு, அதே கையால் நம் கண்ணையும் தொடும்போது தான் தொற்று ஏற்படுகிறது. "கூலிங் கிளாஸ்' அணிவது, நம் கையை கண் அருகில் கொண்டு செல்லாமல் இருக்க மட்டுமே தவிர, இந்த கண்ணாடி தொற்று ஏற்படாமல் தவிர்க்கும் எனக் கூற முடியாது.
தொற்று ஏற்பட்டால்,

* கண்களை உங்கள் கைகளால் தொடாதீர்கள்; அரிக்கிறதே என நினைத்து, சொறியாதீர்கள்.

* அடிக்கடி கையைச் சுத்தம் செய்து கொண்டே இருங்கள்.

* தினமும் கைக்குட் டை, டவலை சுத்தம் செய்ய வேண்டும். உங்களுக்கென தனி கைக்குட்டை, டவல் வைத்துக் கொள்ளுங்கள்.

* தலையணை உறைகளை தினமும் மாற்றுங்கள்.

* கண் மை, லைனர் ஆகியவற்றை வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது.

* கண்ணை சுத்தம் செய்ய, இதமான துணி அல்லது பஞ்சை தண்ணீரில் நனைத்து,

கண்ணை மூடி, இமையில் லேசாக அழுத்த வேண்டும். பின், கண்ணை சுற்றிச் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு கண்ணுக்கு பயன்படுத்திய துணியை, அடுத்த கண்ணுக்கு பயன்படுத்தக் கூடாது.

* பேபி ஷாம்பூ ஒரு சொட்டு, தண்ணீர் 10 சொட்டு சேர்த்து கலந்து, அதன் மூலம் கண்ணுக்கு வெளியே உள்ள அழுக்குகளை நீக்க வேண்டும்.

* தொற்று முற்றிலும் நீங்கும் வரை, "கான்டாக்ட் லென்ஸ்' அணியக் கூடாது.
குழந்தைகளுக்கு தொற்று ஏற்பட்டால், பள்ளியில் மற்ற குழந்தைகளுக்கும் வேகமாகப் பரவி விடுகிறது. எனவே, இந்த நேரத்தில் விடுமுறை எடுத்து, தொற்று முற்றிலும் குணமானதும், பள்ளிக்கு செல்லலாம்.

* குழந்தை பிறக்கும் நேரத்தில், வயிற்றிலிருந்து வெளியே வரும் பாதையில் உள்ள கழிவுகள் கண்ணில் படர்ந்து, பாதிப்பு ஏற்படலாம். பிறந்த குழந்தையின் கண்ணில் சொட்டு மருந்து ஊற்றி, இந்த பாதிப்பை சரி செய்து விடலாம்.
பழங்காலத்திலேயே, மக்கள் இதை அறிந்திருந்தனர். அவர்கள், குழந்தை பிறந்ததும், தாய்ப்பால் எடுத்து, குழந்தையின் கண்ணில் ஊற்றிச் சுத்தம் செய்வர். தாய்ப்பாலில், "இம்யூனோகுளோபுலின்' சத்து அடங்கி இருப்பதை இப்போது நாம் கண்டறிந்துள்ளோம்.

சில குழந்தைகளுக்கு, நீர் வடியும் துளை அடைத்துக் காணப்படும். குழந்தை வயிற்றில் உருவாகும் போது, இந்தத் துளை முறைப்படி வளர்ச்சி அடையாமல் போயிருக்கலாம் அல்லது பிறக்கும் போது, கழிவுகள் துளையில் சிக்கியிருக்கலாம். எனவே, கண்ணில் தொடர்ந்து தண்ணீர் வடியும் நிலை ஏற்படும்; தொற்றும் ஏற்படும். 1 வயது நிறையும் போது, இந்த பாதிப் பிலிருந்து விடு பட்டு விடலாம்.

எல்லா கண் நோய்களும், தொற் றினால் மட் டுமே ஏற்படுவதல்ல. மகரந்தத் தூள், தூசி, ரசாயனங் களை எதிர்க்க, நம் உடலில், "இம்யூ னோகுளோபு லின் இ' நோய் எதிர்ப்பு சத்து சுரக்கும். இதைத் தவிர, கண்ணை பாதுகாக்க, கொழகொழப் பான திரவமும், ஹிஸ்டாமைன் என்ற ரசாயனமும் கண்ணில் சுரக்கும். இவை, கண்ணை விட்டு வெளியே வழியத் துவங்கும். இதனால், தும்மல், சளி ஆகியவை ஏற்படலாம்.

"சோடியம் குரோமோ கிளை கேட்' அடங் கிய, ஸ்டிராய்டு கலக்காத சொட்டு மருந்தை கண்ணில் ஊற்றினால், இந்த உபாதைகள் நீங்கும். கடைகளில் விற்கப்படும் மருந்துகள் விரைவான பலனைக் கொடுப்பதாகக் கருதப்பட்டாலும், சில நேரங்களில் ஒவ்வாமை அதிகரித்து, கண்ணை பாதித்து விடும். எனவே, இவ்விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
நீச்சல் குளத்தில் உள்ள குளோரின், உடலுக்கு தேய்க்கும் சோப்பு, துணிக்குப் போடும் சோப்பு ஆகியவற்றாலும் கண்ணில் ஒவ்வாமை ஏற்படலாம். இதற்கு, குளிர்ந்த நீரால் கண்ணைக் கழுவினாலே போதும். கண்ணில் தூசி விழுதல், வேறு துகள்கள் விழுதல், இமை முடி கண்ணுக்குள் சென்று விடுதல் ஆகியவற்றால், கண்ணில் உறுத்தல் ஏற்படும். இது போன்ற உபாதைகளை நீங்களாகவே கையாளாமல், கண் மருத்துவ ரிடம் காண்பிப்பது நல்லது.

தினமலர்



நான் எடுக்கும் முடிவு சரியானதா என்று எனக்கு தெரியாது!!

ஆனால்... நான் எடுத்த முடிவை சரியாக்குவேன் !!




உன்னை போல் ஒருவன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 27, 2010 3:22 am

Conjuntivitis பற்றிய விழிப்புணர்வுக் கட்டுரைக்கு நன்றி கார்த்திக்!



""மெட்ராஸ் ஐ பரவுகிறது'' ஜாக்கிரதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக