புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்ணியம்...


   
   
avatar
Guest
Guest

PostGuest Sat Oct 23, 2010 7:09 pm

பெண்ணியம் என்ற சொல் எந்தவொரு மொழி பேசுகின்ற, எந்தவொரு இனம் சார்ந்தது என்ற தளநிலைகளில் இல்லாமல் பாலியல் வேறுபாட்டால் மட்டும் வித்தியாசப்படுத்தப்பட்டு, இது வரை காலமும் ஒடுக்கப்பட்டு இருந்து வரும் மானுடத்தின் மறுபாதிக்கான போராட்டம் அல்லது தீர்வு எனக் கொள்ளலாமா என்ற இந்தக் கேள்விக்குப் பதில் தெரிய வேண்டுமானால், முதலில் பெண்ணியம் என்றால் என்னவென்று சரியான புரிந்து கொள்ளல் நம்மிடம் இருக்க வேண்டும்.

பெண்ணியம் என்பது பல்வேறு தளத்தில் ஆராயப்பட்டு வரும் பாரிய சமூக தீர்வுக்கான ஒரு போராட்டம் தான். பாலியல் அடிப்படையிலான பெண் அடிமைத்தனமானது, கருத்துருவம் (IDEOLOGY), உயிரியல் (BIOLOGY) சமூகவியல் (SOCIOLOGICAL), வர்க்கம் (CLASS) பொருளாதாரமும் கல்வியும் (ECONOMICS AND EDUCATION), சக்தி (FORCE), மானுடவியல் (ANTHOROPOLOGY), உளவியல் (PSYCHOLOGY) என்று பல நிலைகளில் பல்கிப் பெருகியுள்ள ஒரு மிகப் பெரிய விஷயமாகும்.

பாலியல் ரீதியாய் பல நிலைகளில் பலவீனப்படுத்தப்பட்டதாயும், ஒடுக்கப்பட்டதாயும் இருக்கும் ஒரு மானுடத்தின் ஒரு பகுதி தனக்குரிய சமத்துவத்துக்காக அறிவித்துள்ள, அல்லது ஆராய்ந்து கொண்ட ஒரு போராட்டம் என்று அறிவுறுத்த முற்பட்ட போது ஒரு முனைவர் என் முன் வைத்தை கேள்விகள் பின்வருமாறு:

பெண்ணியம் என்ற சொல்லின் பொருள் எல்லா நாட்டுக்கும் எல்லா இனத்துக்கும் பொதுவானதா?

ஈழத்துப் போர்க்களத்தில் நின்ற பெண் போராளியைக் குறிக்கும் போதில், போர் மறவர் என்றே குறிப்பிட வேண்டும். அங்கே போர்க்களத்தில் நிகழும் நிகழ்சியைப் பெண்ணியத்துக்கு எதிராக நிகழ்த்தப்படுவதாகக் கூறுதல் பொருந்தாது.

அதேபோல், அரபு நாடுகளில் பெண்ணியத்தை என்னவென்று கூறுவது?

அஸாமில் பெண்ணின் வாழ்க்கை அமைப்பை எவ்வாறு கூறுவது?

தமிழகத்து கிராமத்துப் பெண்ணுக்கும் சென்னை போன்ற நகரத்துப் பெண்ணுக்கும் ஒரே வகையான பெண்ணியக் கோட்பாடு கூற முடியுமா?

பெண்ணியம் பற்றிப் பேசுகின்றவர் பெண்ணியம் என்றால் என்ன என்பதை விளக்கி அதை அனைத்துப் பெண்களும் ஏற்கச் செய்ய இயலுமா?

ஒரே கூட்டில் வாழ்கின்ற இரண்டு பெண்களுக்கு ஒரே வகையான பெண்ணியக் கொள்கை இருந்திடுமா?

இந்தக் கேள்விகள் எல்லாரிடமும் இருக்கும். சிந்திக்க வேண்டியவை தான். ஆனால் உண்மையில் பெண்ணியத்தின் முக்கியத்துவத்தையும், அதனுடைய உண்மையான அர்த்தத்தையும் சரியாகப் புரிந்து கொண்டால் முதல் கேள்விக்கான விளக்கமே மற்றைய கேள்விகளுக்குமான பதில் என்பதை உணர முடியும்.

அதாவது ஆண், பெண் என்ற பாலியல் வேறுபாட்டை வைத்தே சமூகத்தில் இரண்டு பிரிவுகளாக மானுடம் வித்தியாசப்பட்டிருக்கிறது. அதன் பின் பெண்ணினம் ஆணினத்தின் ஆளுமைக்குட்பட்டதாயும், இரண்டாம் பட்ச தர நிலைக்கு தள்ளப்பட்டதாயும், ஆண்வர்க்கத்தின் தேவைகளுக்கமையவே செயல்படும் அடிமைக்குரிய அந்தஸ்தில் தான் வர்க்கப்படுத்தப்பட்டுமிருக்கிறது.

இந்த நிலைப்பாட்டின் வன்மையால் பெண்ணினம் பிற்படுத்தப்பட்ட ஒரு சூழலில் நின்றே எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. இவை எல்லா நாட்டிலும், எல்லா மதம் சார்ந்த பெண்ணுக்கும், எந்த மொழி பேசும் பெண்ணுக்கும் ஒரே வகையான பாதிப்பைத் தான் விளைவிக்கும். அப்படியிருக்க நாட்டுக்கு நாடு எப்படி பெண்ணியம் வித்தியாசப்படும்?

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 23, 2010 7:10 pm

கெளரவக் கொலைகள்...

உதாரணத்துக்கு பெண்ணியத்துக்கு எதிரான 'ஹானர் கில்லிங்' என்ற கௌரவக் கொலைகளை எடுத்துக் கொள்வோம். இவை அதிக பட்சமாக இஸ்லாமிய நாடுகளில் நடக்கிறது என்று எடுத்துக் கொண்டாலும் இஸ்லாமியம் சாராத மற்ற நாடுகளிலும் இன்று வரை நடந்து கொண்டு தானிருக்கிறது.

ஒரு மானுடம் தன்னுடைய உரிமைகள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில், அதன் விருப்பத்துக்கு மாறான செயற்பாடுகளை எதிர்கொள்ள விருப்பமின்றி அவற்றை எதிர்த்தால் அதற்குரிய பலாபலன் அந்த மானுடத்தின் ஆண் உறவுகளாலேயே கொல்லப்படுதல் கௌரவக் கொலைகள் எனில் இத்தகைய செயலை ஒரு நாட்டில் சரியென்றும், இன்னொரு நாட்டில் தகாது என்றும் பெண்ணியக் கொள்கையால் ஏற்றுக் கொள்ள முடியாது. எந்த ஒரு இனத்திலும், எந்தவொரு மதத்திலும், எந்த ஒரு நாட்டிலும் இத்தகைய கொடுஞ்சயல்கள் பெண்களுக்கெதிராக இழைக்கப்படுவதை பெண்ணியம் அனுமதிக்காது.

ஆனால் கீழ் வரும் நாடுகளின் சட்டமுறைகள் கௌரவக் கொலைக்கு சாதகமாக உள்ளன...

ஜார்டன் : தண்டனை ஒழுங்கின் 240ம் ஷரத்தின்படி "எந்த நயாராவது அவர் மனைவியோ, குடும்பப் பெண்ணோ மற்ற ஆண்களுடன் கள்ளக்காதல் கொள்வது தெரிந்து அவளை கொன்றால் அல்லது காயப்படுத்தினால், அவர் தண்டனையிலிருந்து நீக்கம் அடைவர்."

சிரியா : ஷரத்து 548 படி "ஓர் ஆண் தன் குடும்பத்தின் பெண்ணை கள்ள காதல் செய்கைகளில் பிடித்து, மரணமோ, கொலையோ ஏற்ப்பட்டல், அவர் தண்டனையிலிருந்து நீக்கம்"

மொராக்கோ : தண்டனை ஒழுங்கு ஷரத்து 548 "கொலை, அடித்தல், காயமேற்ப்படுத்தல் இவை ஒரு கணவனால் கள்ளக்காதலுடைய மனைவியின் மேலேயோ அவள் காதலன் மேலேயோ செய்தால், அச்செய்கைகள் மன்னிக்கப்படும்"

ஹைட்டி : தண்டனை ஒழுங்கு ஷரத்து 269 "ஒரு கணவன் தன் மனைவியையோ அல்லது (பெண்) சகவசிப்பவரையோ கள்ளப் காம செய்கைகளில் கண்டுபிடித்து கொலை செய்தால், அவருக்கு மன்னிப்பு"

துருக்கி : துருக்கியில் கௌரவக்கொலை செய்தால் ஆயுள் தண்டனை கிடைக்கும்

அதேநேரம் பின்வரும் நாடுகளில் கௌரவக் கொலை சட்டத்துக்கு புறம்பானது ஆனால் மிகப்பரவலான முறையில் கௌரவக் கொலைகள் இந்நாடுகளில் நடக்கின்றன.

பாகிஸ்தான் : கௌரவக் கொலை பாகிஸ்தானில் காரி - காரோ என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இந்தக் குற்றம் சாதாரணமான கொலையாக கருதப்பட்டு வந்தது; வருகிறது. பெரும்பான்மையாக நடந்த இத்தகைய கொலைகளை காவல் துறையும், நீதித்துறையும் கண்டுகொள்ளாமலே இருந்திருக்கின்றன. ஆனால் சர்வதேச அழுத்தங்கள் காரணமாக பாகிஸ்தான் டிசம்பர் 2004ல், இக்கொலைகளை தடுக்கும்படி சட்டம் இயற்றியது; இச்சட்டம் கொலையுண்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு கொலைகாரனால் 'தண்டனைப் பணம்' கொடுப்பது போல் அமைக்கப்பட்டிருக்கிறது.

பாகிஸ்தானிய மாதர் நலச் சங்கங்களும், மனித உரிமைக் கமிஷனும் இந்த சட்டம் ஒரு கேலிக்கூத்தென்றும், சர்வதேசத்தின் முன் ஒரு கண் துடைப்பெனவும் குரல் கொடுக்கின்றனர். காரணம் கருணைக் கொலைகளை பெரும்பாலும் ஒரு பெண்ணின் தகப்பனாரோ அல்லது சகோதரர்களோ தான் செய்கின்றனர். பாகிஸ்தானிய மனித உரிமை கமிஷன் அறிக்கை அறிக்கையின் படி, 1998ல் பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 286 கௌரவக் கொலைகள் செய்யப்பட்டன. உண்மையான, தகவலறியப்படாத குற்றங்கள் இதற்க்கு மேல் பல மடங்கு. 4 வருடங்களுக்கு முன் முக்தர் மாய் என்ற பெண் 'கௌரவ கற்ப்பழிப்பு'க்கு ஆளானார்.

பாலஸ்தின் : பாலஸ்தின் பெண்ணுரிமை அறிக்கையின் படி காசா, மேற்கு கரைகளில் 1998 மட்டுமே 20 பெண்கள் கொலை செய்யப்பட்டனர். ஆனால் தகவல் இல்லாமல் மேலும் பல பெண்கள் 'கௌரவ'க் கொலைக்கு ஆளாவதாக நம்பப்படுகிறது.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 23, 2010 7:11 pm

அமெரிக்காவில்...

இது இப்படியிருக்க பின்வரும் தரவுகள் உலகத்தில் ஜனநாயகத்திற்கு பெயர் பெற்ற அமெரிக்காவில் பெண்களின் நிலையைக் காட்டுகிறது... (Consider the following from the US Department of Justice, General Statistics:)

ஒவ்வொரு 9 வினாடிகளுக்கொருமுறை, ஒரு பெண் அடித்து துன்புறுத்தப்படுகிறாள். 1992ல், அமெரிக்காவின் மருத்துவத் துறையின் கணிப்புப்படி 15-44 வயதுக்குட்பட்ட பெண்கள் அவர்களது கணவர்களாலும், காதலர்களாலும், மூர்க்கமாகத் தாக்கப்பட்டு, வன் கொடுமை, வன்புணர்ச்சி போன்றவற்றால் சித்ரவதைப்படுகிறார்கள்.

அமெரிக்காவில் ஹோம்லெஸ் எனப்படும் வீடிழந்து தெருவில் வசிக்கும் பெண்களிலும், குழந்தைகளிலும் 50 சதவீதமானோர் குடும்பத்தினரின் வன்முறைக்கு பலியானவர்கள். அமெரிக்காவில் விலங்குகளுக்கான புகலிடங்களை விட மூன்று மடங்கு அதிகமாக பெண்களுக்கான புகலிடங்கள் இருக்கின்றன.

ஜனநாயகத்துக்கும், சமவுரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அமெரிக்காவிலேயே பெண்களின் நிலை இப்படியென்றால் மற்றைய நாடுகளில் எப்படியிருக்குமென்று சொல்ல வேண்டுமா?

பெண்களும் சிறுமிகளும் பெண் சிசுக்கள் உட்பட வருடத்துக்கு 5000 பேர் அவர்கள் குடும்பத்தினராலேயே கொல்லப்படுகின்றனர் என்பது சர்வதேச ஐக்கிய நாடுகள் சபையின் கணக்கெடுப்பு. இக்கொலைகளில் 99 சதவீத கொலைகள் கற்பு, நடத்தை, வாழ்வியல் கோட்பாடு, மதக் கொள்கை என்ற போர்வையில் பெண்ணினத்தைக் கடுமையாக ஒடுக்கி வைத்திருக்கும் கலாச்சார பின்புலன்களில் ஊறியவர்களாலேயே நடத்தப்படுகின்றன.

கடுமையான கலாசாரக் கட்டுப்பாடுகளை மூர்க்கத்தனமாகப் பின்பற்றும் இனங்களைச் சேர்ந்த குடும்பங்களில் இருக்கும் பெண்கள் தமது கலாச்சாரத்துக்கோ, இன, மதக் கொள்கை - கோட்பாடுகளுக்கோ புறம்பான உறவு, நடத்தை வழிகளைத் தேர்வு செய்யும் பட்சத்தில் அத்தகைய உறவு முறைகளை அல்லது நடத்தையைத் தமது குடும்பத்துக்கும் மதத்துக்கும் இனத்துக்கும் இழைக்கப்படும் பேரிழிவாகக் கருதி அந்தப் பெண்களின் குடும்பத்தினர் இத்தகைய படு பாதகமான, கொடூரமான மூர்க்கத்தனமான முறையில், தான் பெற்ற மகள் என்றோ, தன் சகோதரி என்றோ, தன் பேத்தியென்றோ, மனைவி என்றோ, தாயென்றோ உணர்வேதுமில்லாமல் அந்தப் பெண்களைக் கொலை செய்கின்றனர்.

இத்தகைய செயல்கள் எங்கு நடந்தாலும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்; இத்தகைய செயல்கள் நடக்காதபடி ஒழிக்கப்பட வேண்டும். அப்படியானால் பெண்ணியம் என்பது சகல சமூகத்துக்கும் பொதுவானதாயிருந்தால் மட்டுமே சாத்தியப்படும். இல்லை என்று எவரவது மறுதலித்தால் அவர்கள் கௌரவக் கொலைகள் போன்றவற்றை பகிரங்கமாகவே ஆதரிக்கிறார் என்று தான் அர்த்தம்; அப்படிப்பட்டவர்களின் மனோநிலையை மாற்றியமைக்க வேண்டிய தார்மீகக் கடமை பெண்ணியவாதிகளிடமிருக்கிறது.

avatar
Guest
Guest

PostGuest Sat Oct 23, 2010 7:12 pm

தமிழகத்தில்...

இன்றைக்கும் தமிழகத்தில் வரதட்சணைக் கொடுமையால் பெண்கள் கணவனாலும், கணவன் வீட்டாராலும் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் சித்ரவதைக்குட்படுவதும், கொல்லப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது; இன்று வரை தலித் இன பெண்கள் வன்புணர்வுக்குட்படுவதும், பாலியல் வன்கொடுமைக்குட்படுவதும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டுதானிருக்கிறது என்றால் இதை ஒழிக்க தமிழ் சமுதாயம் இதுவரை என்ன செயற்பாட்டில் இறங்கியிருக்கிறது? காவல் துறை மற்றும் மனித உரிமை சம்மந்தப்பட்ட பாதுகாவலர்களும் என்ன சாதித்திருகின்றனர்?

வெறும் போலி சாமியார்களின் ஊழல்களையும் வேஷத்தையும் வெளிச்சம் போட்டுக் காட்டக் கூட பெண்களின் அந்தரங்கங்க நடத்தைகள் தான் ஊடகங்களுக்கே தேவைப்படுகிறது என்றால் பெண்ணியத் தத்துவத்தை எப்படி ஒவ்வொரு கலாச்சாரத்துக்கும் வித்தியாசப்பட வைக்க முடியும்?

பெண்களுக்கான பாதுகாப்பு சம்மந்தப்பட்ட சமூக சீர்த்திருத்தத்துக்கு முக்கிய தேவை பெண்ணியத்தின் அறிவு எல்லோரிடமும் பரவ வேண்டும் என்பது மட்டுமல்ல அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் தான்.

இத்தகைய கொடும் செயல்களை உலகில் உலவ விடுவது மனித சமுதாயத்துக்கே இழுக்கு. இவற்றைத் தட்டிக் கேட்கும் திராணியில்லாத எமக்குப் பெண்ணியம், பெண் விடுதலை, சமத்துவம் என்று சொல்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?

தாய் நாடு என்கிறார்கள்; தாய் மொழி என்கிறார்கள்; இயற்கையையும் சக்தியையும் பெண்ணாகவே கருதுகிறார்களாம்... ஆனால் பிறப்பால் ஆண்களுடன் இருக்கும் எம்மைப் பெண்ணாக மனிதாபிமானத்துடன் மதிக்கிறார்களா?

இல்லை..!

நாங்கள் பங்கெடுத்தால் தான் குற்றவாளிகளா? இல்லை... இன்னமும் இப்படிப்பட்ட கொடூரமான கொலைகளை மௌனமாக வேடிக்கை பார்ப்பதாலும் குற்றவாளிகள் ஆகின்றோம். சரி... பெண்ணாகிய நாம் எங்கள் பங்குக்கு என்ன செய்யப் போகிறோம்?

குடும்பத்தினரால் கொல்லப்படும் இந்த ஹானர்ஸ் கில்லிங் கொடுமையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டது தான் ஐ.சி.ஏ.ஹெச்.கே (International Campaign Against Honour Killings) என்ற அமைப்பு. பெண்ணினத்தை ஒடுக்கும் தீய சக்திகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதும், பாதிக்கப்பட்ட பெண்களுக்குத் தகுந்த ஆலோசனை வழங்குவதும், உதவுவதும் இவ்வமைப்பின் நோக்கம். மேலதிக விபரங்களுக்கு http://www.stophonourkillings.com என்ற இணையத்தை பார்வையிடவும்.

பாதுகாப்பற்று, சாவின் பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் எந்தவொரு பெண்ணுக்கும் தகுந்த ஆலோசனைகளை இந்த அமைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது. மிகவும் அந்தரங்கமான, ரகசியமான ஆலோசனைகளுக்கு இந்த அமைப்பினரின் கீழ்வரும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துங்கள்: Nina: ninasalih@googlemail.com.

மேலதிக விபரங்களுக்கு: ICAHK's founder Diana Nammi : diana.nammi@gmail.com

தொலைபேசி: l +447862733511

இந்த குறிப்பிட்ட தொலைபேசியுடன் எல்லோராலும் தொடர்பு கொள்ள முடியாமல் போகலாம். அப்படியான சூழ்நிலையிலிருக்கும் பெண்கள் தமது பாதுகாப்புக்காக வேறு ஏதாவது வழிகளில் முயற்சிக்க வேண்டும். அண்மையிலிருக்கும் மாதர் சங்கங்களையோ, மகளிர் காவல் நிலையங்களையோ தயங்காமல் நாட வேண்டும். ஆபத்து வரும் வரை காத்திராமல் முதலிலேயே வரும் முன் காப்பவளாயிருக்க வேண்டும். தனது அந்தரங்கங்களை பகிர பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை...

அதிலும் தனது கணவனோ அல்லது கணவர் வீட்டாரோ செய்யும் கொடுமைகளை பயம் காரணமாகவோ அல்லது அவமானம் கருதியோ வெளியிட மாட்டார்கள். ஆனால் அவளுடைய உயிருக்கே ஆபத்தான நிலையிலிருக்கும் போது இப்படி தனக்குள் எல்லாவற்றையும் அமுக்கி வைக்கப் பழகிக் கொள்வது மனோரீதியாகவும், உயிருக்கும் ஆபத்தானதே. தன்னுடைய மனநிலையையும் சரி, சூழ்நிலையையும் சரி நம்பிக்கைக்குரிய ஒருவரிடம் கட்டாயம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

எமது கலாச்சாரக் கட்டமைப்பு ஒரு பெண்ணின் வாழ்கையை அவளை முதன்மையாக அடையாளப்படுத்துவதை தவிர்த்தே வந்திருக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் அவள் எதையும் தாங்கிக் கொள்ள வேண்டியவளாகவே இயக்கப்படுகிறாள். பிறந்த வீட்டிலிருப்பவர்கள் ஒரு பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கும் போது, "கணவன் வீட்டில் என்ன நடந்தாலும் அவள் அவற்றைத் தாங்கிக் கொண்டேயாக வேண்டும்" என்ற கட்டாயத்தை போதனையாக உருப்போட பழக்கப்படுத்தப்பட்டவளாக அனுப்பி வைக்கிறார்கள்.

இப்படியான சூழலில் வாழும் பெண்களைப் பொறுத்தவரை அவர்கள் தம்மைத் தாமே தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். எங்கள் சுதந்திரமும் பாதுகாப்பும் எங்களுடைய கவனத்தில் மட்டுமே தங்கியிருக்கின்றது. வரதட்சணைக் கொடுமையோ, அல்லது கொடுமைப்படுத்தும் கணவனின் வன்முறையோ அல்லது வன்புணர்தலுக்கு முயல்பவர்கள் பற்றியோ உடனடியாகக் கவனத்தில் எடுக்கப்பட வேண்டும். வன்முறைகளைச் சகிக்கும் எந்தப் பெண்ணும் முட்டாளே.

உங்கள் குடும்பத்தார் மூலம் உங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று நீங்கள் அஞ்சினால் உடனடியாக உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவருடன் அதைப் பற்றி சொல்லிவிடுங்கள்.

பெண் சமுதாயம் இற்றைத் திகதிகளில் எந்தளவுக்கு முன்னேறியிருக்கிறது என்பது கேள்வி என்றால் சகல துறைகளிலும் பெண்ணின் பங்களிப்பு பரவியிருக்கின்றது என்பது மேம்போக்கான விடை மட்டுமே. சமூக ரீதியாக, சராசரியாக சொல்லப்படும் ஒரு நிகழ்தகவு தான் பெண்ணின் முன்னேற்றம் என்பது.

ஆனால் தனிப்பட்ட வாழ்கையில் ஒவ்வொரு பெண்ணிற்கும் உடலியல், உளவியல், கருத்தியல் ரீதியாக எந்தவொரு முன்னேற்றமும் இதுவரை இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இன்றும் பெண் சிசுக் கொலை நடந்துகொண்டு தான் இருக்கிறது. போன வருடத்தை விட இவ்வருடம் கொஞ்சம் குறைந்துள்ளது என்ற ரீதியான தகவலே தவிர முற்றாக நிறுத்தப்படவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டிய விசயம். வரதட்சணை, பாலியல் வன்முறை, வன்புணர்தல், கொலை போன்றவை பெண்ணினத்துக்கு எதிராக இன்றும் நடைபெற்று வருபவையே..!

பெண் சமூக ரீதியாக ஒடுக்கப்படுவதற்கு முதல் காரணம் அவள் தான். தாரமாவதற்காகவும் தாயாவதற்காகவும் மட்டுமே பெண் என்பவள் படைக்கப்படுவதாய் நினைத்துவிடுகிறாள். அவள் குடும்பம், பாசம், அன்பு என்று முழு ஈடுபாட்டுடன் ஐக்கியமாகிவிடுவதால் தன் வாழ்கையில் முக்கியமான உறவுகளிடம் பலஹீனமாகிவிடுகிறாள். அவளுடைய உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே பெரும்பாலான ஆண்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மிகப் பரந்த இந்த உலகத்தில், வாழ்கை என்பது பலவித கோணங்களிலிருந்து ரசித்து, உணர்ந்து அனுபவிக்கப்பட வேண்டிய சந்தர்ப்பம். அதைப் பெண் என்பவள் மற்றவர்களால் விதிக்கப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் முடங்கி மற்றவர்கள் எதிர்பார்ப்பிற்கமைய வாழ்வதை விதியாக ஏற்றுக்கொள்வாள் என்றால் அவளுக்கு வாழ்க்கை என்பதே அனாவசியம். அந்த வாழ்கையில் எந்தவொரு சுயமும் இல்லை.

எந்த ஒரு பெண் தன் கருத்துகளுக்கு அமைய, தன்னுடைய சொந்த உணர்வுகளால் மட்டுமே வாழ்கையை வாழத் தலைப்படுகிறாளோ அந்தப் பெண் சுதந்திரமானவளாகக் கருதப்படுவாள். அப்படி ஒவ்வொரு பெண்ணும் தன்னைத் தானே அடையாளப்படுத்திய தனது வாழ்கையை வாழத் தலைப்படும் போது தான் பெண்ணியம் முதல்படியாக தனது வெற்றியை நோக்கி பயணிப்பதாக அமையும்.

http://youthful.vikatan.com/youth/Nyouth/sakthi2010/swathistory080310.asp

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat Oct 23, 2010 9:23 pm

பயனுள்ள பகிர்வு... நன்றி உதுமான்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக