புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
197 Posts - 41%
ayyasamy ram
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
21 Posts - 4%
prajai
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
7 Posts - 1%
mruthun
கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_m10கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!


   
   
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Thu Oct 21, 2010 1:04 am

விடுதலைப் புலிகள் மீதான தடை விசாரணை தீர்ப்பு ஆயத்தில்,அரசு சாட்சியிடம் வைகோ குறுக்கு விசாரணை! கிடுக்கிப் பிடியில் சாட்சி திணறல்! வைகோவின் கருத்தை நீதிபதி பதிவு செய்தார்!

இன்று, (20.10.2010) புதன்கிழமை அன்று, உதகமண்டலத்தில், தமிழகம் மாளிகையில், விடுதலைப்புலிகள் மீதான தீர்ப்பு ஆயத்தின் விசாரணை நடைபெற்றது. தீர்ப்பு ஆயத்தின் தலைவரும், தில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியான, மாண்புமிகு விக்ரம்ஜித் சென், விசாரணையை சரியாக 10.30 மணிக்குத் தொடங்கினார். மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சட்டத்துறைச் செயலாளர் தேவதாஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி, நீலகிரி மாவட்டச் செயலாளர் அட்டாரி நஞ்சன், கழக வழக்கறிஞர்கள் குருநாதன், சூரி நந்தகோபால், பிரியகுமார், ஆசைத்தம்பி மற்றும்பல வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் பழ.நெடுமாறன், வழக்கறிஞர் சந்திரசேகர் அவர்களும், மற்றும் நுhற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், இந்த விசாரணை மன்றத்தில் கூடி இருந்தனர்.
அரசுத்தரப்பின் இரண்டாவது சாட்சியாக, மத்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறைப் பிரிவு இயக்குநர் மிஸ்ரா, சாட்சியம் அளித்தார். அவர், சாட்சியத்தை முடித்தவுடன், மாண்புமிகு நீதிபதி வைகோ அவர்களிடம், ‘நீங்கள் குறுக்கு விசாரணை செய்கிறீர்களா?’ என்று கேட்டார். வைகோ அதனை ஏற்றுக் கொண்டார்.

இப்படிப்பட்ட தீர்ப்பு ஆயங்களின் விசாரணையில், நேரடியாக சாட்சிகளிடம் கேள்வி கேட்கின்ற முறை இல்லை. கேள்வியை, நீதிபதி மூலமாகத்தான் சாட்சியிடம் கேட்க வேண்டும். அப்படி, நீதிபதி மூலமாக வைகோ கேள்விகளைக் கேட்டார்.

‘மாண்புமிகு நீதிபதி அவர்களே, அரசுத்தரப்பின் இரண்டாவது சாட்சி இங்கே கூறுகையில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, உலகத்தில் பல நாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழர்களால் அமைக்கப்பட்டு உள்ளது. அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழர்கள், இந்த அமைப்பை உருவாக்குவதில் பங்கு ஏற்று, தேர்தல் எல்லாம் நடந்து உள்ளது. விடுதலைப்புலிகளில் தீவிரப் பிரிவினரும், மிதவாதப் பிரிவினரும் என இரண்டு பிரிவுகளாக உள்ளனர். அதில் மிதவாதப் பிரிவினர் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை ஆதரிக்கின்றனர். இவையெல்லாம் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு மேலும் ஒரு காரணம் ஆகிறது என்று இங்கே குறிப்பிட்டாரே, அவர் குறிப்பிட்ட அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு அமைக்க, ஏற்பாடு செய்தவர்கள் உள்ள நாடுகளில், விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு இருக்கிறது என்பதை அவர் அறிவாரா?

உடனே நீதிபதி, ‘இந்தக் கேள்விக்குப் பதில் அளிக்குமாறு’ சாட்சியிடம் கூறினார்.

அதற்கு, சற்று நேரம் திணறிய சாட்சி மிஸ்ரா, ‘அமெரிக்காவிலும், ஐரோப்பிய ஒன்றியத்திலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. மற்ற நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளதா? என்று எனக்குச் சரியாகத் தெரியவில்லை’ என்று கூறினார். அடுத்து வைகோ, ‘புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்டு உள்ள அமெரிக்காவில், நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, பிலடெல்பியாவில் தொடக்க விழா நடத்துவதற்கு, அமெரிக்க அரசாங்கமோ, அமெரிக்கக் காவல்துறையோ, எந்த இடையூறும் செய்யவில்லை என்பது, சாட்சிக்குத் தெரியுமா?’

இதற்கும் பதில் அளிக்குமாறு சாட்சியிடம் நீதிபதி கேட்டார்.

சாட்சி, ‘அதுபற்றித் தனக்குத் தெரியாது’ என்றார்.

உடனே மத்திய அரசு வழக்கறிஞர் எழுந்து, ‘இதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது?’ என்று கேட்டார். உடனே வைகோ எழுந்து, ‘உலகம் முழுவதிலும், தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் இது வெளிவந்து உள்ளது? வேறு என்ன ஆதாரம் வேண்டும்?’ என்றுகேட்டார். உடனே அரசு வழக்கறிஞர் அமர்ந்து விட்டார். அடுத்து வைகோ கேட்டது, ‘நாடு கடந்த தமிழ் ஈழ அரசு ஏற்படுத்த, அமைப்பினை உருவாக்கியவர்கள் வெளியிட்ட தமிழ் ஈழம் குறித்த வரைபடத்தில், இலங்கைத் தீவின் வடக்கு கிழக்கு பகுதிகள் மட்டும்தான் இடம் பெற்று இருக்கின்றன. கடந்த 16 ஆம் தேதி டெல்லியில் தீர்ப்பு ஆயத்தில், நான் தாக்கல் செய்த பிரமாண வாக்குமூலத்தில், இணைப்புப் பகுதியாகச் சேர்த்து உள்ள புத்தகத்தில், 67 ஆம் பக்கத்தில் இந்த வரைபடத்தைக் காட்டி இருக்கிறேன். நீதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டு உள்ள பிரமாண வாக்குமூலத்தைத் தாங்கள் இப்போது பார்க்கலாம்’ என்று கேட்டுக் கொண்டார்.

உடனே நீதிபதி, அந்த ஆவணத்தை வரவழைத்து, அதைச் சரிபார்த்து, அதை விசாரணைக் குறிப்பில் பதிவு செய்து கொண்டார். உடனே வைகோ, ‘தமிழ் ஈழம் என்பது இந்தப் பகுதி மட்டும்தான். தமிழ்நாட்டைச் சேர்க்கவில்லை என்பது இதிலே நிரூபணம் ஆகிறது. இதுபற்றி, சாட்சிக்கு ஏதாவது தெரியுமா?’ என்று கேட்டார். சாட்சி, ‘தனக்குத்தெரியாது’ என்றார். அதன்பின் வைகோ, ‘2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு, விடுதலைப்புலிகளை ஆதரித்ததாகப் போட்ட வழக்குகள், ஏதேனும் தண்டனையில் முடிந்து இருக்கிறதா? ஏதேனும் விடுதலையில் முடிந்து இருக்கிறதா? 2008 மே மாதத்துக்குப் பிறகு போடப்பட்ட வழக்குகள் ஏதேனும் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டு இருக்கிறதா?’ என்று கேட்டார்.

சாட்சி, ‘அதுபற்றிய விவரங்களை இப்போது அளிக்க முடியாது’ என்றார்.

வழக்கின் அடுத்த விசாரணை, 28 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார்.

இதுபற்றி, செய்தியாளர்களிடம் வைகோ கூறுகையில், ‘இந்தத் தீர்ப்பு ஆயத்தின் நீதிபதி, விசாரணயை மிக நேர்மையாக நடத்துகிறார். இன்று அரசாங்க சாட்சி, வகையாக மாட்டிக் கொண்டார். என் குறுக்கு விசாரணைக்குப் பதில் சொல்ல முடியவில்லை. தடையை நீடிக்கக்கூடாது என்ற என்னுடைய வாதத்துக்கு வலுச் சேர்ப்பதாக இன்றைய எனது குறுக்கு விசாரணை அமைந்து இருக்கிறது. தொடர்ந்து நீதிக்காகப் போராடுவோம்’ என்று கூறினார்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்

சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க.,
20.10.2010


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக