புதிய பதிவுகள்
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 20:39

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 20:29

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 20:12

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 17:58

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 16:09

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:28

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 14:04

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:41

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:51

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 23:22

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 23:16

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 23:11

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 23:06

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 20:49

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 20:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:25

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 19:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:39

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:11

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:06

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 23:01

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:59

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:56

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue 10 Sep 2024 - 22:53

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:59

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 21:05

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue 10 Sep 2024 - 19:46

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue 10 Sep 2024 - 14:50

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon 9 Sep 2024 - 23:48

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon 9 Sep 2024 - 21:22

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 9 Sep 2024 - 20:48

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon 9 Sep 2024 - 18:25

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:29

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:28

» குழவியின் கதை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:27

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:25

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:24

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon 9 Sep 2024 - 9:22

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:57

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:39

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun 8 Sep 2024 - 22:36

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat 7 Sep 2024 - 17:46

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
29 Posts - 38%
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
21 Posts - 28%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
13 Posts - 17%
Rathinavelu
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
7 Posts - 9%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
3 Posts - 4%
Sindhuja Mathankumar
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
1 Post - 1%
mruthun
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
104 Posts - 48%
ayyasamy ram
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
66 Posts - 31%
Dr.S.Soundarapandian
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
16 Posts - 7%
mohamed nizamudeen
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
manikavi
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%
mruthun
தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_m10தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழரின் படை- 1 முதல் 100 வரை


   
   

Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sat 31 Jul 2010 - 6:04

First topic message reminder :

1956ல் இலங்கையின்
அரசாங்க மொழியாகச் சிங்களத்தை அறிவிக்க முற்பட்டார்கள். தந்தை செல்வாவின் தலைமையில்
தமிழர்கள் அறவழிப் போராட்டம் நடாத்தினர். காலே ஃபேஸ் விடுதி வழியாக சென்றார்கள். கொழும்பு
துறைமுகம் அருகில் தான் உள்ளது. பணிகளை முடித்துக் கொண்டு சிங்கள பணியாளர்கள் எதிர்பட்டனர்.
பேனர்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்களைப் பார்த்து அதிர்ந்தனர்.



சிங்கள நாட்டில்
சிங்களத்தை ஆட்சி மொழியாக கொண்டுவர தமிழர்கள் எதிர்ப்பதா? ஒருவரையும் விடக்கூடாது என
முடிவெடுத்து, கையில் கிடைத்த ஆயுதங்களை எடுத்து, தாக்கத் தொடங்கினர். சிறிது நேரத்தில்,
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட சிங்களவர்கள் திரண்டுவிட்டனர். எக்காரணம் கொண்டும் திருப்பித்
தாக்கக் கூடாது என, தந்தை செல்வா தடுத்துவிட்டார். தமிழர்கள் சிதறி அங்கும் இங்கும்
ஓடினர். ஒளிந்து கொள்ளத்தான் ஒரு இடமும் கிடைக்கவில்லை. மனோகரன், வசீகரன் தந்தை செல்வாவின்
மகன்கள் இருவரும் தூக்கிவீசப்பட்டார்கள்..



இத்தாக்குதல்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மட்டும் தாக்கவில்லை, அனைத்து தமிழர்களின் வீடுகளிலும்
கடைகளிலும் புகுந்து தாக்கினார்கள், சூரையாடினார்கள். பேருந்து, ஆட்டோ மிதிவண்டியில்
செல்கின்ற தமிழர்கள் ஒருவரையும் விடவில்லை. இந்த தாக்குதலை கவனித்துப் பார்த்தால் நன்றாக
புரியும்… இந்த வெறி திடீரென தோன்றியது அல்ல. பல ஆண்டுகளாக, அவர்களின் மனதில் கனத்துக்
கொண்டிருந்த நெருப்பு, கிடைத்த சிறு சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எரிமலையாக வெடித்தது.
தமிழன் எங்கெல்லாம் வசிக்கிறான், அவன் வீடு எண், கடைகள் எக்கெல்லாம் உள்ளது என சுலபமாக
கண்டுபிடித்து தாக்கினார்கள்.



ஆயினும், போராட்டக்
குழு, நாடாளுமன்றத்தை அடைந்தது. பிரதமர் பண்டாரநாயக்காவின் அலுவலகத்திற்குள் இரத்தம்
சொட்ட சொட்ட அமிர்தலிங்கமும், சுந்தரலிங்கமும் நுழைந்தனர். தங்களின் கருத்தை மனுவில்
குறிப்பிட்டு பிரதமரிடம் கொடுத்தனர். அவர்கள் சென்றபின், அது குப்பைத்தொட்டிக்கு சென்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு தந்தை செல்வா, சத்தியாகிரக போராட்டத்தை திரும்பப் பெற்றார்.



நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Sun 1 Aug 2010 - 7:02

திருவேங்கிடம் வேலுப்பிள்ளை தன் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அன்று ஒரு அர்ச்சகர், சிங்களவரால் உயிருடன் கொளுத்தப்பட்டிருந்தார். அவர்கள் கோயிலை கொள்ளையடிக்க செல்லவில்லை. அவர் தமிழர் என்ற ஒரே காரணத்திற்காக எரிக்கப்பட்டார். அதைப் பற்றிதான் அவர்கள் விவாதித்துக் கொண்டிருந்தனர்.

“அந்த அர்ச்சகர் மேல் தான் தவறு” என்றான் பிரபாகரன்.

அங்கிருந்த பெரியவர் பிரபாகரனை அருகில் அமரவைத்து, “தம்பி, சிங்களவர்கள் நம்மை தினமும் அடி அடி என்று அடித்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன காரணம்? நாம் தமிழர் என்ற ஒற்றைக் காரணம் மட்டுமே. அந்த அர்ச்சகர் என்ன குற்றம் செய்தார், என அவரை நீ குற்றம் சொல்கிறாய்?” என்று கேட்டார்.

அப்பா, நான் சொல்ல வந்ததை யாரும் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை. ”அந்த அர்ச்சகர் ஏன் அவர்களைத் திருப்பி அடிக்கவில்லை? அந்த சிங்களவரை திருப்பி தாக்கி இருக்க வேண்டும். தவறு செய்துவிட்டார்”. சொல்லிவிட்டு சென்றுவிட்டான் பிரபாகரன்.

தூக்கிவாரி போட்டது வேலுப்பிள்ளைக்கு. தந்தை செல்வாவின் அறவழிப் போராட்டத்தைத் தவிர வேறெந்த போராட்ட முறையையும் சிந்தித்துக் கூட முற்படாதவர். அவர்.

நண்பர்கள் சென்றபின், சிவப் படத்தின் முன் கண்களை மூடி வேண்டிவிட்டு, காந்தியின் படதிற்கு வணக்கம் செலுத்தினார். அப்போது அங்கு அந்த பிரபாகரன், காந்த்தியின் படத்திற்கு அருகில் தான் கையில் வைத்திருந்த படங்களையும் மாட்டலாமா என்று கேட்டான். அவன் கையில் இருந்த படங்களைப் பார்த்த வேலுப்பிள்ளை சற்று அதிர்ந்தார். காரணம் அவன் கையில் இருந்தது, நேதாஜி மற்றும், பகத்சிங் படங்கள்.

அந்தக் காலக்கட்டத்தில் பெரும்பாலான தமிழர்கள் தந்தை செல்வாவிற்கு பின்னால் பதுங்கியிருந்தார்கள். பண்டாரநாயகா-செல்வநாயகம் ஒப்பந்தம் கையெழுத்தானது. தமிழர்கள் ஆனந்தக் கூத்தாடினர். காரணம், வடகிழக்கு மாகாணங்களில் இனிமேல், தமிழும் ஆட்சி மொழியாக இருக்கும்.

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sun 1 Aug 2010 - 12:37

தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 678642




தமிழரின் படை- 1 முதல் 100 வரை - Page 2 Power-Star-Srinivasan
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Mon 2 Aug 2010 - 5:43

தவிரவும், ”மலையக மக்களுக்கு, குடியுரிமை வழங்க பரிசீலிப்பதாகவும்” ஒப்பந்தத்தில் சாராம்சம் இருந்தது. தமிழ் மக்கள் தந்தை செல்வாவிற்கு விழா எடுக்காத குறையாக புகழ்ந்து தள்ளினார்கள்.

சிங்களர்கள் சீறினார்கள். தமிழ் ஆட்சி மொழியா? சிங்களத்துக்கும் தமிழுக்கும் ஒரே அந்தஸ்த்தா?

மே, 1958, சிங்களர்கள் அனைவரும் வீதிக்கு வந்தார்கள். யாழ்ப்பாணம் போகும் அனைத்து பேருந்தின் எண் பலகைகளிலும் ”ஸ்ரீ” என்ற எழுத்தை எழுதினார்கள். ஸ்ரீலங்காவின் முதல் எழுத்து. சிங்களத்தின் அதிகாரத்தை குறிக்கும் எழுத்து. இதைப் பார்த்த தமிழரகளுக்கு புரிந்துவிட்டது. பெரும் அபாயம் வரப்போகிறது.

துடிப்புள்ள இளைஞர்கள் சிலர், ஸ்ரீ எழுத்தை அழித்தனர். இது போதாதா? இதற்காகத் தானே காத்துக் கிடந்தார்கள்.

ஒரு குழு தமிழை அழித்தது. மற்றொரு குழு தமிழர்களை அழித்தது. கண்ணீல் பட்ட அனைத்து தமிழ் பெயர் பலகையையும் தார் கொண்டு அழித்தார்கள். கடைகளை சூரையாடினார்கள். தமிழர்களின் வீடுகளை கொளுத்தினார்கள். தமிழரில் பாவப்பட்டவர் பெண்கள் தாம். எப்படியும் கருகி அழிய போகும் உடல் தானே! அதுக்கு முன்னர் ஒரு முறை, ஒரே ஒரு முறை…. பாவமில்லை.

கட்டை, கம்பு அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்றனர். துப்பாக்கி அவ்வளவு புலக்கத்தில் இல்லாத நேரம். இருந்தால் என்ன? இறைச்சி வெட்டும் கத்தியோடு போனார்கள். ஆண், பெண், வயதானவர்கள், குழந்தைகள் என்று பாகுபாடில்லாமல் வெட்டிக் கொன்றார்கள்.

சிறைக் கைதிகள், குற்றம் செய்தவர்களல்லவா? சும்மா கொல்ல முடியுமா? தங்கள் கற்பனைக்கு எட்டும் அனைத்து வகையான சித்திரவதைகளையும் செய்தனர். ஆடைகளை களைந்து, சங்கிலியால் கட்டி, நிர்வாணமாக தெருவில் நடக்கவிட்டு, பாகம் பாகமாக சிதைத்தனர். வலி, அழுகை, மரண ஓலம், கெஞ்சல் எதுவும் அவர்கள் கல் மனதை கரைக்கவில்லை. மே 25,1958 அன்று மட்டும் பொலன்னருவா பகுதியில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Tue 3 Aug 2010 - 12:06

பின் ஹிங்குரகோடா. பின் கொலம்போ. பேருந்துகளில் ஊர் விட்டு ஊர் சென்று தமிழர்களை கொன்றனர். அன்றைய நாட்களில் காவல்துரையினர் கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்துக் கொண்டிருந்தனர்.

1958. இந்த ஆண்டு ஒவ்வொரு தமிழனின் அணுவிலும் மறக்க முடியா வடுவாக அமைந்த ஆண்டு. தந்தை செல்வாவுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தை கிழித்தெறிந்தார் பண்டாரநாயகா. அதற்கான காரணமாக அவர் கூறியது, சிறுபிள்ளைத் தனமானது. “தமிழர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்து தான் செல்வநாயகத்துடன் ஒப்பந்தம் போட்டேன். ஆனால் தமிழர்களே அதனைக் கெடுத்துக் கொண்டனர். இந்தப் பத்து நாட்களில் தமிழர்கள் மிருகத்தனமாக நடந்துக் கொண்டனர். அரசாங்கப் பேருந்துகளில் எழுதப்பட்ட ’ஸ்ரீ’ என்ற சிங்கள் எழுத்தை அழித்துள்ளனர்.” என்று கூறினார்.

சிங்கள எழுத்தை அழித்தது மிருகத்தனமானதாம். ஆனால், சிங்கள மக்கள் நடத்திய கீழ்தரமான மிருகத்தனமான தாக்குதல்கள் அவர் கண்களில் தெரியவில்லை போலும்.

வேலுப்பிள்ளையின் சகோதரி வீட்டுக்கு வந்திருந்தார். அவர் ஊரில் நடந்ததை விசும்பிக் கொண்டே சொல்லிக் கொண்டிருந்தார். அவர் தெரு முழுதும் பற்றி எறிந்ததை. பக்கத்து வீட்டில் வாழ்ந்தவர்கள், தன் வீட்டு வாசலில் கருகி கிடந்ததை. ஊர் முழுக்க எழும் அலறல்களை, அழுகுறல்களை. கண் எதிரே உள்ளவற்றை காணக் கூட முடியாதவாறு மறைத்த புகை மண்டலத்தை. சாக்கடைகளில் அடித்துச் செல்லப்பட்ட சதைத் துண்டுகளை. ஆறாக ஓடிய இரத்தைதை பற்றி.

கொலைவெறியுடன் வரும் கொலைக் கும்பலிடமிருந்து தப்பிக்க கதவை திறந்து போட்டுவிட்டு, குளியலறைக்குள் பதுங்கியிருந்திருக்கிறார்கள், அவரும் அவர் கணவரும் குழந்தைகளை அணைத்தபடி.. அங்கேயும் வந்து, அவர் கண்முன்னேயே, அவர் கணவரை அடித்தே கொன்றுள்ளனர். அவர்களின் குழந்தைகளை, உயிருடன் நெருப்பில் வீசி, கொலைகாரர்கள் துடிப்பதை அருகில் உட்கார்ந்து ரசித்துள்ளனர். தான் பிழைத்ததே பெரிய புண்ணியம் என்றார்.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 4 Aug 2010 - 3:52

விநோதினி அழத் தொடங்கிவிட்டாள். போதும்! எதுவும் பேசாதீர்கள், என்று கதறினாள். பிரபாகரன் அத்தையின் முகத்தை நிமிர்ந்து பார்த்தான். முகம் முழுவதும், தீப்புண்கள். கைகள் இன்னமும் நடுங்கிக் கொண்டிருந்தன. ஜகதீஸ்வரி, வினோதினி இருவரும் பிரபாகரனின் சகோதரிகள்.

அழுகையும் கோபமும் பொங்கி வந்தது பிரபாகரனுக்கு. அர்ச்சகரைக் எரித்த சிங்களர்கள். அத்தையின் கணவரை அடித்தே கொன்ற சிங்களர்கள். நூற்றூக்கணக்கான குழந்தைகள். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் அழித்த சிங்களவர்கள்.

தந்தை செல்வாவின் ஃபெடரல் கட்சியை தடை செய்திருந்தனர். திருவேங்கடம் தன் நண்பர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தார். ”என்ன நடக்கிறது இங்கே?”

பிரபாகரன் மனதிலும் அதே கேள்விதான். இன்னும் எத்தனை தமிழர்களைக் கொல்லப் போகிறார்கள்? எத்தனை குழந்தைகள் தீயிற்கு இறையாக்கப் போகிறார்கள்? தம்பி கவனமாக நட. கீழே உள்ள புல் உன் பாதம் பதிந்து, மடங்கி விடக் கூடாது என்கிறார் அப்பா. கருணையின் மொத்த உருவம். காந்தி, நேரு, விவேகானந்தரை நித்தம் தொழுபவர். தேவரம் படி, திருவாசகத்துக்கு உருகார், எவ்வாசகத்துக்கும் உருகார், அதையும் படி. அன்பே சிவம் என்று சொல்லிக் கொடுத்த அப்பா.

அப்பா, எப்போது, மூடியிருக்கும் கண்களை திறந்து பார்க்கப் போகிறீர்கள்? அப்படி நடந்துவிட்டதே, இப்படி ஆகிவிட்டதே, அச்சச்சோ, என்று அங்கலாய்ப்பதை எப்போது நிறுத்தப் போகிறீர்கள்.?

ஒழுக்கம், கீழ்படிதல், இரண்டையும் உங்களிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். உங்களைப் போலவே எனக்கும் தமிழர்கள் மீது அக்கறை உண்டு. எமது, மக்கள், எமது, இனம், எமது மொழி, எமது சமூகம் மீது எனக்கு வெறி கலந்த காதல் உண்டு.

நீங்கள் மிகவும் பொறுமை காக்கிறீகளோ என அஞ்சுகிறேன். நீங்கள் மட்டும் அல்ல. உங்கள் தோழர்களும் தான். நீங்கள் சார்ந்துள்ள கட்சி. உங்கள் கொள்கை. உங்கள் கனவு. உங்கள் தலைவர், தந்தை செல்வா அவரை நான் மதிக்கிறேன். வரலாற்றில் அவர் ஆற்றிய பாத்திரத்தை நான் மறுதலிக்கவில்லை.

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 4 Aug 2010 - 4:18

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் அப்பா, உருப்படியாக என்ன சாதிக்க முடிந்தது உங்கள் கட்சியால்? உங்கள் கொள்கைகளால்? உங்கள் தலைவரால்? உங்கள் சத்தியாகரத் தோழர்களால்? போராட்டம் நடத்துகிறோம் என்கிறீர்கள். அது போராட்டமா? நீங்கள் வாசிக்கும் அத்தனை புத்தகங்களையும் நான் வாசித்திருக்கிறேன். இதுவரை நான் வாசிக்கும் புத்தகங்களை ஒரு முறையேனும் வாசித்திருக்கிறீர்களா? போராட்டம் என்றால் என்ன என்று சொல்லித்தரும் புத்தகங்கள்.

பகத்சிங். அந்தத் தொப்பியும், மீசையும் சொல்லும் செய்தியை காது கொடுத்து கேளுங்கள். சுபாஷ் சந்திர போஸ். காந்தியும் வேண்டாம். சாத்வீகமும் வேண்டாம் என படை திரட்டி தன் பலத்தை காட்டிய பெருமகன். ஃபிடல் கஸ்ட்ரோ. பக்கத்தில் சே குவேரா. சீனப் புரட்சி எப்படி நிகழ்ந்தது தெரியுமா? மா சே துங் தெரியுமா? வியத்நாமின் விடிவெள்ளி, ஹோ சி மின் தெரியுமா?

இவர்களை அத்தனை பேருமே போராளிகள் அப்பா. இவர்கள் சந்தித்துள்ள இடர்களை நாம் இதுவரை சந்திக்கவில்லை. ஒடுக்கப்பட்ட சீனர்கள், வியத்நாமியர்கள், க்யூபர்கள், இந்தியர்களை விடுவிக்க இவர்கள் நடத்திய போராட்டம் மெய்யானது. வீரம் செறிந்தது. உயிரைக் கொடுத்து போராடினார்கள். புத்தர், ஏசு, காந்தி என முணுமுணுத்தவர்கள் அல்ல. அகிம்சை பதாகைகளை தாங்கியவர்கள் அல்ல. அமைதிப் பேரணிகளை நடத்தியவர்கள் அல்ல. புல், பூண்டுக்கு வழிக்கும் என பயந்து மென்மையாக நடந்தவர்கள் அல்லர்.

அப்பா நீங்கள் செய்யும் தவறு என்ன தெரியுமா? யார் ஒடுக்குகிரார்களோ அவர்களிடமே சரணடைகிறீர்கள். எஜமானரே அடிமைகளை விடுவிப்பார் என எதிர்பாக்குறீர்கள். ஓநாய் மானை விட்டுவிடும் என எதிர்பாக்குறீர்கள். அந்தப் பூசாரி கட்டிலுக்குள் பதுங்கிக் கொண்டதைப் போல, அகிம்சை என்னும் கட்டிலுக்குள், அறவழி என்னும் கட்டிலுக்குள், தந்தை செல்வா என்னும் கட்டிலுக்குள், நீங்கள் அத்தை பேரும் பதுங்கிக் கொள்கிறீர்கள். அவர்கள் கொளுத்துகிறார்கள். உங்களுக்கு பதுங்க மட்டுமே தெரியும். அவர்களுக்கு கொளுத்த மட்டுமே! கொளுத்த வரும் கையை முறுக்கினால்? வெறுப்பை உமிழும் அந்த முகத்தில் முஷ்ட்டியை இறக்கினால்? மன்னிக்க வேண்டும் அப்பா, அதுதான் சரியென்றுபடுகிறது, எனக்கு.

அலட்டல் அம்பலத்தார்
அலட்டல் அம்பலத்தார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 724
இணைந்தது : 29/04/2010

Postஅலட்டல் அம்பலத்தார் Wed 4 Aug 2010 - 8:58

நிசாந்து தம்பியா தொடர்ந்து எழுதடா ...ஒரு பெரிய போராட்ட வரலாறு நந்திக் கடலில் சங்கமித்து விட்டது ரொம்ப கவலையடா சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Wed 4 Aug 2010 - 16:34

”திருப்பி அடிப்பது தான் சரி என்று எனக்கு தோனுகிறது. அரசியல் கட்சிகளால் என்ன சாதிக்க முடிந்தது?” என்றார் வேணுகோபால்.

”நானும் ஒப்புக்கொள்கிறேன் ஐயா”, என்றான் பிரபாகரன்.

நான் நினைத்தது சரிதான்.இவனுக்குள் நெருப்பு இருக்கிறது. உரச வேண்டாம், தடவினாலே பற்றிக்கொள்வான். வேணுகோபால் தன் மாணவனை திருப்தியுடன் பார்த்தார்.

”பிரபாகரா, ஏன் எல்லோரும் அறவழியில் செல்லத் துடிக்கிறார்கள் தெரியுமா?”

”காந்தியை அவர்களுக்கு பிடித்திருக்கிறது. ஆகவே, காந்தியை தூக்கி பிடிக்கும் தந்தை செல்வாவை பிடிக்கிறார்கள்.”

”அது ஒரு காரணம் மட்டுமே. உண்மையில் அவர்கள் பயந்தவர்கள். அறவழிப் போராட்டம் அவர்களுக்கு எளிமையாக இருக்கிறது. அவர்களுக்கு ஏற்றாற்போல் இருக்கிறது. இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? வெளியில் சிங்களவர்கள் கத்தியை தூக்கிக் கொண்டு வந்தால், ஓடிப் போய் வீட்டின் கதவை இறுக மூடிக் கொள். முடிந்தால், இறைவனின் திருநாமத்தை ஜபி.”

“புரிகிறது” என்றான் பிரபாகரன்.

”எதுவும் செய்யவேண்டாம் என்னும் நிலை. அல்லது செய்ய மறுக்கும் நிலை. அவர்களாவும் எதுவும் செய்ய மாட்டார்கள். துடிப்புள்ள நம்மையும் தடுத்து நிறுத்துவார்கள்.”

நம்மையும் என்ற வார்த்தை பிரபாகரனை கவ்ர்ந்தது. நம்மை, அப்படி என்றால், வேணுகோபால் என்னை ஏற்றுக் கொண்டுவிட்டார் என்று தானே பொருள்.

”சிறுபான்மையினர்தானே. உங்களுக்கு எதற்கு தனி தேசம் என்று கேட்கிறவர்களை என்ன செய்வது?”

”உண்மை தான் பிரபாகரா. தமிழரகள் இங்கே சிறுபான்மையினர்தான். ஒப்புக்கொள்கிறேன். ஆனால், தமிழர்களின் கலாச்சாரம், மொழி, உணர்வுகள், வரலாறு அனைத்துமே சிங்களவருடமிருந்து மாறுபட்டவை. சிங்களர்களால் இதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சிங்களத்துக்கு பக்கத்தில் தமிழா என்று கொதித்துப் போகிறார்கள். தவிரவும், நம்மை எதிர்களாக மட்டுமே பார்க்கத் தெரிந்தவர்கள். அவர்கள் பேச்சில், செயல்களில், அவர்கள் வெளியிடும் சுவாசத்தில், அவர்கள் படைக்கும் இலக்கியத்தில் கூட இனவெறி கலந்திருக்கிறது. அதை நீ நேரடியாகவே உணரலாம். தவிரவும், ஒட்டுமொத்த அதிகாரமும் சிங்களவர் கையில் குவிந்து கிடக்கிறது. நம்மை துடைத்து அழிக்கும் வரை ஓய மாட்டார்கள். நமக்கென்று ஒரு இடம். நனக்கென்று ஒரு தேசம். நிம்மதியாக வாழ அது மிகவும் அவசியம் பிரபாகரா” எனறார் வேணுகோபால்

”வேறு எந்த வகையிலும் அதிகாரத்தை கைபற்ற முடியாதல்லவா?” கேட்டான் பிரபாகரன்

”கைப்பற்றுவதா? பகிர்ந்துக் கொள்ளக் கூட முடியாது.”

ஏதோ நினைத்தது போல வேணுகோபால் திடீரென்று கேட்டார். ”உனக்கு இப்போது என்ன வயதாகிறது?”

“பதினான்கு”…

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri 6 Aug 2010 - 19:39

இராணுவ வீரர்களைக் கண்டாலே, பத்திக் கொண்டு வரும் பிரபாகரனுக்கு. பூட்ஸ் தடதடக்க வருவார்கள். நள்ளிரவில் தான் பெரும்பாலும் வருவார்கள். கதவை உடைத்துக் கொண்டு வருவார்கள். அப்படி என்ன சோதனை செய்கிறார்களாம்?

வீட்டை பார்க்காமல், பெண்களை மட்டும் ஏன் பார்க்க வேண்டும்? அவர்களை மட்டும் ஏன் இழுத்துச் செல்ல வேண்டும்? குறிப்பாக தமிழர்கள் வீடுகளை? குறிப்பாக தமிழ் பெண்களை மட்டும். சிங்களவர்களுடைய இராணுவம். தமிழர்களுக்கு எதிரான இராணுவம். கேள்வி கேட்டால், ஒரு துப்பாக்கி தோட்டா பரிசு கிடைக்கும்.

சிறு வயதிலிருந்தே அவர்களை பார்த்து வருகிறான்.சிறுவர்கள் ஆத்திரத்தில், சிறு கற்களை அவர்கள் மீதி வீசுவார்கள். ஈவிரக்கமில்லாதவர்கள், குழந்தைகள் மீதே துப்பாக்கி சூடு நடத்துவார்கள்.

இப்போது ஓரளவு வளர்ந்திருந்தான். ‘துப்பாக்கியால் சுடுவது எப்படி?’ பிரபாகரன் விருப்பி படிக்கும் புத்தகம். பிரபாகரனுக்கு என்றே ஒரு நண்பர் கூட்டம். ஒத்த சிந்தனை உடையவர்கள். வெட்டலாம என்று கேட்டால், வேறோடு சாய்க்கலாம் என்று கூறும் கூட்டம். அவர்களிடம் பல கனவுகள் இருந்தன. ஆயுதங்கள் வாங்க வேண்டும். இராணுவத்துடன் நேருக்கு நேர் போர் புரிய வேண்டும். இனி எங்களிடம் வாலாட்டினால், தடம் தெரியாமல் அழித்துவிடுவோம் என இறுமாப்புடன் சொல்ல வேண்டும்.

டைம் பாம் தயாரிக்க முடிவெடுத்தார்கள். வெடிமருந்துக்கு பதிலாக பட்டாசு மருந்து. பழைய பாட்டில் ஒன்று. மூடிக்கு பதிலாக கார்க். ஒரு சிறிய திரி. பரிசோதனை வெற்றி. அடுத்த கட்டத்துக்கு தாவினார்கள். பட்டாசு மருந்துக்கு பதிலாக பள்ளி பரிசோதனை நிலையத்தில் இருந்து, எடுக்கப்பட்ட இரசாயனம். வெடிப்பதற்கு, பள்ளி கழிவறையை தேர்ந்தெடுத்தார்கள். மதிய நேரம் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதனால். பலத்த வெடி சத்தம்.

பிரபாகரன் கனவில் மிதந்துக் கொண்டிருந்தான். இந்த ஒலியைக் கேட்டு தினம் தினம் செத்துக் கொண்டிருந்தது தமிழினம். இனி இந்த ஒழி சிங்களரை ஓட ஓட விரட்டும்.

தலைமை ஆசிரியர் நேராக, பிரபாகரன் வகுப்புக்கு தான் வந்தார். குண்டு வெடித்ததும் அவர் கால்கள் நேராக அவரை அவனுடைய வகுப்பறைக்கு தான் அழைத்து வந்தது. ஏனென்றால், வேணுகோபால் பாடம் நடத்தும் அறை. பொதுவாக எச்சரித்துவிட்டு போனார். இந்த மாதிரி விளையாட்டுகளை வெளியில் வைத்துக் கொள்ளுங்கள் என்றார் கோபமாக.

பிரபாகரன் சிரித்தான். “இனி விளையாட்டே வெளியில் தான்…”

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri 13 Aug 2010 - 13:29

நம் இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்டார் ஒரு நண்பர். அவர் தோள் மீது கைவைத்து பதிலளித்தார் பிரபாகரன், பெயர் முக்கியமில்லை தோழரே, முதலில் நாம் தயார் ஆவோம்.

சரி, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றார்கள். மிளகாய் அடைத்து வைக்கப்பட்ட பையின் மீது படுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அவர்கள் மறுப்பு தெரிவிக்கவில்லை. செய்தார்கள். ஏனென்றால், அவர்கள் வாக்கு கொடுத்திருந்தார்கள். எதிர் வரும் சுதந்திரப் போராட்டத்திற்கு தங்களை ஆயுத்தப்படுத்திக் கொள்வோம். நீ கூறும் பயிற்சிகளை மேற்கொள்வோம். தவிரவும், பிரபாகரன் எதையும் காரணமில்லாமல் கூறமாட்டார் என அவர்களுக்கு தெரியும்.

பிரபாகரனுக்கு பெருமிதமாக இருந்தது. அவர் சொல் கேட்டு நடக்கும் ஒரு கூட்டம். கூட்டமல்ல ஒரு குழு. ஆனால் என்ன? எதையும் எங்கிருந்தாவது ஆரம்பித்தாக வேண்டும். இங்கிருந்தே தொடங்குகிறேன். இல்லை, நன் இல்லை. நாம், நமது, எமது. நான் எதையும் செய்து பார்த்த பின்பு தான் இவர்களுக்கு செய்ய சொல்வேன் என்று முடிவெடுத்தார் பிரபாகரன்.

மூட்டையை பிரித்து, தலை மட்டும் வெளியில் தெரியும் படி, மிளகாய் மூட்டைக்குள் படுத்துக் கொண்டார்கள். நக கண்களில் ஊசி ஏற்றிக் கொண்டார்கள். கராத்தே, ஜூடோ இரண்டையும் கற்றுக் கொண்டார்கள். வியர்க்க விறுவிறுக்க ஓடினார்கள். சாக்கு துணியை மட்டும் கட்டிக் கொண்டு, மதியம் முழுக்க, கொளுத்தும் வெயிலில் அடாமல் அசையாமல் படுத்துக் கொண்டார்கள்.

சிங்கள இராணுவம் என்ன பயிற்சிகளை மேற்கொள்கிறது, என கேட்டு தெரிந்து கொண்டார். புத்தகங்களில் கிடைக்கும், குறிப்புகளை குறித்துக் கொண்டார். அவர் புரிந்து கொண்டது இதைத்தான், வரப்போகும் யுத்தத்துக்கு, மனவலிமையுடன், உடல்வலிமையும் அவசியம். அதனால், இயன்றவரை, உடலை வருத்தில் கொள்ளவேண்டும். மிக மிக கடுமையான பயிற்சிகள் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும்.

துப்பாக்கியை தொடாமல் எப்படி பயிற்சி பூர்த்தியாகும்….?

Sponsored content

PostSponsored content



Page 2 of 13 Previous  1, 2, 3, ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக